ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, May 3, 2009


கதறுகின்றார் கலைஞர்


மே 13 ஆந்திகதிக்குப் பின்னர் இப்படியொரு செய்தி வரலாம். காங்கிரஸுடன் கூட்டு வைத்து ஆட்சியேறியபோதே ஜெயலலிதாவைப் பிடித்து உள்ளே தள்ளியிருக்கலாம். அப்படிச் செய்யாது அவரை வெளியே விட்டு வைத்ததே தான் செய்த மிகப்பெரிய ராஜதந்திரச்சறுக்கல் என்பதை அவர் உணராலம்.

அதையே சொல்லிச் சொல்லி அவர் கலங்கி தன்னிரக்கம் கொள்ளலாம். கலைஞரின் கடைசிக்கால மலரும் நினைவுகள் இன்பமானதாக இருக்கப் போவதில்லை. காதல் மனைவியின் கல்லறையைக் கூட அருகில் இருந்து பார்க்கும் பாக்கியம் கிட்டப்போவதில்லை.

"ஐயோ கொல்லுராங்களே.." போன்ற கெட்ட கனவுகள் இன்னும் பாக்கியிருக்கின்றன.

மீதம் இருக்கும் இரண்டு வருடங்களும் ஆட்சியில் இருக்கும் பாக்கியமும் கிட்டப்போவதில்லை. காங்கிரஸ் அடையப் போகும் படுதோல்வி பற்றி இப்போதே அரசல் புரசலாகக் கதை பரவத்தொடங்கி விட்டது. அதே தோல்வி தி.மு.க வையும் அதல பாதாளத்திற்குக் கொண்டு செல்லப்போகின்றது.

அமையப்போகும் பா.ஜ.க ஆட்சியுடனோ மூன்றாவது அணி அரசுடனோ கூட்டுச்சேரும் அல்லது சேர்ந்தே ஆட்சி செய்யும் வாய்ப்பு ஜெயலலிதாவிற்கே கிடைக்க இருக்கின்றது. தமிழ் நாட்டில் ஜெயலலிதாவிற்குப் பெருகி இருக்கும் திடீர் ஆதரவை மிகவும் இலாவகமாகக் கையாளும் திறன் அவரிடம் இருக்கின்றது.

அதையே மூலதனமாக வைத்து அமையப்போகும் காங்கிரஸ் அல்லாத மத்திய அரசின் ஆதரவுடன் தி.மு.க வைக் குறை ஆட்சியுடன் வீட்டுக்கு அனுப்புவார்.
மத்தியிலும் வை .கோ உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் கூட்டணிக்கட்சி ஆதரவில் மத்தியில் இடம் பெற அனுப்பி வைக்கப்படுவர்.

இதுவே கருணாநிதி தலைமையில் தி.மு.க எதிர் கொள்ளும் இறுதித் தேர்தலாக இருக்கும். கலைஞரின் இறுதிக்காலத்தில் அவர் எடுக்கும் முடிவுகள் இராஜதந்திர நடவடிக்கைகள் அனைத்தும் சறுக்கலாகவே இருக்கின்றன.

கலைஞர் இல்லாத தி.மு.க உள்வீட்டுப்பிரச்சினைகளாலும் தலைமைப் போட்டியாலும் பலத்த பின்னடைவுகளை அடையும். கிடைக்கும் இந்த இடைவெளியை நிரப்ப விஜய காந்தின் கட்சி முயற்சியெடுக்கலாம். அது எவ்வளவு தூரம் சாத்தியம் என்பதைக் காலம்தான் தெளிபு படுத்தும். அதே நேரம் இன்னுமொரு முக்கிய விடயமும் நடைபெறலாம். அது "ஆண்டவன் சொல்லுறான், அருணாசலம் செய்யுறான்" ரஜனியின் அரசியல் பிரவேசமாயிருக்கலாம்.

ரஜனியின் அரசியல் குரு சோவின் ஆலோசனை அவ்வாறே இருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தையும் ரஜனி விடுவாரேயானால் அவரையும் அவர் ரசிகர்களையும் அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது. ரஜனியின் பிரவேசம் நடக்குமேயானால் உதிரிக்கட்சிகளை இணைத்துக்கொண்டு அ.தி.மு.க விற்கு பலமான எதிர்க்கட்சியாக களம் காணலாம். பா.ஜ.க வுடன் கூட்டுச் சேருவதன் மூலம் மத்தியிலும் அரசியல் பண்ணலாம்.

அப்படி நடக்குமா என்று எண்ணுபவர்கள் இவற்றையெல்லாம் கண்களால் காண்பதற்கு அதிக காலம் தேவைப்படாது.

அத்தனை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்தத் தேர்தல் இருக்கப் போகின்றது. காங்கிரஸ்,பாஜ.க, மூன்றாவது அணிகளுக்குள் சிதறப்போகும் வாக்குகள் மாநிலக் கட்சிகளின் செல்வாக்கை மத்தியில் அதிகரிக்கும்.

இந்தத் தேர்தலில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரவிருக்கும் ஈழப்பிரச்சினை தொடர்ந்தும் அரசியல் விளையாட்டிற்காகவே தமிழகக் கட்சிகளால் உபயோகிக்கப்படும்.

"நடக்குமென்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்து விடும்.."

பல நடக்காதென்பதெல்லாம் நடந்து விடப்போகின்றது.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil