ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, May 31, 2009


கூட்டிக்கொடுக்கும் மாமா தெருமா


"விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார். அவரது தலைமையில் இலங்கையில் 5ம் கட்ட போர் வெடிக்கும், தமிழ் ஈழம் வென்றே தீரும்" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன்.

மிகவும் கேவலமாய் இருக்கின்றது. தமிழக அரசியலில் நக்கித்தின்ன ஆசைப்படும் அரசியல்வாதிகளின் கேவலங்களின் உச்சம் இது. இத்தனை ஆயிரம் மக்கள் கொல்லப் பட்டபோது துடிக்காத இந்த தெருமா இப்போது ..புதிய வியூகம் வகிக்கின்றது. கருணாநிதியின் வால் பிடித்து சோனியாவின் உள்பாவாடை துவைத்த இது இப்போது 5 ஆம் கட்டப் போர் பற்றி சவடால் விடுக்கின்றது.

தேர்தலில் திமுகவும் வேண்டாம், அதிமுகவும் வேண்டாம். தேர்தலில் தோற்றாலும் பரவாயில்லை. இலங்கை தமிழர்களுக்காக ஓர் தனி அணி அமைப்போம் என்று இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன், பா.ம.க.நிறுவனர் ராமதாஸ், ம.தி.மு.க.பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரிடம் மன்றாடினேன். ஆனால் அவர்கள் எல்லாம் அ.தி.மு.க. அணியில் சேர்வதில் தான் குறிக்கோளாக இருந்தனர்.

இந்நிலையில் தான், திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இருப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்பிறகு தான் நாங்கள் தி.மு.க.கூட்டணியில் இடம் பெற்றோம். இதில் எந்த குற்றமும் இல்லை.

தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றிப் பெற்றோம். இந்த வெற்றி ஒடுக்கப்பட்ட மக்கள் வாழவும், தமிழர்கள் தலை நிமிரவும் பாடுபட உதவும் என்று நம்புகிறேன்.

இலங்கையில் போரை நிறுத்தும்படி சென்னையில் தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்த சோனியாவிடம் மன்றாடினேன். ஆனாலும் கடைசி நிமிடம் வரை இந்திய அரசு நமது வேண்டுகோளை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை.

இலங்கையில் போர் முடிந்ததாக அறிவிப்பு வெளியான பின்னர், அங்கு சென்றுவந்த ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன், 'இலங்கையில் இருப்பது போன்ற மோசமான முகாம்கள் வேறு எங்கும் இல்லை' என்று சொல்கிறார். இதை, போருக்கு முன்னரே சென்று பார்வையிடாதாது ஏன்?

போரின் போது, வெள்ளைக்கொடி ஏந்தி சமாதானம் பேச செய்ய சென்ற நடேசன், பூலித்தேவன் ஆகியோரை, போர் தர்மத்தை மீறி சிங்களப்படைகள் சுட்டுக்கொன்றுள்ளன. எல்லோரும் பலியான பின்னர் தான் எம்.கே.நாராயணன் இலங்கை செல்கிறார்.

இலங்கை அரசுகு இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, வங்கதேசம் என சர்வதேச நாடுகள் அனைத்தும் உதவி செய்கின்றன. ஒரு நாடு கூட விடுதலைப் புலிகளுக்கு உதவ முன்வரவில்லை. சிங்களப் படைகள் நான்கு திசைகளில் இருந்தும், 5வது திசையாக வான்வழியாகவும் கிளாஸ்டர் என்னும் கொத்தணிக் குண்டுகளை வீசி கொத்துக் கொத்தாக மக்களை கொன்று குவித்தது.

என்றாலும், மனம் தளராமல் அத்தனைப் படைகளையும் எதிர்த்து போரிட்ட மாவீரன் அண்ணன் பிரபாகரன் மட்டுமே. அவரது தம்பிகள் நாங்கள். நாங்களும் ஆயுதம் ஏந்தாத புலிகள் தான்.

இலங்கையில் கடைசியாக நடந்த சண்டையில் கூட, சுமார் 12 சிங்களப் படையினரை அழித்துவிட்டுதான் அண்ணன் பிரபாகரனை காப்பாற்றி இருக்கிறார்கள்

விடுங்கையா..எங்கள் பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம்.உங்களைப் போல நக்கித் தின்பதும் நயவஞ்சகம் செய்வதும் நாமறியோம்.கறுபுக்கண்ணாடி கழட்டாத கருணாநிதியுடன் கூட்டிச் சேர முன்னர் இது பற்றி எண்ணியிருக்க வேண்டும். முதுகில் குத்திய நயவஞ்சகத்தை நாங்கள் பார்த்தாயிற்று. உங்கள் சுயநலத்திற்காய் வன்னியைச் சுடுகாடாக்கியது போதும். பொத்திக்கொண்டு போங்கடா போக்கிரிகளா?

இதற்கு மேல் உங்களால் ஒரு இனத்தைக் கொல்ல முடியாது. நீங்கள் வாழும் வாழ்க்கையைப்போல கேவலமான வாழ்க்கையை ஆதி மனிதனும் வாழ்ந்திருக்க முடியாது. கற்காலத்தின் காட்டுமிராண்டிகள் கூட ஏதாவது ஒரு நியாயத்திற்கு கட்டுப்பட்டிருப்பார்கள்.

போதும் உங்கள் உயிர் வாழ்தலுக்காக இன்னும் ஈழத்துத் தமிழன் சாவது. கடிதம் எழுதுவது தந்தி அடிப்பது எல்லாவற்றையும் உங்கள் கண்மணிகளுடனும் வைப்பாட்டிகளுடனும் வைத்திருங்கள்.

இந்தியாவை நம்பியிருக்கும் முதுகெலும்பற்ற கோழைகளே ! நீங்களும் வன்னியில் செத்திருக்கலாம். இன்னும் என்ன இருக்கின்றது... வாழ்க்கை பற்றிய புரிதல் இல்லாது...

என்ன கொடுமை இது சரவணா..அல்லது தள்ளுவண்டிக் கலைஞர்


"தள்ளு வண்டிக் கலைஞரை டெல்லிக் காட்சிகளை டி.வியில் பார்த்தபோது ஏனோ இந்த உண்மைக் கதை நினைவுக்கு வந்தது. ஒரு காலத்தில் மொழிக்காக, தமிழ் மக்களின் உரிமைக்காக, ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து டெல்லிக்கு எதிராகப் போராடிய இளைஞர், இன்று 84 வது வயதில் மகனுக்கும் மகளுக்கும் பேரனுக்கும் அமைச்சர் பதவி பெற்றுத் தருவதற்காக தள்ளு வண்டியில் வைத்து அலைக்கழிக்கப்படுகிறார். விடுதலை வீரருக்கும் இவருக்கும் ஒரே வித்யாசம், இப்படி அலைவது இவருக்கும் பிடித்திருக்கிறது என்பதுதான்.

தி.மு.க என்பது திருக்குவளை மு.கருணாநிதி லிமிடெட் கம்பெனியாகிப் பல காலம் ஆயிற்று. கட்சி என்கிற கம்பெனியின் கண்ட்ரோலிங் ஷேர்ஸ் எல்லாம் குடும்பத்திடமே இருக்கின்றன. குடும்பத்தின் அடுத்தடுத்த தலைமுறைகள் வரிசையாக நிர்வாகப் பொறுப்புகளுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள். அதை ஒழுங்காக முடித்துத் தருவதற்காக ஓய்வு பெறும் வயதைத் தாண்டியபிறகும் போர்ட் சேர்மன் பதவியில் கலைஞரை தொடரவைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வாசிப்புப் பழக்கம், எழுதும் ஆற்றல், ஆங்கில அறிவு உடையவர்களை தேர்ந்தெடுத்து டெல்லிக்கு எம்..பிகளாக அனுப்பி தங்கள் கொள்கைகளுக்காக திறமையாக வாதாடக் கூடிய நபர்களை - அண்ணா, சம்பத், நாஞ்சில் மனோகரன் , இரா செழியன்,முரசொலி மாறன், டாக்டர் கலாநிதி, வைகோ போன்றோரை -- அனுப்பும் கட்சியாக இருந்த திமு.க இன்று எப்படிப்பட்டவர்களை அனுப்புகிறது ? யாரெல்லாம் அமைச்சர் ஆக்கப்படுகிறார்கள் ? எப்படி இருந்த தி.மு.க இப்படி ஆகிவிட்டது ? இன்னும் அடுத்த பத்தாண்டுகளில் என்னவெல்லாம் ஆகப்போகிறதோ ? " - ஞானி


குறள் 1018:
பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து.

கலைஞர் உரை:
வெட்கப்படவேண்டிய அளவுக்குப் பழிக்கு ஆளானவர்கள் அதற்காக வெட்கப்படாமல் இருந்தால் அவர்களை விட்டு அறநெறி வெட்கப்பட்டு அகன்று விட்டதாகக் கருத வேண்டும்

குறள் 1001:
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.

கலைஞர் உரை:
அடங்காத ஆசையினால் வீடு கொள்ளாத அளவுக்குச் செல்வத்தைச் சேர்த்து வைத்து அதனை அனுபவிக்காமல் செத்துப் போகிறவனுக்கு, அப்படிச் சேர்க்கப்பட்ட செல்வத்தினால் என்ன பயன்?.

என்ன கொடுமை இது சரவணா..

பதில் தேடும் பத்துக் கேள்விகள்



உலகெங்கும் வாழும் தமிழர்கள் உறுதி கொல்ள வேண்டிய நேரம் இது. அடிமைகள் போல அழிந்து போகும் இனமல்ல நாம். அராஜகங்களைக் கண்டு துவண்டு போகக்கூடியவர்களும் அல்ல நாம். தணியாத சுதந்திர தாகம் கொண்டவர்கள். தனிப்பெருமைகளைக் கொண்ட இனம். இந்து சமுத்திரத்தில் ஒரு இஸ்ரேல் போல வலிமையுடன் எழப் பிறந்தவர்கள் நாம். இந்தியா அல்ல எந்த வல்லரசு வந்து எதிர்த்து நின்றாலும் எங்கள் சொந்த மண்னை விட்டுக்கொடுக்க மறுப்பவர்கள் நாங்கள்.

சிங்களச் சிறிலங்காவின் அராஜகம் எங்களைத் துவைத்துப் போட்டிருக்கலாம். ஆனால் துவண்டு போகாதவர்கள் நாம். இந்தியாவின் இறுமாப்பை உடைக்கவென்றே பிறந்தவர்கள் நாம். இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் அது நடந்தே தீரும்.

எங்கள் மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு அதை இழைத்தவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். சோனியாவின் சீலை முந்தானையில் முடியப்பட்டவர்கள் அல்ல நாம்.எங்களை அழிக்க இரசாயன, தடை செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொடுத்துதவிய இந்தியாவும் பாகிஸ்தானும் சீனாவும் அந்த வலியை உணர வேண்டும்.

சர்வதேச நாடுகளின் மனிதாபிமானப் பார்வையை எங்களை நோக்கி கொண்டு வரவேண்டும். தூங்கிக் கிடப்பதற்கு இதுவல்ல நேரம். 'கௌண்டர் கரண்ட்ஸ்'என்ற இந்தியப் பத்திரிகை எழுப்பிய பத்துக் கேள்விகள் இவை. இன்னும் பதில் இல்லாத கேள்விகள். எங்கள் ஒற்றுமையும் முயற்சியுமே பதிலைக் கொண்டு சேர்க்கக் கூடியன.


1. இறுதி வாரங்களில் மோதல் தவிர்ப்பு வலயப்பகுதிகளில் நடைபெற்ற தாக்குதல்களில் எவ்வளவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர், அவர்களின் உடலங்களுக்கு என்ன நடந்தது?

2. நோயாளர்களுக்கும், காயமடைந்த மக்களுக்கும் பாதுகாப்பு வலயப் பகுதியில் சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனைகளை ஏன் சிறிலங்கா இராணுவம் மீண்டும் மீண்டும் எறிகணைகளால் தாக்கினார்கள்?, உலகின் ஊடகங்களுக்கு அறிக்கைகளை வழங்கிய மருத்துவர்களின் நிலை என்ன?

3. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா இராணுவம் எத்தகைய தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தியுள்ளது, அதனை வழங்கிய நாடுகள் எவை?

4. போர் முடிந்து விட்டதாக சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றபோதும் ஏன் அவர்கள் சுதந்திர ஊடகவியலாளர்களையும், மனிதாபிமான பணியாளர்களையும், மனித உரிமை அமைப்புக்களையும் அங்கு அனுமதிக்க மறுத்து வருகின்றனர்?

5. ஏன் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் முட்கம்பிகளால் சூழப்பட்ட முகாம்களுக்குள் பலிகொடுக்க தடுத்து வைக்கப்படும் மிருகங்களை போன்று தடுத்துவைக்கப்ட்டுள்ளனர்?, அந்த முகாம்களில் உள்ள இளைஞர்கள் ஏன் கடத்திச் செல்லப்படுகின்றனர்?

6. விசாரணைகளின்போது தமிழ்ப் பெண்கள் இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாக ஏன் மீண்டும் மீண்டும் தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன?

7. அரசாங்கம் எதனையும் மறைக்கவில்லை என்றால் போரில் கொல்லப்படுபவர்கள், துன்புறுத்தப்படுபவர்கள் தொடர்பாக ஏன் ஊடகவியலாளர்கள் விசாரணைகள் செய்யப்படுகின்றனர்?

8. ஒரு சிறுபான்மை மக்களுக்கு எதிராக பாரிய வன்முறைகளை மேற்கொண்ட இனவாத அரசாங்கத்தினால் உடனடியான புனர்வாழ்வையும், நீண்டகால இனப்பிரச்சினைக்கான தீர்வையும் முன்வைக்க முடியும் என எவ்வாறு நம்பமுடியும்?

9. போரியல் குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக அனைத்துலகத்தின் நீதிமன்றத்தின் முன் மகிந்த ராஜபக்சவையும், அவரின் கீழ் இயங்கிய உயர் கட்டளைப் பீடங்களின் அதிகாரிகளையும் நிறுத்துவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?

10. தற்போது விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்டுள்ளனர் எனவே மிகவும் மோசமான சிங்கள சிங்கங்கள் மீது உலகம் அக்கறை கொள்வதற்குரிய நேரம் இதுவா?

ஈழத்தமிழன் மீது உண்மையிலேயே அக்கறை கொண்டவர் எவரும் இத்திசை நோக்கி நடக்கலாம். அவன் இந்தியனாய் இருக்கட்டும் தமிழனாய் இருக்கட்டும் அடிப்படையில் மனிதனாக இருந்தாலே போதுமானது.

மனிதம் இன்னும் உலகில் மிஞ்சி இருக்கின்றது என்ற இறுதி நம்பிக்கையுடன் செத்துப் போன அந்த மனிதர்களுக்காக....

கருணாநிதி ஒரு கோழை


கருணாநிதியின் கட்டுப்பாட்டில் இருந்த பல இலாகாக்கள் ஸ்டாலினிடம் கை மாறியதிலிருந்து கருணாநிதி புதிய வேலை வாய்ப்புகளை பெர்றுக் கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளாரோ எனச் சந்தேகம் எழுகின்றது. அவர் மீது வந்து விழும் குற்றச்சாட்டுகள் அவ்வாறே என்ணத் தூண்டுகின்றது.

இப்போது புதிய உபதொழிலாக ரெளடியிஸம் செய்யப் புறப்பட்டுவிட்டார். ம.தி.மு.க பொதுச் செயலாளர் வை.கோ அவ்வாறு தான் குற்றஞ்சாட்டுகின்றார். ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளையும் இந்திய தமிழக ஆட்சித்தலைமைகளையும் கடுமையாக விமர்சித்தவர் பாரதிராஜா. கொடுமைகளைக் கண்டு பொங்கும் போர்க்குணம் கொண்டவர்கள் கலைஞர்கள்.(பெயரில் மட்டும் "கலைஞ"ராய் இருப்பவர்கள் வெறும் போலிகள்) மென்மையான குணங்கொண்டவர்கள். அநீதிகளைக் கண்டு சீறுபவர்கள்.

இயல்பாகவே ஈழத்தமிழனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எதிர்த்து நின்றவர் பாரதிராஜா. அவரைக் கருத்து ரீதியாக எதிர்க்கத் திராணியற்றவர்கள் அவர் அலுவலகத்தில் புகுந்து அடித்து நொருக்கியிருக்கின்றார்கள். கழகக் கண்மணிகளுக்கு காகிதம் எழுதும் வேலையை விட்டு விட்டு கடப்பாரை தூக்குவதற்கு கற்றுக்கொடுக்கின்றார் க.க.க.க.கருணாநிதி.

"அப்பனுக்குத் தப்பாது பிள்ளை பிறக்கும் " என்று தமிழில் ஒரு சொல் வழக்கு இருக்கின்றது. இங்கு மகன் அழகிரியின் அடியொற்றி தகப்பன் வழி நடக்கும் வழமை வாய்த்திருக்கின்றது.

"துக்ளக்" ஆக நானிருந்தால் ஒரு கார்ட்டூன் போட்டுக் காட்டி விடுவேன். வற்றிய தொத்தல் குதிரையில் கருணாநிதி லொங்கு லொங்கு என்று கடப்பாரை தூக்கி வரும் காட்சி வாழ்க்கையின் துயரங்களை மறந்து வாய் விட்டுச் சிரிக்க வைத்து விடும். வேண்டு மென்றால் சற்றுப் பின்னே குதிரைகளில் இரண்டு சண்டி ராணிகள் வருவதைப் போலவும் கீறி விடுங்கள். கெளரவர்களைப் பெற்றவர்கள்அவர்கள் அல்லவா? கெள்ரவர்கள் 100 பேராக இருக்க வேண்டுமென்பது அவசியம் இல்லை. ஐந்து பேராக இருக்கலாம் ..கனி மொழியையும் சேர்த்துத் தான் சொல்கின்றேன்.

ஜான்ஸி ராணி ஸ்டைலில் சில அதிரடிகளைக் காண எதிர்காலம் காத்திருக்கின்றது. மு.க.முத்து என்ன ஆனார் என்று கடந்த பதிவுகளில் சிலர் கேட்டிருந்தார்கள். அவர் சிறந்த"குடிமக"னாக இருந்து கொண்டிருக்கின்றார். அட ஆமாம் எழுந்து நிற்கவே திராணியற்று.. இருந்து கொண்டிருக்கின்றார்.

நல்லதனமாக யோசித்து விடாதீர்கள். "விதை ஒன்று போட்டால் சுரையா முளைக்கும் "என்று கேட்பார்கள்...அதைப்போலவே திருக்குவளையிலிருந்து தெருக் குவளைக்கு வந்து விட்ட "அரசியல் பாதி அராஜகம் பாதி கலந்து செய்த...கழுதை நான்.." என்று கவிதை பாடும் வாரிசுகள் வேறு எப்படி இருப்பார்கக்ள்.

இனி வை கோ வின் குற்றச்சாட்டு :
அச்சுறுத்தலோ, தாக்குதலோ, கலையுலக படைப்பாளிகளின் உறுதியை இம்மியளவும் குலைக்க முடியாது. என்னிடம் கண்ணீரும் இல்லை; புன்னகையும் இல்லை; ரகசிய நெருப்பாய் எரிந்து கொண்டிருக்கிறேன்.அனுமதி கிடைத்தால், ஆண்டவனைக் கூட சுட்டுக் கொல்லும் கோபம் இளைஞர்களிடம் உள்ளது. ஆண்டவன் என்றால், ஆண்டு கொண்டிருக்கும் அற்ப மனிதர்கள் என்று எண்ணி விடாதீர்கள்; இந்த ஜகத்தினை அழிப்போம் என்ற வழியில் வந்தவர்கள் நாங்கள்.லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், பாரதிராஜா அலுவலகத்தில் குண்டர்கள் நுழைகின்றனர்; அவரது அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்; கோடிக்கணக்கான ரூபாய்க்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளது.


பாரதிராஜா அலுவலகத்தின் மீதான தாக்குதல் கோழைத்தனமான செயல்.இந்தத் தாக்குதலை நடத்தியர்கள் யார் என்பதை திறமை வாய்ந்த போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லையா? தாக்குதலுக்கு பயன்படுத்திய வாகனம் யாருடையது, இயக்கியவர் யார், ஏன் அவர்களை கூண்டில் ஏற்றவில்லை... பாரதிராஜாவின் அலுவலகம் மீது தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்தவரே முதல்வர் கருணாநிதி தான். அவருக்கு தெரிந்து, அவரது ஒப்புதல் பெற்றுத்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அலுவலகத்தின் மீதான தாக்குதல் கோழைத்தனமானது என்றால் அதைச் செய்வித்த கருணாநிதி ஒரு கோழை ..தானா?

குறிப்பு: தமிழர்களின் ஆதரவை பாரதிராஜாவிற்காகப் பதிவு செய்து கொள்வோம். மனிதர்களை நேசிக்கும் கலைஞர்களை மனிதர்களும் நேசிப்பார்கள் என்பதை பறை சாற்றுவோம்.

கோழைகளின் குழப்பம்


புலம் பெயர்ந்த தமிழர்களின் போக்கு பிடிபடாத விசித்திரப்போக்குடன் நிகழுகின்றது.தமிழ்த்தேசியம் பற்றிய உறுதியுடன் செயற்பட வேண்டிய இவ்வேளையில் விசித்திரக் கோமாளித்தனத்துடன் இயங்குதலும் முடியும் என்று சிலர் பறைசாற்றுகின்றார்கள்.

பிரான்சில் உணர்வு எழுச்சியுடன் நடைபெற்ற 'புதிதாய் பிறப்போம்'



இந்த வாரம் பல்வேறு காரணங்களுக்காக மூன்று மேற்கு நாடுகளின் தெருக்களில் தமிழர்கள் இறங்கியிருந்தனர். மூன்றிலும் கலந்து கொண்டவர்களின் தோற்றங்கள் நிறங்களில்த் தான் மாற்றம். இப்படிப்பட்ட மனநிலைக் குழப்பவாதிகளான ஏற்பாட்டாளர்களைக் கண்டிக்கின்றேன்.
மக்களை ஒரே மனநிலையில் வழி நடத்தக் கூடியவர்கள் வெளிவாருங்கள். அப்படியில்லாதவர்கள் உங்கள் வீட்டுக் கடமைகளுடன் குப்பை கொட்டிக்கொள்ளுங்கள்.

இதுவரை காலமும் பட்டொளி வீசிப் பறந்த புலிக்கொடி கனடியத் தமிழர்கள் நிகழ்த்திய போராட்டத்தில் மிஸ்ஸிங்। பச்சோந்திகள்... நீங்கள் கனடியனாய் இருங்கள் இல்லை கடவுளாகவே இருங்கள் ஆனால் தமிழராய் இருக்க மறந்து விடாதீர்கள்। ஒவ்வொரு

நோர்வே: சிறிலங்காவின் இனப்படுகொலையை வெளிக்கொணர்ந்த உடலப்பேழை பேரணி

மனிதரும் தம் தேசியக் கொடியின் கீழேயே ஒன்று திரளுக்கின்றான்। புலிகளின் கொடியே தமிழீழத் தேசியக் கொடியென இது நாள் வரை உங்களால் தூக்கிப் பிடிக்கப்பட்டது।

இப்போது ஏன் அது இல்லாது போய் விட்டது. புலிகள் இருந்தாலும் இல்லாது விட்டாலும் அதுவே எங்களுக்கு அடையாளமாகப் போய் விட்டது. சிவப்பு மஞ்சள் புலிக்கொடியைப் பார்த்தால் "தமிழ்" என்று சொல்லும் அளவிற்கு மற்றைய இனத்தவர்களுக்கிடையே அடையாளம் இருந்தது. புலிகளைத் தடை செய்த தேசம் தான் பிரித்தானியாவும் கனடாவைப் போல.கொடியைத் தடை செய்ததல்ல. இது எங்கள் இனத்தின் கொடி..அதைச் சுமப்பதில் தடையில்லை.

அப்படியும் புலிகளின் கொடியை தமிழர் தேசியத்தின் கொடியாகக் கொள்வதில் மனத்தடை ஏதாவது இருக்குமானால் பொதுவான கொடியொன்று உடனும் அவசியமும் உருவாக்கப் படவேண்fடும். என்னைப் பொறுத்தளவில் புலிக்கொடியைச் சுமப்பதில் எந்தத் தடையும் இல்லை. காரணம் எங்கள் வரலாற்றின் ஒரு பகுதி அது.புலிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களின் காலமும் எங்களின் வரலாற்றின் ஒரு பகுதி. அதை அழித்தோ அடித்தோ எழுத முடியாது.புலிகளை நல்லவர்களாகப் பார்ப்பீர்களோ கெட்டவர்களாகப் பார்ப்பீர்களோ, நல்லதையும் கெட்டதையும் சேர்த்தே பார்வைக்கு வைப்பது தான் வரலாறு.

வரலாற்றைத் திருப்பி எழுத முடியாது। பச்சோந்தியாகும் உங்கள் வரலாற்றையும் தான்.

சிங்கள இனவெறியர்களின் ஆர்ப்பாட்டத்தினை கண்டித்து கனடாவில் தமிழ்ப்பச்சோந்திகளின் ஆர்ப்பாட்டம்

Saturday, May 30, 2009


படம் காட்டல்


பச்சை விரித்து மதர்த்து வளர்ந்திருந்த மரங்களைப் பார்க்குந்தோறும் ஆச்சரியம் எனக்குள் நீண்டு நிழல் விரிக்கின்றது. எத்தனை காலம் இருந்ததோ இன்னும் எத்தனை காலம் தொடருமோ? என்னையும் என் ஆயுளையும் கடந்து அதன் நிழல் இந்த நிலமெங்கும் படர்ந்திருக்கும். ஒவ்வொரு குளிருக்கும் உடல் ஒடுக்கி சமரில் விஸ்வரூபம் எடுக்கையில் ஆச்சரியம் கூடிச் செல்கின்றது.

ஒரு உயிரினமும் இல்லாத கடுமையான நாட்களைத் தவமெனக் கடந்து வந்தபின் தோன்றும் பெருங் குதூகலத்தையும் பார்க்கின்றேன். அப்படித்தான் இன்று என் மக்கள் கூட வரும் துணையின்றி தனி மரமாக் துவண்டு போயிருக்கின்றார்கள்.

"அற்ற நீர்ப் பறவைகள் போல் வற்றியிருக்குமாம் குளம்.."

இத்தனை அடி பெருத்த மரங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்க மாட்டார்கள் ..குண்டுகளில் இருந்து தப்பிக் கொள்ளும் மார்க்கம் கிடைத்ததென்று ஆசுவாசம் பட்டிருப்பார்கள். இன்று அவர்கள் இல்லையென்றாலும் அந்த மரங்கள் தன்னைக் கடந்து போனவர்களைத் தேடியிருக்கக் கூடும். அல்லது தன் காலடியில் எருவாகிப் போனவர்களுக்காக கலங்கியிருக்கக் கூடும்.

20,000 மக்களைக் குறைந்தளவு ஐ.நாடுகள் கணிப்புப்படி ...இன்னும் எத்தனை ஆயிரம் உயிர்களின் கதறல் அந்த வெளிகளில் உறைந்து போயிருக்கின்றதோ...

அப்படிப்பட்ட தேடல்களுடன் அல்லது கலங்கல்களுடன் புலம்பெயர்ந்த மக்கள்.... அடுத்து என்ன என்ற கைபிசைதலுடன். அதே கை பிசைதலுடன் டி.ஜே.தமிழனின் படங்காட்டல் அல்லது பயமுறுத்தல்.. நெருடிக்கொண்டிருக்கின்றது. பயங்காட்டல் இல்லையென்றாலும் படங்காட்டல் இல்லையென்றால் ...நீங்கள் அல்லது உங்களைப் போன்றவர்களுடன் சேர்ந்தே தொடங்கலாம்.

படங்காட்ட பி.எச்.டி படித்திருக்க வேண்டுமென்று அக்பர் நாமாவிலும் எழுதப்படவில்லை. அதுதான் கொஞ்சம் வில்லங்கமான தீன் -இலாஹி போன்ற விடயங்களைப் புகுத்த வெளிக்கிட்டது.

தலைவர்கள் உருவாகுவதில்லை. தானே உருவாகின்றார்கள். இல்லாவிட்டால் திருக்குவளை போய் அண்ணாவும் பெரியாரும் உருவாக்கிவிட்ட களி மண்பானையா? க.க.க.க.க (விளக்கம் சொல்லிச் சொல்லியே களைத்து விட்டது)என்று நினைக்கின்றீர்கள். இப்போது பார்த்தால் அப்படி இருந்திருந்தாலும் தேவலாம் என்று படுகின்றது.

அப்படியே உயிருடன் இருந்திருந்தாலும் இன்றைய டில்லி காவடி பார்த்து மறுமுறை இறந்து போயிருப்பார்கள்.

முட்டாள்களும் அவர்கள் நம்பிக்கைகளும்


நிறையவே மேக மூட்டங்களைப் பார்த்தாயிற்று. தமிழ் மக்களின் கண்ணீரும் சேர்ந்து கனம் கூடியிருக்கின்றது. காட்டில் இருந்து நாட்டிற்கு நாகரீகமாகி வந்த மனிதனின் காலம் போய் காட்டிற்கே மனிதர்களை அனுப்பும் காலமாகிவிட்டது. பரிசோதனைக் களம் ஈழ மண்ணில் நடந்திருக்கின்றது. தங்கள் ஆயுதங்கள் எத்தனை பேரைக் கொல்லும் என்று ஆயுத வியாபாரிகள் கணக்குப் பார்த்தாயிற்று.தங்கள் கொள்கைகள் எத்தனை தூரம் செல்லும் என்று தமிழ் மண்ணை எரித்தவர்கள் திருப்திப் பட்டுக் கொண்டார்கள்.

ஆனால் அந்த மக்கள் இன்னும் வலிகளை மறக்க முடியாது மரத்துப் போய் செத்துக் கொண்டிருக்கின்றார்கள். 21 ஆம் நூற்றாண்டின் மனித குல அவமானத்தைப் பற்றி யாருக்கும் வெட்கமில்லை. அந்த மனிதர்களையே வைத்து அரசியல் செய்யும் போக்கிரிகள் தங்கள் செய்கைக்கு என்ன பிராயச் சித்தம் செய்ய்தாலும் தீரப்போவதில்லை.

நாதியில்லாது கிடக்கும் மக்கள் முகாமில் நடமாடும் வங்கிக் கிளை திறந்திருக்கின்றது என்று "புதிய தேசம்" என்ற போக்கிரி குதூகலப் பட்டிருக்கின்றது.அந்த மக்கள் வைத்து எடுக்க அவர்களிடம் என்ன இருக்கப் போகின்றது அவர்கள் உயிரைத் தவிர. இவர்கள் உருவாக்கும் "புதிய தேசம்" காட்டுமிராண்டிகளின் கூடாரமாக இருக்கும் தீயல் வாசம் தான் இப்போதே நாசியைக் கருக்கின்றது.

இவர்களும் தமிழர்கள். இவர்கள் அறிந்தே செய்கின்றார்களா? அறியாது தவறு செய்கின்றார்களா? குற்றம் செய்யாதவன் முதல் கல்லை எறியக் கடவது என்று சொன்னால் ஒருவன் காணாது ஓடிவிடுவான். அத்தனை மொத்தக் குற்றத்தையும் செய்தவர்கள் மூச்சுக்கு முன்னூறு முறை " புலிகளுக்காக" அத்தனை தன் இன மக்களையும் அடகு வைக்கும் முள்ளந்தண்டு முறிந்து போயிருக்கின்றார்கள்.

இன்னுமொரு விடயம் ... அன்றென்றும் என்றென்றும் அன்பில்லாத ஒன்று புலிகளைத் துவைத்து அசோகக் கொடியை ஏற்ற அல்லல் படும் அல்லக்கை ஈமெயிலில் வந்தது என்று விஷம் கக்கியிருக்கின்றது. ஈ மெயிலில் வந்ததாயினும் இந்த அல்லக்கையின் "நேர்மை"பற்றி எப்போதும் எனக்கு சந்தேகம் இருந்து கொண்டிருக்கின்றது. நேர்மையான கருத்துப் பரிமாற்றம் பற்றி "நடுநிலை" ஆப்படித்து உட்கார்ந்திருக்கின்றது.

இதை எப்படி உறுதிப்படுத்துகின்றேன் என்றால் புலிகளின் விமானம் பற்றிய மாயைகளை இன்றைய தோல்வி நிலையில் நீங்கள் அறிந்திருப்பீர்கள். கடைசி கடைசி தற்கொலைத் தாக்குதலில் கொழும்பில் இருந்த கான்கிரீட் கட்டிடத்தின் ஒரு சில செங்கல்களைப் பெயர்த்ததுடன் சாம்பலாகிப் போயின அந்த விமானங்கள். அந்த விமானங்களை வைத்துத் தான் இதே அல்லக்கை "கல்பாக்கம் அணுமின் உலைக்கு புலிகளின் விமானப் படையால்" ஆபத்து என்று போக்கிரி இந்திய துடுக்குத் தனத்திற்கு ஆதரவு தேடும் பதிவு ஒன்று பல காலங்களின் முன் படங்களுடன் போட்டிருந்தது. காலங்கள் போனால் ஞாபகங்கள் போய் விடும் என்று இப்போதும் "ரீல்" விட முயற்சிக்கின்றது.

"என்றென்றும் அன்பில்லாத இது " எப்போதும் போல் புலி /ஈழ எதிர்ப்பாளனாகவே இருந்துவிட்டுப் போகட்டும்.

"வடலியடி" சயந்தன் "உங்கள் தலைவர்" பற்றி வன்னிக் கோபம் பற்றி எழுதியிருந்தார். ஏன் இப்படியிப்படிப் போனால் இப்படியிப்படி ஆகும் என்று உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கவில்லையா? சிங்கள ஆமியின் பயத்தில் தானே அப்போதெல்லாம் உங்கள் அக்கா கேட்டு வீட்டிலிருந்து தண்ணியள்ள வரும் "அவர்கள்" எல்லாம் "உங்கள் தலைவரின்" குண்டிக்குப் பின்னால் போனவர்கள்.

அவர்கள் போராடினார்கள். அவர்களால் முடியவில்லையென்றால் ஆறுமாதம் முன்னால் அவர்களை"முடித்து" விட்டு நீங்கள் தப்பிக் கொள்ள விட வேண்டுமாக்கும். அவர்கள் என்ன நீங்கள் காசு கொடுத்து "கூலி" வேலை செய்தவர்களா?

அவர்களுக்கு முடியவில்லை என்று தெரிந்தபோது தப்பிக்க விரும்பியிருந்தால் தப்பியிருக்க வேண்டும். யாரும் உங்களை வரவேற்காத படியால் தானே அவர்களின் நிழலில் ஒதுங்கி ஓடினீர்கள். இப்போது மட்டும் ஏன்? வாழ்விலும் தாழ்விலும் நேர்மையில்லாத விமர்சனங்களை வைக்கும் நீங்கள் என்னவிதமான மனிதர்கள்.

தோசையத் திருப்பிப் போட எப்போதடா சந்தர்ப்பம் வரும் என்று காத்திருக்கும் இந்தியர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் நீங்களுமா? யூ ட்டூ... என்று தான் கேட்கத் தோன்றுகின்றது. இதில் மனத் தடை வேறாம்.

எனக்கு எந்த மனத் தடையும் இல்லை.. புலிகளுடன் சேர்ந்தவனும் இல்லை... அவர்களுக்கெதிராக ஆயிரம் கேள்விகளுடன் இருப்பவன்... ஆனால் அவர்கள் சோற்றுக்கு மாரடிக்கவில்லை... உங்களை மனிசராக வாழ வைக்க சிலுவை சுமந்தவர்கள். அவர்கள் ஆறு மாசம் முன்னால் அல்ல ஆறு வருடம் முன்னாலும் இறந்து கொண்டிருந்தவர்கள் தான் ..உங்களுக்காக...

"உங்கள் தலைவன்.." பாவம் பிரபாகரன் இப்படிப்பட்டவர்களைத் தான் "தன் மக்கள்" என்று போராடினான். துரதிர்ஷ்ட சாலி.

20ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த தியமன் சதுக்கம் பற்றிப் பேசுகின்றார்கள்... 20 ஆண்டுகளுக்கும் மேலாக தினம் சாகும் இவர்கள் ... நினைவிலிருந்து அகற்றப்பட்டவர்களா?

"இரத்தமும் வேதனையும் இல்லாது சுதந்திரமில்லை.."

அழகிரி வடைகறி ஆன கதை


நம்ம அப்பி ஒரு பதிவு போட்டிருக்காப்ல. உலக மகா முக்கியமானது அந்தப் பதிவு.பேட்டை ரவுடி ..நாட்டு ரவுடி ஆகும் முஸ்தீபு அது... டில்லி வரை ரவுசு விட ஆரம்பிக்க...ஹைய்யோ ஹைய்யோன்னு கைதட்டல் ஆரம்பிச்சாச்சு... விசிலடி வேறு..

தனிப்பெட்டி போட்டு காலேஜிப்பசங்க ஊட்டுக்கு வாராங்க அதிரடி ஒண்ணு. அப்படியே மதுரைய மீட்ட சுந்தர பாண்டியன் வன்னிப்பக்கமும் ரயில விட்டு முகாமில இருக்கிர மக்களையும் மீட்டு வந்தா நல்லா இருக்கும்.அவ்வளவு துன்பத்தில நொந்து போயிருக்காங்க.

நம்ம கருப்பு கண்ணாடி கழட்டாத கலைஞரு பூங்காவுக்கு நாடா வெட்டிக்கிட்டிருக்காரு.. நாடா எல்லாம் கிடையாது... காலில் எழுந்து நிற்க முடியா தள்ளாமையிலும் காரில் உட்கார்ந்து ரிமோட்டில் ஓபனிங் செய்யுராரு... பொக்கரானில் குண்டு போட்ட கலாமு வீட்டிலிருந்தே ஓபனிங் செய்யும் வசதிகளைச் செய்து கொடுத்தால் நன்றாகவிருக்கும்..

இனி கார் வரை நடந்து செல்ல முடியாவிட்டாலும் கடைசி வரை முதல்வர் அவர் தானே.. அவருக்காக இது கூட செய்ய முடியாத விஞ்ஞானிகளா ஏரோ பேஸில ராக்கட் விடப்போராங்க..

அப்புரம்.. 40 க்கு 40 நாறிப்போனதால் ஜெயலலிதா அடிப்படை மெம்பர் கார்டு வித்துக்கிட்டிருக்காங்க. அடுத்த தேர்தல் வரை கொரநாட்டில போய் ஓய்வு எடுப்பதைத் தவிர அவுங்களுக்கு வேலையே இல்லாததால சுய வேலை உருவாக்கிக்கிட்டு இருக்காங்க.. சுய வேலை வாய்ப்புத் திட்டம்.. ம்.ம்.. உட்கார்ந்து யோசிக்கிராங்க..

அடுத்தது நாற்காலி காலியாகாது போக ஸ்டாலின் நச்சரிப்பு தாங்காம துணை நாற்காலி போட்டு கொடுத்திருக்காங்க.. நம்ம சார்லஸு இத்தனை படு கிழடு ஆகியும் இன்னும் இளவரசர் தான்.. மன்னர் ஆகாமலே இறந்து போகப் போகிரார். அம்மா அசைந்து கொடுக்க மாட்டேங்கிராங்க...இதை எலிஸபெத் கிட்ட இருந்து க.க.க.க.க கத்துக்கிட்டாரா(அட எத்தனை க...கருப்பு கண்ணாடி கழட்டாத கலைஞர் கருணாநிதி...)அல்லது க.க.க.க.க விடமிருந்து எலிஸபெத்து அம்மா கத்துக்கிட்டாங்களா?

இதே போக்கில் போனால் நம்ம அழகிரியும் ஒரு இணை நாற்காலி போட்டு பக்கத்திலேயே உட்கார வேண்டியது தான்..

இருக்கப்பட்ட அமைச்சர்களிலேயே மம்தா தான் ஏழை அமைச்சராம்..சில லட்சம் ரூபாதான் சொத்து வைச்சிருக்காங்களாம். அடுத்த தேர்தலுக்கு இடையில் கோடீஸ்வரி ஆகிடுவாங்களாம். ரயிலில போர நம்ம காசுதான் அவங்களைக் கோடீஸ்வரி ஆக்கப்போகுது..

இந்த அப்பா மகன் பாசம் ந்ம்மாளுங்களுக்கு மேலா வட நாட்டிலும் இருக்கு.. சிபு சோரன் தன் மகனின் கடைசி ஆசையை நிரைவேத்தப் போறாராம்.. அட இந்த அரசியலில இருக்கிரவங்க 'மக்கள்'னா தன் சொந்த மக்களையே நினைச்சுக்கிராங்க..

அழகிரிக்கும் அடிப்படை மெம்பர் காட்டு விற்கும் திட்டம் இருக்கான்னு கேட்டுச் சொல்லுங்க... நானும் ஒரு துண்டைப் போட்டு இடம் பிடிக்கத்தான்... "நம்ம" எதிர்காலம் அங்க தான் இருக்கு... க.க.க.க.க விற்கு பிறகு அழகிரி வடை கறி தான் அதிகம் விற்கும்.

எழுதி வெச்சுக்குங்க ஸ்டாலினை எல்லாம் நாடு கடத்தி விட்டு அழகிரி அண்ணாச்சி அசராம அடிப்பாரு... நம்ம எம்.ஜி.ஆர் மாதிரி சத்துணவிற்கு முட்டை கொடுக்கிர மாதிரி ..எல்லாம் புஜ பல பராக்கிரமந் தான்.

ஸ்டாலின் அவுரங்க சீப்பா மாறி சாஜகான் போல க.க.க.க.க வை வீட்டுக் காவலில் வைத்து ஆண்டால் தான் உண்டு.. அப்புறம் எல்லாம் அழகிரியின் வடை கறி தான்... அப்பா.. இப்பவே வாசனை மூக்கைத் துளைக்கிரதே...

Friday, May 29, 2009


ஷோபா சக்தி என்ற பொறுக்கி அரசியல்


பொறுக்கி அரசியல் புனைதல் அரசியலை நிகழ்த்துவதில் நம்மவர்கள் என்றுமே சோடை போனவர்கள் அல்ல. தமிழ் மக்களின் இத்தனை படு கொலைகளுக்கும் சிங்களச் சிறிலங்காவின் இனவாத அனல் மூச்சு மட்டுமே காரணமென சர்வதேசமும் அறிந்திருக்க கீழ்த்தரப் புனைவு வாத அரசியல் செய்யும் இவர்கள் புலிகளின் பாசிசம் என்ற போர்வைக்குள் தங்கள் சொறி சிரங்கு படை குட்டைகளுடன் பதுங்கிக் கொள்கின்றனர். 70. 80 ஆம் ஆண்டு அரசியல் சிதிலங்களுடன் இன்றும் முகமூடி பூண்ட முட்டாள்களாக அரசியல் பேசிக்கொண்டிருக்கும் அறிவிலிகள் இவர்கள்.

என் கோபத்தின் வீரியத்தைப் பதிவு செய்யும் கடுமை என் தமிழில் இல்லை என்பதே முதல் முறை தமிழ் மீது கோபம் கொள்ள வைக்கின்றது. இத்தனை இலட்சோபம் தமிழர்களின் சாம்பலையும் ஊதித்தள்ளிய சிங்களப் பொறுக்கி அரசியல் பற்றிப் பேச முள்ளந்தண்டில்லாத இப்பிறவிகள் எல்லாம் இதற்கும் மேலாக என்ன ஒரு மனிதாபிமானத்தைக் கண்டறியப் போகின்றார்கள். தன் தாயைத் தன் தங்கையைப் புணரும் சிங்களவனை விட தன் தம்பியைச் சித்திரவதை செய்யும் அல்லது செய்வதாகச் சொல்லப்படுவது உலக மகாபாதகம் என சொல்லும் இவர்களை உலக மகா மாகாத்மாக்களாக யார் அரிதாரம் பூசி வைத்திருப்பது.

இன்று உலகமும் சிங்கள இனவாதப் பேயும் தமிழர்களின் குருதி இறைந்த மணல் வெளியெங்கும் அடையாளங்களை மறைக்க முயலும் வேளை கும்மாள அரசியல் பேசும் இவர்களையும் சேர்த்தே புதைக்கும் வெறி தமிழர்கள் மனதில் உற்பாதம் கொண்டெழட்டும்.


குறிப்பு: ஒரு மலேசிய நண்பர் எடுத்த பேட்டியில் தான் அத்தனை விஷங்கள்.. பார்த்தவர்கள் தொடர்பை இணைத்து விடுங்கள்.. உங்களுக்கு புண்ணியமாகப் போகட்டும்..

Wednesday, May 27, 2009


இந்தியன் என்பவன் தமிழனின் எதிரியே



இதில் எங்கே சைவன் வைஸ்ணவன் இருக்கின்றான்?

ஒரு அனானி நண்பன் ரொம்பவும் கடுப்பேத்தி விட்டார். அகதி நாய்களே என்று வசவு வேறு. அடிமையாய் இருப்பதை விட அகதியாய் இருப்பது எவ்வளவோ மேல்.அடிமை சுதந்திரம் அற்றவன்.அகதி முகவரி அற்றவன். ஆனால் நண்பர் எண்ணுவது போல ஈழத்தமிழன் புலம் பெயர்ந்தவன் இன்று அகதி அல்ல. அந்த அந்த நாடுகளின் குடியுரிமை பெற்றவன். அவனால் ஐரோப்பாவில் எங்கு வேண்டுமானாலும் சுற்றலாம். அமெரிக்கா போகலாம் கனடா போகலாம் அவுஸ்திரேலியா போகலாம்.

இந்நாடுகளுக்கு விசா தேவையில்லை அல்லது பெறுவது ஒன்றும் தடையல்ல. ஆனால் நீங்கள் இருக்கும் அடிமை தேசம் இந்தியாவின் பாஸ்போட்டுடன் நாட்கணக்கில் கியூவில் நிற்பது எமக்குத் தெரியும்.

இந்தியா என்பதற்கு தமிழில் ஏதாவது அர்த்தம் இருக்கின்றதா? இந்து என்பவன் தமிழனாய் இருக்க முடியாது. தமிழன் என்பவன் சைவன் அல்லது வைணவன் அல்லது சமணனாய்க் கூட இருக்கலாம். ஆனால் இந்து ,ஹிந்தி என்பவனே இந்தியன். இந்தியன் என்று சொல்லும் தமிழனோ மலையாளியோ கன்னடனோ இந்தியன் கிடையாது. அவன் ஹிந்தி பேசும் வட நாட்டவன். அவனைப்போல சிவந்த தோல் வேண்டும் கூர்ந்த மூக்கு வேண்டும். உன் பெண்களுக்கு அகன்று விரிந்த பின்பக்கம் வேண்டும் .மதர்த்துச் செழித்த மார்பகம் வேண்டும் .உயர்ந்து நெடுத்த உருவமும் அகன்று விரிந்த மார்புகளும் வேண்டும்.


அதுவெல்லாம் இல்லாத கறுத்து குட்டையான நீ மதராசிதான் இட்லியும் சாம்பாரும் சாப்பிடும் நீ ஒரு காலும் இந்தியனாக முடியாது. இந்த அனானி நண்பர் தமிழ் நாட்டின் எல்லையைத் தாண்டிப் போயிருக்கும் அனுபவம் கிடைக்காதவர் என்று தான் படுகின்றது. உலகம் பெரியது. அடிமையாய் இருப்பதை விட அகதியாய் இருப்பது கேவலமல்ல. அடிமையாய் இருக்க விரும்பாத எதிர்ப்பைக் கொண்டதனாலேயே சுரணை உள்ளதனாலேயே அகதி நிலை.

இன்று புலம் பெயர்ந்த தமிழரெல்லாம் அந்த அந்த நாட்டில் சகல உரிமையும் கொண்டவர்கள். இல்லையென்றால் கூட உனக்கு இந்தியாவில் என்ன மதிப்போ அதை விட மேலானது தான் அவர்களுக்கு உள்ளது. அவர்களின் குரலுக்கு மதிப்புக் கொடுக்க வேண்டியதன் நிர்ப்பந்தமே இன்று மேற்கு நாடுகள் சிறிலங்காவிற்கு எதிராக கொண்டு வந்த பிரேரணை. ஈழத்தமிழனால் இன்னும் இன்னும் சாதிக்க முடியும். எம் சந்ததி முற்று முழுதான இந்நாடுகளின் பிரஜைகள். இன்று சிறிலங்காவிற்கு எதிராக வாக்களித்த நாடுகளை எடுத்துப் பார். அத்தனை நாடுகளிலும் அகதித் தமிழன் அந்தஸ்துடன் வாழுகின்றான். அவர்களைப்போல வரி கட்டுகின்றான்.ஆனால் உன்னைப் போல அவன் தான் யார் என்பதை மறந்து விடவில்லை. அதனாலேயே அவர்கள் தாங்கள் தமிழன் என்பதை மறந்து விடாது போராடுகின்றார்கள். நீ ஒரு குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுகின்றாய். உன் பெருமை என்ன? தன் பிள்ளைகளின் பதவிகளுக்காய் டில்லிக்கு காவடி தூக்கும் முதலமைச்சர்.ஆனால் நீ அகதி நாய்களே என்று சொல்லியவர்கள், அவர்கள் இன்றும் என்றும் தமிழர்களே. அதனாலேயே இத்தனை போராட்டம்.

இன்று இந்தியா தமிழனை ஒடுக்கி இருக்கலாம். ஆனால் இது ஒரு ஆரம்பமே . இந்தியா இனிமேல் தான் பல பிரச்சினைகளைச் சந்திக்கப் போகின்றது. இந்திய மேலாதிக்கத்தின் ஒவ்வொரு தடைக்கல்லும் தமிழனே. தமிழ் என்ற உணர்வில் இருந்து தான் அது வெளிப்படவிருக்கின்றது. இறந்து பட்ட அல்லது கொன்று போட்ட ஒவ்வொரு உயிர்களுக்கும் இந்தியா இனி பதில் சொல்லியே ஆக வேண்டும்.

Tuesday, May 26, 2009


சோதா இந்தியாவும் தாதா இஸ்ரேலும்


நடக்குமென்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்து விடும். பல விடயங்கல் வாழ்க்கையில் இப்படித்தான் ஆச்சரியம் ஏற்படுத்துகின்றன.எதிர்பாராத இடங்களிலிருந்தும் உதவிகள் வந்து கொட்டும். ஈழத்தில் சிங்களப் பேயாட்சி கட்டவிழ்த்து விட்டிருந்த இனப்படுகொலை அராஜகமானது அநீதியானது என்பதை அனைவரும் ஏர்றுக்கொள்ளத் தொடங்கி விட்டனர். அத்தனை தூரம் அந்தக் கொடுமைகள் மூடி மறைக்க முடியாதளவு விசுவரூபம் எடுக்கத் தொடங்கியிருக்கின்றது.

21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய மனிதப்படுகொலையாக இது நிகழ்ந்து முடிந்திருக்கின்றது. எத்தனையோ தடைகளையும் மீறி பிரித்தானியாவினதும் டென்மார்க்கினதும் பெரு முயற்சியில் சிங்களச் சிறிலங்காவிற்கு எதிரான விவாதம் ஐ.நாடுகள் மனித உரிமைச் சபையில் இன்று நடக்கின்றது.

17 நாடுகளின் ஆதரவை பல முயற்சிகளின் பின்னர் டென்மார்க் வென்றெடுத்திருக்கின்றது. இதில் மாக்ஸிஸ பேராளர்களோ அகிம்சாவாதிகளோ இப்படுகொலைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை என்பது தான் ஆச்சரியமானது. அதுவுமல்லாது படுகொலைகளைப்புரிந்த பேயாட்சியைக் காப்பாற்ற முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன.

அகிம்சையின் தேசம் அண்ணன் இந்தியா தன் எதிரிகளான சீனா,பாகிஸ்தான் போன்றவற்றுடன் கைகோர்த்து பாசிச சிங்களப் பேயரசை கட்டிக்காக்க முன்னிற்பது உலகத்தின் ஒன்பதாவது அதிசயம்.

அகிம்சை தேசம் உலகின் பெரிய ஜனநாயக(?) நாடு ...தன் உண்மை முகத்தைத் தோலுரித்திருக்கின்றது. அந்தச் சாதனையைச் செத்தும் செய்திருக்கின்றார்கள் ஈழத்தமிழ் மக்கள். இந்தியா, பாகிஸ்தான், ரஸ்யா, சீனா, கியூபா, எகிப்து, சவூதி அரேபியா, நிக்கரகுவா, பொலிவியா என்றவாறு இந்த ஓநாய்கள் கூட்டம் சிங்கள வெறிநாய் அரசை பாதுகாக்க சுர்றி நின்று ஊளையிடுகின்றன.

இந்த அநியாயத்தை தட்டிக்கேட்க மனித நேயத்தைக் காக்கும் எந்தவொரு உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புகளும் முன்வரவில்லை.

ஆனால் யாராலும் இதுவரை ரசிக்கப்படாத ஒரு நாடு முன்வந்திருக்கின்றது. அது தான் இஸ்ரேல்.


//சிறிலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார நிறுவனமும் விசாரணைகளை நடத்தவேண்டும். அதற்கான குழுவினரை அவர்கள் அனுப்ப வேண்டும்.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை சிறிலங்காவுக்கு வழங்குவதை எதிர்த்துள்ள இஸ்ரேல், சிறிலங்கா மீது அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்// எனக் கோரிக்கை விடுத்திருக்கின்றது.

மனித உரிமைகளை அதிகம் மதிக்காத இஸ்ரேலின் இதயத்தையே நொருக்கி நெகிழ்வடையச் செய்த இக்கோரக் கொலைகள் சமதர்மக் காப்பாளர்களையும் அகிம்சையின் முகமூடிகளையும்
மனம் நெகிழ்ந்தே கொடுக்கச் செய்யவில்லை.

இன்னும் சொல்லிக்கொள்வோம் உலகின் பெரிய ஜனநாயகம், மனித குலத்தை மீட்க வந்த மாக்ஸிஸம் என்று. காட்டு மிராண்டிகள் கூட இவ்வளவு தன் மனித இனத்தைக் கொண்டு போட்டிருக்க மாட்டார்கள். ஆனால் நாகரீக வேஷம் போட்ட நாங்கள் இதுவும் செய்வோம் இதற்கு மேலும் செய்வோம்.

Monday, May 25, 2009


பொறந்தாலும் இப்படி ஒரு அப்பனுக்கு..

ஆசை ஐயா என் தணியாத ஆசை.. பொறந்தாலும் இப்படி ஒரு அப்பனுக்கு மகனாகப் பொறக்க வேணும்...கவிதை எழுதத் தெரிந்திருக்கோணும்.. தமிழைப் பிழிந்து கடிதம் எழுதத் தெரியோணும்... மாங்காமடையனுகள்( உடன் பொறப்புகள்)தலையில் முளகாய் அரைக்கவும் தேவையற்ற போது அசமந்தமாக தந்தி அடிக்கவும் தேவைப்படும்போது தொலைபேசியில் தொல்லை கொடுக்கவும் தெரிந்திருக்கோணும்...

இப்படி ஒரு அப்பன் கிடைக்காத காரணத்தால் ஆணி புடுங்கிக் கொண்டிருக்கும் லட்சோப லட்சம் பேரில் நானும் ஒருவன் என்பதால் அடுத்த பிறவியில் பிறக்க வேண்டிய அல்லது என்னைப் பொத்துப் போட வேண்டிய அப்பனின் தகுதிகள் குறித்து ஆராய்ந்த போது எனக்குப்பட்டது. திருக்குறள் தெரிந்திருக்கோணும் ..பொழிப்பு எழுதலாம் ஆனால் பொழைப்பாய் வைத்திருக்கக் கூடாது..இலக்கியம் தெரிந்திருக்கோணும்.. பேசலாம் எழுதலாம் ..என்ன இழவோ அதை வாழ்க்கையாய் நினைக்கக் கூடாது.. தேவைப்படும் போது தெளித்து விடும் அத்தர் போலும் தேவைப்படாதபோது போட்டு மூடி விடும் பொணம் போலவும் இருக்க வேண்டும்... அத்தனையிலும் காசு பார்க்கும் திறன் வேண்டும்...

அதுதான் இன்று ஒரு பக்கா ரவுடியை மக்கள் பிரதிநிதியாக்கியது.. மாண்பு மிகு அமைச்சராக டில்லி வரை அனுப்பி வைக்கின்றது

"தந்தை மகற்காற்றும் உதவி-அவையத்தில்
முந்தியிருக்கச் செய்யும் செயல்"

அடடா வள்ளுவனும் சொல்லிவிட்டான்।காப்பியடிக்கின்றான் கறுப்புக் கண்ணாடி ஜோராக வெளிக்கிட்டிருக்கின்றது மு.க அழகிரி காந்தி ஜோடி.


ஜோராய் கிளம்பிட்டாங்க


அப்பன் விட்ட அறிக்கையில் கலந்து விட்டிருப்பது தான் பேதி கொடுக்கும் "பார்முலா" யுக்தி. அதை அந்த அப்பனின் வரிகளிலேயே தந்து விடுகின்றேன்.

//தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு "பூஜ்யம்'தான் கிடைக்கும் என்று தில்லியில் உள்ள மீடியாக்கள் கருத்து வெளியிட்டன. அவற்றின் பொய்ப் பிரசாரத்தை உடைத்து, தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெரும்பான்மை பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டது.

இதையொட்டி, கூட்டணியின் சார்பில் அமையவுள்ள மத்திய அமைச்சரவையில் திமுக பங்கேற்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிரணாப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத், அகமது படேல் ஆகியோர் தில்லியில் என்னை (கருணாநிதி) சந்தித்தனர்.

காங்கிரஸ் இந்த முறை கையாளவிருக்கும் புதிய "பார்முலா' பற்றிக் கூறினர். அதுகுறித்து, கட்சியின் செயற்குழுவிலோ, உயர்நிலை செயல் திட்டக் குழுவிலோ சென்னை சென்று கலந்துதான் முடிவெடுக்க முடியும் எனத் தெரிவித்தேன்.

அதன்பின், தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமரும் அமைச்சரவையில் திமுக பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். பிரதமரின் விருப்பத்தின் பேரில், கட்சியின் உயர் நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்களோடு கலந்து பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, கட்சியின் அமைச்சர்கள் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்பின், தொலைபேசியில் திங்கள்கிழமை மாலை என்னுடன் (கருணாநிதி) பிரதமர் பேசினார். கட்சியின் சார்பில் பரிந்துரைத்த பெயர்கள் அனைத்தையும் ஏற்பதாகத் தெரிவித்தார்.

செவ்வாய்க்கிழமை மாலை நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவுக்கு அவர்கள் (அமைச்சர்கள் பட்டியலில் உள்ளவர்கள்) வர வேண்டுமெனவும் கூறினார். இதற்கு அவருக்கு நன்றி தெரிவித்தேன்' //

எனக்கெல்லாம் இதை வாசித்து வாந்தி பேதி தான் வந்திருக்கின்றது. ஆனாலும் கண்டிப்பாக அடுத்த பிறப்பென்றொன்று இருந்தால் இப்படிப்பட்ட அப்பனுக்கு மகனாக பிறக்க வேண்டும் அல்லது பிறப்பில்லாத நிலை வேண்டும்.

Sunday, May 24, 2009


சிந்தனைக்குப் பரிசு .. கண்டிப்பாக உண்டு

முகவின் இரண்டாவது மூன்றாவது மனைவிகள் "உர்" என்று இருப்பதற்கு மூன்று காரணங்கள்..? (படத்தைப் பெரிதாக்கி பார்க்கலாம் ..தைரியமுள்ளவர்கள்)






இவர் அரசர் என்றால் முக & ஸ்டாலின் நிலை என்ன?







இந்த வீடியோவைப் பார்த்து தோன்றுவது என்ன?




குறிப்பு: கண்டு பிடித்ததை எழுதுங்கள்...சிறந்தனவிற்கு பரிசு காத்திருக்கின்றது

தமிழகத்தை மீண்டும் காங்கிரஸிற்கு தாரை வார்க்கும் தி..மு..க


கொள்கையிலிருந்து பிறழ்ந்து போவது ஒரு சில சமயங்களில் நடப்பதுதான். கொள்கையே இல்லாது நடந்து கொள்வது என்பது தற்கொலைக்குச் சமமானது. இன்று தி.மு.க வின் நிலையும் அவ்வாறு தான் இருக்கின்றது. குடும்பத்திற்கான கட்சி என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

ஏழு ஆறு ஐந்து என்று இலக்கங்கள் மாறிக்கொண்டிருந்தன. இலக்கங்கள் தீர்மானிக்கப்பட்டபோது முகங்கள் தீர்மானிக்கப் படுவதில் தாமதம் ஏற்பட்டது. கடந்த அரசில் காபினட் தரத்தில் இருந்த டி ஆர் பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் வகையறாக்களுடன் புதிய நட்சத்திரங்களான அழகிரி, கனிமொழி போன்றோருக்கும் மந்திரிப் பதவிகளைத் தேடிப்பிடிப்பதில் மு.க வின் டங்குவார் கழன்று போய் விட்டது.

டி.ஆர் பாலுவிற்கு மக்கள் அவைத் துணைத்தலைவர் பதவியுடன் ஒருவாறு சுமுகமான முடிவிற்கு தி.மு.க வின் குடும்ப அரசியல் வந்திருக்கின்றது. ஆ.ராசா,தயாநிதி மாறன்,அழகிரிக்கு காபினட் அந்தஸ்துடனான அமைச்சர் பதவிகளும் கனிமொழிக்கு தனி இலாகாவுடன் கூடிய இணை அமைச்சர் பதவிகளும் மற்றும் மூன்று துணையமைச்சர் பதவிகளும் தமிழர்களுக்கான தி.மு.க வின் உயிரைத்துச்சமாக மதித்த போராட்டத்தின் மீது வாய்க்கப் பெற்றிருக்கின்றது. உடன் பிறப்புக்கள் இனி நாளுக்கு மூன்று பதிவுகள் மூலம் தி.மு.க வின் வரலார்றுப்பெருமை மிக்க வெற்றியைக் கொண்டாடலாம்.

இவ்வெற்றிக்கான விலையாக காங்கிரஸ் 1967 இற்குப் பின்னர் மீண்டும் தமிழகத்தின் ஆட்சியதிகாரத்தில் பங்கு கொள்ளப்போகின்றது.

234 இடங்களில் தி.மு.க கொண்டிருப்பது 163 இடங்கள்.பெரும்பான்மைக்குத் தேவைப்படுவது 22 இடங்கள். அதை தி.மு.க விற்குக் கொடுத்துக் கொண்டிருப்பது காங்கிரஸ் கட்சி. 18 இடங்களை வைத்திருக்கும் தி.மு.க விற்கு 3 கபினட் அமைச்சுகள் ஒரு தனி இலாகா இணையமைச்சர் பதவி மூன்று துணையமைச்சர்கள் ஒரு துணை அவைத்தலைவர் பதவி என்னும் போது 22 இடங்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கும் காங்கிரஸிற்கும் மந்திரிப் பதவிகள் கொடுக்க வேண்டியதும் நியாயமானது தானே.

காங்கிரஸை தமிழகத்தில் இருந்து அடியோடு அடித்து விரட்டிய அண்ணாவின் கட்சியே அல்லது அவரின் உடன்பிறப்பு அல்லது சிஷ்யப்பிள்ளையே மீண்டும் காங்கிரஸைத் தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவது அழகிய முரண்நகையே. கொண்டு வர முடியாது என்று நீங்கள் முரண் பிடித்தால் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமிழகத்தில் தேர்தல் வரக்கூடும்.

இத்தனை சுவையான விடயங்களை வைத்து வேண்டும் வேண்டாம் கூடும் கூடாது என்று உடன் பிறப்புக்கள் நாளுக்கு 10 அல்லது அதற்கு கூடுதலான பதிவையும் போடக் கூடும்.

புலிகளின் தலைவர் எங்கே?


சராசரித் தமிழனுக்குள்ள கேள்விகள் தான் என்னிடமும் தொக்கி நிற்கின்றன. சிங்களச் சிறிலங்காவின் "படங்காட்டல்" பற்றி நிறையவே சந்தேகம் இருக்கின்றது. சாதாரண புலி வீரர்களையே "அம்மணமாகப்" போட்டு ஷோக்காட்டிய சிங்கள வெறுப்பு வாதம் புலித் தலைவரின் உடல் கிடைக்கும்போது அவ்வளவு கமுக்கமாக எரித்து கடலில் கரைத்து விடாது.
சிங்களப் படைத் தளபதியினதும் சிங்கள அரசியலாளர்களினதும் முன்னுக்குப் பின்னான வெளிப்படுத்துகைகள் என் சந்தேகத்தை இன்னும் இன்னும் விரித்துச்செல்கின்றன.

ஆனாலும் இன்று பிரபாகரன் சுயமாக இல்லாது "சூழ் நிலை"க் கைதியாக எங்கோ ஒரு இடத்தில் முடக்கப் பட்டிருக்கின்றார். பிரபாகரனின் இறப்பு பற்றி முன்னுக்குப் பின்னாக அறிக்கை விடும் செல்வராஜா பத்மநாதன் தன்னும் சுயமாக இயங்குகின்றாரா? என்பதைப் பரிசீலனை செய்து கொள்வது தமிழீழ அனுதாபிகளுக்கு நன்மை பயக்கும். அவரும் ஒரு சில சக்திகளின் "ஆசையை" முன்மொழியக் கூடும் அல்லது அடிபணியக் கூடிய நிலையில் இருக்கக் கூடும்.

பத்மநாதனின் அறிக்கையையே மறுதலிக்கக் கூடிய அளவிற்கு அறிக்கைகள் விடுமளவிற்கான "தொடர்புகளை" வைகோ மற்றும் நெடுமாறன் கொண்டிருக்கக் கூடும். அப்படியான தொடர்புகளை புலித் தலைமையும் கடைசி வரை பேணவே விரும்பும்.

இவ்வகையான முரண்பாடுகளூடான தகவல்கள் புலித் தலைவர் ஒரு "சூழ்நிலைக்கைதி"யாக இருப்பதான சந்தேகத்தைத் தான் அதிகரித்துச் செல்கின்றது. நம்பக்கூடாத "சக்தி"களை நம்பியதால் புலித் தலைமை இவ்வாறான ஒரு இக்கட்டை அடைந்திருப்பதாக நிறையவே நம்பிக்கை கொள்ளலாம்.

எது எவ்வாறாக இருந்த போதும் புலித் தலைமையின் உயிர் வாழ்தல் அல்லது இறப்பு அடுத்து வரும் சர்வதேச நாடுகளின் அரசியல் காய் நகர்த்தலிலேயே தங்கியிருக்கின்றது. மேற்கு நாடுகளின் மேலேயே இதற்கான சந்தேகங்கள் குவிந்திருக்கின்றன. மேற்கு நாடுகளின் நலன்களை அனுசரிக்கக் கூடிய அரசியல் முடிவுகளை புலிகள் எதிர்வரும் காலங்களில் எடுப்பது புலித்தலைமையை உயிரோடு மீட்டுவரக்கூடும்.

இன்று வரை புலித்தலைமை உயிருடன் இருக்கின்றது என்பதே என் கணிப்பு. சீனாவுடனான அவர்களின் போராட்டம் சிங்களத்துடனான எமது போராட்டத்துடன் நேர் கோட்டில் இப்போது சந்திக்கின்றன. எதிர்வரும் ஈழப்போர் இந்த நேர் கோட்டில் இருந்தே ஆரம்பிக்கப்படக் கூடும்.

(இது எனது கருத்து மட்டுமே)

என்ன செய்யப் போகிறாய் தமிழினமே


உலகத்தின் மிகத் துயரப்பட்ட இனமாக ஈழத்தமிழினம் இப்போது மாறியிருக்கின்றது. நடந்து முடிந்த யுத்தத்தின் அத்தனை சுமைகளையும் முதுகினில் சுமந்து அழுது கரையும் அவலத்தில் மூழ்கியிருக்கின்றது. இழப்புகளையும் இயலாமையையும் சேர்ந்து சுமப்பதென்பது வாழ்க்கையின் மிகத் துன்பமான கணங்கள்.

அதுவே இன்று புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழினத்திற்கு வாய்க்கப் பெற்றிருக்கின்றது. சேர்ந்து அழும் துர்ப்பாக்கியத்தை தமிழக மலேசிய சிங்கப்பூர் என்று உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஓடி உதவி செய்ய இயலாத கையாலாகாத் தனத்தில் கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஏதாவது அதிசயம் நடக்காதா? துன்பப்படும் நம் சகோதரர்களைக் காக்க மாட்டார்களா என்ற அங்கலாய்ப்புடன் உலக நாடுகளையும் மனிதாபிமான அமைப்புகளையும் எதிர்பார்ப்பதுடன் ஆண்டவனின் கருணையையும் வேண்டிக் கையேந்தும் பிரார்த்தனைகளுடன் காலம் நகர்கின்றது.

உதவி நிறுவனங்களின் கணக்குப்படி 2 இலட்சத்தில் இருந்து 3 இலட்சம் வரை இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதியிற்கு இடம் பெயர்ந்து முகாம்களில் அடை பட்டிருக்கின்றார்கள் என்று நிறுவப்பட்டிருக்கின்றது. இதில் 25000 இலிருந்து 30 ஆயிரம் வரை ஆனவர்கள் செயற்கைக்கால்களோ நகரும் நாற்காலிகளோ இன்றி நகர முடியாத பெருங்காயம் பட்டவர்கள் அல்லது அங்கவீனர்கள் என்று சர்வதேச அங்கவீனர் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி சதீஸ் மிஸ்ரா தெரிவித்திருக்கின்றார்.

உடனடி வைத்திய பராமரிப்பு மற்றும் செயற்கை உறுப்புகள் பொருத்தப்படும் தேவையுள்ள இவர்கள் சுகாதார வசதிகள் அற்ற முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது பற்றி விசனம் தெரிவித்துள்ளார்.

இப்போது எங்கள் முன்னால் ஒரு கேள்வி இருக்கின்றது. சர்வதேச நாடுகளை அல்லது யாரோ ஒரு இரக்கவானின் கருணையை எதிர் பார்த்து நாம் காத்திருக்கப் போகின்றோமா? அல்லது அவர்களுக்கு உதவி செய்யும் வழிவகைகளைப் பற்றி யோசிக்கப் போகின்றோமா?

இந்திய அரசியலில் "துக்ளக்" ஆகும் ஆனந்தவிகடன்



மனிதாபிமானம் காருண்யம் எல்லாவற்றையும் மறந்த மரத்துப்போன இந்திய அரசியல்வாதிகளிடம் புத்தனின் அவதாரமாகப் போதிக்கப் புறப்பட்டிருக்கின்றது ஆனந்த விகடன். எல்லா அத்து மீறல்களையும் இந்தியாவின் "இறைமையின்" பேரால் மூடி மறைத்து குழி தோண்டிப்புதைக்கும் அரசியல் வாதிகளிடம் என்ன மாற்றத்தைக் கொண்டுவர ஆனந்த விகடன் முயல்கின்றது என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

எத்தனையோ ஈழத்தமிழர்களின் பிணத்தின் மீது அமைச்சுப்பதவிகளைக் கனவு கண்டு பேரம் பேசிக்கொண்டிருக்கும் கலைஞர் முதல் யாருக்கும் வெட்கம் கிடையாது.

மக்களுக்குப் பயந்த மனச்சாட்சியுடன் அரசியல் செய்யும் நேர்மையாளர்கள் இல்லாத இந்தியாவில் இது வெறும் உபதேசமாகத்தான் சென்றடையப்போகின்றது. விழலுக்கு இறைத்த நீராகப் போவதற்கு ஒரு பலம் வாய்ந்த நீண்ட அனுபவங்களைக் கொண்ட ஆனந்தவிகடன் நிறுவனம் தேவையில்லை.

அரசியல்வாதிகளிடம் கொண்டுவரவேண்டிய மாற்றங்களை மக்களிடம் செல்வதால் மட்டுமே சாத்தியமாக்கலாம் என்ற உண்மையை மக்கள் செல்வாக்கு மிக்க ஆனந்த விகடன் மறந்து போனது துர்ப்பாக்கியமே.அல்லது மற்றவர்களைப் போலவே தன் கடமையையும் பட்டும்படாமல் "சொல்லி" விட்டு ஒதுங்கும் பொறுப்பற்ற தனத்துடன் நடந்து கொள்கின்றதா? என்ற கேள்வியும் எழுகின்றது.

அண்மைக்காலங்களில் மக்கள் மீது நம்பிக்கை கொண்ட ஜனநாயகப் பண்புகளைக் கட்டிக்காக்க ஆனந்தவிகடன் எடுத்து வரும் முயற்சிகளையும் ஒதுக்கி விட முடியாது.

முதுகெலும்பற்ற இந்திய அரசியலின் மீது பொறுப்பைச் சுமத்தி விட்டு ஆனந்த விகடன் ஒதுங்கிக்கொள்வது என்பது இந்திய அரசியலில் ஒரு"துக்ளக் கோமாளியின்" இடத்தைத்தான் ஆனந்த விகடனுக்கு பெற்றுக் கொடுக்கும். அல்லது குறைந்த பட்சம் ஒரு "புனிதரின்" இடத்தை அதற்கு ஒதுக்கி விடுவார்கள்.

அப்படியில்லாது பத்திரிகா தர்மத்தை மதித்து ஜனநாயகப் பண்புகளைக் கட்டிக்காக்க முன்வருவதாயின் மக்கள் மத்தியில் நிறைந்த செல்வாக்குடன் உள்நுழையலாம். மரத்துப்போன முட்டாள் அரசியல்வாதிகளின் இழிவான அரசியலைப் பார்த்து சோர்ந்து போன மக்கள் ஒரு புதிய தொடக்கத்தை எதிர்பார்த்திருக்கின்றார்கள்.

அது பாரம்பரியம் மிக்க ஆனந்தவிகடன் மூலம் தொடக்கமாவது வரவேற்கக் கூடியதே.

சுருதி மாறும் புலியெதிர்ப்புக் கோஷங்கள்


இன்று ஈழப்போராட்டத்தில் புலிகளின் தோல்வி ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றது. அதற்கான பல காரணங்களை வரிசைப்படுத்த முடிகின்ற அனுபவம் அவர்களுக்கு வாய்த்திருக்கின்றது. அவர்களின் எதிர் வரிசையில் நின்று இதே ஈழவிடுதலைப் போராட்டம் பற்றி பேசிக்கொண்டிருந்த டோலர்களினதும் உதிரிக்குழுக்களினதும் சுருதி பேதம் இப்போது மாறத்தொடங்கி விட்டது.

இதுவரை இவர்களால் காட்டமாக முன்வைக்கப்பட்டு வந்த புலிப்பாசிஸம் என்ற முத்தாய்ப்பு கவனமாகத் தவிர்க்கப்பட்டு புலித்தலைமையைக் கொன்ற "வெளிநாட்டுப் புலித் தலைமை ? " என்ற புது அணுகு முறை தெரிந்தெடுக்கப் பட்டிருக்கின்றது. இப்புதிய அணுகு முறைக்கான காரணங்களாக இரண்டு விடயங்களைக் கொள்ளலாம்.

1) எதிர்ப்பு அரசியல் மட்டுமே தெரிந்த பழக்கப்பட்டுப்போன மந்தைத்தனம். இப்படியான அரசியலிலேயே காலத்தைக்கடத்தும் கையாலாகாத்தனம். வெற்று அறிக்கை வீரர்களாகவே கடைசி வரை இருந்து விடுவதுடன் இவர்கள் மறைந்து போய் விடுவார்கள்.

2) புலிகளின் மீது தமிழ்மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் அரசியல் நம்பிக்கையீனத்தை தங்களை முன்னிறுத்தி மாற்றீடு செய்வதும் எஞ்சியிருக்கும் புலி ஆதரவாளர்களை மக்களுக்கு எதிரானவர்களாகச் சித்தரிப்பதுவும்.

"வெளிநாட்டுப் புலித் தலைமை?யின்சதிகள் " எனும் வார்த்தைப்பிரயோகங்களின் மூலம் புலித்தலைமையின் விசுவாசிகளை இலகுவாக உதிரிகளான வெளி நாட்டுப் புலிகள் மீது திருப்பி எதிர்ப்பு அரசியலைச் சாத்தியமாக்குவது.அண்மையில் புலிகளின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கும் செல்வராஜா பத்மநாதன் ஆயுதமற்ற அமைதி அரசியல் வழியில் புலிகளின் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளார். யாழ் மாவட்ட படைத்துறைப் பொறுப்பாளர் வெற்றிக்குமரன் என்ற பெயரில் " போராட்டம் முடிந்து விடவில்லை. புலித்தலைமையின் ஆணைக்காகக் காத்திருக்கின்றோம்" என்று அறிக்கையொன்று வெளியிடப்பட்டிருக்கின்றது.

ஆக புலிகளின் போராட்டம் தொடரக் கூடிய சாத்தியங்களை இனங்கண்டு அவற்றை மழுங்கடிக்க தங்களை ஆயத்தம் செய்து கொள்வதாகவும் கொள்ளலாம்.

இந்த இரண்டு வித முனைப்புகளில் நம்பிக்கை கொண்டு செயற்படும் இவர்கள் தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ளமறந்து விடுகின்றார்கள்.தமிழீழ சுதந்திரத்தைத் தணியாத தாகமாகக் கொண்டிருக்கும் மக்களின் எண்ணங்களுக்கு மதிப்பளிக்க வேண்டிய நேரம் இது.

இந்தச் சந்தர்ப்பத்தில் போராட்டத்தைத் தொடர முற்படும் புலிகளோ அல்லது அவர்களை மாற்றீடு செய்ய முயலும் எதிர் அரசியல் சக்திகளோ ஈழப்போராட்டத்தை வென்றெடுக்க இணைந்த போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வரலாறு கற்பித்துத் தந்திருப்பதை மறந்து விடக்கூடாது.

உங்களின் குரல்கள் பிரிந்தெழுந்து அழிந்து போவதை விட சேர்ந்தெழுந்து ஒலிப்பதையே மக்கள் விரும்புகின்றனர். மக்களை விலக்கிய போராட்டத்தின் வீழ்ச்சியைக் காலம் நமக்கு காட்டியிருக்கின்றது.

இன்னும் காலம் கடந்து விடவில்லை. தமிழ் மக்களின் குரலாக ஒலிக்க விரும்புபவர்கள் இதை உணர்வார்களா?

Saturday, May 23, 2009


கெஞ்சல் மிஞ்சல் - மஞ்சள் துண்டு நாடகம்




வாக்குப்போட்டவர்கள் இங்கிருக்க இவர்கள் எதற்காக வாக்குவாதப்பட்டு சிண்டைப்பிடித்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் தெரியவில்லை. மக்களுக்கு ஏதாவது இதன் மூலம் செய்ய முடியும் என்ற ஏதாவது நம்பிக்கையிலா இவர்கள் இவ்வளவு தூரம் போராடுகின்றார்கள். குறிப்பிட்ட இலாகாக்கள் கேட்டு தி.மு.க கருத்து முரண்பாடு என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றது.

அப்படி தி.மு.க கேட்கும் இலாகாக்கள் கிடைத்து விட்டால் உண்மையிலேயே தமிழ் நாட்டுக்கு விமோசனம் வந்து விடுமா? என்று உடன் பிறப்புக்கள் தெளிவு படுத்த வேண்டும். பார்க்கும் போதே சாதாரண பாமரனுக்கும் தெரிகின்றதே கொள்ளையடிக்கும் ஆசைதான் முன்னிற்கின்றது என்று.

இவர்களை உங்கள் கட்சி கழகம் என்று தூக்கிப்பிடிக்க உங்களுக்கு கூச்சமாக இல்லையா? அல்லது நீங்களும் இப்படிப்பட்டவர்கள் தானா? உங்களுக்கு குறைந்த பட்ச மனிதாபிமானம் கூட இல்லாது போய்விட்டதா?

ஆறரைக்கோடி தமிழர்களின் தலைவர் என்று பீற்றிக்கொள்ளும் இவர் உண்மையிலேயே "தலைமை"ப்பண்பைக்கொண்டிருக்கின்றாரா? வாக்குப் போட்ட உங்களுக்கு நிஜமாகவே வாந்தி வரவில்லையா?

இதை போல உலகில் எங்காவது நடந்திருக்கும் உதாரணம் ஏதாவது இருக்கின்றதா? நாங்கள் கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தைக் கடந்து வர எண்ணமேயில்லையா?

நாட்டில் நல்லது நடக்காது இப்படிப்பட்ட தறிகெட்ட அரசியல் நிலவ நாங்களும் காரணம் என்று எப்போதாவது ஒரு பொழுதில் சிந்திப்போமா? மாற்றம் பற்றி யோசிப்போமா?

குட்டி ரேவதியும் குருவிக் கதையும்


மிக சுவாரஷ்யங்களை விதைத்துப் போய்க் கொண்டிருக்கின்றது வாழ்க்கை. இப்போது தான் துப்பட்டா புகழ் குட்டி ரேவதி பற்றிப் பிரஸ்தாபிக்கப் போக சுடச் சுட வந்து விழுந்திருக்கின்றது கவிதை ஒன்று.

அதுவும் ஏடாகூடமான என்ணங்களைத் தான் எப்போதும் போல் இப்போதும் எனக்குள் ஏற்படுத்துகின்றது.

இதோ கு.ரேவதியின் கவிதை ..



//அடர்ந்த கரும்புதருக்குள்ளிருந்து குருவிகள் பறந்துபோயின
அதிகாலை மின்னும் சிறகுகளுடனும் குறுந்தலைகளுடனும்

எனது தலையை அவற்றின் பறத்தலுக்காகத் திறந்து கொடுத்தேன்
ஒன்றாகி இரண்டாகி நூறாகி ஆயிரமாகிக் கலைந்தன

ஒடுங்கி வியர்த்திருந்த உடலும் சிறகுகளும் சுவாசிப்பதற்காக
விண்ணெங்கும் அலைந்து கொண்டேயிருந்தன ஒரே குருவியாகி

புதருக்கு அடியில் கும்மிருட்டு மூடிக்கொண்டிருந்தது இரத்தச்சகதியான
என் ஈரநிலத்தையும் பறக்கமுடியாத குஞ்சுகளையும்

ஊழியின் பெருவலி என்னகத்தே உள்ளது என்பதால் இன்னும் உறங்காமல் இருக்கின்றன குஞ்சுகளும் கனவுகளும் புதருக்குளே//


அடர்ந்த கரும்புதர்களிற்குள்ளிருந்து குருவிகள் பறந்துபோயின...இருக்கலாம் என் மூளைக்குள் ஆகாய விமானங்களும் ஏதேதோ இரைச்சல்களும்..அப்போது தான் அனுபவித்த ஒரு நினைவு கூடுகின்றது.

அதிகாலை ஆமாம் அப்போது தான் ஒரு முடிவு அல்லது முடிக்க வேண்டிய நேரம் வருகின்றது. அவற்றின் பறத்தலுக்காய்...அல்லது கூடலின் முடிவு ..அவ்வாறுதான் இருக்கும்.

ஒடுங்கி வியர்த்திருந்த உடலும் மேலெழுந்து இறங்கும் மார்பும் சுவாசித்தலுக்காக அலையும். கைப்பிடி கொள்ளக் கூடிய காற்றை நெஞ்சினுள் இறக்கி... வியர்த்து விட்ட சுவாசத் துவாரங்களை ஆற்றுப்படுத்த முனையும். அதீத வேலையின் களைப்பு இவ்வாறு மறக்கப்படும்.

//புதருக்கு அடியில் கும்மிருட்டு மூடிக்கொண்டிருந்தது இரத்தச்சகதியான
என் ஈரநிலத்தையும் பறக்கமுடியாத குஞ்சுகளையும்..//

பறக்க முடியாத குஞ்சுகள் தவ்வல்கள்... வழித்துத் துடைக்க வேண்டியவர்கள்.. "வல்லன வாழும் "தத்துவத்தில் தோற்றுப்போனவர்கள்.. வாழ்வதற்கு அருகதையற்றவர்கள்.

ஊழியின் பெருவலியல்ல.. வாழ்க்கையின் தத்துவங்களையும் சுவாரஸ்யங்களையும் நாம் தான் கொண்டிருக்கின்றோம். பிரபஞ்சத்தை வழி நடாத்துபவர்களே நாங்கள் தானே..

என் குஞ்சுகளும் கனவுகளும் எப்போதும் புதர்களைத் தேடியபடியே...

அது சரி தத்துவ விசாரத்தில் இறங்குமளவிற்கு குட்டி ரேவதிக்கு வயசாகிப் போய் விட்டதா?

கவிதைகளின் ஒரு சிறப்பே வாசகனின் எண்ணத்தைத் தூண்டி விடுவது தான். கவிதைகளுக்கு நேரடியான வாசிப்பு இருக்க முடியாது.. இருக்கக் கூடாது.. வாசிக்கும் மனதின் வியப்புகளால் கட்டமைக்கப்பட வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு சிந்தனையைத் தூண்டிய குருவிக்கதைக்கும் குட்டி ரேவதிக்கும் ..துப்பட்டா விசிறிய வணக்கம்...

மூக்குடைபட்ட மு.க வும் இரத்தக்கண்ணீர் வடிக்கும் உடன் பிறப்புகளும்


எல்லாம் அரசியல் என்று இலகுவாகத் தப்பிப் போக முடியும். அது ஒரு சாக்கடையான விடயம் தான். அப்படி நாறடித்து வைத்திருக்கின்றார்கள் இந்திய அரசியல் வாதிகள். நாற்றத்தில் சந்தணத்தையா முகர முடியும். ஆனால் சாணக்கியனின் சறுக்கல் தான் இதில் பேசப்படும் விடயம். எத்தனை இலட்சம் ஈழத்தமிழன் செத்தாலும் மத்திய ஆட்சியில் பங்கும் அமைச்சர் பதவிகளும் கொண்டு தந்தியும் தொந்திகரையும் ஒன்லி மூன்று மணி நேர உண்ணாவிரதமும் என்று காலத்தைக் கடத்தியவர் கலைஞர். இதை சாண(ம் ந)க்கியம் என்று உடன் பிறப்புகள் ஏற்றிப்பிடித்தார்கள்.

தலைவரும் பிளைட் புக் பண்ணி நண்டு சிண்டு குட்டி குருமான் என்று படை பட்டாளத்துடன் போய் இறங்கினார். உடன்பிறப்புகளும் கலைஞர் கொடி பறக்குதடா என்று பதிவு போட்டார்கள்.எல்லாம் சரியாகத் தான் இருந்தது. ரோபோ சிங் வாய் திறக்குமட்டும். காங்கிரஸ் தேறியதில் சோனியாவிற்கு தெம்பு வந்திருக்கின்றது.அதுவே சிங்கின் வாயில் துடுக்குத்தனமாகக் கொட்டியிருக்கின்றது.

அதிகாரம் செய்தே பழக்கப்பட்ட மு.க முதல் முறை அதிர்ந்து போய் இருக்கின்றார்.அதுவும் இத்தனை வயதிற்குப் பின்னர். சாதா இட்லியா சமித்துப்போக.. அவமானம் ஐயா ..அவமானம்.

பின்னே என்ன நொண்டிக்குதிரையில் போலோ ஆடுவதா? மத்திய ஆட்சி.சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர் போல் இவர்கள் போய் கூடாரம் அடித்துக் கொள்ளை அடிக்க வடக்கத்தி கள்வர் விட்டு விடுவார்களா என்ன?

இப்போது மு.க எதை எடுத்தாலும் இறங்குமுகமும் ஏமாற்றமுமாகத் தான் இருக்கின்றது. இதுவரை ஈழத்தமிழர்கள் கொல்லப்படும் போது வாயே திறக்காதிருந்த தினமணி சமயம் பார்த்து மு.க விற்கு வேட்டு வைத்திருக்கின்றது. டிஞ்சரும் பஞ்சும் கொண்டு போய் குற்றுயிர் தமிழருக்கு கட்டுப்போடாது டில்லியில் போய் உட்கார்ந்து மந்திரிப்பதவிக்கு தர்ணா நடத்துவது..அடுக்குமா? தர்மமா? ஐயகோ நியாயமா? என்று பகவத் கீதை ரேஞ்சுக்கு புத்தி மதி சொல்லியிருக்கின்றது.

அவனவன் சாதிக்கட்சி நடாத்தியே 7+1 கேட்கும் போது 17 இல் தனித்து வென்றவர்கள் எத்தனையும் கேட்கலாம்..கொள்ளையடிக்கலாம் என்ற ரீதியில் வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கின்றார்கள் உடன் பிறப்புக்கள்.

கலைஞரை எதற்காகப் பாராட்டாவிட்டாலும் இப்படிப்பட்ட பேப்பர் ஸ்பாஞ்சுகளை உருவாக்கி வைத்திருப்பதைப் பாராட்டியே தீர வேண்டும்.அதெப்படி மு.க எதைச் சொன்னாலும் அதை உறுஞ்சி அப்படியே மாறிவிடுகின்றார்கள்.

Friday, May 22, 2009


முற்றுப் பெறாத முது தமிழ்ப்புராணம்


அ. முத்துலிங்கம் பற்றி அறிந்திருப்பீர்கள். அல்லது கேள்விப்படவேனும் செய்திருப்பீர்கள். ஈழத்து எழுத்தாளர்களில் தமிழகத்தில் "கண்டடையப்" பட்டவர். 60 களிலிருந்து எழுதுபவர்(?)என்னமோ என் கண்ணில் இந்த 2008 வரை அகப்படும் பாக்கியம் கிடைக்கப் பெறாதவர். நண்பர் ஒருவர் கட்டுக்கட்டாக அனுப்பி வைத்த புத்தக மூட்டையுள் வந்து இறங்கியவர். அப்படித்தான் அ. முத்துலிங்கத்துடனான என் அறிமுகம். இதிலென்ன வெட்கம் இருக்கின்றது.

உலகத்தில் இருக்கின்ற எல்லா அற்புதங்களையும் தெரிந்து வைத்திருக்கும் பாக்கியம் கிட்டியவர்களாகவா நாம் இருக்கின்றோம். குறைகளும் நிறைகளும் நிரம்பியவர்கள் தானே மனிதர்கள்.

ஜெயமோகன் கிலாகித்துப் பேசும் ஈழத்து எழுத்தாளர் தளைய சிங்கம் தான்.தளய சிங்கம் பற்றிய அனுபவத்துடன் முரண் பட்டுப்போன ஆர்.பி.இராஜநாயகத்தின் அனுபவத்தையும் ஒரு முறை படிக்க நேர்ந்தது.

ஓதுவாரின் பெண்டாட்டியை கள்ளிறக்கும் அவன் ஆழ்ந்து அனுபவிக்கும் அந்தக் கதை அதில் சொல்லப்பட்ட காமம் ஒன்றினாலேயே இப்போதும் ஞாபகம் இருக்கின்றது.ஓதுவார்களின் பாடல் கேட்கும் தோறும் அவர்கள் பெண்டாட்டிகளை யாரோ எங்கோ ஒரு முக்கில் அனுபவிக்கும் காட்சிதான் எனக்குத் தோன்றும் என்றும் அப்போது எனக்குத் தோன்றியது.அப்படி அது "நச்"சென்று மனதில் ஒட்டிக்கொண்டிருக்கின்றது. மற்றும் படி ஜெமோ அறிந்து கொண்டவை எதுவும் ஆர்.பி .ராஜநாயகம் சொல்லியதைப்போலவே எனக்கும் தோன்றவில்லை.அல்லது அப்படிப் படவில்லை.

அதையே அவர் அறிந்த ஈழத்து தமிழ் எழுத்தாளர்கள் என்று வரிசைப்படுத்தும் கிரமத்தில் "எல்லாந்" தெரிந்தவர்கள் வரிசைப்படுத்தும் அதிகாரம் தெரிகின்றது.அவர் வரிசைப்படுத்தலில்,வழமை போலவே வரக்கூடியவர்கள்..

//மு.பொன்னம்பலம், மல்லிகை ஜீவா, தெளிவத்தை ஜோசப்,
செங்கை ஆழியான், யேசுராசா, சாந்தன், உமா வரதராஜன் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
கல்வியாளர்களில் என்று இன்னும் நிறையப் பேர் இயங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இளம் தலைமுறையினரில் இராகவன், அனார் போன்றவர்கள்
நம்பிக்கை நட்சந்திரங்களாகத் தெரிகிறார்கள். நிச்சயமாக ஈழத்து நிகழ்வுகள் ஒருநாள் ஆவணங்களாகவோ, இலக்கியப் படைப்புகளாகவோ வெளிவரும் என்பதில் சந்தேகமில்லை.//

அ. முத்துலிங்கம் கதைகளையும் ,கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கின்றது போன்ற தொகுப்புகளையும் படித்திருந்த எனக்கு அவரின் பேட்டி ஒன்றும் பெரிதான ஆச்சரியங்களைத் தராதது ஜீரணிக்கக் கஷ்டமான விடயமே.

அவரின் வாசிப்பனுபவம் கூட ஏதோ ஒரு காலத்தில் தொக்கி நிற்பதாகத் தான் தெரிகின்றது."கா.சிவத்தம்பி, மௌனகுரு, சித்திரலேகா, நுஃமான் " இவர்களை விட்டு இன்னும் வெளியில் வரமுடியாது "நின்று" விட்டார் என்றே தோன்றுகின்ரது.

இளந் தலை முறையில் என்று " இராகவன், அனார் " அட.. பெயர்கள் புதிசாக இருக்கின்றப்னவே என்று பார்த்தால்...எதற்காக மறைக்க வேண்டும். இன்னும் என்னால் வாசிக்க முடியாதவர்கள்.

வ.ஐ.ச. ஜெயபாலன்..மற்றும் உலகப் புகழ் பெற்ற மஹாகவியின் வாரிசுகளையெல்லாம் விட்டு விட்டார். இன்னும் இருக்கின்றார்களே பெண்ணீயச் சிந்தனாவாதி அ.மர்க்ஸுடன் சேர்ந்து கள்ளுக்குடித்து வாந்தியெடுக்கும் தலீத்திய சிந்தனாவாதி சுகன் போன்றவர்கள் எப்படி இவர் கன்ணில் படாது போனார்கள். இனி பெண்ணீயத்தோழிகள்... லக்ஷ்மி ,ரஞ்சிதா போன்றவர்களையும் எப்படி விட்டு விட்டார்.

துப்பட்டா புகழ் குட்டி ரேவதி போன்றோரிடம் கேட்டால் ஒரு நீண்ட பட்டியலே கொடுப்பார்களே...

என்னவோ போங்கள்... ஆக முடிவில் எல்லோரும் சாதாரணர்களே

அரசியலும் அழுக்குச் சாமிகளும்


அரசியல் எழுதி எழுதியே போரடித்துப் போயிருக்கின்றது. அரசியல் என்பது ஒன்றுமில்லை அது தான் சார்ந்த வாழ்க்கை குறித்தான ஒரு பிரக்ஞை என்பதைப்புரிந்து கொள்ள வேண்டும். அதை பர்றி எழுதப்போக என்னையும் தீர்க்கதரிசியாக்கி விட்டது ஒரு அனானி. நல்ல காலம் ஒரு சாமியாராக்காது விட்டதில் சந்தோஷம்.

சாதாரண குடி மக்களின் நிம்மதியைக் குலைக்க வேண்டு மென்றே திட்டமிட்டு வேலை செய்யும் இந்தச் சாமியார்களை என்ன செய்வது. இருக்கும் ஒன்றையும் வெட்டியெடுத்து விட்டு சாமியாராகப் போக வேண்டுமென்று இந்தியாவில் சட்டம் போட வேண்டும்.

உழைத்துக் களைத்திருக்கும் சாதாரண மனிதரின் குடும்பத்தில் திட்டம் போட்டு பிரிவினை செய்யும் இவர்களுக்கு இதை விடப் பெரிய தண்டனை கிடையாது. வீட்டில் சும்மா இருந்து மதர்த்துப் போயிருக்கும் பெண்கள் இவர்கள் வலையில் விழுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.

எனக்கு நினைவு தெரிந்த நாளில் வெள்ளி மட்டும் தான் சாமிகளுக்கானது ..சைவம் என்று இருந்தது..இப்போது செவ்வாய்.. வியாழன் ஞாயிறு என்று ஏகப்பட்ட வாழ் நாளை இந்தச் சாமிகள் அள்ளிக்கொண்டிருக்கின்றார்கள். வீட்டில் பூசை புனஸ்காரம் என்றால் ..எழுதப்படாத தொட முடியாத .. தடா தானே அது.

உலகாதியாய இம்சைகளில் இருந்து விடுபட என்னைப்போல் உங்களைப்போன்ற சாதாரண அப்பிராணிகளின் பொழுது போக்கிற்கும் தடை என்றால் என்ன செய்வது. இதை அமுல்படுத்திய பெருமையெல்லாம் இந்த அடாவடி சாமியார்களுக்கே போய்ச் சேர வேண்டும். போதாக் குறைக்கு சின்னத்திரை முடிவடையா சீரியல்களும் புகழைப்பங்கு போட்டுக் கொண்டிருக்கின்றன.

நிறையக் கோபம் இருக்கின்றது இந்த நடை முறையின் மேல். சாதாரணமாக மறந்து விடுகின்றார்கள்... மனிதன் ஒரு பாலூட்டி விலங்கு என்பதை.

இதைப் புரிந்து கொள்ளும் போது பல பிரச்சினைகள் தீர்ந்து விடும்..

புலிகளின் வீழ்ச்சி எழுச்சி இன்ன பிற


புலிகளின் வீழ்ச்சி எழுச்சி பற்றியெல்லாம் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் எழுச்சி வீழ்ச்சி என்று தான் எழுதியிருக்க வேண்டும் என்று தோன்றும். ஆனால் இப்படி எழுதுவது தான் சரியாயிருக்கும். புலிகளின் எழுச்சி என்பது தனி மனிதர்களின் அல்லது ஒரு இயக்கத்தின் எழுச்சியல்ல. அது ஒரு இனத்தின் எழுச்சி .. அதை அவரவர் எண்ணங்கள் கருது கோளுக்கு இயல்பாக இலகுவாக மறந்து விடுகின்றார்கள். அல்லது மறந்ததாகக் காட்ட முயல்கின்றார்கள். ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கின்றது. ஒரு நூற்றாண்டு அடிமைத்தனத்தின் வெறுப்பில் இருந்து இது வெளிப்படுகின்றது.

அது எத்தனை ஏகாதிபத்தியங்களின் ஆயுத பலத்தாலோ உலக ஒழுங்கை நேர்கோட்டில் கொண்டு வர முயலும் சில முதலாளித்துவப் போக்கிரிகளாலோ கட்டுப்படுத்தமுடியாது. அப்படித்தான் மனிதத்தின் வெளிப்படுகை இருக்கின்றது. முடிந்தால் அடக்குவது முடியாவிட்டால் அனுசரிப்பது ..அப்படித்தான் முதலாளித்துவம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. அதை உணர்ந்தவர்கள் தான் வாழத் தகுந்தவர்கள்.

பதிவுகளைப் படித்தபோது மிகப்பெரிய ஆச்சரியமும் முட்டாள்த்தனமுமான ஒரு விடயத்தைக் காண நேரிட்டது. மேற்கு நாடுகளுக்கு வரும் அகதிகளைக் கட்டுப்படுத்தவும் இருக்கும் அகதிகளைத் திருப்பி அனுப்பவும் அவை எடுத்த நடவடிக்கைதான் இந்த புலிகளின் முடக்கம் என்ற கண்டு பிடிப்பை வெளியிட்டிருக்கின்றார் கலையரசன். எனக்கு எதால் சிரிப்பது என்று தெரியவில்லை.

மலிவு விலைத் தொழிலாளர்களை இறக்கும் ஒரு நோக்கமே இவ்வாறான இன குழு மோதல்களை ஆசிய ஆபிரிக்க இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவாக்குவதும் ஆயுத விற்பனையை அமோகமாக்குவதும் இந்த மேற்கு நாடுகள் தான் என்ற திறந்த உண்மையை மறைத்து பொய் பேசவும் ஒரு திராணி வேண்டும்.அது கலையரசனிடம் நிறையவே இருக்கின்றது. இனி அவரின் புழுகுகளைப் படிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கின்றேன்.

அதைப்போலவே புலிகளின் வீழ்ச்சி பற்றியும் அடுத்தது என்னவென்பது பற்றியும் விளாசலும் கிழித்தலுமாகக் காலம் நகர்கின்றது. நம் தோழர்களும் இன்னும் பெட்டி படுக்கையைக் கட்டவில்லை போலிருக்கின்றது. நான் நினைத்தேன் இதற்குள் மாக்ஸிஸத்தின் சிவப்பு ஓசோன்கள் ஈழமெங்கும் பரவிப் படிந்திருக்குமென்று. ஆனால் அவர்கள் இன்னும் இங்கு தான் இருக்கின்றார்கள். சிலரின் பதிவுகள் ஓரிரு பொழுதுகளில் தட்டுப்படுகின்றது. புலிகள் இல்லாவிட்டால் என்ன செய்வது என்ற மறுபரிசீலையில் மூழ்கியிருக்கின்றார்கள் போல் இருக்கின்றது. புலிகள் இல்லாத பொழுதில் இவர்கள் வெறும் ஜீரோக்கள் என்பது தான் உண்மை. சுயமான அரசியல் இல்லாதவர்கள் இப்படித்தான் ..பலதிசைகளிலும் நசுக்கப்படுவார்கள்.

கலைஞரின் சாணக்கியம் தோற்றதில் எனக்கும் அளவில்லாத சந்தோஷம். சாணக்கியம் எதைப்பற்றியது .. தன் சொந்தக் குடும்பம் சார்ந்தது.. அதைத்தாண்டிவரும் கொடுப்பினை கறுப்புக்கண்ணாடி கழட்டாத கருணாநிதிக்கு இந்த ஜென்மத்தில் வாய்க்கப்போவதில்லை. அதை உணராத அப்பி போன்றவர்களுக்கு இருக்கின்றதே 2 ரூபா மலிவு விலை அரிசி வாய்க்கரிசியாகப் போடுவதற்கு. அந்த ஆப்பு எப்படி வைக்கப் போகின்றார் என்று சொல்லி விட்டால் பரவாயில்லை. ஏனென்றால் ஏற்கனவே பலபேர் இறுக்கிய ஆப்பில் பின்பக்கம் வீங்கி இருக்கின்றது. அவருக்கும் ஒரு இடம் ஒதுக்குவது பற்றி எனக்கொன்றும் ஆட்சேபனையில்லை.

கருணாநிதியின் எதிர்பார்ப்புக்களை தகர்த்துப்போட்ட பெருமைக்குரியவர்கள் ..இந்தியாவின் "குடி மகன்"கள் தான். அவர்களின் அரசியல் நேர் கோட்டிலானது. இன்றைய பொழுது இன்றைய வாழ்வு.. அதற்கப்பால் சிந்திக்க ஏதுமில்லை. இந்தியாவின் எதிர்காலம் இவர்களின் கைகளில். எனக்கும் ஒரு பிஸினஸ் கனவு இருக்கின்றது. எப்படியாவது ஒரு டாஸ்மாக் கடைக்கு ஓனராகி விடவேண்டும். என் தலை முறையே உட்கார்ந்து சோறு திங்கும்.

கலைஞரின் சாண (ம் ந)க்கியத்திற்கே மீண்டும் வருகின்றேன். ஏழு எட்டு என்று விமானம் புக்பண்ணி டில்லி போனதற்கு ஒன்றும் வாய்க்கவில்லை. இன்னும் அரசியல் கத்துக்குட்டி தான் கருணாநிதி. தமிழனின் தலையில் அரைக்கும் மிளகாய்க்கும் டில்லி வாலாவிற்கு வைக்க வேண்டிய உறைப்பிற்கும் வித்தியாசம் இருக்கின்றது என்பதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை இந்தக் கிணற்றுத் தவளை.. காங்கிரஸ் தப்பிப்பிழைத்ததில் கருணாநிதியைத்தவிர மற்றவர்கள் பெருமூச்சு விடுவார்கள். முக்கியமாக சோனியா. பெரும்பான்மை இல்லாவிட்டாலும் பெரும்பான்மைக்கு கிட்ட வந்ததில் சோனியாவின் பருப்பு ஈரமாகியிருக்கின்றது.

இத்தனைக்கும் பிறகு பிளைட் பிடித்து போக முதல் ஒரு தந்தி அடித்திருக்கலாம் மு.க.... பேஸ்த்தடித்துப்போன முகத்தைகாப்பாற்றிக்கொள்ள ஏதாவது சமிக்ஞை கிடைத்திருக்கலாம். தி.மு.க விற்குப்போட்டியாக மம்தாவின் திரிணமூல் கிடைத்ததில் சோனியாவிற்கு அதீத மகிழ்ச்சி . மு.க போல பேரன் பூட்டன் வம்சாவளிக்கெல்லாம் அமைச்சு கேட்கும் பிடுங்கல் மம்தாவிடம் இல்லை என்பதே அந்த ஆறுதல்.

தி.மு.க செயற்குழு கூட்டம் என்றார்கள். செயற்குழு எங்கே இருக்கின்றது.கிச்சன் காபினட் தானே முடிவுகளை எப்போதும் எடுப்பது. இப்போதும் அது தான் நடக்க வேண்டும். அது தான் தாமதம். புதிய நட்சத்திரம் அழகிரியை மத்திக்கு தள்ளிவிடுவதே தன் பிள்ளைக்கு மாநிலத்தில் செளயன்யம் என்று ஆண்டாளு யோசிப்பதில் தவறே இல்லை. தளராத தொங்காத ஒரு தோட்டம் என்றால் அது ராஜாத்தி முகாம் தான். இத்தனை நாள் தொண்டு கிழவனுடன் குப்பை கொட்டியதற்கு கனி மொழியை உயர்த்தி அழகு பார்ப்பதில் உள்ள ஆசையையும் புரிந்து கொள்ள வேண்டியது தான். அக்கா மகள் அத்தியந்த நண்பனின் மகன் பேரன் என்று எத்தனையோ பாசப் பிடிகளால் இறுக்கி வைத்திருக்கும் தயாநிதியையும் ஒதுக்கி விடமுடியாது. இனி ஸ்பெக்ரம் புகழ் ..எக்ஸட்ரா ..எக்ஸட்ரா.. வகை தேவைகள் இருக்கின்றது.

தி.முக விற்கு இருக்கும் தேவைகள் போல் காங்கிரஸிற்கு அடுத்த 5 வருடத்திற்கு எந்தத் தேவையுமில்லை. தி.மு.க போனால் அ.தி.மு.க எப்போதும் அவைலபில் ..அட்டாக் விளைவு கூட்டணி...அதனாலேயே காங்கிரஸின் அதிரடி ஆட்டங்கள் இதைப்போல இன்னும் தொடரும்..இது ஏன் இப்படி என்று சாணக்கியம் தெரிந்தவர்கள் சொல்ல வேண்டும்.

சாதாரண மக்களுக்குத் தான் இது எதுவும் புரியவில்லை...

Wednesday, May 20, 2009


அட நாதாரிகளே


பதிவுலகைப் பார்க்கும் போது எப்போதும் போலவும் புதிதாயும் கோபம் தான் வருகின்றது. தங்கள் உள் மன வக்கிரங்களைச் சொறிந்து கொள்ளும் கயமைத் தனம் தான் தெரிகின்றது. பிரபாகரன் கொல்லப்படவில்லை ..கொல்லப்படாமல் இருக்க வேண்டும் என இலட்சோப லட்சம் மக்கள் ஆசைப்படுகின்றார்கள் ..அப்படியே இருக்க வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றார்கள்.

அதையெல்லாம் தூக்கிப்போட துவண்டு போகச் செய்ய உங்களுக்கு ஏன் இப்படியொரு ஆசை. உங்களுக்கு ஒரு பதிவு போட பரபரப்பாக ஹிட் ஆக்க ..வேறு எத்தனை கழுவாரி மகன்களின் விடயங்கள் இருக்கின்றது உங்கள் மன அரிப்புக்கள் தீர்க்க.

கேபிள்ளு கயிறு விடுகிறார் பிரபாகரன் மட்டுமா? மதிவதனியுமா? டாக்டர் துவாரகாவுமா? உங்களையெல்லாம் எண்ணைக் கொப்புரையில் போட்டு நன்றாக வறுத்து எடுக்க வேண்டும். மற்றவர் பிரபாகரனின் மறைவு மற்றும் ராஜீவ் காந்தியின் மரணம் (தீராத பக்கங்கள் என்று எழுதுகின்றார்... பிரபாகரனும் இராஜீவும் ஒன்றா..தின்ற சோறு செரிக்காது தமிழர்களைக் கொன்றவனும் தயவில்லாது தவித்தவர்களைத் தாங்கிக் கொண்டவனும் ஒன்றா?

அப்படித்தான் எங்கள் நம்பிக்கைகள் இன்னும் அப்படியே இருக்கின்றது...உங்களுக்கு சொறிந்து கொள்ள வேண்டுமென்றால் ஆயிரம் விடயம் இருக்கின்றது. கழுவாரி மகன்களின் களவாணித்தனம் இருக்கின்றது. திடீர் பதிவுகள் ஹிட் எகிறிட எழுதிக்கொள்ளுங்கள்..

ஜெயலலிதாவுக்கும் சசிகலாவுக்கும் என்ன உறவு? தாயாளு அம்மாள் ராஜாத்தி அம்மாளை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லையாயின் ராஜாத்தி அம்மாளுக்கும் கருணாநிதிக்கும் என்ன உறவு?

குவாரோச்சிக்கு 60 மில்லியன் டொலர்கள் சோனியாவின் கள்ள உறவிற்கு கிடைத்த பரிசா? இப்படி எதை வேண்டுமென்றாலும் ஆசை தீரச் சொறிந்து உங்கள் அரிப்பைத் தீர்த்துக் கொள்ளுங்கள்..

என் மண் மறுக்கப்பட்டது போலவே நான் சுவாசித்த என் காற்றும் எனக்கில்லாது போனது.. மண்ணோடு பிடுங்கப்பட்டு அன்னிய தேசத்தில் தூக்கியெறியப்படுவது கொடுமையானது...என் குழந்தைப்பருவங்கள் எங்கோ ஒரு தேசத்தில் என்னைத் தேடி அலைந்து திரிகின்றன.. நான் சென்று வந்த பாதையில் புல் முளைத்திருக்கும் அல்லது புதிய தார் ரோட்டு மேவி நிற்கும். என் காலம் அப்படித்தான் உறைந்திருக்கின்றது.

என் நினைவில் இளமையோடிருந்தவர்கள் புகைப்படத்தில் நரைவிழுந்து கன்னம் சுருங்கி முதுகு கூன் விழுந்திருந்ததைப் பார்த்தபோது அதிர்ச்சியாயிருக்கின்றது. பெருங்கொடுமை அது. உங்களுக்கு எல்லாம் கிடைத்தது.. எங்களுக்கு அத்தனையும் மறுக்கப்பட்டது... உங்கள் வாழ்க்கை எமக்குச் செவி வழி சேதிகளே... உருண்டு புரளும் புழுதியும் காய்ந்து கறுக்கும் வெய்யிலும் எமக்கு மறுக்கப்பட்ட வரங்களே .. எமது நம்பிக்கையின் விலாசத்தை நீங்கள் கொன்று போட்டீர்கள். எங்கள் இருப்பின் முகவரி அந்த ஒற்றைச் சொல்லிலேயே ஊடாடியது.. அதையும் உங்கள் இஷ்டத்திற்கு கலைத்துப் போடுகிறீர்கள்..

விட்டு விடுங்கள் எங்கள் நம்பிக்கைகளுடன் நாங்கள் வாழ்ந்து விடுகின்றோம்...

இதற்குள் ஒரு பதிவு மிகவும் ஆச்சரியப்படுத்தியது. லக்கிலுக்கினது அது. லக்கி லுக்கை ஆரம்பத்தில் இருந்தே பிடிக்கவில்லை. எல்லாக் காலத்திலும் எல்லா கயமைத்தனத்திலும் மு.க வை முண்டு கொடுத்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. புலம் பெயர்ந்த தமிழர்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய போது கோபம் வந்தது. ஆனால் பிரபாகரனை மாமா என்று அறிமுகப்படுத்திய விடயத்தை அறிந்த போது ஆச்சரியம் வந்தது. நான் கூட அதைச் செய்யவில்லை. தமிழர்களின் வாழ்க்கை அந்த ஒற்றை அச்சில் சுழன்று கொண்டிருந்தது உண்மைதான்.. எங்களை விட்டுப் பிரிக்க முடியாத ஏதோ ஒன்று இணைத்தே இருந்தது. ஆனால் இப்படியா? எங்கோ ஒரு இடத்தில் ஈரம் மெல்லக்கசிகின்றது.

இது தான் எங்கள் நம்பிக்கை.. என்னைப்போலவே இதே பிடிவாதத்துடன் நீண்டு நிற்கும் ஒரு நெடிய வரிசை..அத்தனை பேரின் நம்பிக்கையுடன் விளையாடாதீர்கள்..தயவு செய்து.. உங்கள் மன அரிப்புகளைத் தீர்த்துக்கொள்ள ஓராயிரம் விடயமிருக்கின்றது.. ஆனால் எங்கள் நம்பிக்கையும் கனவும் இந்த ஒரு விடயத்தில் தான் இருக்கின்றது..அதனுடன் விளையாடாதீர்கள் தயவு செய்து..

புதிய புலிகளை உருவாக்க முயலும் சர்வதேசம்


இப்போது என் கருத்து உங்களுக்கு அதிகப்பிரசங்கித் தனமாகப்படலாம். ஆனால் நடக்கப்போவது இது தான். சிறிலங்காவின் மீதான சீனாவின் பிடி இறுகிப்போயிருப்பதை மேற்கு நாடுகள் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அமெரிக்காவின் நட்பும் அத்தியந்த ஜீவனுமாகிய ஜப்பானுக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்த கடல் வழித்தடங்களும் இந்து சமுத்திரம் சீனக்கடல் மற்றும் பசுபிக் மகாசமுத்திரம் வரை சீனாவின் ஆதிக்கம் கொடிகட்டிப்பறக்க முயல்வதும் அமெரிக்காவிற்கு ஒரு பெரும் சமிபாட்டுக் குறைபாட்டை இப்போது கொண்டு வந்திருக்கின்றது.

சோவியத் மாகா பேரரசின் கால்களும் கைகளும் முடமாக்கப்பட்ட மதர்ப்பில் சிலிர்த்துச் சிரித்த அமெரிக்கா புது வில்லனாகிய செஞ்சீனாவைக் கண்டு பேதியடித்துப் போய் நிற்கின்றது. அமெரிக்காவின் அள்ளக்கைகளான பெருங்காய டப்பா பிரிட்டனும் புத்துலகச் சினேகிதனுமான பிரான்சும் எடுத்த அதிரடி அட்டாக்குகள் எதுவும் சிங்களத் தீவில் எடுபடாது போனதில் அமெரிக்கா அஸ்துப் பேஸ்தாக முழுசிக்கொண்டிருக்கின்றது.

அதிரடி மன்னனும் டக்ஸாஸ் கெளபோயுமான ஜூனியர் புஸ் போலவும் செயற்பட முடியாமலும் மாட்டின் லூதர் கிங்கின் வாரிசுமாகவும் செயற்படமுடியாது அரை வேக்காடகச் செயற்படும் ஒபாமா றெஜிம் என்ன செய்வது என்று தெரியாது கையைப் பிசைந்து கொண்டிருக்கின்றது. சோவியத்துக்கு ஒரு மிகைல் கோர்பச்சோவ் வாய்த்தது போல் அமெரிக்காவின் அடாவடித் தனங்களை குழி தோண்டிப்புதைக்க ஒரு ஒபாமா. அவ்வளவு தான்.

இதில் வேடிக்கை என்னவென்றால் புலிகளையும் புலிகளின் தலைவரையும் அழிக்கும் வரை ஆதரவு என்று வேடிக்கை பார்த்த மேற்குலகினை துளியும் மதிக்காது சிறிலங்கா செஞ்சீனத்தின் ஜோதியுடன் கலந்து விட்டதை மிகத் தாமதமாகப் புரிந்து கொண்ட மேற்குலகு அதிரடி நடவடிக்கையில் தீவிரம் காட்ட முற்படுகின்றன.
இத்தனை இலட்சம் புகலிடத்தமிழர்கள் உண்ணாது உறங்காது போராட்டம் நிகழ்த்தியும் அசைந்து கொடுக்காது இருந்த இவர்கள் இப்போது புலிகளும் இல்லாது புகலிடப் போராட்டமுமில்லாது தமிழ் மக்கள் அனைவரும் சோகத்துள் மூழ்கிப்போய் விட இவர்கள் இப்போது செயற்படத்தொடங்கி விட்டார்கள்."பான் கீ மூனின் அறிவிப்பையடுத்து போர்க்குற்ற விசாரணைக்கான சாத்தியங்கள் அதிகரிப்பு" ""போர் நடைபெற்ற பகுதிக்கு அனுமதிக்கவும்": ஐ.நாவும் உதவி நிறுவனங்களும் அவசர கோரிக்கை" "நாராயணன், சிவ்சங்கர் மேனன் அவசரமாக கொழும்பு பயணம்: சீனாவுக்கு எதிராக காய் நகர்த்தல்" "தடுப்புக்காவலில் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்புக்கு உடனடி நடவடிக்கை: அனைத்துலக மன்னிப்புச் சபை அவசர கோரிக்கை" இவ்வளவும் காலம் பிந்திய நடவடிக்கைகள்.

ஏன்? எதற்காக? தங்கள் தேவைக்காக.. தலை இறுகி மிதந்து கொண்டிருக்கும் சிறிலங்காவை இறக்கி தங்களின் செல்வாக்கைக் கொண்டுவர. இவர்களைப் போலவே இந்தியாவும் சீனாவின் பிரசன்னத்தை மிக இலேசாக எடை போடுகின்றது. சீனா இப்போது தன் ஆளுமையை வெளிக்காட்ட வெளிக்கிட்டிருக்கின்றது. இந்து சமுத்திரத்தில் நீண்டிருக்கும் இவர்களின் கைகளைப் போலவே இந்தியாவின் வாலையும் சுருட்டிக் கொள்ளும் காலம் வந்து விட்டது.

ஈழத்தமிழ்த் தலைமை சீனாவின் நட்புறவை அடைய முடியாது போனதே இன்றைய பின்னடைவிற்கு முக்கிய காரணம் என்பதைப்புரிந்து கொண்டிருந்தால் இன்றைய நிலமை வேறு விதமாக இருந்திருக்கும்.

அன்று இந்தியா செய்ததைப் போல தமிழ் மக்களிடம் இருந்து பொறுக்கப்பட்ட சக்திகளுக்கு மேற்கு நாடுகள் பாலூட்ட முயற்சி செய்யும். தங்களுக்கான ஆதாயத்தை அடையும் வரை மேற்குலகம் ஈழத்தமிழ் மக்களை நிம்மதியாயிருக்க விடாது.

காக்கா மூக்காக்களும் முனகானவும்




இலங்கை விவகாரத்தில் இப்போது ஒரு ஓட்டப்பந்தயம் நடக்கின்றது. ஒலிம்பிக்கில் சீனா தங்கப்பதக்கங்களைக் குவித்துக்கொண்டிருக்கின்றது. நாம் கடந்த கட்டுரையொன்றில் குறிப்பிட்டது போல இலங்கை விவகாரம் இந்தியாவின் கையை விட்டு நழுவி எப்போதோ சீனாவின் சீனக்கடலில் கலந்து விட்டது.

சீனாவின் வற்றாத மஞ்சள் ஆறு தமிழனின் சிவப்பு இரத்தத்தை கழுவிக்கழுவி சிவந்து கொண்டிருக்கின்றது. இப்போது இரண்டு காக்கா மூக்கா இந்தியாவில் இருந்து கொழும்புக்கு விஜயம் செய்திருக்கின்றது. க்டந்த முறை போர் நிறுத்தம் வேண்டி விஜயம் என்று கண்துடைப்பு நாடகம் ஆடி காலிக்கடல் உணவும் சிங்களப் பெண்களின் தேங்காய் துருவலிலும் ஆனந்தப்பட்டு கேரளாவுக்குத் திரும்பி புட்டு சாப்பிட்டு ஆனந்தித்து இருந்தன. இப்போது மீண்டும் ஒரு விஜயம் நழுவிப்போகும் இந்தியப்பிடியை இறுக்கிக் கொள்ள இந்த இரு கோவேறு கழுதைகளும் மூனாக்கானாவுக்கு சொல்லிப்போட்டுப் போயிருக்கின்றதாம்.

ஏண்டா உங்களுக்கு அறிவாளிகளுக்கா பஞ்சம் இந்த இரண்டு மலையாளி செம்படவனும் இல்லையென்றால் இந்தியா என்ன வ்ங்காள விரிகுடாவில்
மூழ்கியா போவிடும்? இந்த இரண்டு பேரும் சிங்களச் சிறுக்கிகளின் பிடியில் என்ன இந்தியாவை அடகு வைத்து விட்டார்களா?

இவர்கள் போய் புலிகள் முழுதாக அழிந்து விட்டார்களா என்று பார்க்கப் போகின்றார்களாம். புலிகள் அழிவார்கள்.. உலகெங்கும் இருக்கும் ஈழத்தமிழன் ஒன்றுவிடாமல் அழியும் போது. அப்போது சொல்லியனுப்புகின்றோம் வந்து கணக்கெடுத்துக் கொள்.

கறுப்புக் கண்ணாடி கழட்டாத மூனாக் கானா என்ன இன்னும் செய்து தொலைப்பதற்கு இந்த அவதந்திர நாடகம். ஈழத்தமிழ் மக்களின் உணர்வுகளை கனவுகளை சுதந்திர தாகத்தை பூண்டோடு அழித்ததில் உன் இதயம் இன்னும் இனிக்கவில்லையா? உன் கண்கள் இன்னும் பனிக்கவில்லையா?

இன்னும் ஏன் இந்த நாடகம். மக்கள் உணர்வு உன் மனோகரா நாடக போலிப் பம்மாத்துக்களா? போதும் எங்களை விட்டுவிடு... எங்கள் சுதந்திரமாச்சுது எங்கள் உயிராச்சுது... விட்டு விடு எங்களை கொன்றது போதும் விட்டு விடு..

Tuesday, May 19, 2009


சிவப்பு சட்டை கனவுகளும் சிறு மதி படைத்த கயவர்களும்


இதோ புலிப்பாஸிஸம் செத்து விட்டது. டோலர்கள் எல்லாம் இப்போது பெட்டி படுக்கை கட்டி வெளிக்கிட்டு விட்டார்கள். இவர்களின் பிரசங்கங்களைக் கேட்பதற்கு சிங்களவன் செங்கம்பளம் விரித்துத் தயாராய் இருக்கின்றான். ஆத்துப்படுத்த வழியில்லாது ஏங்கி நிற்கும் தமிழ்ச்சனம் எல்லாம் இவர்களின் மகிமை பொருந்திய மாக்ஸிஸ மெஸ்மரிஸத்தில் கட்டுண்டு இன்னுமொரு புரட்சிக்கு ஒற்றைக்காலுடனும் ஒற்றைக்கையுடனும் தலையில்லாத முண்டமாகவும் அணிவகுக்கத் தயாராய் இருக்கின்றார்கள்.

இதோ தலித்தியம் பெண்ணியம் பேசியவர்களும் தொற்றிக்கொண்டு விட்டார்கள்.எப்படிப்பட்ட பூமி நமக்குக் காத்திருக்கின்றது. செஞ்சட்டைக் காவலர்கல் வடிவமைத்துத் தரும் பூமி.கிழக்கே மாஞ்சோலை வடக்கே நெற்கழனி மேற்கே பூஞ்சோலை தெற்கே கனி தரும் மரங்களுடன் சோலை.ஆஹா..எத்தனை அற்புதமான உலகம். இவர்கள் கைகளை இது வரை கட்டிப் போட்டிருந்த புலிப்பாஸிஸவாதிகள் ஒழிந்து போனதில் இதோ ..கோவணக் கட்டுடன் தோளில் மண்வெட்டியுடன் கிளம்பிவிட்டார்கள்.

கனவுகள்...எல்லாம் கனவுகள்.. நனவுகளில் வாழத்தெரியாது ஒழிந்து கொள்ளும் கயமைத்தனம். இந்த இரண்டு நாளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்து போய் விட்டார்களே யாராவது ஏதாவது செய்தீர்களா? நாங்கள் எல்லாம் சாதாரணர்கள். நீங்கள் தான் புது உலகின் சிப்பிகளாயிற்றே. நீங்கள் வாய் மூடி சும்மாயிருக்க முடியுமா?

போய் இறங்குங்கள்.விமானநிலையத்திலேயே உங்கள் அற்றைநாள் தோழன் டக்ளஸு துப்பாக்கிட்யுடன் வரவேற்பான். அன்றைய எதிரி கருணாவும் தான். அவர்கள் சொல்லித் தருவார்கள் எது பாஸிஸம் என்று.

சிங்களம் கற்றுக்கொள்ளுங்கள் போக முன்னர். தமிழுக்கு இனி வேலையிருக்காது. வலுக்கட்டாயமாக உங்களிடமிருந்து தமிழ் அடையாளங்கள் பிடுங்கி எறியப்படும். பெண்ணிய வாதிகளையும் கூட்டிப்போங்கள். இராணுவப்பசிக்குப் போதாதிருக்கின்றது. அங்கு மனிதர்களாய் தமிழர் இல்லை. ஜந்துகளாய்க் கிழித்து எறிந்திருக்கின்றது சிங்களப்பிசாசு.

போங்கள் உங்கள் பிழைப்புக்கு ஒரு வழியைக் கண்டு கொள்ள ..பாவப்பட்ட ஜனங்கள் காத்திருக்கின்றார்கள்.பிறந்ததைப் பற்றியே துக்கித்துப் போயிருக்கும் அவர்களிடம் எந்த "வாழ்க்கை"யைப் பற்றிச் சொல்லிக் கொடுக்கப் போகின்றீர்கள்.

புலம் பெயர்ந்த தேசங்களிலும் மனிதர்களா வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இத்தனை துயரத்தில் ஒரு இனமே துவண்டு போயிருக்க "பிறந்த நாள் வாழ்த்துச்" சொல்லுகின்றார்கள் ஒரு வானொலியில். குறைந்த பட்ச மனிதாபிமானத்தையும் கடந்து நாட்களாகி விட்டது.

என்ன ஒரு துக்கம். இனிப் பதிவுலகில் தோழர் இராயாகரனினதும் தோழர் சிறீரங்கனதும் புலிப்பாஸிஸத்திற்கெதிரான போராட்டங்களைப் பார்க்க முடியாது. புலிப்பாஸிஸமும் ஒழிந்து விட்டது. அவர்களும் இதற்குள் ஈழம் போய்ச் சேர்ந்திருப்பார்களே. புதிய மேய்ப்பர்கள் இவர்கள் அல்லவா?

தோழர் சுகனும் தோழர் அ.மார்க்ஸ்ஸையும் கூட்டிக் கொண்டு போய்ச்சேர்ந்திருப்பார். என்ன? எங்களிடையில் தான் அறிவு ஜீவிகளுக்குத் தட்டுப்பாடு வரப் போகின்றது. அதனாலென்ன.. அந்த அப்பாவி ஜனங்களுக்கு யாராவது கைகொடுப்பார்களென்றால் இந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள வேண்டியதுதான்.

இந்தியாவே வேண்டாம்


அழக்கூட முடியாத துக்கத்தில் எம்மக்கள் உறைந்து போயிருக்கின்றார்கள். ஒரு நம்பிக்கையென்றிருந்த நட்சத்திரமும் உதிர்ந்து போய் விட்டது. இனி சிங்களவனின் காலடிகள் நம் வாழ்நிலமெங்கும் உழுது போகும். 58ஆம் 77ஆம் 83 ஆம் ஆண்டு இனக்கலவரங்களையும் விட மோசமான இனக்கலவரங்கள் நமது மண்ணிலேயே புதிய குடிவரவாளர்களால் கட்டவிழ்த்து விடப்படும். புதிய பன்சாலைகளிலிருந்து "பாங்" ஓதும் சத்தம் தினம் எம் காதுகளில் விழும்.

புத்தனின் மகிமைகளைக் கூறி அல்லது அடித்து உதைத்தேனும் எம்மை புதிய பெளத்தர்களாக மாற்றிக்கொள்வார்கள். இன்று சிங்களவரின் எடுபிடிகளாக இருக்கும் ஆனந்த சங்கரி ஆனந்த சங்கர தேரோவாகவும் டக்ளசு தேவானந்த தேரோவாகவும் கருணா கருணாகர தேரோவாகவும் மாறி தாம் செய்த பாவங்களுக்குத் துணையாக எம்மையும் மதம் மாற்றும் கைங்கர்யத்தில் ஈடு படுவர்.

ஒரே நாடு ஒரே மதம் ஒரே மொழி என்ற கோஷம் வலுப்பெறும். புத்தனால் ஆசீர்வதிக்கப்பட்ட தேசம் கிடைத்ததென்று அவர்கள் சந்தோஷப்படுவர்.

இப்படித்தான் புதிய இலங்கை வடிவமைக்கப்படும். நாதியற்ற தப்பிப் பிழைத்த தமிழ்ச்சனம் வேறு வழியில்லாது தம் சுயம் இழந்து போகும். புலம் பெயர் தேசங்களில் இருக்கும் பாலகிருஷ்ணன் ,பால்கிஷூன் ஆகவும் ராமகிருஷ்ணன், ராம் கிஷூன் ஆகவும் பெயரை மாற்றி இருக்கும் நாட்டுடன் அம்மோழி பேசி செம்மையாய் ஒட்டிக்கொள்வர்.

இலங்கையில் இருந்து வரும் டூரிஸ்ட்டைச் சந்திக்க நேர்ந்தால் எனது "கிறாண்ட்பா ப்ரொம் ஸ்ரீலங்கா" என்று ஸ்பீக்கிக் கொண்டு திரிய வேண்டியது தான்.

ஈழத்தமிழ் மக்களாகிய நாம் யாராய் எதுவாய் மாறிப்போனாலும் எந்த தேசத்தில் என்ன வடிவில் இருந்தாலும் இந்தியா என்ற ஒரு தேசம் எமது எதிரி என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள். எம்மை நாசமாக்கிய கயவர்கள் என்பதை உங்கள் தலைமுறைக்கும் சொல்லிக் கொடுங்கள் . உங்கள் தொப்பூழ் கொடி உறவை அறுத்துப் போடுங்கள். அதில் விஷம் ஊறிவிட்டிருக்கின்றது. கொடிய உயிரைக் கொல்லும் விஷம். ஆலகால விஷத்தையும் விட கொடியது.

எம் ஆசைகள் ,எம் எண்ணங்கள்,எம் சுதந்திர வேட்கை,எம் தலைவன் எல்லாவற்றுக்கும் மேலாக இலட்சக்கணக்கான மக்கள் அத்தனையையும் இழந்து இன்று நாம் அனாதையாக நிற்பதற்கு இவர்கள் தான் காரணம் என்பதை தலைமுறைக்கும் சொல்லி வளருங்கள்.

பன்றியுடன் சேரவேண்டுமா? இந்தியாவுடன் சேர வேண்டுமா? என்ற கேள்வி வந்தால் தயக்கமின்றி பன்றியுடன் சேருங்கள். அதாவது சிறிது நன்றியாவது காட்டும்.

சுதந்திர ஈழம் போராட்டிப்பெற தெம்பிருந்தால் இந்தியாவை நெருங்கவும் விடாதீர்கள். எல்லோருக்கும் ஒரு வாழ்க்கைக் காலம் தான். வாழ்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்.

Monday, May 18, 2009


இந்திய -மேற்கு இராஜதந்திரத் தோல்வி


இன்றைய ஈழத் தமிழ் மக்களின் பின்னடைவு என்பதையும் விட இது இந்திய- மேற்குலகின் இராஜ தந்திரத் தோல்வியாகத்தான் பார்க்கப்படுகின்றது. இதற்குள் ஏன் இந்தியா என்ற கேள்வி இப்போது எழுகின்றது. இந்தியாவின் கையை விட்டு இலங்கையும் ஈழப்பிரச்சினையும் நழுவி நாளாகி விட்டது.அப்போது ஏன் இந்தியா பாய்ந்து பாய்ந்து ஆயுத உதவி செய்தது என்ற கேள்வி எழுகின்றது. குற்றுயிரும் குறையுயிருமாக சேடம் இழுத்துக் கொண்டிருந்த இலங்கை -இந்திய உறவை ஒட்டுப்போட தோற்று விட்ட இந்திய இராஜதந்திரிகள் செய்த கடைசி முயற்சி ..அவ்வளவே.

அதுவும் இன்றுடன் முடிவிற்கு வந்து விட்டது. இன்று இலங்கைப் பிரச்சினையில் மாஸ்டர் மைண்ட் - அது சீனாதான். அவ்வளவிற்கு சீனாவின் பிடி வலுவாக இறுகியிருக்கின்றது. பொருளாதார நெருக்கடிகளில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மேற்கு நாடுகளின் பிடியில் இருந்து உலக நாடுகளின் மீதான ஆதிக்கம் நழுவிப் போவதன் ஆரம்பம் இது.



அமெரிக்காவின் ஆலோசனைக்கிணங்க பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் மில்லிபாண்ட்டும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பேர்னாட் குச்னரும் எடுத்த இறுதி முயற்சியும் அடைந்த தோல்வியின் பின்னால் இருந்தது சீனாவே தான். ஐ.நாடுகள் பாதுகாப்புக் கவுன்ஸில் பூச்சாண்டிகளையெல்லாம் இலங்கை ஒதுக்கித் தள்ளியதன் பின்னணியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பாதுகாப்புக் கவுன்ஸிலில் திறந்த ஒரு விவாதத்திற்கே இலங்கைப் பிரச்சினை எடுக்கப்படுவதில் இருந்து இலங்கையைக் காத்து நின்றது சீனாவே தான். ஒரு முறையல்ல இரு முறையல்ல மூன்று முறை தன் வீட்டோ அதிகாரத்தை அது பாவித்தது. கடந்த புதன்கிழமை ஐ. நாடுகள் பாதுகாப்புக் கவுன்ஸிலில் நடைபெற்ற மூடிய விவாதத்தில் கூட இலங்கைக்கு எதிரான தீர்மானங்களை எடுக்கவிடாது மேற்கு நாடுகளின் கையை கட்டிப்போட்டது.

அதனால் தான் போர்க்குற்றவாளியாக இலங்கையை சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்தும் புது அஸ்திரத்துடன் பிரிட்டன் களமிறங்கியுள்ளது. அதைப்போன்ற அடுத்த அஸ்திரமே சர்வதேச நாணய நிதியத்தின் கடன் தொகையை நிறுத்தி வைக்கும் கிளாரி கிளிண்டனின் கூக்குரல். அதுவும் தமிழ் மக்களின் மீது கொண்ட காதலினால் அல்ல. இலங்கையில் தன் பிடியை இறுக்கிக் கொள்ளவே.ஆனாலும் சீனா பின்னணியில் இருக்கும் வரை மேற்கின் ஜம்பம் ஒன்றும் எடுபடப்போவதில்லை.

கடந்த வருடம் இலங்கைக்கு வழங்கப்பட்ட சீன உதவி 660 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண். அத்துடன் ஆறு போயிங் எவ்-7 ஜெற் சண்டை விமானங்களும் 25 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண் பெறுமதியான யுத்த தளபாடங்கள் மேலதிகமாகவும் வழங்கப்பட்டது.

இத்துடன் ஒப்பிடும் போது இந்தியாவின் ராடாரும் அர்ச்சுனா ரக தாங்கிகளும் பிச்சைக்காசு பெறாத உதவி.

மேற்குலகாலேயே தடுத்து நிறுத்தமுடியாது ஆச்சரியத்துடன் பார்க்கமட்டுமே முடிந்தபோது கலைஞராலும் பிரணாப் சோனியா வகையறாக்களாலுமா ? தடுத்து நிறுத்தி விட முடிந்திருக்கும்.

இந்த நன்றிக்கடனுக்காக சீனாவிற்கு என்ன கிடைத்தது. இலங்கையின் தென்பகுதியில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் துறை முகம் எதிர் காலத்தில் சீனாவின் கடற்படை முகாமாகச் செயல்படுத்தும் உத்தரவாதம். அதன் மூலம் மத்திய தரைக்கடலில் இருந்து சீனாவிற்கு எண்ணை செல்லும் கடற்தடங்கள் பாதுகாக்கப்படும்.

இதே தேவையும் ஆர்வமுமே ஜப்பானின் இலங்கை மீதான கரிசனைக்கும் காரணமாகும். சீனாவின் இலங்கை மீது இறுகிச் செல்லும் பிடி இலங்கையில் இருக்கும் மற்றைய சக்திகளை வெளியேற்றி இந்து சமுத்திரப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை வளர்த்துச் செல்லும்.

அப்போது இந்தியாவும் அமெரிக்காவின் உதவியை நாடி ஓடும். சீனாவை எதிக்கும் முன்னோடித் திட்டம்தான் இந்திய-அமெரிக்க அணு ஆயுத உதவி ஒப்பந்தம். இன்னும் 5 வருடங்களுக்குள் சீனா இந்தியா மீது நேரிடையாகவே தலையிடத் தொடங்கும். இதில் என்ன துரதிர்ஷ்டமென்றால் இவர்களின் ஆக்கிரமிப்புப் போரில் முதல் பலியானது ஈழத் தமிழினம் என்பது துரதிர்ஷ்டமே.

President Mahinda Rajapaksa's government has won China's financial, military and diplomatic support – along with the confidence to brush off Western protests about its behaviour.

In the closing stages of the assault on the Tamil Tigers, the army surrounded about 50,000 civilians inside a tiny enclave. Other governments would have found it difficult to resist outside calls for a unilateral ceasefire, at least to allow the evacuation of wounded innocents. If the Security Council had thrown its weight behind these demands, backing them with a United Nations Resolution, they would have become still harder to ignore.

But Mr Rajapaksa dismissed all calls for restraint and Sri Lanka's army duly pressed on until final victory. His only gesture to outside opinion was a promise to refrain from turning heavy artillery on thousands of people trapped inside the enclave. Evidence gathered by Human Rights Watch, including satellite imagery and eyewitness accounts, suggests this pledge was quickly broken.

Less fortunate governments would have paid a diplomatic price for this behaviour. But China has consistently shielded Sri Lanka, notably by keeping the crisis off the agenda at the UN. Until last Wednesday, Beijing had managed to prevent the Security Council from even discussing the situation. When a debate was conceded, Chinese objections ensured there was no resolution and the Council took the minimalist option of releasing a statement of concern.


What has Sri Lanka given in return? The answer is that China has acquired a strategic ally near the crucial Indian Ocean shipping lanes which carry energy supplies from the Middle East. Beijing is now building a port on Sri Lanka's southern coast which could serve as a future naval base

வேலிக்கு ஓணான் சாட்சி



வெள்ளை வேட்டிக் கள்ளரெல்லாம் இப்போது சாட்சியம் சொல்ல வெளிக்கிட்டிருக்கின்றார்கள். இது வரை நடந்த இன அழிப்பிற்கு காரணமானவர்களே இவர்கள் தான். புலிகளைத் தடை செய்ததன் மூலம் தமிழ் மக்களைத் தனிமைப்படுத்தியதே இவர்கள் தான்.

இன்று தமிழ் மக்களின் தலையில் விழுந்த குண்டுகளின் சொந்தக் காரரும் இவர்கள் தான். பின்னே என்ன? கோழிப்பன்ணையே வைத்திருக்க வழியில்லாத சிங்களவன் கொத்துக் குண்டுகளையா தயாரிப்பான்? கொண்டை கபூன் பணியாரம் சாப்பிட்ட குடுமி அப்புகாமி இன்று கொலைவெறி பிடித்தலைந்ததற்கும் குவித்துப்போட்ட பிணமலைக்கும் இந்த வெள்ளைச் சட்டைக் கனவான்களே காரணம்.

ஒரு திருகோணமலையைப் பிடிக்க ஒரு அமெரிக்க மயிரை அதில் நட்டு வைக்க எத்தனை ஆயிரம் தமிழ் மண்டையோடுகளைக்குவித்திருக்கின்றார்கள். ஒரு மன்னாரில் கப்பல் விட இந்தியக் களவாணிகள் எத்தனை குழந்தைகளின் நடு முதுகைக் கீறி எடுத்திருக்கின்றார்கள்.

வெட்கமாய் இல்லை இவர்களுக்கெல்லாம். மண்டையோட்டு மாலையுடன் மலையாய்க் குவிந்திருக்கும் பிணங்களின் மேல் இந்தியாவின் தர்ம சக்கரக் கொடியை நடுவதற்கு.

//" வட பகுதியில் இடம்பெற்ற போரினால் உருவாகியிருக்கும் பாரிய மனிதாபிமான பிரச்சினையைத் தீர்த்துவைப்பதில் ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்" என சிறிலங்கா அரசாங்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி கேட்டுக்கொண்டிருக்கின்றது.//

வட பகுதியில் போர் ஏன் வந்தது? மனிதாபிமானப் பிரச்சினைகள் ஏன் வந்தது? மனிதாபிமானம் இல்லாத மிலேச்சர்கள் உங்களால். உங்கள் பணப்பெட்டியை நிரப்புவதற்காக அப்பாவிகளுக்கு யுத்த வெறியை ஊட்டி ஆயுதங்களை விற்பதனால்... இத்தனை மனித அவலமும் தோன்றியிருக்கின்றது. தடுத்து நிறுத்தியிருக்கக் கூடிய இத்தனை இறப்பையும் தடுக்காது விட்டது இன்னும் கொஞ்சம் "காசு" பார்க்கும் பேராசையால்.

புலிகள் பயங்கரவாதிகளா? உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள். உங்கள் ஊரில் வந்து குண்டு போட்டோமா? இரயிலைக் கடத்தினோமா? எப்படி பயங்கரவாதிகள் ஆனோம். உன் ஆதிக்கத்திற்கு தடையான முள்ளென நினைத்தாய் தடை போட்டாய். ஒரு இனத்தையே நட்டாற்றில் விட்டாய்..

களவாணி இந்தியா ..மெளனம் காக்கின்றது 25 ஆயிரத்திற்கு மேல் அப்பாவி மக்கள் இந்த இரண்டு நாளில் கொலை செய்யப்பட்டார்கள். நீங்கள் அகிம்சை தேசம்.. தூ.. காறித்துப்ப வேண்டும். தர்மசக்கரத்தின் அர்த்தம் தெரியுமா? உங்களுக்கு..அதை பிய்த்து எடுத்து விட்டு ஒரு மண்டையோட்டை வைத்து விடுங்கள்..அது தான் இன்றைய இந்தியாவிற்குப் பொருத்தமானது.

இனி வருவார்கள் அகிம்சையின் தூதர்கள் ..அலட்டல் நாய்கள்...புண்ணிய பாரதத்தின் பதர்கள்...

திறமையற்ற முட்டாளை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?


இத்தனை களேபரத்தின் மத்தியிலும் சர்வதேசத்தின் செயற்பாடுகளி்ன் மீது கொஞ்சநஞ்ச நம்பிக்கை ஒட்டிக்கொண்டிருந்தது. அதற்கும் ஒரு முட்டாளை அனுப்பி பான் கி மூன் ஆப்படித்துக் கொண்டிருக்கின்றார். முட்டாள் விஜய் நம்பியாரைப் பற்றித் தான் சொல்கின்றேன்.

"மோதலை இடைநிறுத்தி மோதல் பகுதியில் சிக்கியுள்ள மக்களின் உடனடித் தேவையை கவனிப்பதே" இந்த விஜத்தின் நோக்கமாகும். எத்தனை தூரம் இது முக்கியமானது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளக் கூடியது தான். ஐ.நாடுகள் என்பது சர்வதேசத்தின் மனச்சாட்சியாக இருக்க வேண்டியது. அதில் இப்படிப்பட்ட முட்டாள்களையும் பிணந்தின்னிக் கழுகுகளையும் வைத்திருக்க வேண்டியதன் தேவை என்ன வந்தது?

முதல் முறை கொழும்புக்கான விஜயத்தின் போதே இந்தப்பிணம் தின்னியின் முகம் அம்பலமாகி விட்டது. இலங்கையின் நிலவரம் என்ன என்பதை ஐ.நாடுகள் பாதுகாப்புக் கவுன்ஸிலின் முன்னிலையிலேயே எடுத்துரைக்க மாட்டேன் என்று அடம் பிடித்த முட்டாள் கழுதை இது.

அதே முட்டாள் கழுதையிடம் இன்னுமொரு பொறுப்பைக்கொடுக்க பான் கி மூனிற்கு எப்படி புத்தி போனது. அப்போது இந்தக் கழுதையை கடுமையாகக் கண்டித்த பாதுகாப்புக் கவுன்ஸிலின் உறுப்பு நாடுகளான பிரிட்டனும் பிரான்ஸும் எவ்வாறு இப்போது மட்டும் சம்மதித்தார்கள்?

நியூயோர்க்கில் இருந்து கொழும்பு செல்லும் போதும் ஒரு முறை டில்லி சென்று சோனியாவின் பின்பக்கத்தை கழுவாவிட்டால் இந்த பன்னிக்குட்டிக்கு தூக்கமே வராது போலும். யாரோ பின்பக்கத்தைக்கழுவுவதை விட தன் பொண்டாட்டியின் உள்பாவாடையைத் தோய்த்துக் கொண்டு கட்டாடியாக வீட்டில் இருக்கலாம்.

அதற்கு முதல் "லண்டன் ரைம்ஸ்" பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இந்த முட்டாளிடம் இந்நோக்கம் பற்றி அதிக நம்பிக்கை காணப்படவில்லையாம். நம்பிக்கை இல்லாத உனக்கு பிறகேன் இந்தப்பொறுப்பு. ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட அஜண்டாவின் படியா ஐ.நாடுகள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. செத்துக்கொண்டிருக்கும் எம் உறவுகள் என்ன மலினப்பட்டுப்போன உயிர்களா?

இதற்கெல்லாம் நீங்கள் அத்தனை பேரும் பதில் சொல்லும் காலம் வராமலா போகப் போகின்றது.

//விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த போராளிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களை ஐ.நா. பொறுப்பெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாகவும் கொழும்பில் முக்கிய அமைச்சர்கள் அதிகாரிகளுடன் அவர் ஆராய்ந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தபோதிலும் இந்த விடயத்தை சிறிலங்கா அரசு ஒரேயடியாக நிராகரித்துவிட்டதால் அதற்கான மேலதிக அழுத்தங்களைக் கொடுப்பதற்கு அவர் முற்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.//

ஏன் முற்படவில்லை? முடிவெடுப்பது ஐ.நாடுகள் சபையா? அல்லது சிங்கள அரசா?

ஒரு நாடு சர்வதேசத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற முற்படாவிட்டால் அல்லது எதிர்த்துச் செயற்பட்டால் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்காக ஐ.நாடுகள் சமாதானப் படையை அங்கு அனுப்பும். இது தானே சொசவேவா,கிழக்குத் தீமோர் எங்கும் நடந்தது. அடுத்து என்ன? ஐ.நாடுகள் படையை அனுப்பவேண்டியது தானே? செய்வார்களா?

சிங்கள அரசின் கீழ் உரிமைகள் மட்டுமல்ல..சாதரண சகஜ வாழ்வு கூட கிடைக்காது..நிலமை இப்படியிருக்கையில் மேற்கு நாடுகளும் ஐ.நாடுகளும் இத்தனை கொலைகளுக்கும் காரணமான இந்தியாவும் கூறுவதைப்போல தமிழ் மக்கள் உரிமையுடன் வாழ வைக்கப்படுவதற்கு ஐ.நாடுகளின் பிரசன்னம் அங்கு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ் என்ற புல் பூண்டு கூட அங்கில்லாது சிங்களவன் துடைத்து விடுவான்.

//"அனைத்து வழிகளிலும் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கே சிறிலங்கா அரசு விரும்புகின்றது என்பதுதான் எனது கருத்தாகும்.//

எத்தனை வழிகளில் உன்னைச் சிங்களவன் திருப்திப்படுத்தினான். எத்தனை சிங்களக் குட்டிகள் உன்னைச் சிந்திக்க விடாது மயக்கத்தில் வைத்திருந்தார்கள்.


// சரணடைவது தொடர்பான விதிமுறைகளை ஏற்றுக்கொள்ளுமாறு சிறிலங்கா அரசைத் தூண்டுவது கடுமையான போராட்டமாக இருக்கும் என நான் கருதுகின்றேன்" என இது தொடர்பாகக் குறிப்பிட்ட நம்பியார்,//

// பேரழிவு ஒன்று ஏற்கனவே இடம்பெற்றிருக்கின்றது என்பதை தன்னால் புரிந்துகொள்ள முடிவதாகவும் தெரிவித்தார்.//

இதைச் சொல்வதற்கு நீ எதற்கு முட்டாளே! ஐ.நாடுகள் எதற்கு? சர்வதேசம் எதற்கு? இதைத்தான் 60 வருடமாக நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோமே. இப்பேரழிவை நினைத்திருந்தால் சர்வதேசத்தால் தடுத்திருக்கமுடியும். ஏன் சர்வதேசம் செய்யவில்லை?

"Chinese weapons, Indian intelligence, Sinhala Armed personals and racist Sri Lankan leaders came together to perform one of the most cruel war that has cost the lives of many thousands innocents,"


"Leaders of Sri Lanka and some responsible officers in the UN, should be questioned in international courts in order to find out if they were responsible for the deaths of innocent Tamils." -Richard Dixon, a columnist in London's Telegraph
அனுப்ப/அடையாளமிட

Add-Tamil