இட்டாலிவடை

ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, December 3, 2012


மீண்டும் நான் சுவாசிக்கின்றேன்

நிறையக் காலம் உங்களையெல்லாம் மறந்து போயிருந்தேன். உலகம் உருண்டை என்பது உண்மையானதால் மீண்டும் சந்திக்க முடிந்திருக்கின்றது. இனி உணர்ச்சி வசப்பட்ட அரசியல் கிடையாது. அதனால் எந்த நன்மையும் கிடையாது என்பதை மே 2009 நிரூபித்திருக்கின்றது. எல்லாம் முடிந்து விட்டதான நினைப்புத்தான் இத்தனை காலம் எழுந்திருக்க விடாது கவிழ்த்துப் போட்டிருந்தது.

நானும் சாதாரண மனுஷன் தான் என்பதை காலம் நன்கு உறைக்க உணர்த்தியிருக்கின்றது. வாழ்க்கை என்பது அரசியல் மட்டுந்தானா என்ன? சல்லடை போட்டுத்தேட சுவாரசிக்க சுவாசிக்க ஆயிரம் விடயங்கள் இருக்கின்றது. அதைப் பகிர்ந்து கொள்ள விழைவதே என் உயிர்பபு என்பேன். அதுவே பிரபஞ்ச இயக்கமும் கூட..

ஆக பிரபஞ்ச இயக்கம் உள்ளவரை என் சுவாசமும் இருக்கும்.இன்னும் இனிமையான விடயங்களை தொடர்ந்தும் பகிர்ந்து கொள்வோம்.

Sunday, April 29, 2012


யாரிந்த கருணாநிதி

Friday, February 4, 2011


அடுத்த பலிக்கடா கருணாநிதி?


இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற யுத்த சூழலின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கும் கருணாநிதிக்கும் இடையிலான உறவு விரிசல் அடைந்து காணப்பட்டது. தற்போது இவர்கள் இடையே மிக நெருக்கமான உறவு காணப்படுவது பல்வேறு தரப்பினரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Monday, January 31, 2011


மீனவர்களின் கண்ணீரும் நொண்டிக்குதிரையும்


நீண்ட காலத்தின் பின் எழுதத் தோன்றுகின்றது. பாக்கு நிரிணையில் பதைபதைக்க உயிர்துறக்கும் உறவுகளுக்காக மெளனம் துறக்க நேரிடுகின்றது. வன்னியில் விதைத்த வேதனைகள் பாசியாய்ப் படிந்து மனம் முழுவதையும் மூடிவிட்டிருந்தது.

எல்லாவற்றையும் தாண்டி இன்னும் பேசவேண்டிய தேவைக
ள்  நீண்டு கொண்டே போகும் என்றே தோன்றுகின்றது. சிங்களவன் சுட்டுப்போடும் மீனவனை பலிகொடுக்கும் பூசாரிகளைத் தட்டியெழுப்ப டுவிட்டரில் டுவிட்டுபவர்களையும் பெட்டிசனில் கையெழுத்திடுவோரையும் பார்க்கும் போது சிரிப்பாக இருக்கின்றது.

Friday, May 7, 2010


தம்மை அழித்தவர்களை ஈழத் தமிழர் பழிவாங்க வேண்டும் - நிராஜ் டேவிட்

ஈழத் தமிழர் மீதான அழித்தொழிப்பு யுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு ஒரு ஆண்டு நெருங்கிக்கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழ் இனத்தின் வரலாற்றில் என்றைக்குமே மறக்கமுடியாத நாட்கள் அவை.
ஈழத் தமிழர்கள் ஒரு மூலைக்குள் முடக்கப்பட்டு பட்டினி போடப்பட்டு இரசாயனக் குண்டுகளாலும் கனரக ஆயுதங்களாலும் துடிக்கத் துடிக்க அழிக்கப்படதான ஒரு நிகழ்வு சுமார் ஒரு வருடத்தின் முன்னர் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.
கைகளில் வெள்ளைக்கொடியை ஏந்தியபடி சரணடையச் சென்றவர்களைக் கூட சகட்டுமேனிக்குச் சுட்டுத்தள்ளிய கொடுரம் அரங்கேறியிருந்தது. போர்க்கைதிகளை படுகாயப்பட்ட போராளிகளை இரக்கமின்றி கொலை செய்த கொடுமை நடைபெற்றிருக்கின்றது. குழந்தைகள் வயது முதிர்ந்தவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் என்று எந்த பரிதாபமும் இல்லாமல் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகாமான அப்பாவித் தமிழ் மக்களை முற்கம்பி வேலிகளுக்குள் அடைத்து தனது வெற்றியைக் கொண்டாடிய அசிங்கம் எமக்கு நிகழ்ந்திருந்தது.

Saturday, February 13, 2010


40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் - பொய்களை சிறீலங்கா தெரிவித்தது


முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்கா அரச படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது 40,000 பொது மக்கள் வரையில் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என ஐ.நா. சபையின் பேச்சாளராக கொழும்பில் முன்னர் பணிபுரிந்த கோர்டன் வைஸ் தெரிவித்திருக்கின்றார்.
வைஸ் தெரிவித்திருக்கும் இந்தத் தகவல்கள் கொழும்பில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

அவுஸ்திரேலியாவின் ஏ.பி.பி. நியூஸ் காணொலி நிறுனத்திற்கு வழங்கிய பேட்டி ஒன்றில், அனைத்துலக நாடுகளைத் தவறாக வழிநடத்தக்கூடிய தகவல்களை அல்லது பொய்களை அரசாங்கம் தெரிவித்தது எனவும் அவர் கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.

Wednesday, January 27, 2010


டேட்டிங் போகும் பெண்களுக்கு என்ன மனத்தடை?


என்னவென்று தெரியவில்லை. என் மனத்தடை எந்த நுண்ணரசியலுக்கும் புலப்படாதது. டீ.ஜே எழுதியிருந்த "அவள்" (நெடுங்கதை)ஒருவளின் கதை என்னை இப்போதும் பிறாண்டிக்கொண்டிருக்கின்றது. என்னைப் போன்ற மடச்சாம்பிராணிகளால் புரிந்து கொள்ள முடியவில்லையோ தெரியவில்லை... காமண்ட்ஸ் யாரும் கொடுக்கவில்லை. அட டேட்டிங் போவதற்கு நம் தமிழ்ப் பெண்கள் இத்தனைமுண்டியடிக்கின்றார்களா? என்ன? "காண்டம்" நிறைப்பது மட்டும் வாழ்க்கையை நிறைவாக்கி விட முடியுமா? (ஏன் இப்படி நினைக்கின்றார்கள்)
அனுப்ப/அடையாளமிட

Add-Tamil