ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, July 30, 2009


பதவிக்காகப் "பிச்சை" ஏந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு


தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டது என்பதற்கப்பால் அதற்கும் சிங்களப் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஏனைய பிரதிநிதிகளுக்கும் வேறு வேறுபாடு கிடையாது. தமிழ் மக்களுக்காக "பாடுபட்டு" ஒன்றையும் சாதித்ததும் இல்லை. அதனைத் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று கூட யாரும் அங்கீகரித்ததும் இல்லை. அப்போது தமிழ் மக்களின் அரசியல் சமூக வாழ்க்கையில் இவர்களின் பங்களிப்பு தான் என்ன?

எவ்வகையில் தேடிப்பார்த்தாலும் கிடைப்பது என்னவோ பூச்சியம் தான். இவர்களால் சாதிக்கப்பட்டதும் சாதிக்கக் கூடியதும் எதுவுமேயில்லை. மாறாக சிங்களை பேரினவாதிகளின் அத்தனை அடக்கு முறைகளையும் மூடி மறைக்கும் ஜனநாயக விளையாட்டிற்கும் விளம்பரத்திற்கும் மறை முகமாக உதவி செய்தார்கள்,செய்துகொண்டிருக்கின்றார்கள். சிறிலங்காவில் இத்தனை காட்டுமிராண்டித் தனமான படுகொலைகளும் அராஜகங்களும் நிகழ்ந்து விட்ட பின்னரும் உலக நாடுகளை ஏமாற்றும் ஜனநாயக கண்கட்டி விளையாட்டில் சிங்கள அரசைத் தூக்கிப்பிடிக்கும் அபாயகரமான தமிழினத் துரோகிகளாகவே இவர்கள் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.

வெளிப்படையான துரோக முத்திரையுடன் சிங்களப் பாசிச அரசுடன் இணைந்து இயங்கிக் கொண்டிருக்கும் ஈபிடிபி டக்ளஸ், பிள்ளையான்,கருணா போன்றவர்களையும் அவர்களின் நடவடிக்கைகளையும் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவ நடவடிக்கையாகப் பார்க்க சர்வதேச சமூகம் ஒன்றும் முட்டாள்களாலானது அல்ல. தமிழ் மக்கள் விரோத சந்தர்ப்பவாத சக்திகளாகவே அவர்களை வகைப்படுத்தி வைத்திருக்கின்றது. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்னும் தெரிவு வரும் போது ஓரளவிற்கேனும் தமிழ் மக்கள் சார்பு பிரதிநிதித்துவமாகவே பார்க்கப்படும் சாத்தியம் உண்டு.

இந்த சாத்தியம் பற்றித் தெரிந்திருப்பதாலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிறிலங்கா அரசு நடாத்தும் எந்தத் தேர்தலிலும் பங்களிப்பது என்பது பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கான துரோகமாகின்றது.ஜனநாயகம் மறுக்கப்பட்ட இன அழிப்பு அராஜகம் நிகழ்த்தப்பட்ட ஒரு இனத்தின் பேரால் அத்தகைய கொடுமையை நிகழ்த்திய ஒரு அரசுடன் இணைந்து போவதென்பது வரலாற்றுத் துரோகமாகின்றது.

சந்தர்ப்பவசத்தால் இவர்கள் நடக்கவிருக்கும் தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் சாதிக்கப் போவது எதுவுமில்லை. முள்ளிவாய்க்காலிலும் வன்னியிலும் நடந்து முடிந்த பெரும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த இவர்களின் பாராளுமன்றப்பிரதிநிதிகளாலேயே ஒரு துரும்பத்தானும் எடுத்துப் போட முடியவில்லை. இவர்களின் சொல்லை யாரும் சட்டை செய்யாத இழிநிலையில் தான் சிங்களப் பேரினவாதத்தின் "ஜனநாயகம்" செயற்படுகின்றது. இதை இவர்களும் தீர்க்கமாக அறிந்து வைத்திருக்கின்றனர்.

புதுடில்லிக்கான இவர்களின் படையெடுப்பிலும் தோல்வியுடனேயே இவர்கள் திரும்பியிருந்தனர்.அதாவது ஜனநாயகம் மறுக்கப்பட்ட ஒரு சூழ் நிலையில் இவர்களின் சிறிலங்கா அரசு சார்ந்த பிரதிநிதித்துவம் சிறிலங்கா இனவாத அரசின் படு பாதக காட்டுமிராண்டிச் செயல்களை மறைக்கும் முயற்சிகளில் துணை போவதைத் தவிர்த்து தமிழ் மக்களுக்காகச் செய்யக் கூடியது எதுவுமேயில்லை.

ஆனால் தேர்தலைப் பகிரங்கமாகப் பகிஸ்கரிப்பதன் மூலம் சிறிலங்கா ஜனநாயகத்தில் தமிழர்களை இணைத்துக் கொள்ள "அவசர ஜனநாயக" வேலைத்திட்டங்கள் அவசியம் என்பதை சர்வதேச சமூகம் உணர்ந்து கொள்வதுடன் அதற்கு வேண்டிய இறுக்கத்தை சிறிலங்கா அரசு மீது பிரயோகிக்கும் என்பதையும் இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

புலிகள் அழிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்களுக்கான காத்திரமான ஜனநாயகக் கட்டமைப்புகளை நிறுவ வேண்டும் என்பதில் சர்வதேச சமூகம் உறுதியுடன் இருக்கின்றது. இதை உடைக்கும் நோக்கிலேயே சிறிலங்கா சிங்களத் தேசியவாத அரசு "ஜனநாயக விளையாட்டாக" மாவட்ட, மாகாண. பிரதேச சபைத் தேர்தல் விளையாட்டை நடாத்த முன்வந்திருக்கின்றது. அதற்கு துணை போவதுடன் தமிழ் மக்களையும் பலிக்கடாவாக்கும் இவர்களின் குறுகிய சிந்தனைப் போக்கை துரோகமாகக் காண்கின்றோம்.

இவர்களின் இந்த முனைப்பிற்கு இவர்களின் பதவி ஆசையும் கிடைக்கும் சம்பளப்பணமுமே காரணமேயொழிய உண்மையான மக்கள் மீதான அக்கறையோ தமிழ்த் தேசியத்தினை காபந்து செய்யும் நோக்கமோ அடங்கியிருக்கவில்லை என்பது தமிழ் மக்களுக்கான துரதிர்ஷ்டமே.

தேர்தல்களை புறமொதுக்கி ஒத்துழையாமை கோஷத்தை முன்வைத்து உலக நாடுகளின் கவனத்தை முட்கம்பி முகாம்களுக்குள் அடைபட்டிருக்கும் மக்கள் மீதும் இடம் பெயர்ந்து அல்லலுறும் மக்களின் மீள்குடியேற்றத்தையும் தூண்டி துரிதப்படுத்துவதே இப்போது இவர்கள் செய்ய வேண்டிய ஜனநாயகக் கடமையாகும்.

இப்பிரதேச சபைப்பிரதி நிதித்துவம் என்பது ஆயுட் கால பதவியல்ல. மக்களுக்கான நலன்களை இவர்கள் முன்னெடுக்கும் போது அந்த நன்றியை மக்கள் எளிதில் மறந்து விடமாட்டார்கள். அடுத்த தடவை இவர்களைத் தங்கள் ஏகபோகப்பிரதிநிதிகளாக அனுப்பி வைப்பார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

அதை விடுத்து சிங்கள இனவாத அரசு துக்கிவீசும் எலும்புத் துண்டுகளுக்காக ஆலாய்ப்பறக்கும் இவர்களின் துரோகத் தனத்தை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
அதே நேரம் இவர்களின் தேர்தல் நிதி வேண்டி புலம்பெயர் நாடுகளில் யாசிக்கும் அமைப்புக்களை அந்நாடுகளின் சட்டங்களூடாகத் தண்டிக்க வேண்டும். அவற்றினை விளம்பரமாகவோ அறிவித்தலாகவோ வெளியிடும் ஊடகங்களையும் சட்டத்தின் பிடியில் எடுத்துச்செல்லும் சாத்தியம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

அன்பான புலம்பெயர் தமிழீழ மக்களே, இத்தகைய பிரசார உத்திகள் தங்கள் சொந்த வயிறு வளர்க்கும் சிறுமையின் வெளிப்பாடுகளே அன்றி இடர்பட்டு துயரடைந்து எதிர்காலமே இழந்து நிற்கும் எம்மக்களுக்கான முன்னெடுப்புகள் அல்ல என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இத்தகைய புல்லுரிவிகளை இனங்காணுவதுடன் இவர்களின் பசப்பு வார்த்தைகளில் மயங்கவும் வேண்டாம். இத்தகைய பணம் பறிக்கும் கூட்டத்தை நீங்கள் வாழும் தேசங்களில் உள்ள சட்டங்களின் மூலம் தடுத்துக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களுக்கான இதயசுத்தியுடன் தொழிற்படும் ஒரு சக்தியைக் கண்டடையும் வரை இத்தகைய வேஷதாரிகளை இனங்கண்டு புறமொதுக்க வேண்டும்.

//
ஒரு சுதந்திரமான நேர்மையான தேர்தல் நடைபெறுவதற்க்கான வாய்ப்பு மிகக் குறைவாகக் காணப்பட்டாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை வெற்றிவாகை சூட வைப்பதன் மூலமே தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழரின் தன்னாட்சி உரிமை ஆகிய அரசியல் வேட்கைகளை உலக நாடுகளுக்கு எண்பித்துக் காட்டலாம்.

மகிந்தா ராஜபக்ச அரசியல் களத்தில் பெற நினைக்கும் வெற்றியைக் கனவாக்கலாம். இவற்றைச் செய்யும் பொறுப்பு பேரளவு புலம்பெயர் தமிழர்களின் கைகளிலேயே உள்ளது. வெறும் வாய்ச்சொல் அருளுவதோடு நின்றுவிடாது புலம்பெயர் தமிழர்கள் பொருளுதவியும் செய்யவேண்டும். இதற்கான முயற்சியை நாம் மேற்கொண்டுள்ளோம்.

உங்கள் அன்பளிப்பைப் பணமாகக் கீழ்க்கண்ட முகவரிக்கு 06-08-2009 முன்னதாக அனுப்பி வைக்கவும். அல்லது கீழ்க்கண்ட காப்பகக் கணக்குக்கு வரவு வைக்கவும்.

TCWA,
56 Littles Road
Scarborough, ON. M1B 5C5

அல்லது கீழ்க்கண்ட காப்பகக் கணக்குக்கு வரவு வைக்கவும்.

TD Canada Trust
Branch No. 1033
Account No.0663 – 5214579

மேலும் கீழ்க்கண்ட அங்காடிகளிடம் ஒரு உறையுள் உங்கள் பெயர் தொ.பே. கீழ்க்கண்ட அங்காடிகளிடம் ஒரு உறையுள் உங்கள் பெயர் தொ.பே. எண், தொகை ஆகியவற்றைக் குறித்து பணத்தைக் கையளிக்கவும்.

1) Babu Catering and Take Out, 4800 Sheppard Avenue East #201 Scarborough
2) Uthayas Super Market, 5010 Steels Ave. West # 14 Etobicoke (Kipling and Steels)
3) Vijaya’s Silk, 27 Dundas Street East, Mississauga.
4) SP Importers, 2853 Lawrence Ave E in Scarborough.

காலம் போதாமல் இருப்பதால் நேரடியாக தமிழ்த் தேசியக் கூட்டணியின் கீழ்க்கண்ட காப்பகக் கணக்குக்கு உங்கள் உற்றார் உறவினர் மூலம் வரவு வைக்கலாம். அல்லது எண் 36, மாட்டின் வீதி, யாழ்ப்பாணம் முகவரியில் உள்ள அவர்களின் தலைமை அலுவலகத்தில் கையளிக்க ஏற்பாடு செய்யலாம்.

S. X. Kulanayagam
N.I.C No. 452661659V
Account No. 1097586
Bank of Ceylon, Hospital Road Branch//



குறிப்பு: இதுவொரு சட்டத்திற்குப் புறம்பான அடாவடி பணம் சேர்க்கும் யுக்தி. இவர்களையும் இதற்கு விளம்பரம் செய்யும் "புதினம்" என்ற இணையத்தளத்தையும் கனடாவில் வாழும் தமிழ் சகோதரர்கள் சட்டத்தின் முன் எடுத்துச் செல்ல வேண்டும்.

மனிதாபிமானத்தின் ஊடாக புல்லுருவிகளைத் தடுத்து நிறுத்த முடியாதபோது அந்நாடுகளின் சட்டத்தின் துணையை நாடுவதில் தவறொன்றுமில்லை.

Wednesday, July 29, 2009


பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்


இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்று இருக்கின்றதா? இல்லையா? என்பதில் பல நாடுகள் தடுமாறிக்கொண்டிருக்கின்றன. அல்லது தம் தம் தேவைகளுக்கேற்ப இனப்பிரச்சினையென்று ஒன்று இருக்கின்றது.. இல்லவே இல்லை என்று நாடகமாடிக்கொண்டிருக்கின்றன. இதில் முதன்மை இடம் இந்தியாவிற்குத் தான். வெறுமே புகைந்து கொண்டிருந்த இனப்பிரச்சினையை ஊதிப்பெரிதாக்கி இறுதியில் இத்தனை இலட்சம் மக்களின் அழிவிற்கும் துணை போனது இந்தியாவின் இத்தகைய கபடத்தனமே. இயக்கங்களை ஆதரித்து ஆயுதங்களும் பயிற்சியும் கொடுத்து ஊக்கப்படுத்தியதும் ஈற்றில் தடைசெய்யப்பட்ட நாசகார இரசாயன ஆயுதங்களை சிங்கள அரசிற்குக் கொடுத்து வகை தொகையின்றி ஈழத்தமிழ் மக்களைக் கொன்று குவித்ததும் இந்தியாவின் தன்னலம் ஒன்றே குறிக்கோளான இத்தகைய கபடத்தனத்தாலே ஆகும்.

தன் நலனுக்கு அனுகூலமாகும் போது அது "சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரம்" என்பதுவும்
சிறிலங்கா அரசை மிரட்ட "சோற்றுப்பொதிகளை" வீசுவதும் இந்தியாவின் "ஜனநாயகமாக" நினைத்துக் கொண்டிருக்கின்றது.

இதுவரை தம் இன்னுயிரை இழந்த ஈழத்தமிழர்கள் அனைவரின் உயிரிழப்பிற்கும் இந்தியாவே காரணம் என்பதை காலம் கடந்தாயினும் பாமர ஈழத்தமிழனும் புரிந்து வைத்திருக்கின்றான். இனியும் இந்தியாவின் "சோற்றுப்பொதிகளை" நம்பி ஏமாறுவதற்கு யாரும் தயாராகவில்லை. இந்தியா என்ற மனச்சாட்சியற்ற எதிரியை மன்னிக்கவும் யாரும் தயாராகவில்லை.

இத்தனை இழப்பையும் வேதனையையும் ஈழத்தமிழருக்கு கொடுத்த இந்தியா இப்போது சோற்றுப்பொதி நாடகமாக சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து இயங்கப் போவதாக நாடகமாடுகின்றது.

'விடுதலைப் புலிகளுக்கு பிற்பட்ட காலகட்டத்தில்' சிறிலங்கா அரசின் மீதான புதுடில்லியின் அரசியல் பிடி தளர்ந்துபோய் இருப்தையே காணக்கூடியதாக இருப்பதாகவும் , இழந்துபோன செல்வாக்கை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு அனைத்துலக சமூகத்துடன் இணைந்து செயற்பட வேண்டிய நிலையில் இந்தியா இருப்பதாகவும்' இந்தியாவின் முன்னாள் இராஜதந்திரியான எம். பத்ரகுமார் கூறியிருக்கின்றார்.


"சீனாவின் மூலோபாயத்தை முறியடிப்பதற்கான பொதுவான அக்கறையில் இந்தியா அமெரிக்காவுடன் இணைந்திருக்கின்றது. ராஜபக்சவின் போருக்கு உறுதியான ஆதரவை வழங்கிய பின்னர் 'அரசியல் தீர்வை' வலியுறுத்தும் பராக் ஒபாமா நிர்வாகத்துடன் நெருங்கிச் செயற்பட வேண்டியதாக டில்லி உள்ளது" என்று இந்தியாவின் வெளிப்படையான தேவையையும் பட்டவர்த்தனமாக ஒப்புக்கொள்கின்றார்.

ஈழத்தமிழர்களுக்கான "சோற்றுப்பொதிகளை" தயார் செய்வதற்கான இந்தியாவின் தேவைகள் இவ்வாறுதான் பெருகிச் செல்கின்றன.

இதனை படிப்பறிவற்ற ஈழத்துப்பாமரனும் விளங்கிக்கொண்ட அளவில் புலிகளின் "பின்னாள்" தலைவர்கள் என்று தம்மைப் பிரகடனப்படுத்தியவர்கள் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ளவில்லை என்பதை விட கால் பிடித்து பிழைப்பதில் "சுகம்" கண்டு கொண்டுள்ளார்கள் என்று தான் எண்ண வேண்டியிருக்கின்றது.

புலிகளின் "பின்னாள்" தலைவராக தன்னை வரித்துக்கொண்டிருக்கும் செல்வராஜா பத்மநாதன் அந்த "சுகத்தில் முதுகு சொறிந்து கொள்ளும் " அவலத்தை இந்திய நாளேடு ஒன்றிற்கு அளித்த பேட்டியில் வெளிப்படுத்தியிருக்கின்றார்.

ஈழத் தமிழர்கள், அவர்களின் வேட்கையான தனியான தாயகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இந்தியா உதவும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் இந்தியாவில் இருந்து வெளிவரும் 'டெக்கான் குரோனிக்கல்'அளித்துள்ள பேட்டியில் நம்பிக்கை வெளியிட்டிருக்கின்றார்.

"ஒதுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியா கடந்த காலத்தில் முக்கிய பங்காற்றியிருக்கின்றது. உலகம் முழுவதில் உள்ள ஈழத் தமிழர்களும் தமது விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா உதவும் என நம்புகின்றார்கள்"


பம்மாத்து அரசியலையும் புலிகள் சேர்த்து வைத்த மக்கள் சொத்துகளைப் பங்கு போட்டுக்கொள்ளவும் கால அவகாசம் தேடுவதை விட்டு உருப்படியாக ஏதாவது செய்தால் மக்கள் நன்றியாவது பாராட்டுவார்கள்.


"இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் தமிழ் இனவாதிகளுக்குமே இன்று அரசியல் தீர்வு தேவைப்படுகின்றதே தவிர தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தேவை இல்லை. அவர்கள் அரசியல் தீர்வைக் கேட்கவும் இல்லை. அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவால் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வு யோசனைகளைக் குப்பைக்கூடைக்குள் வீசிவிடவேண்டும்"
எனவும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் தலைவர் குணதாச அமரசேகர வலியுறுத்தி யிருக்கின்றார்.

இது ஈழத்தமிழர் இருப்பையே கேள்விக்குறியாக்கும் சிங்களவர் எண்ணம். அதேபோல சிங்களப் பெரும்பான்மை வாதிகளினதும் சிங்கள அரசினதும் தீர்வுத் திட்டம் இவ்வாறு இருக்கக் கூடும் என்றும் எம். பத்ரகுமார் எதிர்வு கூறியிருக்கின்றார்.

"தமிழர்களின் பிரச்சினைக்கான இறுதித் தீர்வுத் திட்டம் ஒன்று ராஜபக்சவிடம் இருக்கின்றது. தமிழர்களின் தாயகத்தில் சிங்களவர்களைத் திட்டமிட்ட முறையில் குடியமர்த்துவதுடன் சம்பந்தப்பட்ட திட்டமே இது. இதன் மூலம் அடுத்த தசாப்தத்தில் இந்தப் பிராந்தியத்தின் குடித்தொகை அடர்த்தி தமிழர்களுக்குப் பாதகமான முறையில் மாற்றப்பட்டுவிடும். கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பிரச்சினையை இவ்வாறுதான் சிறிலங்கா அரசு தீர்த்துவைத்தது"

"தமிழர்கள் இந்தியாவை நோக்கி பெருமளவில் வெளியேறுவதை சிங்க அரசுகள் தமது அரச கொள்கையாக எதிர்காலத்தில் ஊக்குவிக்கும்"
என எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் பத்ரகுமார், "தமிழர்களும் இவ்வாறு இந்தியாவுக்கு குடிபெயர்ந்து செல்வதை விரும்பலாம். இதுதான் சிங்கள அரசு விரும்பும் 'தமிழர் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வாக அமையும்'

இது ஒரு வகையில் "சோற்றுப்பொதி" வீசும் இந்தியாவின் அபிலாஷைகளுக்காக அவர் வரித்துக் கொடுக்கும் காரணங்களாக இருக்கக் கூடுமெனினும் சிங்கள ஏகாதிபத்தியக் கனவும் அதே திசையில் பயணிக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை.

"ஒதுக்கப்பட்ட மக்கள் சார்பாக நின்று அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதில் இந்தியா கடந்த காலத்தில் முக்கிய பங்காற்றியிருக்கின்றது. உலகம் முழுவதில் உள்ள ஈழத் தமிழர்களும் தமது விடுதலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு இந்தியா உதவும் என நம்புகின்றார்கள்" எனத் தெரிவித்த செல்வராஜா பத்மநாதன், "இந்தியா எம்மைப் புரிந்துகொள்ள வேண்டும்" எனவும் கேட்டுக்கொண்டார்.

உலக அரசியலின் போக்கையும் இந்தியாவின் சுயநலன்களையும் புரிந்து கொள்ளாது எவ்வளவு தூரம் அவரின் அறியாமை வெளிப்பட்டிருக்கின்றது.(இதில் இராஜதந்திரம் பொதிந்திருப்பதாக யாராவது பம்ம முன்வரக்கூடும். இந்திய சுயநல பச்சோந்தித்தனத்தின் முன்னால் உங்கள் இந்திய மனதை மாற்றும் இராஜதந்திரம் செல்லாக்காசுதான்)விட்டில் பூச்சித்தனத்துடன் மீண்டும் மீண்டும் விளக்கில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் சுய இச்சை. இவர்கள் தான் ஈழத்தமிழினத்தின் நம்பிக்கை நட்சத்திரங்களாம். கொடுக்கப்பட்ட பலி போதாது என்று மஞ்சளும் குங்குமமும் பூசி பலியாடுகளைத் தயார்ப்படுத்தும் பூசாரித்தனம். தமிழ் மக்கள் இவர்களை இனங்கண்டு புறமொதுக்க வேண்டும்.

"தற்போது நாம் செயற்குழு ஒன்றை அமைத்துள்ளோம். அந்தக் குழு நாடு கடந்த தமிழீழ அரசு ஒன்றை அமைப்பது தொடர்பாக ஆராய்ந்து வருகின்றது. கடந்த அரை நூற்றாண்டு காலமாக எமது மக்களின் கனவாக இருந்துவரும் தமிழீழத்தை அடைவதற்கான செயற்திட்டம் ஒன்றை இந்தக் குழு தயாரித்து வருகின்றது" - செல்வராஜா பத்மநாதன்

இனப்படுகொலை முடிந்து மூன்று மாதங்களும் உருண்டோடிவிட்டது.இப்பொழுது தான் செயற்குழு அமைத்திருக்கின்றார்களாம். முகாம்களில் புண்ணாகிப்போன மனங்களுடன் அடைபட்டுக்கிடக்கும் மக்கள் குறித்து ஒரு துரும்பையும் தூக்கிப்போடவில்லை. சர்வதேச சமூகத்துடன் சேர்ந்து எந்தச் செயற்பாட்டிலும் ஈடு படவில்லை. உதவி அமைப்புகளின் உதவிகள் அந்த அல்லல்ப்படும் மக்களிடம் சென்று சேர எந்த நடவடிக்கையும் இல்லை.

வன்னியில் அகப்பட்டிருந்த தங்கள் தலைவரையே காக்க முடியாது தப்பியோடிய தனி நபர்கள்

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.

என்ற பெயரில் மாமனிதர் பட்டங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதே குதிரை அதே குண்டுச்சட்டி. அப்போது மாவிலாறில் செத்துத் தொலைந்தவர்கள் எல்லாம் மண்ணாங்கட்டிகளா ? சிங்களத்தின் இருண்ட சிறைகளில் இன்றும் தினம் தினம் கற்பிழந்தும் கடும் சித்திரவதைகளில் அழுந்திக்கிடக்கும் அவர்களெல்லாம் யார்?

புலிகளோடு இருந்ததனால் புலிகளுக்கு வால் பிடித்ததனால் .. அவர்கள் என்ன தீண்டத்தகாதவர்களா?

கோட்டுச் சூட்டுடன் பிளைற்றில் பறந்து பறந்து மக்களால் புலிகளுக்கு வழங்கப்பட்ட சொத்தைக் காபந்து பண்ணத்துடிக்கும் இவர்கள் ஏன் அவர்களைப்பற்றிச் சிந்திக்கவில்லை.

புலிகளின் பினாமிகள் பெயரில் இதுவரை நடாத்தப்பட்டு வந்த புடவைக்கடைகள்,சோற்றுக்கடைகள், பலசரக்குக் கடைகள் எங்கும் எல்லாம் திடீர் திடீரென்று மலிவோ மலிவு விற்பனையுடன் திடீர் திடீரென்று (பாங்ரப்ஸியென்று ) மூடப்படுகின்றது. கிடைத்ததைச் சுருட்டிக்கொண்டு ஓடுகின்றார்களா? யாரிடம் கணக்குக் கேட்பது?

மக்கள் ஒன்றும் மண்ணாங்கட்டிகள் அல்ல.. அவர்கள் தங்கள் தலைமையைக் கண்டெடுப்பார்கள். அவ்வாறு தான் வரலாறு எழுதப்படுகின்றது.

குறிப்பு: பாங் ரப்ஸி அடிக்கப்படும் புலிப்பினாமிகளின் விபரம் விரைவில் வெளிவிடப்படும். தகவல்கள் தெரிந்தவர்கள் அனுப்பி வைக்கலாம்..ஆதாரத்துடன்...

Monday, July 27, 2009


இந்தியா என்பது முட்டாள்கள் மட்டுமே வாழும் உலகமா?



இந்தியா என்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கருத்திருக்க முடியும்.ஆனால் இந்தியா என்பதன் "தார்மீக வலு" சமீப நாட்களாக உடைபட்டு வருகின்றது என்று தான் தோன்றுகின்றது. இந்தியா தோன்றி 62 ஆண்டுகளுள் அதன் "பிரமாண்டம்" அதிகம் சேதம் அடைந்திருக்கின்றது. இந்தியா என்பது அகிம்சையை அன்பை போதிக்கும் கருணையின் ஊற்றுக்களான மதத்தைத் தோற்றுவித்த மண் என்ற பெருமையில் மிதந்த ஒரு நாடு. அதுவே அதற்கிருந்த மதிப்பும் மரியாதையும். சோவியத்தைப்போல் வர்க்கப் புரட்சியாலோ அமெரிக்காவைப் போல பிரமாண்ட வலிமையாலோ அறியப்பட்டதல்ல.

இன்று இந்தியாவின் உள் அடக்கப்பட்டிருந்த பல வேற்றுமையின் "முகங்கள்" வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. அதன் வெளிப்பாடாக இந்தியாவின் முகம் குரூரத்தைப் போர்த்திக் கொள்ளத் துவங்கியிருக்கின்றது. கயர்லாஞ்சியில் பிரியங்கா போன்ற அடக்கப்பட்டவர்களை ஆதிக்க சாதி வெறியர்கள் செய்த பாலியல் வல்லுறவு, மணிப்பூரில் ‘ இந்திய இராணுவமே எங்களையும் பாலியல் பலாத்காரம் செய்’ என தாய்மார்கள் நடத்திய நிர்வாண போராட்டடங்கள்,காஷ்மீரில் தினம் தினம் கொல்லப்படும் குழந்தைகள் சிறுவர்கள் பெண்கள் அப்பாவிகள், ஈழத்தில் உயிர்குடித்த இந்திய ஆயுதங்கள் என்று எங்கும் குரூரத்தின் இரத்தம் தெறிக்கின்றது.

இலஞ்சம் இலாவண்யம் மட்டுமே அறிந்த அரசியல்வாதிகளின் கைகளில் அகப்பட்டு இந்தியா சின்னாபின்னமாகின்றது என்றால் பக்தி என்ற பெயரில் முட்டாள் தனம் செய்யும் பக்தர்களின் கூட்டமும் அதன் ஆன்மாவைக் கொன்று போடுகின்றது.

அண்மையில் சூரியகிரகணப்போதில் பிரமாண்ட இட்லிகள் கடலில் பக்தியின் பெயரால் கரைக்கப்பட்டது என்றால் கொதிக்கும் எண்ணெய்ச்சட்டியில் வெறும் கைகளால் வடை சுட்ட கோமாளித் தனம் அரங்கேறியிருக்கின்றது.

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் "காட்டுமிராண்டித்தனம்" பேசப்பட்டு தாக்கப்பட்டதற்கு இது இன்னும் வலு சேர்க்கின்றது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பார்கள். பிளைற் ஏறி கடல் கடந்தால் மட்டும் இந்த"சாகச" மனநிலை மாறிவிடுமா? என்ன?

இந்தியா என்பது முரடர்களும் வாழும் பூமி என்பது தான் புதிய தெளிவு.

இனி நடந்தது என்ன?


போளூர் அருகே பக்தர்கள் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் கையால் வடை சுட்டனர். அதை சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பதால், ஒரு வடை 1,500 ரூபாய்க்கு ஏலம் போனது. போளூர் அடுத்து துரிஞ்சிக்குப்பம் கிராமத்தின் கீழ் குளக்கரை ஆதிபராசக்தி அம்மன் கோவிலில், ஒன்பதாம் ஆண்டு ஆடிப்பூர விழா நேற்று முன்தினம் நடந்தது. பக்தர்கள் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தும், சிறப்பு பூஜையும் நடத்தினர். பலர் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்தனர். 108 பால் குடங்களுடன் பெண்கள் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். பக்தர்களின் மார்பு மீது உரலை வைத்து அதில் கொம்பு மஞ்சள் போட்டு இருவர் உலக்கையால் இடித்து தூளாக்கினர். முள்மீதும் நடந்து சென்றும் தங்கள் நேர்த்தி கடனை பக்தர்கள் செலுத்தினர்.


தொடர்ந்து கொதிக்கும் எண்ணெயில் வடை சுட்டு அதை மூன்று பக்தர்கள் தங்கள் கையால் எடுத்தனர். இந்த வடையை சாப்பிட்டால், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால், வடை வாங்க பக்தர்கள் மத்தியில் பெரும் போட்டி உருவானது. அதையடுத்து, வடை ஏலம் விடப்பட்டது. அதிகபட்சமாக ஒரு வடை 1,500 ரூபாய் வரை ஏலம் போனது. போளூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Wednesday, July 22, 2009


சூரிய கிரகணமும் இரண்டு கதைகளும்

சூரிய கிரகணத்தை இன்று இந்தியாவின் பல இடங்களிலும் பார்க்கக் கூடியதாய் இருந்தது. அதையிட்ட ஆய்வுகளிலும் விஞ்ஞானிகள் மும்முரமாய் ஈடு பட்டிருந்தனர். காலம் எவ்வளவுதான் முன்னோக்கிப் போய்க்கொண்டிருந்தாலும் நம்மவர்கள் அதையெல்லாம் கண்டு கொள்ளாத மாஜாஜால உலகிலேயே வாழ்க்கை நடாத்திக் கொண்டிருக்கின்றனர்.\

ஊழல் பெரிச்சாளிகளால் கோட்டையில் உட்கார்ந்து ஆட்சி செய்ய நம்ம இடத்தில் தான் முடியும். குறைந்த பட்ச மனித விழுமியங்களைக் கூட காப்பாற்ற முயலாத மக்கள் உண்டென்றால் அது நாமாகவே இருக்கும். இதோ இரண்டு கதைகள். உலகம் எங்கேயோ போய்க்கொண்டிருக்கின்றது. நாம் அடுப்பங்கரையைச் சுத்தியிருந்து இட்லி சாப்பிடுவதற்காகவே உயிர் வாழ்கின்றோம்.




கதை1:இந்திய விமானப்படையுடன் இணைந்து, வானியல் இயற்பியலாளர்கள் குழு ஒன்று இன்று நடந்த சூரிய கிரகணத்தை விமானப்படை விமானம் மூலம் பறந்து சென்று ஆய்வு செய்துள்ளது.

இந்த ஆய்வுக்காக ஒரு போர் விமானம் மற்றும் ஒரு சாதாரண பயணிகள் விமானம் மூலம் ஆய்வு நடந்தது.

இந்த ஆய்வின்போது மிராஜ் 2000 ரக போர் விமானமும், ஏஎன் 32 ரக போக்குவரத்து விமானமும் பயன்படுத்தப்பட்டது.

இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணத்தை அவர்கள் விமானத்தில் பயணித்தபடி படம் எடுத்துள்ளனர். மேலும் சில சோதனைகளையும் அவர்கள் விமானத்தில் பறந்தபடி செய்துள்ளனர்.

குவாலியரில் உள்ள விமானப்படைத் தளத்திலிரு்நது மிராஜ் விமானம் கிளம்பியது. பயணிகள் விமானம், ஆக்ராவிலிருந்து கிளம்பி கஜூராஹோ வரை சென்றது.

இந்த ஆய்வில் சுயேச்சை ஆய்வு அமைப்பான விக்யான் பிரசார் மற்றும் மத்திய அரசின் அறிவியல், தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்.

மேலும் சூரிய கிரகணத்தைப் படம் பிடிக்கும் நிகழ்வில் விக்யான் பிரசார், உதய்ப்பூரைச் சேர்ந்த சோலார் அப்சர்வேட்டரி, பெங்களூரைச் சேர்ந்த இந்திய விண்வெளி இயற்பியல் கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பங்கேற்றனர்.



கதை 2:கடந்த 7ம் தேதி சந்திர கிரகணம் நடந்தது. இன்று முழு சூரிய கிரகணம் நடந்தது. அடுத்த மாதம் 6ம் தேதி இன்னொரு சந்திர கிரகணம் வருகிறது.
கடந்த 7ம் தேதி சந்திர கிரகணம் நடந்தது. இன்று முழு சூரிய கிரகணம் நடந்தது. அடுத்த மாதம் 6ம் தேதி இன்னொரு சந்திர கிரகணம் வருகிறது.

இப்படி அடுத்தடுத்து கிரகணங்கள் நிகழ்வதால் சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் சம்பவிக்கும் என ஜோசியக்காரர்கள் பீதியைக் கிளப்பி விட்டுள்ளனர்.

இதையடுத்து கோவை மல்லிப்பூ இட்லி நிறுவனம் என்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், ஜோதிடர்களின் ஆலோசனையைக் கேட்டு, சென்னை மெரீனா கடற்கரையில் நவதானியங்களால் ஆன பிரமாண்ட இட்லியை வைத்து பூஜை செய்ய முடிவு செய்தனர்.

அதன்படி இந்த பிரமாண்ட இட்லி தயாரிக்கப்பட்டு இன்று காரில் ஏற்றி கடற்கரைக்குக் கொண்டு வந்தனர்.

கலங்கரை விளக்கம் அருகே இட்லியை இறக்கி கடற்கரையில் வைத்து பூஜைகள் தொடங்கின.

இந்தப் பரிகார பூஜையில், தமிழ்நாடு வணிகர் பேரவைத் தலைவர் வெள்ளையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வேத மந்திரங்கள் முழங்க பூஜை அமர்க்களமாக நடந்தது. பின்னர் இட்லியை படகில் ஏற்றி கொண்டு போய் கரைத்தனர்.

பிரமாண்ட இட்லி என்பதால் வழக்கமான சட்டியில் வைத்து கேஸ் அடுப்பி்ல் வேக வைக்காமல், விறகு அடுப்பி்ல வைத்து அவித்தனராம்.

கிட்டத்தட்ட ஒரு மாத கஷ்டத்திற்குப் பின்னர் இந்த ராட்சத இட்லி உருவானதாம்.

இந்த இட்லியை உருவாக்கியவர் பெயர் இனியவன். இவர் கடந்த ஜனவரி மாதம் கிட்டத்தட்ட 90 கிலோ எடையுடன் கூடிய 3 இட்லிகளைத் தயாரித்து லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றவராம்.

உலகம் எங்கேயோ போய்க் கொண்டிருக்கிறது, நாம் இன்னும் இட்லியிலேயே இருக்கிறோம்..

Tuesday, July 21, 2009


"கைடு" பத்மநாதன்


"புலிகளின் தாகம் தமிழீழத் தாகம்" கேட்ட போதெல்லாம் மயிர்க்கால்கள் சிலிர்த்து சிலும்பி நின்ற எபக்ட்டை யாராலும் தந்திருக்க முடியாது. அப்படியொரு "கிரேஸ்". வன்னியில் புலிகளும் அப்படித்தான் போராடிக்கொண்டிருந்தார்கள் என்று நினைத்திருந்தேன்.ஆனால் இப்போது தான் தெரிகின்றது வழி தெரியாத ஒரு "போராட்டத்தில்" தான் மாய்ந்து போயிருக்கின்றார்கள் என்று.

அதனால் தான் இப்போது "கைடு" பத்மநாதன் வழி காட்ட வெளிக்கிட்டிருக்கின்றார். தேசம் கடந்த அரசாங்கம் சொதப்பிப்போன பின்பு சேர்த்து வைத்த சொத்துக்களை கொள்ளை கொண்டு போக ஒரு புது அவதாரம்.

செத்துப்போன 50 ஆயிரம் மக்களின் சாம்பல் மேட்டில் புதிய "வழிகாட்டி" உதயம். இன்னும் எத்தனை ஆயிரம் மனித உயிர்களைக் குடிக்க இந்த நாடகம். போகும் இடம் தெரியாத வழிப்போக்கர்கள்...

அடித்து வைத்த சொத்தைக் காபந்து பண்ண எடுக்கும் முயற்சிதான் இந்த "கைடு" வேலை என்றே தோன்றுகின்றது. யாராவது "கொள்கை"யுள்ளவர்கள் கேள்வி கேட்க சந்தர்ப்பம் வாய்த்திருக்கின்றது.

"கைடு" பத்மநாதன் நமக்கும் ஒரு பொட்டலம் அனுப்பி வைக்கின்றது... நமக்குத் தான்..நம்மையல்ல...(புலிகளின் தாகம் பொட்டலம் கட்டுவது என்று பேசிக்கொள்கின்றார்கள்)

கருணாநிதியிடம் பிடித்த பத்து

இப்போது பதிவுலகிலே பத்துப் போடுவது தான் பிரபலம். சரி நானும் ஏதாவது பத்துப்போடுவோம் என்று போட்ட தலைப்புத்தான் அது. தலைப்பைப்பார்த்ததும் நம்ம தங்க மணி சொல்லியது."உங்களுக்கும் பத்து போட ஆசை வந்திரிச்சா"ன்னது தான்.

பாவம் அவங்க... "பத்து"ப் போட அல்ல போட்டுக்கன்னு(எலும்பு முறிவிற்கான வைத்தியம் அல்லது முறிக்கவேண்டிய எலும்புள்ள பைத்தியங்களுக்கான வைத்தியம்) இருந்திருக்கணும்...அவங்களது பதிவிரத பூஜையிலும் பக்தியிலும் அவங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை.

தலைப்பை எழுதி கோடு கிழித்து ஒண்ணு போட்டாச்சி...ஒன்ணும் அடைப்புக்குறிக்குள் போட்டது மட்டும் தான் . குறிக்கோளாய் எதை எழுதுவது என்பதுதான் விளங்காத புதிராய் தவித்துப் போய் விட்டேன்.

ஒண்ணுக்குப் பக்கத்தில் எழுதினேன். ஏதாவது எழுதணும்...எழுதியாகி விட்டது.எத்தனயோ இருக்கின்றது...பின் நவீனத்தின் முதன்மைத் தத்துவம்...சரிங்களா...

அடுத்து இரண்டு. அடைப்புக்குறிக்குள்..எதையாவது எழுதணும்...ஏதாவதில் ஒன்றாகிய ..எதையாவது.. அப்பாடா எழுதியாகிவிட்டது இரண்டாவது விடயம்.

மூணாவது அடைப்புக் குறியுள். வெளிப்படையாக "எப்படியாவது" என்ற என் பிரயத்தனம் நெளிந்துகொண்டிருக்கின்றது.

நாலாவது. நாளையும் நாள் இருக்கின்றது என்பதால் பெருமூச்சு..(எனக்கு மட்டும் லீவு தந்த "அவர்"க்கு நன்றி)

ஐந்தாவது.ஏதாவது எழுதணும்.. தேடல் என்பதே வாழ்க்கை ..உறைக்கின்றது. தேடல் இல்லாத மனிஷனா நான்...

ஆறாவது.அதிரடியாக் கருத்துச் சொல்லப் போறவங்களை நினைத்து பயமாய் இருக்கின்றது... என் தங்க மணியிடம்(நான் ஆணாயிருப்பதால்) சொல்லிவிட்டு "சைபர் கிரைம்"க்கு சொல்ல விழையும் அபியின் அப்பாக்களை நினைக்க கிர்ரிடுகின்றது.

ஏழாவது.கடிதம் எழுதியே பழக்கப்பட்டவர் (முரசொலியில் மட்டும்..அழுத்திச் சொல்வதற்கு காரணம் அவர் எழுதிய வேறெந்தக் கடிதத்திற்கும் இதுவரை பதிலில்லை) பதிலெழுதினால் எப்படி நம் ரீயாக்ஷன் இருக்கும்.

எட்டாவது. இப்படியும் எழுதித் தான் ஆகணுமான்னு கேள்வி எழுகின்றது...

ஒன்பதாவது. எழுத வந்து விட்டு எழுதாமல் பீலா விடுவது என்பது...

பத்தாவது. அப்படியா.. எழுதி முடித்து விட்டேனா பத்தாவதையும் ..உஷ்..அப்பாடா...




அட ..அவரு கையில பத்து வெரல்.. பிடிச்சிருக்குங்க...

வேல் தர்மாவும் தர்மமும்

பாவம் நம்ம வேல் தர்மா..ரொம்ப காலமாவே கத்திக் (கத்துக்) கிட்டிருக்காரு...யாரும் கேக்க மாட்டேங்கிராங்க... இவரு வன்னியில தோத்துட்டாரு ஆனா வாய்ஸ்ல "நிக்கி"ராரு...

இப்போ ஒரு படம் காட்டியிருக்காரு.. சோனியா vs கிலாரி கிளிண்டன் (கிளிஞ்சன்)னு தான் எழுத ஆசை..மோனிக்கான்ன கவிதைய கிளரிக் கிளிச்சவராச்சே...

அழகான பொண்ணுங்க பக்கத்துல ஒரு பைசாசத்தையும் போடணும் போல "தெரியாத முனியை விட தெரிஞ்ச பிசாசு மேல்"னு சொல்லுவாங்க அதனால கூட இருக்கலாம்.

என்னா தெரிஞ்ச பிசாசு சுவைத்து உண்டது 50 ஆயிரம் ஈழத்தமிழங்க..வலிக்குது...

மொக்கை எழுதுவது ரொம்ப சுலபம்


அண்ணாச்சி ஒரு பதிவு போட்டிருக்காப்பல... தன்னாலதான் மொக்கை போட முடியும்னு பீலா விட்டிருக்காக... மொக்கப்பதிவு போடுவது ஒன்னும் கஷ்டமில்லேங்கிறேன்..

மொக்கைன்னா என்னா? ன்னு பாத்திடுவோம். அது கூடத் தெரியாம எப்டி மொக்கை போடுரது.
மொக்கைன்னா என்னா..? மொக்கைன்னா சக்கை..வெறும் சக்கை..(அட என்னா ஒரு ..எதுகை மோனை..கவிதையால்லே..

மொக்கை..சக்கை
சாறில்லாத பீரு (சாரு அல்ல சாறு.. அட அவரும் அப்பிடித்தாங்கிறீங்களா.. அந்த அரசியலுக்கு நா வரலீங்க..)

பீரு எப்டி சாறில்லாம போகும்னு பாக்கிரீங்களா .. பீரு குடிச்ச ஒடனே வாஷ்ரூம் போரோம்லே சாறிருந்தா ஒடம்பிலே தங்கிடும்லே.. தங்காம போயிடுதே..ஒரு முறை நம்ம தங்கமணிகூட சொன்னாகா... நீரு இப்டி அடிக்கடி எழும்பி போறதிற்கு பதிலா அதை அப்டியே கொண்டே வாஷ்ரூம்ல ஊத்திடுங்கன்னு ..அவ்வளவிற்கு அவங்க பீல் பண்ணிட்டாங்க... என் அவஸ்தையைப் பாத்து...

சரி ...

மொக்கை..சக்கை
சாறில்லாத பீரு

அதேதான்... இல்லாததை இருப்பதாக பாவனை செய்வது .. வலை போட்டு தேடினாலும் ஒரு கூனி இறாலு நெத்தலி எதுவும் அகப்படாது... சொற்கள் என்ற பாசிகள் தான் நெறைஞ்சிருக்கும்...

நம்ம பசங்க செய்யிறதுதான்... பக்கத்தில் இல்லாத நமீதாவை படுக்கையிலில்லாத சகீலாவை வைச்சு .. ஆனந்தப்படவில்லையா? அதே தான் மொக்கை...ஒண்ணும் இல்லாததை பிரமாண்டப்படுத்துவது...

அரிச்சுப் பார்த்தா ..சொற்கள் என்ற பாசிதான் வழுக்கிக்கிட்டிருக்கும்...

இப்ப பாருங்க நம்ம உஷா நக்கரு (சாரிங்க உஷா நாயகரு அப்பிடின்னு தான் எழுத வந்தேங்க .. அச்சு..அடச்சீ தட்டுப்பிழையாயிடிச்சிங்க ..அழிச்சு எழுத சோம்பலுங்க ..அதான் அப்படியே விட்டிட்டோம்கா)

டி.ராஜேந்தரு...

ஒரு பயிட்டு காட்சிலே (இதெல்லாம் ஜெயலலிதாவை குறி பார்த்து.. அடிச்சது... அவரு குறியையில்ல ..இவரு குறி பார்த்து அடிச்சதுங்க..எல்லாம் குப்பைக் கூடையில போனது வேற கதை)

வாடி என் மச்சி
வாழைக்காய் பஜ்ஜி....

ன்னு ..எடுத்து வுடுவாரு.. அவரு மச்சிக்கு (வாழைக்காய் எவ்வளவு முக்கியம்னு ) அவருக்குத் தானே தெரிஞ்சிருக்கணும்...

ஆனா இந்த .. வார்த்தைகள் தான் ..மொக்கைக்கே ஒரு பெரிய உதாரணம் எடுத்துக் காட்டு...

இந்த மச்சின்னது நம்ம சொந்தம்/நட்பு.... அந்த சொந்தம் சுவைத்துச் சாப்பிடும் வாழைக்காய் பஜ்ஜி போல சுவையாய் இருக்கணும்னு ஒரு தத்துவத்தை புதைத்து வைச்சிருக்காரேன்னு ..நாம நெனைக்கப்படாது/சொல்லப்படாது...

வாசகர்கள் ..தலையைச் சுத்தி கிறங்கடிக்க யோசிக்கனும்.. பாத்தீங்களா.. இதில பின்நவீனத்துவமும் கலந்திருக்கு அப்படீன்னு யாராச்சும் பைத்தியக்காரங்க கண்டுபிடிப்பாங்க...

வார்த்தை விளையாட்டா எடுத்துக்கிட்டாலும் ..இதிலே கொல செய்யப்படப்போவது யார் ? அல்லது கொலையாளி யார்னு? ஒரு கேள்வியைப் போட்டு வைச்சிடனும்...ரெண்டு தரம் வாசிங்கன்னு ..அடிக்குறிப்பு வரைஞ்சிடனும்... அப்புறம் ..அவங்க இஸ்டம் போல தலையைப் பிச்சிக்கிடலாம்...

இப்டீ ஏதாவது கிறுக்கிக் கிட்டே வந்தா ..பிரபல பதிவர்னு மா நக்கலுடன் போட்டுத்தாக்கலாம்...

பாத்தீங்களா..? மொக்கை எழுதுரது எவ்வளவு சுலபம்னு.. வளைகுடால்ல இருந்து பாலைவனக் காத்துப்பட்டு ..அண்ணாச்சி ரொம்பத்தான் காய்ஞ்சு போயிட்டாரு... அது தான் மொக்கை எழுதுவது...பாலை மணலை பவுடராக்கி மூஞ்சியை அழகு படுத்திரது போலன்னு ...அண்ணாச்சி வெடி கொழுத்திப் போடராரு...

அட நானும் ஒரு மொக்கை போட்டுட்டோம்ல... நல்ல இரிங்கடே..

குறிப்பு: 90 வீதம் படிச்சதில 10 வீதம் எழுதுங்கன்னு அய்யனார் சொல்லியிருக்காப்ல.. தற்போதைய பதிவுலகத்த படிச்சதில நம்மளால எழுத முடிஞ்ச 10 வீதம்...

Monday, July 20, 2009


சரவண(ன்ப்) பொய்யன் _குசும்பு


தில்லாங்கடி பொய்மை நிறைந்த பதர்களாய் வெயிலில் உலர்ந்து போன அப்பியானன் அப்பட்ட அத்து மீறல்களுக்காக தீபமாய் சுடர்விடும் பெண்னுரிமையை வேகாத வெயிலில் போட்டெரித்து சில்மிஷம் காட்ட திமிக பதாகை ஏந்தி தெனாவெட்டாக பெண்ணீயத்தை அடிமை கொள்ளப்புறப்பட்ட அபியின் அப்பாவும் வெஞ்சினம் வைத்து கொப்பளித்த வாயிலும் புழு வைக்கப் பேசிய சென் ஷிஷியத் தத்துவங்களும் காலாவதியாகப் போன இக்கணத்தில் பெண்மையைப் போற்றும் பெண்ணிய வாதிகளின் கொங்கை குலுங்கும் நடனத்திலும் சு திபி பிரிந்த மானுடர்களின் மறக்கும் தன்மையிலும் ஒடுக்கப்பட்ட தோழமையின் துப்பட்டாவை மலம் மிதித்த கால்களை துடைத்தெடுத்த பக்குவத்தைத்தான் காண்கின்றேன்.

குசும்பாக எனக்குத் தரப்பட்ட வாக்கு றிதியில் இன்னும் வெயில் படாத நச்சு க்கருமையுணர்ந்து தாங்காது வரும் தாக்கீது இது....

இன்னும் பல வெளிப்படும்....


இது பெரு மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவனாகத் தன்னை நினைத்துக்கொண்டிருக்கின்ற துபாயில் அமர்ந்து தில்லாக தில்லாலங்கடித்தன பதிவு என்ற பெயரில் வக்கிரத்தை கொட்டிக்கொண்டிருக்கும் குமார் என்கிற தொல்காப்பியனுக்காக சென்ஷியால் எழுதப்பட்ட கடிதம்.


//இதெல்லாம் டூ மச்...அதன் ஆழம் ..அவலம் உங்களுக்கு விளங்கவில்லையா? நாமெல்லாம் 21 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்... "நாதாறிகள்" என்று அவர் இழித்துப் பழித்துரைத்த அந்தப் பெண்களிடம் ..
பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்//

அய்யா கேட்க சொல்லிடலாம், அதற்குமுன் இன்னும் பலர் கண்ணில் படும் முன் இந்த பதிவை எடுத்துவிடுங்களேன்! உங்களிடம் கெஞ்சிக்கேட்டுக்கிறேன்!


குறிப்பு: கேட்கணும்..

Wednesday, July 15, 2009


இவர்களுக்காக நாம் என்ன செய்கின்றோம்?


சிங்கக் கொடிக்கு சலூட் அடித்து "நமோ நமோ மாதா"பாடுவதுடன் காலை விடிகின்றது. அது அவர்கள் கடமையல்ல கட்டாயம். 24 மணிநேரமும் துப்பாக்கி முனைகளால் ஆட்டுவிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ செய்ய வேண்டியது.

கொழும்பிலிருந்து 260 கி.மீற்றர் தொலைவாக அமைந்திருக்கும் வெலிகந்த சீர்திருத்த முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் 350 பேரின் காலை இப்படித்தான் விடிந்து கொண்டிருக்கின்றது.

சில மாதங்களின் முன்னர் இதே சிங்கக்கொடியை கிழித்து காலில் போட்டு மிதித்தவர்கள் தான் இவர்களெல்லாம்.தமிழீழத் தாகத்துடன் புலிகளாகக் கொண்டாடப்பட்டவர்கள். புலியாதரவாளர்களால் தீரர்களாகவும் புலியெதிர்ப்பாளர்களால் பாசிச வெறியர்களாகவும் சித்தரிக்கப்பட்டவர்கள். இன்று அனாதைகளாக...

செத்துப்போன புலிகளின் தலைவருக்கு உயிரூட்டுபவர்கள் ஒரு புறம்,தமிழ் மக்களின் தலைமையை தங்கள் இடுக்கிப்பிடியில் வைத்திருக்க தேசம் கடந்த அரசு அமைக்க பிரயத்தனப்படுபவர்கள் மறு புறம்,புலிப்பாசிசம் என்று தம் மனதின் காழ்ப்புக்களைக் கொட்டித் தூற்றியவர்கள் எதிர்ப்புறம்... ஆனால் யாரின் கவனத்தையும் பெறாது எதை வேண்டி எந்த சுதந்திரத்திற்காகப் போராடினார்களோ ..எதற்காக தம் இளமையைத் தொலைத்து குடும்பத்தை ஒதுக்கி உறவுகளைப் பிரிந்து காடுகளிலும் மேடுகளிலும் அலைந்தார்களோ அவை எல்லாம் மறுக்கப்பட்டு மறைக்கப்பட்ட அனாதைகளாக எதிரியின் காலடியில் அவன் பிச்சையில் உயிர் வளர்க்கின்றார்கள்.

இவர்களைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய இந்த மாமனிதர்கள் இன்று தம் சொந்த வயிற்றுப்பிழைப்பிற்காக எதிரி கற்றுக்கொடுக்கும் தச்சுவேலை கட்டட வேலை ஒட்டு வேலை என்று வேலைகளைக் கற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.அத்துடன் ஆங்கிலம் கட்டாய சிங்களம். இன்னும் மூவாயிரம் பேர் இவர்களின் பின்னால் அடுத்த அனுபவத்திற்காக காத்திருக்கின்றார்கள்.

இதே போல கொழும்பிலிருந்து வடக்காக 60 கி.மீற்றர் தொலைவிலுள்ள அம்பேபுச என்ற இடத்திலுள்ள முகாமில் நூற்றிற்கும் அதிகமான பதின்ம வயதுப் பெண்களும் குழந்தை போராளிகளும் அடைபட்டிருக்கின்றார்கள்.

இந்த எண்ணிக்கைகள் சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்ட எண்ணிக்கை. ஒரு முறை சிறிலங்கா இராணுவ தளபதி சரத்பொன்சேகா இறுதிக்கட்ட சுற்றி வளைப்பில் 9000 புலிகள பிடிபட்டதாகக் கூறியிருந்தார். உண்மையில் எத்தனை பேர் பிடிபட்டார்கள். இன்னும் எத்தனை பேர் உயிருடன் இருக்கின்றார்கள் என்ற உண்மை பிரபாகரனுக்கும் சரத் பொன்சேகாவிற்குமே தெரிந்திருக்கும்.

அதில் பிடிபட்ட 17 வயதான வஜீமா ரவீந்திரன் இப்பொழுது தச்சுத் தொழில் கற்றுக் கொண்டிருக்கின்றார். தமிழ்ப்பாடல்களையும் புலிக்கொடியையும் மட்டுமே பார்த்திருப்பதாகக் கூறும் அவர் சிறிலங்காவின் அடக்கு முறையை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்.

புலிகளின் கிழக்கு மாகாண தளபதிகளில் ஒருவராக இருந்த 29 வயது தேவநாயகம் சங்கர் இப்போது கட்டட வேலை கற்றுக்கொண்டிருக்கின்றார். 15 வருடங்கள் புலிகளுடன் இணைந்திருந்த இவர் "தலைவர் போனபின் எங்களுக்கு வழிகாட்ட யாருமில்லை" என்று கழிவிரக்கத்துடன் பேசுகின்றார். வழிகாட்ட மட்டுமல்ல, காப்பாற்றவும் தான்.

35 வயது ஆஞ்ஜலோ செல்வகுமார் "துப்பாக்கியுடன் நின்றபோது மக்கள் பயத்தில் எங்களுக்காக எல்லாம் செய்தார்கள். பணம் சம்பாதிப்பது இலகுவாக இருந்தது. இப்பொழுது பணம் சம்பாதிப்பது (தொழில் செய்வதன் மூலம்) எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது" என்கின்றார்.

இவர்கள் எல்லோரும் இப்படி இருப்பதற்கு யார் காரணம்? இவர்களின் சிதைந்து போன வாழ்விற்கு யார் பொறுப்பு? புலிகளா? புலியெதிர்ப்பாளர்களா? சிங்கள பேரினவாதிகளா? இல்லை தமிழ் மக்களா?

இவர்களுக்காக நாம் என்ன செய்யப் போகின்றோம்?

Tuesday, July 14, 2009


சீமானும் கோட்சேயும் சில பதிவுகளும்


சமூகப் பொறுப்பு என்பது என்ன? தனக்குத்தனக்கு அளவான தொப்பியைத் தலையில் போட்டுக்கொண்டு நடப்பதா? அப்படித் தான் படுகின்றது. அப்படி இருப்பவர்கள் தான் சமூகப் பொறுப்போடு சிந்திப்பதாக காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். சமூகப் பொறுப்பு என்பது நீதி நியாயங்களை உடைத்துச் செல்வது தானா?

அண்மையில் சீமான் ஈழப்பிரச்சினை பற்றி ஒரு இதழில் பிரஸ்தாபித்திருந்தார். பேச்சின் இடையில் "தமிழ் ஈழத்தை காந்தி எதிர்த்தால் அவரையும் எதிர்ப்போம். ஈழத்தை கோட்சே ஆதரித்தால் அவரை அதரிப்போம்". கோட்சேயை ஆதரிப்பது பற்றி கேள்விகள் இருக்கலாம்.அதே போல ஈழத்தை நேசிக்கும் ஒருவன் அதை எதிர்ப்பவர்களை எதிரியாய்ப் பார்ப்பதிலும் தவறொன்றுமில்லை தானே.

பெரும் இழப்பு பெரும் கோபத்தைக் கொண்டுவரும். அதே இழப்பு அநீதியால் விளையும் போது அதீத கோபம் வரும். அநீதியாளர்களை எதிர்க்க வீதியில் இறங்க வைக்கும். இங்கும் அது தான் நடந்திருக்கின்றது. மகாத்மா காந்தியின் பெயரால் ஆட்சியைப் பிடித்தவர்கள் "காந்தி"யின் பெயரால் ஆட்சி செய்யும் போது இழைக்கப்படும் அநீதியின் மேல் உண்டாகும் கோபம் இரட்டிப்பாகும்.

கோட்சேயை ஆதரிப்பதை மனதளவில், ஏற்றுக் கொள்ள முடியாத சமூகப் பொறுப்பாக எடுத்துக்கொண்டாலும் அந்தக் கோபத்தின் நியாயத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் தட்டிக்கழிப்பது எவ்வாறு சரியாகும். வார்த்தைகளுடன் விளையாடுவதை விட உயிர்களுடன் விளையாடுவது எவ்வளவு வலி மிகுந்தது. இதை ஏன் இந்தச் சமூகப்பொறுப்பாளர்களால் புரிந்து கொள்ள முடியாது போகின்றது. அங்கு இழைக்கப்படும் அநீதி அவர்கள் கண்ணிற்குத் தெரிவதில்லையா? அல்லது தெரிந்தும் தெரியாத பாவனையா?

ஈழ மக்களிற்கு எதிராக நடந்தேறிய அநீதியான யுத்தத்தில் இந்தியாவின் அழுக்கு முகத்தை அறியாதவர் யார்? இந்தியா உருவாவதற்கு காரணமாய் இருந்த அஹிம்சை, காருண்யம், நேர்மை எல்லாவற்றிலிருந்தும் விலகி எங்கேயோ போய் விட்டது.

ஈழத்தமிழர்களுடன் எதுவித பகமையும் இல்லாமலே அவர்கள் மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலையை ஆதரித்ததன் மூலம் வரலாற்றில் திருத்த முடியாத தவறை இந்தியா செய்திருக்கின்றது.

அண்மையில் டெலிகிராப் பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் றிச்சாட் டிக்ஸன்
"Nation of India has unfortunately deviated from its principles and core values, it was originally built upon. India might build rockets to the moon and giant monuments reaching to the skies but India will not succeed if it corrupts its own soul by aiding Genocide in other countries"அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார்.தன் தேசம் என்பதால் நேர்மை என்பதன் வேலிகளை மாற்றிப் போட முடியாது. நியாயம் என்ற தராசின் தட்டுகளை உயர்த்தி தாழ்த்த முடியாது.

இதனால் இவ்வாறு விளைந்தது என்ற காரணங்களையும் கூடவே அலசிப்பார்ப்பது தான் சமூகப் பொறுப்பாய் இருக்க முடியும். அரை குறையான எண்ணங்களுடன் எதைப்பற்றி பேசப் புறப்பட்டாலும் அது சரியாய் இருக்காது.

இந்தியா பலஸ்தீனத்தில் குண்டு போடாத காரணத்தாலேயே பலஸ்தீனியர்களுக்காக கவிதை எழுதுவது உங்களுக்கு உறுத்தவில்லை.ஈராக்கில் பீரங்கிகளால் உழுது தள்ளாத படியால் மனித நேசம் பற்றி பேச முடிகின்றது.இஸ்ரேலையும் அமெரிக்காவையும் திட்டித் தீர்க்க முடிகின்றது. ஆனால் ஈழத்தில் இந்தியாவின் விசக் கரங்கள விரிந்து செல்வதனாலா உறுத்தும் மனச்சாட்சியை அடக்க இந்திய இறையாண்மையை இறுக்கிப் பிடிக்கின்றீர்கள்.கோட்சேயும் மஹாத்மா காந்தியும் அவர்களாகவே இருக்கின்றார்கள். நாங்கள் தான் மாறிக்கொண்டிருக்கின்றோம். மஹாத்மாகாந்தியின் வழியில் தோன்றிய இந்தியா இன்று கோட்சேயிடம் சென்று சேர்ந்து விட்டது.

"கோட்சேயை ஆதரிக்கலாமா? " என்ற கேள்வியைக் கேட்பது போலவே ஹிட்லரை ஆதரிப்பவரை வக்காலத்து வாங்கலாமா? என்ற கேள்வியையும் சமமாகப் பொருத்திப் பார்க்கும் போது தான் சமூகப் பொறுப்பு துளிர்க்கும். அவ்வாறில்லாவிட்டால் தன் தனக்கு பொருத்தமான தொப்பிகளுடன் அலையும் வெறும் மனிதர்களைத் தான் காணமுடியும்.

//இழப்பின் வேதனைகள், தன்னிடம் இருப்பது மட்டுமே நியாயம் என்று வரையறையை உருவாக்கி விடுகிறது. அதே வேதனை கொண்ட மற்றவர்கள் கொஞ்சம் நிதானமாக இருப்பதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத கோபம் வருகிறது. வேறு கருத்துக்கள் இருக்கவே கூடாது என ஆணையிடுகிறது. அவர்களையும் துரோகிகள் என எந்த யோசனையுமின்றி பட்டம் கட்டிவிடுகிறது. இந்த கொந்தளிப்பான மனநிலை ஒருவித அடையாள அரசியலுக்குள் மனிதர்களை அரவமில்லாமல் நகர்த்திவிடுகிறது.//

இழப்பின் வேதனைகள் மட்டுமல்ல அநீதியை எதிர்க்கும் மனமும் துயரப்படும் மனிதர்களைத் தேடித் தோள் கொடுக்கும் பண்பும் தான் மனிதர்களை நிலைநிறுத்துகின்றது. வெறுங்கதை பேசுபவர்களைத் தூக்கிப் போடுகின்றது.

ஈழ இன அழிப்பில் இந்தியாவின் பங்கு

ஈழ இன அழிப்பில் இந்தியாவின் பங்கு பற்றி இலண்டனில் இருந்து வெளி வரும் டெலிகிராப் தினசையில் றிச்சாட் டிக்ஸன் எழுதிய கட்டுரையில் இந்தியா,சீனா மேற்குலகம் ஆகியவற்றின் பங்கு பற்றியும் அவற்றின் தவறுகள் பற்றியும் எழுதியுள்ளார். இதற்கு இந்தியா என்ன பதில் கூறப்போகின்றது?


வன்னியில் தமிழ் மக்களின் உயிரைக்குடித்த இந்திய தயாரிப்புக் குண்டுகள் (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கவும்)
India and its role in Sri Lankan war -Richard Dixon Telegraph London


India is a successful democracy with the population of 1.17 billion. So many different races, cultures, colours and religions live relatively peacefully. Most of the ethnic groups have their own States and every State in the country is given a degree of autonomy within this great Nation. People of India are mostly religious, hard working and non violent and they still maintain very strong traditional family values.

India hasn’t got a consistent foreign policy towards Sri Lanka. RAW which is the external intelligent agency in India has done great damage to Sri Lanka particularly to the Tamil community. India can't be fully blamed for this because the Sri Lankan regimes very often make unpredictable moves therefore India is forced to change its policies.

As any other intelligent agency, RAW has a legitimate responsibility to protect India from its enemies, by being proactive. However, India could have achieved its objectives without helping the Sri Lankan government to slaughter thousands of Tamils.

RAW provided military training to the Tamil rebels in the early eighties in order to challenge the Sri Lankan government that had closed links with the Western Countries including the US. Tamil youth were trained in different groups. RAW was also to some extent be responsible for fuelling enmity and competition between different Tamil organisations.

Contrary to what many people believe, it is Indian’s interest to maintain a troubled Sri Lanka than a peaceful nation for India to spread its wings in the region. Disturbance in Sri Lanka would give an excuse for India to keep its Navy in Sri Lankan waters.

Indian peace keeping forces and Tamil rebels fought an unfortunate war between 1987 and 1989. Around twelve hundreds Indian soldiers lost their lives and many thousands were wounded in Sri Lankan soil. This was a bitter experience for India.

From year 2001 until the start of war in 2007, India kept a distance from Sri Lanka, although activities were going on behind the scenes. India stopped supplying offensive weapons to the Sri Lankan military.

Indian involvement in recent Sri Lankan war was quite controversial. China and Pakistan provided with all the weapons and India provided the intelligence to the ground troops.

India was well capable of stopping the war but it failed to do it even when thousands of innocent men women and children were perishing in Vanni. Some Indian leaders made contradictory statements, pretending like they were after peace while pressing the “Attack” buttons on their remote controls.

India may have its concerns that Sri Lanka might become a launch pad for China and Pakistan in its own backyard. Letting the Tamils to die in the hands of the Sri Lankan forces was not an easy option for India either.

India has no enmity with the Tamils in Sri Lanka but it has made a historical blunder by supporting a corrupt Sri Lankan regime to commit genocide against the Tamils just to satisfy a racist Nation, so that it can secure its interest in the Indian Ocean.

Indian forces are now going to occupy the Vanni region with the excuse of clearing land mines.

Nation of India has unfortunately deviated from its principles and core values, it was originally built upon. India might build rockets to the moon and giant monuments reaching to the skies but India will not succeed if it corrupts its own soul by aiding Genocide in other countries.

India should dream of becoming a superpower not just by wealth and technology but also proving to the world as a defender and guardian of Human rights.

Cries of men, women and children, who died in Vanni, are still echoing in the thundering skies of Vanni. These voices will keep on haunting every Indian because India has blood on its hands.

http://my.telegraph.co.uk/richarddixons/blog/2009/07/08/emerging_powers_turning_into_blood_sucking_leeches_

ஈழ தமிழ் அரசியல் தலைமையில் இடதுசாரிகளின் பங்கு


"மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி, கஷ்டங்களைப் போக்குவதற்கு திட்டமிட்டு செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.''அதாவது, அரசியல் வேலைத் திட்டங்கள் யாவும், பன்முகப் பார்வை கொண்ட மக்களின் விடிவிற்கானதாக இருக்க வேண்டுமென்பதே இதன் உட்பொருளாகும்.போராட்ட வடிவங்கள் மாறினாலும் மக்களின் விடுதலை என்கிற அடிப்படை நோக்கிலிருந்து அவை விலகிச் செல்லக் கூடாது.மாறும் வடிவங்கள், புவிசார் அரசியலைப் புரிந்து முற்போக்கான பாதையொன்றை தெரிவு செய்ய வேண்டும். அதாவது போராட்ட முறைமைகளில் காத்திரமான விமர்சனங்களை முன் வைக்கும் வெகுஜன இயக்கங்களை இனங் காண வேண்டிய கடப்பாடு மக்களுக்கு உண்டு.

புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் இப்பொறுப்பு உண்டு. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாகப் பெரும் பரப்புரைப் பணியாற்றிய கியூபா தேசத்தின், அரசியலை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். இடதுசாரிகள் எனப்படுவோர், பிரிந்து செல்லும் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டிற்கு எதிரானவர்கள் என்கிற தவறான கருத்தினை, தேசிய இன விடுதலையை முன்னெடுக்கும் சில சக்திகள் பிரசாரப்படுத்துகின்றன.

மேற்குலக, இந்திய ஆதரவுடன் விடுதலை வென்றெடுக்கப்படும் என்கிற, பூர்சுவா சிந்தனையுடன் செயலாற்றும் முதலாளித்துவ வாதிகளுக்கு பொதுவுடமைவாதிகள் எதிராளிகளாகத் தென்படுவது ஆச்சரியத்திற்குரிய தல்ல. உதாரணமாக தோழர் சண்முகதாசன் தலைமையில் தீண்டாமைக்கு எதிராக யாழ். குடாவில் நடத்தப்பட்ட வெகுஜனப் போராட்டங்களை, வியட்நாம் போன்றொரு நிலைமையை உருவாக்க அங்கு சிலர் முயற்சிக்கிறார்களென்று திரிபுபடுத்திய, தமிழினத் தலைவர்களும் எமது வரலாற்றில் உண்டு. ஆகவே தமிழினத்தின் சுய நிர்ணய உரிமை என்கிற பிறப்புரிமையை ஏற்றுக் கொள்ளும் முற்போக்குச் சக்திகளுடன் ஒன்றிணைந்து அடுத்த கட்ட போராட்ட நகர்வினை முன்னெடுக்க வேண்டிய காலத்தின் தேவை உணரப்படுகிறது. வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களை, நாடாளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், பரந்துபட்டு செயற்படும் முற்போக்கு அணியினருடன் ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இணையலாம்.

அதேவேளை, தேசிய இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது பிராந்திய வல்லரசுகளின் சூழ்ச்சியினால் முடக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக உருவாகியுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பிட பேரினவாத சக்திகள் முயற்சிப்பதனை கவனத்தில் கொள்ளல் வேண்டும். அதிகார பலம்கொண்ட ஆட்சியாளர்கள், சில தமிழ் கட்சிகளையும் தனி நபர்களையும் தம்மோடு இணைத்து தமிழ் தேசியத்திற்கான அரசியல் தளத்தினை அழித்து விடலாமெனக் காய்களை நகர்த்துகிறார்கள்.

அதாவது தமிழினத்தின் அரசியல் பிரதிநிதித்துவமோ அல்லது இன அடையாளத்தை வெளிப்படுத்தும் கட்சிகளோ இல்லாத எல்லைக் கிராமங்களற்ற பெருந்தேசிய இராஜ்ஜியமொன்றை இலங்கையில் நிர்மாணிப்பதே பேரினவாதத்தின் இலட்சியம். இந்நிலையில், அவலத்தையும், அழிவுகளையும் தொடர்ந்து அனுபவித்து வரும் தாயக மக்களுக்கான சரியான அரசியல் தலைமையொன்று உருவாக்கப்பட வேண்டும்.

அதனை தாயக மக்களும், போராட்டச் சக்திகளும் அங்குள்ள இடதுசாரி இயக்கங்களும் இணைந்தே கட்டியெழுப்ப வேண்டும். புலம்பெயர்நாட்டிலிருந்து தாயக மக்களுக்கான தலைமையை இறக்குமதி செய்ய முடியாது. போராடும் மண்ணின் மக்களே தமக்கான தலைமையை தேர்ந்தெடுக்கும் உரித்துடையவர்கள்.

தாயக மக்களுக்கு மூச்சடைத்து விட்டது, அதனால் சுவாசிக்க வழியின்றி குரல் இழந்து போயுள்ளார்களென்று புலம்புபவர்கள், ஒடுக்கப்படும் மக்களே விடுதலைக்காகப் போராடுவார்கள் என்கிற எளிய உண்மையை புரிந்து கொள்ளவில்லை. இந்தியாவுடன் பேசப் போகிறோம், நோர்வேயுடன் பேசிக் öகாண்டிருக்கிறோம் என்பவர்கள் கியூபா, சீனாவுடனும் பேசலாம். டானியல் ஒட்டேகாவின் நிக்கராகுவாவுடனும் பேசலாம்.

சர்வதேச சட்டங்களும் ஐ.நா. வின் எழுத்துருவிலுள்ள சரத்துகளும் முள்ளிவாய்க்காலில் அவலப்பட்ட மக்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. நியூயோர்க் மனித உரிமைக் கண்காணிப்பகமும் ஆசிய மனித உரிமைச் சங்கமும் சர்வதேச மன்னிப்புச் சபையும் மனிதக் கேடய விவகாரத்தை தூக்கிப் பிடித்து மனிதாபிமான அரசியலை நடத்தின.இன்றும் கூட யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அறிக்கைப் போர் மட்டும் நடத்தப்படுகிறது. இந்தச் சபைகள், அமைப்புகளை மீறி, பிராந்திய நலன் பேணும் அரசியலொன்று இயங்கிக் கொண்டிருப்பதை இவர்கள் அறிவார்கள். தற்போது காஸா மீது இஸ்ரேல் தொடுத்த பேõரில் நடைபெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகள் நடைபெறுகின்றன. முடிவுகள் எதுவாக இருந்தாலும் தண்டனையிலிருந்து இஸ்ரேலைக் காப்பாற்ற அமெரிக்காவும் மேற்குலக நண்பர்களும் துணை நிற்பார்களென்று யூதர்களுக்குப் புரியும். ஆகவே தாயக மக்களின் அரசியல் தளத்தினை பலப்படுத்த வேண்டிய சமகாலத் தேவையைப் புரிவதனை விடுத்து நாடு கடந்த தேசத்தை அமைப்பதால் மக்களுக்கான விடுதலை அரசியல் உயிர்த்தெழ முடியாது. அமெரிக்கா ஏற்றுக் கொள்ள மறுப்பதால் இந்தியாவை அணுகிப் பார்க்கலாமென்று தாவிச் செல்லும் அரசியலை முன்னெடுக்காமல் சர்வதேச மக்களின் ஆதரவைத் திரட்டும் பணியில் இவர்கள் ஈடுபடலாம்.

தீண்டத் தகாதவர்களாகக் கருதப்படும் சோசலிச நாடுகளையும் அணுகிப் பார்க்கலாம். மக்கள் புரட்சி மூலம் விடுதலை பெற்ற கியூபா, வியட்னாம் போன்ற நாடுகள் எம்மை புறக்கணித்து விட்டன என்கிற அங்கலாய்ப்பில் அவர்களைத் தூற்றுவதை விடுத்து அவர்கள் அவ்வாறான நிலைப்பாட்டினை மேற்கொண்டதற்கான காரணிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதுவரை நிகழ்ந்த ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது, மேற்குலக ஏகாதிபத்தியங்களுக்காக நடத்தப்பட்டது என்கிற கருத்தியலொன்று இவர்களிடம் காணப்படுகிறது. இதனை மாற்றிட வேண்டிய அவசியம், தமிழ் மக்களிடையே இயங்கும் பொதுவுடமைச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட முற்போக்குச் சக்திகளõல் உணரப்படுகிறது.ஆகவே மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளாவிட்டால் நாடு கடந்த அரசும் பத்தோடு பதினொன்றாகிவிடும்.

நன்றி: வீரகேசரி

Monday, July 13, 2009


புலிகளின் புருடாவும் வெட்கம் கெட்ட அறிக்கையும்


50 ஆயிரம் மக்களினதும் போராளிகளினதும் சாம்பரின் மீது புலிகளின் "நாடு கடந்த அரசு " புருடா நடந்து கொண்டிருக்கின்றது. இதுவரை ஆயுதப் போராட்டத்தின் மூலமே தமிழீழம் அடையமுடியுமென்று அழுங்குப் பிடியாக நின்ற புலிகளுக்கு வன்னிக் களம் ஞானம் கொடுத்த போதி மரமாக அமைந்து விட்டது. அவர்களின் ஆயுத மாயை அடங்காப் பற்று அனைத்தையும் தூள் தூளாக உடைத்து நொருக்கிவிட்டது.

இன்று ஆயுதம் எங்கள் குறிக்கோள் அல்ல அகிம்சையே பெரும் மூலதனம் என்று அக்கப்போர் கிளப்பிக்கொண்டிருக்கின்றனர்.

//தமிழ் ஈழப் பிரச்னையில், குறிப்பாக கடந்த நான்கு மாதங்களாக நடந்த சம்பவங்களில், இந்தியாவின் பங்கை பல கோணங்களில் ஆராய்ந்து வருகிறோம். எங்கள் திட்டம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றுதான் கூறுகிறோம்.

இனி ஆயுதப் போராட்டம் இல்லை. இந்தியாவின் இறையாண்மையையோ அல்லது பூகோள நலன்களையோ எம்முடைய செயல்கள் பாதிக்காது என உறுதி அளிக்கிறோம்.//

இதே ஞானம் சில ஆண்டுகளுக்கு முன்னரேனும் கிடைத்திருந்தால் பல்லாயிரக்கணக்கான மக்களையும் போராளிகளையும் பலி கொடுத்திருக்கத் தேவையில்லை. அவர்களின் இன்னுயிர்களை வீணே இழந்திருக்கத் தேவையில்லை.

இத்தனை மக்களையும் கொன்று குவித்த யுத்தத்தை இந்தியாவே முன்னின்று நடாத்தியிருந்தது.அதனை சிறிலங்கா ஜனாதிபதி ராஜபக்ஸேயின் சகோதரர் கோத்தபாயவே ஒப்புக்கொண்டுள்ளார். "இந்தியாவின் யுத்தத்தை நாங்கள் நடாத்தி முடித்தோம்" என்று மகிந்த ராஜபக்ஸேயும் பிரகடனப்படுத்தியிருந்தார்.

இவையெல்லாம் பட்டவர்த்தனமான உண்மைகளாக இருக்க அண்மையில் புலிகளின் சட்ட ஆலோசகர் உருத்திரகுமார் ஒரு வெட்கம் கெட்ட அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார்.

//''நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு, புலம் பெயர்ந்த அனைவரின் உதவியும் அவசியம் தேவை. இந்தியாவின் உதவி மிகவும் அவசியம். இந்தியாவை நாங்கள் என்றுமே எதிரி நாடாக பாவித்ததில்லை. //

அப்போது இந்தியா ஏன் உங்களை எதிரிகளாகப் பாவித்தது. உங்களை அழிப்பது என்ற போர்வையிலேயே 50 ஆயிரம் மக்களைக் கொன்று புதைத்தும் 3 இலட்சம் மக்களை இடம் பெயர்த்து முட்கம்பி வேலிக்குள் அடைத்துப் போட்டிருக்கின்றது. இறந்து போன மக்களுக்கும் அகதிகளாக ஒடுங்கிப்போய் இருக்கும் மக்களுக்கும் சொல்வதற்கு உங்களிடம் ஏதாவது நல்ல காரணம் இருக்கின்றதா?

//நாங்கள் திட்டமிடுவது, வெறும் வலைதளத்தில் மட்டுமே வாழும் அரசு அல்ல.தலைவருக்குப் பிறகான பதவிச் சண்டையும் அல்ல. எந்த ஒரு குழுவையோ அல்லது தனிநபரையோ இது முன்னிலைப்படுத்தாது. விரைவில் தேர்தலும் நடத்துவோம். ஜனநாயக முறைப்படி, அதில் யாரும் பங்கு பெறலாம். முகாம்களில் சீரழியும் மூன்று இலட்சம் ஈழ மக்களைக் காப்பாற்றுவதே எங்கள் நோக்கம். எங்கள் இலக்கு, தனி ஈழம். அதை இனி ஜனநாயக முறையில் இந்தியா, உலக நாடுகளின் உதவியுடன் பெறுவோம்.//

உங்களை 25 வருடங்களாக நம்பி உங்களை ஆதரித்துப் பாதுகாத்த மக்களை நட்டாற்றில் விட்டு விட்டு உங்களுடன் சேர்த்து மக்களையும் அழித்த இந்தியாவின் உதவியுடன் தமிழீழம் அமைத்துத் தரப் புறப்பட்டிருக்கும் உங்களை என்னவென்பது?

நாடு கடந்த அரசினை அமைக்க அமெரிக்கா தன் எல்லைகளை மூஉடிக்கொண்டபோது உங்களுக்கு இந்தியாவின் உதவி வேண்டியிருக்கின்றது. இந்தியாதான் எப்போதும் தமிழீழத்தினதும் புலிகளினதும் எதிரி என்பதை எப்போது நீங்கள் புரிந்து கொள்ளப்போகின்றீர்களோ?

புலம் பெயர்ந்த தேசங்களிலிருந்து ஆட்சியதிகாரத்தை இறக்குமதி செய்து விட முடியாது என்ற கருத்து இப்போது தமிழ் பேசும் மக்களிடம் முனைப்புப் பெற்றுள்ளது. ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களிற்கே சுதந்திரத்தின் தேவையும் அதைப்பெற்றுக் கொள்ளும் போராட்ட வலுவும் இருக்கும் என்பது உண்மையே. ஈழத்தில் கட்டியெழுப்பப்படும் தமிழ் அரசியல்த் தலைமையே மக்கள் மத்தியில் போராட்டத்தை முன்னெடுக்கும் திறன்வாய்ந்தது. ஈழத்தில் இருக்கும் முற்போக்கு புரட்சிவாதச் சக்திகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவையாகும். அதற்கான காரணமும் தேவையும் வெளிப்படையானது.

புலிகளின் அழிவுடன் ஏற்பட்ட தமிழர்களுக்கான அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு பேரினவாதக் கட்சிகள் இப்போது தீவிரம் காட்டுகின்றன. கருணா ,டக்ளஸ், போன்றவர்களின் தலைமையில் இருக்கும் உதிரிக்கட்சிகளையும் ஆனந்த சங்கரி போன்ற தனி நபர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு தமிழருக்கான அரசியல் தலைமை வெற்றிடத்தை இவை நிரப்ப முற்படுகின்றன.

இது தமிழ்த் தேசியத்தின் அடையாளங்களை அழித்தொழிக்கும் ஆபத்தின் அறிகுறி. தொடர்பு பட்ட தமிழ்ப்பிரதேசம் கலாச்சார அடையாளங்கள் என்பவற்றை நொதுமைப் படுத்தி சிங்களப் பெரும்பான்மையுடன் இலங்கையின் அனைத்துப் பகுதிகளையும் பூரணப்படுத்தும் திட்டமிடலின் அதி ஆபத்தான கணங்கள்.

இதை கருத்தில் கொண்டு தமிழ மக்களிடையே இருக்கக் கூடிய முற்போக்கு அணிகள்,மாக்ஸிய கம்யூனிஸக் கூட்டுகள் இணைந்து தமிழர் அரசியலின் தலைமையை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான ஆதரவை வழமை போல தமிழக , புலம்பெயர்ந்த தமிழர்கள் வழங்குவது ஆக்கபூர்வமான செயலாகவிருக்கும்.

அதைவிட்டு நாடு கடந்த அரசு, புலம்பெயர் மக்களின் தலைமைத்துவம் என்பதெல்லாம் போகாத ஊருக்குக் கொண்டு சென்று தமிழ் மக்களின் போராட்டத்தை இன்னும் பலகாலம் பின் தள்ளவே வழி வகுக்கும்.

மனநோயாளர்கள் பார்க்கும் மனநோய் மருத்துவம்


இது ஒரு சுவாரசியமான விடயம். மனநோயாளர்களுக்கு மனநோயாளர்களே வைத்தியம் பார்ப்பது என்பது சுவாரசியம் இல்லையா? மனநோயாளர்கள் அதிகரித்து விட்டார்களா? என்று ஒரு பதிவை பழமை பேசி போட்டிருக்கார். ஏன்? எதற்கு? என்று கேள்விகள் இல்லாமலே அங்கும் கும்மி.

என்ன? அவரே சொல்லியிருக்கார் தமிழ் மணத்திற்கு வருவதற்கே சங்கடமாகியிருக்கின்றது. ஏன்? மனநோயாளிகள் இங்கு தான் குவிந்திருக்கின்றார்கள் என்பது அவர் எண்ணம். கேள்வி கேட்டவர்கள் எல்லாம் எங்கிருந்து கேள்வி கேட்டார்கள்? தமிழ்மணத்திலிருந்து தான் புற்றீசல்களாகக் கிளம்பி கொட்டமடிக்கின்றார்கள்.

என்ன? அவர்களுக்கு மறந்து விட்டது. அல்லது உறைக்கவில்லை. மனநோயாளர்களாக இருக்கும் நிகழ் தகவு அவர்களுக்கும் இருக்கின்றது என்பதை. என்ன செய்வது? அவ்வளவு அப்பிராணிகளாக இருக்கின்றார்கள்.

தமிழ் மணத்தில் எழுதும் பத்திரிகையாளர்கள் அனைவரும் அல்லது அவர்களில் பலர் அல்லது ஒரு சிலர் மனநோயாளர்கள் என்பது பழமைபேசியின் முடிந்த முடிபு. அவரின் இடுகை சுட்டுவது அதைத் தான்.

சரி.. அந்தப்பதிவிற்கு பதில் போட்டவர்கள் எல்லாம் தாம் அப்படி ஒன்றும் மனநலம் கெட்டவர்கள் அல்ல என்று எண்ணிக்கொண்டாலும்.. அவரின் பின்னூட்டங்களின் பின்னணியில் நடந்து முடிந்த "அக்கப்போரில்" பின்னூட்டியவர்கள் , போராடியவர்கள் இவர்களைக் குறித்தே அவரின் "மனநலம் கெட்ட" கணிப்பு இருந்திருக்கின்றது.

அந்தப் பதிவுகளில் பின்னூட்டியவர்கள் அக்கப்போரில் முட்டிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இங்கும் வந்து பதிலிட்டபோது அவர் நிச்சயம் சுவரில் முட்டிக்கொண்டிருப்பார். அவ்வளவிற்கு விளக்கெண்ணைகளா? நம் பதிவர்கள் என்று எதாலோ சிரித்திருப்பார்.

இதில் தமிழ் மணத்திற்கு கொம்பு சீவல் வேறு. ஐயா பதிவுலகம் பத்திரிகை உலகம் அல்ல. இது ஒரு அடுக்களை சாம்பிராச்சியம் போல. மனதில் பூட்டி வைத்ததை துண்டு நோட்டில் கிறுக்கி வைத்ததை சொந்த டைரியில் வரைந்து வைத்ததை பகிர்ந்து கொள்ள விரும்புவதை வெளியிடுவது போன்ற சமாச்சாரம்.

"வாடி என் மச்சி வாழைக்காய் பஜ்ஜி" என்னுமாற் போல டி.ராஜேந்தர் போல கவிதை எழுதும் பாமரனும் ஆர்வமிகுதியால் ஒரு புளக்கை ஆரம்பித்து எழுதிக் கிறுக்கி அல்லது கிறுக்கி எழுதி கடை விரிக்கும் இடம் தான் பதிவர் உலகம். இங்கு வந்து கவி பாடத் தெரிந்த கம்பன் இதெல்லாம் கவிதையா? சுத்தக் கிறுக்குப் பயல்களாய் இருக்காங்களே? இவர்கள் மனநோயாளிகளா? என்று கேட்டால் என்ன செய்வது?

தொம்பர் குப்பத்தில் இருந்து வந்த சாருவால் மலம் அள்ளுவது பற்றி விலாவரியாக எழுதமுடியும். அக்ரகாரத்தில் பிறழ்ந்து உழன்ற கிட்டுமாமாவால் இதைச் சகிக்க முடியாதுதானே. அதற்காக பாவம் சாரு என்ன செய்வார்? அவரை மனநோயாளி என்று சொன்னால் என்ன நியாயம்?

இங்கு ஒரு செளகரியம் எல்லோரும் எல்லாம் எழுதலாம். ஆனால் ஒரு அசெளகரியம் இருக்கின்றது எல்லோராலும் எல்லாவற்றையும் இரசிக்க முடிவதில்லை. அதனால் என்ன? கடந்து போக முடிவதனால் கடந்து போகலாம். போக வேண்டும்.

எல்லோருக்கும் பிடித்த இரசிக்கக் கூடிய புத்தகம் ஒன்று இருக்குமென்றால் அது சரோஜாதேவி புத்தகம் தான். அதை விட வேறு எந்தப்புத்தகமும் நூறு வீதம் மக்களைக் கவரவே கவராது. இது அடிப்படை.

அதனால் மனநோயாளிகள் என்பதெல்லாம் ரூ மச். சொல்பவர்கள் சொல்கின்றார்கள். கேட்பவர்கள் மனநோயாளர்களாக கும்மி அடிக்கின்றார்கள். இது சுவாரசியமாக இருக்கின்றது.
இன்னும் இன்னும் சுயமரியாதை என்பது என்னவென்று தெரியாத அவலம் இது.

அவர் கேள்வியையே ஒத்துக்கொள்ள முடியவில்லை. இப்போது மனநோயாளர்கள் அதிகரிக்கின்றார்கள் என்றால் ஏற்கனவே மனநோயாளர்கள் இங்கு இருக்கின்றார்கள்? யார் அவர்கள் ..?

குறிப்பு: என் எதிர்ப்பிற்கு அடையாளமாக ஒரு நெகடிவ் குத்து போட்டிருக்கேன் அவர் பதிவில்

சிறீயும் ரவியும் தமிழ் ஈழத்தின் விதிகள்


ஒரு நொடியில் ஒரு கணத்தில் பல சம்பவங்கள் மாறிப் போய் விடுவதுண்டு. அப்படித்தான் ஈழத் தமிழனின் தலை விதியும் மாறிப் போய் விட்டிருக்கின்றது. இரண்டு சம்பவங்கள் அவ்வாறு எண்ணத் தூண்டுகின்றன. இந்தியாவும் இராஜீவ் காந்தியும் தான் சம்பவங்கள் . ஆனால் காராணங்கள் வேறு எங்கோ தீர்மானிக்கப்பட காரணகர்த்தர்கள் யாராகவோ இருந்திருக்கின்றார்கள்.

பிராந்திய நலன் என்ற புளிச்சுப்போன போர்வையை விலக்கிவிட்டு சாதாரண சம்பவங்களூடு இதனைப் பார்க்கலாம். நடக்காததையும் நடப்பதையும் தீர்மானிப்பதற்கு இப்பிரபஞ்ச வெளியில் பல காரணங்களைத் தேட முடியும். மனிதனின் மூளையென்பது மிகச்சிறிய அலகுதான். அதைக் கொண்டு இப்பிரபஞ்ச வெளியை அளக்க முயலும் பிரயத் தனம் தானே வாழ்க்கை என்பது.

ஈழத் தமிழனின் தலை எழுத்தை இவ்வாறே எழுதிச் செல்லும் விதியின் கரங்களைப் பார்ப்போம்.

முதல் சம்பவம் இந்தியாவின் ரோ வின் ஆதரவைப் பெற்றிருந்த டெலோ இயக்கமும் அதன் அப்போதைய தலைவராய் இருந்த சிறீ சபாரத்தினமும். இரண்டாவது சம்பவம் ஜே ஆரின் மகனும் ஆலோசகருமாயிருந்த ரவி ஜெயவர்த்தன.

பல இயக்கங்களால் ஈழத்தமிழ் எல்லைகள் அலைக்கழிக்கப்பட எழுந்த தன் முனைப்புகளில் ஒன்றை ஒன்று பிடித்துச் சாப்பிட கங்கணம் கட்டிக் கருவிக் கொண்டிருந்த காலம். புலிகளின் "அடங்க மறுத்த" தன்மைகளால் வெறுத்துப் போயிருந்த இந்தியாவும் ரோவும் புலிகளை அப்போதே அழித்து விடுவது என்ற முடிவை எடுத்திருந்தது. அதற்கான கருவியாக டெலோ தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இந்திய உயர் மட்டத்தில் தொடர்பு கொண்ட புலி அனுதாபிகளாலோ அரசியல் வாதிகளாலோ செய்தி புலியின் கைகளை எட்டிவிட, சீறிக்கொண்டு புலி எழுந்துவிட, கருவி உடைத்தெறியப்பட்டது. ஈழத்தமிழனின் விதியில் அழுத்தமான ஒரு கோடு வரையப்பட்டது.

அடுத்த சம்பவம் அதன் பின்னான பல காலத்தின் பின் இராஜீவ் -ஜெயவர்த்தனா ஒப்பந்தக் காலத்தில். இராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட இராணுவ அணிவகுப்பில் பாவிக்கப்பட்ட துப்பாக்கிகள். அப்போதைய சிறிலங்கா இராணுவ தளபதி டி.ஜே.வீரதுங்கவின் பலத்த எதிர்ப்பையும் மீறி ஜேஆரின் மகனும் ஆலோசகருமான ரவி ஜெயவர்த்தனவால் துப்பாக்கிகளின் குண்டுகள் அகற்றப்பட்டன. அதற்கு முன்னுதாரணம் கொடுத்தவர் எகிப்து நாட்டின் ஜனாதிபதி அன்வர் சதாத். இதே போன்ற ஒரு இராணுவ அணிவகுப்பில் தன் உயிரைக் கொடுத்து இராஜீவைக் காப்பாற்றியிருந்தார்.

இல்லாவிட்டால் அன்று துப்பாக்கியின் பின் பக்கத்தால் இராஜீவை அடித்த சிங்கள வீரன் அவ்வளவு சிரமப்படாமலேயே இராஜீவை தீர்த்துக் கட்டியிருப்பான். இராஜீவின் உயிர் இலங்கைக்கே ஒதுக்கப்பட்டிருந்தாலும் அது ரவியின் ரூபத்தில் தமிழ் மக்களுக்கெதிராகத் திருப்பிவிடப்பட்டு விட்டது. பிரபஞ்சம் வரைந்த இரண்டாவது கோடு.

அன்று சிங்களவர்களால் இராஜீவ் தீர்த்துக் கட்டப்பட்டிருந்தால் இன்று ஈழத்தமிழ் மக்களால் அதிகம் நேசிக்கப்படுபவர் அவராகத் தான் இருந்திருக்கும். இந்தியாவும் கூட. ஆனால் என்ன செய்வது... விதி வலிது.


//ஆனால், ராணுவ அணிவகுப்புபின்போது அவரை சுட்டுக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது இப்போது தெரிய வந்துள்ளது.

ராஜீவ்காந்திக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை தரும்போது, ராணுவத்தினர் வைத்திருக்கும் துப்பாக்கிகளில் குண்டுகள் இருக்கக் கூடாது. ராணுவத்தினர் குண்டுகள் இல்லாத துப்பாக்கிகளை ஏந்தியவாறுதான் அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும் என்று பாதுகாப்பு ஆலோசகர் ரவி ஜெயவர்த்தனே தனது தந்தையிடம் கேட்டுக்கொண்டார்.

அதிபர் ஜெயவர்த்தனே இதை ஏற்றுக்கொண்ட போதிலும் அப்போதைய ராணுவத் தளபதியாக இருந்த லெப்டினெட் ஜெனரல் டி.ஜே.வீரதுங்கா இதை ஏற்காமல் எதிர்ப்புத் தெரிவித்தார்.

துப்பாக்கியிலிருந்து குண்டுகளை அகற்றுவது படைவீரர்களின் மனநிலையைப் பாதிக்கும். படைவீரர்களின் மீதான நம்பிக்கையைக் குறைத்துவிடும் என்று வீரதுங்கா தெரிவித்ததோடு, குண்டுகளை அகற்ற கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்தார். ஆனால் ரவி ஜெயவர்த்தனேவின் ஆலோசனைப்படி குண்டுகள் அகற்றப்பட்ட துப்பாக்கியை அணிவகுப்பு மரியாதையின் போது பயன்படுத்தினர்.

துப்பாக்கியிலிருந்து குண்டுகள் அகற்றப்பட்டதால்தான், ரோஹன டி.சில்வா வேறுவழியின்றி துப்பாக்கி பிடியால் ராஜீவ்காந்தியைத் தாக்கும் சம்பவத்தை நிகழ்த்தினார். இந்த அணிவகுப்பின் போது, துப்பாக்கியில் தோட்டாக்கள் இருந்திருந்தால், அந்த ராணுவ வீரர் ராஜீவ்காந்தியை சுட்டுக்கொன்றிருப்பார்//-சமாதானத்திலிருந்து யுத்தம்; கிளர்ச்சியிலிருந்து பயங்கரவாதம் (From Peac to war, Insurgency to Terrorism) என்ற புத்தகத்தில் இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சிரில் ரணதுங்கா

தினமணியும் மொக்கையும்



அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பார்கள். அதைப்போல தினமணியின் கண்களுக்கு எல்லாக் "காந்தி"களும் மகாத்மாகாந்தியாகத் தோன்றுகின்றார்கள். என்ன ஒரு அக்கிரமம். பத்திரிகைத் துறையில் தனக்கென இடம் பிடித்திருக்கும் தன்னிகரற்ற பத்திரிகையின் "மொண்ணை" ஆசிரியத் தலையங்கம். அந்த ஆசிரியரை ஆசியாவை விட்டே நாடு கடத்த வேண்டும்.

அகிலத்திற்கே அகிம்சையைப் போதித்து ஒரு ரொட்டித் துண்டுடனும் ஒரு ஆழாக்கு ஆட்டுப்பாலுடனும் துண்டு வேட்டியில் அகமகிழ்ந்து சிரித்த அந்த மகாத்மா எங்கே. ஒண்ட வந்த பிடாரியான "இந்த" காந்தி எங்கே? இதைக்கூட பகுத்து உணரத் தெரியாத அறிவுக் கொழுந்து தான் இன்றைய தினமணி ஆசிரியர்.

ஈழமக்களுக்காக அழாதவர்கள் யாரும் உண்டோ? மூன்று இலட்சம் மக்களையும் அவர்களை மூடி வைத்திருக்கும் முள்ளுக்கம்பி வேலிகளையும் மனிதாபிமானம் கொண்ட எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது தான்.இத்தனை கோரங்களுக்கும் ஆளாக ஆடு மாடு பட்டி போல அவர்களை விரட்டியடித்து பட்டியில் அடைத்த இந்தப் பி(ஸ்)ஸாசுக் "காந்தி"யும் அந்த மகானுபவரும் ஒன்றெனச் சொல்ல எத்தனை அப்பிராணியாக இவர் இருக்க வேண்டும்.

அழுவது மாதிரி அழுது துடைப்பது மாதிரி துடைத்து இந்திய அரசிற்கு ஜால்ரா தட்டும் இந்தக் "கூஜா"வை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். ஐ.நாடுகளோ மனித உரிமை அமைப்புகளோ அந்த அப்பாவிகளையும் முகாம்களையும் அடையவிடாது தகிடு தத்தம் செய்யும் சிறிலங்கா பாசிசப்பேய்களை எல்லாவழிகளிலும் காக்கும் இந்திய அரசை வழி நடாத்தும் "இந்த" பாசிசப்பேய் இரத்தக் காட்டேறி "காந்தி" எங்கே... அந்த மகாத்மா "காந்தி" எங்கே?

இதில் அதிசயம் என்னவென்றால் இந்த அயோக்கியத் தனத்தைத் தட்டிக்கேட்க சுதந்திரப் போராட்டத் தியாகிகளோ அறிவு ஜீவிகளோ, மனித நேய பண்பாளர்களோ, சாதாரண குடிமக்களோ யாரும் முன்வரவில்லை.

அட கெட்டு நொந்த ஈழத்தமிழனை விடுங்கள். உயிர் கொடுத்து சுதந்திரம் வாங்கித் தந்த தேச தந்தையை அவமதிப்பதைக் கூடவா தட்டிக் கேட்கக் கூடாது?

இதில் இது வேறு கேடு. நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை,நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள். ஐயோடா...

கனிமொழி போகின்றார்


ஐயோ பாவம் என்றிருக்கின்றது. சிக்கல் மிகு சிங்கள அரசியல் தெரியாது சிங்கத்தின் குகைக்குள் போகும் புள்ளிமானைப் பார்க்கும் பரிதாபம் தோன்றுகின்றது. ஏதோ சொல்லிவிட வேண்டும் என என் மனதில் தோன்றியதைச் சொல்லி விடுகின்றேன். அப்புறம் அவர் இஸ்டம். அவர் அப்பாவின் அரசியலை எவ்வளவு தூரம் வெறுத்தாலும் இளைய தலைமுறையில் சிறிதளவேனும் நம்பிக்கை கொடுப்பவர் கனி மொழி என்பதில் எனக்கு மரியாதை உண்டு.

ஆனாலும் அதலபாதாளமாக விரிந்து வாய் பிளந்து நிற்கும் அரசியலில் பலிக்கடா ஆக அவர் ஆவதை ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கின்றது. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றது.

முதல் காரணம் இந்திய மேலாதிக்க வாதிகளின் தீர்மானிக்கப்பட்ட அஜெண்டாவின் படி "அப்பழுக்கில்லாத" சிங்கள அரசு என்ற மாயையைத் தமிழகத் தமிழ் மக்களிடமும் உலக அரங்கிலும் உண்டாக்கவேண்டிய வற்புறுத்தல் அவர் மீது திணிக்கப்படும். பிறப்பால் அவர் தமிழராகவும் "தமிழினத் தலைவர்" என்ற போலி முகமூடிக்குப் பின் ஒழிந்திருக்கும் அரசியல் அழுக்கின் மகள் என்பதும் கனிமொழியின் தெரிவிற்கு இந்தி மேலாதிக்கவாதிகளைத் தூண்டி விட்டுள்ளது.

கருணாநிதியின் சுயநலச் சாக்கடை அரசியலை என்றுமில்லாதவாறு தமிழின அழிப்பிற்குப் பயன்படுத்துவதில் இந்தி மேலாதிக்கவாதிகள் முழு அளவில் வெற்றி கண்டிருப்பதுவும் அதன் விளைவாக அவர் மகளையே பலியிடத் துணிந்திருப்பதுவும் நிகழ்ந்திருக்கின்றது.

கனிமொழியின் இலங்கை விஜயத்தால் சாதிக்க நினைக்கும் விடயங்கள் பல. ஈழத்தமிழர்களுக்கு தமிழகத்தின் மேலுள்ள பற்றினை உடைத்தெறிவது.( இவர் கொடுக்கப்போகும் ஈழ விஜயத்திற்குப்பின்னான அறிக்கை அவ்வாறே வடிவமைக்கப்படும்)

தமிழீழம், தமிழகம் இடையிலான பகமையை வளர்த்து எக்காலத்திலேனும் எழக்கூடிய தமிழகப் பிரிவினையை முற்றாக ஒடுக்குதல்.(இது இந்தி மேலாதிக்கவாதிகளுக்கு எப்போதுமே இருக்கக் கூடிய மாற்றமுடியாத பயம்)

இதில் ஒழிந்திருக்கும் இன்னுமொரு விடயம் தான் மிகப்பயங்கரமானது. அதில் உண்மையும் இருக்கலாம் அல்லது எனது அதீத கற்பனை என்றும் ஒதுக்கி விடலாம். எல்லாவிற்கும் மேலாக எனது "வரும் முன் காக்கும் எண்ணம்" தான் முக்கியமாகப் படுகின்றது.

இத்தனை நடந்து முடிந்த ஈழத்தமிழர்களுக்கு எதிரான படுபாதகத்தை மூடி மறைக்க சிறிலங்கா அரசும் இந்தியாவும் பகீரதப் பிரயத்தனப்படுவதை நீங்கள் எல்லோரும் அறிந்திருப்பீர்கள். அதே வேளை புலிகள் என்ற போர்வையில் அப்பாவிப் பொது மக்களையும் சரணடைந்த புலித் தலைவர்களையும் சர்வதேசத்தின் எந்தக்குரலையும் மதிக்காது தான் தோன்றித் தனமாக காட்டுமிராண்டிகளாக கொன்று போட்ட சிறிலங்காவின் கொடூர முகத்தை அறிந்தும் அவர்கள் பாதுகாப்பில் கனிமொழி அங்கு செல்வது சரியாகப்படவில்லை. இந்தியா மீதான எதிர்ப்பை,வெறுப்பை ஜேவிபி மற்றும் புத்த அமைப்புகள் நாளும் காறி உமிழ்கின்றன.

அதே வேளை 3 இலட்சம் தமிழ் மக்களை முள்வேலிக்குள் அடைத்து வைத்திருப்பதற்குக் காரணம் தேடும் நிலையில் சிறிலங்கா முனைப்புக் கொண்டுள்ளது.

அது தொடர்பான அதன் செயற்பாடுகளில் ஒன்றாகவே யாருமே நெருங்க முடியாத முள்வேலிக்குப்பின்னால் நின்ற, உண்பதற்கோ உடுத்துவதற்கோ மாற்று எதுவுமில்லாத 24 மணித்தியாலங்களும் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட குடும்ப அங்கத்தவர்களே பிரிக்கப்பட்டு பேசமுடியாது ஒதுக்கப்பட்ட முகாம் சுவர்களில் தோன்றிய திடீர் புலி ஆதரவு சுவர் ஒட்டிகள். உயிரோடு வெளியில் வருவோமா என்று அஞ்சி அஞ்சிச் செத்துக் கொண்டிருக்கும் ஒருவனால் புலி ஆதரவு சுவரொட்டி எழுதி ஒட்ட முடியுமா?

சிறிலங்கா இராணுவத்தினதும் ஆதரவு ஒட்டுண்ணிக் குழுவினதும் இந்த முயற்சி ஆரம்பத்திலேயே பிசு பிசுத்துப் போய்விட்டது. அதைத் தொடர்ந்து காடுகளில் ஒழிந்திருக்கும் புலிகளை வேட்டையாடுதல் என்ற இழுபறி, காலத்தைக் கடத்தும் முயற்சியாக முன்னெடுக்கப்பட்டது. அதற்காகவே செயற்கையான மோதல் சோடிக்கப்பட்டு ஒரு சிங்கள வீரனையும் பலிகொடுத்தது. அதைக்காரணம் காட்டி மேலதிக 50 ஆயிரம் படையினரைச் சேர்க்க எடுக்கப்பட்ட முயற்சிகள் சர்வ தேசத்தின் எதிர்ப்பலையில் கரைந்து போனது.

அதைத் தொடர்ந்து தான் இந்திய ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் தமிழருக்கெதிரான நஞ்சினைக் கக்கும் தமிழின விரோதி இந்து ராம் போன்றோரை அழைத்து "அழகிய முகாம்கள்"என்ற நாடகம் ஆடப்பட்டது. இந்து ராம் மேலுள்ள நம்பகத்தன்மை அற்ற நிலையைப் போலவே "அழகிய முகாம்களும்" அடிபட்டுப் போய் விட்டது.

இந்தி மேலாதிக்க வாதிகளின் அடுத்த அஸ்திரம் தான் தமிழினத்தலைவர் என்ற அரசியல் வேடதாரி கலைஞரின் மகள் கனி மொழியின் ஈழ விஜயம். இந்திய இறையாண்மையை தூக்கி நிறுத்த மேசையின் கீழால் கைமாறப்படும் பணமூட்டையின் கனத்தில் தலையாட்டும் கலைஞருக்கு சொல்லப்பட்ட அஜெண்டாவின் கீழான மூடு மந்திரம் ஏதோ இருப்பதாகவே தோன்றுகின்றது. விடயத்தின் தீவிரம் புரியாத பலியாடாகவே கலைஞர் கனிமொழியை அனுப்ப தலையாட்டுகின்றார்.

சிங்கள ஆதிக்க வெறியர்களின் ஆசையாக தமிழின அழிப்பு நிகழ்ந்து முடியும் வரை "புலி.. புலி பற்றிய புருடாக்கள்" உயிர் வாழ வேண்டும். செத்துப் போய் விட்ட புலியை உயிர் பெற்றெழ வைப்பது எப்படி?

"பலி" கொடுத்து புலியை எழுப்ப வைக்கும் எண்ணம் இப்போது கொழுந்து விட்டெரிகின்றது. அது தான் என் பயமும் கூட.

2012 இற்குள் தனித் தமிழ் நாடு


இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் அதிகரித்துவரும் சீன ஆதிக்கம் பற்றி இப்பொழுது நிறையவே வெளிப்படையான "பயங்கள் ' உருவாகி இருக்கின்றன. உலக அரசியல் ஆதிக்கத்தில் ஏற்பட்டுவரும் அமெரிக்காவின் வீழ்ச்சியை நிரப்ப பல நாடுகள் முயன்று கொண்டிருக்கின்றன.கிழக்கு தூரகிழக்கு ஆசியப் பகுதிகளில் மேம்பட்ட வளர்ச்சியை சீனாவே அடைந்துள்ளது. சீனாவின் பொருளாதார வளர்ச்சியானது அதன் இராணுவ சமநிலையிலும் மாற்றத்தைக் கொண்டு வந்து பெரும் வளர்ச்சியைத் தூண்டுகின்றது. தன் பொருளாதார நலன்களைப் பாதுகாத்துக்கொள்ள மற்றைய நாடுகளைப் போலவே சீனாவும் இராணுவத்தையே நம்பியிருக்கின்றது. அந்த நம்பிக்கையினால் சீனா பல துரித இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

அதில் முக்கியமான சில விடயங்களாக வடகொரிய ஏவுகணைப் பரீட்சார்த்த ஒத்திகைகளை ஊக்கப்படுத்தியது. மற்றும் இப்பிராந்தியத்தில் நலிவடைந்த நிலையில் இருக்கும் சிறு நாடுகளின் அரசாங்கங்களை பொருளாதார உதவிகள் என்ற போர்வையில் கையகப்படுத்திக் கொண்டமை,இராணுவ பொருளாதார உதவிகள் என்பவற்றைக் குறிப்பிடலாம்.

அந்த வகையில் இன்றைய நிலையில் வடகொரியா, வியற்நாம்,லாவோஸ் ,கம்பூச்சியா போன்ற தூரகிழக்கு ஆசிய நாடுகளுடன் இலங்கை ,பாகிஸ்தான் போன்ற நாடுகளும் சீன சார்பு அணியில் நெருங்கி நிற்கின்றன.

உலகப்பொருளாதார நலிவால் அதிகளவில் தன் இராணுவ செலவினங்களை நடத்த முடியாது திணறும் அமெரிக்காவின் சங்கடத்தை சரியாகப் புரிந்து கொண்டு சீனா காய் நகர்த்த ஆரம்பித்துள்ளது.உதவி தேவைப்படும் நாடுகளும் இதனைச் சரியாகப் புரிந்து கொண்டு சீன அணியில் ஒன்று திரளுகின்றன. இதுவே சீனாவிற்கு ஆதாயமாகவும் ஆதிக்கப்போட்டியில் இருக்கும் மற்றைய நாடுகளுக்கு பாதகமாகவும் அமைந்துள்ளது.குறிப்பாக இந்தியாவிற்கு. "ஒரே உறையில் இரண்டு கத்திகள் இருக்கமுடியாது" என்ற கலைஞரின் ஆவேச வரிகள் தான் நினைவிற்கு வருகின்றது. இந்து சமுத்திரப்பிராந்தியத்தின் பெரியண்ணர் இனி சீனா தான். இது தவிர்க்க முடியாதது.

இதையே இந்தியாவின் முன்னணி பாதுகாப்பு ஆய்வாளரும் "இந்தியன் டிபென்ஸ் ரிவியூ" என்ற சஞ்சிகையின் ஆசிரியருமான பாரத் வெர்மா அபாயக் குரலில் அலறியிருக்கின்றார். இனி வரும் காலத்தில் ஏற்படக் கூடிய சீனாவுடனான மோதலில் இந்தியா மேலும் தன் நிலப்பரப்புக்களை இழக்கப்போகின்றது. கூடவே அதன் வலிமையையும். இந்தியா தன்னை நம்பி சீனாவை எதிர்க்க முடியாத கீழான இராணுவ பலத்தையே கொண்டிருக்கின்றது.

சீனாவிற்கு எதிராக இந்தியாவிற்கு உதவும் நிலையில் முன்னைநாள் கூட்டாளியான சோவியத் ரஷ்யா இப்போது இல்லை. அதே நேரம் புதிய கூட்டாளியான அமெரிக்காவோ தன் பொருளாதாரக் குழறுபடிகளுக்கிடையே மூழ்கித் தவிக்கின்றது.

இந்தியா தன்னை நம்பி சீனாவை எதிர்க்குமென்றால் இந்தியா பெருமளவு நிலப்பரப்பையும் மக்களையும் சீனாவிடம் பறிகொடுத்து விடும்.அவ்வாறான ஒரு நிகழ்வு நடக்கும் பொழுது இந்திய மத்திய அரசு கலகலத்துப் போகும் நிலை உருவாகும். போருக்குப் பின்னான காலத்தை இந்தியாவால் முகங்கொடுக்க முடியாது போனால் உள்நாட்டுக்கிளர்ச்சிகளுக்கும் பஞ்சம் இருக்காது.அவ்வாறான ஒரு இக்கட்டு உருவாகும் நேரத்தில் இந்தியாவில் இருந்து பிரிந்து போய் சுயாதீனமாக அரசமைக்க முயலும் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

தமிழ் மக்கள் நினைத்தால் தமிழகமும் ஒரு தனி நாடாகும் வாய்ப்பு உண்டாகும். அவ்வாறு உருவாகும் தனி தமிழ் நாடு ஈழத்திற்கு முன்பாக அமையவும் கூடும். அப்போது மீண்டும் சேர சோழ பாண்டியரின் ஆட்சி பற்றிக் கனவு காணமுடியும். சங்கம் வைத்துத் தமிழும் வளர்க்கலாம்.

வெர்மா கூறியதைப் போல் 2012 வரை காத்திருக்கும் பொறுமை சீனாவிற்கு கிடையாது என்றே தோன்றுகின்றது. அதே வேளை இந்த ஆண்டும் தொடரும் பொருளாதாரச் சறுக்கலில் மேற்கு நாடுகளும் அமெரிக்காவும் மீள முடியாது போனால் சீனா தன் செயற்பாடுகளை வெகு சீக்கிரமாக ஆரம்பித்து விடும்.

Sunday, July 12, 2009


கி.வீரமணி என்ற இடக்கு மணி


தமிழர் தலைவர் என்று வரிக்கு வரி போட்டுக்கொள்கின்றார் கி.வீரமணி தன் பெயரின் முன்னால்..தமிழினத் தலைவர் (அப்படிங்கிர) கருணாநிதிக்கே சவாலா? கோழி நொண்டியா இருந்தா என்ன? குழம்பு ருசியாத் தான் இருக்கும் என்ற கவுண்டமணி வசனம் போல கலைஞருக்கு வயசு போனா என்ன? (கிழட்டு) சிங்கம் சிங்கம்தான்.. அந்தச் சிங்கத்துக்கிட்டேயே மோதிரியே வீரமணி... அவர் சக்கர நாற்காலியில இருந்து சண்டை போட மாட்டாரின்ன துணிச்சலா..?

அவரு தான் இரண்டு ரெ(ள)டி மேட் இளவரசர்களை வளர்த்திருக்காலில்லே.. கடைசி கடைசி பெயரில் இருக்கும் வீரமும் காலிடுக்கில் இருக்கும் மணியும் நசுங்கிப் போகப் போகுதப்பா... வளர்த்த கடான்னு இதைத் தான் சொல்லுரது... முட்ட நெனைக்கரது கலைஞரை ...

கலைஞரே சொல்லிக் கொடுத்த "தமிழ்" விளையாட்டை கலைஞருக்கே சொல்லிக்கொடுக்க நினைக்கின்றது இந்த இடக்கு மணி.

//''கனக விசயர் தலையில் கல்லேந்திக் கொண்டு வந்தான் செங்குட்டுவன். காவிரிக்குக் கரை கட்ட பன்னீராயிரம் சிங்களவர்களைக் கைதிகளாகக் கொண்டுவந்தான் கரிகாலன். இதெல்லாம் சரித்திரம். ஆனால், அந்த சரித்திரத்தின் விழுதுகளாக நாம் இருக்கிறோமா? இனிப் பழங்கதை பேசிப் பயனில்லை. செயலில் இறங்க வேண்டும். ஆளுக்கு ஓர் ஆயுதத்தைத் தூக்குவதா என்று கேட்பீர்கள்? அப்படி ஒரு நிலை வந்தால் தட்டிக்கழிக்க முடியாது. ஆனால், அந்தக் காலம் இன்று வந்துவிடும் என்றும் என்னால் சொல்ல முடியவில்லை''//

என்று அனல் கக்கப் பேசி அரசியல் குளிர்காய்ந்த கருணாநிதி இன்று,

//''எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழருக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு, அங்குள்ள சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கினால்... அது நல்லதல்ல! பேசும்போது சுவையாக இருக்கும். வீரமாகப் பேசலாம். சூறாவளிப் பேச்சு, புயல் பேச்சு, கடல் அலைப் பேச்சு, எரிமலைப் பேச்சு என்று புகழாரம் சூட்டலாம். ஆனால், சிங்களவர்களுடைய கோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இதைத்தான் நீக்குப்போக்கு என்று சொன்னேன்'//

என்று அந்தர் பல்டி அடித்து மெகா சீரியல் காட்டவில்லையா? அவரை மிஞ்சி விடுமா உங்கள் நடிப்பு.


//''இலங்கையில் எங்கள் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி, எங்களைப் பெற்றெடுக்காத தாய்-தந்தையர் எல்லாம் சிங்கள வெறியர்களால் கொல்லப்படுகிறார்கள். இதை எல்லாம் நாங்கள் சகித்துக்கொண்டு எத்தனை நாளைக்கு இருப்பது? நாங்கள் ஒட்டிக்கொண்டு இருக்க, இந்தியாவோடு இணைந்து இருக்க, இந்தியா வேறு... தமிழ்நாடு வேறு என்று இல்லாமல், இந்தியாதான் தமிழ்நாடு, தமிழ்நாடுதான் இந்தியா என்று கருதிக்கொண்டு இருக்க நீங்கள் தமிழருக்குச் செய்தது என்ன? உங்களுடைய தேசியம் தமிழ்நாட்டுக்கு வேகமாக வரத் தயக்கம் காட்டுவது ஏன்? உங்களுடைய தேசியம் தமிழக எல்லைக்கு அப்பால் நின்றுவிடுகிறதே, என்ன காரணம்? இவற்றைக் கேட்கக் கூடாதா? கேட்டால் பிரிவினையா?''//

என்று அன்று இராஜீவ் காந்தியிடம் கனல் பறக்கக் கேட்ட கருணாநிதி //''மிசாவைக் காட்டி மிரட்டினால் தமிழகத்துக்குள் வர விசா வாங்க வேண்டி வரும்''//

என்ற அஞ்சாநெஞ்சன் கருணாநிதி அளவிற்கு நீங்கள் எப்போதாவது பேசியிருக்கின்றீர்களா? அப்படிப்பேசிய கருணா நிதியே இப்போது,

//''எதிலும் ஒரு நீக்குப்போக்கு வேண்டும் என்பார்கள். அங்கு இருக்கும் தமிழருக்கு நன்மை செய்ய வேண்டுமானால், இங்கே நாம் ஆத்திரத்தோடு அல்லது வெறுப்பு உணர்வோடு, அங்குள்ள சிங்கள இனத்தின் மீது ஒன்றைச் சொல்லி அது வேறுவிதமான விளைவுகளை உண்டாக்கினால்... அது நல்லதல்ல! //

என்று பம்மிப் பணிந்து நிற்கும் போது நீங்கள் வார்த்தை மாறி வேடிக்கை காட்டுவது ஒன்றும் பெரிய விடயமேயில்லை.

//இவ்வளவு பேர் வீரம் பேசுகிறவர்கள் ஏன் கனடாவுக்குப் போயிருக்கிறீர்கள்? இவ்வளவு வீரம் பேசுகிறவர்கள் ஏன் வெளிநாட்டிற்குப் புலம் பெயர்ந்தீர்கள்

நீங்கள் தானே முதல் ஆளாகப் போயிருக்க வேண்டும் அங்கே. இப்பொழுதாவது அங்கே போகாமல் எங்களை முதலில் போகச் சொல்லுகிறீர்களே, முதலில் நீங்கள் போங்கள் நாங்கள் பின்னால் வருகிறோம்.//

என்று நீங்கள் கேட்பதை வைத்து உங்களைக் கோழை என்றெல்லாம் சொல்ல மாட்டோம். ஒரு பச்சைச் சந்தர்ப்பவாதியை, பணத்துக்காக நாக்கைத் தொங்கப்போட்டு அலையும் அரசியல் அயோக்கியத்தனத்தை அப்படியெல்லாம் சொல்லி கோழைகள் மீது சேறடிக்க மாட்டோம்.

//உனக்கே அவ்வளவு சிக்கல் இருக்கிறதென்றால், நேரடியாகப் பலன் பெறுகிறவர்கள் எங்களுக்கு எவ்வளவு சிக்கல்கள் இருக்கும்? எங்கள் நாட்டில் எங்கள் கொள்கைக்கு விரோதமாக இல்லாத ஓர் அரசாங்கம் வரவேண்டும் என்று பார்த்துக்கொண்டுதானய்யா ஆதரிக்க முடியும்.//

அடேங்கப்பா... என்ன ஒரு கொள்கை விளக்கம். நேரடியான பலன் பணமூட்டைகள் தானே? எதையா உன் கொள்கை. அநீதியைக் கண்டு போராடுவதா? அல்லது அடங்கிப் போய் ஐய்ந்துக்கும் பத்துக்கும் கை நீட்டுவதா?

உங்கள் கொள்கை எதுவென்றாவது சொல்லித் தொலைக்க வேண்டியது தானே? கருப்புச் சட்டைக்குள் இன்னும் எத்தனை கருமத்தை ஒழித்து வைத்திருக்கின்றாய்?

//இன்றைக்கு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருப்பதால் தானே எதையாவது சொல்ல முடிந்தது. நமது அமைச்சர்கள் மத்திய அமைச்சரவையில் இருந்ததை ஒட்டித் தானே சொல்ல முடிந்தது. அதற்குத் தெளிவாக நீங்கள் வாக்களித்த காரணத்தினால் தானே உரிமை கொண்டாட முடிந்தது.//

இத்தோடு சேர்த்து 50 ஆயிரம் ஈழத்தமிழர் உயிரையும் காக்க முடிந்தது என்று சொல்லியிருந்தால் சொல்லும் நிலையிருந்திருந்தால் நீ சொன்னதில் அர்த்தம் இருந்திருக்கும்.. அது தான் நடக்கவில்லையே.. நீ சொன்ன மந்திரிப் பதவிகளுக்குத்தானே அத்தனை உயிரும் பலிக்கடாவானது.

//எனவே அறிவு பூர்வமான சிந்தனை என்பது மிக முக் கியம்.
தி.மு.க., தி.க பணி உணர்ச்சி பூர்வமானது என்ன? உடனே தூக்கி எறிந்துவிட்டு வா என்பதா? நம்மோடு வந்து நிற்பது என்றால் நம்மோடு எப்பொழுது வேண்டுமானாலும் வரலாமே!//

நாங்கள் என்ன குட்டிச் சுவர் தேடும் கழுதைகளா உன்னோடு வந்து உரசிக்கொண்டு நிற்க...அல்லது தெருநாய்களா எச்சிலிலைக்காக வாலை ஆட்டிக்கொண்டு வர...

//அய்யா சொன்னார். ஓர் அடிமை இன்னொரு அடிமையை எப்படி காப்பாற்ற முடியும்ங்க? என்று கேட்டார். அதில் எல்லாமே அடங்கிப்போய் விட்டது.//

அப்புறம் ஏன்யா உனக்கு தமிழ்ப்பற்று, தமிழுணர்வு, அரசியல்வாதி வேடம் ,தோளில துண்டு, இடுப்பில வேட்டி...

அப்புறம் நீயெப்படி தமிழர் தலைவர்?

தமிழ் மண எழுத்தாளர்கள் என்ன மொள்ளை மாறிகளா?


என்ன தான் நினைத்துக் கொண்டிருக்கீங்க ? ஆளாளுக்கு ஓட ஓட விரட்டுறீங்க ? நாங்க என்னா வேலை வெட்டியில்லாமலா ப்ளாக்கை கட்டிப்பிடிச்சு அழுதுகிட்டிருக்கோம்... என்னவோ நம்மளுக்குத் தெரிஞ்சதை உங்க்ளுக்கும் சொல்லி அறிவுக்கண்ணை (யாருக்குன்னெல்லாம் கேட்கப்படாது)தெறந்துக்கலாம்னு நெனைக்கிரது தப்புங்களா?

மாணிக்க கல்லுத் தேடிப்போனா மானாவாரியா மத்தக் கல்லுங்களும் அகப்படத்தான் செய்யும் ..அதை அப்பிடியே தூக்கிப்போட்டுட்டுப் போகவேண்டியது தானே.. அதை விட்டிட்டு கல்லடிச்சுது ..காலு போச்சி.. முள்ளுக்குத்திச்சு..மூஞ்சி போச்சுன்னு நின்னு வழக்கு சொல்லிக்கிட்டிருந்தா என்னாவது?

காமா சோமா மொக்கை மொன்னைன்னு போடும் போது யாருக்காவது கடுப்படிக்கத்தான் செய்யும் ..வயித்து வலி முதுகு வலி பேதி பிசாசுன்னு பிடிக்கத்தான் செய்யும்... இதெல்லாம் அரசியலுங்க.. முதுகுவலிக்கெல்லாம் ஹாஸ்பிட்டல்ல போய் படுத்துக்கிட நம்மகிட்ட என்னா கோட்டையா கொத்தளமா சொந்தமாயிருக்கு? கொடி பிடிக்கத் தொண்டன் தான் இருக்கானா? கொடியை திருப்பிப் பிடிக்கும் வித்தைதான் நமக்குத் தெரியுமா? ஆடியோடி வேலை செய்தா தான் நம்ம வூட்டில அடுப்பெரியுது..

கடுப்படிச்சா பதில் பதிவு போடுறாங்க ..கடிபடறாங்க.. அப்புரம் அவங்களாவே ஓய்ஞ்சு போயிடுறாங்க...

இதுக்குக்கூட சுதந்திரம் இல்லேன்னா பதிவுலக ஜனநாயகம் என்னாவது? நாயி எல்லாம் ஏன் குலக்குதுன்னு சொல்ல முடியுமா? கல்லெறி விழாதின்னு நெனைச்சுத்தானே குலைக்குது...கல்லெறி விழுந்தா திரும்பி ஓடாமல் இருக்க முடியுமா? இதெல்லாத்துக்கும் ஜனநாயத்தில இடம் இருக்குங்க...

அதைப்போயி நீங்க எப்படி பிழைன்னு சொல்லலாம்.. இதெல்லாம் இலக்கியம்னு எதிர்பார்த்தா என்னங்க செய்யுரது...


வாசகர்ங்க வாசிக்க வாராங்க.. வாசிச்சது புடிச்சுதுன்னா .. ஒரு குத்து போடுராங்க .. அதுக்கு மேல போயி ஒரு குந்துமணியளவிற்கு எதையோ எழுதி கடுப்படிக்கிராங்க...அல்லது காதைக்கடிக்கிராங்க...

இதெல்லாம் அவங்களுக்கு சுமைன்னு சொல்ல முடியுங்களா? அப்படியே சுமைன்னாலும் சுகமான சுமைதானே? சினிமாவில குண்டுப்பொண்ணுங்களை தூக்கிக்கிட்டு மரத்தைச் சுத்துர கதநாயகன் படுற வேதனை மாதிரி பீல் பண்ணி நா..மா..மா..(ந)க்கல் சிபி ஒரு பதிவு போட்டிருக்கார்..

வெள்ளந்தி வாசகருங்களயெல்லாம் பதிவரை முட்டி மோதுங்கடான்னு கொம்பு சீவி விடுராப்பல...

//இந்த பதிவு ஒருவேளை நீக்கம் செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறதுன்னு ஒரு பின் குறிப்பாவது போடலாம்!// .."ந(ர் ம)க்கல்" சிபி

அட ..நமக்கே தெரியாது இந்தப் பதிவு என்னா ஆவப்போவுதுன்னு... நாங்க எப்படிப்போய் முன்குறிப்பு பின்குறிப்பூ போட்டுக்கரது...

நமக்கே இது பதிவு தானான்னு எல்லாம் தெரியாத எத்தனையோ பதிவுங்க காத்தாடிட்டுப் போயிடுது.. உங்களுக்கு தெரியலன்னா "அனுபவப்பட்ட" பதிவர்களைக் கேட்டுப்பாருங்க கண்ணீரும் கம்பலையுமா (கம்பர் தோத்தார் போங்க) அந்த ரேஞ்சுக்கு காவியமா வடிப்..சீ,,படைப்பாங்க..

கடமையே கண்ணாயிரமா.. சில பதிவுங்க மீ த பர்ஸ்ட்.. மீ த செக்கண்ட் னு நெரைச்சுக்கிட்டே போராங்க...

என்னான்னா... அவரு செஞ்சதுக்கு ஒரு நன்றிக் கடன் என்கிறாங்க... அதுக்கும் மேல அவங்க அந்தப் பதிவை படிச்சிருப்பாங்கன்னு நாங்க நெனைக்க முடியுமா? அப்படி நெனைச்சா அதீத தன்னம்பிக்கைக்காரங்க நீங்க..

//பல்வேறு ஊடகங்கள் இப்பதான் தமிழ் வலைப்பதிவுகளை தொடர்ந்து பார்த்துகிட்டு இருக்காங்க! அவங்க முன்னாடி நம்மை நாமே தரம் தாழ்த்திக்கலாமா? கொஞ்சம் யோசிச்சி சொல்லுங்க!//

இது வேறயா..? அவங்க அக்கப்போரெல்லாம் முடிச்சு ..நம்ம ரேஞ்சுக்கு வந்திட்டாங்களா?

அதென்னங்க அச்சுப் பத்திரிகைகளில "மிஸ்டர் மியாவ், ஆந்தையார், எக்ஸ்ரே ரிப்போட்டு ,பிளேடு பக்கிரி ன்னு எதை எழுதினாலும் வாசிக்கிரீங்க... நம்புரீங்க...சிரிக்கிரீங்க..அப்புறம் தூக்கி கடாச்சிறீங்க..

இங்கே மட்டும் குய்யோ முறயோன்னு கூப்பாடு போடுரீங்க ...பத்திரிகைன்னா முதல்வரு கண்ணாநிதி போல கார்டு வாங்கணும் கடிதம் எழுதோணும் இல்லே தந்தியடிக்கோணும்...

இங்கே அந்த பிரச்சினையெல்லாம் கெடையாதே ..ஜால்ரா தட்டிய கைகள் இப்போ பொட்டி தட்டுவதே ..புத்திசாலித்தனம் என்றாச்சு...

அப்புறம் கடிதம் எழுதுறவங்க தந்தி அடிக்கிரவங்க எல்லாம் ..என்ன 'சல்லி" ன்னு புத்திசாலித்தனமா கேக்கிராதா நெனைப்போட இங்கே படையெடுக்கக் கூடாது..

அப்புறம் அனானிகள் தான் பிரச்சினைன்னு ஒருவர் பம்மியிருக்கார்... அனானி பேர்ல ஒரு பதிவு கூட இங்கே கெடையாது... பிரபல பதிவர்கள் தான் இங்கே பிரச்சினையையே கெளப்புகின்றார்கள்... அதுதான் தான் அவர்கள் (பிர)பலம்.

அதையும் விட்டிட்டு அவர்களை "டிங்குச்சா..டிங்குச்சா" ன்னு ஜல்லி அடிக்கச் சொல்லுரீங்களா?

குறிப்பு: 1)அப்பாடி ஒரு வழியா பதிவர்களை நடுக்கடலில் தள்ளி விட்டாச்சு..

2) நாமக்கல்லாருக்கும் ஒரு எதிர்ப்பதிவு போட்டாச்சு (ஒரு வாரத்துக்கு ஓடும்லே)

ஈழத்திற்கு எதிராக நாங்களும் கல் எறிகிறோம்



சீன- சிங்கள உறவு வளருவதால் நாம் வருத்தம் கொள்ளவில்லை. ஆனால், சிங்களத்தில் சீனத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தத்தான் ஈழத்திற்கு எதிராக நாங்களும் கல் எறிகிறோம் என்று சொன்னவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? என மூத்த ஊடகவியலாளர் சோலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'குமுதம்' குழுமத்தின் வாரம் இருமுறை இதழான 'குமுதம்' ரிப்போட்டருக்கு அவர் எழுதிய கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

ஈழம் இன்றைக்கு மயான பூமியாகக் காட்சி அளிக்கிறது. அந்த கோரக் காட்சிகளைக் காண ஐ.நா. அமைப்புக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், சர்வதேசப் பத்திரிகையாளர்கள் எவருமே அனுமதிக்கப்படவில்லை. அங்கே ஆந்தைகளும் கோட்டான்களும் கூடுகட்டுகின்றன. அந்த செவிவழிச் செய்திகளை வெளியிட்ட சிங்களப் பத்திரிகையாளர்கள்கூட சித்திரவதை செய்யப்பட்டனர். அவர்களில் பலர் இன்றைக்கும் விலை வைத்து தேடப்படுகிறார்கள்.

குண்டுவீச்சுக் கொடுமைகளால் எப்படி முல்லைத்தீவு நகரமே இடிபாடுகளாகக் காட்சி அளிக்கிறது என்பதற்குச் சாட்சியாக ஒரே ஒரு புகைப்படம் மட்டும் வெளி உலகை எட்டிப் பார்த்தது. அந்தப் படமும் வானில் பறந்து போகும்போது எடுக்கப்பட்ட மரண சாட்சியாகும்.

கூண்டுக்குள் சிக்கிய சிறைப் பறவைகளாக லட்சோப லட்சம் ஈழ மக்கள் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். இரவு நேரங்களில் சிங்கள இராணுவக் கழுகுகள் அங்கே சுதந்திரமாகப் பறந்து வருகின்றன. இளம் ஈழத்து தமிழச்சிகளைக் கொத்திக் கொண்டு போகின்றன. அவர்களில் திரும்பாமலே காணாமல் போனவர்களும் உண்டு. இரத்தத்துளிகளோடு நடைப் பிணமாகத் திரும்பியவர்களும் உண்டு.

சொந்த வீடு வாசல்கள் இருந்தும் முகாம்களில் முடக்கப்பட்ட இளைஞர்களைத் தரம் பிரிக்கிறார்கள். இவர்கள் விடுதலைப் புலிகளோ என்று சந்தேகம் எழுந்தால் போதும். அடுத்த சில தினங்களில் அவர்கள் காணாமல் போகிறார்கள்.

ஈழத் தமிழர்களை முன்னர் சுட்டுப் புதைத்தனர். இப்போது புதைக்கப்பட்ட சடலங்களைத் தோண்டி எடுத்து இரவோடு இரவாக எரியூட்டி சாம்பலாக்குகிறார்கள். இனி அவர்களெல்லாம் காணாமல் போனவர்களின் பட்டியலில் கணக்குச் சொல்லப்படுவார்கள்.

இப்படிப் பல்வேறு வழிகளிலும் இன்றைக்கு ஈழத்தமிழ் இனம் அழிக்கப்படலாம். ஆனால், அந்த ஈழம் சபிக்கப்பட்ட பூமி அல்ல. ஒரு நாள் வேழமாக எழும். இட்லர் விரும்பியபடி யூத இனம் அழிந்தா விட்டது? இல்லை.

ஓர் இனத்தை அழிக்க சிங்கள இனவாதம் தொடுத்த போர் ஓய்ந்துவிட்டது. ஆனால், அதன் அவலங்களும் ஓலங்களும் சர்வதேச சமுதாயத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.

என்ன ஆச்சரியம்? இந்திய அரசின் இதயத்தில் கூட ஈரம் சுரந்திருப்பதாகச் செய்திகள் வருகின்றன. முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கின்ற ஈழத் தமிழர்களை உடனடியாக அவர்களுடைய இல்லங்களுக்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று இந்திய அரசு கோரியிருக்கிறது. நல்லது.

இன்றைக்கு முகாம்களில் கால்நடைகளைப் போல் அடைக்கப்பட்ட மக்களில் 24,000 பேருக்கு அம்மை கண்டிருக்கிறது. ஐயாயிரம் பேருக்கு மஞ்சள் காமாலை வந்திருக்கிறது. போதிய மருத்துவ வசதிகள் இல்லை. நோய்களாலும் எஞ்சிய தமிழன் இறப்பைத் தழுவட்டும் என்று சிங்கள இனவாதம் எண்ணக் கூடும்.

கண்ணிவெடிகளை அகற்றிய பின்னர்தான் சூழ்நிலைக் கைதிகளை சொந்த ஊர்களுக்கு அனுப்ப முடியும் என்று சிங்கள அரசு சொல்கிறது. அந்தக் கண்ணிவெடிகளை ஒரே வாரத்தில் அகற்றி விட முடியும்.

ஈழத்தமிழ் உணர்வுள்ளவனுக்கு எதிர்காலம் இல்லை என்று முகாம்களிலேயே தீர்மானிக்கிறார்கள். அந்தச் சித்திரபுத்திரன் வேலை நடைபெறுகிறது. எனவே, முகாம்களில் அடைபட்ட தமிழர்கள் சொந்த மண்ணிற்குத் திரும்ப வேண்டும். அழுவதற்குக் கூட அனுமதியில்லாத அவர்கள் பிறந்த பூமியைப் பார்த்தாவது பெருமூச்சு விடவேண்டும். ஏதோ ஈழப் பரப்பைப் பரம்படித்து செம்மைப்படுத்தப்போவதாக இந்திய அரசு கூறுகிறது. அதனை அனுபவிக்க எஞ்சிய தமிழர்களாவது இல்லம் திரும்ப வேண்டாமா?

ஈழத்தை இப்போதைக்கு வெற்றி கொள்ள சீனத்தையும் பாகிஸ்தானையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்ட சிங்கள அரசு, இந்தியாவையும் பயன்படுத்திக் கொண்டது. ஆனால், சோதனையான நேரங்களில் இந்தியாவை நோக்கித்தான் குரல் கொடுக்க முடியும். திருமதி பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் சிங்கள அரசின் சிம்மாசனம் ஆட்டம் கண்டது. அப்போதும் இந்தியாவின் உதவியைத்தான் நாடியது.

ஆனால், இனி இந்தியாவின் தோழமைக்கு சிங்கள அரசு எந்த அளவிற்கு நேசக்கரம் நீட்டும் என்பதனை இனிதான் காணப்போகிறோம். ஈழத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்ற சிங்கள இராணுவம் உடனடியாகத் தங்கள் முகாம்களுக்குத் திரும்ப வேண்டும் என்று இந்திய அரசு கோரியிருக்கிறது.

அந்தக் காரியம் நடைபெற்றாலே ஈழ மக்கள் ஓரளவிற்கு நிம்மதி பெறுவார்கள். ஏனெனில், இன்றைக்கு ஈழம் முழுக்க புற்றுநோய்க் கட்டிகளாக இராணுவ முகாம்கள் முளைத்திருக்கின்றன. அதுமட்டுமல்ல, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே சிவாலயங்களையும் தேவாலயங்களையும் சிங்கள அரசு இராணுவ முகாம்களாக மாற்றிவிட்டது. இன்றுவரை அந்தத் தெய்வீகத் திருத்தலங்கள் குருதிச் சேற்றில்தான் குளித்துக் கொண்டிருக்கின்றன.

முகாம்களில் அடைபட்டிருக்கின்ற ஈழத் தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப வேண்டும். சிங்கள இராணுவம் தமது முகாம்களுக்குத் திரும்ப வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கைகளை ஏற்றாலே சிங்கள அரசு இந்திய நட்புறவு பற்றி சிந்திக்கத் தொடங்கி இருக்கிறது என்று அர்த்தம்.

ஈழப் பிரதேசத்தில் இன்றுவரை இயல்பு நிலை திரும்பாததற்கு என்ன காரணம்? சிங்கள இராணுவத்தினரின் தங்குதடையற்ற நடமாட்டம்தான். அவர்களை எவராலும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. அதனை சிங்கள அரசு அனுமதிக்கிறது. காரணம், தமிழனுக்கு என்று இனி தனி அடையாளம் இருக்கக் கூடாது என்று கருதுகிறது.

ஈழம் ஈடு செய்ய முடியாத பேரிழப்பைச் சந்தித்து விட்டது. இடிந்து போன வீடுகளையும் எரிந்து போன வனங்களையும்தான் காண முடிகிறது. எனவே, இந்தப் பிரதேசத்தில் கூட இனி இராணுவ நடமாட்டம் தேவைதானா?

கண்ணிவெடிகளைக் காரணம் காட்டினால், அதனை அகற்றும் பணியை ஒரே வாரத்தில் நாங்களே செய்து முடிக்க முடியும் என்றும் இந்தியா தெரிவித்திருப்பதாக அறிகிறோம்.

இலங்கை அதிபரின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் பாசில் ராஜபக்சவும், இராணுவத்துறை அமைச்சர் கோத்தபாய ராஜபக்சவும் அண்மையில் டெல்லி வந்தனர். உண்மையில் அவர்களை அழைத்ததே இந்திய அரசுதான் என்று எண்ணத் தோன்றுகிறது.

அவர்கள் இருவருமே இலங்கை அதிபரின் உடன் பிறப்புக்கள் மட்டுமல்ல, ஆட்சி அதிகாரத்தின் அச்சாணியாகச் செயல்படுகிறவர்கள். எனவே, அவர்களை அழைத்து அடுத்து ஈழத்தில் என்ன நடைபெற வேண்டும் என்ற தமது நிலையை இந்தியா தெரிவித்திருக்கிறது. அதனை எச்சரிக்கையாகவும் கூறியிருக்கலாம். இந்தப் பணிகளில் உங்களுக்கு உதவத் தயார் என்று வேண்டுகோளாகவும் தெரிவித்திருக்கலாம்.

ஈழத்தின் மறுசீரமைப்பிற்கு எல்லா வழிகளிலும் இந்தியா உதவி செய்யும். அதே சமயத்தில் கல்வி, வேலை வாய்ப்பு உள்பட அனைத்து உரிமைகளும் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று சிங்களப் பிரதிநிதிகளிடம் இந்திய அரசு எடுத்துக் கூறியிருக்கிறது.

ஈழமே தங்கள் தாயகம் என்று போராடிய விடுதலைப் புலிகள் இயக்கம், இப்போதைக்கு அழிக்கப்பட்டதாகத் தோன்றலாம். ஆனால், என்னென்ன காரணங்களுக்காக ஈழ விடுதலை இயக்கம் பிறந்ததோ அந்தக் காரணங்கள் அனைத்தும் பசுமையாக இருக்கின்றன என்பதனையும் சிங்கள அதிபரின் தூதர்களிடம் இந்தியா எடுத்துக் கூறியிருப்பதாகவும் அறிகிறோம்.

அந்தக் காரணங்களுக்கு சிங்கள இனவாத அரசு தீர்வு காண வேண்டும். ஆனால், அத்தகைய தீர்வுகளை சிங்கள இனவெறியர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது கேள்விக்குறிதான்.

"கச்சத்தீவில் இராணுவ தளம் அமைக்க மாட்டோம். சீனம் அங்கே இராணுவ தளம் அமைக்கவும் அனுமதிக்கமாட்டோம்" என்று சிங்கள அதிபரின் தூதர்கள் தெரிவித்திருக்கிறார்கள். தமிழக மீனவர்கள் மீன் பிடிப்பதற்கான உரிமைகள் காக்கப்படவேண்டும். அதற்கான உறுதிமொழியை சிங்கள அரசு இதுவரை தரவில்லை.

எல்லை கடந்து வருகின்ற சிங்கள மீனவர்களை இந்தியக் கடற்படையினர் இதுவரை சுட்டுப் பொசுக்கியதில்லை. அவர்களுடைய வலைகளை அறுத்தெறிந்ததில்லை. அவர்கள் பிடித்த மீன்களை அள்ளிக் கொண்டதில்லை. சிறைகளில் சித்திரவதை செய்ததில்லை. ஆனால், விடுதலைப் புலிகளைக் காரணம் காட்டி இதுவரை சிங்கள இராணுவம் தமிழக மீனவர்களை வேட்டையாடி வந்தது. இனி புலிகள் என்று காரணம் கூற முடியாது. ஆனால், அத்தகைய கொடுமைகள் இன்றுவரை நீடிக்கவே செய்கின்றன.

இன்னும் ஆறுமாத காலத்தில் ஈழத்தில் வசந்தம் பிறக்கும். முல்லைத்தீவு மணம் பரப்பும் என்று சிங்கள அதிபரின் தூதர்கள் கூறிச் சென்றிருக்கிறார்கள். ஆறு மாத காலம் என்பது காலைப் பனித்துளியாய் விரைவில் கரைந்து போகும். அதற்குள் நடக்கும் அதிசயத்தைக் காண நாமும் தயாராக இருப்போம்.

ஆனால், இந்தக் கட்டுரையை முடிக்கும்போது மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தின் உணர்ச்சிக்குரல் கேட்கிறது. வரவேற்கிறோம்.

போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் மறுவாழ்விற்கு சிங்கள அரசு இதுவரை எந்தப் பணியும் தொடங்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார். சிங்கள அரசின் செயல்பாடுகள் திருப்தி அளிப்பதாகத் தெரியவில்லை என்றும் அதிருப்தியை அறிவித்திருக்கிறார். செஞ்சிலுவைச் சங்கம் போன்ற உலகத் தொண்டு நிறுவனங்கள் ஈழப் பகுதியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் என்கிறார். ஈழத்தமிழர்கள் முடக்கி வைக்கப்பட்டுள்ள முகாம்களை சர்வதேசப் பத்திரிகையாளர்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என்கிறார்.

ஈழத்தமிழர்களின் மறுவாழ்விற்கு உதவியாக இந்திய அரசு 500 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறது என்றாலும், ஈழத்தமிழர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்களையே இலங்கை அரசு வகுக்கவில்லை என்கிறார். இதனை இந்திய அரசின் முதல் குற்றப்பத்திரிகையாகக் கருதலாமா? சிங்கள அரசு திசை மாறுகிறது என்பதனைத்தான் சிதம்பரத்தின் அடுக்கடுக்கான அறிவிப்புக்கள் உணர்த்துவதாக எடுத்துக் கொள்ளலாமா?

இந்திய அரசு தெரிவித்த எந்த யோசனையையும் இனி சிங்கள அரசு செயல்படுத்தாது. அதற்கு மாறாக, ஈழ மக்களின் சொந்த பூமியை சீனத்திற்குச் சீதனமாகக் கொடுக்கப் போகிறது.

ஆம். முல்லைத்தீவுப் பகுதியின் நிலங்களை முழுமையாகக் கைப்பற்றி, அதனை சீனத்திற்கு அளிக்கிறது. அங்கே பொருளாதார மண்டலங்களை சீனம் அமைக்குமாம்.

அங்கு மட்டுமல்ல திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய ஈழப்பகுதிகளிலும் தமிழர்கள் நிலங்களைக் கைப்பற்றி பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படுமாம்.

ஆனால், சிங்களவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்களில் பொருளாதார மண்டலங்கள் அமையாதாம். இனி ஈழத்தமிழன் சொந்த பூமிக்காக சிங்கள அரசிடம் பிச்சை எடுக்க வேண்டும். இல்லையேல், இன்னொரு போராட்டத்திற்குத் தயாராக வேண்டும். சிங்கள அரசும் இன்னும் பௌத்த குண்டுகளை பத்திரமாக வைத்திருக்கிறது.

சென்ற வாரத்தில் வந்த சில செய்திகளை மட்டும் டெல்லிக்கு நினைவுபடுத்துகிறோம்.

சிங்களப் பரப்பில் சீனம் புதிய துறைமுகம் கட்டித் தருகிறது. மின் உற்பத்தியைப் பெருக்க சீனத்தோடு புதிதாக உடன்பாடு கண்டிருக்கிறது. சீன முதலீடுகளை வெகுவாகக் கவருவதற்கு சிங்கள வெளியுறவு அமைச்சர் பெய்ஜிங் சென்று இருக்கிறார். இரு நாடுகளின் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான வழி வகைகள் காணப்படும்.

பெருமளவில் முதலீடு செய்ய வருகின்ற சீனக் கம்பெனிகள் குறைந்தபட்சம் 33 ஆண்டுகள் செயல்பட அனுமதிக்கப்படும்.

இப்படி சீன- சிங்கள உறவு வளருவதால் நாம் வருத்தம் கொள்ளவில்லை. ஆனால், சிங்களத்தில் சீனத்தின் செல்வாக்கைக் கட்டுப்படுத்தத்தான் ஈழத்திற்கு எதிராக நாங்களும் கல்லெறிகிறோம் என்று சொன்னவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்? என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபி அப்பாவின் அராஜகம்..ஆபாசம்


பதிவுலகம் சில காலம் சிண்டைப்பிடித்துக் கொண்டிருக்கின்றது .யார் சரி ..யார் பிழை என்றெல்லாம் நான் இங்கு கருத்துக் கூறவரவில்லை. ஒவ்வொருவரும் தமக்குள்ள சுதந்திரத்தில் கருத்துக் கூறுகின்றார்கள். ஏற்பவர்கள் ஏற்றுக்கொள்கின்றார்கள்... மற்றவர்கள் தங்கள் எதிர்க்கருத்தைப் பதிவு செய்கின்றார்கள்.

இதுவரை எல்லாம் சரியாகவே இருக்கின்றது...இருந்தது. கருத்துகள் ..எதிர்க்கருத்துகள்.. இது ஒவ்வொருவருக்கும் இருக்கக் கூடிய ஜனநாயக உரிமை. பதிவுலகம் அப்படியே இருக்கின்றது..இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இதனிடையில் இன்று அபி அப்பாவால் வெளியிடப்பட்ட "உங்களுக்கு இருக்குடீ ஆப்பு!!!" என்ற பதிவு கடைந்தெடுக்கப்பட்ட அயோக்கியத்தனம்... குண்டர் அரசியலின் மிரட்டல்.

சைபர் கிரைம் பிராஞ்ச்சின் மயிரால் சொரியப்போகின்றாராம். இது தான் தி.மு.க அடிபொடிகள் செய்யும் குண்டார் அரசியல். அதன் அடிப்பொடியான அபி அப்பாவிடம் இருந்து இப்படியான கருத்துகள் வெளிவருவது ஒன்றும் ஆச்சரியம் அல்ல.

இத்தனை நாள் அபி அப்பா போட்ட நல்ல வேஷம் கலைந்ததும் மிகவும் நல்லதே. அந்தப் பெண்கள் "நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்" என்று வேறு உரசிப்பார்க்கப் போகின்றாராம். முதலில் இவ்வாறு ஆணவத்துடன் எழுதும் நீங்கள் ..நல்ல மனிதன் தானா?

உங்களுக்கு இருக்கக் கூடிய கருப்பு கண்ணாடி கழட்டா கருணாநிதியின் ஆட்சி செல்வாக்கை வைத்து இப்படியொரு மிரட்டலை விட உங்களுக்கு வெட்கமாயில்லையா?

ஜனநாயக சக்திகள் போராட்ட சக்திகள் என்று பதிவுலகில் வளைய வருபவர்கள் இது பற்றி வாய் திறக்காது இருப்பதேன்? பெண்ணிய வாதிகள் என்று கூவித்திரிபவர்கள் "ஒரு பெண்ணின்" நல்ல தனத்தை ஏலம் போட முற்படும் அபி அப்பாவைக் கண்டனம் செய்யாதது ஏன்?

உருட்டலுக்கும் மிரட்டலுக்கும் எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள்.

நான் அவர் பதிவிலேயே என் கமெண்ட் கூறியிருக்கின்றேன். வெளிவிடுவதும் விடாததும் அவர் இஸ்டம். பதிவுலகையும் தி.மு.க ரெளடி அரசியலுக்கு பலியாகாமல் காப்போம்...

குறிப்பு: ஒரு பதிவரைப் பற்றி இப்படி எழுத நேர்ந்ததையிட்டு மிகவும் துன்பமாக இருக்கின்றது.

அபி அப்பாவின் பதிவு:http://abiappa.blogspot.com/2009/07/blog-post_12.html
அனுப்ப/அடையாளமிட

Add-Tamil