இட்டாலி வடை

ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

தமிழன் இரத்தம்

Thursday, November 5, 2009


மனங்களின் சந்திப்பும் மசாலாக்களின் வசீகரிப்பும்


எழுத்துக்கள் எழுத்தாளர்கள் என்ற பிரமிப்பும் பிரமையும் இப்போது இணைய எழுத்தாளர்களையும் ஏற்றுக்கொள்வது அல்லது இணைத்துக் கொல்வது வரை நீட்சி பெற்றிருக்கின்றது. ஏற்றுக்கொள்வது அல்லது இணைத்துக்கொள்வது பற்றிய கருத்துக்கள் யாரால் கூறப்படக்கூடும். வாசகர்கள் அல்லது பயனாளர்களால் மட்டுமே இவ்வாறு கூறமுடியும் என்பது எனது கருத்தாகும்.

ஏனெனில் எழுத்துக்கள் தேடப்படுவதும் வாசிக்கப்படுவதும் வாசகர்களாலேயே நடக்கின்றது. வாசகர்கள் எல்லோரும் எழுத்தாளர்களாக அல்லாவிட்டாலும் எழுத்தாளர்கள் எல்லோரும் வாசகர்களாக அறியப்பட்டவர்களே.

தற்போதைய வாசிப்பு இணையத்தின் வாயிலாகவே பெரிய அளவில் நடைபெறுகின்றது. உலகத்தின் எந்தமூலை முடுக்கில் நடைபெறும் நிகழ்வுகளும் நிமிடத்தில் வாசகன் முன்பு கொண்டுவரப்படுகின்றது. உலக நடப்பியலை வாசகன் முன்பு கொண்டு வரும் தெரிவு முன்னர் பத்திரிகைகளிடம் மட்டுமே இருந்தது. பெரும் பத்திரிகைகளால் சார்பு, சார்பற்ற நிலையில் கொடுக்கப்பட்ட விடயங்களே உலக அறிவை போதித்தது. ஆனால் இப்போதோ உலக நடப்பியலை தெரிவு செய்யும் வசதி சார்பு, சார்பற்ற வகையில் வாசகன் முன்பு விடப்பட்டிருக்கின்றது. அத்தனை தூரம் நிகழ்வுகள் வெளிச்சம் போடப்பட்டு அம்பாரமாக இணைய வெளியெங்கும் குவிந்து கிடக்கின்றன.

இதைச் சாத்தியமாக்கியவர்கள் இணைய எழுத்தாளர்களே.முக்கியமாகப் பதிவர்கள். இவர்கள் நிகழ்வுகளைப் பதிவு செய்வதையும் தாண்டி கலை இலக்கிய உலகிலும் கால் பதிக்கின்றார்கள். காத்திரமான படைப்புக்களை சகல வெளிகளிலும் படைக்கின்றார்கள். இப்படைப்புக்களை வாசிக்கும் ஒரு வாசகர் வட்டத்தையும் கட்டியெழுப்புகின்றார்கள்.

இது இவ்வாறு இருக்க சகல அல்லது பெரும்பான்மை தமிழக வாசக வட்டத்தால் இது வரை ஏற்றுக்கொள்ளப்படாத சாருநிவேதிதா, தான் இணைய எழுத்துக்களையே வாசிப்பதில்லை என்றும், இணையத்தில் வெறும் குப்பைகள்தான் எழுத்தாக்கப்படுவதாகவும், இணையத்தில் எழுதுபவர்கள் எழுத்தாளர்கள் அல்ல என்றும் தனது கருத்தை கூறியிருக்கின்றார்.

சாருநிவேதிதா பற்றிய முன்னறிவிற்கு இதைப்போன்ற பல உதாரணங்கள் கொட்டிக்கிடக்கின்றது. தன்னை ஒரு எழுத்தாளர் என்று நிரூபிக்க முயலும் ஒருவரின், மற்றவர்களை ஊக்குவிக்க அல்லது ஏற்றுக்கொள்ள விரும்பாது மறுதலிக்கும் மூர்க்கம் இவ்வாறு வெளிப்படுகின்றது.

சமூகத்தில் எழுத்தாளர்கள் எனப்படுபவர்கள் காலத்திற்குக் காலம் பிரதியீடு செய்யப்படுகின்றார்கள். ஒரு காலத்தில் போற்றப்பட்டவர்கள் பின்னர் கண்டு கொள்ளப்படுவதில்லை.சிலர் காலத்திற்கும் போற்றப்படுக்கின்றார்கள். இவ்வகையான ஏற்றமும் இறக்கமும் கொண்டதான தாக்கமே எழுத்தாளர்களால் சமூகத்தில் உருவாக்கப்படுகின்றது. இதற்கு நல்ல உதாரணங்கள், புதுமைப்பித்தன் அவரைத்தொடர்ந்து ஜெயகாந்தன். வாசக உலகத்தால் கொண்டாடப்பட்டவர்கள் இவர்கள்.

இத்தகைய காத்திரமான தாக்கத்தைச் சமுதாயத்தில் உருவாக்க முடியாது தத்தளிக்கும் சாருநிவேதிதா போன்றவர்கள் ஒரு எதிர்காலத்தையே நிராகரிக்கும் போக்கு வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டியது. தாங்கள் ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்களாகவே இவர்கள் இருக்கின்றார். இந்த வகையில் எஸ்.ராமகிருஷ்ணன் போற்றப்படக்கூடியவர். இணைய எழுத்தில் பலர் நன்றாக எழுதுவதாகவும், அவர் தொடர்ந்து பல நல்ல பதிவுகளை வாசித்து வருவதாகவும் கூறியிருக்கின்றார். இதனால் குறைந்த பட்சம் தன் வாசிக்கும் மனோபாவத்தையும் தன் உருவாக்கத்தின் மூலத்தையும் மறக்காத நிலையை வெளிப்படுத்துகின்றார்.

ஒரு எழுத்தாள அங்கீகாரத்தை இவ்வாறு வாசக அனுபவத்தின் மூலமாகப் பெறும் நேரத்தில் சாருநிவேதாவால் முன்வைக்கப்படும் குப்பைகள், மொக்கைகள் என்ற கருத்துருவாக்கம் பற்றியும் பார்க்கப்பட வேண்டிய தேவை இருக்கின்றது.

இணைய எழுத்தாளர்களின், பதிவர்களின் எழுத்துக்கள் வாசக அனுபவத்தை மேவிய எழுத்தாள வெளிப்பாடுகளின் முகையவிழ்ப்புக்களே. அவர்களின் சூழல், தகமை, உலகம் பற்றிய பார்வையின் விசாலம் என்பவையே அவர்களை போற்றப்படும் எழுத்தாளத் தகமைக்கு உந்தித் தள்ளுகின்றது.

அவர்களால் கொள்ளப்படும் சமுதாய அக்கறையும் வெளிப்படுத்துகையும் அவர்களுக்கான இடத்தை வாசகர் வட்டத்தில் உருவாக்கும். அவர்களுக்கான அங்கீகாரம் தீர்மானிக்கப்படும். வெறும் மொக்கைகள் பத்தோடு பதினொன்றாக அவர்களை வெளியேற்றிவிடும். தமிழ், தமிழக சூழலில் இந்த சமுதாய அக்கறை மிகவும் உயர்ந்த பட்ச தேவையோடு இருக்கின்றது. எழுத்தாளர்களால் நிரப்பப்பட பெரும் வெளியொன்று காத்திருக்கின்றது. அத்தனை தூரம் உலக சமூகத்துடன் ஒப்பிடும் போது நமது சுழல் அழுகி நாற்றமெடுத்துப் போய் இருக்கின்றது. ஒரு சில பேனாக்கள் கூர்மையுடன் இதனை எதிர்கொண்டிருந்தாலும் பலர் பயங்காரணமாகவோ அல்லது ஏதாவது ஒரு காரணத்தாலோ பட்டும் படாமல் விலகி நிற்கின்றார்கள்.

இத்தகைய சமூக அக்கறைக்கு அப்பால் விலகி நின்று எழுத முற்படுபவர்கள் மொக்கைகளை மட்டுமே பிரசவிக்கின்றார்கள். சிலர் தங்களைக் காத்துக் கொள்ளும் உத்தியுடன் அரச இயந்திரத்தின் சீற்றத்தில் இருந்து விலகி நிற்கும் வசதியுடன் சுற்றி வளைத்து எழுதுகின்றார்கள். இவர்கள் அனைவரும் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எழுத்தாளர்கள் என்பவர்கள் சமூக அக்கறையுடன் சமூகத்தை வழிநடாத்தித் செல்பவர்களே ஒழிய சமூகத்தில் நடப்பவற்றைப் பதிவு செய்பவர்கள் மட்டுமல்ல.

Saturday, October 31, 2009


ஓரு கவிதையும் ஒரு கதையும்



"குற்றவாளிகள்" என்ற கவிதை கல்பற்றா நாராயணன் எழுதியது .
செய்தவர்களின்
குற்றத்தை நிரூபிப்பது
பெரிய வேலையொன்றுமல்ல
அவர்கள் போகும் தூரத்திற்கு
எல்லையுண்டு

மறைத்து வைத்தவைக்கு
அருகிலிருந்து அவர்கள் விலகுவதில்லை
சிறு வேறுபாடுகள் இருந்தாலும்
அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்பது
உறுதி
ஒன்றுமில்லாவிட்டாலும்
அவர்களுக்கு எல்லாம் தெரியுமல்லவா?

செய்யாதவர்களால்தான்
சிக்கலே
அவர்கள் ஒப்புக் கொள்வதேயில்லை
அவர்கள் பதுங்கி நிற்குமிடத்தில் தோண்டிப்பார்த்தால்
ஒன்றும் கிடைப்பதில்லை
ஒருவகையில்லும் அவர்கள் ஒத்துழைப்பதில்லை

நிரபாரதிகளைப் போல
கல்மனசுக்காரர்கள் வேறில்லை



கவிதையை வாசித்த போது என் மக்கள் அவலமும் துயரமும் தான் நினைவில் வந்தது. அது துயரத்தையோ அவலத்தையோ நேரிடையாகச் சொல்லும் கவிதையுமல்ல.. அனாலும் குற்றவாளிகளின் மனங்களைப் படம் பிடிக்கும் கவிதை. படுகொலையின் பின்னால் சிங்கள அரசும் அதன் அமைச்சர்களும் ஆடும் அவலத்தை அது படம் பிடிக்கின்றது.

ஐக்கிய நாடுகளோ அமெரிக்காவோ என்ன ஆதாரத்தை வைத்திருக்கின்றதோ இல்லையோ ஆனால் சிங்கள அரசு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் பதில் கூறத் தொடங்கியிருக்கின்றது. அரண்டு மிரண்டு அதிரடி ஆட்டத்தில் புகுந்துள்ளது. ஏனென்றால் படுகொலையின் சரித்திரத்தை ஆதியோடந்தமாக அறிந்தது அதுவொன்று தானே.

அதுவா? இதுவா? என்று அது சந்தேகித்துச் சந்தேகித்தே தன்னை வெளிப்படுத்தி விடும்.சிங்கள ஜனாதிபதி ராஜபக்ஷேயும் பிரதமர் இரட்ணநாயக்கேயும் பாவங்களைத் தொலைக்க கோயில் கோயிலாக படையெடுக்கின்றார்கள். அவர்கள் செய்த பாவங்களையும் அதற்குண்டான சம்பளத்தையும் அறிந்தவர்கள் அவர்கள் தானே..

அதைப் போலவே நம் மக்கள். ஒன்றும் அறியாதவர்கள். ஏன் கொல்லப்படுகின்றோம் என்று அறியாமலேயே கொல்லப்பட்டவர்கள். ஏன் தண்டிக்கப்படுகின்றோம் என்று அறியாமலேயே தண்டிக்கப்பட்டவர்கள்.

என்ன குற்றம் என்று அறியாமலேயே முட்கம்பி வேலிக்குள் திணித்து விடப்பட்டவர்கள். அவர்களின் பெருமூச்சு கொலையாளிகளைச் சித்தம் கலங்க வைத்து பைத்தியமாக்கிவிடும். ஹிட்லரும் முசோலினியும் நல்ல சாவைக் கண்டவர்கள் அல்ல.அவர்களால் கொல்லப்பட்டவர்களின் ஆத்மாக்களால் குதறப்பட்டவர்கள். அதுவே இன்று சிங்கள அரசிற்கும் அதற்கு முட்டுக் கொடுத்தவர்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது.(தமிழினத் தலைவர் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் 87 வயதுக் கிழம் ஒன்றுக்கும் இத்தகைய அவலச் சாவே காத்திருக்கும்) சாவைக்கண்டு பயந்து திரிதலே சாவை மிஞ்சிய சுமையாகிவிடும்.

இந்த அப்பாவி மக்களின் அவலங்களை எண்ணி வாய் திறவாது வாழாவிருக்கும் மூடர்களைப் பார்த்து கே.ஜி சங்கரப் பிள்ளையின் வார்த்தைகளிலேயே கேட்கின்றேன்.

"சகோதரரே, ஒரு நாய் கூட அச்சத்திலும் வாய் திறந்து கத்தாமல் (தான் கண்டதை,நினைத்ததை சொல்லாமல்) விடுவதில்லை..அப்படியிருக்க மேலான மானுடராகிய நாம் அச்சத்தின் காரணமாக, அலட்சியத்தின் காரணமாக, அடிமைத்தனத்தின் காரணமாக, இன்னும் எத்தனை காலத்திற்குத் தான்,

"நொண்டிச்சாக்குகளின் சிதையின் மீது நம் வாழ்நாள் நீளும் எரிந்தடங்கலைச்.."
செய்து கொண்டிருக்கப் போகின்றோம்.

Friday, October 30, 2009


வச்சுட்டான்யா ஆப்பு


சர்வதேச ரீதியில் செயற்பட்டு வரும் 57 புலி தலைவர்கள் பற்றிய தகவல்களை கே.பி வெளியிட்டுள்ளார்: திவயின தகவல்

சர்வதேச ரீதியில் செயற்பட்டு வரும் 57 தமிழீழ விடுதலைப் புலித் தலைவர்கள் பற்றிய தகவல்களை குமரன் பத்மநாதன் வெளியிட்டுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இவ்வாறான புலிகளின் பட்டியல் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புலிகளின் சர்வதேசப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பாளர் கதிர்காமத்தம்பி அரவிகன்,
அமெரிக்காவில் உள்ள இராஜேந்திரன் பாலசிங்கம்,
உலக ஈழ இளைஞர் அமைப்பின் அண்டுவேல்மன்,
கனடாவைச் சேர்ந்த உருத்திரமூர்த்தி,
பிரித்தானியாவைச் சேர்ந்த இளங்கோ,
கனடாவைச் சேர்ந்த இளங்கபிள்ளை, அர்ஜூன எதிர்வீரசிங்கம், வினிபரா எனப்படும் ரஞ்சித் பெர்னாண்டோ,
சுவீடனைச் சேர்ந்த ஜெகன் மோகன்,
நோர்வேயைச் சேர்ந்த ஜெயசந்திரன், தெதியவன்,
மலேசியாவைச் சேர்ந்த நாகலிங்கம்,
லண்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் கருணாகரன்,
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சதியன் குமரன்,
கனடாவைச் சோந்த லுக்காஸ் பாலசிங்கம் (நடேசனின் சகோதரர்),
பரிசின் மணிவண்ணன்,
பிரான்ஸைச் சேர்ந்த நடராஜா மதிதரன்,
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பாலந்திரன்,
கனடாவின் டேவிட் பூபாலபிள்ளை,
அமெரிக்காவைச் சேர்ந்த ராஜ் ராஜரட்னம்

உள்ளிட்டோரின் பெயர்களை அவர் தெரிவித்துள்ளார்.

திறைசேரி அதிகாரி, முன்னாள் சட்ட மா அதிபர் ஆகியோரும் இந்த புலிகள் வலையமைப்பில் அங்கம் வகித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

கடந்த 25 ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டல், புலிகளின் இணைய தளங்களை செயற்படுத்தல் உள்ளிட்ட சகல நடவடிக்கைகளிலும் ஈடுபட்டவர்கள் தொடர்பில் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குமரன் பத்மநாதனின் இந்த அம்பலப்படுத்தலுடன் சில புலி ஆதரவாளர்கள் தமது செயற்பாடுகளை குறைத்துக் கொண்டுள்ளதாக திவயின செய்தி சுட்டிக்காட்டியுள்ளது.

நன்றி:
http://www.tamilwin.com/view.php?2e20QHRcb33h9Eg04dcuWnZdb0eD7G024d4kYp7200bBnLWSde22E2hP3cc4Vj06ae

Wednesday, October 28, 2009


சிங்கள தேசம் அறுவடையை நோக்கி நகர்கின்றது!




தமிழீழ மக்கள் மீதான இன அழிப்புப் போரை வெற்றிகரமாக நிறைவேற்றி, அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்த ராஜபக்ஷக்களுக்கு சனி பார்வை பெரும் அச்சத்தைக் கொடுத்து வருகின்றது. இந்திய ஆதரவு என்ற பொங்கு சனி பார்வையில் அனைத்தையும் விருப்பம்போல் நிறைவேற்றிய ராஜபக்ஷக்களுக்கு இப்போது போதாத காலம்தான்.

மேற்குலகிலிருந்து வெளிவரும் அறிக்கைகளும், அறிவுறுத்தல்களும், கண்டனங்களும் ஒரு பக்கம் கலக்கத்தைக் கொடுத்தாலும், இருப்புக்கே ஆபத்தாக சரத் பொன்சேகா வயிற்றில் புளி கரைத்து வருகின்றார். வளர்த்த கடா மார்பில் பாய்வதற்குத் தயாராகி வருவதான செய்திகள் ராஜபக்ஷக்களின் தூக்கத்தைக் கெடுத்து வருகின்றது.

சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்தை சிங்கள கடும்போக்கு அரசியல் கட்சிகளான ஜே.வி.பி.யும், சிஹல உறுமயவும் வரவேற்றுள்ளன. ஈழத் தமிழர்கள் மீதான போர் வெற்றியின் மொத்த சொந்தக்காரராகத் தம்மைக் காட்டி அரசியல் களத்தில் வெற்றிகளைக் குவித்துவரும் மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்து நின்று ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றி பெற முடியாது என்ற யதார்த்தத்தை ஒப்புக்கொண்டுள்ள ரணில் விக்கிரமசிங்க தனது இடத்தை சரத் பொன்சேகாவுக்கு வழங்க முடிவு செய்துவிட்டார். சரத் பொன்சேகாவும் இதற்கு இணங்கியுள்ளதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன.

பராக் ஒபாமாவே போட்டியிட்டாலும் இன்னமும் 30 வருடங்களுக்கு மகிந்தவே ஜனாதிபதியாக இருப்பார் என்ற அரச தரப்பு எச்சரிக்கைகளும், இராணுவத்தினர் அரசியலில் ஈடுபட முடியாது. அத்துடன் அவர்களை இணைத்து யாரும் செய்திகள் வெளியிட முடியாது என்ற அறிவித்தல்களும் ஆளும் கட்சி மிரண்டு போயுள்ளதையே உணர்த்துகின்றது. மகிந்த ராஜபக்ஷவுக்கு நிகரான போட்டியாளராக சரத் பொன்சேகா சிங்கள தேசத்தில் நோக்கப்படுகின்றார்.

சிங்களத்தின் யுத்த கள வெற்றியை பங்கு போடும் வேட்பாளராகவும், சிங்கள கடும் போக்காளர்களின் ஆதரவுக்குரியவருமான சரத் பொன்சேகா ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகக் களம் இறக்கப்பட்டால் நிச்சயம் அவர் வெற்றி பொறுவார் என்பதே சிங்கள தேசத்தின் கணக்காக உள்ளது. இதனால், உத்தியோகபூர்வமாக ஐக்கியதேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சரத் பொன்சேகா அறிவிக்கப்பட்டதும் தற்போதைய ஆளும் அரசில் அமைச்சர்களாக உள்ள பலரும் கட்சி மாறுவதற்கும் ஆயத்தமாக உள்ளதாகக் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் அரசில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளும் அணி மாறுவதற்குத் தயாராகி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயதசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். குடும்ப அரசியலைக் கோலாகலமாக நடாத்திய மகிந்த ராஜபக்ஷவுக்கு அருகிலிருந்தே பலர் குழி பறிக்கும் வேலையை ஆரம்பித்துவிட்டார்கள்.

சிங்கள தேசத்தில் அரசியல் களம் கூடு பிடித்துள்ள நிலையில் தமிழர்கள் எவரும் இது குறித்துக் கவலை கொள்ளப் போவதில்லை. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை ஒரே ஒரு தடவை திருமதி சந்திரிகாவின் பேச்சுக்களை நம்பி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு வாக்களித்ததைத் தவிர, வேறு எந்த ஜனாதிபதி தேர்தலிலும் அவர்கள் அக்கறை கொண்டிருக்கவில்லை. தமிழின அழிப்பைக் கொடூரமாக நடாத்தி முடித்ததுடன் அதனை வெற்றி விழாவாகக் கொண்டாடியதும், வன்னி மக்களை வதை முகாம்களில் அடைத்ததுவும் தமிழர்களால் மறக்கப்படக்கூடிய, மன்னிக்கக்கூடிய விடையங்களாக இல்லை. சிங்கள தேசிய இனவாதிகளில் யாரையும் வெற்றிபெற வைக்க வேண்டிய தேவையும் தமிழீழ மக்களுக்குக் கிடையாது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் விடுதலைப் புலிகளின் அழைப்பை ஏற்று, அந்தத் தேர்தலைப் புறக்கணித்தது போலவே, இந்தத் தேர்தலும் அவர்களால் புறக்கணிக்கப்படும் என்பதே யதார்த்தமாக உள்ளது. அதனை அவர்கள் யாழ். மாநகரசபைத் தேர்தலிலும் உணர்த்தியுள்ளார்கள்.

வேண்டப்படாத அரசியல்வாதியான மகிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாக அரியணை ஏறுவதை மேற்குலகு விரும்பப் போவதில்லை. ஐக்கியதேசியக் கட்சி சார்பாக ரணில் போட்டியிட்டு வெல்வதையே அவர்கள் விரும்புவார்கள். அதற்கு சார்பாக, இனவாத சிந்தனையூட்டப்பட்ட சிங்கள இனத்தைத் திருப்ப முடியாது என்ற யதார்த்தத்தையும் மேற்குலகு புரிந்து கொள்ளும். இந்தியாவுக்கு களம் அமைத்துக் கொடுத்து, சீனாவுடன் சீட்டட்டம் நடாத்தி வந்த மேற்குலகு சீனா பக்கம் முற்றாகச் சாயக்கூடிய சரத் பொன்சேகா ஆட்சிக்கு வருவதை விரும்பாது. இந்த நிலையில் மேற்குலகு கடும் நிலையை எடுக்க முற்பட்டால் இலங்கைத் தீவு பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்க நேரிடும்.



ஜனாதிபதி தேர்தலில் மகிந்த தோற்றுப்போவதை இந்தியா விரும்பப் போவதில்லை. தமிழர்கள் மீதான இன அழிப்பிற்குத் துணை நின்றதுடன், அதன் பின்னரான மேற்குலகினதும், ஐ.நா.வினதும் அழுத்தங்களிலிருந்து இன்றுவரை மகிந்தவைப் பாதுகாத்து வரும் இந்தியா மீண்டும் மகிந்தவை ஆட்சியில் அமர்த்துவதன் மூலமாகத் தனது நலன்களைப் பாதுகாக்கவே முன்வரும். அதற்காக, இலங்கைத் தீவின் தமிழ், முஸ்லிம் கட்சிகள் மீது தனது செல்வாக்கைப் பிரயோகிக்கவும், மகிந்தவை வெல்ல வைப்பதற்கான பொருளாதார பலத்தை வழங்கவும் முன்வரும்.

தமிழர்கள் மீதான யுத்த வெற்றியை சொந்தம் கொண்டாடும் இரு சிங்கங்களும் உறுமல்களோடு தேர்தல் களத்தை சூடாக்க ஆரம்பித்துள்ளன. போகப் போக இந்தக் கர்ச்சிப்புக்கள் அதிகமாகி, அதன் மூலம் பல யுத்தகள உண்மைகளும் வெளிவரக் கூடும். எந்தப் படுபாதகத்திற்கும் அஞ்சாத மகிந்த ராஜபக்ஷ தனது எதிர்காலத்திற்கு சவாலாக உருவெடுக்கும் சரத் பொன்சேகாவை அழித்து விடவும் முயற்சிக்கக் கூடும். அதற்கும் இருக்கவே இருக்கிறது 'விடுதலைப் புலிகள்' என்ற பிரம்மாஸ்திரம். ராஜபக்ஷக்களின் திட்டங்கள் எதுவானாலும் நிறைவேற்றக் காத்திருக்கும் தமிழ் ஆயுதக் குழுக்களும் அவர் வசம் உள்ளன. மாறாக, சரத் பொன்சேகாவும் அவருக்குச் சளைத்தவரல்ல. இராணுவ தளபதியாக இருந்த அவர் பின்னால் அணி வகுக்கக்கூடிய ஆயுத படையினர் இருக்கவே செய்வார்கள். இராணுவத்தின் வெற்றியை, தனது குடும்ப வெற்றியாக்க மகிந்த முயற்சி செய்கிறார் என்ற பிரச்சாரத்துடன் வெற்றியைத் தனதாக்க முடியாமல் போனால், ஒரு இராணுவப் புரட்சி மூலம் சாதிக்க முயற்சிக்கமாட்டார் என்றும் உறுதியாக நம்ப முடியாது.

ஆக மொத்தத்தில், சிங்கள தேசம் அறுவடையை நோக்கி நகர்கின்றது என்றே எண்ணத் தோன்றுகிறது.

நன்றி - பாரிஸ் ஈழநாடு

Tuesday, October 27, 2009


வீணாப்போன அனானிகளுக்கு நமீதா அட்வைஸ்


ஜகன்மோகினியில் கவர்ச்சியையும் தாண்டி நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய மகிழ்ச்சியில் இருக்கிறார் நமீதா. ஜனன்மோகினி பாராட்டு மழையில் நனைந்திருக்கும் நமீதா நம்மிடம் பேசுகையில்,

சினிமாவில் கவர்ச்சி அவசியம். அது அளவோடு இருக்கணும். முகம் சுளிக்க வைக்ககூடாது அதே போல பதிவுகளில் தடாலடிகள் வேண்டும். நீயொரு முட்டாள் என்பதைக்கண்டு பிடிக்க முடியாது செய்யும் சாமர்த்தியம் வேண்டும். பிரபலபதிவராய் இருந்தாலும் அனானியாக குண்டக்க மண்டக்க கேள்விகள் கேட்கலாம். அப்போது தான் அடுத்த பதிவிற்கு "கரு" கிடைக்கும்.

கும்மாளம் போடும் பதிவுகளில் மூக்கை நுழைத்துப் பார்க்கலாம். மூக்குப் போனாலும் விடாத முயற்சி வேண்டும். மூக்குடைத்தவரை முடிந்த வரை விடாது கருப்பு போன்ற பதிவுகளைப் போட்டு காய்ச்சி எடுக்கலாம். அதுவும் முடியாத போது முக்குச்சந்திக்குக் கூட்டிச் சென்று மூக்கையுடைக்கலாம்.

பதிவுகளில் தனி அரசியல் முன் பின் நவீனத்துவம் கட்டுடைப்பு என்று பீற்றிக்கொள்பவர்களே நடை முறையில் வெற்று வேட்டுக்களே. எழுதும் போது மறைவாய் உதவும் புத்தகங்கள் நிஜத்தில் உதவாது . நாயர் டீ ஸ்டாலிலோ நடு ரோட்டிலோ கண்டு உங்களை நீண்ட நாட்களாக அரித்துக்கொண்டிருந்த விடயத்தில் சந்தேகம் கேட்கும் போது ங்கே என்று விழிக்கும் சாதாரணர்களே. அவர் அது பற்றி எழுதியதயே அறியாத அஞ்ஞானிகள்.

எனது திறமையை இயக்குனர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. அதைப்போலத்தான் உங்கள் திறமைகளையும் அனானிகளாக ஊடுருவிச் சிறப்பாக நீங்கள் காட்டவில்லையென்பது எனது எண்ணம். பிரபல பதிவர்களாய் இருந்தாலும் அனானியாக மாறிவிட்டால் முடிந்த வரை உங்கள் அரிப்பைச் சொரிந்து தீர்த்துக் கொள்ளலாம். முடிந்தவரை உங்களுக்குப்பிடிக்காத பதிவரை அல்லது உங்களால் முந்த முடியாத பதிவரைப் பற்றி முடிச்சுகள் போட்டு அவரைக் களத்தில் இருந்து வெளியேற்றும் காரியத்தில் ஈடுபடலாம்.

முதலாவது நபர் வெளியேற்றப்பட்டால் இரண்டாவது இருக்கும் நீங்கள் தானே முதலாவது. நூறாவதாக இருக்கிறேன் என்று கவலைப்படுகின்றீர்களா? சளைக்காது 99 பேரையும் வெளியேற்றி விடுங்கள். என்ன ஏது என்று அறியாது கும்மியடிக்கும் கூட்டம் உங்களுக்கு தங்களையறியாமலே உதவி செய்வார்கள். அபி அப்பாவைக் கும்மியடித்து வெளியேற்றவில்லையா? அதுபோல. இப்போது முதலாவது ஆவது பற்றிய இரகசியம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் என் நிலமை வேறு. நான் என்ன என்னவெல்லாம் அடித்திருக்கின்றேன் என்று உங்களுக்கு சொல்ல முடியாது. அது தொழில் இரகசியம்.

சினிமா என்பது பணம் சம்பந்தப்பட்ட விஷயம். வியாபாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காக சிலவற்றை ஏற்கத்தான் வேண்டி உள்ளது. சம்பளம் தருபவர்கள் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று கேட்கும்போது மறுக்க முடியவில்லை. அவர்கள் தரும் ஆடையைத்தான் அணிய வேண்டி உள்ளது.

உங்களுக்கு அந்த கவலையே இல்லை. அனானி என்ற முகமூடியே உங்களைக் காத்து விடும். அனானி வசதியை மறுப்பவர்களைத் தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாற்றுக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அராஜக வாதிகள். இவர்கள் சினிமாவிலும் உண்டு.அரசியலிலும் உண்டு. என் ஆடை குறைப்பைப் பற்றி அதிகம் பேசியவர்கள் இவர்கள். பின்னர் தனிமையில் இருக்கும் போது இருக்கும் ஆடையையும் தேவையில்லை என்று குறை கூறியவர்கள் இவர்கள்.

பின்னர் வெள்ளையும் மஞ்சள் துண்டுமாக தத்துவம்ஸ் பேசும் போது நான் வாயால் மட்டும் சிரிப்பதில்லை.

சில நடிகைகள் இந்திக்கு போகிறார்களே அவர்களை போல் நீங்களும் போவீர்களா என்று என்னிடம் கேட்கிறார்கள். நான் இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட மாட்டேன். இந்திக்கு போனால் மற்ற நடிகைகளுக்கு பின்னால்தான் இருக்க வேண்டும். இங்கேயே நிறைய வாய்ப்புகள் வருகின்றன. இந்திக்கு போக மாட்டேன். என் பின்னால் தமிழக இளைஞர்கள் இருக்கிறார்கள்

அதே போல நீங்களும் தமிழ்ப் பதிவுலகத்திலேயே மொக்கைகளைப் போட்டு குப்பை கொட்டுங்கள். பெரும் பத்திரிகைகள் சிற்றேடுகள் என்று பறக்க ஆசைப்படாதீர்கள். உங்களை விட பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இருக்கக் கூடும். உங்களை விடப் பல புத்தகங்களைக் காப்பியடித்தவர்களுடன் மோத முடியாது . என் பின்னால் தமிழக ஒப்புச்சப்பாணி இளைஞர்கள் இருப்பதைப்போல உங்கள் பின்னாலும் அறிவு சூனிய கும்மியடிப்போர் இருக்கின்றார்கள். மீ த பஸ்ட் , மீ த செகண்ட் என்று உங்கள் பின்னூட்டங்களைப் போட்டு அனுமார் வாலாக நீட்டி விடுவார்கள்.

இல்லாவிட்டாலும் வேறு வேறு பெயர்களிலேயே நீங்களே உங்களை விமர்சிக்கவோ வழிமொழியவோ செய்யலாம். தமிழ் மணம் போன்ற திரட்டிகளில் அதைக் கண்டு பிடிக்கும் அறிவாளிகள் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அப்படியே கண்டு பிடித்தாலும் கடையில் கலகலப்பு இருக்க வேண்டுமென்று கண்டும் காணாது விட்டு விடுவார்கள்.

வழியும் தசைகளை இறுக்கிக் கட்டி தள்ள வேண்டிய இடத்தில் தள்ள விட்டு தமிழக இளைஞர்களை நான் ஜொள்ள விடவில்லையா? அதே போலவே அவர்களும் உங்களை ஜொள்ள விடுவார்கள்.

சொல்லி விட்டு காரில் ஏறிப் பறந்தே விட்டார்.

குறிப்பு: நமீதாவிடம் மட்டும் கேட்க வேண்டிய கேள்விகள் இருந்தால் மட்டும் இங்கு கேட்கவும்.

மீண்டும் அடிமைப்பட்டுப்போன இந்தியா



"வீணாய்ப்போன அனானிக்கு" தொடரின் தொடர்பாய் எழுதுவது இது,

இந்தியா என்பது ஒரு நாடல்ல. நாடுகளின் கூட்டு என்பதே உண்மை. வரலாற்றை நமக்கு வாகாக வளைத்துக்கொள்ள முற்பட்டாலும் உண்மை என்பது எப்போதும் நிமிர்ந்தே நிற்கும்.

1947 இல் பிரிட்டிஸ்ஹ் இந்தியாவை பாகிஸ்தான், இந்தியா என்று பிரித்து 1971இல் பங்களாதேஷ் என்று மூன்றாக்கி மீண்டும் இந்தியா என்ற பகுதியை 60 வருடங்களுக்குள்ளாகவே இத்தாலியிடம் பறிகொடுத்ததே இந்தியர்களின் வரலாறு. இவர்களுடன் ஒப்பிடுகையில் பாகிஸ்தானும் பங்களாதேசமும் பெருமைப்பட்டுக்கொள்ளலாம்.

அவர்கள் நாடு மண்ணின் மைந்தர்களாலேயே இன்னும் ஆளப்படுகின்றது. வெள்ளையர் இந்திய வளங்களைக் கொள்ளையடித்து போனது போல இன்று குவாத்திரோட்சிகள் சுதந்திரமாக கொள்ளையடித்துச் செல்கின்றார்கள்.

இந்தியா என்பது நாடுகளின் கூட்டாக இருப்பதில் இது ஒரு அசெளகரியம். ஒரு சிலருக்கு ரோஷமும் தம் மானமும் இல்லாததால் அனைவரும் பழியைச் சுமக்க வேண்டியுள்ளது.

இல்லையெனில் வெள்ளையனை எதிர்த்து இறுதிவரை போரிட்ட கட்டபொம்மனும் மேவார் ரணாக்களும் வீர சிவாஜியும் வம்சமற்று மலடர்களாகவா இறந்தார்கள்.

இதோ இந்தியாவிற்குள் இருக்கும் சுதந்திர நாடுகளின் பட்டியல்.ஆதாரம் விக்கிபீடியா :http://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81

இந்தியாவின் வரலாறு இந்து சமவெளி நாகரிகத்திலிருந்து துவங்குகிறது. இந்த நாகரிகம் இந்திய துணைகண்டத்தின் வாடா மேற்கு பகுதியில் 3300 கி.மு. விலிருந்து 1300 கி.மு. வரைசெழித்திருந்தது. இந்தியாவின் முழு வளர்ச்சியடைந்த ஹரப்பா நாகரிகம் 2600-1900 கி.மு. வரை நீடித்திருந்தது. வெண்கலக் காலம் கி.மு 2000 ஆண்டின் துவக்கம் வரை மேலோங்கி இருந்தது, பின்னர் அதனை தொடர்ந்த இரும்புக் காலமும், வேதக் காலமும் இந்தியாவின் கங்கைக்கரை சமவெளிகளில் இருந்த மக்களின் மீது தனது ஆதிக்கத்தை செலுத்தியதன் மூலம் [[மகாஜனபதாஸ் |மகாஜனபதாஸ்]] போன்ற பெரிய சாம்ராஜ்ஜியங்களை உருவாக்கின. இது போன்று இருந்த எதோ ஒரு ராஜ்ஜியத்தில் கி.மு. 6 ஆம் நூற்றாண்டில், பிறந்த மகதா, மகாவீரர், கவுத்தாம புத்தர் தங்களது ஸ்ரமன் தத்துவங்களை மக்களிடையே பரப்பினர்.


பின்னர் வந்த சாம்ரஜ்ஜியங்களும் ராஜ்ஜியங்களும் இந்த பகுதியை ஆண்டதன் மூலம் இந்த பகுதியின் பண்பாடு மேலும் மேருகைப் பெற்றது.கி.மு 543 அகேமேனிதின் பெர்சிய சாம்ராஜ்ஜியம் [1]முதல் கி.மு. 326 அலேக்சாண்டேர் தி கிரேட்[2]வரை நம் கருத்தில் நாம் நிறுத்தி பார்க்கலாம். மச்ற்றியாவைக் சார்ந்த டெமெத்ரியஸால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தோ-கிரேக்க ராஜ்ஜியம் கந்தாரா, பஞ்சாப் போன்ற இடங்களை தன்னுள் கொண்டிருந்தது. கி.மு 184 ஆம் ஆண்டில் நிலவிய இந்த ராஜ்ஜியம் மேனண்டேர் காலத்தில் தனது உச்சத்தை அடைந்தது. இதே சமயத்தில், பண்பாட்டிலும், வாணிகத்திலும் சிறந்து விளங்கிய கிரேக்க-புத்த காலமும் எழுச்சி அடைத்தது.


கி.மு, 3 ஆம் மற்றும் 4 ஆம் நூற்றாண்டுகளில் தழைத்தோங்கிய மவுரிய சாம்ராஜ்ஜியத்தின் கீழ் இந்திய துணை கண்டம் ஒன்றுபட்டது. நாளடைவில் இதே கண்டம், சிறிய பகுதிகளாக உடைந்து, இடைப்பட்ட ராஜ்ஜியங்களால் அடுத்த ஆயிரம் ஆண்டுகளுக்கு ஆட்சி செய்யபடப் பட்டது.கி.மு. ௪ ஆம் நூற்றந்தில் துணைகண்டத்தின் மேற்கு பகுதிகள் ஒன்று படுத்தப்பட்டன. இது குப்த சாம்ராஜ்ஜியத்தின் கீழ், ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டு காலத்திற்கு ஒன்று பட்டே இருந்தது.இந்து மதத்தின் எழுச்சி தீவிரமாக வெளிப்பட்ட இந்த காலத்தை இந்தியாவின் பொற்காலம் என்று அழைப்பர்.இதே கால கட்டங்களில், பல நூற்றாண்டுகளுக்கு தென்னிந்திய பகுதி சாலுக்கியர்கள், சோழர்கள், பல்லவர்கள் மற்றும் பாண்டியர்களால் ஆட்சி செய்யப்பட்டது.வளமைப்பெற்ற இந்திய நாகரிகம், ஆட்சி முறைகள்,பண்பாடு, ஆசியாவில் பல பகுதிகளில் பரவிய இந்து மதம் மற்றும் புத்த மதம் இருந்த இந்த காலத்தை தென்னிந்தியாவும் பொற்காலமாகவே கருதியது.


கி.பி. 77 ல் கேரளா ரோம சாம்ராஜ்ஜியத்துடன் கடல் சார்ந்த வணிக பிணைப்புகள் கொண்டிருந்தது.கி.பி. 712 ல் ,அரபு நாட்டைச் சேர்ந்த படைத்தலைவர் முகம்மது பின் காசிமின் வருகையால் இந்த துணை கண்டத்தில் இஸ்லாமிய ஆட்சி துவங்கியது. இவர், சிந்து, முல்டான், தற்கு பஞ்சாப் பகுதிகளை கைப்பற்றினார்[3]. இந்துவே மத்திய ஆசியப்பகுதியிலிருந்து பல படையெடுப்புகளை கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து 15 ஆம் நூற்றாண்டுவரை இந்திய துணை கண்டம் சந்தித்து இஸ்லாமிய ராஜ்ஜியமாகக் காரணமாக இருந்தது.இவற்றுள் கச்னவீத், கோரித், டில்லி சுல்தான்கள்,முகலாய சாம்ராஜ்ஜியம் புகழ் பெற்றவை.துணை கண்டத்தின் பெரும்பாலான மேற்குப் பகுதிகளில் முகலாய சாம்ராஜ்ஜியம் பரவி இருந்தது.முகலாய அரசர்கள் இந்தியாவுக்குள் மத்திய கிழக்கு ஓவியங்களையும், கட்டிடக் கலையையும் கொண்டு வந்தனர்.முகலாயர்களுடன் விஜயநகர ராஜ்ஜியம், மராத்தா ராஜ்ஜியம்,ரஜபுத ராஜ்ஜியங்கள் போன்ற பல இந்து ராஜ்ஜியங்களும் மேற்கு மற்றும் தென்னிந்திய பகுதிகளில் தழைத்தெழுந்தன. முகலாய சாம்ராஜ்ஜியம் 18 ஆம் நூற்றாண்டில், தானாகவே வலுவை இழந்தது. இதனால் ஆப்கன்கள், பலோசியர்கள், சீக்கியர்கள் வாடா மேற்கு துனைகன்டப் பகுதிக்குள் எளிதே நுழைந்தனர். இவர்கள், தெற்கு ஆசியாவை ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனம் தன வசம் ஈர்க்கும் வரை ஆட்சி புரிந்தனர்.[4]


௧௮ ஆம் நூற்றாண்டு பதியிஇருந்து அடுத்த நூற்றாண்டு வரை ஆங்கிலேயரின் கிழக்கிந்திய நிறுவனம் படிப்படியாக இந்தியாவில் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வது.இந்த நிறுவனத்தின் ஆட்சியில் கிடைத்த அதிருப்தி முதல் இந்திய சுதந்திர போருக்கு காரணமாக அமைந்தது. இதனால் ஆங்கிலேய அரசு இந்தியாவில் தனது ஆட்சிக்குள் கொண்டு வந்தது. இந்த கால கட்டத்தில் இந்தியா சமுதாயத்தின் வளர்ச்சியயையும் (இன்பிரா ஸ்ட்ரக்சுர்) பொருளாதாரத்தின் குலைவையும் கண்டறிந்தது.

20 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், நாடெங்கிலும் இந்திய தேசிய காங்கிரஸின் மூலம் துவக்கப் பட்ட சுதந்திரப் போராட்டம் காட்டு தீயைப் போல் பரவியது. இந்த போராட்டத்தில் முஸ்லிம் லீகும், தன்னை இணைத்துக் கொண்டது. இந்த துணை கண்டம் ௧௯௪௭ ல், இந்தியா, பாகிஸ்தான் என்று இரு ஆளும் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட பின்னர் ஆங்கிலேய ஆட்சியிடமிருந்து தன் சுதந்திரத்தைப் பெற்றது.

வீணாய்ப்போன அனானிக்கு




காஸ்மீரிகளுக்கான தனி விஸா தொடங்கியிருப்பது சீனா

"இந்தியா பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கின்றது" என்ற ஒரு கட்டுரையை நான் எழுதியபோது வீணாய்ப்போன அனானி ஒன்று இந்திய இராணுவம் செய்த தவறுகளை ஆதாரபூர்வமாக விளக்கவேண்டுமென்று கேட்டிருந்தது.

உலக ஞானமும் வாசிக்கும் பழக்கமுமற்ற இத்தகைய முட்டாள்களை நம்பியே "ஒரே இந்தியா" என்ற கோஷத்தை அரசியல்வியாதிகள் முன்னெடுக்கின்றார்கள் என்பது எனது நம்பிக்கை. கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டென்று நம்பும் முட்டாள்கள் இவர்கள்.

இலங்கையில் இந்தியா நடந்து கொண்டதை அறியாத வினய பாவத்துடன் தன் சொந்த மண்ணிலேயே மக்கள் கொல்லப்படும் துயரம் அறியாத அயோக்கியர்கள் இவர்கள். மனித நேயத்தை விஞ்சிய பெருமை எதில் கிடைத்து விடும் என்பதை இவர்கள் தான் கூற வேண்டும்.

வெறுமனே கேள்வி மட்டும் கேட்டுக்கொண்டிராது வரலாற்றைப் படிக்கவும் முற்படவேண்டுமென்று இத்தகைய வீணாய்ப்போனவருக்கு நான் சிபாரிசு செய்கின்றேன். அ.மார்க்ஸ்,சாருநிவேதிதா இந்த இரண்டு எழுத்து வியாபாரிகளும் இந்திய தமிழ் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் அல்லது மறுதலிக்கப்பட்டவர்கள். அது எதுவாய் இருந்தாலும் சிந்திக்கும் மனங்களில் சில சலனங்களையேனும் ஏற்படுத்தியவர்கள்.

இத்தகைய முட்டாள் தனமான கேள்விகளுக்குப் பதிலளிப்பதில்லை என்றே முதலில் நினைத்திருந்தேன். என்ன செய்வது? முட்டாள்களும் நிறைந்தது தானே இந்த உலகம். ஆகவே இந்த பதில். ஈழத்தில் இந்திய வெறியாட்டம் பற்றிப்பல தகவல்கள் இணைய வெளியெங்கும் பரந்திருக்கின்றது. தேடிப்படிக்கவும்.

ஒரு கட்டுரையை படிக்கவோ விளங்கிக்கொள்ளவோ தர்க்கிக்கவோ இத்தகைய வரலாற்றுத் தகவல்கள் மிகவும் துணை செய்யும் என்பத்தை இந்த முட்டாள் தெரிந்து கொள்ளவேண்டும். இதையெல்லாம் அறியாதிருக்கும் நீயா? நானா? வீணாய்ப்போனவன்.

ஒரு "பிரபல புளொக்கர்" தான் இந்த வீணாய்ப்போன அனானி என்பதை நான் அறிவேன்.

சாருநிவேதிதா எழுதியது


போராட்டத்தில் கலந்து கொண்டு இந்திய ராணுவத்திற்கு எதிராகக் கோஷமிட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் கேட்டேன், ”காஷ்மீருக்குச் சுதந்திரம் கிடைத்தால், ஒரு பெண் என்ற முறையில் மத அடிப்படைவாதிகளால் உன்னுடைய சுதந்திரத்துக்குப் பிரச்சினை வராதா?” என்று.

அதற்கு அவள் சொன்னாள்:”இப்போது எங்களுக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது; இந்திய ராணுவத்தால் வன்கலவி செய்யப்படும் சுதந்திரமா?”

அருந்ததி ராய்

கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் என்று அழைக்கப் படும் நிலப் பகுதி இந்திய ராணுவத்தின் பிடியில் இருந்து வருகிறது. இது பற்றி அருந்ததி ராய், ராம் புனியானி, குஷ்வந்த் சிங் போன்ற சிலரைத் தவிர வேறு யாரும் குரல் கொடுக்கவில்லை.

தேசப் பற்று என்ற கற்பிதமான நம்பிக்கையை வைத்துக் கொண்டு இந்தியப் பத்திரிகையாளர்கள் பலரும் காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதி என்பதாகவே எழுதிக் கொண்டு வருகிறார்கள். இதே கருத்து பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பத்திரிகைகளின் வாயிலாகப் பரப்பப்பட்டு வருவதால் இந்தியப் பொது ஜனமும் காஷ்மீரை இந்தியாவின் பகுதி என்றே நம்பத் தலைப்பட்டு விட்டது.

காஷ்மீர் பிரச்சினையைப் புரிந்து கொள்வதற்கு நாம் சற்றே பின்னோக்கிச் சென்று காஷ்மீரின் வரலாற்றைப் பார்க்க வேண்டும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து காஷ்மீரின் ஆட்சி இஸ்லாமிய மன்னர்களிடமிருந்து சீக்கியர்களின் கைகளுக்கு வந்தது. 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது குறுநில அரசுகள் பலவும் இந்தியாவுடன் இணைந்து கொண்ட போது, ஜுனாகட் மற்றும் ஹைதராபாத் அரசுகள் மட்டும் பாகிஸ்தானுடன் இணைந்து கொள்ள விரும்பின. காரணம், இந்த இரண்டு அரசர்களும் முஸ்லீம்களாக இருந்தனர். இந்த மாகாணங்கள் இந்திய நிலப் பகுதியின் மத்தியில் இருந்ததாலும், இங்கே இந்துக்கள் பெரும்பான்மையினராக வசித்ததாலும் அந்த முஸ்லீம் மன்னர்களின் விருப்பம் நிறைவேறாமல் போயிற்று. இந்திய அரசு தனது ராணுவத்தை அனுப்பி இந்த மாகாணங்களைத் தன்னுடன் சுலபமாக இணைத்துக் கொண்டது.

ஆனால் காஷ்மீரைப் பற்றியும் இந்தியா இதேபோல் நினைத்து விட்டது என்பதிலிருந்துதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.

நமக்குச் சொந்தமில்லாத ஒரு நிலப்பகுதியை ராணுவ பலத்தால் ஆக்ரமித்துக் கொண்டு, ஐம்பது ஆண்டுகள் கழித்து ‘அந்த நிலம் எங்களுடையது’ என்று சொல்வதற்கும் காஷ்மீரைச் சொந்தம் கொண்டாடுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சொல்லலாம். எப்படி என்று பார்ப்போம்.

அப்போது காஷ்மீரின் மன்னராக இருந்தவர் ஹரி சிங் என்ற இந்து டோக்ரா இனத்தைச் சேர்ந்தவர். இவர் ஓரளவுக்கு சீர்திருத்த எண்ணம் கொண்டவராக இருந்தார். காஷ்மீர் மாநிலத்தில் ஆரம்பக் கல்வியைக் கட்டாயமாக்கினார். தாழ்த்தப் பட்டவர்களும் கோவில்களில் பிரவேசிக்கலாம் என்று சட்டம் இயற்றினார். குழந்தைத் திருமணத்தைத் தடை செய்தார். ஷேக் அப்துல்லாவுக்கும், நேருவுக்கும் இருந்த நெருங்கிய நட்பின் காரணமாக காங்கிரஸையும், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிய வேண்டும் என்று பிரிவினைவாதம் பேசியதால் முஸ்லீம் லீகையும் எதிர்த்தார்.

காஷ்மீர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ சேராமல் தனி நாடாக இருக்க வேண்டும் என்று விரும்பினார் ஹரி சிங். காஷ்மீரிகளின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. ஆனால் அவர்களுடைய விருப்பம் நிறைவேறவில்லை. ஏனென்றால், இந்தியாவுடன் இணைய விரும்பாத ஜுனாகட் மற்றும் ஹைதராபாத் மாகாணங்களைச் சுற்றி இந்திய நிலப்பகுதியே இருந்தது. ஆனால் காஷ்மீர் இந்தியாவுடன் மட்டும் அல்லாமல் ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், திபெத் என்ற நாடுகளுடனும் தன் எல்லையைப் பகிர்ந்து கொண்டது. மேலும், காஷ்மீரின் பெரும்பான்மை ஜனத்தொகை முஸ்லீம்களாக இருந்ததால் அதைப் பயன்படுத்தி பாகிஸ்தான் காஷ்மீரைத் தன் வசம் ஆக்கிக் கொள்ள ஆசைப்பட்டது. அப்போதைய பாகிஸ்தான் அதிபராக இருந்த முகம்மது அலி ஜின்னா முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசித்த காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைத்துக் கொண்டு, இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த ஜம்முவை இந்தியாவுக்குக் கொடுத்து விட விரும்பினார். அப்படிச் செய்திருந்தால் கூட இந்தியாவின் அமைதி இன்று இத்தனை தூரம் பாதிக்கப் பட்டிருக்காது என்று தோன்றுகிறது.

அப்போது இந்தியப் பிரதமராக இருந்த, காஷ்மீர் பண்டிட் இனத்தைச் சேர்ந்த நேரு காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் சேர்த்துக் கொள்ள விரும்பினார். இந்த நிலையில் ஜின்னா காஷ்மீரின் மீது பொருளாதாரத் தடையை விதித்தார். அதோடு மட்டுமல்லாமல், வடக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த பழங்குடியினருக்கு ராணுவப் பயிற்சி அளித்து அவர்களை காஷ்மீருக்கு அனுப்பினார். பட்டானியர்களின் அந்த ராணுவம் தாம் சென்ற ஊர்களையெல்லாம் முஸ்லீம், இந்து என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லா வீடுகளையும் கொள்ளை அடித்தது. அப்போதுதான் வேறு வழியில்லாமல் 26.10.1947 அன்று ராஜா ஹரி சிங் நேருவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அந்த ஒப்பந்தப் படி காஷ்மீரின் பாதுகாப்பு, ராணுவம், நாணயம், தபால் துறை போன்றவற்றை இந்திய அரசு கவனித்துக் கொள்ளும். மற்ற உள்நாட்டு நிர்வாகம் அனைத்தும் காஷ்மீர் அரசின் கீழ் இருக்கும். எனவே காஷ்மீர் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போன்றது அல்ல

ராஜா ஹரி சிங் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட மறுதினமே இந்திய ராணுவம் காஷ்மீரைச் சென்று அடைந்தது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த நீண்ட காலப் போர் அதுதான். அக்டோபர் 1947 முதல் நவம்பர் 1948 வரை நடந்தது அந்தப் போர். இந்தப் போரில் இந்தியா ஆரம்ப கட்டத்தில் தோல்வியடைந்து பின்னரே மிகுந்த போராட்டத்திற்குப் பிறகே தாங்கள் இழந்த இடங்களை மீட்க முடிந்தது. அப்படியும் காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதி நிலம் பாகிஸ்தான் வசம் போய் விட்டது. ஆனால், பாகிஸ்தானின் ஆக்ரமிப்பில் இருக்கும் காஷ்மீர் மனிதர்கள் வாழ அவ்வளவு தகுதியில்லாத இடம் என்பதால் அங்கே ஜனத்தொகை மிகவும் குறைவு.

அந்தப் போர் முடிந்த அன்றே இந்தியா காஷ்மீர் மக்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்தது. அதன்படி காஷ்மீரில் ஒரு பொது வாக்கெடுப்பு (Plebiscite) நடத்தப்படும். அதன்படி, காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைய வேண்டுமா, இந்தியாவுடன் இணைய வேண்டுமா அல்லது சுதந்திர நாடாக இருக்க வேண்டுமா என்பதை காஷ்மீர் மக்களே தீர்மானிப்பர்.

ஆரம்ப காலத்தில் நேருவின் நெருங்கிய நண்பராக இருந்த ஷேக் அப்துல்லா, பின்னர் நேரு வாக்களித்த படி பொது ஜன வாக்கெடுப்பை நடத்தச் சொல்லி வற்புறுத்த ஆரம்பிக்கவே அவரைத் தூக்கி 18 ஆண்டுகள் சிறையில் போட்டார் நேரு.

இந்த இடத்தில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு விஷயம், ஷேக் அப்துல்லா பாகிஸ்தானை மிகவும் வெறுத்தவர். பாகிஸ்தானை காட்டுமிராண்டி நாடு என்றும், அவர்களின் அரசை மதவாத அரசு என்றும், முஸ்லீம் லீக் மக்கள் நலனுக்கு எதிரான கட்சி என்றும் கூறியிருக்கிறார் ஷேக் அப்துல்லா. அதே சமயம் அவர் ஒரு பிரிவினைவாதியும் அல்லர். ஒரு முறை தில்லியில் அவரிடம் ஒரு பத்திரிகையாளர் “காஷ்மீரின் சுதந்திரம்தான் உங்களின் தீர்வா?’ என்று கேட்ட போது, “தனிநாடாக வாழும் அளவுக்கு காஷ்மீர் பெரிய நாடு அல்ல; மேலும், இவ்வளவு ஏழ்மையான நாடு சுதந்திரமாக வாழ முடியாது. அப்படிச் செய்தால் பாகிஸ்தான் எங்களை விழுங்கி விடும். ஒருமுறை அவர்கள் அதற்கு முயன்றார்கள்; மேலும் முயற்சி செய்வார்கள்” என்று குறிப்பிட்டார். காஷ்மீருக்கு மாநில சுயாட்சி மட்டுமே போதும் என்பதே காஷ்மீருக்கான அவரது தீர்வாக இருந்தது.

ஷேக் அப்துல்லா காஷ்மீரின் பிரதம மந்திரியாக இருந்தபோது ஒரு உண்மையான சோஷலிஸ்டாக விளங்கினார். பல நிலச் சீர்திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்தார்.

ராஜா ஹரிசிங்கின் ஆட்சியில் விவசாய நிலம் முழுவதும் மிகச் சில பணக்காரர்களிடமே இருந்தது. விவசாயிகள் அனைவரும் கூலியாட்களாகச் சிதறிக் கிடந்தார்கள். அந்த நிலமற்ற விவசாயிகளுக்கு 40,000 ஏக்கர் நிலத்தைப் பிரித்துக் கொடுத்தார் ஷேக் அப்துல்லா. அதற்கு முன்னால் ஒரு விவசாயக் கூலிக்கு அவன் விளைவிக்கும் தானியத்தில் 25% மட்டுமே கூலியாகத் தரப்பட்டது. அதை அவர் 75% ஆக மாற்றினார்.

இத்தகைய ஒரு தலைவரை பொது ஜன வாக்கெடுப்பு நடத்தச் சொன்ன ஒரே காரணத்திற்காக தேசத் துரோகி என்று கூறி சிறையில் தள்ளியதன் மூலம் இன்றைய காஷ்மீர் பிரச்சினைக்கும், இந்தியாவில் தீவிரவாதம் பெருகியதற்குமான முதல் விதையை இட்டவர் நேரு.

அதற்குப் பிறகு காஷ்மீரில் ஆட்சி நிர்வாகத்தை ஏற்ற அரசுகளெல்லாம் வெளிப்பார்வைக்கு மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவையாக இருந்தன. மற்றபடி கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே நடந்து கொண்டிருப்பது ராணுவ ஆட்சிதான். காஷ்மீருக்கு அளிக்கப் பட்டிருந்த விசேஷ அந்தஸ்தும் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு அதுவும் மற்ற இந்திய மாநிலங்களைப் போல் ஆயிற்று. நிர்வாகம் முழுவதும் ராணுவத்தின் கீழ் வந்தது. காஷ்மீரில் இருக்கும் ராணுவத்தினரின் எண்ணிக்கை 5 லட்சம். (மொத்த ஜனத்தொகை 1 கோடி).

லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆஃப்ரிக்க நாடுகளில் உள்ள சர்வாதிகாரிகளைப் பற்றியும், அவர்களது ஆட்சியில் காணாமல் போன ஆயிரக் கணக்கானவர்களைப் பற்றியும் நம்முடைய பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆனால் இங்கே காஷ்மீரில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்திய ராணுவத்தால் காணாமல் அடிக்கப் பட்டோர் எத்தனை பேர்? சித்ரவதைக் கொட்டடிகளில் வதை செய்யப்பட்டோர் எத்தனை பேர்? தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் சுட்டுக் கொல்லப் பட்டோர் எத்தனை பேர்?

எதற்குமே கணக்கில்லை.

ஆனால் உலகில் எந்த இடத்திலுமே வெறும் ராணுவ பலத்தை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு மக்கள் கூட்டத்தின் சுதந்திர வேட்கையை அடக்கி ஆள முடியாது என்பதற்கு எத்தனையோ சாட்சியங்கள் இருக்கின்றன. அதேதான் காஷ்மீரிலும் நடந்து வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு ஜூன் இறுதியிலிருந்து.

காஷ்மீரிகளின் சுதந்திரப் போராட்டம் இப்படியாக ஆரம்பித்தது. காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு 100 ஏக்கர் நிலத்தைக் கொடுத்தது அரசு. பிறிதொரு சமயமாக இருந்தால் இந்தச் செய்தி பொருட்படுத்தப் படாமலே போயிருக்கும். ஏனென்றால் அந்த இடத்தில் வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் பத்து அடி உயரத்துக்கு உறை பனி விழுந்து கிடக்கும். அந்த அளவுக்கு யாருக்குமே பயன்படாத ஒரு இடம் அது. அமர்நாத் யாத்ரீகர்களுக்கு வெறும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே அந்த இடத்தில் டெண்ட் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தது அரசாங்கம். இந்த ஆண்டு அல்ல. கடந்த ஆறு ஆண்டுகளாக யாத்ரீகர்களுக்கு இந்த வசதி அளிக்கப் பட்டு வருகிறது. அப்படியானால், இந்த ஆண்டு மட்டும் என்ன ஆயிற்று? காஷ்மீரிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத முட்டாள்தனமான அரசாங்கம் இந்த விஷயத்தை அவர்களிடம் விளக்கிச் சொல்லவில்லை. மக்களைப் பற்றிய எந்த சுரணையுணர்வும் இல்லாமல், இதுவரை பழக்கத்தில் இருந்து வந்த நடைமுறைதான் என்பதையும் அறிவிக்காமல் அந்த 100 ஏக்கர் நிலத்தையும் அமர்நாத் கோவிலுக்கு எழுதிக் கொடுத்தது அரசு. கடந்த பல ஆண்டுகளாக நேரடியாக அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சியின் அடக்குமுறையின் கீழ் வாழ்ந்து வரும் காஷ்மீரிகளுக்கு இது ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்தது. தங்கள் வீட்டுக் குழந்தைகள் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப் பட்ட போது கூட சத்தம் வெளியே தெரியாமல் அழுது கொண்டிருந்தார்கள் காஷ்மீரிகள். (ஒருமுறை இரவில் சிறுநீர் கழிப்பதற்காகத் தன் வீட்டிலிருந்து வெளியே வந்த பத்து வயதுச் சிறுவன் ஒரு சிப்பாயால் கொல்லப்பட்டு, இந்தியா முழுவதும் அந்தச் சம்பவம் பத்திரிகைச் செய்தி ஆனது வாசகர்களுக்கு நினைவு இருக்கலாம்). அப்படிப்பட்டவர்களுக்குத் தங்கள் பூமியே தங்களிடமிருந்து பறிக்கப் படுகிறது என்ற சந்தேகம் வந்த போது தங்கள் வாழ்வின் ஆதாரமே பறி போய் விட்டதாக நினைத்து விட்டார்கள். கடந்த 60 ஆண்டுகளாக இல்லாத வகையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் மாபெரும் மக்கள் கிளர்ச்சிக்குக் காரணம் இதுதான்.

அரசாங்கத்தின் சுரணையற்ற தன்மைக்கு ஒரு உதாரணம், ’முஸாராபாத் சலோ’ (முஸாராபாதை நோக்கிச் செல்வோம்) என்ற போராட்டத்தில் 80,000 பேர் கலந்து கொண்டார்கள். ஆனால், ஜம்முவில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சரான சிவராஜ் பாட்டில் ‘வெறும் 8,000 பேர் கலந்து கொண்ட சாதாரண போராட்டம் அது’ என்று வர்ணித்தார். தில்லியில் பல இடங்களில் குண்டு வெடித்து பல நூறு பேர் செத்த போது ஒரே நாளில் நான்கைந்து முறை தன் ஆடை அலங்காரத்தை மாற்றி ஃபேஷன் ஷோ நடத்திக் காண்பித்தவர் இந்த மந்திரி.

காஷ்மீரிகளின் இப்போதைய கிளர்ச்சிக்கு மற்றொரு காரணம், 1989 வரை அமர்நாத்துக்கு வந்து கொண்டிருந்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 20000 ஆக இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை ஐந்து லட்சமாக மாறி விட்டது. இதற்குக் காரணம் இந்துத்துவ எழுச்சி என்று சந்தேகிக்கிறார்கள் காஷ்மீரிகள். தங்களுடைய தேசத்தில் இந்தியாவிலிருந்து வரும் இந்துக்கள் குடியேறி தங்கள் பூமி பறி போய் விடுமோ என்ற அச்சம் தோன்றியிருக்கிறது அவர்களுக்கு. அதனால்தான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக துப்பாக்கியால் அடக்கி வைக்கப் பட்டிருந்த காஷ்மீரிகளின் கனத்த மௌனம் இன்று ஒரு மக்கள் போராட்டமாக வெளிப்பட்டிருக்கிறது.

ஆனால், காஷ்மீரிகளின் கருத்தைப் பற்றி எந்த அக்கறையும் கொள்ளாத இந்திய அரசு கடந்த 60 ஆண்டுகளாகவே இதை ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகவே பார்த்துக் கொண்டிருக்கிறது. காஷ்மீரிகளின் உள்ளார்ந்த துயரத்தை ‘அமைதி’ என்று நினைத்து விட்டது.

ஷேக் அப்துல்லாவின் காலத்தில் இருந்த நடுநிலையான காஷ்மீரிகளை இன்று அங்கே பார்க்க முடியவில்லை. ஸ்ரீநகரின் வீதிகள் எங்கும் பாகிஸ்தான் கொடிகளோடு அலைகிறார்கள் இளைஞர்கள். இவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக நிலவி வரும் வன்முறையினூடே பிறந்து வளர்ந்தவர்கள். துப்பாக்கி ஏந்திய இந்தியச் சிப்பாய்களை கற்களால் அடித்து “எங்களைச் சுட்டுக் கொல்லுங்கள்; நாங்கள் தியாகிகளாவோம்” என்கிறார்கள். முன்பு இந்த வாசகத்தைத் தீவிரவாதிகள் மட்டுமே சொன்னார்கள். இப்போது ஆயுதம் ஏந்தாத மாணவர்கள் சொல்கிறார்கள்.

மண்ணாசையின் காரணமாக நேருவும், ஜின்னாவும் ஏற்படுத்தி விட்ட இந்த மாபெரும் பிரச்சினையைத் துப்பாக்கியால் தீர்த்து வைப்பது கடினம். இதற்காக இந்திய மக்களும், காஷ்மீரிகளும் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை அதி பயங்கரமானது. எனவே, இலங்கை அரசுக்கு புத்திமதி சொல்லும் இந்திய அரசு முதலில் செய்ய வேண்டிய காரியம் துப்பாக்கியைக் கீழே போட்டு விட்டு காஷ்மீரிகளுடன் உரையாடலைத் துவக்குவதாகத்தான் இருக்கும்.

பின் குறிப்பு:

’காஷ்மீரைக் கொடுத்து விட்டால் பிறகு ஒவ்வொரு மாநிலமும் தனிநாடு கேட்கும்’ என்ற ஒரு வாதம் பலராலும் முன் வைக்கப் படுகிறது. ஆனால் இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு காஷ்மீரை ஒப்பிட முடியாது. காஷ்மீரின் நிலைமை வேறு. மேலும், நம்முடைய உடம்பில் ஒரு விரல் அழுகிப் போய் விட்டால் அதை வெட்டி எறிந்து விடுவதுதான் புத்திசாலித்தனம். அப்படி இல்லாமல் அழுகின உறுப்பை வெட்டாமல் விட்டால் பிறகு ஒவ்வொரு உறுப்பாக வெட்டி எறிய வேண்டி வரும். காஷ்மீரைத் தங்களோடு வைத்துக் கொண்டு அதற்காக இந்தியர்கள் கொடுக்கும் விலை மிக மிக அதிகம். ஒவ்வொரு நகரிலும் குண்டு வெடித்து நூற்றுக் கணக்கான பேர் உடல் வெடித்துச் சாகிறார்கள். அதை விட இன்னும் பயங்கரம், மக்களின் மனதில் ஏற்பட்டிருக்கும் பீதியும் பயமும்.

மேலும், தேசம் என்பதே ஒரு கற்பிதம்.

உதாரணமாக, மொகலாய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தியா என்று அழைக்கப்பட்ட நிலப்பரப்பு இப்போது இருப்பதை விடவும் மிகப் பெரியதாக இருந்தது. இன்றைய ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் என்ற இத்தனை நாடுகளும் சேர்ந்ததுதான் அப்போதய மொகலாய இந்தியா. இதையே பாரத வர்ஷம் என்றும், அகண்ட பாரதம் என்றும் கூறி இந்த 21-ஆம் நூற்றாண்டிலிருந்து மத்திய கால கட்டத்துக்குச் செல்ல முயற்சிக்கிறார்கள் இந்துத்துவவாதிகள்.

அதன் பின்னர், ஆங்கிலேயர்களின் ஆட்சியில்தான் இந்தியா என்ற நிலப்பரப்பு வடிவமைக்கப்பட்டது. அதுவே 1947க்கு பிறகு, பாகிஸ்தான் என்ற பகுதியையும் இழந்து இப்போதைய இந்தியாவாக மாறியது. அத்வானி போன்ற இந்துத்துவவாதிகள் பிறந்த ஊரே இன்று பாகிஸ்தானில் இருக்கிறது.

இதற்கெல்லாம் பல நூற்றாண்டுகள் பின்னால் சென்றால், இன்று தமிழ்நாடு என்று அழைக்கப்படும் பகுதியே சேரன், சோழன், பாண்டியன் என்றும், இன்னும் பலப்பல குறுநில அரசுகளாகவும் இருந்தவைதான். இப்படி இருக்கும் போது தேசம் என்றால் என்ன? வரலாற்றின் ஒவ்வொரு கால கட்டத்திலும் தனது பூகோள எல்லையை மாற்றிக் கொண்டே போகும் ஒரு நிலப்பரப்பை நிரந்தரமான ஒன்று என நம்புவது எத்தகைய பேதமை?

***

இரண்டு முறை நான் ஜம்மு காஷ்மீர் சென்றிருக்கிறேன். பார்ப்பதற்கு ஸ்விட்ஸர்லாந்தைப் போல் தோற்றமளித்த அந்த பூமியில் ஒரு இடத்திலும் மக்கள் நடமாட்டமே காணாததால் ஏதோ ஒரு மயான பூமிக்கு வந்து விட்டது போல் இருந்தது. ஆனால் ஒரு ஆண்டில் ஐந்து லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து கொண்டிருந்த தேசம் அது.//



அ.மார்க்ஸ் எழுதியது இது

"ஜெயமோகனின் கட்டுரையைச் சென்ற `தீராநதி' (அக்.2008) இதழில் பார்த்தேன். சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் மீது அவரது காழ்ப்பு சற்றுக் கூடுதலாகவே வெளிப்பட்டுள்ளது! அதிரடியாக எதாவது சொல்லி, எழுதி தன் மீது கவனத்தை ஈர்ப்பதில் ஜெயமோகன் கில்லாடி. கிட்டத்தட்ட இதே நேரத்தில் தனது `ப்ளாக்'கில் பாசிச எதிர்ப்புணர்வுடன் எழுதும் தமிழ் எழுத்தாளர்களைக் கேவலப்படுத்தி அவர் எழுதிய கட்டுரை ஒன்றும் (`எனது இந்தியா') எனது கவனத்திற்கு வந்தது. கவன ஈர்ப்பிற்காக அரை நிர்வாணத்துடன் அந்தர்பல்டி அடிக்கவும் தயங்காத ஜெயமோகனின் வலையில் நான் விழ விரும்பாதபோதும், சங்க இலக்கியம் முதல் இந்தியத் தத்துவம் வரை எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதக் கூடியவர் என்ற பெயருடன் எல்லாவற்றினூடாகவும் மனித வெறுப்பை, சமூக அநீதிகளைக் கொண்டாடும் அவரது மன நிலையைத் தோலுரிப்பது அவசியம் என்பதால் இதை எழுதுகிறேன்.

மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி, இந்தியச் சமூகத்தில் பன்மைத் தன்மையை ஒழித்துக்கட்ட வெறுப்பு அரசியல் செய்யும் பாசிஸ்டுகளின் பத்திரிகைகளில் வர வேண்டிய கட்டுரை அது. அவரது நூல்களை வாங்கி விற்கும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வாங்கி இலவசமாக விநியோகிக்கும் தொழிலதிபர்கள் இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்யக் கூடும்.

தன்னார்வ அமைப்புக்கள் வெளியிடும் பத்திரிகைகள் இந்திய எதிர்ப்பைக் கண் மூடித்தனமாக வெளிப்படுத்துவதாகத் தொடங்கும் ஜெ.மோ விரைவில் `சமரசம்' `விடிவெள்ளி' முதலான முஸ்லிம் இதழ்கள், ஜமாத்-ஏ-இஸ்லாமி முதலான முஸ்லிம் அமைப்புகள், அருந்ததிராய் போன்ற சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் எல்லோரையும் ஒன்றாக்கி வெளிநாட்டிலிருந்து கூலி பெற்று இயங்குபவர்களாகவும், மத அடிப்படைவாதிகளாகவும், பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவர்களாகவும் சித்திரிக்கிறார். தன்னார்வ அமைப்புக்களை இடதுசாரிகளும் விமர்சிக்கிறார்கள், இந்துத்துவவாதிகளும் எதிர்க்கிறார்கள். கூடவே முஸ்லிம் இதழ்களையும் இலக்காக்குவதிலிருந்து ஜெ.மோ யார் என்பது விளங்கி விடுகிறது.

காஷ்மீர் பிரச்சினை தொடர்பான அருந்ததி ராயின் சமீபத்திய கட்டுரை ஒன்றை `அலசுகிறார்' ஜெ.மோ. முஸ்லிம் வெறுப்பு ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு கடை விரிக்கும் ஜெ.மோ, மிக அடிப்படையான அரசியல் உண்மைகளையும் கூட அறியாத ஞானசூன்யம் என்பதை வரிக்கு வரி வெளிப்படுத்தி விடுகிறார்.

1947-ல் தொடங்கி காஷ்மீர மக்களின் குரலை ஒடுக்குவது, ஆண்டு தோறும் பத்தாயிரக் கணக்கில் அப்பாவி மக்கள் மீது படுகொலைகள், சித்திரவதைகள், கற்பழிப்புகள் நிகழ்த்துவது ஆகியவற்றைச் செய்கிற இந்திய அரசைக் கண்டிக்கும் அருந்ததிராயை `வெளிநாட்டு ஏஜன்ட்' என்கிற அளவில் இழி மொழிகளால் அவதூறு செய்கிறது ஜெ.மோவின் கட்டுரை. இரண்டு வாரங்களுக்கு முன் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நான்கு நாட்கள் தங்கி நிலைமையை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு. அந்த நான்கு நாட்களில் இரண்டு நாட்கள் ஒரு விடுதியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தோம் நாங்கள். வெளியில் சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் ஆயுதங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று ஒவ்வொரு ஐந்து காஷ்மீரிக்கும் ஒரு இந்தியப் படைவீரர் என்கிற அளவில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் எட்டு லட்சம் வீரர்கள், யாரை வேண்டுமானாலும் கைது செய்ய, சுட்டுக் கொல்ல முழு அதிகாரம் அளிக்கப்பட்டு அங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள், பழத் தோட்டங்கள் எல்லாம் இன்று இராணுவக் குடியிருப்புகள். உலக அளவில் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கடந்த 18 ஆண்டுகளில் ஒரு லட்சம் காஷ்மீர் முஸ்லிம்கள் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். 80,000 குழந்தைகள் இன்று அனாதைகள் விடுதிகளில். அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படியே 2000-2002 ஆண்டுகளில் மட்டும் `காணாமலடிக்கப்பட்டவர்களின்' எண்ணிக்கை 3784. மனித உரிமை அமைப்புகள் இன்னும் பலமடங்கு அதிகமாக இந்த எண்ணிக்கையைச் சொல்கின்றன. பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகள், எந்தச் சட்ட உரிமைகளும் இல்லாத `அரை விதவைகள்' அதாவது காணாமலடிக்கப்பட்டவர்களின் மனைவிகள்: இதுதான் இன்றைய காஷ்மீர்.

எங்கு நோக்கினும் இராணுவ `கேம்ப்'கள். சாலையில் ஒரு இராணுவ வீரனைப் பார்த்தால், நீங்கள் செல்லும் வாகனத்தின் `ஹெட் லைட்'டை அணைத்து உள் விளக்கைப் போட வேண்டும். இல்லாவிட்டால் சுடுவார்கள்.

நான் சொல்கிற எதுவும் ஜெ. மோவுடையதைப் போல ஆதாரமற்ற அவதூறுகளல்ல. வெளிவர உள்ள எனது நூலில் அத்தனைக்கும் ஆதாரங்களுள்ளன. எந்தப் பொது மேடையிலும் அவருடன் விவாதிக்கத் தயாராக உள்ளேன்.

``அமர்நாத் குகைக் கோயில் சார்ந்து எழுந்த கிளர்ச்சியை ஒட்டி காஷ்மீரில் உருவான எதிர்க்கிளர்ச்சியை மாபெரும் மக்கள் புரட்சியாக நேரில் சென்று கண்டு ஆனந்த பரவசத்துடன் எழுதியிருக்கிறார் அருந்ததி ராய்'' - ஜெ.மோ.

பள்ளத்தாக்கிலுள்ள மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள், குழந்தை உணவுகள் உட்படச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி, கொய்த ஆப்பிள் பழங்களை அழுகடித்துப் பொருளாதாரத் தடைவிதித்த இந்துத்துவ வன்முறை (தன்னெழுட்சியாக) எழுந்த கிளர்ச்சியாம். தமது நிலத்தைச் சட்ட விரோதமாக, மக்களின் சம்மதமின்றி ஆலய நிர்வாகத்திற்கு மாற்றியதை சுற்றுச் சூழல் நோக்கிலிருந்தும், உரிமைகள் அடிப்படையிலும் எதிர்த்த காஷ்மீர் மக்களின் செயற்பாடுகள் மக்கள் புரட்சி இல்லையாம்.

அமர்நாத் பற்றி தினசரி இதழ்களைக் கூட ஒழுங்காகப் படிக்காத அறிவுச் சோம்பேறிகளுக்கு என்ன தெரியும்? யாரும் எளிதில் செல்ல இயலாத `கிளேசியர்' பகுதியொன்றில் குகைக்குள் இருந்த `பனிலிங்கத்தை'க் கண்டுபிடித்தது ஒரு முஸ்லிம் ஆட்டிடையர் (1860). விக்கிரக ஆராதனையில் நம்பிக்கையற்றவர்களாக இருந்த போதும் அந்தச் செய்தியை இந்துச் சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்ட முஸ்லிம் ஆட்டிடையர்கள் (`மாலிக்'கள்), கடந்த 150 ஆண்டுகளாக அதைத் தமது பாதுகாப்பில் வைத்திருந்தனர். ஆண்டு தோறும் வரும் யாத்ரிகர்களுக்கு எல்லாவிதமான வசதிகளையும் செய்து தருதல், மிகப் பெரிய உணவுச் சாலைகளை அமைத்து உணவு வடித்துத் தருதல் எல்லாம் முஸ்லிம்கள் தான். ஸ்ரீநகரிலிருந்து அமர்நாத் வரை செல்லுமிடமெல்லாம் முஸ்லிம்களின் விருந்தோம்பல்கள் அன்றும் உண்டு, இன்று உண்டு. காஷ்மீரிகளின் விருந்தோம்பல் உலகப் பிரசித்தமானது.

இந்த ஆண்டு இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கூட நான்கு லட்சம் யாத்ரிகர்கள் வந்துபோயுள்ளனர். அவர்களில் ஒருவருக்கும் கூட ஒரு சிறு தீங்கும் விளைவிக்கவில்லை. மாறாக வழக்கமான அத்தனை விருந்தோம்பல்களும் நடைபெற்றன. இந்து யாத்ரிகர்களுக்கு முழுப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் ஜம்முவிலிருந்து கொண்டு இந்துத்துவ அமைப்புக்கள் மேற்கொண்ட `கிளர்ச்சியை' ஒட்டி 30 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். உண்டா, இல்லையா?

காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொள்ளும் விரிவாக்க ஆக்ரமிப்பு இந்துக் குடியேற்றங்களைச் செய்யும் வடிவிலானதல்ல. மாறாக எல்லாவிதமான நிறுவனங்களின் மீதுமிருந்த காஷ்மீர மக்களின் அதிகாரம் படிப்படியாகப் பறிக்கப்பட்டது. இதனுடைய ஒரு உச்ச கட்டம்தான் அமர்நாத் ஆலய நிர்வாகம் (Shrine Board) உருவாக்கப்பட்டதும், 100 ஏக்கர் நிலம் கையளிக்கப்பட்டதும். பா.ஜ.க. அரசால் நியமிக்கப்பட்ட அறிஞர் சின்ஹாவின் சதித்திட்டம் அது. ஒவ்வொரு ஆண்டும் உருப்பெறும் அந்தப் பனிலிங்கத்தின் ஆயுள் இரண்டு வாரங்கள் மட்டுமே. பின் அது உருகி `லிட்டர்' மற்றும் `ஜீலம்' நதிகளில் கரைந்தோடிவிடும். படிப்படியாக யாத்ரிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, யாத்திரைக் காலத்தை இரண்டு வாரங்களிலிருந்து இரண்டு மாதமாக அதிகரித்தது, பனி லிங்கத்தின் இடத்தில் நிரந்தரமாக ஒரு பளிங்கு லிங்கத்தை அமைக்கும் சதித்திட்டம் தீட்டியது ஆகியவற்றின் உச்ச கட்டமாகவே 100 ஏக்கர் நிலம் ஆலய நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டதும், ஆலய நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் சுங்கம் வசூலிக்கத் தொடங்கியதும் கிளேசியர் பகுதி ஒன்றில் யாத்ரீகர்கள் வசதிக்கென நிரந்தரமாக கட்டிடங்கள் உருவாக்குவதும். கடந்த 18 ஆண்டுகளில் உபரியாக எட்டு லட்சம் இராணுவத்தினரைச் சுமந்து அழிந்துள்ள காஷ்மீரின் இயற்கை வளங்கள் நிரந்தரமாக அழித்து விடும் எனச் சுற்றுச் சூழலாளர்கள் சொல்லியிருப்பது தெரியுமா ஜெ.மோக்களுக்கு.

``அந்த மண்ணின் மைந்தர்களான காஷ்மீரி பண்டிட்டுகளைக் கொன்று குவித்து அடித்துத் துரத்திய பின்னர்தான் அவர்களின் (காஷ்மீரிகளின்) போராட்டம் தொடங்கியது'' -ஜெ.மோ.

ஜெ.மோவின் வெறுப்பு அரசியலின் உச்சகட்ட வெளிப்பாடு இது. அவரது ஞானசூன்யத்திற்கான அப்பட்டமான சாட்சியம் இது. பண்டிட்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதில் நமக்கு மட்டுமல்ல, காஷ்மீர முஸ்லிம்களுக்கும் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் பண்டிட்கள் + முஸ்லிம்கள் என்றொரு எதிர்வை உண்டாக்கி பண்டிட்களை மட்டும் மண்ணின் மைந்தர்கள் எனச் சொல்வதன் பொருளென்ன? முஸ்லிம்களை `அந்நியர்களாக'ச் சித்திரிப்பதுதானே.

பிரிவினைக் கலவரங்களின்போது ஜம்முவில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 5 லட்சம். கட்டாயமாகப் பாகிஸ்தானுக்கு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சம். ஆனால் பள்ளத்தாக்கிலிருந்த பண்டிட்கள் யாரும் அப்போது கொல்லப்படவில்லை என்பது நினைவிருக்கட்டும். காந்தியடிகளும் கூட இந்த உண்மையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு காஷ்மீர முஸ்லிம்களைப் பாராட்டினார். 1990-களில் ஆளுநர் ஜெக்மோகனின் (ஜெய மோகனுக்கும் ஜெக்மோகனுக்கும் மூளையில், சிந்தனை முறையில் எந்தப் பெரிய வித்தியாசமும் கிடையாது) ஊக்குவிப்புடன் வெளியேறியவர்கள்தான் இன்று அகதிகளாக உள்ள பண்டிட்கள். இந்தியாவில் வேறு எந்த அகதிகளுக்கும் வழங்கப்படாத சலுகைகள் இன்று பண்டிட்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. டெல்லியில் மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் கடைகள், அரசு ஊழியர்களுக்கு வேலையின்றியே முழு ஊதியம்...

காஷ்மீரில் தீவிரவாதம் தலையெடுத்திருந்த கடந்த 18 ஆண்டுகளில் எஞ்சிய அப்பாவிப் பண்டிட்கள் மீது பயங்கரவாதம் ஏவப்பட்டதில்லை என்பதையும் நினைவிற்கொள்ளுங்கள். உளவு சொன்னார்கள், காட்டிக் கொடுத்தார்கள் என்கிற ரீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தனிநபர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். குஜராத்தைப் போலவோ, மும்பையைப் போலவோ பெரிய அளவில் இனப் படுகொலையை பண்டிட்கள் மீது காஷ்மீரத் தீவிரவாதிகள் நிகழ்த்தியதில்லை. இன்னொன்றையும் மனசில் நிறுத்துங்கள். காஷ்மீரில் இன்று அகதிகளாகியிருப்பது பண்டிட்கள் மட்டுமல்ல. அதே அளவில் காஷ்மீரி முஸ்லிம்களும் இடம் பெயர்ந்துள்ளனர். இம்முறை நான் பண்டிட்களின் பிரதிநிதியாக குமார் வாஞ்சு என்பவரையும் சந்தித்துப் பேசினேன்.

``காஷ்மீர் மக்கள் தேடுவது சுதந்திரத்தை அல்ல. பாகிஸ்தானோடு இணைவது மட்டுமே என்பது வெளிப்படை'' - ஜெ.மோ.

இதுவும் உண்மையறியாமையின் விளைவான பிதற்றலே. சையத் அலி ஷா கீலானி போன்றவர்கள் பாகிஸ்தானுடன் இணைதல் என்கிற கருத்தை முன் வைத்தபோதிலும் சுதந்திர காஷ்மீர் (`ஆஸாதி') என்கிற கோரிக்கையை முன் வைப்பவர்களே அங்கு அதிகம். அமர்நாத் பிரச்சினைக்குப் பின் இன்று அங்கு நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தீவிரவாதம் பின்னுக்குச் சென்று அமைதி வழியிலான மக்கள் எழுச்சியாக அது மாற்றமடைந்துள்ளது. அதையொட்டியே அக்டோபர் 6-ல் அறிவிக்கப்பட்ட லால் சவுக் பேரணி. இதை நேரில் காண்பதும் எங்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் இந்திய அரசின் கொடுங்கரங்கள் இந்த எழுச்சியை கொடூரமாக ஒடுக்கியதைத்தான் நாங்கள் நேரில் பார்க்க முடிந்தது. இன்று உருவாகியுள்ள `காஷ்மீர் ஒருங்கிணைப்புக் குழுவில்' பிரிந்திருந்த ஹூரியத் அமைப்புகள் தவிர, பார்கவுன்சில், வணிகப் பேரவை எனப் பல தரப்பு சிவில் சமூகத்தினரும் ஒன்றிணைந்துள்ளனர். பெரியவர் கீலானியையும் எங்கள் குழு சந்தித்து உரையாடியது. அவரது கருத்தும் மாறியுள்ளது. பல தரப்பட்ட மக்களையும் சந்தித்தோம். பொதுமக்கள், வழக்குரைஞர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சீக்கிய சமூகத்தினர் எல்லோருடனும் உரையாடினோம். இன்று காஷ்மீர மக்களின் ஒரே கோரிக்கை `ஆஸாதி. தான் பாகிஸ்தானுடன் இணைப்பு அல்ல.

பாகிஸ்தானை ஒரு தாலிபானிய அரசு எனவும், இன்று காஷ்மீருக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளும் இல்லாத சர்வாதிகார அமைப்பு எனவும் ஜெ.மோ குறிப்பிடுகிறார். இதுவும் அப்பட்டமான அறியாமையின் விளைவே. இது குறித்து நான் விரிவாக எழுதியுள்ளேன். ஜியாஉல்ஹக்கின் காலத்தைத் தவிர வேறெப்போதும் பாகிஸ்தான் தன்னை ஒரு முஸ்லிம் அரசாகப் பிரகடனப் படுத்திக் கொண்டதில்லை. ஜின்னா முஸ்லிம்களுக்கான ஒரு நாட்டைத்தான் கோரினாரே ஒழிய இஸ்லாமிய அரசு ஒன்றையல்ல. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள், ஜனநாயகத்திற்குப் பொருந்தாத நிலப் பிரபுத்துவ மதிப்பீடுகளினடிப்படையிலான அரசியல் எல்லாவற்றிற்கும் அப்பால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கே நடைபெற்ற ஜனநாயகத்திற்கான பேரெழுச்சியையும், போராட்டங்களையும் நாம் கவனிக்க வேண்டும். இராணுவ ஆட்சி வீழ்த்தப்பட்டதையும் மனங்கொள்ள வேண்டும். வழக்குரைஞர் அமைப்புக்கள், நீதிமன்றங்கள் ஆகியன இந்தியாவைக் காட்டிலும் அங்கே போர்க்குணத்துடனும், சுதந்திரமாகவும் செயல்படுகின்றன. அதன் விளைவே நீதிமன்றங்களின் மீதான முஷரெப்பின் தாக்குதல். அதன் பலன்களை இன்று அவர் சந்தித்துக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் தெருக்களில் பிச்சைக்காரர்களைப் பார்க்க முடியாது.

ஒப்பீட்டளவில் அகக்கட்டுமானங்கள், சாலை வசதிகள் முதலியன அங்கு அதிகம். இந்தியா பீற்றிக்கொள்ளும் `பொருளாதார வளர்ச்சிக்கும்' கூட பாகிஸ்தானின் வளர்ச்சி குறைந்ததல்ல. பாகிஸ்தானில் பல மட்டங்களில் பெண்களுக்கு அரசியல் ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், சிறுபான்மை மதத்தவருக்கு அவர்கள் வேண்டாமென்று சொன்ன வரை இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்ததும் ஜெயமோகனுக்குத் தெரியுமா?"
அனுப்ப/அடையாளமிட