ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, May 10, 2009


சாத்தான் வேதம்_- சோனியா புதியது










ஆயுதங்களை வழங்கி யுத்தத்தை முன்னெடுத்திருக்கும் சோனியா என்றசாத்தான் இன்று வேதம் ஓதிக்கொண்டிருக்கின்றது. மஞ்சள் துண்டு மடச்சாம்பிராணி கூட இருந்து பாதுகாப்பு கொடுத்துக்கொண்டிருக்கின்றது. இன்று தானே குண்டு மழை பொழிந்து ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களை அனியாயமாய் இரத்தமும் தசையுமாய் கிழித்துப் போட்டிருக்கின்றது இந்திய ஆயுதங்கள்.

இந்தியன் உழைப்பில் மருந்து திணிக்கப்பட்ட குண்டுகள் தானே தமிழன் உடலம் கிழித்து உதிரம் ஓடப்பண்ணியிருக்கின்றது. இத்தாலி தேவரடியாள் பத்தினித் தன்மையை நிரூபிக்க மண்டை கிழிந்து மூளை கொட்டிப்போய்க் கிடப்பது தமிழன் அல்லவா? அந்த விளக்குமாற்றுக்குத்தானே கலைஞன் என்ற மொட்டாக்குக் குள்ள நரி பட்டாடை போர்த்தி பதவிசாக வரவேற்கின்றது.

"இலங்கையில் நடக்கும் போரில் சிறுவர்களும் பெண்களும் அப்பாவி மக்களும் படும் அவதி குறித்து வருத்தப்படுகின்றேன் " என்று நுனி நாக்கினில் நீலி வேஷம் போடுகின்றது. தமிழ் நாட்டில் என் கால் படும் போது பீரங்கியில் பட்டாசு கொழுத்தி தமிழனின் ஓலம் என் காதில் விழச்செய்ய வேண்டுமென்று சிங்கள ராஜபக்ஷவிடம் சொல்லிவிட்டு வந்து தமிழினக்காவலனின் துணையில் மமதையுடன் ஊளையிடுகின்றது.

தமிழகத்தில் இருப்பவர்கள் சோறுதான் திங்கிரார்களா? என்ற கேள்வி எழுகின்றது. சொந்தச் சகோதரன் துடிதுடித்து சாதல் கண்டும் சிந்தை இரங்காதவர் பற்றி வேறு என்ன நினைக்க முடியும். செருப்பால் அடித்துத் துரத்த வேண்டாமா? இந்த சீதேவியின் மூத்தாளை.

விடுதலைச் சிறுத்தைகள் ? விளக்கெண்ணைகள். ஒரே மேடையில் கும்மி போடுகின்றது. சீறும் என்ற எதிர்பார்ப்புப்போய் சிங்கியடிக்கின்றது சைத்தான்.

தமிழன் கோபம் இவர்களை சிதறவைத்தே கொல்லும். அந்த நாளும் விரைவில் வர வேண்டும்.நாற்பதும் நமக்கே ..நாளை நமக்கே என்று ஓதம் பாடுகின்றது அந்த சிறு நரி. அதற்கு ஒத்து ஊதுகின்றது இந்தத் தமிழ் நரி.

கண்ணிருந்தும் குருடரன்றோ.. இந்த நரிகள்.இந்தப்படங்களைப் பார்த்த பின்னும் ..உரிமையுடன் வாழ வழி செய்வோம் என வெற்றுப்பேச்சு பேசும் இவர்கள் மாக்கள் அல்லாது வேறு மனிதரா?.. என்ன?

"நேற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் என்ற தமிழர் பகுதியில், இலங்கை இராணுவம் நடத்தி வரும் தாக்குதலில், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வந்திருக்கிறது.

இப்படி ஒவ்வொரு நாளும் தமிழர் படுகொலை குறித்த செய்தி வந்து கொண்டிருக்கிறது. உண்மை இப்படி இருக்க, நாங்கள் போர் நிறுத்தம் ஏற்படுத்தி விட்டோம், அது, எங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லுவதற்கு சோனியா காந்திக்கும், கருணாநிதிக்கும் எப்படி மனம் வருகிறது?

சோனியா காந்திக்கும், கருணாநிதிக்கும் நான் சொல்கிறேன், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சாதீர்கள். ஒரு தேர்தலுக்காக, எங்கள் தமிழ் இனத்தை அழிக்காதீர்கள்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், இலங்கையில் தமிழர்களை முற்றிலுமாக அழித்துவிட, சபதம் மேற்கொண்டது போல செயல்படும் ராஜபக்சவுக்கு ஆயுதம் வழங்கியவர்கள் நீங்கள். மன்னிக்க முடியாத இந்த துரோகத்தைச் செய்த உங்களை, தலைமுறை தலைமுறையாக எங்கள் தமிழ் இனம் நினைவில் வைத்து தண்டிக்கும்.

இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு ஆயுதங்களை அனுப்புகிறது, அதைத் தடுத்து நிறுத்துங்கள் என்று உலகமே மன்றாடியது. கேட்டாரா கருணாநிதி? காதுகளை மூடிக் கொண்டாரே!

இலங்கை இராணுவத்திற்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இது தமிழர்களுக்கு எதிராகத் தான் சென்று முடியும் என்று எல்லோரும் எச்சரித்தோமே, கேட்டாரா கருணாநிதி? கண்களை மூடிக் கொண்டாரே!

இங்கே மீண்டும் நான் வலியுறுத்திச் சொல்லுகிறேன். இலங்கைத் தமிழர்கள் நிம்மதியாக வாழ, அவர்கள் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பு கிடைக்க, உரிமைக் குடிமக்களாக அவர்கள் தலைநிமிர, தனி ஈழம் தான் ஒரே தீர்வு. இது எனது உறுதியான பிரகடனம். இதில் மாற்றம் இல்லை
. - இது ஜெயலலிதா உரை

இந்த பிறப்பால் கன்னடராயிருக்கும் இந்தப் பென்ணுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட இந்தத் தமிழ் மண்ணாங்கட்டிகளுக்கு இல்லையே... பிறகென்ன நீங்கள் தன்மானத் தலைவர்கள்...

இவர்களுக்கு ஓட்டுப் போடுபவன் தமிழன் இரத்தத்தில் சோறு தின்பவன்

1 comment:

இட்டாலி வடை said...

வெண்காட்டான் has left a new comment on your post "சாத்தான் வேதம் -சோனியா":

nichayamaka. tamilarkalukul mika mika mukkiyamana ondru ottrumai. tamil unarvu. tamil pattru.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil