இட்டாலி வடை

ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

Karunanidhi is in dilemma of dividing seats

Wednesday, July 15, 2009


இவர்களுக்காக நாம் என்ன செய்கின்றோம்?


சிங்கக் கொடிக்கு சலூட் அடித்து "நமோ நமோ மாதா"பாடுவதுடன் காலை விடிகின்றது. அது அவர்கள் கடமையல்ல கட்டாயம். 24 மணிநேரமும் துப்பாக்கி முனைகளால் ஆட்டுவிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ செய்ய வேண்டியது.

கொழும்பிலிருந்து 260 கி.மீற்றர் தொலைவாக அமைந்திருக்கும் வெலிகந்த சீர்திருத்த முகாமில் அடைக்கப்பட்டிருக்கும் 350 பேரின் காலை இப்படித்தான் விடிந்து கொண்டிருக்கின்றது.

சில மாதங்களின் முன்னர் இதே சிங்கக்கொடியை கிழித்து காலில் போட்டு மிதித்தவர்கள் தான் இவர்களெல்லாம்.தமிழீழத் தாகத்துடன் புலிகளாகக் கொண்டாடப்பட்டவர்கள். புலியாதரவாளர்களால் தீரர்களாகவும் புலியெதிர்ப்பாளர்களால் பாசிச வெறியர்களாகவும் சித்தரிக்கப்பட்டவர்கள். இன்று அனாதைகளாக...

செத்துப்போன புலிகளின் தலைவருக்கு உயிரூட்டுபவர்கள் ஒரு புறம்,தமிழ் மக்களின் தலைமையை தங்கள் இடுக்கிப்பிடியில் வைத்திருக்க தேசம் கடந்த அரசு அமைக்க பிரயத்தனப்படுபவர்கள் மறு புறம்,புலிப்பாசிசம் என்று தம் மனதின் காழ்ப்புக்களைக் கொட்டித் தூற்றியவர்கள் எதிர்ப்புறம்... ஆனால் யாரின் கவனத்தையும் பெறாது எதை வேண்டி எந்த சுதந்திரத்திற்காகப் போராடினார்களோ ..எதற்காக தம் இளமையைத் தொலைத்து குடும்பத்தை ஒதுக்கி உறவுகளைப் பிரிந்து காடுகளிலும் மேடுகளிலும் அலைந்தார்களோ அவை எல்லாம் மறுக்கப்பட்டு மறைக்கப்பட்ட அனாதைகளாக எதிரியின் காலடியில் அவன் பிச்சையில் உயிர் வளர்க்கின்றார்கள்.

இவர்களைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. தேசத்தின் விடுதலைக்காகப் போராடிய இந்த மாமனிதர்கள் இன்று தம் சொந்த வயிற்றுப்பிழைப்பிற்காக எதிரி கற்றுக்கொடுக்கும் தச்சுவேலை கட்டட வேலை ஒட்டு வேலை என்று வேலைகளைக் கற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.அத்துடன் ஆங்கிலம் கட்டாய சிங்களம். இன்னும் மூவாயிரம் பேர் இவர்களின் பின்னால் அடுத்த அனுபவத்திற்காக காத்திருக்கின்றார்கள்.

இதே போல கொழும்பிலிருந்து வடக்காக 60 கி.மீற்றர் தொலைவிலுள்ள அம்பேபுச என்ற இடத்திலுள்ள முகாமில் நூற்றிற்கும் அதிகமான பதின்ம வயதுப் பெண்களும் குழந்தை போராளிகளும் அடைபட்டிருக்கின்றார்கள்.

இந்த எண்ணிக்கைகள் சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்ட எண்ணிக்கை. ஒரு முறை சிறிலங்கா இராணுவ தளபதி சரத்பொன்சேகா இறுதிக்கட்ட சுற்றி வளைப்பில் 9000 புலிகள பிடிபட்டதாகக் கூறியிருந்தார். உண்மையில் எத்தனை பேர் பிடிபட்டார்கள். இன்னும் எத்தனை பேர் உயிருடன் இருக்கின்றார்கள் என்ற உண்மை பிரபாகரனுக்கும் சரத் பொன்சேகாவிற்குமே தெரிந்திருக்கும்.

அதில் பிடிபட்ட 17 வயதான வஜீமா ரவீந்திரன் இப்பொழுது தச்சுத் தொழில் கற்றுக் கொண்டிருக்கின்றார். தமிழ்ப்பாடல்களையும் புலிக்கொடியையும் மட்டுமே பார்த்திருப்பதாகக் கூறும் அவர் சிறிலங்காவின் அடக்கு முறையை இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்.

புலிகளின் கிழக்கு மாகாண தளபதிகளில் ஒருவராக இருந்த 29 வயது தேவநாயகம் சங்கர் இப்போது கட்டட வேலை கற்றுக்கொண்டிருக்கின்றார். 15 வருடங்கள் புலிகளுடன் இணைந்திருந்த இவர் "தலைவர் போனபின் எங்களுக்கு வழிகாட்ட யாருமில்லை" என்று கழிவிரக்கத்துடன் பேசுகின்றார். வழிகாட்ட மட்டுமல்ல, காப்பாற்றவும் தான்.

35 வயது ஆஞ்ஜலோ செல்வகுமார் "துப்பாக்கியுடன் நின்றபோது மக்கள் பயத்தில் எங்களுக்காக எல்லாம் செய்தார்கள். பணம் சம்பாதிப்பது இலகுவாக இருந்தது. இப்பொழுது பணம் சம்பாதிப்பது (தொழில் செய்வதன் மூலம்) எப்படி என்று கற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது" என்கின்றார்.

இவர்கள் எல்லோரும் இப்படி இருப்பதற்கு யார் காரணம்? இவர்களின் சிதைந்து போன வாழ்விற்கு யார் பொறுப்பு? புலிகளா? புலியெதிர்ப்பாளர்களா? சிங்கள பேரினவாதிகளா? இல்லை தமிழ் மக்களா?

இவர்களுக்காக நாம் என்ன செய்யப் போகின்றோம்?

Tuesday, July 14, 2009


சீமானும் கோட்சேயும் சில பதிவுகளும்


சமூகப் பொறுப்பு என்பது என்ன? தனக்குத்தனக்கு அளவான தொப்பியைத் தலையில் போட்டுக்கொண்டு நடப்பதா? அப்படித் தான் படுகின்றது. அப்படி இருப்பவர்கள் தான் சமூகப் பொறுப்போடு சிந்திப்பதாக காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். சமூகப் பொறுப்பு என்பது நீதி நியாயங்களை உடைத்துச் செல்வது தானா?

அண்மையில் சீமான் ஈழப்பிரச்சினை பற்றி ஒரு இதழில் பிரஸ்தாபித்திருந்தார். பேச்சின் இடையில் "தமிழ் ஈழத்தை காந்தி எதிர்த்தால் அவரையும் எதிர்ப்போம். ஈழத்தை கோட்சே ஆதரித்தால் அவரை அதரிப்போம்". கோட்சேயை ஆதரிப்பது பற்றி கேள்விகள் இருக்கலாம்.அதே போல ஈழத்தை நேசிக்கும் ஒருவன் அதை எதிர்ப்பவர்களை எதிரியாய்ப் பார்ப்பதிலும் தவறொன்றுமில்லை தானே.

பெரும் இழப்பு பெரும் கோபத்தைக் கொண்டுவரும். அதே இழப்பு அநீதியால் விளையும் போது அதீத கோபம் வரும். அநீதியாளர்களை எதிர்க்க வீதியில் இறங்க வைக்கும். இங்கும் அது தான் நடந்திருக்கின்றது. மகாத்மா காந்தியின் பெயரால் ஆட்சியைப் பிடித்தவர்கள் "காந்தி"யின் பெயரால் ஆட்சி செய்யும் போது இழைக்கப்படும் அநீதியின் மேல் உண்டாகும் கோபம் இரட்டிப்பாகும்.

கோட்சேயை ஆதரிப்பதை மனதளவில், ஏற்றுக் கொள்ள முடியாத சமூகப் பொறுப்பாக எடுத்துக்கொண்டாலும் அந்தக் கோபத்தின் நியாயத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் தட்டிக்கழிப்பது எவ்வாறு சரியாகும். வார்த்தைகளுடன் விளையாடுவதை விட உயிர்களுடன் விளையாடுவது எவ்வளவு வலி மிகுந்தது. இதை ஏன் இந்தச் சமூகப்பொறுப்பாளர்களால் புரிந்து கொள்ள முடியாது போகின்றது. அங்கு இழைக்கப்படும் அநீதி அவர்கள் கண்ணிற்குத் தெரிவதில்லையா? அல்லது தெரிந்தும் தெரியாத பாவனையா?

ஈழ மக்களிற்கு எதிராக நடந்தேறிய அநீதியான யுத்தத்தில் இந்தியாவின் அழுக்கு முகத்தை அறியாதவர் யார்? இந்தியா உருவாவதற்கு காரணமாய் இருந்த அஹிம்சை, காருண்யம், நேர்மை எல்லாவற்றிலிருந்தும் விலகி எங்கேயோ போய் விட்டது.

ஈழத்தமிழர்களுடன் எதுவித பகமையும் இல்லாமலே அவர்கள் மீது நடாத்தப்பட்ட இனப்படுகொலையை ஆதரித்ததன் மூலம் வரலாற்றில் திருத்த முடியாத தவறை இந்தியா செய்திருக்கின்றது.

அண்மையில் டெலிகிராப் பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் றிச்சாட் டிக்ஸன்
"Nation of India has unfortunately deviated from its principles and core values, it was originally built upon. India might build rockets to the moon and giant monuments reaching to the skies but India will not succeed if it corrupts its own soul by aiding Genocide in other countries"அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கின்றார்.தன் தேசம் என்பதால் நேர்மை என்பதன் வேலிகளை மாற்றிப் போட முடியாது. நியாயம் என்ற தராசின் தட்டுகளை உயர்த்தி தாழ்த்த முடியாது.

இதனால் இவ்வாறு விளைந்தது என்ற காரணங்களையும் கூடவே அலசிப்பார்ப்பது தான் சமூகப் பொறுப்பாய் இருக்க முடியும். அரை குறையான எண்ணங்களுடன் எதைப்பற்றி பேசப் புறப்பட்டாலும் அது சரியாய் இருக்காது.

இந்தியா பலஸ்தீனத்தில் குண்டு போடாத காரணத்தாலேயே பலஸ்தீனியர்களுக்காக கவிதை எழுதுவது உங்களுக்கு உறுத்தவில்லை.ஈராக்கில் பீரங்கிகளால் உழுது தள்ளாத படியால் மனித நேசம் பற்றி பேச முடிகின்றது.இஸ்ரேலையும் அமெரிக்காவையும் திட்டித் தீர்க்க முடிகின்றது. ஆனால் ஈழத்தில் இந்தியாவின் விசக் கரங்கள விரிந்து செல்வதனாலா உறுத்தும் மனச்சாட்சியை அடக்க இந்திய இறையாண்மையை இறுக்கிப் பிடிக்கின்றீர்கள்.கோட்சேயும் மஹாத்மா காந்தியும் அவர்களாகவே இருக்கின்றார்கள். நாங்கள் தான் மாறிக்கொண்டிருக்கின்றோம். மஹாத்மாகாந்தியின் வழியில் தோன்றிய இந்தியா இன்று கோட்சேயிடம் சென்று சேர்ந்து விட்டது.

"கோட்சேயை ஆதரிக்கலாமா? " என்ற கேள்வியைக் கேட்பது போலவே ஹிட்லரை ஆதரிப்பவரை வக்காலத்து வாங்கலாமா? என்ற கேள்வியையும் சமமாகப் பொருத்திப் பார்க்கும் போது தான் சமூகப் பொறுப்பு துளிர்க்கும். அவ்வாறில்லாவிட்டால் தன் தனக்கு பொருத்தமான தொப்பிகளுடன் அலையும் வெறும் மனிதர்களைத் தான் காணமுடியும்.

//இழப்பின் வேதனைகள், தன்னிடம் இருப்பது மட்டுமே நியாயம் என்று வரையறையை உருவாக்கி விடுகிறது. அதே வேதனை கொண்ட மற்றவர்கள் கொஞ்சம் நிதானமாக இருப்பதைக் கூட தாங்கிக் கொள்ள முடியாத கோபம் வருகிறது. வேறு கருத்துக்கள் இருக்கவே கூடாது என ஆணையிடுகிறது. அவர்களையும் துரோகிகள் என எந்த யோசனையுமின்றி பட்டம் கட்டிவிடுகிறது. இந்த கொந்தளிப்பான மனநிலை ஒருவித அடையாள அரசியலுக்குள் மனிதர்களை அரவமில்லாமல் நகர்த்திவிடுகிறது.//

இழப்பின் வேதனைகள் மட்டுமல்ல அநீதியை எதிர்க்கும் மனமும் துயரப்படும் மனிதர்களைத் தேடித் தோள் கொடுக்கும் பண்பும் தான் மனிதர்களை நிலைநிறுத்துகின்றது. வெறுங்கதை பேசுபவர்களைத் தூக்கிப் போடுகின்றது.

ஈழ இன அழிப்பில் இந்தியாவின் பங்கு

ஈழ இன அழிப்பில் இந்தியாவின் பங்கு பற்றி இலண்டனில் இருந்து வெளி வரும் டெலிகிராப் தினசையில் றிச்சாட் டிக்ஸன் எழுதிய கட்டுரையில் இந்தியா,சீனா மேற்குலகம் ஆகியவற்றின் பங்கு பற்றியும் அவற்றின் தவறுகள் பற்றியும் எழுதியுள்ளார். இதற்கு இந்தியா என்ன பதில் கூறப்போகின்றது?


வன்னியில் தமிழ் மக்களின் உயிரைக்குடித்த இந்திய தயாரிப்புக் குண்டுகள் (படத்தைப் பெரிதாக்கிப் பார்க்கவும்)
India and its role in Sri Lankan war -Richard Dixon Telegraph London


India is a successful democracy with the population of 1.17 billion. So many different races, cultures, colours and religions live relatively peacefully. Most of the ethnic groups have their own States and every State in the country is given a degree of autonomy within this great Nation. People of India are mostly religious, hard working and non violent and they still maintain very strong traditional family values.

India hasn’t got a consistent foreign policy towards Sri Lanka. RAW which is the external intelligent agency in India has done great damage to Sri Lanka particularly to the Tamil community. India can't be fully blamed for this because the Sri Lankan regimes very often make unpredictable moves therefore India is forced to change its policies.

As any other intelligent agency, RAW has a legitimate responsibility to protect India from its enemies, by being proactive. However, India could have achieved its objectives without helping the Sri Lankan government to slaughter thousands of Tamils.

RAW provided military training to the Tamil rebels in the early eighties in order to challenge the Sri Lankan government that had closed links with the Western Countries including the US. Tamil youth were trained in different groups. RAW was also to some extent be responsible for fuelling enmity and competition between different Tamil organisations.

Contrary to what many people believe, it is Indian’s interest to maintain a troubled Sri Lanka than a peaceful nation for India to spread its wings in the region. Disturbance in Sri Lanka would give an excuse for India to keep its Navy in Sri Lankan waters.

Indian peace keeping forces and Tamil rebels fought an unfortunate war between 1987 and 1989. Around twelve hundreds Indian soldiers lost their lives and many thousands were wounded in Sri Lankan soil. This was a bitter experience for India.

From year 2001 until the start of war in 2007, India kept a distance from Sri Lanka, although activities were going on behind the scenes. India stopped supplying offensive weapons to the Sri Lankan military.

Indian involvement in recent Sri Lankan war was quite controversial. China and Pakistan provided with all the weapons and India provided the intelligence to the ground troops.

India was well capable of stopping the war but it failed to do it even when thousands of innocent men women and children were perishing in Vanni. Some Indian leaders made contradictory statements, pretending like they were after peace while pressing the “Attack” buttons on their remote controls.

India may have its concerns that Sri Lanka might become a launch pad for China and Pakistan in its own backyard. Letting the Tamils to die in the hands of the Sri Lankan forces was not an easy option for India either.

India has no enmity with the Tamils in Sri Lanka but it has made a historical blunder by supporting a corrupt Sri Lankan regime to commit genocide against the Tamils just to satisfy a racist Nation, so that it can secure its interest in the Indian Ocean.

Indian forces are now going to occupy the Vanni region with the excuse of clearing land mines.

Nation of India has unfortunately deviated from its principles and core values, it was originally built upon. India might build rockets to the moon and giant monuments reaching to the skies but India will not succeed if it corrupts its own soul by aiding Genocide in other countries.

India should dream of becoming a superpower not just by wealth and technology but also proving to the world as a defender and guardian of Human rights.

Cries of men, women and children, who died in Vanni, are still echoing in the thundering skies of Vanni. These voices will keep on haunting every Indian because India has blood on its hands.

http://my.telegraph.co.uk/richarddixons/blog/2009/07/08/emerging_powers_turning_into_blood_sucking_leeches_

ஈழ தமிழ் அரசியல் தலைமையில் இடதுசாரிகளின் பங்கு


"மக்களின் துன்ப துயரங்களில் பங்கு கொண்டு, அவர்களின் சுமைகளை நாமும் தாங்கி, கஷ்டங்களைப் போக்குவதற்கு திட்டமிட்டு செயலாற்றுவதுதான் உண்மையான அரசியல் வேலை.''அதாவது, அரசியல் வேலைத் திட்டங்கள் யாவும், பன்முகப் பார்வை கொண்ட மக்களின் விடிவிற்கானதாக இருக்க வேண்டுமென்பதே இதன் உட்பொருளாகும்.போராட்ட வடிவங்கள் மாறினாலும் மக்களின் விடுதலை என்கிற அடிப்படை நோக்கிலிருந்து அவை விலகிச் செல்லக் கூடாது.மாறும் வடிவங்கள், புவிசார் அரசியலைப் புரிந்து முற்போக்கான பாதையொன்றை தெரிவு செய்ய வேண்டும். அதாவது போராட்ட முறைமைகளில் காத்திரமான விமர்சனங்களை முன் வைக்கும் வெகுஜன இயக்கங்களை இனங் காண வேண்டிய கடப்பாடு மக்களுக்கு உண்டு.

புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் இப்பொறுப்பு உண்டு. ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு ஆதரவாகப் பெரும் பரப்புரைப் பணியாற்றிய கியூபா தேசத்தின், அரசியலை இனியாவது புரிந்து கொள்ள வேண்டும். இடதுசாரிகள் எனப்படுவோர், பிரிந்து செல்லும் சுய நிர்ணய உரிமைக் கோட்பாட்டிற்கு எதிரானவர்கள் என்கிற தவறான கருத்தினை, தேசிய இன விடுதலையை முன்னெடுக்கும் சில சக்திகள் பிரசாரப்படுத்துகின்றன.

மேற்குலக, இந்திய ஆதரவுடன் விடுதலை வென்றெடுக்கப்படும் என்கிற, பூர்சுவா சிந்தனையுடன் செயலாற்றும் முதலாளித்துவ வாதிகளுக்கு பொதுவுடமைவாதிகள் எதிராளிகளாகத் தென்படுவது ஆச்சரியத்திற்குரிய தல்ல. உதாரணமாக தோழர் சண்முகதாசன் தலைமையில் தீண்டாமைக்கு எதிராக யாழ். குடாவில் நடத்தப்பட்ட வெகுஜனப் போராட்டங்களை, வியட்நாம் போன்றொரு நிலைமையை உருவாக்க அங்கு சிலர் முயற்சிக்கிறார்களென்று திரிபுபடுத்திய, தமிழினத் தலைவர்களும் எமது வரலாற்றில் உண்டு. ஆகவே தமிழினத்தின் சுய நிர்ணய உரிமை என்கிற பிறப்புரிமையை ஏற்றுக் கொள்ளும் முற்போக்குச் சக்திகளுடன் ஒன்றிணைந்து அடுத்த கட்ட போராட்ட நகர்வினை முன்னெடுக்க வேண்டிய காலத்தின் தேவை உணரப்படுகிறது. வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களை, நாடாளுமன்றில் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர், பரந்துபட்டு செயற்படும் முற்போக்கு அணியினருடன் ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இணையலாம்.

அதேவேளை, தேசிய இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது பிராந்திய வல்லரசுகளின் சூழ்ச்சியினால் முடக்கப்பட்ட நிலையில் தற்காலிகமாக உருவாகியுள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்பிட பேரினவாத சக்திகள் முயற்சிப்பதனை கவனத்தில் கொள்ளல் வேண்டும். அதிகார பலம்கொண்ட ஆட்சியாளர்கள், சில தமிழ் கட்சிகளையும் தனி நபர்களையும் தம்மோடு இணைத்து தமிழ் தேசியத்திற்கான அரசியல் தளத்தினை அழித்து விடலாமெனக் காய்களை நகர்த்துகிறார்கள்.

அதாவது தமிழினத்தின் அரசியல் பிரதிநிதித்துவமோ அல்லது இன அடையாளத்தை வெளிப்படுத்தும் கட்சிகளோ இல்லாத எல்லைக் கிராமங்களற்ற பெருந்தேசிய இராஜ்ஜியமொன்றை இலங்கையில் நிர்மாணிப்பதே பேரினவாதத்தின் இலட்சியம். இந்நிலையில், அவலத்தையும், அழிவுகளையும் தொடர்ந்து அனுபவித்து வரும் தாயக மக்களுக்கான சரியான அரசியல் தலைமையொன்று உருவாக்கப்பட வேண்டும்.

அதனை தாயக மக்களும், போராட்டச் சக்திகளும் அங்குள்ள இடதுசாரி இயக்கங்களும் இணைந்தே கட்டியெழுப்ப வேண்டும். புலம்பெயர்நாட்டிலிருந்து தாயக மக்களுக்கான தலைமையை இறக்குமதி செய்ய முடியாது. போராடும் மண்ணின் மக்களே தமக்கான தலைமையை தேர்ந்தெடுக்கும் உரித்துடையவர்கள்.

தாயக மக்களுக்கு மூச்சடைத்து விட்டது, அதனால் சுவாசிக்க வழியின்றி குரல் இழந்து போயுள்ளார்களென்று புலம்புபவர்கள், ஒடுக்கப்படும் மக்களே விடுதலைக்காகப் போராடுவார்கள் என்கிற எளிய உண்மையை புரிந்து கொள்ளவில்லை. இந்தியாவுடன் பேசப் போகிறோம், நோர்வேயுடன் பேசிக் öகாண்டிருக்கிறோம் என்பவர்கள் கியூபா, சீனாவுடனும் பேசலாம். டானியல் ஒட்டேகாவின் நிக்கராகுவாவுடனும் பேசலாம்.

சர்வதேச சட்டங்களும் ஐ.நா. வின் எழுத்துருவிலுள்ள சரத்துகளும் முள்ளிவாய்க்காலில் அவலப்பட்ட மக்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. நியூயோர்க் மனித உரிமைக் கண்காணிப்பகமும் ஆசிய மனித உரிமைச் சங்கமும் சர்வதேச மன்னிப்புச் சபையும் மனிதக் கேடய விவகாரத்தை தூக்கிப் பிடித்து மனிதாபிமான அரசியலை நடத்தின.இன்றும் கூட யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக அறிக்கைப் போர் மட்டும் நடத்தப்படுகிறது. இந்தச் சபைகள், அமைப்புகளை மீறி, பிராந்திய நலன் பேணும் அரசியலொன்று இயங்கிக் கொண்டிருப்பதை இவர்கள் அறிவார்கள். தற்போது காஸா மீது இஸ்ரேல் தொடுத்த பேõரில் நடைபெற்ற யுத்த குற்றங்கள் குறித்து விசாரணைகள் நடைபெறுகின்றன. முடிவுகள் எதுவாக இருந்தாலும் தண்டனையிலிருந்து இஸ்ரேலைக் காப்பாற்ற அமெரிக்காவும் மேற்குலக நண்பர்களும் துணை நிற்பார்களென்று யூதர்களுக்குப் புரியும். ஆகவே தாயக மக்களின் அரசியல் தளத்தினை பலப்படுத்த வேண்டிய சமகாலத் தேவையைப் புரிவதனை விடுத்து நாடு கடந்த தேசத்தை அமைப்பதால் மக்களுக்கான விடுதலை அரசியல் உயிர்த்தெழ முடியாது. அமெரிக்கா ஏற்றுக் கொள்ள மறுப்பதால் இந்தியாவை அணுகிப் பார்க்கலாமென்று தாவிச் செல்லும் அரசியலை முன்னெடுக்காமல் சர்வதேச மக்களின் ஆதரவைத் திரட்டும் பணியில் இவர்கள் ஈடுபடலாம்.

தீண்டத் தகாதவர்களாகக் கருதப்படும் சோசலிச நாடுகளையும் அணுகிப் பார்க்கலாம். மக்கள் புரட்சி மூலம் விடுதலை பெற்ற கியூபா, வியட்னாம் போன்ற நாடுகள் எம்மை புறக்கணித்து விட்டன என்கிற அங்கலாய்ப்பில் அவர்களைத் தூற்றுவதை விடுத்து அவர்கள் அவ்வாறான நிலைப்பாட்டினை மேற்கொண்டதற்கான காரணிகளையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதுவரை நிகழ்ந்த ஈழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது, மேற்குலக ஏகாதிபத்தியங்களுக்காக நடத்தப்பட்டது என்கிற கருத்தியலொன்று இவர்களிடம் காணப்படுகிறது. இதனை மாற்றிட வேண்டிய அவசியம், தமிழ் மக்களிடையே இயங்கும் பொதுவுடமைச் சித்தாந்தத்தை ஏற்றுக் கொண்ட முற்போக்குச் சக்திகளõல் உணரப்படுகிறது.ஆகவே மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளாவிட்டால் நாடு கடந்த அரசும் பத்தோடு பதினொன்றாகிவிடும்.

நன்றி: வீரகேசரி

Monday, July 13, 2009


புலிகளின் புருடாவும் வெட்கம் கெட்ட அறிக்கையும்


50 ஆயிரம் மக்களினதும் போராளிகளினதும் சாம்பரின் மீது புலிகளின் "நாடு கடந்த அரசு " புருடா நடந்து கொண்டிருக்கின்றது. இதுவரை ஆயுதப் போராட்டத்தின் மூலமே தமிழீழம் அடையமுடியுமென்று அழுங்குப் பிடியாக நின்ற புலிகளுக்கு வன்னிக் களம் ஞானம் கொடுத்த போதி மரமாக அமைந்து விட்டது. அவர்களின் ஆயுத மாயை அடங்காப் பற்று அனைத்தையும் தூள் தூளாக உடைத்து நொருக்கிவிட்டது.

இன்று ஆயுதம் எங்கள் குறிக்கோள் அல்ல அகிம்சையே பெரும் மூலதனம் என்று அக்கப்போர் கிளப்பிக்கொண்டிருக்கின்றனர்.

//தமிழ் ஈழப் பிரச்னையில், குறிப்பாக கடந்த நான்கு மாதங்களாக நடந்த சம்பவங்களில், இந்தியாவின் பங்கை பல கோணங்களில் ஆராய்ந்து வருகிறோம். எங்கள் திட்டம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றுதான் கூறுகிறோம்.

இனி ஆயுதப் போராட்டம் இல்லை. இந்தியாவின் இறையாண்மையையோ அல்லது பூகோள நலன்களையோ எம்முடைய செயல்கள் பாதிக்காது என உறுதி அளிக்கிறோம்.//

இதே ஞானம் சில ஆண்டுகளுக்கு முன்னரேனும் கிடைத்திருந்தால் பல்லாயிரக்கணக்கான மக்களையும் போராளிகளையும் பலி கொடுத்திருக்கத் தேவையில்லை. அவர்களின் இன்னுயிர்களை வீணே இழந்திருக்கத் தேவையில்லை.

இத்தனை மக்களையும் கொன்று குவித்த யுத்தத்தை இந்தியாவே முன்னின்று நடாத்தியிருந்தது.அதனை சிறிலங்கா ஜனாதிபதி ராஜபக்ஸேயின் சகோதரர் கோத்தபாயவே ஒப்புக்கொண்டுள்ளார். "இந்தியாவின் யுத்தத்தை நாங்கள் நடாத்தி முடித்தோம்" என்று மகிந்த ராஜபக்ஸேயும் பிரகடனப்படுத்தியிருந்தார்.

இவையெல்லாம் பட்டவர்த்தனமான உண்மைகளாக இருக்க அண்மையில் புலிகளின் சட்ட ஆலோசகர் உருத்திரகுமார் ஒரு வெட்கம் கெட்ட அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார்.

//''நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு, புலம் பெயர்ந்த அனைவரின் உதவியும் அவசியம் தேவை. இந்தியாவின் உதவி மிகவும் அவசியம். இந்தியாவை நாங்கள் என்றுமே எதிரி நாடாக பாவித்ததில்லை. //

அப்போது இந்தியா ஏன் உங்களை எதிரிகளாகப் பாவித்தது. உங்களை அழிப்பது என்ற போர்வையிலேயே 50 ஆயிரம் மக்களைக் கொன்று புதைத்தும் 3 இலட்சம் மக்களை இடம் பெயர்த்து முட்கம்பி வேலிக்குள் அடைத்துப் போட்டிருக்கின்றது. இறந்து போன மக்களுக்கும் அகதிகளாக ஒடுங்கிப்போய் இருக்கும் மக்களுக்கும் சொல்வதற்கு உங்களிடம் ஏதாவது நல்ல காரணம் இருக்கின்றதா?

//நாங்கள் திட்டமிடுவது, வெறும் வலைதளத்தில் மட்டுமே வாழும் அரசு அல்ல.தலைவருக்குப் பிறகான பதவிச் சண்டையும் அல்ல. எந்த ஒரு குழுவையோ அல்லது தனிநபரையோ இது முன்னிலைப்படுத்தாது. விரைவில் தேர்தலும் நடத்துவோம். ஜனநாயக முறைப்படி, அதில் யாரும் பங்கு பெறலாம். முகாம்களில் சீரழியும் மூன்று இலட்சம் ஈழ மக்களைக் காப்பாற்றுவதே எங்கள் நோக்கம். எங்கள் இலக்கு, தனி ஈழம். அதை இனி ஜனநாயக முறையில் இந்தியா, உலக நாடுகளின் உதவியுடன் பெறுவோம்.//

உங்களை 25 வருடங்களாக நம்பி உங்களை ஆதரித்துப் பாதுகாத்த மக்களை நட்டாற்றில் விட்டு விட்டு உங்களுடன் சேர்த்து மக்களையும் அழித்த இந்தியாவின் உதவியுடன் தமிழீழம் அமைத்துத் தரப் புறப்பட்டிருக்கும் உங்களை என்னவென்பது?

நாடு கடந்த அரசினை அமைக்க அமெரிக்கா தன் எல்லைகளை மூஉடிக்கொண்டபோது உங்களுக்கு இந்தியாவின் உதவி வேண்டியிருக்கின்றது. இந்தியாதான் எப்போதும் தமிழீழத்தினதும் புலிகளினதும் எதிரி என்பதை எப்போது நீங்கள் புரிந்து கொள்ளப்போகின்றீர்களோ?

புலம் பெயர்ந்த தேசங்களிலிருந்து ஆட்சியதிகாரத்தை இறக்குமதி செய்து விட முடியாது என்ற கருத்து இப்போது தமிழ் பேசும் மக்களிடம் முனைப்புப் பெற்றுள்ளது. ஒடுக்கப்பட்டிருக்கும் மக்களிற்கே சுதந்திரத்தின் தேவையும் அதைப்பெற்றுக் கொள்ளும் போராட்ட வலுவும் இருக்கும் என்பது உண்மையே. ஈழத்தில் கட்டியெழுப்பப்படும் தமிழ் அரசியல்த் தலைமையே மக்கள் மத்தியில் போராட்டத்தை முன்னெடுக்கும் திறன்வாய்ந்தது. ஈழத்தில் இருக்கும் முற்போக்கு புரட்சிவாதச் சக்திகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் தேவையாகும். அதற்கான காரணமும் தேவையும் வெளிப்படையானது.

புலிகளின் அழிவுடன் ஏற்பட்ட தமிழர்களுக்கான அரசியல் வெற்றிடத்தை நிரப்புவதற்கு பேரினவாதக் கட்சிகள் இப்போது தீவிரம் காட்டுகின்றன. கருணா ,டக்ளஸ், போன்றவர்களின் தலைமையில் இருக்கும் உதிரிக்கட்சிகளையும் ஆனந்த சங்கரி போன்ற தனி நபர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு தமிழருக்கான அரசியல் தலைமை வெற்றிடத்தை இவை நிரப்ப முற்படுகின்றன.

இது தமிழ்த் தேசியத்தின் அடையாளங்களை அழித்தொழிக்கும் ஆபத்தின் அறிகுறி. தொடர்பு பட்ட தமிழ்ப்பிரதேசம் கலாச்சார அடையாளங்கள் என்பவற்றை நொதுமைப் படுத்தி சிங்களப் பெரும்பான்மையுடன் இலங்கையின் அனைத்துப் பகுதிகளையும் பூரணப்படுத்தும் திட்டமிடலின் அதி ஆபத்தான கணங்கள்.

இதை கருத்தில் கொண்டு தமிழ மக்களிடையே இருக்கக் கூடிய முற்போக்கு அணிகள்,மாக்ஸிய கம்யூனிஸக் கூட்டுகள் இணைந்து தமிழர் அரசியலின் தலைமையை மீட்டெடுக்க வேண்டும். அதற்கான ஆதரவை வழமை போல தமிழக , புலம்பெயர்ந்த தமிழர்கள் வழங்குவது ஆக்கபூர்வமான செயலாகவிருக்கும்.

அதைவிட்டு நாடு கடந்த அரசு, புலம்பெயர் மக்களின் தலைமைத்துவம் என்பதெல்லாம் போகாத ஊருக்குக் கொண்டு சென்று தமிழ் மக்களின் போராட்டத்தை இன்னும் பலகாலம் பின் தள்ளவே வழி வகுக்கும்.

மனநோயாளர்கள் பார்க்கும் மனநோய் மருத்துவம்


இது ஒரு சுவாரசியமான விடயம். மனநோயாளர்களுக்கு மனநோயாளர்களே வைத்தியம் பார்ப்பது என்பது சுவாரசியம் இல்லையா? மனநோயாளர்கள் அதிகரித்து விட்டார்களா? என்று ஒரு பதிவை பழமை பேசி போட்டிருக்கார். ஏன்? எதற்கு? என்று கேள்விகள் இல்லாமலே அங்கும் கும்மி.

என்ன? அவரே சொல்லியிருக்கார் தமிழ் மணத்திற்கு வருவதற்கே சங்கடமாகியிருக்கின்றது. ஏன்? மனநோயாளிகள் இங்கு தான் குவிந்திருக்கின்றார்கள் என்பது அவர் எண்ணம். கேள்வி கேட்டவர்கள் எல்லாம் எங்கிருந்து கேள்வி கேட்டார்கள்? தமிழ்மணத்திலிருந்து தான் புற்றீசல்களாகக் கிளம்பி கொட்டமடிக்கின்றார்கள்.

என்ன? அவர்களுக்கு மறந்து விட்டது. அல்லது உறைக்கவில்லை. மனநோயாளர்களாக இருக்கும் நிகழ் தகவு அவர்களுக்கும் இருக்கின்றது என்பதை. என்ன செய்வது? அவ்வளவு அப்பிராணிகளாக இருக்கின்றார்கள்.

தமிழ் மணத்தில் எழுதும் பத்திரிகையாளர்கள் அனைவரும் அல்லது அவர்களில் பலர் அல்லது ஒரு சிலர் மனநோயாளர்கள் என்பது பழமைபேசியின் முடிந்த முடிபு. அவரின் இடுகை சுட்டுவது அதைத் தான்.

சரி.. அந்தப்பதிவிற்கு பதில் போட்டவர்கள் எல்லாம் தாம் அப்படி ஒன்றும் மனநலம் கெட்டவர்கள் அல்ல என்று எண்ணிக்கொண்டாலும்.. அவரின் பின்னூட்டங்களின் பின்னணியில் நடந்து முடிந்த "அக்கப்போரில்" பின்னூட்டியவர்கள் , போராடியவர்கள் இவர்களைக் குறித்தே அவரின் "மனநலம் கெட்ட" கணிப்பு இருந்திருக்கின்றது.

அந்தப் பதிவுகளில் பின்னூட்டியவர்கள் அக்கப்போரில் முட்டிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் இங்கும் வந்து பதிலிட்டபோது அவர் நிச்சயம் சுவரில் முட்டிக்கொண்டிருப்பார். அவ்வளவிற்கு விளக்கெண்ணைகளா? நம் பதிவர்கள் என்று எதாலோ சிரித்திருப்பார்.

இதில் தமிழ் மணத்திற்கு கொம்பு சீவல் வேறு. ஐயா பதிவுலகம் பத்திரிகை உலகம் அல்ல. இது ஒரு அடுக்களை சாம்பிராச்சியம் போல. மனதில் பூட்டி வைத்ததை துண்டு நோட்டில் கிறுக்கி வைத்ததை சொந்த டைரியில் வரைந்து வைத்ததை பகிர்ந்து கொள்ள விரும்புவதை வெளியிடுவது போன்ற சமாச்சாரம்.

"வாடி என் மச்சி வாழைக்காய் பஜ்ஜி" என்னுமாற் போல டி.ராஜேந்தர் போல கவிதை எழுதும் பாமரனும் ஆர்வமிகுதியால் ஒரு புளக்கை ஆரம்பித்து எழுதிக் கிறுக்கி அல்லது கிறுக்கி எழுதி கடை விரிக்கும் இடம் தான் பதிவர் உலகம். இங்கு வந்து கவி பாடத் தெரிந்த கம்பன் இதெல்லாம் கவிதையா? சுத்தக் கிறுக்குப் பயல்களாய் இருக்காங்களே? இவர்கள் மனநோயாளிகளா? என்று கேட்டால் என்ன செய்வது?

தொம்பர் குப்பத்தில் இருந்து வந்த சாருவால் மலம் அள்ளுவது பற்றி விலாவரியாக எழுதமுடியும். அக்ரகாரத்தில் பிறழ்ந்து உழன்ற கிட்டுமாமாவால் இதைச் சகிக்க முடியாதுதானே. அதற்காக பாவம் சாரு என்ன செய்வார்? அவரை மனநோயாளி என்று சொன்னால் என்ன நியாயம்?

இங்கு ஒரு செளகரியம் எல்லோரும் எல்லாம் எழுதலாம். ஆனால் ஒரு அசெளகரியம் இருக்கின்றது எல்லோராலும் எல்லாவற்றையும் இரசிக்க முடிவதில்லை. அதனால் என்ன? கடந்து போக முடிவதனால் கடந்து போகலாம். போக வேண்டும்.

எல்லோருக்கும் பிடித்த இரசிக்கக் கூடிய புத்தகம் ஒன்று இருக்குமென்றால் அது சரோஜாதேவி புத்தகம் தான். அதை விட வேறு எந்தப்புத்தகமும் நூறு வீதம் மக்களைக் கவரவே கவராது. இது அடிப்படை.

அதனால் மனநோயாளிகள் என்பதெல்லாம் ரூ மச். சொல்பவர்கள் சொல்கின்றார்கள். கேட்பவர்கள் மனநோயாளர்களாக கும்மி அடிக்கின்றார்கள். இது சுவாரசியமாக இருக்கின்றது.
இன்னும் இன்னும் சுயமரியாதை என்பது என்னவென்று தெரியாத அவலம் இது.

அவர் கேள்வியையே ஒத்துக்கொள்ள முடியவில்லை. இப்போது மனநோயாளர்கள் அதிகரிக்கின்றார்கள் என்றால் ஏற்கனவே மனநோயாளர்கள் இங்கு இருக்கின்றார்கள்? யார் அவர்கள் ..?

குறிப்பு: என் எதிர்ப்பிற்கு அடையாளமாக ஒரு நெகடிவ் குத்து போட்டிருக்கேன் அவர் பதிவில்

சிறீயும் ரவியும் தமிழ் ஈழத்தின் விதிகள்


ஒரு நொடியில் ஒரு கணத்தில் பல சம்பவங்கள் மாறிப் போய் விடுவதுண்டு. அப்படித்தான் ஈழத் தமிழனின் தலை விதியும் மாறிப் போய் விட்டிருக்கின்றது. இரண்டு சம்பவங்கள் அவ்வாறு எண்ணத் தூண்டுகின்றன. இந்தியாவும் இராஜீவ் காந்தியும் தான் சம்பவங்கள் . ஆனால் காராணங்கள் வேறு எங்கோ தீர்மானிக்கப்பட காரணகர்த்தர்கள் யாராகவோ இருந்திருக்கின்றார்கள்.

பிராந்திய நலன் என்ற புளிச்சுப்போன போர்வையை விலக்கிவிட்டு சாதாரண சம்பவங்களூடு இதனைப் பார்க்கலாம். நடக்காததையும் நடப்பதையும் தீர்மானிப்பதற்கு இப்பிரபஞ்ச வெளியில் பல காரணங்களைத் தேட முடியும். மனிதனின் மூளையென்பது மிகச்சிறிய அலகுதான். அதைக் கொண்டு இப்பிரபஞ்ச வெளியை அளக்க முயலும் பிரயத் தனம் தானே வாழ்க்கை என்பது.

ஈழத் தமிழனின் தலை எழுத்தை இவ்வாறே எழுதிச் செல்லும் விதியின் கரங்களைப் பார்ப்போம்.

முதல் சம்பவம் இந்தியாவின் ரோ வின் ஆதரவைப் பெற்றிருந்த டெலோ இயக்கமும் அதன் அப்போதைய தலைவராய் இருந்த சிறீ சபாரத்தினமும். இரண்டாவது சம்பவம் ஜே ஆரின் மகனும் ஆலோசகருமாயிருந்த ரவி ஜெயவர்த்தன.

பல இயக்கங்களால் ஈழத்தமிழ் எல்லைகள் அலைக்கழிக்கப்பட எழுந்த தன் முனைப்புகளில் ஒன்றை ஒன்று பிடித்துச் சாப்பிட கங்கணம் கட்டிக் கருவிக் கொண்டிருந்த காலம். புலிகளின் "அடங்க மறுத்த" தன்மைகளால் வெறுத்துப் போயிருந்த இந்தியாவும் ரோவும் புலிகளை அப்போதே அழித்து விடுவது என்ற முடிவை எடுத்திருந்தது. அதற்கான கருவியாக டெலோ தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இந்திய உயர் மட்டத்தில் தொடர்பு கொண்ட புலி அனுதாபிகளாலோ அரசியல் வாதிகளாலோ செய்தி புலியின் கைகளை எட்டிவிட, சீறிக்கொண்டு புலி எழுந்துவிட, கருவி உடைத்தெறியப்பட்டது. ஈழத்தமிழனின் விதியில் அழுத்தமான ஒரு கோடு வரையப்பட்டது.

அடுத்த சம்பவம் அதன் பின்னான பல காலத்தின் பின் இராஜீவ் -ஜெயவர்த்தனா ஒப்பந்தக் காலத்தில். இராஜீவ் காந்திக்கு அளிக்கப்பட்ட இராணுவ அணிவகுப்பில் பாவிக்கப்பட்ட துப்பாக்கிகள். அப்போதைய சிறிலங்கா இராணுவ தளபதி டி.ஜே.வீரதுங்கவின் பலத்த எதிர்ப்பையும் மீறி ஜேஆரின் மகனும் ஆலோசகருமான ரவி ஜெயவர்த்தனவால் துப்பாக்கிகளின் குண்டுகள் அகற்றப்பட்டன. அதற்கு முன்னுதாரணம் கொடுத்தவர் எகிப்து நாட்டின் ஜனாதிபதி அன்வர் சதாத். இதே போன்ற ஒரு இராணுவ அணிவகுப்பில் தன் உயிரைக் கொடுத்து இராஜீவைக் காப்பாற்றியிருந்தார்.

இல்லாவிட்டால் அன்று துப்பாக்கியின் பின் பக்கத்தால் இராஜீவை அடித்த சிங்கள வீரன் அவ்வளவு சிரமப்படாமலேயே இராஜீவை தீர்த்துக் கட்டியிருப்பான். இராஜீவின் உயிர் இலங்கைக்கே ஒதுக்கப்பட்டிருந்தாலும் அது ரவியின் ரூபத்தில் தமிழ் மக்களுக்கெதிராகத் திருப்பிவிடப்பட்டு விட்டது. பிரபஞ்சம் வரைந்த இரண்டாவது கோடு.

அன்று சிங்களவர்களால் இராஜீவ் தீர்த்துக் கட்டப்பட்டிருந்தால் இன்று ஈழத்தமிழ் மக்களால் அதிகம் நேசிக்கப்படுபவர் அவராகத் தான் இருந்திருக்கும். இந்தியாவும் கூட. ஆனால் என்ன செய்வது... விதி வலிது.


//ஆனால், ராணுவ அணிவகுப்புபின்போது அவரை சுட்டுக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டிருந்தது இப்போது தெரிய வந்துள்ளது.

ராஜீவ்காந்திக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை தரும்போது, ராணுவத்தினர் வைத்திருக்கும் துப்பாக்கிகளில் குண்டுகள் இருக்கக் கூடாது. ராணுவத்தினர் குண்டுகள் இல்லாத துப்பாக்கிகளை ஏந்தியவாறுதான் அணிவகுப்பில் பங்கேற்க வேண்டும் என்று பாதுகாப்பு ஆலோசகர் ரவி ஜெயவர்த்தனே தனது தந்தையிடம் கேட்டுக்கொண்டார்.

அதிபர் ஜெயவர்த்தனே இதை ஏற்றுக்கொண்ட போதிலும் அப்போதைய ராணுவத் தளபதியாக இருந்த லெப்டினெட் ஜெனரல் டி.ஜே.வீரதுங்கா இதை ஏற்காமல் எதிர்ப்புத் தெரிவித்தார்.

துப்பாக்கியிலிருந்து குண்டுகளை அகற்றுவது படைவீரர்களின் மனநிலையைப் பாதிக்கும். படைவீரர்களின் மீதான நம்பிக்கையைக் குறைத்துவிடும் என்று வீரதுங்கா தெரிவித்ததோடு, குண்டுகளை அகற்ற கடுமையாக எதிர்ப்பும் தெரிவித்தார். ஆனால் ரவி ஜெயவர்த்தனேவின் ஆலோசனைப்படி குண்டுகள் அகற்றப்பட்ட துப்பாக்கியை அணிவகுப்பு மரியாதையின் போது பயன்படுத்தினர்.

துப்பாக்கியிலிருந்து குண்டுகள் அகற்றப்பட்டதால்தான், ரோஹன டி.சில்வா வேறுவழியின்றி துப்பாக்கி பிடியால் ராஜீவ்காந்தியைத் தாக்கும் சம்பவத்தை நிகழ்த்தினார். இந்த அணிவகுப்பின் போது, துப்பாக்கியில் தோட்டாக்கள் இருந்திருந்தால், அந்த ராணுவ வீரர் ராஜீவ்காந்தியை சுட்டுக்கொன்றிருப்பார்//-சமாதானத்திலிருந்து யுத்தம்; கிளர்ச்சியிலிருந்து பயங்கரவாதம் (From Peac to war, Insurgency to Terrorism) என்ற புத்தகத்தில் இலங்கை ராணுவத்தின் முன்னாள் தளபதி சிரில் ரணதுங்கா
அனுப்ப/அடையாளமிட