ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, May 7, 2010


தம்மை அழித்தவர்களை ஈழத் தமிழர் பழிவாங்க வேண்டும் - நிராஜ் டேவிட்

ஈழத் தமிழர் மீதான அழித்தொழிப்பு யுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு ஒரு ஆண்டு நெருங்கிக்கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழ் இனத்தின் வரலாற்றில் என்றைக்குமே மறக்கமுடியாத நாட்கள் அவை.
ஈழத் தமிழர்கள் ஒரு மூலைக்குள் முடக்கப்பட்டு பட்டினி போடப்பட்டு இரசாயனக் குண்டுகளாலும் கனரக ஆயுதங்களாலும் துடிக்கத் துடிக்க அழிக்கப்படதான ஒரு நிகழ்வு சுமார் ஒரு வருடத்தின் முன்னர் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.
கைகளில் வெள்ளைக்கொடியை ஏந்தியபடி சரணடையச் சென்றவர்களைக் கூட சகட்டுமேனிக்குச் சுட்டுத்தள்ளிய கொடுரம் அரங்கேறியிருந்தது. போர்க்கைதிகளை படுகாயப்பட்ட போராளிகளை இரக்கமின்றி கொலை செய்த கொடுமை நடைபெற்றிருக்கின்றது. குழந்தைகள் வயது முதிர்ந்தவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் என்று எந்த பரிதாபமும் இல்லாமல் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகாமான அப்பாவித் தமிழ் மக்களை முற்கம்பி வேலிகளுக்குள் அடைத்து தனது வெற்றியைக் கொண்டாடிய அசிங்கம் எமக்கு நிகழ்ந்திருந்தது.

Saturday, February 13, 2010


40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் - பொய்களை சிறீலங்கா தெரிவித்தது


முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்கா அரச படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது 40,000 பொது மக்கள் வரையில் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என ஐ.நா. சபையின் பேச்சாளராக கொழும்பில் முன்னர் பணிபுரிந்த கோர்டன் வைஸ் தெரிவித்திருக்கின்றார்.
வைஸ் தெரிவித்திருக்கும் இந்தத் தகவல்கள் கொழும்பில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

அவுஸ்திரேலியாவின் ஏ.பி.பி. நியூஸ் காணொலி நிறுனத்திற்கு வழங்கிய பேட்டி ஒன்றில், அனைத்துலக நாடுகளைத் தவறாக வழிநடத்தக்கூடிய தகவல்களை அல்லது பொய்களை அரசாங்கம் தெரிவித்தது எனவும் அவர் கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.

Wednesday, January 27, 2010


டேட்டிங் போகும் பெண்களுக்கு என்ன மனத்தடை?


என்னவென்று தெரியவில்லை. என் மனத்தடை எந்த நுண்ணரசியலுக்கும் புலப்படாதது. டீ.ஜே எழுதியிருந்த "அவள்" (நெடுங்கதை)ஒருவளின் கதை என்னை இப்போதும் பிறாண்டிக்கொண்டிருக்கின்றது. என்னைப் போன்ற மடச்சாம்பிராணிகளால் புரிந்து கொள்ள முடியவில்லையோ தெரியவில்லை... காமண்ட்ஸ் யாரும் கொடுக்கவில்லை. அட டேட்டிங் போவதற்கு நம் தமிழ்ப் பெண்கள் இத்தனைமுண்டியடிக்கின்றார்களா? என்ன? "காண்டம்" நிறைப்பது மட்டும் வாழ்க்கையை நிறைவாக்கி விட முடியுமா? (ஏன் இப்படி நினைக்கின்றார்கள்)

தேர்தல் 2010 - என்னத்த சொல்ல


சிறிலங்காவின் அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கின்றது. அதிர அடிக்கும் பட்டாசு வெடிகளுக்கு அப்பால் அரசியல் அதிர்வுகள் உருவாகத் தொடங்கியிருக்கின்றது. மகிந்த தமிழ் மக்களை வெற்றி கொள்வது என்பது இருக்கட்டும் அதன் முன்னால் தமிழ் மக்களை தோற்கடிக்கவே அவரால் இதுவரைமுடிந்திருக்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்திருக்கின்றது. தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாத அந்நிய நாட்டுத் தலைவராகவே மகிந்த தேர்தல் முடிவுகளிலிருந்து இனங்காட்டப்பட்டிருக்கின்றார். மகிந்தவின் வீரப்பிரதாபம் அனைத்தும் சிங்கள மக்களுக்கே வேண்டியிருக்கின்றது என்பதும் அவர்களால் மட்டுமே கொண்டாடப்படக் கூடியது என்பதுவும் மறுபடியும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

புலித் தலைவர்களை கொன்றவர் பா.சிதம்பரம் தான்

டெல்லியில் இருந்து ஜெகத் கஸ்பரை இயக்கி 2009, மே 18-ல் புலித் தலைவர்களை சரணடைய சொல்லி கொல்ல வைத்தவர்கள், சந்தேகமே இல்லாமல் காங்கிரஸ் கட்சியின் முத்த அமைச்சரும் தமிழருமான பா.சிதம்பரம் தான்.

பா.சிதம்பரம் ஈழத்தமிழருக்காக அல்லது காங்கிரஸ் கட்சி ஈழத்தமிழருக்காக நடத்திய ஒரே கூட்டம் 15-02-2009 சென்னை மயிலாப்பூரில் உள்ள மாங்கொல்லையில் தான். அன்று அவர் பேசியதை திரும்பவும் கேட்டால் - http://www.youtube.com/watch?v=V1NgzyF1pgE தெளிவாய் புரியும், யார் டெல்லியில் இருந்த காங்கிரஸ் பெரியவர் என்று. இன்னும் தமிழன் ஏறமாறக்கூடாது.

திருடன் எத்தனை நாள் திட்டம் போட்டுத் திருடினாலும் திருடுகிற இடத்தில் ஏதோ ஒரு தடயத்தை விட்டுத்தான் செல்வான் என்று சொல்வார்கள். விசாரணை நேர்மையாக இருந்தால் சிறிய தடயம் கூட அவனைச் சிக்க வைத்து விடும். நடேசன் வெள்ளைக் கொடியோடு சரணடைந்த நிகழ்வில் அப்படித்தான் சிக்கியிருக்கிறார் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி.

“ஈழம் செத்த பிறகும் இரத்தம் குடிக்கிறார் ஜெகத் கஸ்பர்” என்ற கட்டுரை வினவு தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து குமுதம் ரிப்போர்ட்டர் இதழுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கும் ஜெகத் கஸ்பர், “மௌனத்தின் வலி” நூல் முழுக்க முழுக்க போருக்கு எதிரான பத்திரிகையாளர்கள் சார்பில் கொண்டு வரப்பட்டதுதான் என்றும், கவிதைகள் திருத்தப்பட்டது மற்றும் வாங்கிய கவிதைகளை வெளியிடாமல் தி.மு.க.விற்கு ஆபத்தில்லாத கவிதைகளை வெளியிட்டது எல்லாமே பத்திரிகையாளர்கள்தான் என்று கூறி தப்பித்துக் கொண்டிருக்கிறார். போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்பு பற்றி வேறொரு சந்தர்ப்பத்தில் தனியே எழுதுவோம்.

மேற்கூறிய குமுதம் ரிப்போர்ட்டர் நேர்காணலில், அதன் நிருபர் கடைசி நேரத்தில் நடந்த நிகழ்வுகள் தொடர்பாக மூன்று கேள்விகளை கஸ்பரிடம் முன்வைக்கிறார். அந்தக் கேள்விகளையும் அதற்கான ஜெகத் கஸ்பரின் பதிலையும் அப்படியே கீழே தருகிறோம்.





கேள்வி: இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் இந்தியாவுக்கும், புலிகளுக்கும் நடந்த பேச்சு வார்த்தையில் இந்தியா சார்பில் நீங்களும் கலந்து கொண்டீர்கள். போரை நிறுத்த புலிகளிடம் என்னென்ன நிபந்தனைகள் முன் வைக்கப்பட்டன?

கஸ்பர்: இதில் சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டுதான் எதையும் நான் பேச முடியும். அந்த நாள் வரும்போது பேசுவேன். ஆனால், நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. 48 மணி நேரத்துக்குள் சண்டை நிறுத்தம் என்று வாய்ப்புத் தரப்பட்டது. ‘தமிழ் மக்களுக்கு நிரந்தரமான தீர்வு வரும்போது ஆயுதங்களை ஒப்படையுங்கள்’ என்று விருப்பத்தை மட்டுமே கேட்டிருந்தோம். நிச்சயமாக அவர்கள் (புலிகள்) அதை ஏற்கவில்லை.

கேள்வி: ஏன் அதை விடுதலைப்புலிகள் ஏற்றுக் கொள்ளவில்லை

கஸ்பர்: அவர்கள் பக்கம் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. மீண்டும் சொல்கிறேன். நிச்சயமாக சண்டை நிறுத்தத்திற்கு வாய்ப்பு இருந்தது. அதற்கு வாக்குறுதியும் தரப்பட்டது. ஆயுதங்களை ஒப்படைக்க விருப்பம் மட்டுமே கேட்டிருந்தார்கள். நிபந்தனை விதிக்கவில்ல

கேள்வி: வெளிப்படையாகச் சொல்லுங்கள். ஈழ விடுதலைப் போராட்ட அழிவைத் தடுக்க புலிகள் என்ன செய்திருக்க வேண்டும்?

கஸ்பர்: கடைசிக் கட்டத்தில் என்னென்ன நடந்தது என்று முழுமையாக நமக்குத் தெரியாது. எனவே, தீர்மானமான கருத்தைச் சொல்ல முடியாது. என்னளவில், சண்டை நிறுத்தத்திற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. அது நடக்கவில்லை. அது நடந்திருந்தால் போராட்டம் காக்கப்பட்டிருக்கலாம். எனக்குத் தெரிந்த வரை, ‘தலைவர் (பிரபாகரன்) சரணடைய வேண்டும், பொட்டு அம்மான் சரணடைய வேண்டும்’ என்று எந்த நிபந்தனையும் பேச்சுவார்த்தையின்போது விதிக்கப்படவில்லை. ‘ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருங்கள்’ என்றார்கள். இதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அது ஏன் என்றும் எனக்குத் தெரியாது.

போர் முடிந்து கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு கடைசி நேர முள்ளிவாய்க்கால் போர் குறித்து இப்போது பதிவு செய்கிற ஜெகத் கஸ்பர், போர் நிறுத்தம் ஒன்றிற்கு இலங்கை அரசு தயாராக இருந்ததாகவும், புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்கவோ போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்கவோ இல்லை என்றும் சொல்கின்றார். புலிகளுக்கும், இந்திய அரசுக்குமிடையிலான கடைசிநேரத் தூதராகச் செயல்பட்ட இவரின் பேச்சைக் கேட்டிருந்தால் போராட்டம் காப்பாற்றப்பட்டிருக்கும் என்றும் இப்போது குமுதம் இதழில் சொல்லியிருக்கின்றார் ஜெகத் கஸ்பர்.

இன்றைக்கு இப்படிப் பேசுகிற இதே ஜெகத் கஸ்பர், போருக்குப் பின்னர் மே மாதம் 21ம் தேதி வெளியான நக்கீரன் இதழில் “யுத்த துரோகம்” என்னும் பெயரில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.

அக்கட்டுரையில் ஜெகத் எழுதியிருந்தது இதுதான்.

“கடைசி நாளில் அதாவது கடந்த சனிக்கிழமை (16.05.2009) பிரபாகரனும், அதிமுக்கிய தளபதிகள் சிலரும் களத்தை விட்டு அகன்ற பின் காயமடைந்த போராளிகளை அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவை எடுத்து அதற்காக புலிகளின் கடற்படைத் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டதாகவும், அந்த மதுரை நபர் சு.ப.வீயைத் (சு.ப. வீரபாண்டியன்) தொடர்பு கொண்டதாகவும், கடைசியில் கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி (எதார்த்தமான முடிவு) ஒன்று எடுக்கப்பட்டதாகவும் கூறுகின்றார். “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராசா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்தியத் தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்பதுதான் அந்த முடிவு.

இம்முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராசா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்பட, அவரும் மின்னல் வேகத்தில் இயங்கி ‘இந்தியாவிடமே (அதாவது கொழும்பில் உள்ள இந்தியத் தூதரிடம்) ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்’ என்றும் இரவு 11.50 மணிக்கு முடிவு எடுத்ததாகவும் கஸ்பர் கூறுகிறார்.

உடனே கனிமொழி ஏற்கனவே பேசிய அந்தக் காங்கிரச பெரியவரைத் தொடர்பு கொண்டு இந்தியா, அல்லது ஐ.நா.வின் முன்னிலையில் சரணடைவது என்ற புலிகளின் முடிவைச் சொன்ன போது, ‘கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று அந்த காங்கிரசு பெரியவர் சொன்னதாகவும் கூறுகின்றார்.

பின்னர் மக்களைக் காப்பாற்றும் பொருட்டு, இலங்கை ராணுவத்திடமே சரணடைவது என்ற முடிவை அதே சனிக்கிழமை நள்ளிரவு புலிகள் எடுத்ததாகவும், திங்கள் கிழமை அதிகாலை அதாவது 2.30 மணிவரை களத்தில் நின்ற நடேசன், பத்மநாதனுடன் உரையாடி விட்டு காலையில் வெள்ளைக் கொடியோடு சரணடையச் சென்ற போது, நடேசனையும் தளபதி ரமேஷையும் போராளிகளையும் இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்று விட்டதாகவும் ஜெகத் கஸ்பர் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருந்தார்.
அன்றைய சூழலில் இக்கட்டுரையை மேலோட்டமாகப் படித்தவர்கள், பிரபாகரனையும் போராளிகளையும் காப்பாற்ற ஃபாதர் வேலை செய்திருக்கிறார் என்றே நினைத்தார்கள். வாசித்ததைத் தாண்டி யோசிக்கவில்லை. ஆனால் இன்று இக்கட்டுரையைப் படிக்கும் போது எழுகின்ற கேள்விகளுக்கு ஜெகத் கஸ்பரோ அதோடு தொடர்புடையவர்களோ பதில் சொல்வார்களா?

அதே மே மாத இறுதியில் இது போன்ற இன்னொரு வாக்குமூலக் கட்டுரையும் இணையங்களில் உலவியது. லண்டன் டைம்ஸ் இதழில் வெளிவந்த மேரி கொல்வினின் கட்டுரைதான் அது. அவரும் ஜெகத்தைப் போலவே புலிகளுக்கும் மேற்குலக அரசுகளுக்குமிடையில் இறுதி நேர தூதுவராகச் செயல்பட்டவர். தவிரவும் மேரி கொல்வின் 2001இல் வன்னிக்குச் சென்றிருந்த போது இராணுவத்தின் ஷெல்லடியில் ஒரு கண்பார்வை பாதிக்கப்பட்டவர். அவரது வாக்குமூலக் கட்டுரையில் என்ன இருக்கிறது என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

“நாங்கள் எமது ஆயுதங்களைக் கீழே வைக்கிறோம்’ என்று ஞாயிற்றுக்கிழமை (17.05.2009) அன்று பின்னிரவில் கடைசியாக நடேசன் என்னிடம் கூறினார். ஆனால் ஒபாமா நிர்வாகத்திடமிருந்தும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்தும் பாதுகாப்புக்கான உத்திரவாதத்தை நாம் எதிர்பார்த்துள்ளோம்’ என்றும் கூறியிருந்தார். வெற்றி பெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை ராணுவத்திடம் சரணடைவது 26 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் மிகவும் அபாயகரமான தருணம் என்பதை அவர்கள் (அதாவது புலித் தலைவர்கள்) நன்கு உணர்ந்திருந்தனர் என்று லண்டன் டைம்ஸ் நிருபரான மேரி கொல்வின் குறிப்பிடுகின்றார்.

மேலும் புலிகளின் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த சீவரத்தினம் புலித்தேவனையும், நடேசனையும், சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளையும் காப்பாற்றுவதே அவர்களின் (புலிகளின்) நோக்கமாக இருந்தது என்று எழுதுகின்ற மேரி கொல்வின், முக்கியமாக மூன்று விசயங்களை ஐ.நா.விற்கு தெரிவிக்குமாறு நடேசன் தன்னிடம் கேட்டுக் கொண்டதாகக் கூறுகின்றார். ஒன்று புலிகள் ஆயுதங்களைக் கீழே வைப்பார்கள், இரண்டு அமெரிக்கர்கள் அல்லது பிரிட்டிஷாரிடமிருந்து பாதுகாப்புக்கான உத்திரவாதம் வழங்கப்பட வேண்டும். மூன்று தமிழ் சிறுபான்மையினரின் உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் அரசியல் நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கம் இணங்கவேண்டும். இந்த உறுதிமொழிகளை புலிகள் கோரியிருந்தனர்.”

புலிகள் வைத்த இம்மூன்று கோரிக்கைகளையும் சுட்டிக் காட்டுகிற மேரி கொல்வின், “ஞாயிற்றுக்கிழமை 17.05.2009 இரவுக்குப் பின்னர் புலிகளிடம் இருந்து மேலதிகமான அரசியல் கோரிக்கைகளோ, படங்களோ வரவில்லை. சரண் என்ற வார்த்தையை உபயோகிக்க நடேசன் மறுத்தார். என்னிடம் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது அந்த வார்த்தையைப் பிரயோகிக்க மறுத்திருந்தார்” என்றும் கூறுவது மிக முக்கியமானது. மேரி கொல்வின் எழுத்திலிருந்து இறுதிப் போரின் போது புலிகளின் மனநிலை என்னவாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடிகின்றது. ஒருவேளை, வேறு வழியில்லாமல் சரணடையும் சூழல் எழுந்தால் கூட, அது மூன்றாம் தரப்பு நாடு ஒன்றிடம்தான் என்று நடேசன் தெரிவித்ததாகவும் மேரி கொல்வின் எழுதுகின்றார்.

அப்போது நியூயார்க்கிலிருந்த ஐ.நா. அலுவலகம், ஐ.நா.வின் ஆசியாவுக்கான தூதர் விஜய் நம்பியாருடன் மேரி கொல்வினுக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. புலிகள் ஐ.நா.வின் உத்திரவாதத்தில் ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவை எடுத்திருப்பதை மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் சொல்கிறார். விஜய் நம்பியாரோ, “நடேசனும், புலித்தேவனும் சரணடையும் போது பாதுகாப்பாக இருப்பார்கள்” என்று தனக்கு இலங்கை தரப்பில் உத்திரவாதம் அளிக்கப்பட்டதாக கொல்வினிடம் கூறுகிறார். கடைசியில் திங்கள் கிழமை காலை 6.20 மணிக்கு அந்த இறுதிச் சமாதான முயற்சியில் ஈடுபட்ட இன்னொரு நபரான சந்திர நேரு என்ற இலங்கை எம்.பி, நடேசனுடன் பேசியிருக்கிறார். (இவர் இப்போது அச்சுறுத்தல் காரணமாக இலங்கைக்குச் செல்ல முடியாமல் லண்டனில் வாழ்கிறார்) என்றும் மேரி கொல்வின் தனது வாக்குமூலக் கட்டுரையில் எழுதியிருக்கின்றார்.
(மேரி கொல்வினின் இக்கட்டுரையைப் பிரசுரித்த இணையதளங்கள் பலவும் புலிகள் சரணடைவதற்காகவே மேரி கொல்வினிடம் கோரியதாகத் தலைப்பிட்டு அதைப் பிரசுரித்திருந்தன. மேரி கொல்வினின் அக்கட்டுரை கீழ்க்கண்ட தளத்தில் வாசிக்கலாம். http://www.timesonli...icle6350563.ece

புலிகளின் அரசியல் பிழைகளை ஆதரிப்பதோ, ராணுவ வாத சகதிக்குள் சிக்கி அவர்களின் ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்ததைத் தூக்கி நியாயப்படுத்துவதோ நமது நோக்கமல்ல. ஆனால், அவர்களிடம் எப்படியான நபர்கள் ஊடுருவி, அவர்களைக் கடைசி நேரத்தில் கழுத்தறுத்திருக்கின்றார்கள் என்பதை நிரூபிக்கவே இந்த விடயங்களையெல்லாம் குறிப்பிடுகின்றோம்.

சூரியன் வெளுக்காத அந்த அதிகாலையில் முள்ளிவாய்க்காலில் பெரும் ரத்த ஆறு ஓடியது. ப.நடேசன், புலித்தேவன், தளபதி ரமேஷ், தளபதி இளங்கோ, பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் ஆன்டனி, அவரின் உதவியாளர் சுதர்மன், தாமஸ், லக்ஷ்மன், தளபதி சிறிராம், இசை அருவி, கபில் அம்மான், அஜந்தி, வார்தா புதியவன், ஜெனார்த்தன் எனப் புலிகளின் முக்கியத் தளபதிகளும் சமாதானச் செயலகத்தைச் சார்ந்த 300 போராளிகளும் வெள்ளைக் கொடியோடு இலங்கை ராணுவத்திடம் சரணடைய, அவர்கள் குடும்பம் குடும்பமாகக் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்பட்டார்கள். இதை ஒரு நாள் முழுக்க நடந்த கொடிய நரவேட்டை என்கிறார்கள்.

இங்குதான் நடேசனின் இந்த சரணடைதல் தொடர்பான மர்மம் ஒன்று நமது நெஞ்சைச் சுடுகிறது. புலிகள் கடைசி வரை சொன்னது ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம் என்பதைத்தான். அதற்கு மிகச் சரியான உதாரணமாக புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பி.யின் சேனல் 4 நேர்காணல். அதே 17.05.2009 அன்று புகழ்பெற்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சியான சேனல்4 க்கு கே.பி அளித்த நேர்காணல் இப்படிப் போகிறது:

சேனல்4: புலிகளின் இப்போதைய நிலைப்பாடு என்ன?

கே.பி.: எமது அமைப்பு ஆயுதங்களைக் கீழே போட்டு விட்டு சமாதானப் பேச்சுக்களில் பங்கேற்பதற்குத் தயாராகவிருக்கின்றது.

சேனல்4: எவ்வளவு போராளிகள் அங்கு இருக்கின்றார்கள்?

கே.பி.: 2 ஆயிரத்திற்கும் குறைவான போராளிகள்தான் அங்குள்ளனர். நாம் போரை நிறுத்திக் கொள்ளத் தயாராகவிருக்கின்றோம். எமது மக்கள் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு மணித் தியாலமும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்து கொண்டிருக்கின்றார்கள். நேற்றிலிருந்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 25 ஆயிரம் பேர் படுகாயமடைந்திருக்கின்றார்கள்.

சேனல்4: நீங்கள் என்ன சொல்ல வருகின்றீர்கள்… விடுதலைப் புலிகள் கொரில்லாப் போர் முறைகளில் தமது சண்டையைத் தொடர்வார்களா?

கே.பி.: நான் நினைக்கின்றேன், கடந்த 28 வருட காலமாக நாம் போராட்டத்தை நடத்தி வருகின்றோம். நாளாந்தம் மனித உயிர்கள்தான் இதில் பலியாகி வருகின்றன. இன்னும் 30 வருடங்களுக்கு இது தொடர்ந்தால்… நான் அதனை நம்பவில்லை. தமிழ் மக்களுக்கு சமாதான வழிமுறைகளில் தீர்வைக் காண வேண்டும் என்றே நாம் நம்புகின்றோம்.

சேனல்4: பிரபாகரன் இப்போதும் அந்தப் பகுதியில் இருக்கின்றாரா?

கே.பி.: ஆம்.

சேனல்4: நீங்கள் அவருடன் பேசியுள்ளீர்கள். அவர் சரணடையத் தயாராகவிருக்கின்றாரா?

கே.பி.: சரணடைவதல்ல. நாம் ஆயுதங்களைக் கீழே போடுவோம். கையளிக்கப் போவதில்லை.

சேனல்4: ஆயுதங்களை ஏன் கையளிக்க மாட்டீர்கள்?

கே.பி.: உண்மையில் இது பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. நாம் எமது தாயக விடுதலைக்காகவே ஆயுதங்களைத் தூக்கினோம். அவற்றை ஏன் நாங்கள் கையளிக்க வேண்டும்?

சேனல்4: போர் முடிவுக்கு வந்துவிட்டதா அல்லது மாற்றமடைகின்றதா?

கே.பி.: போர் முடிவடையலாம் அல்லது அரசியல் பாதையில் மாற்றமடையலாம். அடுத்த ஒரு சில மணி நேரங்களில் என்ன நடைபெறுகின்றது என்பதிலேயே இது தங்கியிருக்கின்றது. நாங்கள் சொல்வதெல்லாம் இதுதான். ஆயுதங்களை நாங்கள் கீழே போட விரும்புகின்றோம். எமது தேசத்துக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண விரும்புகின்றோம். ஆமாம் எமது மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்று அவசியம் – என்று கே.பி. பேசுகின்றார்.

கே.பி.யின் பேச்சில் நமக்கு அரசியல் ரீதியாக பல முரண்கள் இருந்தாலும், அவை குறித்துப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கத்தை திசைமாற்றி விடும் என்பதால் அது பற்றிப் பேசுவதை இங்கே தவிர்க்கின்றோம்.

ஆனால் கே.பி. சுட்டிக்காட்டிய அந்த ஒரு சில மணிநேரத்தில் நடந்தவைதான் இரண்டு விசயங்கள். அந்த 17ஆம் தேதி நள்ளிரவில் “கனிமொழியின் உதவியோடு காங்கிரசு கட்சியின் முக்கியப் பிரமுகரோடு பேசி “புலிகளின் அனைத்துலகப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று பேக்ஸ் மூலமாக உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவைகளை இந்தியா பார்த்துக் கொள்ளும்” என்ற முடிவு எடுக்கப்பட்டு இரவு 10 மணிக்கு லண்டனில் உள்ள ஜெகத் கஸ்பர்ராஜின் நண்பர் மூலம் செல்வராஜா பத்மநாதனுக்கு தகவல் சொல்லப்படுகிறது.

அவரும் கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரிடம் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருப்பதாகவும், அது சாத்தியமில்லை என்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம் என்ற முடிவை இரவு 11.50 மணிக்கு எடுத்ததாகவும், உடனே கனிமொழி அந்தக் காங்கிரசு பெரியவரை தொடர்பு கொண்டு புலிகளின் முடிவைச் சொன்ன போது அந்த காங்கிரஸ் பெரியவர் ‘இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது’ என்று கூறுகிறார்.

இந்த முடிவு என்பது இந்தியா எடுத்த முடிவு. இந்த முடிவை ஏற்கச் சொல்லி ஜெகத் கஸ்பர் லண்டனில் உள்ள தனது நண்பர் மூலமாக கே.பி.யை நிர்ப்பந்திக்கிறார். இந்தியாவின் விருப்பங்களை மீறி ஐ.நா.வோ, மேற்குலகமோ இலங்கையில் எதையும் செய்துவிடாது என்பது நமக்குத் தெரிந்ததுதான்.

இதே நேரத்தில் மேற்குலக நாடுகள் மூலமாக கே.பி. எடுத்த முயற்சிகளினூடாக 17ஆம் தேதி கொழும்பு வருகிறார் ஐ.நா.வின் விஜய் நம்பியார். இவர் இந்திய அபிமானி. இவருடைய தம்பி சதீஷ் நம்பியார் இலங்கை அரசிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு ராணுவ ஆலோசகராக இருக்கின்றார். விஜய் நம்பியார் இந்திய வம்சாவளி என்பதெல்லாம் தனிக்கதை. ஆனால் கொழும்பு சென்ற விஜய் நம்பியார் அடுத்த சில மணிநேரங்களில் அங்கிருந்து கிளம்பி நியூயார்க் சென்று விடுகின்றார். அதாவது இந்தியாவின் முயற்சிகளுக்கு இடையூறாக இருக்காமல் அவர் நியூயார்க் சென்று விடுகிறார்.

இலங்கையிடமே சரணடையுங்கள் என்று புலிகளை நிர்ப்பந்திக்கும் முயற்சியை ஒரு பக்கம் எடுத்துக் கொண்டே, மேற்குலகின் தலையீடு கடைசி நேரத்தில் தனது திட்டத்தைக் குழப்பி விடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக இருந்திருக்கிறது இந்திய அரசு என்பது தெளிவாகத் தெரிகின்றது.

ஜெகத் கஸ்பர் மூலமாக இந்தியா பார்த்துக் கொள்ளும் என்ற பொய்யான உறுதிமொழி நடேசனுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இவர்களால் வழங்கப்பட்ட உத்திரவாதங்களை நம்பித்தான் வெள்ளைக் கொடியோடு சிங்களப் படைகளிடமே சரணடைந்த நடேசன் கொல்லப்பட்டிருக்கின்றார்.

களத்தில் நின்ற புலிகளோ தூங்கி நெடுநாட்கள் ஆகி விட்டது. தூக்கமின்மை, போதிய உணவின்மை, போராடும் வலுவின்மை, காயமடைதல், வீதியெங்கும் சிதறிக் கிடக்கும் வன்னி மக்களின் பிணங்கள் என்று புலிகள் உளவியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தகர்ந்து போயிருந்திருக்கின்றார்கள். இந்தியாவின் தேர்தல் முடிவுகளும் அவர்களுக்கு இடியாக வந்து இறங்க, இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட இந்திய அரசு, “ஆயுதங்களை மவுனிக்கச் செய்கிறோம். காயமடைந்தவர்களைக் காப்பாற்ற உதவுங்கள்” என்ற புலிகளின் கோரிக்கையை ‘சரணடைதல்’ என்று மாற்றுகிறது. இந்தியாவின் இந்த முடிவை ஜெகத் கஸ்பர்ராஜ் செயல்படுத்தியிருக்கின்றார்.

தனது மே மாதக் கட்டுரையில் ‘புலிகள் சரணடையும் முடிவை அறிவித்தார்கள். அதன்படி சரணடைந்தவர்களை இலங்கை ராணுவம் கொன்று விட்டது’ என்று எழுதிய அதே ஜெகத் கஸ்பர், இப்போதோ போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பிருந்தும் புலிகள் அதற்குத் தயாராக இல்லாத காரணத்தால்தான் இவ்வாறு நடந்து விட்டது என்று கொல்லப்பட்டுவிட்ட புலிகள் மீதே பழியைத் தூக்கிப் போடுகின்றார்.

கடற்படைத் தளபதி சூசையின் கோரிக்கையும், அதை சரணடைதலாக மாற்றிய ஜெகத்தின் தந்திரமும்…

ஜெகத்தின் ‘யுத்த துரோகம்’ கட்டுரையில் சூசையின் பேச்சையே தனது முடிவுகளுக்கு ஏற்ப திரித்துக் கூறுகின்றார் கஸ்பர். 16ஆம் தேதி சூசை மதுரைக்காரரிடம் பேசிய நேரத்தில் பிரபாகரனும், முக்கியத் தளபதிகளும் களமுனையை விட்டு அகன்று சென்ற பின்பு பேசியதாக கஸ்பர் சொல்கின்றார். அப்படியானால் சூசை பேசியது எங்கிருந்து? தப்பிச் சென்ற இடத்திலிருந்தா? சூசையின் பேச்சை இணையத்தில் கேட்ட எவர் ஒருவரும், கடும் சண்டை நீடிக்கும் ஐநூறு மீட்டருக்குள் இருந்து கொண்டேதான் அவர் சேட்டிலைட் போனில் பேசியிருக்கின்றார் என்று புரிந்துகொள்ள முடியும்.

மேலும் சூசை மன்றாடியதாகக் கூறுகின்றார் கஸ்பர். ஆனால் அவருடைய பேச்சில் எங்குமே சரணடையும் கோரிக்கையோ, கெஞ்சல் குரலோ மன்றாட்டமோ இல்லை. கடுமையான பதட்டமும் கோபமும்தான் அவருடைய பேச்சில் இருந்ததே தவிர, கஸ்பர் சொல்வதைப் போல மன்றாடவில்லை. அப்படி மன்றாடியிருந்தால் அதற்கான ஆதாரத்தைக் கொடுக்க வேண்டியது ஜெகத் கஸ்பர்ராஜின் பொறுப்பு.

“காயமடைந்திருக்கும் போராளிகளையாவது காப்பாற்றுங்கள்” என்று சூசை கோரிக்கை வைத்தது உண்மைதான். ஆனால் காயமடைந்தவர்களை வட்டுவாகல் வழியாக மீட்கும் கோரிக்கையைத்தான் சூசை வைக்கின்றார். இதைத்தான் ‘எதார்த்தமான முடிவு’ என்ற பெயரில் சரணடையும் முடிவாக மாற்றுகின்றார் கஸ்பர்.

இறுதி நேரத்தில் அதிசயங்கள் எதுவும் நடந்தால் ஒழிய இப்போரின் முடிவு என்பது இப்படியாகத்தான் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. 13ஆம் தேதி சிங்கள ராணுவத்தின் கடற்படையும் தரைப்படையும் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒன்று சேர்ந்ததோடு புலிகளும் மக்களுமாக சுற்றி வளைக்கப்படுகிறார்கள். தப்பிக்கும் வாய்ப்புகளும் தகர்ந்து விடுகின்றன. ஆனால் போர் முடிவுக்கு வரவில்லை. அந்த நேரத்தில் பேச்சு வார்த்தை என்னும் மிகப் பலவீனமான ஆயுதத்தை புலிகள் கையில் எடுக்கிறார்கள்.

காயமடைந்தவர்களைக் காப்பாற்றுங்கள் என்று ஜெகத் கஸ்பர்ராஜிடமும், கனிமொழியிடமும் கேட்கின்றார்கள். நீடித்துக் கொண்டிருக்கும் போரை விரைந்து முடிவுக்குக் கொண்டு வர விரும்பிய இந்தியா, ஜெகத் கஸ்பரைப் பயன்படுத்தி காரியத்தை எளிதாக முடித்துக் கொண்டிருக்கிறது.

மேரி கொல்வின் விஜய் நம்பியாரிடம் புலிகளின் கோரிக்கையை எடுத்துச் சொல்லும்போது, வெள்ளைக் கொடியேந்தி சரணடையும் முடிவு இந்தியாவின் உத்திரவாதத்தின் பேரில் புலிகளால் ஏற்கெனவே எடுக்கப்பட்டு விட்டது. இதைத்தான் மேரி கொல்வினிடம் சொல்கிறார் விஜய் நம்பியார்.

ஆனால் ஜெகத் கஸ்பர், இந்தியா கொடுத்த உறுதிமொழியை மறைத்து, அதனை இலங்கை வழங்கிய உறுதிமொழி என்று மடை மாற்றி, இந்தக் கொலைக் குற்றத்திலிருந்து இந்தியாவைத் தப்ப வைக்கின்றார். கடைசியில் 300 போராளிக் குடும்பங்கள் கொடூரமான முறையில் கொன்றொழிக்கப்படுகின்றார்கள்.

நடேசனும், 300 போராளிகளும் ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்படுவதற்கு ஜெகத் கஸ்பர்ராஜின் முயற்சியே காரணமாக இருந்திருக்கின்றது. ஆகவே டெல்லியில் இருந்து பேசிய அந்த காங்கிரசு பெரியவர் யார் என்பதை கஸ்பர் வெளிப்படையாகக் கூற வேண்டும். அந்த காங்கிரசு பெரியவர் எடுத்த எதார்த்தமான முடிவை ஜெகத் கஸ்பரோ, கனிமொழியோ ஏன் ஆட்சேபிக்கவில்லை என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். செய்வதை எல்லாம் செய்து முடித்து விட்டு, இன்று நக்கீரன் இதழில் பிரபாகரனோடு உண்டு உறங்கியது போல எழுதிக் கொண்டிருக்கும் நாடகத்தைக் கஸ்பர் நிறுத்த வேண்டும்.

எமதருமை புலத்து மக்களே,

இனியும் இந்த சந்தர்ப்பவாதப் பச்சோந்திகளை நம்பி ஏமாறாதீர்கள். ஈழப் போராட்டம் என்பது பிராந்திய வல்லரசுகளிடம் கெஞ்சி பெறப்பட வேண்டிய விசயம் அல்ல; அது நமது ஈழ மக்களின் இறைமை சார்ந்தது. நமக்கான போராட்டங்களை நாமே முன்னெடுப்போம்!

- இறைவன்

http://www.tamilwin.com/view.php?2a46QVb4b4bF98S34b2SIPz2e22N1GQecd24ipDce0ddZLuIce0dg2Fr2cd0FjoM30

Monday, January 18, 2010


இலங்கை அரசு போர்க் குற்றவாளியே


ஈழத் தமிழர்களுக்கு எதிரானப் போரில் இலங்கை இராணுவப் படைகள் போர் குற்றத்தையும், மானுடத்திற்கு எதிரான குற்றங்களையும் செய்துள்ளது என்றும், எனவே இலங்கை அரசு போர்க் குற்றவாளியே என்று ஐரிஸ் தலைநகர் டப்ளினில் நடந்த நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் ஆரம்ப கட்டத் தீர்ப்பளித்துள்ளது.

இத்தாலியின் மிலன் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் (Permanent People's Tribunal) கடந்த 14, 15ஆம் தேதிகளில் ஐரிஸ் தலைநகர் டப்ளினில் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்தப் போரில் நிகழ்த்தப்பட்டதாக கூறப்படும் போர்க் குற்றம், மானுடத்திற்கு எதிரான குற்றம், இனப் படுகொலை ஆகியன குறித்து விசாரணை செய்தது.இந்த விசாரணையில், இறுதிக்கட்டப் போரில் பல பத்தாயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட முல்லைத்தீவில் இருந்து தப்பி வந்த சாட்சிகளும், ஏராளமான ஆவணங்களும், படப்பதிவுகளும் முன்வைக்கப்பட்டன.

இரண்டு நாள் விசாரணையில் நிரூபிக்கப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் நேற்று (டப்ளின் நேரப்படி) பிற்பகல் 2 மணிக்கு, மக்கள் தீர்ப்பாயத்தின் தலைமை நீதிபதி பிரான்சுவா ஹதா, தீர்ப்பாயத்தின் ஆரம்ப கண்டுபிடிப்புகளை (Preliminary Findings) வெளியிட்டார்.

அதன்படி, கீழ்க்கண்ட 4 கண்டுபிடிப்புக்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹதா அறிவித்தார்:

1. இலங்கை அரசு போர்க் குற்றவாளியே.

2. இலங்கை அரசு மானுடத்திற்கு எதிரான குற்றம் இழைத்துள்ளது.

3. இலங்கைக்கு எதிரான இனப் படுகொலை குற்றச்சாற்றின் மீது மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.

4. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை முறிந்ததற்கு சர்வதேச சமூகம், குறிப்பாக அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியன பொறுப்பாகும் என்று கூறியுள்ளார்.

இந்த விசாரணையின் போது பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்திருந்த மக்களின் மீது கனரக பீரங்கிகளைக் கொண்டு தாக்கியதும், அவர்களின் மீது வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளை வீசியதும் உறுதி செய்யப்பட்டது.

பிரான்சுவா ஹதா தலைமையிலான இத்தீர்ப்பாயத்தில் ஐரிஸ் நாட்டின் டெனிஸ் ஹாலிடே, மேரி லாலர், இந்திய நீதிபதி (ஓய்வு) இராஜேந்திர சச்சார் உள்ளிட்ட 10 பேர் நீதிபதிகளாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரிஸ் மக்கள் தீர்ப்பாயத்திற்கு ஏற்பாடு செய்து சிறிலங்க அமைதிக்கான ஐரிஸ் மன்றம் என்ற அமைப்பு, கீழ்க்கண்ட கோரிக்கைகளை விடுத்துள்ளது:

1. இலங்கையில் நடைபெற்ற போரில் இலங்கை அரசப் படைகளும் விடுதலைப் புலிகளும் இழைத்த போர்க் குற்றங்கள், மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ஆகியன மீது ஐ.நா. பான்னாட்டு அளவிலான விசாரணை நடத்த வேண்டும்.

2. வன்னி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும், இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 11,000 பேர் உட்பட அனைவரையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

3. சட்டத்திற்குப் புறம்பான படுகொலைகள், சித்ரவதைகள், பாலியல் குற்றங்கள், அப்பாவி மக்களுக்கு உணவு, குடிநீர் அளிக்காமல் துன்புறுத்துதல் ஆகிய அனைத்து குற்றங்களையும் முழுமையாக நிறுத்துமாறு சிறிலங்க அரசைக் கோருகிறோம்.

4. அரசியல் எதிர்ப்பை வன்முறையின் மூலமாகவும், மற்ற வழிகளிலும் ஒடுக்குவதை சிறிலங்க அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

5. இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக வரலாற்றுக் காலந்தொட்டு இழைத்து வரும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை நிறுத்துமாறும், அவர்களுடைய பங்கேற்புடன் கூடிய அரசியல் தீர்வு காணும்படியும், அனைத்து மக்களுக்கும் பொதுவான மனித உரிமைகளை நடைமுறைபடுத்துமாறும் இலங்கை அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.


Press Release


DUBLIN TRIBUNAL FINDS AGAINST SRILANKA ON CHARGES OF WAR CRIMES
In Dublin today at 2pm the Peoples Tribunal chairman FranCois Houtart read the preliminary findings of the Peoples Tribunal on the war in Sri Lanka and its aftermath. There are 4 findings:

1. That the Sri Lankan Government is guilty of war crimes

2. That the Sri Lankan Government is guilty of crimes against humanity

3. That the charge of genocide requires further investigation

4. That the International Community, Particularly the UK and USA, share responsibility for the breakdown of the peace process.

Harrowing evidence including video footage was submitted y eye witnesses of the use of heavy artillery and phosphorous munitions, and of the continuous violation of human rights by military activity to a panel of 10 international jurors over two days. Irish members of the jury were Denis Halliday and Mary Lawlor.

The Irish Forum for Peace in Sri Lanka welcomed the preliminary findings of the tribunal. Responding to the findings the forum issued the following five demands:

1. We call on the Sri Lankan Government to allow the UN to conduct an inquiry into war crimes and crimes against humanity perpetrated during the final stages of the war between the Sri Lankan armed forces and the LTTE, and during the war's aftermath.

2. We call on the Sri Lankan Government to release all those being detained in concentration camps and the estimated 11,000 people being held secretly at unknown locations.

3. We call on the Sri Lankan Government to end the use of extra-judicial killings, sexual violence and the deprivation of food and water as weapons against a civilian population.

4. We call on the Sri Lankan Government to end the suppression of political dissent by violent or other means.

5. We call on the Sri Lankan Government to fully implement human rights for all citizens of Sri Lanka and a political solution involving the full participation of the Tamil population, ending the systematic historical discriminatory measures of the Sri Lankan state against the Tamil people. Irish Forum for Peace in Sri Lanka asserts that long term peace and stability can only be established on the basis of full justice and rights for all the inhabitants of the island.

Saturday, January 16, 2010


ஈழத்தமிழரின் புதுவருட நம்பிக்கை


இப்பொழுதெல்லாம் இரவுகளில் மெய் மறந்து தூங்க முடிகின்றது. அப்படித்தான் அவர்கள் கூறுகின்றார்கள். அப்படியிருந்தும் தூங்காத இரவுகளின் கறைகள் அவர்களின் கண்களில் இன்னும் கறைகளாக வழிந்து கொண்டுதான் இருக்கின்றது. இப்போதேல்லாம் புலிகளால் நிரப்பப்பட்டிருந்த என்ணங்கள் யாரால் நிரப்பப்படக் கூடும் என்ற எதிர்பார்ப்புடன் நிரம்பாமையுடன் வெறித்துத் தழும்புகின்றது. டக்ளஸ் அந்த இடத்தைப் பிடிக்கும் பகீரதப் பிரயத்தனத்துடன் முயற்சிப்பதாக அறிகின்றேன்.

டக்ளஸும் அவர் அரசியலும் அதிகம் என் மனதைக் கவராது விட்டாலும் அனாதியாகி அவதிப்படும் மக்களைக் கவரும் வல்லமை அவருக்கு இருப்பதாகவே அங்கிருக்கும் மக்கள் கூறுகின்றார்கள். "ஆண்ட பரம்பரை"க்கதைகளை விட்டு வரமுடியாமலேயே இருக்கின்றார்கள் கூட்டணிக்கட்சியினர் என்பதே தமிழ் மக்கள் கருத்தாக இருக்கின்றது. கற்பனாவாதம் மிக்க குண்டுச்சட்டியின் குதிரையோட்டல்களில் நம்பிக்கை கொள்ள முடியாத நிலையை மக்கள் எட்டி விட்டார்கள் என்பதையே இன்னும் கூட்டணியினர் புரிந்து கொள்ள வில்லை.

இல்லாவிட்டால் புலிகளின் தகப்பனின் மரணச்சடங்கை மகாபெரிய வித்தையாக்கும் அற்பத்தனம் மகிந்தரைப் போலவே சிவாசிலிங்கத்திற்கும் எப்படி வந்திருக்கக் கூடும். ஐந்து இலட்சம் மக்கள் இறப்பை விட மேலான காரியமாக பிரபாகரனின் தந்தையின் மரணத்தைப்பார்க்கும் அல்பத்தனம் எவ்வாறு வந்தது என்பத்தை சிவாசிலிங்கம் இனி வருங்காலத்தில் கூற வேண்டிய தேவை அவருக்கு மட்டுமே இருக்கின்றது.

புலிகளைக்கொல்லுவதில் நண்பர்களாக இருந்தவர்கள் அதன் பயன்களை எடுப்பதில் மட்டும் எதிரிகளாகப் போனது விசித்திரமே. அதன் பலாபலன்கள் இப்போது ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுப்பதில் மும்முரம் காட்டுகின்றது. ஐ.நாடுகள் போர்க்குற்றங்கள் பற்றிக் கருத்து எடுப்பதில் நேர விரயம் செய்யத் தேவையில்லை. ஒருவரை ஒருவர் எதிர்த்து விடும் அறிக்கைகளையே ஆவணமாக வெளிப்படுத்த முடியும். போர்க்காலங்களில் கனரக ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லை என்ற அரசின் பொய் முகத்தை மங்கள சமரவீர அம்பலப்பட்த்தியுள்ளார். அதே பொய்க்காரணத்திற்காகவே நம்ம கண்ணாநிதியும் மூணே முக்கால் மணி நேர உண்ணா விரதம் இருந்து உலகப்பிரசித்தம் பெற்றதும் நடந்திருக்கின்றது.

தமிழரின் மனங்களை மட்டுமன்றி மண்களையும் புண்படுத்தும் வேலைகளில் சிங்களவர் ஈடுபடுகின்றார்கள். என்ன இருந்தாலும் வெற்றி கொண்ட மமதையில் அவர்கள் மிதப்பது தெளிவாகவே தெரிகின்றது. அதற்கான பதிலைக்கொடுக்க வேண்டிய தெரிவில் நம்மைப்போன்ற எத்தனையோ பேர் கறுவிக்கொண்டிருக்கின்றார்கள்.கொடுத்தே தீருவோம். அதே போல இந்த நிலைமையை நமக்குக்கொடுத்த இந்தியாவையும் எம் பார்வையில் எப்போதும் கொன்று போடும் கொலை வெறியில் வைத்துப்பாது காப்போம் என்பதே என் புதுவருட ரெஷலூஷன் கூட.

உலகம் ஒரு சுற்றுப்பாதையில் என்பதில் எனக்கு எப்போதும் அசையாத நம்பிக்கை இருக்கின்றது.இந்தியாவும் என் காலடியில் வந்து பிச்சை கேட்கும் நாள் வரும் என்ற அசையாத நம்பிக்கையில் ஈழத் தமிழன் ஒவ்வொருவரும் நிமிர்ந்து நிற்கவேண்டும். ஏன் ? எப்படி என்பதை கண்டு பிடிக்க வேண்டியது நாங்களே.. ஏனென்பது எங்கள் எல்லோருக்கும் தெரிந்ததே...

தலைவர் சொல்லிச் சென்றதும் அதுவே... ஆகவே புதுவருடம் எங்களுக்கு நம்பிக்கையைக் கொடுக்கட்டும்...

Sunday, January 10, 2010


வலிக்குது அழுதுடுவேன் - விஜயகாந்த்


ஒரு கொள்கையும் இல்லாத ஒருவர் கட்சி ஆரம்பித்தால் என்னாகும்? கழுதை தேய்ந்து கட்டெறும்பானது போல தே.மு.க விற்கும் விஜயகாந்த் சொத்துகளுக்கும் ஆனது போல "வலிக்குது அழுதுடுவேன்" வடிவேலு ரேஞ்சுக்கு வந்து நிற்கும்.

"நான் தமிழன்... தமிழா " என்ற தமிழன் வேடம் டெல்கி சென்று வந்ததும் முடங்கிப் போய் "இந்தியா... இந்தியன் "திரிந்த பால் போல அழுகிப்போனது. தமிழனாய் இருந்த போது "பிரபாகரன்"என்று சொந்த மகனுக்கே பெயர் வைத்த கப்டன் இந்தியனாகிப்போன பின்பு இந்தியாவால் கொல்லப்பட்ட 5 இலட்சம் மக்களுக்காக ஒரு சொட்டுக்கண்ணீர் கூட விடவில்லை.

அரசியலுக்கு வந்தபின்பு "மக்களுடனேயே கூட்டு..அந்த ஆண்டவனுடன் தான் கூட்டு " என்று வீர வசனம் பேசியவர் இன்று அந்த மக்களையே திட்டத் தொடங்கி விட்டார்.

"திமுக, அதிமுகவினர் எவ்வளவு நாள்தான் பணத்தை கொடுத்து ஓட்டு (மக்களிடம்)வாங்குவார்கள். மக்கள் ஒருநாள் விழித்தெழுவார்கள். "

விழித்தெழ மக்கள் என்ன தூங்குகின்றார்களா? தூங்குவது போல பாவனை செய்யும் மக்களுக்குத் தெரியாதா? காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளுவது தான் வாழ்வதற்கு வழியென்று சொல்லிக்கொடுத்ததே நீங்கள் தானே.

எத்தனை சந்தர்ப்பவாதக் கூட்டணிகளை அமைத்துக் காட்டீனீர்கள்? ஏன் அப்படியென்று கேட்டால் ராஜதந்திரம் என்றீர்கள் கூடியிருந்து கெடுப்பது ,எடுப்பது என்றீர்கள்.. எல்லோரின் நோக்கமும் பணம் பண்ணுவது தான் என்பதைச் சொல்லாமல் சொன்னீர்களே..

இப்போது மக்களும் அதைப் பின்பற்றுவதில் தவறென்ன இருக்கின்றது? இது வரை துங்கிக்கொண்டா இருந்தார்கள்?
ஏன்? மக்கள் இனித்தான் விழித்தெழ வேண்டுமா?
விழித்தெழுந்த மக்களால் தானே திருமங்கலத்தில் அரசியல்வாதிகளால் பணநாயகத்தை நிலை நாட்ட முடிந்தது..

அரசியலில் அனா ஆவன்னா தெரியாத...நீயெல்லாம் கட்சி தொடங்கவில்லையென்று மக்கள் அழுதார்களா ? என்ன? நீங்க உங்க அரிப்பால் கொழுப்பால் கட்சி தொடங்குவீர்கள் பின்னர் மக்களைக் குறை சொல்வீர்கள்... பாவம் எவ்வளவு கஸ்டப்பட்டு கட்சி நடாத்தும் கருப்புக்கண்ணாடியை வம்புக்கிழுப்பீர்கள்... கோடி கோடியாக அடிக்காவிட்டால் ஐநூறு ஆயிரம் இலவச டீவீ என்று கேட்கும் மக்கள் என்ற இந்த பரசைப் பன்னாடைகளுக்கு எங்கிருந்து கொடுப்பது... திருக்குவளையில் தெண்டித்திரிந்த முத்து வேலரின் எதை அறுத்துக் கொடுப்பது... இது புரியாம ..கருப்புக் கண்ணாடியை வம்புக்கிழுத்தால்... நீ பெரிய அரசியல் கோவணம் என்று நினைப்பா?

நான் தனியாக கட்சி ஆரம்பித்து நடத்தி வருகிறேன். ஆனால் அண்ணா ஆரம்பித்த கட்சியைத் தான் கருணாநிதி நடத்திக் கொண்டு இருக்கிறார். அந்த கட்சியில்தான் ஸ்டாலின் இருந்து கொண்டு இவ்வாறு பேசுகிறார். நீங்கள் தனியாக கட்சி ஆரம்பியுங்கள். உங்களுக்கு அதன் வலி தெரியும்.

ஏய்யா... அண்ணா பெரீய்ய அம்பானி பரம்பரை ...செலவழிக்க வழிதெரியாம கட்சியைத் துவங்கினாரு... கருணாநிதி காலாட்டிக்கொண்டு கட்சி நடாத்த...கருப்புக்கண்ணாடிக்குள் மறைந்திருக்கும் கருப்பு இதயத்தைக் கேட்டுப் பார்த்தால் அது கண்ணீர் வடிக்கும்... எத்தனை பாடுபட்டு ..எத்தனை தகிடு தத்தம் செய்து எத்தனை உடன் பரிப்புகளை பலி கொடுத்து தமிழனைக் காட்டிக் கொடுத்து துரோகம் செய்து நரகத்து எண்ணெய்க் கொப்பரையில் பொரியும் வரை பாவம் செய்து ஒரு பண சாம்ராஜ்யத்தை ..நிறுவியாகிவிட்டது என்று...

கொடி பிடிச்சா நீயெல்லாம் கோமானாகி விட முடியுமா? தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்தாயா? கடிதம் எழுதினாயா? அட்லீஸ்ட் ஒரு தந்தியாவது அடிக்கத் தெரியுமா? மூணரை மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கத் தெரியுமா?

இதெல்லாம் தெரியாம... நீயெல்லாம் ஒரு அரசியல் வாதி ..இதெல்லாம் ஒரு அரசியல் கட்சி.... மரம் வெட்டி ராமதாசே சொல்லிட்டாரு ... தே.மு.க வை ஒரு கட்சியாவே தான் நெனைக்கலன்னு... அதான்னே...அவர் அளவிற்கு மரங்கூட வெட்டத்தெரியாத வெட்டிப்பயல்களை வைத்துக் கொண்டு....

மக்களிடம் வந்தா... நாங்க என்னா இதை வெச்சு முதுகு சொரியவா முடியும்னு அவங்க கேக்கத்தானே செய்வாங்க...

முதல்ல கட்சிக்கு "கொள்கை" அப்படீன்னு இருக்கணும்...கொள்கையைக் காட்டித்தானே கொள்ளையே அடிக்க முடியும்... அதையாவது உழுந்து படுத்துப் புரண்டு யோசீப்பா... இல்லைன்னா "வலிக்குது அழுதுடுவேன்" வடிவேலு இடமும் தங்காதுப்பா...

Saturday, January 9, 2010


கருணாநிதியென்ற கசாப்புக்கடைக்காரனின் அமைச்சர்கள்

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வாங்குவது இருக்கட்டும் ..முதலில் செந்நீரில் (இரத்தத்தில்) மிதக்கும் தமிழனுக்கு வாழ்வுரிமை கிடைக்கச் செய்யட்டும். இப்படித்தான் எண்ணத் தோன்றுகின்றது.

கருணாநிதி என்ற கசாப்புக்கடைக்காரணை நம்பி 5 இலட்சம் தமிழர்கள் குற்றுயிரும் கொலையுயிருமாக இறந்துண்டு போனபோது தந்தி,கடிதம்,மூண்டரை மணி நேர உண்ணாவிரதமென்று நாடகமாடியபோது தமிழகத்தமிழன் தனக்கொன்றும் குடி முழுகிப்போகவில்லை என்று வாளாவிருந்தான்.

20 மைல் கடந்து தானே நடக்கின்றது இந்தக் கொடுமையெல்லாம்..நானும் என் குடும்பமும் செளக்கியம் என்று வாளாவிருந்தான். நம்ம தலைவர் சொன்னா சரியாத் தானிருக்கும் என்று உடன் பரிப்புகள் எல்லாம் வரிந்து கட்டிக்கொண்டு ஜால்ரா போட்டார்கள்.

இதோ இன்று உன் வீட்டு முற்றத்திற்கு வந்திருக்கின்றது அதே இரத்தக்கோலம். உன் கண்முன்னாலேயே மக்களைக் காக்க வேண்டிய காவலரையே வெட்டிப்போட்டிருக்கும் போது மக்களால் மக்களுக்காகத் தெரிவு செய்யப்பட்ட மந்திரிகள் என்று தான் சொல்ல ஆசையாக இருக்கின்றது.

பணத்திற்காகவும் குவாட்டருக்காகவும் பல்லிளித்து நீங்கள் போட்ட வோட்டு இன்று ரெளடிகளை மந்திரிகளாக்கி வெள்ளையும் சொள்ளையுமாக யமகிங்கிரனின் தூதுவர்களாக உங்களின் முன்னால் நிறுத்தியுள்ளது.

இந்த யமகிங்கிரனின் தலைவன் என்று சொல்லும் அந்த கசாப்புக்கடைக்காரன் பதவி விலகுவது தானே தார்மீகம். மக்களைக்காக்கத் தவறியதால் நீதி வழுவியதால் அரசசபையிலேயே வழுவி விழுந்து உயிர் துறந்த பாண்டியன் வாழ்ந்திருந்த நாடுதானே இது.

"சப்-இன்ஸ்பெக்டரைக் காப்பாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்காத 2 திமுக அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்' என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மட்டும் கோரியுள்ளார். மற்றைய அரசியல் புண்ணாக்குகளோ மத்திய அரசின் ஈனப்பிறவிகளோ இது வரை எந்தக் கருத்தும் கூறவில்லை. இரண்டு நாட்களாகின்றது. கண்ணுக்கு முன்னாலுள்ள இந்த பட்டவர்த்தனமான சாட்சியத்தை விட வேறு என்ன வேண்டி தேவுடு காக்கின்றார்கள்?

உலகமே பதைத்துக் கொண்டிருக்கும் இந்த விடயம் பற்றி இந்த கசாப்புக் கடைக்காரன் ஒரு வார்த்தை உதிர்க்கவில்லை.என்னே ஒரு தெனாவெட்டு. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசா?அல்லது மன்னராட்சியா இங்கு நடை பெறுகின்றது? நீங்கள் யாரும் கேட்கவே மாட்டீர்களா? சோறு தான் சாப்பிடுகிறீர்களா? அல்லது... தூ..



தேர்தல் ஸ்டண்டும் தமிழ் மக்களின் கொண்டையும்


இலங்கையிலே ஜனாதிபதி தேர்தல் வருதுன்னு அறிவிச்சாலும் அறிவிச்சாங்க நம்ம ஆளுங்களெல்லாம் ரங்கராட்டினம் சுத்தத் தொடங்கிட்டாங்க.. ஏன் சறுக்கு மரம் ஏறலியான்னு நீங்க கேட்கலாம். அதெல்லாம் பழமையான வெளையாட்டுங்க. ரங்கராட்டினம் தான் எங்கே போரோம்னும் தெரியாம ..முன்னே பின்னே போரோமான்னும் தெரியாம சுத்திக் கிட்டே இருக்குற வெளையாட்டு.

தமிழ் மக்களெப் பொறுத்தளவில் இந்த வெளையாட்டே புரியாத, தேவயில்லாத ஒரு துக்கத்தில் மயக்கத்தில் இருக்கப்போக துள்ளிக்குதிப்பது என்னவோ சூடு சொரணயத்த அரசியல் வெளையாட்டுப் புள்ளிங்களும் எழுத்துக் கவிராயர்களும் தான். கள்ளன் போலீஸ் வெளையாட்டெல்லாம் வெளையாடிய காலம் போயி கள்ளனில எந்தக்கள்ளன் கம்மியாக் களவெடுத்தான்னு தேர்வு நடக்கின்றது... இந்த லட்சணத்தில அவன் தான் இவன் தான்னு கையைக் காட்டி தங்கள் இருப்பை மூச்சுப்பிடிச்சு நிறுத்திக் கொண்டிருக்கின்றாங்க இவங்கள்.

தமிழ்ச் சனம் எக்கேடு கெட்டாலும் தான் ஒரு அரசியல்வாதின்னதும் கருத்தியல்வாதின்னதும் மறந்து போகக் கூடாதுன்ன ஆவலாதி தான் அவங்க அவசரத்தில் தெரியுதுங்க. கருத்துக் கண்ணாயிரங்களும் தங்களைக் கவனிக்கணும்ன ஒரு வெறியிலேயே பக்கம் பக்கமா எழுதிக் குவிக்கிறாங்க... என்ன எழுதினோம்னே மறந்து போயி அதுக்கு எதிர்த்தாப்பில எழுதுற அவலமும் சேம் சைட் கோல் போடுற கொடுமையிலும் தம் பிரபலத்தை நிரூபிக்கப் போராடிக்கொண்டிருக்கிறாங்க..

போர்க்காலக் குற்றங்கள்னு மூச்சுக்கு முன்னூறு தடவ பேசிக்கிட்டிருக்கும் போதே குற்றவாளிகள்னு கைகாட்டப்படும் இருவர் தான் அதி உத்தம கனாதிபதி வேடத்திற்கு போட்டி போடுபவர்கள்னது தான் அழகிய முரண் நடை. இதில் இரண்டு பேருக்குமே சம அளவு குற்றப்பங்கு இருக்கின்றது.கொலை செய்வதும் கொலைக்கு உடந்தையாய் இருப்பதும் ஒரே அளவு குற்றங்களே.அதைத் தூண்டி விடுவதும் ..அதே அளவு தண்டைனைக்குரியதே . அதைச் செய்த இந்தியா தன்னைக் காத்துக் கொள்ள யாரைப் பலிக்கடா ஆக்குவது என்பதில் நொண்டியடித்துக் கொண்டிருக்கின்றது.

நிலைமை இப்படியிருக்க ...மக்களால் இதில் எந்தக் குற்றவாளியைத் தேர்ந்தெடுக்க முடியும் என்பதுவும் எதற்காகத் தேர்ந்தெடுக்க தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமென்றும் காரணங்களை எந்த அதி மேதாவிககளாலும் கூறத் தெரியவில்லை.

தலைக்கு மேல் தொங்கும் கத்தியை ஒருவர் மேல் ஒருவர் திருப்பி விடுவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாகவே முன்னநாள் நண்பர்களும் இன்னைநாள் எதிரிகளுமான அதி உத்தம ஜனாதிபதி வேட்பாளர்கள் கருதுகின்றார்கள்.

கவனித்துப் பார்த்தீர்களானால் யுத்தகாலத்தில் வலக்கை இடக்கை அல்லக்கைகளாக இருந்த கோத்தபாய ராஜபக்ஷ,பஸில் ராஜபக்ஷ போன்றவர்கள் இருந்த இடமே தெரியாது அஞ்ஞாத வாசம் போயிருப்பதை அறிந்து கொள்ளலாம். முன்னரெல்லாம் இலங்கையின் ஆட்சியைத் துக்கிப்பிடிக்க அரசியல் அறிக்கைகளை வெளியிட்ட டில்லி இப்போது வாய் மூடி ராஜதந்திர தகிடுதத்தத்திலேயே மூழ்கிப்போய் கிடக்கின்றது. தமிழ் மக்களின் கதறல்களைத் தனது கடிதம் தந்தி மூணரை மணிநேர உண்ணாவிரதம் என்பதால் கதிகலங்க வைத்துக் கொண்டிருந்த கருப்புக் கண்ணாடியும் இந்தப் பூனையும் பால்குடிக்குமோ என்ற பம்மாத்துள் பதுங்கிக் கொண்டுவிட்டது.

மேற்குலகின் கிடுக்கிப்பிடியென்ற ஐக்கிய நாடுகள் சபை நகருகின்ற நச்சுப்பாம்பாக அசைந்து அசைந்து என்றோ ஒரு நாள் கொத்தியே தீரும் என்பதை இந்திய அரசியல்வாதிகளான மன்ணுண்னிப்பாம்புகள் உணர்ந்தேயிருக்கின்றன. நயவஞ்சக காட்டிக்கொடுப்பின் பின்னால் தமிழ் மக்களைக் கொன்று பிணமலையைக்குவித்த இந்தியக் குள்ளநரி அரசியல்வாதிகளின் கொக்கரிப்புக்கள் அடங்கிப்போய் விட்டன. ஒரு ஆட்சி மாற்றத்திற்காகக் காத்திருக்கும் நகரும் நச்சுப்பாம்பு தங்களைக் கொத்தியே தீரும் என்பதில் காங்கிரஸ் அரசியல் வாதிகள் உள்ளூரக் கிலி கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு சீர் செய்ய முடியாத யுத்த கால அழிவிற்குப் பின்னர் தமிழ்மக்களை வழி நடாத்த இங்கிருக்கும் ஈழத் தமிழ் அரசியல் புள்ளிகளுக்கோ கருத்துக் காண்ணாயிரங்களுக்கோ யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. இந்த லட்சணத்தில் தமிழ் மக்களின் உடனடி, எதிர்கால தலைவர்கள் தாங்கள் தான்னு நிரூபிக்க எந்தக் கோமாளி வேடத்தையும் விட்டு வைக்க இவர்கள் தயாராகவில்லை.

இதில என்ன கொடுமைன்னா யாரு மக்கள் பத்தி நெனைக்கிறாங்கன்னோ எது சரி எது பிழைன்னோ புரியாத மயக்கத்தில் மக்களை வழமைபோலவே குழப்பத்திலேயே விட்டிட்டாங்க...

முன்னெல்லாம் தேர்தல்னா தமிழர் தரப்பு காவடி எடுக்கும் தமிழ்நாடு, டில்லி சுற்றுப்பயணங்கள் பின்னர் வன்னி நோக்கி திசை திருப்பப்பட்டிருந்தது. அப்புறம் புலிகளின் ஒழிப்புடன் மீண்டும் டில்லிக்கு தமிழர் முன்னணி எடுத்த படையெடுப்பை டில்லி உதாசீனம் செய்ததோ கண்டுக்கலையோ அதுவும் நின்று விட்டது. டில்லி - மகிந்த கூட்டுநெருக்கத்தில் , தங்களைக்காத்துக் கொள்ளும் அவசரத்தில் தமிழர் தேவையையோ துன்பத்தையோ நினைத்துப்பார்க்க டில்லிக்குத் நேரமில்லாது போய் விட்டதை உணரக்கூட திராணியில்லாத தமிழர் முன்னணி இப்போது தம் இருப்பை நிலைநாட்டிக்கொள்ள முன்னைநாள் இராணுவத் தளபதிக்கு ஆதரவாகச் செயற்படுகின்றது.

டக்ளசு பிள்ளையான் வழமை போலவே மகிந்த தோணியில் தொற்றிக்கொண்டிருக்க மகிந்தவால் உதாசீனப்படுத்தப்பட்ட கருணா, ஆறுமுகம் தொண்டமான் போன்றோர் சரத் பொன்சேகா அணியில் சேரத் துடித்துக்கொண்டிருக்காங்க.. ஜேவிபியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட விமல் வீரவன்ச மறுபடியும் புலி வருகுது கிலியைக் கிளப்பியபடி மகிந்த தோணியில் இடம் தேடிக்கொண்டிருக்கின்றது.

புலிகளின் எஞ்சிய தும்புகளும் தமதிருப்பை நிலைநாட்ட வட்டுக்கோட்டை, வணங்காமுடி, நாடு கடந்த அரசுன்னு நட்டுவாங்கம் தட்டிக்கொண்டிருக்கின்றது. வயசு போய் இறந்து போன வேலுப்பிள்ளையின் மரணத்தையும் போர்க்குற்றமாக்கி உருத்திரா அறிக்கை விட்டு தனதிருப்பையும் தமிழ் மக்களின் மறதியில் இருந்து தூசு தட்டிப்பார்க்கின்றார். நம்மாளுங்களின் அகராதிப்படி ஆதரவாளன் துரோகியாவதும் துரோகி ஆதரவாளனாவதும் ரொம்ப சுலமமாகவே தோன்றுகின்றது.

இது வரை புலி ஆதரவாளனென்று பேரெடுத்த சிவாஜி லிங்கத்தை மகிந்தவின் கைத்துரும்பென்று பழித்துரைக்கவும் தயங்கவில்லை. மரணித்த வேலுப்பிள்ளையரை வல்வெட்டித்துறைக்கு எடுத்துப்போக முடியுமான்னு இருந்ததை மறந்து முடிந்தபோது மகிந்தவின் தேர்தல் ஸ்டண்டு என்று மாத்தியடிக்கவும் இந்தக் கருத்தியலாளர்களாலும் தான் முடிந்திருக்கின்றது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் சிங்கள தேசத்தினதோ இந்தியாவினது தயவிலோ தங்கியிருக்கவில்லை என்பதையும் தமிழ் மக்களின் மனங்களை வென்றெடுப்பதிலேயே தங்கியிருக்கின்றது என்பதை இந்த அரசியல் புள்ளிங்களும் கருத்துக் காண்ணாயிரங்களும் எப்போது புரிந்து கொள்ளப்போகின்றார்களோ தெரியவில்லை.

பாமரனின் பக்கத்தில் பாமரத்தனம் - இந்திய கொடுங்கோன்மையின் உள்குத்து

யுத்தக் குற்ற விசாரணைக்கு உதவ நிபுணர் குழுவை ஜ.நா நியமிக்கும்: ஒளிநாடா உண்மை என்பதால் நடவடிக்கைக்கு வலியுறுத்து

- உங்களுக்கு இன்னுமாடா இந்த வலி உறுத்தல. பன்னாடைங்களா! அவன் ஒத்துக்கிட்டு ஆமாம் சாரின்னு கூட சொல்லப் போறதில்லை


பாமரன் பக்கத்தில் பாமரத்தனமாக இவ்வாறு உளரப்பட்டிருந்தது. இது "கேலி" என்ற கோதாவில் கூட எடுத்துக்கொள்ள முடியாதது. அவ்வளவு "வலி"யை அனுபவித்தவர்கள் தமிழ் மக்கள். இதை வாசிக்கும் போது கூட "வலி"க்கின்றது.

அவ்வளவு கொடுமைகளைச் செய்தவர்களைத் தட்டிக்கேட்க முன் வந்தவர்களையும் நக்கல் நளினம் என்ற போர்வையில் பின்னிழுப்பவர்கள் இவர்கள். தலையிடியும் காச்சலும் தனக்குத்தனக்கு வந்தால் தான் அதன் தீவிரம் தெரியும். கூனிக் கூனியே முகுது வளைந்து போனவர்கள்.

கற்பனை மட்டுமே நிறைந்த சினிமா அடிதடிகளையும் வெட்டுக்கொத்துக்களையும் வாழ்க்கையில் பார்த்தும் அதிராது அசராது அனுசரித்துப் போகக் கூடிய கீழ்மையானவர்கள். தன் வாலைப் பிடித்துத் திருகும் வரை சளைக்காது "தப்பித்து" ஓடும் கோழை மனதுடையவர்கள்.

சகட்டு மேனிக்கு கருத்துக் கூறி மற்றவரின் சோகத்தை கூறு போட்டு சிதிலமாக்குபவர்கள். பயங்கரவாதிப் பட்டம் கொடுத்து முழு இனத்தையும் புறமொதுக்குபவர்கள் பெரும் பத்திரிகைகள் என்றால் ஒன்றுக்குள் ஒன்றாகிப் புணர்ந்து எச்சம் போடும் எழுத்துக்காரர் இவர்கள்.

கடுமையாக மறுதலிக்கப்பட வேண்டியவர்கள். எழுத்துச் சிறுமை கொண்டவர்கள்.

அவன் ஆமான்னு ஒத்துக்கொள்ளாவிட்டால்.. அவன் செய்ததைச் சரி என்று சொல்லிவிட முடியுமா? அவன் சரி என்று ஒத்துக் கொள்ளாது விட்டால் அவன் துட்டன் என்பது இல்லாது போய்விடுமா?

இதில் ஏதாவது உள்குத்தும் இருக்கின்றதோ என்ற கவலையும் தொற்றிக் கொள்கின்றது. ஈழத்தமிழர்கள் மீது உண்மையிலேயே இருக்கக் கூடிய தமிழகத் தமிழர்களின் வெறும் அனுதாபத்தைக் கூட நீர்த்துப் போகச் செய்யும் இந்திய கயமை அரசின் கரங்கள் இணைந்திருக்கின்றதோ என்ற குற்றச்சாட்டை நீட்டிக்கக் கூடும்.

ஐயோ நான் பாமரனாச்சே ..குருவி தலையில் பனங்காயா என்று கண்ணைக்கசக்கலாம். ஆனாலும் எத்தனை பேரின் கண்களில் வடியும் கண்ணீரில் இத்தகையவர்களின் இது போன்ற செயல்கள் அமிலத்தைக் கலந்து விடுகின்றது. இந்து ராம்,துக்ளக் சோ, அல்லக்கை சாரு ,தினமலர் போன்ற எடுபிடிகளின் ஒத்தூதல் ஒரு தினுசென்றால் இத்தகையவர்களின் உட்டாலக்கடி உறவாடிக் கெடுக்கும் கேனைத் தனம் மறுவகை.

மேற்கு நாடுகளின் மனிதாபிமானம் எத்தனை அரசியல் பொருளாதார நலன்களை முன்வைத்திருந்தாலும் நடுவே ஊடுபாவியிருக்கும் மனிதாபிமானம் பற்றிச் சந்தேகம் கொள்ள முடியாது.அது அவர்களின் வாழ்க்கையுடன் தொடர்ந்து வருவது. இழக்கக் கூடாத இழப்புக்களைச் சந்தித்து "வாழ்வதற்காக" எழுந்து வந்திருப்பவர்கள். முதலாம் ,இரண்டாம் உலகப்போர்களின் ஊமை வலியை இன்னும் உணர்ந்து கொண்டிருப்பவர்கள்.

உண்மையிலேயே சொல்கின்றேன். இந்தியா என்ற பாழ்பட்ட தேசத்தின் அருகில் ஈழம் என்று ஒன்றிருக்காவிட்டால் அவர்களுக்கு இந்த இழப்பும் துயரமும் நேர்ந்திருக்காது என்பது மறுக்க முடியாத உண்மை. இத்தனை கொடுமைகளை மனித இனமே வெட்கித் தலை குனியும் வகையில் வேறு எந்த நாடும் புண்ணிய பாரதத்தைத் தவிர செய்திருக்க முடியாது. ஏனென்றால் குறைந்த பட்சம் அங்கே அந்த நாடுகளில் "மனிதர்கள்" வாழ்கின்றார்கள்.

புண்ணிய பாரதத்தில் எத்தகைய மனிதர்கள் வாழ்கின்றார்கள் என்பதற்கு இந்த வீடியோவைப் பாருங்கள்.











இந்தியர்களின் காய்ந்து போன செக்ஸ் பின்புத்தி


இது பொதுப்புத்தியில் விளைந்த தொடர் செயலாக இந்தியர்களைத் தொட்டு நிற்கின்றதோ என்ற அபாயக் குரல் என்னளவில் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருக்கின்றது. அல்லது அதிக அக்கறை காட்டும் இந்தியச்செய்திகளில் கலந்து வந்து மோதுகின்றதோ என்ற கவலையும் தோன்றுகின்றது.மற்ற எந்த நாட்டிலும் அதிகம் பரப்புரை செய்யத் தேவைப்படாத கிரைம் ஆக பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் இருக்கும் போது இந்தியத்தனமான இவ்வகைக் கிரைம் புத்தி இந்தியாவில் மட்டுமன்றி இந்தியர்கள் வாழும் உலகெங்கும் எடுத்துச் செல்லப்படுகின்றது.

பெண்களை மிக இழிந்த மலிவான உயிர்களாய்ப் பாவிக்கும் பொதுப்புத்தியினால் இத்தகைய தவறுகளுக்குள் இலகுவாக இந்திய ஆண்கள் தள்ளப்படுகின்றார்களோ என்ற கவலை ஏற்படுகின்றது. பெண்களுடன் வாழாத ஆண்கள் மட்டுமென்ற வேறுபாடின்றி பெண் சுகம் தெரிந்த தொடர் குடும்ப வாழ்க்கைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய ஆண்களும் இச்செயல்களுக்குள் எத்தகைய சமூகவியல் சட்டவியல் பயங்களுமின்றி சர்வ சாதாரணமாக வீழ்ந்து விடுவது ஒரு வித மனநோயின் அறிகுறியா என்ற ஆதங்கத்தையும் ஏற்படுத்துகின்றது.

இல்லையெனில் தங்கள் வீட்டுப்பெண்களைப் பொத்திப் பொத்தி வளர்க்கும் ஆண்களால் பக்கத்து வீட்டுப் பெண்ணின் மாராப்பு விலகும் வேளைக்காக வக்கிரத்துடன் எப்படிக் காத்திருக்க முடிகின்றது. தன் வீட்டுப் பெண்களில் ஒரு நகத் தொடுகையையும் அனுமதிக்க முடியாத கற்பு நிலை பேசும் பண்பாட்டு மனோபான்மை பக்கத்து வீட்டுப் பெண்ணின் "அலைதல்" பற்றி எவ்வாறு சுவையான கதைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றது.

இது ஒரு சமூகப் பொது நோயாக இந்திய சமூகங்களுக்குள் அலையும் பெருவியாதியாக காலத்திற்குக் காலம் வெளிப்படுதலை எவ்வாறு விளங்கிக் கொள்வது. கவனர் முதல் கடைநிலைக் காவலர் வரை இதே வக்கரிப்புடன் வாழ முடிகின்ற ஒரு வகை மனநோய் கொண்ட சமூகமாக இந்திய ஆண்களை வளர்த்தெடுத்தது யார் குற்றம்? பாலினக் குற்றங்களுக்குள்ளும் அடிதடி சண்டைகளுக்குள்ளும் இலகுவான உணர்ச்சி வசப்படுதலில் வீழ்ந்து விட முடிகின்ற மனநிலை இந்திய சமூக ஆண்களின் சாபமா? இல்லை வரமா?

கோயில் குருக்கள் தேவநாதன் முதல் காவல் துறை அதிகாரி எஸ்பிஎஸ் ரத்தோர் அஷூ கிர்ஹோத்ரா,ஆந்திர ஆளுநராக இருந்த என்.டி.திவாரி போன்றோர் எந்தவித சட்ட பண்பாட்டு விழுமியங்களையும் மதியாது பயப்படாது இத்தகைய ஈனச் செயல்களைத் துணிந்து செய்வதற்கு இந்தியச் சமூகத்தைப் பீடித்திருக்கும் ஒரு வகை மனநோயன்றி வேறு ஏதாவது காரணம் இருக்க முடியுமா?

அண்மையில் ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவ சமூகத்தின் மீது இத்தகைய தொடர் தாக்குதல் நடாத்தப்படுவதற்கு இந்தியர்களின் இத்தகைய கட்டவிழ்ந்த மனநிலையில் பெண்களை நெருங்கும் இழிவு படுத்தும் ஒரு நோக்கும் ஏன் காரணமாக இருக்க முடியாது? பல் இன வெளிநாட்டு மாணவர்கள் உதாரணமாக பாகிஸ்தானியர், சீனர், ஈழத்தவர்,பர்மியர்,இந்தோனேசியர், ஐரோப்பியர் ,ஆப்ரிக்கர் என்று பலரும் கல்வி கற்கும் அவுஸ்திரேலியா போன்ற ஒரு நாட்டில் இந்திய மாணவர்கள் "மட்டுமே" இவ்வாறு "குறி" வைத்துத் தாக்கப்படுவதில் வேறு ஏதாவது வீசேட காரணத்தை நாம் கண்டறிந்து விட முடியுமா?



இல்லையெனில் 90 இல் ஆஸ்திரேலியாவில் குடியேறிய பல்ஜித் சிங்கிற்கு 2008 இல் 13 வயது பள்ளி மாணவியைக் கற்பழிக்கத் தோன்றியிருக்குமா? அதுவும் பெண் சுகம் என்பது ஒன்றும் கிடைக்க முடியாத வனாந்தரம் அல்லவே அவுஸ்திரேலியா. 18 வருடங்கள் வாழ்ந்து நன்கு அறிந்து கொண்டிருக்கும் அவுஸ்திரேலிய வாழ்வு பற்றிய விளக்கங்களுக்கு அப்பாலும் "குறி" வைத்து கற்பழிக்கும் புத்தி இந்திய கலாச்சாரம் தழுவிய மனநோய் என்பதற்கு அப்பால்
வேறு ஒரு காரணத்தைக் கண்டு பிடிக்க முடியுமா?

இந்த "உண்மைகள்" இந்தியர்கள் பலருக்கும் மன உளைச்சலைக் கொடுக்கக் கூடும். இத்தகைய ஒரு மனநிலைப் பிறழ்வுடனேயே இந்திய ஆண்சமூகம் உலகெங்கும் பரந்து வாழ்கின்றது என்பதுடன் அந்த அந்த நாட்டு மக்களால் ஜீரணிக்க முடியாத ஒட்டுண்ணிக் கும்பலாக மாறிவிட்டிருக்கின்றார்கள் என்பதுவுமே அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் மீதான ஒட்டு மொத்தத் தாக்குதலுக்குமான காரணமாக இருக்கின்றது.

தேச ஒற்றுமை, நாம் இந்தியர்கள் என்ற கோஷங்களை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு நாம் பண்பட்ட மக்களாய் வாழ்வதன் முக்கியத்துவம் பற்றி எண்ணிப்பார்க்க வேண்டிய தருணம் இது.

இத்தகைய சமூக குடும்ப வாழ்க்கைக்குள் இருக்கும் ஆண்புத்தியே இவ்வகையில் செயற்படும் போது இறுக்கமான வெற்று வாழ்க்கைக்குள் இருக்கும் இந்திய இராணுவ ஆண்கள் கால் பதித்த ஈழம், காஸ்மீர் பெண்களின் நிலை எவ்வாறு இருந்திருக்கக் கூடும் என்பதையும் பொதுத் தராசில் வைத்து சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.

அதை விட்டு "கல்தோன்றா மண்தோன்றாக் காலத்துக் கதைகள் " எப்போதும் பண்பட்ட சமூகத்தைத் தோற்றுவித்து விடாது.

Wednesday, January 6, 2010


கருணாநிதிக்கொரு கடைசித் துடைப்பம்


இன்று தன் 96 ஆறாவது வயதில் சேடமிழுத்துக் கொண்டிருக்கும் ஜோதி பாசுவின் நிலை தான் தலைப்புச் செய்தியாயிருக்கின்றது. எத்தனைதான் பெரீய்ய தலைவராயிருந்தாலும் கட்சியின், மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாய் இருந்தாலும் இறப்பு என்பது எல்லோருக்கும் பொதுவானது தான். அதே நேரம் தனிமையாய் எதிர்கொள்ள வேண்டியதும் பயம் நிறைந்ததும் கூட.

யாரும் விரும்பி வரவேற்க முடியாததும் அதிக பயங்கொள்ள வைப்பதுவும் இறப்புத் தான். எந்த உலக உதவிகளும் உறுதுணையாக இல்லாது கையை விரித்து விடக் கூடியதும் கடுமையாகப் பழி வாங்கக் கூடியதும் நமக்கும் இறப்பு வரும் என்ற எண்ணமும் அதைச் சுற்றி நிற்கும் டாக்டர்கள் உட்பட யாராலும் தடுக்க முடியாது என்ற எண்ணமும் சித்திரவதை செய்தே நம்மைக்கொன்றுபோடக் கூடும்.

இன்று ஜோதி பாசிற்கு வந்திருக்கும் நிலை நாளை நம் கருப்புக் கண்ணாடிக்கும் வரும். 86 வயதில் துள்ளி விளையாடும் கருப்புக் கண்ணாடிக்கு நாளையோ நாளை மறுநாளோ அல்லது இன்னுமொரு ஆகக் கூடியது 10 வருடங்களுக்குள் வரக்கூடுமான ஒரு பிராணாவஸ்தையே இந்த இறப்பு. எனக்கும் இன்னும் முன்னாலோ பின்னாலோ வரக்கூடியதே. அதை எதிர்கொள்ளும் மனநிலையோ எதிர்பார்ப்போ எனக்கில்லாது இருக்கக் கூடும்.

ஆனாலும் எனக்குக் கற்பிக்கப்பட்ட என்னால் பகுத்துணரப்பட்ட எனது பாவ புண்ணிய விகிதாசாரப்படி அது அவ்வளவு கடுமையானதாக இருக்கப்போவதில்லை. அது எப்படியெனில் சனல்4 இல் காட்டப்பட்ட நிர்வாணமாக கண்கட்டப்பட்ட இளைஞர்களின் தலையின் பின்னால் சீறிப்பாய்ந்த துப்பாக்கிக் குண்டுகளைப்போல் நிகழப் போவதில்லை. பெரிய பாவங்கள் செய்த சுமைகளையும் தோளில் சுமந்து கொண்டிருக்கும் பாவியாகவும் நான் தவித்துப் போய் இருக்கவில்லை.

ஆனாலும் உலகிலுள்ள அனைவராலும் அறியப்பட்ட ஐந்து இலட்சம் தமிழ் மக்களின் இறப்பிற்கும் அடித்தளமும் அதற்கான காரியங்களையும் சாத்தியங்களையும் தனது கடிதங்களாலும் தந்திகளாலும் கூட்டிக்கொடுத்த கருணாநிதிக்கு இறைவனின் தீர்ப்பு நெருங்கிக் கொண்டிருக்கின்றது.இன்னும் 10 வருடங்களிலோ அல்லது அதனிலும் மேலாக ஒரு ஐந்து வருடங்களைக் கூட்டி 100 ஆவது வயதிலோ அது நிச்சயம் சாத்தியமாகியே தீரும்.

மரணத்திற்கு அஞ்சாத மாவீரன் இன்னும் உலகில்ப் பிறக்கவில்லை. மனதளவில் பலமுறை இறக்க வைக்கும் கோடூரம் மரண பயத்திற்கே உண்டு.அது வயது சார்ந்து கருணாநிதியை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. அதே போன்ற ஒரு மரண பயமே தனிக்காட்டு ராஜாவாகச் சுழன்று வந்த சதாமை மண்கூட்டுக்குள் புழுவாகச் சுருக்கி வைத்திருந்தது.வாழ்க்கை என்பதை புரிந்து கொள்ள முடியாத ஒரு விரக்தியில் முடிவாய் இறந்து போனதே சதாமின் அனுபவம். இன்னுமொரு தொடர்ந்த வாழ்வு சதாமுக்கு நல்கப்பட்டிருந்தால் காந்தியையும் விட மேலான தலைவனாக சதாம் மிளிர்ந்திருக்கக் கூடும்.

காசு பணமோ கூடிச் சுகித்திருந்த பெண்டிரோ சுற்றி நின்று கோஷம் போட்ட தொண்டரோ அறியாது கொண்டு போகும் கொடூரம் அந்த மரணத்திற்கே உரியது. அது சுற்றிக் குதூகலிக்கும் அடுத்த தலைவர் வயது காரணமாக நம்ம கருணாநிதியாக இருக்கக் கூடும். அப்போது சோனியாவோ அடுத்து காலன் வரவை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பிரணாப் முகர்ஜியோ எந்த இந்தியாவின் அக்னி ஏவுகணையையும் ஏவித் தடுத்து விட முடியாதது.

இது சிரிப்பாயில்லையா? தெரிந்திருந்தும் தவறு செய்த கருணாநிதி தானே தேடிக்கொண்டது தான் ஆங்காரம் கொண்ட ஐந்து இலட்சம் பிசாசுகளுடன் வாழும் வரம். ஈழ மண்ணில் குற்றுயிரும் கொலையுயிருமாகக் கொல்லப்பட்டவர்களின் ஆவிகள் அவருக்காகக் காத்திருக்கின்றன.

ஆவிகளை அடித்து விரட்ட ஹலோவீன் டேயில் மேலைத் தேயத்தவர்கள் ஒரு வித துடைப்பத்தைப் பாவிப்பார்கள். ரகுலாவின் தேசமாகிய ரோமானியாவில் வீட்டுக்கதவின் முன்னால் பூண்டுக்கொடியைக் கட்டியிருப்பார்கள். கருணாநிதியின் தனித்த புத்தி சொல்வதைப் போலவே அந்த ஆவிகளுடன் போராடட்டும். அல்லது அந்த ஆவிகளுடனான பயங்கர வாழ்வைப்பற்றி "முரசில்" உடன் பிறப்புகளுக்காக விரிவாக எழுதினால் வெரி சிம்பிளாக உலகில் மனிதாபிமானம் மலரத் தொடங்கி விடும்.

ஜே ஆரிடம் வேகாத பருப்பு சோனியாவால் மகிந்தாவின் சமையல் கூடத்தில்


சாட்சிக்காரனை நம்புவதை விட சண்டைக்காரனின் காலில்விழுவது மேலென்று ஒரு பழமொழி தமிழில் இருக்கின்றது. அதை எவ்வளவு தூரம் நம்பமுடியும் என்பதில் தான் பிரச்சினையே இருக்கின்றது. இப்போது சூடு கண்டிருக்கும் ஜனாதிபதித் தேர்தலைப்போன்றே கடந்த ஜனாதிபதித் தேர்தலும் மிகவும் சூடு கண்டிருந்தது.

யூ.என்.பியில் கேட்ட ரணிலும் எஸ்.எல்.எfவ் பியில் கேட்ட மகிந்தருக்கும் தமிழரின் வாக்கு முக்கியமாகப்பட்டது. அதைக்கொடுக்கும் உரிமையைப்பெற்றிருந்த புலிகளின் கடைக்கண் பார்வைக்காக இருவரும் ஏங்கியிருந்தனர். இதே தமிழர் விடுதலை முன்னணி அப்போது என்ன காரணத்தைக் கூறியதோ அல்லது என்ன முடிவெடுத்ததோ அதையெல்லாம் மீறிய புலிகளின் பிரகாசம் அதை மீறி ஜோதிப்பிழம்பாக எழுந்து அழித்து விட்டது.

மேற்குலகின் கைப்பாவை தமிழினத்தின் கோடரிக்காம்பு என்ற புலிகளின் முன்முடிவுகளின் விஸ்தரணையுடன் ரணில் பின்னகர்த்தப்பட மகிந்த ஆதரவைப் பெற்று வெற்றி வாகை சூடினார். ரணிலை ஒதுக்க புலிகள் அரசல் புரசலாக விட்ட மேற்குலகின் "நிண்டு அறுக்கும் அராஜகத்துடன்" புலிகளின் கைப்பிடியைத் தமிழ் மக்களின் மீதிருந்து நழுவ வைக்கும் புத்திசாலித்தனத்துடன் ரணில் காய் நகர்த்துகின்றார் என்ற "ராஜதந்திர மேதாவித்தனக்" கதையானது கசிய விடப்பட்டிருந்தது.

ரணிலையும் மேற்குலகைப் பற்றியும் அவர்கள் கொண்டிருந்த கருத்துப் படிமங்கள் எப்படியிருந்தபோதும் தங்களால் ஒற்றைக்கண் புண்ணாக்கப்பட்டிருந்த சந்திரிகாவினதும் வடக்கிற்கான பாதை திறக்கப்புறப்பட்டு தடுக்கி விழுந்த ரத்வத்தை ஆட்சி பீடத்திலிருந்து புறப்பட்டு வரும் மற்றொரு "சிங்கள மோடையா" மகிந்த என்ற அபிப்பிராயமே மகிந்தவை ஆதரிக்குமாறு தமிழ் மக்களுக்கு ஆணையிடத் தூண்டி நின்றது.

"மோடையாக்கள்"(முட்டாள்கள்)... உலகம்,அது விதந்துரைக்கும் மனிதாபிமானம் என்பது பற்றி எதுவுமே அறியாதவர்கள்,கவலைப்படாதவர்கள் என்பதை உலகம் மட்டுமல்லாது இந்தியாவும் தமிழ் மக்களும் ஏன் மாண்டு போகும் கடைசித் தருணத்தில் புலிகளின் தலைமையும் உணர்ந்தேயிருக்கும்.

இல்லாவிட்டால் இராஜீவின் காலத்தில் ஜே ஆரிடம் வேகாத பருப்பு சோனியாவால் மகிந்தாவின் சமையல் கூடத்தில் தமிழ் வதை என்ற சொதியாக மாறியது எப்படி? இன்று இந்தியாவின் முண்டு கொடுப்பால் தப்பிப்பிழைத்து சேடம் இழுக்கும் மகிந்த சகோதரர்கள் தேர்தல் தோல்வி கண்டால் அதே இந்தியாவின் தப்பிப்பிழைத்தலுக்காகக் காவு கொடுக்கப்படுவார்கள் என்பதை உலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.

இன்னுமொரு மிலயோவிச் போல சைரன் ஊதும் கார்களில் பளீரிடும் போட்டோ பிளாஷர்கள் மழையில் ராஜபக்ஷ சகோதரர்கள் செல்லும் போது எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கியிருந்து ஒழிக கோஷம் போடும் பாக்கியம் நமக்கும் வாய்க்கக் கூடும்.

அன்று அதே புலிகளின் தலைமை விட்ட அதே போன்ற தவறை அன்று கைகட்டி வாய் பொத்தி நின்ற தமிழர் விடுதலை முன்னணி எடுத்திருக்கின்றது.

அதற்காக அவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை இத்தனை ஈழத்தமிழர்களின் உயிரையும் கொலை செய்து எரித்தழித்த இராணுவத்தின் முன்னைநாள் தலைவரும் இன்னை நாள் ஜனாதிபதி வேட்பாளருமான பொன்சேகா கொடுத்த உறுதிமொழிகளாகப் பட்டியலிட்டுள்ளார்கள்.

பட்டியலில் முதலாவது:சிவில் நிர்வாகத்தையும் இயல்பு நிலையையும் ஏற்படுத்துதல்

சிவில் நிர்வாகத்தையும் இயல்பு நிலையையும் இராணுவம் என்ற பலப்பிரயோகத்தை முன்னிறுத்திக் கலைத்தவர்களே அதை மீட்டுத்தருவதான பொய்யுரையை நம்பி எம்மையும் நம்ப வைப்பது.

பட்டியலில் இரண்டாவது: துணை இராணுவக் குழுவினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடைசெய்தல்

தமிழருக்கான நியாயமான போராட்டத்தைத் துடைத்தழிக்க துணை இராணுவக் குழுக்களை ஆயுத தாரிகளாக உருவாக்கியவர்களே அவற்றைத் தடை செய்வதான தட்டையான வாக்குறுதியை நம்பி மக்களை மூளை மழுங்கச் செய்வது.

அவர்கள் ஒப்பந்தம் கண்டுள்ள ஒன்பது அம்சத் திட்டங்கள் இதை ஒரு அரசியல் நிகழ்வாகக் காட்டுவதற்கான வெறும் கண்துடைப்பு மட்டுமே.

வெல்லப்படாத யுத்தத்தை மகிந்த இன்று நடத்திக் கொண்டிருந்தால் புலிகளின் தலைமையால் கைகாட்டப்படும் நபராக மகிந்த இருந்திருக்கக் கூடும். புலிகள் எதிர்பார்த்திருந்ததைப் போலவே அரசியல் ஞானமும் எதிர்காலத் திட்டமும் அற்ற "மோடையாகவே" மகிந்த சகோதரர்கள் செயற்பட்டிருக்கின்றார்கள் என்பதுவே இன்று அவர்கள் "தோற்கடித்த" தமிழர்களின் ஆதரவைத் தேடி அலைவதிலேயே இருந்து தெளிவாகின்றது.

ஓடு மீன் ஓட உறுமீன் வரும் வரை காத்திருந்து அடித்த இந்தியாவின் இராஜதந்திரத்தை இனி சிங்கள தேசம் புரிந்து கொள்ளும். சந்தன மாலைகளுடனும் பன்னீர்ச் செம்புகளுடனும் இந்தியாவை வரவேற்ற ஈழத்தமிழ் மக்கள் செயின் புளொக்குகளில் அரைபட்டு இரத்தச் சாறாக சிதைந்து போன ஒரு அனுபவத்தை சிங்கள மக்களுக்கும் விரைவில் இந்தியா பரிசளிக்கத் தயாராக இருக்கின்றது என்பதை இந்த "மோடையாக்கள்" எப்போது புரிந்து கொள்ளப்போகின்றார்கள் என்பது அந்தக் கடவுளுக்கே வெளிச்சம்.

Tuesday, January 5, 2010


பூமியில் இருந்து சந்திரனைப் பார்த்து கவிதை பாடும் - புத்தகக் கண்காட்சி


புது வருடம் பிறக்கும்போதே யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்று புத்தகக் கண்காட்சி பற்றிய விவரணங்கள் வரத் தொடங்கிவிடும். இந்தியாவை விட்டு வெளியில் வாழும் அனைவருக்கும் பூமியில் இருந்து சந்திரனைப் பார்த்து கவிதை பாடும் கவிஞனின் மனநிலையே புத்தகக் கண்காட்சி பற்றியுமிருக்கும். எட்டமுடியாத அங்கலாய்ப்பும் ஆவலாதியும் புத்தகக் கண்காட்சி பற்றி வரும் எழுத்துக்களைத் தேடிப்படிக்கத் தூண்டும். அந்தவகையில் பிச்சைப்பாத்திரம் இட்ட பிச்சை ஓரளவு வெளிச்சம் காட்டியுள்ளது. அனுபவங்களுடன் ஒரு பட்டியலையும் தந்திருக்கின்றார். சங்கர் போன்றவர்கள் தொட்டுக்கொள்ள சட்னி என்ற அளவிலேயே தம் விஜயங்களைப் பதிவு செய்துள்ளனர்.

யாராவது முழுப்பட்டியல் அல்லது முத்தான பட்டியல் என்ற அளவில் தந்தாலும் சில பல புத்தகங்களை வாங்க முடியுமே.

தாயகத்தில் இருப்பவர்கள் யாராவது உதவுவார்களா?
அனுப்ப/அடையாளமிட

Add-Tamil