ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, December 25, 2009


துரத்தப்பட்ட கடவுளை மீண்டும் "கண்டுபிடித்திருக்கின்றார்கள்".


மன்னார் ,வங்காலை,பேசாலை பகுதிகளிலிருந்தே நான்காவது ஈழயுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. அது அங்கங்கே குடியிருந்த மக்களை குடியெழுப்பியபடியே முன்னகர்ந்தது. மக்களின் அவலங்களையும் அழுகுரல்களையும் கேட்க அங்கு காவலர்களும் இல்லை கடவுள்களும் இல்லை. புலிக்காவலர்களுக்கு முன்னாலேயே கடவுள்களும் ஓடித் தப்பினார்கள். எல்லோராலும் நிராதரவாக விடப்பட்ட மக்கள் ஓடித்தப்ப முயன்ற வழிகளிலும் வெளிகளிலும் இனி ஓட முடியாத உடல்களை மட்டும் இழந்து சுவர்க்கம் புகுந்தார்கள். பங்கர்களில் தமது இரத்தத்தைத் தானமாகக் கொடுத்து ஆவியைத் துறந்து இயேசுவைத் தேடி பரலோகம் புகுந்தார்கள்.

முள்ளிவாய்க்கால் வரை மூச்சிரைத்த ஓட்டத்திலும் முடிவுறாத பாவத்துடன் இரக்கம் காட்ட யாருமில்லாத அநாதைகளாகச் செத்துத் தொலைந்து போய் விட்டார்கள். கடவுளின் தூதுவர்களும் ,ஏஜெண்டுகளும் ,பக்தர்களும் இரக்கம் காட்டப்படாத அந்தப்பாவிகளின் இரத்தத்தால் கழுவப்பட்ட பாதையில் போய் நிறுவி விட்ட மடுமாதா சொரூபத்தின் முன் தம் பாவங்களைக் கழுவுவதற்காக கண்ணீர்விட்டுப் பாவனை செய்கின்றார்கள்.

இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்டதாகப் பாவனை செய்யப்பட்ட இந்தப் பூமி இத்தனை பாவிகளின் இரத்தத்தையும் குடித்தும் இன்னும் பாவாத்காரத்திலேயே மூழ்கிப் போய்க்கிடக்கின்றது.

எல்லாப் பாவங்களின் காராணகர்த்தாக்களான நாட்டின் தலைவரும் தளபதியும் அறிக்கை விட்டிருக்கின்றார்கள். தங்களால் துரத்தப்பட்ட கடவுளை மீண்டும் "கண்டுபிடித்திருக்கின்றார்கள்".

"எமது மக்களின் சிதைந்து போன வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கு இயேசு போதித்த அன்பையும் கருணை யையும் இலங்கை மக்கள் பெரிதும் வேண்டி நிற்கின்றனர்."

காரணமும் காரியமும் நீயே என்ற பகவத் கீதையின் வாக்கியத்தை மகிந்தர் மீளவொருமுறை நினைவு கூர்ந்திருக்கின்றார்.

"பெத்லஹேமில் சிறியதொரு மாட்டுத் தொழுவத்தில் இடம்பெற்ற இயேசு நாதரின் பிறப்பு, அன்பு என்பது எல்லாத் தடைகளையும் தாண்டி வாழ்க்கையில் தாழ் நிலையிலுள்ள மக்கள் முதல் இப்பூவுலகில் எம்முடன் ஒன்றாக வாழும் உயிரினங்கள், எம் எல்லோருக்கும் வளம் சேர்க்கும் இயற்கை ஆகிய எல்லாவற்றையும் தழுவிச் செல்லவேண்டும் என்பதையே அடையாளப்படுத்தி நிற்கின்றது.
நத்தார் பண்டிகையின் நாதஒலி நல்உள்ளம் படைத்த எல்லோருக்கும் புதியதோர் சமாதான யுகத்திற்கான விடியலை அறிவிப்புச் செய்து நத்தார் பண்டிகையின் மகிழ்ச்சியைப் பரப்புகின்றது." -சாத்தான் மகிந்தவின் புதிய வேதம்


"கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்தவர்களின் மத வழிபாடுகளுக்காக அந்த உன்னதமான பூமியை மீட்டெடுப்பதற்கு போராட்டத்தில் உயிர்நீத்த சகல மக்களையும் அதேபோல் இராணுவத்தினரையும், பொலிஸாரையும் சிவில் படையினரையும், எல்லாப் படையணிகளையும் இங்கு நான் நினைவு கூருகிறேன்." - சரத் பொன்சேகா.

உயிருக்குப்பயந்து ஓடிய மக்களைக் கொன்று போட்ட இராணுவம் மடுமாதா கோவிலின் மீட்பின் பங்காளர்களாக அந்த மக்களையும் இரத்த சாட்சியாக்கியிருக்கின்றது.எதைச் செய்தோம் எதைச் சொல்ல வந்தோம் என்பதே அறியாத துஷ்டரின் போதனைகளை அறிவுரையாகக் கேட்கும் பாவநிலையில் இன்று நாட்டுமக்கள்.


ஏடன் தோட்டத்தில் ஆதாமையும் ஏவாளையும் பாவக்கனியைச் சுவைக்கச் செய்த சாத்தான்கள் ஓதும் இப்புதிய வேதத்திற்கு ஓடி ஒழிந்து இன்று புதிதாய்ப்பிறக்கும் கடவுளின் தீர்ப்பு எவ்வாறு இருக்கப்போகின்றது என்ற பரிதவிப்புடன் சுவர்க்கம் செல்லும் வழியெங்கும் முக்கலும் முனகலுமாய் எம் தமிழ் மக்கள்.

கடவுள் அவர்களை ஆசீர்வதிப்பாராக.

பரிசுத்த வேதாகமத்தில் நீதிமொழியில் இவ்வாறு கூறப்படுகிறது:
உத்தம மனுஷன் தேவனுடைய கிருபையைப் பெறுவான்.
தீய எண்ணங்கள் உள்ளவனை நியாயம் தீர்ப்பார்.
மனுஷன் துன்மார்க்கத்திலே நிலைத்திருப்பதில்லை.
நீதிமானின் வேர் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை.

Thursday, December 24, 2009


கருணாநிதிக்கு நன்றி - ராஜபக்ஷ



by

Wednesday, December 23, 2009


இந்தியாவிற்கு எதிராகப் போர்க்கொடி?


நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா

இந்தக் கேள்வி இப்போதெல்லாம் தூக்கலாகவே ஊறுத்திக் கொண்டிருக்கின்றது.

சின்ன வயதில் ஸ்கூலில் படிக்கும் போது இத்தகைய அனுபவம் உங்களுக்கும் ஏற்பட்டிருக்கும். ஒரு குழப்படி கார மாணவன் அடிக்கடி முறையிட்டுக்கொண்டிருப்பான். பக்கத்தில் இருந்தவன் அடித்து விட்டான். முன்னால் இருந்தவன் கிள்ளிவிட்டான். பின்னால் இருந்தவன் உதைத்து விட்டான் என்று. எங்களுக்கும் அவனைப்பற்றி தெரியாத வரைக்கும் பாவமாக இருக்கும். ஐயோ அவனைப் போட்டு தொந்தரவு செய்கின்றார்களே என்று பரிதாபமாக இருக்கும்.

சுற்றியுள்ள மாணவர்களைக் கோபமாகவும் வெறுப்பாகவும் பார்ப்போம். அவனுக்காக அனுதாபப் படுவோம். அது தான் விபரம் புரியாத மாணவர்களின் இயற்கையாக இருந்தது. எல்லாம் ஒரு கட்டம் வரை தான். ஆசிரியர் எடுத்துச் சொல்லும் வரை தான்.

அந்த மாணவனிடம் ஆசிரியர் கேட்டார். "அது ஏன் உன்னிடம் மட்டும் தான் எல்லோரும் வம்பு பண்ணுகின்றார்கள்? அதைப் பற்றி நீ யோசித்துப் பார்த்தாயா? ஏன் மற்றவர்களிடம் யாரும் வம்பு பண்னவில்லை? நீ அவர்களுடன் வம்பு பண்ணியதால் அவர்கள் உன்னோடு முரண்டு பிடிக்கின்றார்கள் என்று ஏன் உனக்கு விளங்கவில்லை? " என்று கேட்டார்.

அதன் பிறகு தான் மற்றவர்களின் முறைப்பாடுகளை காது கொடுத்துக் கேட்கத் தொடங்கினோம். ஒருவனின் அழி ரப்பரைத் திருடி வைத்திருக்கின்றான். ஒருவனின் பென்சிலை உடைத்துப் போட்டிருக்கின்றான். ஒருவனின் புத்தகத்தைக் கிழித்து எறிந்திருக்கின்றான். இவை எல்லாவற்றிலும் இருந்து தப்பிப்பதர்காக முன்னரே முறையிட்டு அழுகுணி ஆட்டம் ஆடியிருக்கின்றான்.

பின்னர் அவனை நாங்கள் வெறுத்து ஒதுக்கி வைக்கத் துவங்கி விட்டோம். துட்டனின் குணம் எப்போதோ ஒருநாள் வெளியில் வந்தே விடும்.

சரி இப்போது நிஜத்திற்கு வருவோம். கொஞ்சக் காலம் முதல் இந்திய பங்களாதேச எல்லையில் துப்பாக்கி வேட்டுக்கள் கேட்டு ஓய்ந்திருக்கின்றது. பங்களா தேச எல்லைக் காவலர்களின் திடீர் தாக்குதலை இந்தியப்படை வீரர்கள் வெற்றிகரமாக முறியடித்ததாக எமக்குக் கூறப்பட்டது. பின்னர் சியாச்சின் லடாக் பகுதியில் போடப்பட்ட வீதி வேலைகளை சீன இராணுவம் அத்துமீறி உள்நுழைந்து தடுத்ததாகக் கூறப்பட்டது. ஆனால் சீனாவின் பார்வை வேறாக இருக்கின்றது.கடந்த மாதத்தில் பாகிஸ்தான் எல்லையில் துப்பாக்கிச் சூடும் பரஸ்பர குற்றச்சாட்டுகளும்.

இப்போது நேபாள உள்நாட்டு விடயங்களில் இந்தியா தலையிடுவதாக நேபாள மாவோயிஸ்ட் தலைவர் பிரசண்டா குற்றஞ்சாட்டுகின்றார். இந்த வருடத் தொடக்கத்தில் ஐந்து இலட்சம் ஈழத் தமிழரின் இழப்பிற்கு இந்தியாவே காரணம் என்ற கோபம் கொப்பளிக்கும் தீராத குற்றச்சாட்டு ஈழத்தமிழ் மக்களால் கூறப்படுகின்றது.

இப்போது அதே மாணவனுக்கு ஆசிரியர் சொன்ன அறிவுரையை நாமும் இங்கு கேட்டுப் பார்ப்போம். அதெப்படி இத்தனை நாடுகளும் இந்தியாவின் மீது மட்டும் குற்றஞ்சாட்டுகின்றன. பங்களாதேசம் தன்னைச் சூழ்ந்திருக்கும் மியார்மர் போன்ற நாடுகளக் குற்றஞ் சாட்டவில்லை. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானையோ மேலுள்ள நாடுகளையோ குற்றஞ்சாட்டவில்லை. நேபாளம் பூட்டானையோ தீபெத்தையோ இல்லை சீனாவையோ கூட குற்றஞ்சாட்டவில்லை. இலங்கை கூட பாகிஸ்தானையோ சீனாவையோ குற்றஞ் சாட்டவில்லை.

அப்போது இத்தனை குழப்பங்களுக்கும் இரத்தத்திற்கும் இந்தியாதான் காரணமா? அதன்
அஹிம்சை முகமூடி அதிகம் கிழிந்து தொங்கத் தொடங்கி விட்டதா?

ஈழத்தில் தடைசெய்யப்பட்ட இரசாயன உயிரியல் குண்டுகளைப் பாவித்தது தொடர்பான குற்றச்சாட்டு ஒன்று இருக்கின்றது. அதை வழங்கியது இந்தியாவே என்று சிறிலங்கா வாக்கு மூலம் கொடுத்துள்ளது. அதே நிலைமை பாகிஸ்தானிலோ பங்களாதேசத்திலோ நேபாளத்திலோ அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட காஸ்மீரிலோ இந்தியாவால் உருவாக்கப்பட்டிருக்கின்றதா? என்ற தகவல்களை மனித உரிமைகள் ஆர்வலர்கள் சேகரிக்க வேண்டும்.

அதை சர்வதேச சமூகத்தின் முன்னும் ஐ.நாடுகள் சபையின் முன்னிலையிலும் கொண்டு வரவேண்டும். இந்தியாவால் வழங்கப்பட்ட சர்வதேச சமூகத்தால் தடை செய்யப்பட்ட கண்ணிவெடிகளைப் பற்றிய ஆதாரங்களையும் அதனால் கால்களை அவயவங்களை இழந்த சாட்சியங்களையும் ஒருங்கு சேர்க்க வேண்டும். இவை இந்தியாவின் அரச பயங்கரவாத கோர முகத்தை வெளிக்கொண்டுவர அதிகம் துணை செய்யும். ஈராக்கில் நடந்தது போன்று தடைசெய்யப்பட்ட ஆயுதங்களின் பதுக்கல் தொடர்பாக இந்தியாவில் சோதனை செய்ய ஐ.நா வைக் கோர வேண்டும்.

இதனால் காஸ்மீரில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் இரத்தத்தையும் பாகிஸ்தான் பங்களாதேஸ் எல்லைக்கிராம மக்கள் தாக்கப்படுவதையும் தடுக்க முடியும்.

இக்குற்றச்சாட்டுகள் இந்தியாவிற்கு எதிராக நீளுவது இந்தியா அதிக பாவ காரியங்களைச் செய்யும் பயங்கரவாத நாடாக மாறிக்கொண்டிருக்கின்றது என்ற எண்ணத்தை உறுதிப்படுத்துகின்றது. இது ஒரு நாளில் பட்டவர்த்தனமாக வெளியில் வரும்.வரவேண்டும். அப்போது தென் ஆபிரிக்கா போன்று மனிதர்களால் ஒதுக்கப்படும் நாடாகிவிடும் என்று தான் எண்ணத் தோன்றுகின்றது.

Tuesday, December 22, 2009


இது எப்படி இருக்கு.. Kolainar Karunanithi






நன்றி: youtube

மகிந்த இந்திய நலன்களுக்காகவும், கோத்தாபய அமெரிக்க நலன்களுக்காகவும்


சிறிலங்காவின் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச இந்தியாவின் நலன்களுக்காகச் செயற்படும் அதேவேளையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்காவின் நலன்களுக்காகச் செயற்படுவதாக ஜே.வி.பி. கடுமையாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றது.

இருவருமே சிறிலங்காவை விலையாகக் கொடுத்து அந்த இரு நாடுகளினதும் நலன்களுக்காகச் செயற்படுவதாக ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, வெளிநாடுகளின் தலையீடுகளுக்கு அழைப்பு விடுப்பதன் மூலமாக ராஜபக்ச சகோதரர்கள் நாட்டுக்கு பாரிய ஆபத்தை ஏற்படுத்திவருவதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திட்டடிருப்பதன் மூலமாக நாட்டின் பாதுகாப்பை கோத்தாபய ராஜபக்ச ஆபத்தான நிலைக்குக் கொண்டுவந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டிய ரில்வின் சில்வா, இந்த உடன்படிக்கை இந்தியாவின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கின்றது எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டிருப்பதன் மூலம் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மோசமான நிலையை அடைந்திருப்பதாகவும் தெரிவித்த அவர், கோத்தாபய ராஜபக்ச ஒரு அமெரிக்கப் குடிமகனாக இருப்பதால் அமெரிக்க நலன்களையே முன்னிலைப்படுத்திச் செயற்படுவதாகவும் தெரிவித்தார்.

பாகிஸ்தானிய நாளேடான 'த நேசன்' வெளியிட்ட செய்தியை ஆதாரம் காட்டி கருத்து வெளியிட்ட ரில்வின் சில்வா, விடுதலைப் புலிகளை போரின் மூலம் தோற்கடித்த உடனடியாகவே இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆலோசனையைக் கேட்டு இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை அந்தப் பதவியிலிருந்து நீக்குவதென்ற முடிவை அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச எடுத்தார் எனக் குறிப்பிட்டார்.

சரத் பொன்சேகா தொடர்ந்தும் இராணுவத் தளபதியாக இருந்தால் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் ஏற்பட்டதைப் போன்ற நிலைமையே சிறிலங்காவிலும் உருவாகும் என இந்தியப் பிரதமர் தெரிவித்ததையடுத்தே சரத் பொன்சேகாவுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசுத் தலைவர் எடுத்ததாகவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டார்.

இந்தியா மற்றும் அமெரிக்காவைப் போல நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் போக்கை சீனா ஒருபோதுமே கொண்டிருக்கவில்லை எனவும் குறிப்பிட்ட ரில்வின், இவ்வாறு சீனா தலையிட்ட ஒரு சந்தர்ப்பத்தையாவது குறிப்பிட முடியுமா என ஊடகவியலாளர்களிடம் கேள்வி எழுப்பினார்.

விஜய் நம்பியாரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை - இன்னர் சிற்றி பிரஸ்


புலிகளின் தலைவர்கள் சிலர் வெள்ளைக் கொடியுடன் சரணடைய முயன்ற போது சிறிலங்காப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக அந்தச் சம்பவத்தில் தொடர்புபட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபை உயர் அதிகாரி விஜய் நம்பியாரிடம் ஏன் விசாரணை நடத்தப்படவில்லை என்று ‘இன்னர் சிற்றி பிரஸ்’ கேள்வி எழுப்பி உள்ளது.

புலிகளின் தலைவர்கள் சரணடைய முயன்றால் அவர்களைச் சுட்டுக் கொல்லுமாறு சிறிலங்கா அரச தலைவரின் தலைவரது தம்பியும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச களத்தில் இருந்த படையின் கட்டளை அதிகாரிக்கு நேரடியாக உத்தரவிட்டிருந்தார் என்று முன்னாள் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் தெரிவித்திருந்தார்.

கொழும்பில் இருந்து வெளிவரும் வார ஏடு ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். ஆனால் பின்னர் தான் அவ்வாறு தெரிவிக்கவில்லை என்று கூறி மறுத்திருந்தார்.

எனினும், அவரது குற்றச்சாட்டை அடுத்து குறிப்பிட்ட சம்பவம் குறித்து விளக்கம் அளிக்குமாறு – சட்டத்திற்குப் புறம்பான, எழுந்தமானமான படுகொலைகள் தொடர்பான ஐ.நா.வின் சிறப்பு விசாரணையாளர் பிலிப்ஸ் அலிஸ்ட்டன் சிறிலங்கா அரசிடம் கேட்டிருக்கிறார்.

ஐ.நா. தம்மிடம் விளக்கம் கேட்டுள்ளதை ஒப்புக்கொண்டுள்ள சிறிலங்கா அரசு அது குறித்து நிதானமாகத்தான் பதிலளிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, புலிகளின் தலைவர்களை வெள்ளைக் கொடியுடன் சென்று சிறிலங்காப் படையினரிடம் சரணடையுமாறு சொன்ன சம்பவத்தில் ஐ.நா.வின் தலைமை அதிகாரி விஜய் நம்பியாருக்கும் தொடர்புகள் இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.

புலிகளின் தலைவர்கள் சரணடையும் போது ஐ.நா.வின் உறுதிமொழியை வேண்டி நின்றார்கள் என்பதை அதன் பேச்சாளரும் உறுதிப்படுத்தி இருந்தார்.

அத்தகைய நிலையில், சம்பவம் குறித்து சிறிலங்கா அரசிடம் விளக்கம் கேட்டுள்ள ஐ.நா. விசாரணையாளர் ஏன் அது தொடர்பில் விஜய் நம்பியாரிடம் விளக்கம் கேட்கவோ விசாரணை நடத்தவோ இல்லை என்று கேள்வி எழுப்பி உள்ளது ‘இன்னர் சிற்றி பிரஸ்’ செய்தி நிறுவனம்.

தொடர்புபட்ட முன்னைய செய்தி:

விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களான பா.நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகிய மூவரும் அவர்களுடைய குடும்பத்தினரும் எவ்வாறான சூழ்நிலையில் கொல்லப்பட்டனர் என்பதையிட்டு விளக்கமளிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்தை ஐ.நா. கேட்டுக்கொண்டிருக்கின்றது.

சட்டத்துக்குப் புறம்பான எழுந்தமான படுகொலைகள் தொடர்பான ஐ.நா. வின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப்ஸ் அலிஸ்ட்டன் சிறிலங்கா அரசாங்கத்திடம் இது தொடர்பான கோரிக்கையை முன்வைத்திருக்கின்றார்.

கடந்த வாரம் வெளியான சன்டே லீடர் பத்திரிகைக்கு வழங்கிய பேட்டி ஒன்றில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான சரத் பொன்சேகா, பாதுகாப்பு செயலாளர் கோதாபய மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.

அதன்படி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே வெள்ளைக்கொடிகளுடன் படையினரிடம் சரணடைவ வந்தபோது விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தலைவர்களான பா.நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் உட்பட பலர் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறியிருந்தார்.

இது தொடர்பான செய்திகளை அரசாங்கம் மறுத்திருந்த போதிலும், இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு ஐ.நா. தற்போது கோரிக்கை விடுத்திருப்பது மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெனிவாவிலுள்ள சிறிலங்காவின் நிரந்திரப் பிரதிநிதி செனிவிரட்ணவுக்கு இது தொடர்பான கடிதம் ஒன்றை ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப்ஸ் அலிஸ்ட்டன் அனுப்பிவைத்திருக்கின்றார்.

"சம்பவம் இடம்பெற்ற போது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார். நடேசன், புலித்தேவன் மற்றும் ரமேஷ் ஆகியோர் கொல்லப்பட்ட சூழ்நிலைகளை 58 வது படையணியுடன் இருந்த ஊடகவியலாளர் ஒருவரும் உறுதிப்படுத்தியிருக்கின்றார்" என இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதனால் இந்தப் படுகொலைகள் இடம்பெற்ற சூழ்நிலை தொடர்பாக சிறிலங்கா அரசு விளக்கமளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நடக்கப்போகும் சீன இந்தியப் போரில் ஈழத்தமிழர்


காலம் எப்போதும் சுற்றிக் கொண்டே வரும் என்பது உண்மையாகவே இருக்கின்றது. அதே போல உயர்வும் தாழ்வும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். அது தான் இயற்கை. இந்தியா எதை நினைத்து ஈழத்தமிழர்களைப் பலி வாங்கியதோ அதற்குத் தான் வெளிச்சம். அதற்காக அது ஆயிரங் காரணங்களைக் கூறிக்கொள்ளலாம். ஆனால் ஈழத்தமிழர்கள் இந்தியாவை ஆதரிக்க ஒரு காரணங்கூட இல்லை.

அத்தனை இடங்களையும் இந்தியா நயவஞ்சகத்தால், காட்டிக்கொடுப்புகளால்,துரோகங்களால் நிறைத்து வைத்திருக்கின்றது. இந்தியா மீது ஈழத்தமிழன் வைத்திருந்த அத்தனை நம்பிக்கைகளையும் தன் காலின் கீழ் போட்டுத் தேய்த்து விட்டது. இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைத் துடிக்கத் துடிக்கக் கொன்று போட்டது.

அதைச் செய்து முடித்த சிங்கள அரசைத் தோள்களில்ப் போட்டுத் தாங்கிக் கொண்டிருக்கின்றது.

ஈழத் தமிழர்கள் இந்தியாவை வெறுப்பதற்கும் அதை எதிர்ப்பதற்கும் இந்த ஒரு காரணமே போதும். அது நியாயமானதும் கூட. சீனாவை ஆதரிப்பதற்கும் எந்தக் காரணங்களும் இல்லை.ஆனாலும் ஆதரிக்க வேண்டும். நம்பிக்கெடுத்த இந்தியாவை விட அதன் தராசு உயர்ந்தே இருக்கின்றது.

இரண்டு நாடுகளிலும் போர் நோக்கம் உக்கிரம் பெற்றிருப்பதற்கு அவர்களுக்கிடையே உள்ள வர்த்தகப்போட்டியே முதன்மைக் காரணமே ஓழிய மக்களின் மீதுள்ள அக்கறையினால் அல்ல. ஒரு சில பணமுதலைகளின் பேராசையே இரு நாட்டு மக்களையும் துன்பத்தில் தள்ளப்போகின்றது. இது எப்படியும் நடந்தே தீரும். யாரோ ஒரு சிலரின் செளகரியங்களுக்காக தேசபக்தியின் பெயரால் குப்பனும் சுப்பனும் அவதிப் படப்போகின்றார்கள்.

பயங்கரவாதிகள், தீவிரவாதிகள், ஆக்கிரமிப்பு, தேசபக்தி என்ற வகையில் எத்தனை மோசமான காரணங்களைக் கூறியேனும் அவர்கள் இத்தகைய போர்களை நியாயப்படுத்துவார்கள். அதுவே ஈழத்திலும் நடந்தது. புலிகள் பயங்கரவாதிகள் தீவிர வாதிகள் என்றால் அது உண்மையானால் அவர்களை மட்டும் கொல்வதே நியாயம். அப்புறம் எப்படி மக்களைக் கொல்ல முடியும். அதில் தான் முதலாளித்துவத்தின் உளவியல் தங்கியுள்ளது. பயங்காட்டுவது. தங்களுக்கு எதிராக வரக்கூடிய கேள்விகளை முளையிலேயே கிள்ளியெறிவது. அதற்காகவே இந்திய அரச பயங்கரவாதம் சிங்களப்பேரின வாதத்துடன் சேர்ந்து கொன்று போட்டது ஐந்து இலட்சம் மக்களை.

அந்த யுத்தத்தின் செலவை இன்று மன்னார்க்குடாப்பகுதியில் இருக்கும் எண்ணெய்வளங்களை உறிஞ்சுவதன் மூலம் பெற்றுக் கொள்ளப்போகின்றார்கள்.அதற்கான ஒப்பந்தத்தை கெய்ன் லங்கா நிறுவனம் போட்டு ஒரு மில்லியன் டாலர் முற்பணமும் கை மாறிவிட்டது. காங்கேசன் துறை சீமெந்து ஆலையும் கை மாறிவிட்டது.அத்தனையும் செத்துப் போன அந்த அப்பாவி மக்களைச் சேர வேண்டிய சொத்து.

இந்தியாவின் யுத்தச் செலவுகளுக்கான பங்கு இதுவென்றால் சீனாவின் யுத்தச் செலவுகளுக்காக அம்பாறையில் கப்பல்த் துறைமுகம் கட்டும் உரிமை தாரை வார்த்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அத்தனையும் தமிழரின் பூர்வீகபூமிகள். தமிழரின் சொத்து என்பது சிங்களவனைத் தாரளமாகத் தாரை வார்த்துக் கொடுக்கத் தூண்டுகின்றது. ஆனால் இது ஸ்ட்ராவிற்கான துளை தான் என்பதை அந்த மடையன் மறந்து விட்டான். உறிஞ்சப்படப் போவதென்னவோ முழு இலங்கையும் தான்.

இது தான் நவீன உலக ஒழுங்கு. இதில் யார் வென்றாலும் உறிஞ்சப்படப்போவதென்னவோ சாதாரண மக்கள் தான். ஆனாலும் இனி ஈழத்தமிழர்களால் இந்தியாவுடன் நெருங்கி விட முடியாது. கொலை செய்யப்பட்டுக் கருகிப்போய்விட்ட அந்த ஐந்து இலட்சம் மக்களின் பிணங்களும் இடையில் மலைபோல உயர்ந்து நிற்கின்றன. சீனாவின் கையில் முழுவதுமாக இலங்கை போய் விடும் போது ஈழத்தமிழர்களுக்கு ஒரு நன்மையிருக்கின்றது. சிங்களவனும் முழு நேரக் கூலித் தொழிலாளி ஆகிவிடும் போது எந்த எதிர்ப்புச் சக்தியும் இல்லாது அடிமையாகிவிடுவான். தமிழர்கள் எவ்வாறு கூலித் தொழிலாளர்களாகி அடிமைகளானார்களோ அதைப்போல்.

அது தான் இன்று உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றது. பொருளாதாரமும் அதன் உறிஞ்சலும் வானம் போலக் கவிந்து நிற்கும் கருங்குடையாக உலகம் முழுவதும் போர்த்தி நிற்கின்றது. அமெரிக்கா வந்து பொட்டி தட்டுபவனும் இந்தியாவில் கல்லுடைப்பவனும் அதற்குள்த் தான் நிற்க வேண்டும். இருவருக்கும் அதிக வித்தியாசம் இல்லை. டாலர் ரூப்பீஸ், பருப்புச்சாதம் பர்க்கர். அவ்வளவுதான் வித்தியாசம்.

சீனாவை ஆதரிக்கும் போது நம்பிக்கைத் துரோகத்தால் வஞ்சிக்கப்பட்டதை மறந்து விடலாம். வஞ்சித்தவனைப் பழி தீர்த்துக் கொண்ட சந்தோஷத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அதை எங்கள் தலை முறையோடும் பகிர்ந்து கொள்ளலாம். பெரியார் சொன்னதைப் போல அடிமையாயிருக்கும் தமிழகத் தமிழன் அந்த அடிமைத் தனத்தையே மகுடமாகச் சூடிக்கொண்டு "நாம் இந்தியர்" என்று பீற்றிக்கொள்வதைப் போல, நாமும் இலங்கையர் என்று பீற்றிக்கொள்ளலாம்.

இந்தியா என்ற சாதி,சமய,வர்க்க வேறுபாடுகள் உள்ள நச்சு மரத்தை விட சீனா எவ்வளவோ மேல். மனிதனை மனிதன் கல்லால் அடித்துக் கொல்லும் காட்டுமிராண்டித் தனத்தில் இருந்து தப்பித்து விடலாம். பெண்களை ஆடை அவிழ்த்து அம்மணமாக ஓட விட்டு அவள் பிறப்புறுப்பில் உதைக்கும் அநாகரீகம் கற்க வேண்டாம்.



இப்படி எத்தனையோ அநாகரீகங்களில் இருந்து தப்பித்து விடலாம். சீனா கற்றுத்தந்தால் பொதுவுடமை ஆவது மிஞ்சி நிற்கும். இங்கு மார்க்ஸீயம் பேசும் அறிவு ஜீவிகளும் அப்படியாவது சந்தோஷப்படக் கூடும்.

Monday, December 21, 2009


ஈழத்தமிழர்களைக் கொன்றதற்கான இந்தியாவின் அறுவடை


மன்னார் எண்ணெய் வள ஆய்வுக்கான உடன்பாடு கையெழுத்திடப்பட்ட பின்பு - ஒரு மில்லியன் டொலர் முற்பணக் காசோலையை மகிந்த ராஜபக்சவிடம் கெய்ன் லங்கா நிறுவனத்தின் இந்திரஜித் பனர்ஜி மற்றும் அஜய் குப்தா [ Indrajith Benerjee and Ajay Gupta ] ஆகியோர் வழங்கினர்.


இலங்கைத் தீவின் மன்னார் கடற்படுக்கையில் இந்திய நிறுவனம் ஒன்று எண்ணெய் வள ஆய்வில் இறங்கியுள்ளது. அதே வேளை - காங்கேசன்துறை சீமெந்து ஆலையையும் இந்திய நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகள் நடக்கின்றன.

கெய்ன் இந்தியா [ Cairn India (Pvt Ltd) ] என்ற நிறுவனமே எண்ணெய் வள ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

கெய்ன் இந்தியாவின் துணை நிறுவனமான கெய்ன் லங்கா [ Cairn Lanka ], கடற்படுக்கையில் எண்ணெய் இருக்கிறதா என்பது பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளது.

இதற்கென ‘வைகிங்’ [ SR/V Viking II ] என்ற ஆழ்துளையிடும் வசதியுள்ள ஆய்வுக் கப்பல் ஒன்று மன்னார் கடற்படுக்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி, இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் தரித்து நின்ற போது அங்கு விஜயம் செய்த சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அதன் செயற்பாடுகள் தொடர்பாகக் கேட்றிந்திருந்தார்.

மன்னார் எண்ணெய் வள ஆய்வுக்கான உடன்பாடு மகிந்த ராஜபக்ச முன்னிலையி்ல், யூலை 7, 2008 அன்று - பெற்றோலிய வள அமைச்சர் ஏ. எச். எம். பெளசி [ A.H.M Fauzi ], கெய்ன் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் இந்திரஜித் பனர்ஜி [ Indrajith Benerjee ] ஆகியோரால் கையெழுத்து இடப்பட்டது.

தற்போது இந்த ஆய்வுக் கப்பல் மன்னார் கடற்படுக்கையில் ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது; முப்பரிமாண தகவல் சேகரிப்பு நடவடிக்கைள் முதற்கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த வேலைத் திட்டம் அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் நிறைவடையும்.

இதன் பின்னர் எண்ணெய் வளம் பற்றிய அனைத்து ஆய்வு முடிவுகளும் அடுத்த வருட நடுப்பகுதிக்குள் இறுதி செய்யப்படும்.

இந்த ஆய்வின் போது - எண்ணெய் வளம் இருப்பது உறுதி செய்யப்பட்டால் 2011ஆம் ஆண்டில் ஆழ்துளையிடும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்று கெய்ன் லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் இந்திரஜித் பனர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணெய் அகழ்வுக்காக கெய்ன் இந்தியா நிறுவனம் 110 மில்லியன் டொலரை முதலீடு செய்துள்ளது.

எட்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ள மன்னார் கடற்படுக்கைப் பகுதியின் ஒரு பகுதியே கெய்ன் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது; இது 3000 சதுர கி.மீ பரப்பளவுடைய பகுதியாகும்.

இந்தப் பகுதியில் 400 தொடக்கம் 1900 மீற்றர் வரையான ஆழத்துக்கு துளையிட்டு ஆய்வுகளை மேற்கொள்வதற்கு இந்த நிறுவனத்துக்கு கடந்த 2007ஆம் ஆண்டில் சிறிலங்கா அரசு அனுமதியளித்திருந்தது.

கடந்த வருடம் இதற்கான உடன்பாட்டைச் செய்து கொண்ட கெய்ன் லங்கா நிறுவனம், முற்பணமாக - ஒரு மில்லியன் டொலரை சிறிலங்கா அரசுக்கு வழங்கியிருந்தது.



மன்னார் எண்ணெய் வள ஆய்வுக்கான உடன்பாடு கையெழுத்திடப்பட்ட பின்பு - ஒரு மில்லியன் டொலர் முற்பணக் காசோலையை மகிந்த ராஜபக்சவிடம் கெய்ன் லங்கா நிறுவனத்தின் இந்திரஜித் பனர்ஜி மற்றும் அஜய் குப்தா [ Indrajith Benerjee and Ajay Gupta ] ஆகியோர் வழங்கினர்.

கெய்ன் இந்தியா நிறுவனம் தற்போது ராஜஸ்தானில் எண்ணெய் அகழ்வில் ஈடுபட்டுள்ளது; தினமும் இந்த நிறுவனம் 20,000 பீப்பாய் எண்ணெயை உற்பத்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

இப்போது தான் - முதல் முறையாக இந்த நிறுவனம் இந்தியாவுக்கு வெளியே முதலீடு செய்துள்ளது.

அதே வேளை - காங்கேசன்துறை சீமெந்து ஆலையையும் இந்திய நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகள் நடப்பதாகத் தகவல்கள் கசிகின்றன.

காங்கேசன்துறை சீமெந்து ஆலையை மீளவும் புதுப்பித்து உற்பத்தியை ஆரம்பிப்பதற்கு முதலீடு செய்ய முன்வருமாறு சிறிலங்கா அரசாங்கம் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இந்த ஆலையில் முதலீடு செய்வதற்கு இந்தியாவின் பிர்லா குழுமமும் [ Birla Group ], ஹோல்சிம் பல்தேசிய நிறுவனம் [ Holcim Multinational Corporation ] என்ற சுவிஸ் நிறுவனமும் ஆர்வம் காட்டுவதாகத் தெரிய வருகிறது.

வருடம் ஒன்றுக்கு 1.6 மில்லியன் மெட்றிக் தொன் எடையுள்ள சீமெந்தை உற்பத்தி செய்வதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்காக திட்டம் வடிவமைக்கப்படவுள்ளது.

போரினால் சேதமடைந்துள்ள இந்த தொழிற்சாலையில் இருக்கும் உபகரணங்களுக்குப் பதிலாக - அதே இடத்தில் - புதிய உபகரணங்களைப் பொருத்தவும் சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவின் பிர்லா நிறுவனத்திடமே இந்த திட்டம் ஒப்படைக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகத் தெரிகின்றது.

பொருளாதாரப் போரில் தமிழர்கள் சிறிலங்காவை வீழ்த்தலாம் - மருத்துவர் எலின் ஷான்டர்


உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்கள் எல்லோரும் முழுமனதோடும் பெருமிதத்தோடும் பொருளாதரப் போர் செய்தால் - சிறிலங்கா அரசாங்கத்தையே அடிபணிய வைக்கலாம் என அமெரிக்க மருத்துவர் எலின் சாண்டர் [ Ellyn Shander ] தெரிவித்துள்ளார்

கடந்த டிசெம்பா 6 ஆம் திகதி அமெரிக்க நியூஜேர்சி மாநிலத்தில் நடைபெற்ற மாவீரர் நிகழ்வில் சிறப்புரை ஆற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவரது உரையின் விபரம்:

வணக்கம்

துன்பகரமான ஒரு நாளில் நாமெல்லோரும் இங்கு கூடியிருக்கிறோம்.

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளமை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதது.

அவர்கள் ஒவ்வொருவரும் எமது அன்புக்குரியவர்கள். அந்த ஒவ்வொரு சாவும் எங்கள் இதயங்களை நொருக்கியது; அந்த வேதனையை இங்குள்ள ஒவ்வொருவரும் அனுபவித்துள்ளோம்.

எனக்கு ஞாபகம் இருக்கிறது, செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட – தமது வாழ்க்கையைத் தொடங்கும் அரும்புப் பருவத்தில் இருந்த – சிறுமிகள் ஒவ்வொருவரது முகங்களையும் பார்த்த போது நான் கதறி அழுதேன்.

தமிழ் மக்களின் கிரீடத்தில் இருந்து 61 மாணிக்கங்கள் அப்போது திருடப்பட்டன என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆழிப் பேரலைப் பேரிடரினால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளித்த போது என்னுடன் பணியாற்றிய விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் எனக்கு மிக நெருக்கமான நண்பரானார்; நாங்கள் இருவரும் தமிழ் நோயாளிகள் மூலமாகப் பிணைக்கப்பட்டிருந்தோம்.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டார்கள் என்று அறிந்த போது, அந்தப் பெண் மருத்துவரும் அனேகமாக உயிரிழந்து விட்டிருக்கலாம் என எனது மனம் நினைத்தது.

2009 மே மாதம் நிகழ்ந்த இறுதிப் படுகொலைக்கு முன்னதாக - அந்த கடற்கரை ஓரத்தில் அடைக்கலம் புகுந்திருந்த மக்களை சிறிலங்காப் படைகள் கொன்று குவித்துவிடும் என்று நினைத்திருந்தேன்.

ஆனால் - அதே சமயம் - , “இல்லை, இல்லை, அப்படி எதுவும் நடந்து விடாது” எனவும் நம்பினேன்.

ஆனால் - நான் முன்னர் நினைத்திருந்ததைப் போலவே - அவர்கள் அந்த மக்களைப் படுகொலை செய்துவிட்டார்கள்.

25,000-ற்கும் மேற்பட்ட அப்பாவிகளைக் கொன்றார்கள்; ஆனால், இந்த அனைத்துலக சமூகம் வாய் மூடி இப்போதும் மெளனமாக இருக்கின்றது.

அது சொல்லும் பாடம் என்னவென்றால் - எங்களுக்கு சீன போன்ற அதிகாரம் மிக்க பெரிய நண்பர்கள் இருந்தார்களானால், இத்தகைய குற்றச்சாட்டுக்களில் இருந்து நாங்களும் தப்பிவிட முடியும்.

ஆனால், இறந்து போன ஒவ்வொருவரையும் எமது மனங்களில் வைத்து நினைவுகூருவது, தமிழர்களாகிய எமது கடமை; அத்துடன் இந்த உலகம் அவர்களை மறக்காமல் இருப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

பிசாசுகளின் இந்தச் செயல் குறித்து உலக நாடுகளிடம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

தமிழர்களின் இனப்படுகொலை தொடர்பாகத் திரைப்படங்களை எடுக்க வேண்டும்.

தமிழர் படுகொலை தொடர்பான ஒளிப்படங்களையும் கதைகளையும் அருங்காட்சியகங்களில் வெளியிட வேண்டும்.

உலக நாடுகளின் அரச அதிகாரிகளுக்கு மேலும் மேலும் கடிதங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

இப்போது தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களையும், அங்கிருந்து வெளியேறி வாழ்வுக்காய் போராடும் மக்களையும் ஊடகங்கள் தடையின்றிச் சந்திப்பதற்குக் குரல் கொடுக்க வேண்டும்.

எந்தவித உதவிகளும் இன்றி முகாம்களில் இருந்து நடு வீதிக்குத் தூக்கி வீசப்பட்டு – அர்த்தமே இல்லாத வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டுள்ள - தமிழ் மக்களுக்கு உணவும் ஆதரவும் வழங்குமாறு வலியுறுத்த வேண்டும்.

தமிழர்கள் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளார்கள்; தொடர்ந்தும் பாதிக்கப்படுகிறார்கள்.

தடுப்பு முகாம்கள் இப்போது திறந்து விடப்பட்டுள்ளதால் - தமிழர் விடயத்தை உலக நாடுகள் மறந்துவிடப் போகின்றன.

'போர் முடிந்து விட்டது; இனி எல்லாம் சரியாகிவிடும்' என இந்த உலகம் எண்ணத் தலைப்படுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.

இந்தப் பூமியில் - எங்கெல்லாம், நிறத்தின் அடிப்படையிலோ, மதத்தின் அடிப்படையிலோ, இனத்தின் அடிப்படையிலோ வேறுபாடு காட்டப்பட்டுத் துன்புறுத்தப்படும் மக்கள் இருக்கின்றார்களோ - அங்கெல்லாம் தமிழர்களுக்கு அண்ணன்களும் தங்கைகளும் இருக்கின்றார்கள்.

அவர்களுடைய நட்பை நாம் பெற வேண்டும்.

இரண்டாம் உலகப் போரின் போது நாசிக்களால் (ஹிட்டலர் படை) பல லட்சக்கணக்கான யூதர்கள் கொன்று குவிக்கப்பட்டதன் பின்னர் இந்த உலகத்தில் எழுந்த "இனி எப்போதும் இல்லை" [ "Never Again" ] என்ற குரலை இந்த உலகத்திற்கு நாம் ஞாபகப்படுத்த வேண்டும்.

"இனி எப்போதும் இல்லை" என்பதன் பொருள் நீதியற்ற தன்மையை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்பது.

"இனி எப்போதும் இல்லை" என்பதன் பொருள் இன அழிப்பை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பது.

"இனி எப்போதும் இல்லை" என்பதன் பொருள் இனப் படுகொலைகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்பது.

"இனி எப்போதும் இல்லை" என்பதன் பொருள் இனக் கொலைகளுக்கு எதிராகப் போராடுவோம் என்பது.

ஈழத் தமிழர்களைப் பொறுத்த வரையில் "இனி எப்போதும் இல்லை" என்பது இதுவரை வெற்றுச் சொற்றொடர் தான் என்பதை உலகம் புரிந்துகொள்ள வேண்டும்.

போர்க் கைதிகளை அடைத்து வைப்பது போன்ற தடுப்பு முகாம்களில் தற்போது 120,000 தமிழ் மக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள்; அங்கிருந்து வெளியேறுவதற்கு அவர்களுக்கு அனுமதி கிடையாது.

முகாம்களை விட்டு வெளியேறியவர்களில் பெரும்பாலானவர்கள் வீதிகளில் கொண்டு சென்று கொட்டப்பட்டுள்ளார்கள்; அல்லது, இராணுவக் கிராமங்களை ஒத்த பின்தங்கிய கிராமங்களில் வருமானத்திற்கான வளங்கள் ஏதுமில்லாத நிலையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்; சிலர் வேறு முகாம்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளார்கள்.

அவர்கள் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படவில்லை.

வடக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய அபிவிருத்தி வேலை என்றால், அது கிளிநொச்சியிலும் வேறு இரு நகரங்களிலும் பாரிய சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டிருப்பது தான்.

இவற்றிற்குள் - விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தில் சிறுவர்கள் கூடத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் ஒருபோதும் அமைதியாக, சத்தமின்றி இருந்துவிடக் கூடாது; நாங்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், மறைந்து போய்விடாதீர்கள்.

அனைத்துலக ஊடகங்களுக்கள் தங்கு தடையின்றி சிறிலங்கா சென்று வருவதற்கு அனுமதிக்குமாறு அந்த நாட்டை நிர்ப்பந்திக்கும்படி அனைத்துலக நாடுகளுக்கு நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அத்துடன், தமிழ் மக்களின் மீள்குடியமர்வுப் பணிகளை ஐக்கிய நாடுகள் சபை மேற்பார்வை செய்ய வேண்டும் என்பது குறித்தும் அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும்.

எனவே, இந்த வேளையில், உலகத் தமிழர்கள் மறைந்துவிடக் கூடாது; பிரிந்து நிற்கக்கூடாது.

மோசமான பகுதிகளில் குடியமர்த்தப்படுவதற்குப் பதிலாக தமிழர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என நாம் வலியுறுத்த வேண்டும்.

தமிழர்களைச் சிறிலங்கா அரசு தோற்கடிக்கலாம், தமிழ்ச் சிறுவர்களைக் கொல்லலாம், தமிழ் இளைஞர்களைக் காணாமல்போகச் செய்யலாம்; ஆனால், அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளத் தவறி விட்டார்கள் - ஒருபோதும் அவர்களால் தமிழர்களின் அரசியல் தாகத்தை அழித்துவிட முடியாது என்பது தான் அது.

எமக்கு சுதந்திரமான தேர்தல்கள் வேண்டும்; தமிழ் மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வேண்டும்; தமிழ் மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நகர்வையும் படையினர் கண்காணிக்கும் நிலைமை இருக்கக் கூடாது.

இன்றைய மிக முக்கியமான தருணம் - மிகத் திறமைசாலிகளான, நேர்மையான, உண்மையான மக்களிடம் வரலாற்றுப் பணியை ஒப்படைத்து நிற்கின்றது.

தமிழர்களைப் பாதுகாக்கவும் தமிழீழத்தை உருவாக்கவும் கூடிய சக்தி வாய்ந்த அந்தப் பெருமை மிகு மக்கள் நீங்கள் தான்.

எடுத்துக் காட்டாக - பொருளாதாரப் புறக்கணிப்பு மூலமாக சிறிலங்கா அரசை முழங்கால் இட்டு மண்டியிட வைக்க எங்களால் முடியும்.

அந்த நடவடிக்கையை இன்றே தொடங்குவோம்.

பெருமை மிக்க மக்களாகிய நாங்கள் - சிறிலங்காவில் இருந்து வரும் அனைத்துப் பொருட்களையும் குறிப்பாக ஆயத்த ஆடைகளைப் புறக்கணிப்போம்.

எங்கள் இலக்கு இலகுவானது: உலக மக்களின் பொருள் வாங்கும் பழக்கத்தையும், அது பற்றிய சிந்தனையையும் மாற்ற வேண்டும்.

எங்கள் செய்தி: "சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட ஆடையாக இருந்தால் கீழே வைத்து விடுங்கள்”. அவ்வளவு தான்.

இரத்தக் கறை படிந்த அந்த நாட்டுடன் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொளும் நிறுவனங்களின் செயல் வெட்கக் கேடானது என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.

மகாத்மா காந்தி பிரித்தானியத் துணிகளைப் புறக்கணித்தது போன்று, நெல்சன் மண்டேலாவின் விடுதலைக்குக் காரணமாக, தென்னாபிரிக்காவை பொருளாதார ரீதியாக இந்த உலகு ஒதுக்கியதைப் போன்று – நாமும் சிறிலங்காப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும்.

அவ்வாறு பொருளாதார ரீதியாகப் புறக்கணிப்பதன் மூலம் நாசிகளை ஒத்த இந்த சிறிலங்கா அரசை நிலத்தில் மண்டியிடச் செய்ய முடியும்.

உலகம் முழுவதும் இந்தப் புறக்கணிப்பு நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.

Victoria's Secrete, Marks & Spencer மற்றும் GAP போன்ற நிறுவனங்களின் சுற்றுப் பகுதியில் இது தொடர்பான துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதுடன் சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டாம் என வாடிக்கையாளர்களையும் கோர வேண்டும்.

ஏற்கனவே அந்த நிறுவனங்கள் பதற்றத்திற்குள்ளாகி உள்ளமையை நாம் அவதானிக்கின்றோம்.

இதே ரீதியில் - “சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள்” அனைத்தையும் புறக்கணிக்கும் பொருளாதாரச் சூழலை ஏற்படுத்த நாம் தொடர்ந்து செயற்பட வேண்டும்.

மக்களின் அழுத்தங்கள் காரணமாக ஒரு நிறுவனமாவது சிறிலங்காவில் இருந்து வெளியேறிவிட வேண்டும் என்பதுதான் எமது தேவை; அதன் பின்னால், ஏனையவை எல்லாம் தொடர்ந்து வெளியேறி ஓடிவிடும்.

இந்தக் கடைகளில் இருந்து "Made in Sri Lanka" என்ற பட்டி உடைய ஆடைகளை நாம் முதலில் கொள்முதல் செய்ய வேண்டும்; பின்னர், அவற்றை அதே கடைகளில் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும்.

அப்போது - "சிறிலங்காவில் தமிழர்களின் அழிவுக்கு நாம் உடந்தையாக இருக்க விரும்பவில்லை" என்று அவர்களிடம் விளக்க வேண்டும்.

இந்தப் புறக்கணிப்பில் நாம் எல்லோரும் இணைந்து கொள்ள வேண்டும்; “சிறிலங்காவில் தயாரிக்கப்பட்ட” பொருட்களை வாங்குவதில் உள்ள ஆபத்தை ஒவ்வொருவரிடமும் எடுத்து விளக்க வேண்டும்.

இது தான் தமிழீழத்திற்கான வழி; எங்கள் தேவைகளுக்காக நாம் இந்தப் புறக்கணிப்பை மேற்கொண்டோமானால் எங்களால் சிறிலங்காவின் அரசையே தூக்கி எறிய முடியும்.

எதிர்பார்ப்புகள் ஏதுமின்றி இறந்துபோன தமிழ் மக்கள் அனைவரினதும் சாவுகள் அர்த்தமற்றவையாகப் போய்விடுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது.

அடக்கு முறைகளில் இருந்து எங்களுக்கு விடுதலை பெற்றுத் தருவதற்காகவே விடுதலைப் புலிகள் போராடினார்கள்.

அந்தச் சுதந்திர நெருப்பு அணைந்து விடாமல் நாம் எப்போதும் பாதுகாக்க வேண்டும்.

இறந்து போனவர்களால் இனி நீதியை நிலைநாட்ட முடியாது; பதிலாக, உயிருடன் இருக்கும் நாம் தான் இறந்து போனவர்களுக்காக அதனை நிலைநாட்ட வேண்டும்.

எனவே பொருளாதாரப் புறக்கணிப்பு என்ற இந்த அழைப்புக்கு நாம் ஒவ்வொருவரும் செவி சாய்த்து சிறிலங்கா அரசை முழங்காலி்ல் மண்டியிட வைக்க வேண்டும்.

தமிழ் மக்களின் சுதந்திர தாகத்தைத் தொடர்ந்து பேணுவதாக எமது முயற்சிகள் அமைய வேண்டும்.

அதே சமயத்தில் - உயிரிழந்து போன அனைவருக்காகவும் எனது பிரார்த்தனைகளையும் இங்கு செலுத்த விரும்புகிறேன்.

இந்தக் கொடூரமான வன்முறைகளில் பலியாகிப் போன தமிழர்களே, நாங்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டோம்.

ஒவ்வொரு காலையிலும் தங்கள் குழந்தைகளை நித்திரையில் இருந்து எழுப்பி, அவர்களுக்கு உணவளித்து, பாடசாலைக்கு மதிப்புடன் கூட்டிச் சென்ற தாய்மார்களே, நாங்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டோம்.

கடலுக்குச் சென்று பிடித்த மீன்களுடன் கரை திரும்பிய மீனவர்களே, அவர்களது வருகைக்காகக் காத்திருந்த அவர்களது மனைவியர்களே, நாங்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டோம்.

மருத்துவமனை மீதான தாக்குதலின் போது உயிரிழந்த மருத்துவர்களே, தாதியர்களே, பணியாளர்களே, நாங்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டோம்.

திருமணம், பிறந்த நாள், கொண்டாட்டங்கள் எதனையும் ஒருபோதும் கொண்டாடாத தமிழ் மக்களே, நாங்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டோம்.

தங்கள் பாடசாலைகளுக்குப் பிஞ்சுக் கால்களால் ஓடிச் சென்ற போது கொல்லப்பட்ட, கால்களை இழந்த சிறுவர்களே, நாங்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டோம்.

நீண்ட காலமாகச் சிங்களத்தின் ஒடுக்குமுறைகளுக்கு ஆட்பட்டிருந்த தமிழ் மூத்தோர்களே, கடைசிக் கொடூரங்களையும் துன்பங்களையும் பார்ப்பதற்கு நீங்கள் இல்லாமல் போனமை குறித்து நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்; ஆனால், நாங்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டோம்.

பயம் இன்றி நடப்பதற்கோ, பேசுவதற்கோ வாழ்வதற்கோ ஒருபோதும் சந்தர்ப்பம் கிடைக்காத தமிழ்க் குழந்தைகளே, நாங்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டோம்.

தமிழ் மக்களை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியவர்களுக்கு எதிராகப் போர்க் களங்களில் தீரத்துடன் போராடி மடிந்த எமது புலி மாவீரர்களே, நாங்கள் ஒருபோதும் உங்களை மறக்க மாட்டோம்.

உயிர் நீத்தவர்களே, தமிழீழத்தை விடுவிப்பதற்கான போராட்டத்தை உங்கள் பெருமையுடன் நாம் தொடர்வோம்.

இரண்டாம் உலகப் போரில் நாசிப் படைகளுக்கு எதிராகப் படை நடத்திய பிரெஞ்சுத் தளபதி சார்ளஸ் து கோல் [ Charles de Gaulle ] நாசிப் படைகள் வீழ்த்தப்பட்ட போது சொன்னார்:

“எண்ணற்ற மரணங்கள், அளவிடற்கரிய அர்ப்பணிப்புக்கள், கணக்கிட முடியா அழிவுகள், வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத சாகசங்கள் - இவை எல்லாவற்றிலிருந்தும் சிறப்பான - உயர்வான - மனிதத் தன்மை எழவே இல்லை என்றால் அது ஏற்றுக் கொள்ளப்படவே முடியாதது; தாங்கிக்கொள்ளவே முடியாதது." [ "It is not tolerable, it is not possible, that from so much death, so much sacrifice and ruin, so much heroism, a greater and better humanity shall not emerge.” ]

எண்ணற்ற தமிழர்களின் சாவிலிருந்தும் அளவிடற்கரிய அர்ப்பணிப்புக்கள் மற்றும் சாகசங்களிலில் இருந்தும், என்ன எழப் போகிறது...? 'தமிழீழம்' என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த மனிதத் தன்மை எழவேண்டுமா இல்லையா?

என்று தனது உரையை முடித்தார் அமெரிக்க மருத்துவர் எலின் ஷான்டர்

பாவம் இந்த மூதாதை




இந்தப் படத்தைப் பாருங்கள். இருந்தபடியே தூங்கும் இந்த முதியவரைப் பார்த்து ஏன் ஒருவரும் அனுதாபம் காட்டுகின்றார்களில்லை.எவ்வளவு பாவமாக இருக்கின்றது. அந்த அந்த வயதில் அவற்றைச் செய்ய வேண்டுமென்றே மேலை நாடுகளில் 65 வயதில் ஓய்வு கொடுக்கின்றார்கள். குழந்தமையில் தூக்கம் வேண்டியிருப்பதைப்போல முதுமையில் தூக்கமும் ஓய்வும் வேண்டும். அது கிடைக்காவிட்டால் இப்படி இருந்த படியே தூங்க வேண்டியது தான்.

மிருகங்கள் கொடுமைப்படுத்தப்படும் போது கூட "மிருக வதை தடைச்சட்டத்தில்" வேண்டிய பாதுகாப்பைக் கொடுக்கின்றார்கள்.

இந்த முதியவரை இவ்வாறு துன்பப்படுத்துவதை எதிர்த்து யாராவது பொதுநல வழக்குத் தொடுத்தால் நன்மையாக இருக்கும்.

ஜெனரல் பொன்சேகாவுக்கு அப்பாலும் கட்டளையிடுபவர்கள் இருந்துள்ளார்களா?


20.12.2009 அன்று "சண்டே ரைம்ஸ்" வெளியிட்டுள்ள அரசியல் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதி இது.


கடந்த மே மாதத்தையடுத்து இராணுவத்தின் முன்னாள் தளபதியும் கூட்டுப்படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியுமான சரத் சந்திரலால் பொன்சேகா மிகப் பெரும் வீரராக உயர்ந்துவிட்டார் புலிகளுக்கு எதிராக படை நடத்தி வெற்றிபெற்றமை காரணமாக. ஜனாதிபதி அவருக்குக் காணி, பணம் மற்றும் உல்லாசக் கார் முதலிய வற்றைப் பரிசாக வழங்கிக் கௌர வித்தார். அதற்குப்பின் ஆறு மாதங்கள் முடிவதற்கு முன்பே தமது 40 வருட இராணுவ வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் பொன்சேகா. அதன்பிறகு சப்ரகமுவ மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருடன் தொடர்புகொண்டு பேசியபோது தமது ஒரு காலத்து நெருங்கிய சகாவாக இருந்தவரான கோத்தபாய ராஜபக்ஷ பற்றி தமது கசப்பான கருத்துக்கள் பலவற்றை சரத் கொட்டித் தீர்த்தார். ராஜபக்ஷ குடும்பத்தினரையும் அவர்களின் நடவடிக்கைகளையும் வெளிப்படுத்தப் போவதாகத் தெரி வித்தார். உண்மையில் பொன்சேகா கடைசித் தடவையாகப் பிரியாவிடை கூறுவதற்காக அலரிமாளிகைக்குச் சென்றபோது, அவர் கூறியிருந்த சில ""அசிங்கிதமான'' விடயங்கள் பதிவில் இருப்பதாக ஜனாதிபதி அவருக்குக் கூறினார்.

ஆங்கிலப் பத்திரிகையொன்றின் செய்தியாளர் ஒருவர் வேறொரு கட்சியின் பேரில் அமைந்த "சி டி எம் ஏ" ரெலி போன் ஒன்றை முன்னாள் பாதுகாப்பு பிரதம அதிகாரியால் பாவிக்கப்பட்டது சம்பந்தப்பட்ட விடயத்தை நாடாளுமன்ற உறுப்பினரிடம் கொண்டுபோயுள்ளார். ஜெனரல் பொன்சேகா கூறியுள்ளவை களைக் கேட்டபோது எனது கால்கள் நடுங்கத் தொடங்கிவிட்டன. உண்மையில் அவர் கூறிய அதிர்ச்சியளிக்கும் விடயங்களை நீங்கள் கேட்க வேண்டும் என்று தமது கட்சியினருக்கு அந்த உறுப்பினர் கூறியுள்ளார்.

பொருத்தமான வேட்பாளர்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட் டமைப்பினரும்கூட இவ்வாறு நடக் கும் என்று நம்ப மறுத்திருந்தார்கள். எதிர்க்கட்சியினருடன் திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து இடம் பெற்று வந்தன. பொன்சேகாவை விட வேறு எந்த ஒரு வேட்பாளரும் ராஜ பக்ஷவுக்குப் பொருத்தமான எதிர் வேட்பாளராக அமையமாட்டார்கள் என்று எதிர்க்கட்சியினர் உணர்ந்தார்கள். புலிகளை வெற்றி கொண்டதில் பொன் சேகாவுக்குத் தொடர்ந்தும் புகழ் இருந்து வந்தமையை அவர்கள் அறிந்திருந்தார்கள்.

எனவே எதிர்க்கட்சியினர் ஒன்றாகச் சேர்ந்து நின்று ஒன்றாகப் போட்டி யிடுவதற்குப் பொன்சேகாவே பொருத்த மான பிரமுகராக எல்லாரையும் இணைக் கும் கயிறாக செயல்படுவதற்குச் சரி யானவர் என்று முடிவெடுக்கப்பட்டது. எனவே போர் வீரர் பொது வேட் பாளராக நிறுத்தப்படுவதற்குத் தெரிவு செய்யப்பட்டார். ஆக ராஜபக்ஷ குடும் பத்தினரின் செயல்களை வெளிப் படுத்துவதற்கும் நிறைவேற்று அதி காரம் மூலம் அவர்களுக்குப் பல்வேறு அதிகாரங்களும் கிடைத்து வருவதை ஒழிக்கும் வகையிலும் பொது வேட் பாளராகப் போட்டியிடுவதற்கு அவர் முன்வந்தார்.
இவ்வாறு அவர் சரித்திரத்தில் இடம்பெற்றுவிட்டார். அவர் எடுத்துள்ள நிலைப்பாட்டின் மூலம் தம்மைத் தாமே வெளிப்படுத்திக் கொள்ளும் நிலைக் கும் தள்ளப்பட்டுவிட்டார். அவரது தொழில்துறை, தகுதிகள், மற்றும் பெருமை போன்றவை தொடர்பான பாரதூரமான கேள்விகள் எழுவதற்கும் இடம் அளித்துவிட்டார்.

விடுதலைப்புலிகள் எவரும் சரணடைய அனுமதிக்கப்படலாகாது; அவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ களநிலைத் தளபதி ஒருவருக்குக் கட்டளையிட்டி ருந்தார் எனவும் போரின் இறுதிக்கட்ட செயற்பாடுகள் தொடர்பாக குறிப்பாக மூன்று முக்கிய புலித் தலைவர்கள் (புலித்தேவன், நடேசன், மற்றும் ரமேஷ்) மூவர் சரணடைவதற்கு முன் வந்திருந்தது தொடர்பாக தமக்குத் தகவல் தரப்படவில்லையென்றும் பொன்சேகா கூறியிருந்தார். மேலும், இந்தத் தகவலை பஸில் ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வழங்கியிருந்தார், அவர் அது தொடர்பாக 58ஆவது படையணி யின் களநிலைத் தளபதி பிரிகேடியர் ஷவேந்திராவுடன் தொடர்பு கொண்டு புலிகள் எவருக்கும் சரணடையச் சந்தர்ப்பம் அளிக்கலாகா தெனவும் அவர்கள் அனைவரும் கொல்லப்பட வேண்டும் எனவும் கட்டளையிட்டிருந்தார் எனக் கூறியிருந்தார்.

போர் வீரர்களைக்காட்டிக் கொடுக்கும் செயல்
இதுகுறித்து கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர், சரத்பொன்சேகாவின் அறிக்கை போர் வீரர்களைக் காட்டிக் கொடுப்பதாகவுள்ளது. தமது உயிர்களை போர்முனையில் தியாகம் செய்த வீரர்கள் அவர்கள் என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறியிருந்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் போர் வீரர்களை சர்வதேச போர் விசாரணை ஆணைக்குழு முன் நிறுத்துவதற்கு நடைபெறும் சதித்திட்டத்தின் ஓர் அம்சமாகவே பொன்சேகாவின் கூற்றுக்கள் விளங்கு வதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றஞ்சாட்டியிருந்தார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தில் அழைக்கப்பட்டிருந்த அவசர ஊடகக் கூட்டமொன்றில் இந் தக் கருத்துக்களை அவர்கள் வெளியிட் டிருந்தனர். பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவும் சிரேஷ்ட பொலிஸ் பிரதி அதிபர் காமினி நவரத் தினவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தக் கருத்துக்கள் அவசரத்தில் வெளியிடப்பட்டவை; ஆய்வுகள் நடத்தி வெளியிடப்பட்டவையன்று. ஆனால் சரணடைந்த புலிகள் கொல் லப்பட வேண்டும் என்று கட்டளை யிடப்பட்டமை தொடர்பாக இவர்கள் குறிப்பாக மறுப்பு எதனையும் வெளி யிடவில்லை என்பது இந்த மறுப்பு களில் தென்பட்ட மிக முக்கிய குறைபாடாகும். இதனால் மேற்கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையானவை யென்றே கருதப்படும் வகையில் அமைந்துவிட்டன. இது அவர்களின் நோக்கமாக இருக்கவில்லை.

உத்தியோக பூர்வ இரகசியம் இது
இந்த மாநாட்டின் நோக்கம் இதில் சர்வதேச சதித்திட்டம் இருக்கிறது என்று காட்டுவதும் தொழில்சார் இரகசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் வேறு சட்டங்களின் கீழ் பொன்சேகா வின் மீது சட்டமா அதிபரால் நடவடிக்கை எடுக்கும்படி கோருவதற்காகவே என்று கருதப்படுகின்றது. ஓய்வுபெற்ற இராணு வத்தளபதி பொன்சேகா இப்போது உத்தியோகபூர்வ இரகசியம் ஒன்றை வெளியிட்டுவிட்டார் என்பதே குற்றச்சாட்டாகும்.
இது இப்போது கொழும்பில் குறிப்பாக ராஜதந்திர வட்டாரங்களில் சரணடைந்த புலித்தலைவர்கள் கொல்லப்பட்டமையானது உத்தியோகபூர்வ இரகசியமாகப் பாதுகாக் கப்படுகின்றது என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கின்றது. அரசின் சட்டநிபுணர்கள், சட்டமா அதிபர் திணைக்களம் உட்பட அனை வரும் இந்த விடயத்தை இப்போது தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். அதேசமயம் வெளிநாட்டிலுள்ள இலங் கைத் தூதரகங்களை இந்த விடயத்தில் கவனமாய் இருக்கும்படியும், சம்பந்தப் பட்டுக்கொள்ளவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. சர்வதேச ஊடகங்கள் இதனைப் பயன்படுத்தி இலங்கை இராணுவத்தின் மீது சேறு பூசும் செயற்பாட்டை அதிகரித்து விட லாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
எதுவானாலும் ஜெனரல் பொன் சேகாவின் கருத்து இராணுவத்தில் மட்டுமன்றி, மக்கள் மத்தியிலும் கொந்தளிப்பைத் தோற்றுவித்துள்ளது. அவர் பதக்கங்கள் பெற்றுப் பாராட்டுப் பெற்ற அதிகாரி, இராணுவத்தில் உயர்ந்த தராதரங்களை அறிமுகப் படுத்தியவர் என்று தம்பட்டம் அடித்துக் கொண்ட ஒருவர் புலிகள் அமைப்பை இராணுவ ரீதியில் தோற்கடித்தமைக் கான சகல பெருமைகளுக்கும் உரிய வராக கூறிக்கொள்பவர், தமது உயர் அதிகாரிகள், தனக்கு கீழ் உள்ள ஓர் அதிகாரி முழு நாட்டையும் காட்டிக் கொடுத்துள்ளார். இந்த அதிகாரி லெப்டினட் ஜெனரல் பொன்சேகா விடமிருந்து கட்டளைகளைப் பெற்றுச் செயல்பட்டு இராணுவத்தை நடத்திச் சென்றுள்ளார். போர் முடிந்த கையோடு தம்மால் வழிநடத்தப்பட்ட இராணுவத் துக்கே 95 வீதம் போரின் இராணுவ வெற்றி உரித்தாகும் என்றும் கூறியிருக்கிறார்.

இப்பொழுது வேறுவிதமான கதையொன்றை அவர் வெளியிடுகின்றார். அவரை நம்புவதானால் இராணுவத்திற்கு வேறு நபர்களும் கட்டளைகளை விடுபவர்களாக இருந்துள்ளார்கள் என்று கருத வேண்டியிருக்கிறது. அது உண்மையானால், முழு வெற்றிக்கும் தாமே பொறுப்பு என்று அவர் எவ்வாறு கூறிக் கொள்ளமுடியும்?

நானே பொறுப்பு
இது தொடர்பாக ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு ஆதரவான பௌத்த துறவிகள் குழுவொன்று பொன்சேகாவின் கொள்ளுப்பிட்டி வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவிருந்தார்கள். பொன்சேகாவின் ஆதரவாளர்களுக்கு இது கவலையை அளித்துள்ளது. கும்பல்களை எதிர்கொள்ள நேர்ந் தால் அதன் விளைவுகள் மோசமாகி விடும் என்பதால் கோட்டை எம்.பி ரவி கருணாரத்னவின் மாளிகை வீட்டுக்கு சரத் அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அப்படிப் பெரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம் பெறவில்லை.

ஜெனரல் பொன்சேகா பின்னர் நடத்திய பத்திரிகையாளர் கூட்டமொன்றில் பின்வரும் அறிவித்தலை விடுத்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தகாலம் முழுமையிலும் இடம் பெற்ற சம்பவங்கள் அனைத்துக்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கின்றேன். களநிலை அதிகாரிகள் எவரும் சட்டத் திற்கு மாறாக நடந்து கொள்ளவில்லை. அரசாங்கம் சோடிக்கப்பட்ட குற்றச் சாட்டுக்களைக் காட்டுகிறது. பத்திரி கைப் பேட்டியொன்றினை தவறாகத் திரிவுபடுத்திக் கூறுகின்றது என்று கூறியிருந்தார்.

பின்னர் அவர் மேலும் தெரிவிக்கை யில் செய்தி சேகரிப்பதற்காக 58 படையணிக்குச் சென்றிருந்த ஒரு நிருபரிடமிருந்து அறிந்தேன் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ விடமிருந்து அழைப்பு ஒன்று 58 ஆவது பிரிவுப் படையணித் தலைவர் ஷவேந்திர சில்வாவுக்கு வந்துள்ளது. சில புலித் தலைவர்கள் சரணடையப் போவது பற்றி அழைப்பொன்று வந்ததாகக் கூறியிருந்தார். ஆனால் இந்தச் செய்தி தவறானதா இல்லையா என்பதை அவர் உறுதிப்படுத்தினாரா இல்லையா என்பது பற்றி ஒன்றும் கூறவில்லை.

வெள்ளைக் கொடியுடன் வந்த புலிகளின் தலைவர்களை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றார்களா இல்லையா என்பதல்ல இப்போதுள்ள கேள்வி. அப்படியான ஒரு நிலைமை இருந்திருந்தால் அதுபற்றி முழு அளவிலான ஆய்வுகளின் மூலமே தீர்மானிக்கப்பட வேண்டும். பொன்சேகா பேட்டியின் போது கூறியவைகளை மறுக்காத நிலையில் அவை அரசாங்கத்தால் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் என்று கூறுகிறார். அந்தப் பேட்டியில் அவர் கூறியவை தவறு என்றால், அவரேதான் அவைகளைச் சோடித்தவராவார். இது அவரால் கடந்த ஆறுமாதங்களில் மக்கள் மத்தியில் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ள நம்பிக்கையை சிதறடித்துவிட மாட்டாதா என்பதே இப்போதுள்ள கேள்வி.

வாழ்வுக்காக ஏங்கியிருப்போர்...!


அமெரிக்காவில் வெளிவரும் சஞ்சிகை ஒன்றுக்கு எரிக்கா கினெட்ஸ் என்ற செய்தியாளர் எழுதியுள்ள செய்திக் கட்டுரையின் தமிழ் வடிவம் இது. "முட்கம்பி வேலி கடந்து வந்துவிட்டார்கள்; ஆனால், இனி.....?" என்ற தலைப்பில் "புதினப் பலகை" இணையத் தளத்தில் இத்தமிழ் வடிவத்தைத் தொடர்ந்து வரைந்து வருகின்றார் ரி.ரேணுபிரேம்.


முட்கம்பி வேலி கடந்து வந்து விட்டார்கள்; ஆனால், இனி...?
கிழக்கு இலங்கையைச் சேர்ந்தவர் வைரமுத்து பவானி. தனது உறவினர் ஒருவரின் திருமணச் சடங்கிற்காக மூன்று வருடங்களின் முன்னர் வடக்கிற்கு அவர் போயிருந்தார். கடந்த செப்ரெம்பர் மாதம் வரையில் அவரால் தனது சொந்த இடத்திற்குத் திரும்பி வர முடியவில்லை; வடக்கில் நடைபெற்ற போரில் சிக்கிக்கொண்டார். குண்டுத் தாக்குதலால் தன்னுடைய குடும்பத்தில் ஆறு உறுப்பினர்களையும், தனது கால்கள் இரண்டையும் அவர் பறிகொடுத்துவிட்டார்; அந்த நிலையிலும் பல மாதங்களை, மக்கள் நிரம்பி வழிந்த தடுப்பு முகாம்களில் அவர் கழிக்க வேண்டி இருந்தது.
இப்போதும் கூட அரச அதிகாரிகளின் கடும் கண்காணிப்புக்கு மத்தியிலேயே அவர் வாழ்கிறார். தடுப்பு முகாமிலிருந்து அவர் கிழக்குக்குத் திரும்பிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் அதிகாரிகள் தனது வீட்டிற்கு வந்து பார்த்துச்செல்கிறார்கள் என பவானி கூறுகிறார். வன்னியில் நான் எங்கு போனேன், அங்கு என்ன செய்தேன் என்பது பற்றி அவர்கள் என்னிடம் கேட்கிறார்கள் என்றார் பவானி. அவருக்கு 25 வயதாகிறது; தனது சகோதரியின் வீட்டுத் தரையில் அமர்ந்தபடி நாள்களைக் கடத்திக் கொண்டிருக்கிறார்; சோர்வையும் சலிப்பையும் விரட்டுவதற்குப் போராடிக் கொண்டிருக்கிறார். போருக்குப் பின்னரான சிறிலங்காவில் அரசின் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தமது வாழ்க்கையைக் கட்டி எழுப்ப அல்லல்படும் இலட்சக் கணக்கான மக்களில் ஒருவர் தான் பவானி.

நாட்டின் வடக்கில் நடைபெற்ற இறுதிப் போரில், படையினர் முன்னேறிய போது விடுதலைப் புலிகளின் பகுதிக்குள் 300,000 தமிழ் மக்கள் அகப்பட்டுக் கொண்டார்கள். இந்தத் தமிழ் அகதிகளில் பெரும்பாலானவர்கள் இன்று எதிர்காலம் பற்றிய உறுதியின்மையின் பல்வேறு தளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறிலங்காவின் தமிழ்ச் சிறுபான்மை மக்களுக்காகப் போராளிகள் நடத்திய கால் நூற்றாண்டு காலப் போரில் 80,000 முதல் 100,000 வரையான உயிர்கள் காவு கொள்ளப்பட்டுவிட்டன. தமிழ் மக்களுக்கு கூட்டுத் தண்டனை கடந்த மே மாதத்தில் அந்தப் போராளிகள் தோல்வியடைந்த பின்னர், சனக் கூட்டத்தால் நிரம்பி வழிந்த முகாம்களில் சிறிலங்கா அரசு மக்களை மந்தைகள் போன்று அடைத்து வைத்தது.
அவர்களுடன் பல போராளிகளும் அடைக்கப்பட்டு இருந்தார்கள். இந்த முகாம்களின் நிலைமை குறித்து மனித உரிமை அமைப்புக்களும் மேற்கு நாடுகளும் குறை கூறி வந்தன; இது தமிழ் மக்கள் எல்லோருக்கும், சட்ட விரோதமாகக் கூட்டுத் தண்டனை வழங்கப்படும் செயல் என அவை தெரிவித்தன.

அனைத்துலக அழுத்தங்களை அடுத்து, முகாம்களை ஜனவரி மாத இறுதியில் மூடிவிடுவதாக சிறிலங்கா அரசு அறிவித்தது. ஆனால், ஏற்கனவே தமது சொந்த இடங்களுக்குத் திரும்பியவர்கள் கூட காவல்துறையினரின் அனுமதி இன்றி எங்கும் பயணிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களது வீடுகளுக்குப் படை அதிகாரிகள் அடிக்கடி வந்து பார்த்துச் செல்கிறார்கள். இழுத்துச் செல்லப்பட்ட அல்லது தெரிந்தே படையினரால் விசாரணைக்கு எனக் கூட்டிச் செல்லப்பட்ட தமது அன்புக் குரியவர்கள் குறித்த செய்திக்காகப் பலர் காத்துக் கிடக்கிறார்கள். இவ்வாறு அகதிகள் அரசினால் கண்காணிக்கப்படுவதும் அவர்களது வருமானத்திற்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்க அரசு தவறுவதும் இன ரீதியான பிரிவினைப் பதற்றத்தை மீண்டும் ஏற்படுத்தி விடுமோ என மனித உரிமைகள் குழுக்கள் அஞ்சுகின்றன.

மனமுடைய வைக்கும் விபரீதப் போக்கு
இடம்பெயர்ந்த 3,00,000 மக்களையும் அவர்களது உறவினர்களையும் இந்தச் செயல்கள் மனமுடைய வைத்துள்ளன என்றார் மீனாட்சி கங்குலி. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் அவர் . தங்களுடையது அல்லாத, நம்பிக்கை வைக்க முடியாத அரசு ஒன்றின் கீழ் தாம் வாழ்கிறார்கள் என்று அந்த மக்கள் எண்ணத் தலைப்படுகிறார்கள் எனக் கவலை தெரிவித்தார் அவர். சிறிலங்காவில் உள்ள 20 மில்லியன் மக்களில் பெரும்பான்மையாக இந்துக்களைக் கொண்ட தமிழர்கள் 18 விழுக்காட்டினரே. பெரும்பாலும் பௌத்தர்களை உள்ளடக்கிய பெரும்பான்மையினரால் தாங்கள் அடக்குமுறைக்கு உள்ளாகி வருகின்றனர் எனத் தமிழர்கள் பல தசாப்தங்களாக முறையிட்டு வருகின்றனர். அதேசமயம் அகதிகள் அரசிடம் இருந்தும் தொண்டு அமைப்புகளிடம் இருந்தும் உதவிகளைப் பெற்று வருகின்றார்கள் என்று புனர்வாழ்வு மற்றும் பேரிடர் உதவி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். போரின் கடைசிப் பகுதியில் இடம் பெயர்ந்த பின்னர் வடக்கில் மீளக்குடிய மர்த்தப்பட்ட மக்களுக்கு பக்கத்து நாடான இந்தியா தகரக் கூரைகளையும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரகம் 25,000 ரூபா பணத்தையும், 6 மாதங்களுக்குத் தேவையான உலர் உணவுப் பொருள்களை உலக உணவுத் திட்டமும் வழங்கி வருகின்றன என்றார் அமைச்சர்.விவசாயத்திற்குத் தேவையான உபகரணங்கள் விவசாயிகளுக்கு வழங்கப் படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

பிள்ளைகளை வளர்த்து பலிக்கடாவாக்கும் செயல்
அகதிகளில் பலர் விடுதலைப் புலிகள் ஏற்படுத்திய துன்பங்களையும் தாங்கியவர்கள். சண்டை நடைபெற்ற பகுதிகளில் இருந்து தப்பியோட முயன்ற மக்கள் போராளிகளால் சுடப்பட்டார்கள் என்றும் தமது பிள்ளைகள் பலவந்தமாகப் பிடித்துச் செல்லப்பட்டார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
6,000 சிறுவர்கள் பலவந்தமாகப் படைக்குச் சேர்க்கப்பட்டார்கள் என ஐ.நா. சிறுவர் அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது. அங்கே பிள்ளைகளை வளர்ப்பதென்பது, ஆடு மாடுகளை வளர்த்துக் கொல்லக் கொடுப்பது போன்றது என்றார் சுகதாஸ் ராஜ்வதனி. 34 வயதான அவர், கடந்த ஒக்ரோபரில் தான் தனது சகோதரியின் வீடு அமைந்துள்ள துறைமுக நகரான திருகோணமலைக்குத் திரும்பி இருக்கிறார். பிள்ளைகளைப் பிடித்துச் செல்ல போராளிகள் வந்த போது தனது குழந்தைகளை ஒரு குழிக்குள் மறைத்து வைத்து, அதன் மேல் இரும்புத் தகடு ஒன்றைப் போட்டு மூடி அந்த இரும்புத் தகட்டுக்கு மேலே உலைப் பானையை வைத்து அவர் மறைத்துள்ளர். ஒரு நாள் இரவு தமது கூடாரத்திற்கு அருகில் இருந்த கூடாரத்திற்கு வந்த பேராளிகள், அங்கிருந்த சிறுவனைப் பிடித்துச் செல்வதற்குத் தடையாக இருந்த அவனது தந்தையைச் சுட்டுக்கொன்றனர் என்று ராஜ்வதனி கூறுகிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பையன் இவங்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேணும் என்று உரக்கக் கத்தினான் என அந்த நினைவுகளை மீட்கிறார் ராஜ்வதனி. அப்போது அங்கிருந்தவர்கள் எல்லோரும் தமது கைகளில் கிடைத்த தடிகளை எடுத்துக் கொண்டு போராளிகளைத் துரத்தித் துரத்தித் தாக்கத் தொடங்கினர். இந்தக் குழப்பம், கொந்தளிப்புகளுக்கு நடுவே ராஜ்வதனியின் குடும்பம் நீரேரியைக் கடந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குத் தப்பி வந்தது.

அந்தச் சமயத்தில் இரு தரப்பிலிருந்தும் பீரங்கிக் குண்டுகள் வீசப்பட்டன என அவர் கூறுகிறார். அவருக்கு முன்னால் நடந்து கொண்டிருந்த பெண் எறிகணைச் சிதறல் தாக்கி அப்படியே தலைகுப்புற தண்ணீருக்குள் வீழ்ந்துள்ளார். எங்கள் முன்னாள் வீழ்ந்து கொண்டிருந்த பிணங்களை ஒதுக்கித் தள்ளிவிட்டு நாங்கள் தொடர்ந்து நடந்தோம் ராஜ்வதனியின் குரல் இறுகுகிறது. தனது வீட்டில் இருப்பது குறித்து இப்போது மகிழ்ச்சியடைகிறார் ராஜ்வதனி; சுற்றிவர மதில் சுவர்கள் கட்டப்பட்ட அந்த வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் அவர் தங்கி இருக்கிறார்.
அசட்டுச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே இருப்பதை அவரால் நிறுத்தவே முடியவில்லை. ஆனால், எவருக்கும் எந்த வருமானமும் கிடையாது; தனது இரண்டு தங்க வளையல்களை அடகு வைத்துப் பெற்ற 30,000 ரூபாயுடன் தான் அவரது முழுக் குடும்பம் காலந் தள்ளுகிறது.

கணவனை இழந்தவர்
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கில் போர் முடிந்துவிட்ட போதும் கூட தமது இடங்களுக்குத் திரும்பியதில் இருந்து, மிகச் சிலரால் மட்டுமே வருமானத்தைப் பெறுவதற்கான வாய்ப்புக்களை இங்கு பெற முடிந்துள்ளது; அதிலும் பெண்களின் நிலை மிகச் சிரமமானது. சசிகலா சிவராஜாவும் அவரது கணவரும் வடக்கே சென்று வேலை தேடிக்கொள்ளலாம் என்று விரும்பி மட்டக்களப்பில் உள்ள தமது சிறிய கிராமத்தை விட்டு 2006 ஆம் ஆண்டு வெளியேறினார்கள்.கடந்த ஓகஸ்ட் மாதம் சசிகலா திரும்பி வந்தார்; அவரது கணவர் வரவில்லை. இப்போது அவரும் இரண்டு குழந்தைகளும் நிவாரண உணவை நம்பியும் அவரது சகோதரியின் உதவியை நம்பியுமே வாழ்கிறார்கள். பவானியின் வேலை வாய்ப்பு நிலைவரமோ மிகக் கேவலமாக உள்ளது. உள்ளுர் தேவாலயம் ஏற்பாடு செய்திருந்த தையல் வகுப்புக்களில் கலந்துகொள்ளும் ஆர்வம் அவருக்கு முன்னர் இருந்தது; ஆனால், இப்போது அவர் செய்வதறியாது இருக்கிறார்.

ஏனென்றால் அந்த தையல் இயந்திரங்களை இயக்குவதற்குக் கால்கள் வேண்டுமே....!

தினமணி செய்தியும் பொங்கும் தமிழர்களும்

தமிழ் பெண்களிடம் இலங்கை ராணுவம் பாலியல் கொடுமை




First Published : 21 Dec 2009 12:42:41 AM IST

Last Updated : 21 Dec 2009 08:41:55 AM IST

லண்டன், டிச.20: போரினால் முகாம்களில் தஞ்சம் அடைந்த ஈழத்தமிழ் பெண்கள் பயங்கரமான கொடுமையை அனுபவித்தனர் என்று மனித உரிமை அமைப்பு ஒன்றின் பிரிட்டன் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதிலும், முகாம்களில் இளம்பெண்களை ராணுவ அதிகாரிகள் வலுக்கட்டாயமாக பாலியல் கொடுமைப் படுத்தியதே வேதனையான விஷயம் என்றும் அவர் கூறினார்.

முகாம்களில் இருப்பவர்களுக்கு போதுமான உணவு அளிக்கப்படுவதில்லை. இதனால் பசியால் துடிக்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட ராணுவ அதிகாரிகள், தமிழ்ப் பெண்களுக்கு உணவு தருவதாகவும், பணம் தருவதாகவும் கூறி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினார்கள் என்பதே பரிதாபம் என்றார் அந்த மருத்துவர்.

இலங்கையில் ஈழத்தமிழர்களை அடைத்து வைத்திருந்த முகாம் ஒன்றை பார்வையிட்டேன். அப்போது என் கண் முன் அரங்கேறிய கொடுமையை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அந்த முகாமில் ஈழத்தமிழர்கள் மிருகங்களைப் போல் நடத்தப்பட்டனர். முகாம்களில் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை. முகாமின் முள்வேலிக்கு அருகில் நெருங்கவும் அவர்களுக்கு அனுமதி கிடையாது.

முகாம்களில் உள்ளவர்களை பார்வையாளர்கள் அருகில் சென்று பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட இடைவெளியில் இருந்தே பார்க்க முடிந்தது. அதுவும் சிறிது நேரமே பார்க்க முடிந்தது. உடனையே ராணுவ அதிகாரிகள் வந்து ஈழத்தமிழர்களை முகாமுக்குள் செல்லுமாறு எச்சரித்தார்கள். அப்போது பெண்களின் தேகத்தை தொட்டு அவர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள். அதை பார்க்கவே கண்கூசியது. வேதனையாக இருந்தது.

ராணுவ அதிகாரிகள் அப்படி ஒழுங்கீனமாக நடந்து கொண்டாலும் அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாய் தமிழ்ப் பெண்கள் நடந்து சென்றனர். அப்படி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களுக்கு எதுவும் நிகழலாம். அதை உணர்ந்துதான் அவர்கள் கொடுமையை சகித்துக்கொண்டு, தங்களது நிலைமையை நினைத்து மெüனமாக சென்றனர்.

மற்றொரு முகாம் ஒன்றில் போருக்குப் பயந்து தஞ்சம் அடைந்த வாணி குமார் (25) என்ற பெண்ணை இலங்கை ராணுவ அதிகாரிகள் 4 மாதங்கள் அடைத்து வைத்து பாலியல் கொடுமை செய்துள்ளனர். சில நேரங்களில் அந்த பெண்ணை நீண்ட நேரம் வெயிலிலும் நிறுத்தி வைத்து கொடுமை செய்துள்ளனர். இப்படி இலங்கை முகாம்களில் ஈழத்தமிழ் பெண்களுக்கு எதிரான கொடுமையை சொல்லி மாளாது என்றார் அந்த மருத்துவர்.

ASK THAT KARUNANIDHI NOT TO CONDUCT TAMIL CONFERENCE IN COIMBATORE, HE IS ROOTCAUSE FOR ALL THE PROBLEMS.
By ravi
12/21/2009 5:10:00 PM

Mr Sivanesan, You should be one of paid servants by Ram through SL govt. If you are correct why press and sociel service organisations are not allowed their. Many of the real human beings would like to immediately visit EELAM can you get permission. Pl if you can't be human atleast don't be animal.
By GURU
12/21/2009 5:04:00 PM

The so called leaders who got power and money by utilising the words Tamil and tamil people should think over whether they keep their words. It is a great injustice on women that will call for worldwide protest from women organisation. Let our tamil 'champions' see this and react.
By U.Meyyappan
12/21/2009 4:23:00 PM

இலங்கை அரசும் இராணுவமும் இப்படியெல்லாம் நடந்துகொண்டதால்தான் தமிழர் போராட்டமே தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்டு, தலைவர் அமிர்தலிங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது...வாழ்க பிரபாகரன், வெல்க தமிழ் ஈழம்!
By Ravi Iyer
12/21/2009 3:42:00 PM

Kamban irunthirunthal intha kodumaikum avan oru iylangai ithigasam yelutiiruppan. Iylangai thamilargale Inthia thamilargalai nambathirungal. Vellayane veliyeru yentu ottumotha Indiave pongiyellunthathu andu. Aanal vellayan pongi yelunthirukiran unakaga indu. Thalaravidathe un Nambikayai yendum. Ovorunaalum poradu Orunaal unaku varum. Vetti Nichayam Idu veda Sathiyam. Iyeelam Malarum Nichayam.
By kumari tamilan
12/21/2009 1:38:00 PM

than vinay thannai chudum murpahal seyyen pirpahal vilayum,
By R.Krishnamurthy.M.A.M.Ed.
12/21/2009 1:37:00 PM

இந்தியா அகிம்சை பிறந்த ஜனநாயக நாடுதானே! பிறகு என்ன வெங்காயத்துக்கு இவ்வளவு பெரிய ராணுவம்? பாகிஸ்தான், சீனா போன்ற எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்வதற்காகதான் இந்திய ராணுவம் என்றால் சிங்கள எதிரியிடமிருந்து தமிழர்கள் தங்களை காத்துக் கொள்ள பிறந்ததுதான் புலிப்படை. உங்களுக்கு ஒரு சட்டம்? எங்களுக்கு ஒரு சட்டமா?
By நவீன் சென்னை
12/21/2009 1:16:00 PM

srilankan tamils please understand that we (Tamilnadu) also suffering lost 40 years due to the karunanidhi. His fox politics, family politics, vialent politics, cine made made lot of dame in our tamil culture. So dont expect this bleddy old man will support to elam tamil.
By Tamilachi prema
12/21/2009 1:14:00 PM

கற்பு பத்தி கவலை இல்லாமல் கருணையுடன் விலை பேசி விற்கும் முதேவி கருணா கும்பல் இருக்கும் வரை ஈழ தமிழர்கள் மட்டும் அல்ல தாய் தமிழர்களையும் இந்த கருணா கும்பல் விலை பேசி விற்கும் . ஒரு வெள்ளைக்காரனுக்கு இருக்கும் மனிதாபிமானம் தேவடியாள் சோனியா,வேசி மக்கள் கருணா கும்பலுக்கு இல்லையே?!.தாய் தமிழக மக்களே பொங்கி எழுங்கள் .நாம் அனைவரும் விடுதலைபுலியாக மாறுவோம்.ஈழ தாய்மாரின் கற்பை காப்போம் .இல்லையேல் செத்து மடிவோம். தமிழக கல்லூரி இளம் வாலிப சிங்கங்களே சிலிர்த்தேழுங்கள் தாய்மார்களின் கற்பை காப்பதற்கு.பேடி சிங்கழனை தோற்கடிக்க.
By T.Selvan,nellai.
12/21/2009 12:59:00 PM

Who is this doctor. There are lot of other SL professional who has visited Srilanaka after 18 years giving different opinion. This kind of news are reported in TN police stations too. Do we need to wite a racisit comment or do we need to register a complaint and punish the culprits. Human rights groups allways support anti socials. This is what we have seen in India. No difference everywhere.
By B Sivanesan
12/21/2009 12:57:00 PM

இப்படி நடக்கும் என்று தெர்ந்ததால்தான் அனைவரும் குடும்பம் குடும்பமாக புலிகளுடன் கூடவே சென்றார்கள். கற்பு என்றால் என்னவென்று தெரியாத சேட்டு முண்டங்களும், மலையாளிகளூம், பார்ப்பனர்களும் புலிகள் மக்களை மனித கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று ஓலமிட்டனர். இந்த செய்திக்கு மட்டும் எச்சக்கலை சிங்கள, ரா ஓட்டுண்ணிகளை காணவில்லை?
By usanthan
12/21/2009 12:53:00 PM

இலங்கை அரசும் இராணுவமும் இப்படியெல்லாம் நடந்துகொண்டதால்தான் தமிழர் போராட்டமே தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்டு, தலைவர் அமிர்தலிங்கத்தால் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் தன்னால் எல்லாம் முடியும் என்று ஒரு கேணைப்பயல் எல்லோரையும் கொன்று, முடிவில் தானும் எதிரியிடம் மண்டியிட்டு மடிந்ததால்தான் இப்படி நடக்கின்றது.
By Ravi
12/21/2009 12:32:00 PM

தமிழன் என்றல் இந்தியாவில் மரியாதையை இல்லை நாம் தமிழர் தமிழர் என்று சொல்லி கொண்டோ இருக்க வேண்டியது தான் தமிழனுக்குல் ஒற்றுமை இல்லை ஆந்திராவை பாருங்கள் தெலுங்கான பிரிவினைக்கு எதிப்பு ஒரு குரலில் உள்ளது அனால் நமது தமிழன் ஈழம் பிரச்சனையில் ஒரு அணியில் ஒரு குரலில் இல்லை வேதனை...! புலம் பெறிந்த தமிழர்களே தமிழ் நட்டு தமிழனை இந்திய தமிழனை நம்பாதீர் இவர்களுக்கு தன தமிழ் இனம் மீது அன்பு, பாசம் இல்லை இலங்கையில் தமிழன் அழிவதை கண்டும் மனம் மாறாத மூடர்கள் - சாம் தமிழ் நாடு
By Sham
12/21/2009 11:52:00 AM

Dinamani please also highlight news on Tamil girls/Ladies under going sexual crimes by Braminss. You have not even given single news against Bramins. Is that all Bramins are pure. What happen to the news of Kanchipuram sex scandal by a the so call agent between god and people. What happened to news of Chennai god's agent sex scandal. Please write about that also. Don't be partial in highlighting Tamils in SriLanks only. Tamils in TN also undergoing sex crimes because of Bramins and powerful people highlight that also.
By AV Raman
12/21/2009 10:07:00 AM

தன் மீது உள்ள களங்கத்தை போக்குவதற்கு, தன்னை சுற்றி இருக்கின்ற ஜல்றகளின் உதவியுடன் செம்மொழி மாநாடு நடத்த முற்படும் "தமிழின தலைவர்" என்று தனக்கு தானே பட்டம் சுட்டிகொடிருபவர். இதுமாதிரியான சம்பவங்களை கேட்டு அறிந்தபின்பவது, உரிய நடவடிக்கை எடுத்து அவர்மீது உள்ள பழிச்சொல்லை போக்கிக்கொள்ள முயற்சி செய்யலாம். மனிதாபிமானம், மனித நேயம் என்று பேச்சிலும் எழுத்திலும் காட்டுகின்ற இந்த தலைவர் செயலில் இப்பொழுதாவது இறங்கலாம். இறங்குவர?????,
By PANDIAN
12/21/2009 9:20:00 AM

வவுனியா முகாம்களில் பல பாலியல் உறவுகள் இடம்பெற்றன. அங்கு எதுவும் நடக்கவில்லை என்று என்னால் கூறமுடியாது. ஏனென்றால் நான் அங்கு இருக்கவில்லை. தனித்தனியாக பாலியல் முறைகேடுகள் அங்கு நிகழ்ந்திருக்கலாம். இவற்றை எமக்குத் தெரியப்படுத்தினால் இவை தொடர்பான விசாரணைகளை நாம் முன்னெடுப்போம். வவுனியா முகாம்களில் உள்ள கூடாரம் ஒன்றிற்குள் இரவு 11:00 மணிக்கு நுழைந்த எமது படைவீரர் ஒருவர் அதிகாலை 3:00 மணிக்குப் பின்னரே வெளியில் வந்ததாக எமக்கு ஒரு அறிக்கை கிடைத்தது. மகிழ்வடைவதற்காக அவர் பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கலாம். சலுகைகளுக்காகவும் அவர் பாலியல் உறவில் ஈடுபட்டிருக்கலாம். அல்லது அங்கு கிரேக்க தத்துவம் தொடர்பாக மட்டும் பேசப்பட்டிருக்கலாம். என்ன நடந்தது என்பது எமக்கு தெரியாது." என்றார் சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சின் செயலர் ரஜீவ விஜயசிங்க.
By Eddappan
12/21/2009 9:01:00 AM

இப்படி நடக்கும் என்று தெர்ந்ததால்தான் அனைவரும் குடும்பம் குடும்பமாக புலிகளுடன் கூடவே சென்றார்கள். கற்பு என்றால் என்னவென்று தெரியாத சேட்டு முண்டங்களும், மலையாளிகளூம், பார்ப்பனர்களும் புலிகள் மக்களை மனித கேடயமாக பயன்படுத்துகிறார்கள் என்று ஓலமிட்டனர். இந்த செய்திக்கு மட்டும் எச்சக்கலை சிங்கள, ரா ஓட்டுண்ணிகளை காணவில்லை?
By நவீன் சென்னை
12/21/2009 9:01:00 AM

The SAME IS GOING TO HAPPEN TO MAIN LAND FOR ONLY TAMIL SPEAKING PEOPLE (MOST OF THE THE PEOPLE IN TN ARE HAVING ANOTHER LANGUAGE TO SPEAK, THAT IS WHY THEY ARE VOTING TO THEIR PEOPLE AND ENJOYING THE PLIGHTS OF TAMILS). iN THIS MODERN TIME AGAIN HISTORY REPEATS AS CONCENTRATION CAMPS.
By Afraid to Be an INDIAN
12/21/2009 8:36:00 AM

கடைசியாக தமிழ்த் தலைமகன் விருதினை சூடிக்கொண்ட கருணா இந்த செய்திய படிப்பாரா?
By bala
12/21/2009 8:25:00 AM

Karunanithy and family will not care even if their mother and sisters are raped as long as they get bribes, power and position. They are so immune because it is well hnown fact they did the same crimes. I very sad why other Tamil blood is not boiling? I wonder whether most of Tamil Nadu Tamils eat saltless food?
By Ram Chetty
12/21/2009 8:21:00 AM

What the fukin india doing all tamils should come to gether against india this is the time
By charlesraj
12/21/2009 6:53:00 AM

யார் எப்படிப் போனால் என்ன? தமிழினம் சீரழிந்தால் என்ன? நாங்கள் விருதுகளை வாங்கிக் கொண்டு விழாக்களை நடத்திக் கொண்டிருப்போம். கொலைகாரர்களுடன் கூடிக் குலாவிப் பதவிகளை வாங்குவோம். தமிழுணர்வை நாங்கள் உயர படிக்கட்டுகளாகப் பயன்படுத்திக் கொள்வோமே தவிர உண்மையான தமிழ் உணர்வு நிலைக்க யாதும் செய்ய மாட்டோம்.உட்கட்சியிலும் வெளிக்கட்சிகளிலும் உள்ள எதிர்ப்புகளைச் சமாளிக்கவே எங்களுக்கு நேரமில்லாத பொழுது இதிலெல்லாம் எப்படி கவனம் செலுத்த முடியும் என்று பரிவுடன் சிந்தித்துப்பார்க்க வேண்டும். இவையே தமிழக அரசியல்வாதிகளின் உட்குரல். வேதனையுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
12/21/2009 6:01:00 AM

யாழ் குடாவில் படையினர் கட்டும் பௌத்த மதவழிபாட்டுத் தலம் திகதி: 20.12.2009 // தமிழீழம் யாழ் குடாநாட்டில் உள்ள சிறீலங்காப் படையினர் அத்துமீறிய பௌத்த மதவழிபாட்டுத் தலத்தினை கட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். யாழ்ப்பாணத்தின் கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் ஒன்றாக விளங்கிய திருக்குடும்ப கன்னியர்மட பாடசாலை சந்தியில் சிறீலங்காப் படையினர் காவலரண் அமைத்து நிலைகொண்டனர். இதில் பாரிய சோதனைக் கண்காணிப்பு அரண்கள் அமைத்துள்ளார்கள். இதன்போது அரசமரம் நட்டு பௌத்த மத வழிபாட்டினை கடந்த காலங்களில் மேற்கொண்டார்கள். இப்பகுதி மக்கள் தற்போது இயல்பு வாழ்வினை எதிர்கொண்டுள்ள நிலையில் இப்பகுதியில் பாரிய புதிய கட்டடம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளார்கள். மக்களிடமோ அரசாங்க அதிகாரிகளிடமோ அனுமதி இல்லாமல் கிறிஸ்தவ மத மக்கள் செறிந்து வாழும் இப்பிரேசத்தில் சிறீலங்காப் படையினர் அத்துமீறி பௌத்த மதவழிபாட்டு தலம் கட்டுவதால் இப்பிரதேச மக்கள் அச்சமடைந்துள்ளார்கள்.
By Thamil
12/21/2009 1:59:00 AM

திருமலை மாவட்டத்தில் சில வங்கிகளில் கடமைபுரியும் தமிழ் பெண்கள் மீது வலுக்கட்டாயமான முறையில் சிங்கள கலாசார பாரம்பரியங்கள் திணிக்கப்படுவதாகத் தெவிக்கப்படுகிறது.இந்த வங்கிகளில் கடமை புரியும் தமிழ்ப் பெண்கள் தமது சமூகம் சார்ந்த உடைகளை அணியக்கூடாதெனவும் சிங்கள பாரம்பரிய உடைகளே அணிய வேண்டுமெனவும் அவர்களது நிர்வாகங்கள் நிர்ப்பந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது.தமிழ் வாடிக்கையாளர் வங்கிகளுக்குள் நுழையும் போது கூட "வணக்கம்' என்று சொல்வதற்குப் பதிலாக "ஆயுபோவன்'' சொல்ல வேண்டுமென்ற நிர்ப்பந்தத்துக்கும் உள்ளாகியுள்ளனர். இதேவேளை கந்தளாய் குளத்தைக் கட்டியவர் குளக்கோட்டன் என்பதனை மறைக்கும் வகையில் அந்தக் குளத்தைச் சிங்களவர் ஒருவரே கட்டியதாக வலிந்து எடுக்கப்பட்ட ஆதாரங்களுடன் பெயர் மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் நம்பகமான செய்திகள் தெவிக்கின்றன.
By Thamil
12/21/2009 1:54:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கனிமொழி பார்த்த அழகிய முகாம்கள்


கருணாநிதியின் மகள் கனிமொழியும் தி.மு.க(திருத்த முடியாத கள்வர்கள்) கழக எம்பிக்களும் கூட்டுக் களவாணி திருமாவும் சென்று பார்த்து மெச்சி உலகத் தரத்தில் அமைந்திருப்பதாகப் படம் காட்டிய வன்னி அகதி முகாம்கள் இப்படித்தான் இருக்கின்றன. இரண்டாம் உலக மகாயுத்த காலத்தில் யூதர்களுக்கு எதிரான சித்திரவதை முகாம்களில் நடந்ததற்கு சற்றும் குறைவில்லாத கொடுமைகள் நடாத்தப்படும் இடமாகவும் அதை நடாத்துகின்ற கொடுங்கோல் அரசாகவும் இருக்கும் சிங்கள சிறீலங்காவிற்கு முட்டுக் கொடுக்கும் கைங்கரியத்தைத் தான் அஹிம்சை இந்தியா செய்து கொண்டிருக்கின்றது. இதைத் தட்டிக் கேட்கும் விவஸ்தை இல்லாத நிலையில் தான் தமிழகத் தமிழர்கள். வெட்கக் கேடு.


வன்னிக் கொடும் போரில் இருந்து தப்பி வந்த பின்னர் தடுப்பு முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண்கள் சிறிலங்காப் படையினரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டனர்.

ஒருவேளை உணவுக்காகக் கூட படையினருடன் உறவு கொள்ளும் நிலைக்கு அவர்கள் உள்ளாக்கப்பட்டனர் என்று கூறுகிறார் ஒரு பிரிட்டிஷ் மருத்துவப் பணியாளர்.

வாணி குமார் என்ற இந்த மருத்துவப் பணியாளர் நான்கு மாதங்களாக இந்தத் தடுப்பு முகாமில் முட்கம்பி வேலிகளுக்குப் பின்னால் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

தமிழ் கைதிகள் சுட்டெரிக்கும் சூரிய வெய்யிலின் கீழ் முழங்காலில் மணிக் கணக்காக நிற்க வைக்கப்படுகி்ன்றனர்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்பானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் படையினரால் கொண்டு செல்லப்பட்டவர்களை - பின்னர் ஒருபோதுமே அவர்களது குடும்பங்களால் பார்க்க முடிந்ததில்லை என்றும் விபரிக்கிறார் வாணி.

வாணி கடந்த செப்டெம்பர் மாதமே விடுவிக்கப்பட்டார்; ஆனால், முகாம்களில் நடந்த கொடுமைகள் பற்றிய முழு விபரங்களையும் வெளியிடுவதற்கு அவர் இவ்வளவு காலமாகக் காத்திருந்தார்.

ஏனெனில், தான் வெளியிடும் தகவல்களால் ஆத்திரம் அடையும் படையினர் முகாமில் தன்னுடன் இருந்த தனது உறவினர்களையும் நண்பர்களையும் பழிவாங்கிவிடுவார்களே என்ற பயமே அதற்குக் காரணம்.

அனைத்துலக அழுத்தங்களைத் தொடர்ந்து சிறிலங்கா அரசாங்கம் இந்த மாதத் தொடக்கத்தில் முகாம்களைத் திறந்து விட்டதனால் வாணியின் உறவினர்களும் நண்பர்களும் இப்போது விடுவிக்கப்பட்டு விட்டனர்.

முகாம்களில் உடலியல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் மக்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் எனத் தெரிவிக்கும் ஐக்கிய நாடுகள் சபை அமைப்புக்களின் அறிக்கைகள் தமக்குக் கிடைத்துள்ளன என்பதை சிறிலங்கா அரசு உறுதிப்படுத்தி உள்ளது.

ஆனால், அத்தகைய குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்துவதற்கான வழிகள் ஏதும் இல்லை என்று அரசு தொடர்ந்து கூறி வருகின்றது; முகாம்களில் மக்கள் காணாமல் போனார்கள் என்பதையும் அரசு முற்றாக நிராகரிக்கிறது.

ஆனால், முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான மக்களின் நிலை குறித்த தகவல்கள் வெளியில் வருவதைத் தடுப்பதற்குத் தன்னால் முடிந்த அனைத்தையும் கொழும்பு செய்கிறது என ஐ.நா. பேச்சாளர் குற்றஞ்சாட்டுகின்றார்.

தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்கள் தவறாக நடத்தப்பட்டார்கள் என்பதை சிறிலங்கா அரசு தொடர்ந்து, உறுதியாக மறுத்து வருகின்றது.

ஆனால் - கொழும்பு அரசைத் திரும்பத் திரும்ப விமர்சித்து வரும் மனித உரிமை அமைப்புக்களுக்கு வாணியின் குற்றச்சாட்டு புதிய ஊக்கத்தைத் தரும்.

“அந்தத் தடுப்பு முகாம்கள் கொடுமையானவை; அங்கு மக்கள் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்வதற்குக்கூட அனுமதி இல்லை.

முட்கம்பி வேலிக்கு வெளியே செல்ல முடியாது; அவர்கள் வெளி உலகத்தில் இருந்து முற்றாகப் பிரித்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

படையினரால் கொண்டு செல்லப்பட்டவர்கள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி அந்த மக்கள் யாருக்கும் சொல்ல முடியாதிருந்தது.

வெளியில் யாரும் அது பற்றி அறிந்து கொள்வதை அரசு விரும்பவில்லை.

பாலியல் துன்புறுத்தல்கள் அங்கு சாதாரணமானவை; அதனை நான் நேரடியாகவே பார்த்துள்ளேன்.

படை ஆட்கள் பெண் பிள்ளைகளின் மீது கைகளைப் போடுவார்கள்; அடுத்தவர்கள் முன்னிலையிலேயே அவர்கள் இதைச் செய்வார்கள். அது மாதிரியான சிலவற்றை நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன்.

தமிழ்ப் பெண் பிள்ளைகள் பொதுவாகவே பாலியல் முறைகேடுகள் பற்றிப் பேச விரும்புவதில்லை. அப்படி அவர்கள் ஏதாவது பேசினால் முகாம்களில் அவர்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும்.

அதே நேரம் - நிவாரணப் பணத்திற்காகவும் உணவிற்காகவும் தம்முடன் பாலியல் உறவு கொள்ளும் நிலைக்குத் தமிழ்ப் பெண்களை சிறிலங்காப் படை அதிகாரிகள் உட்படுத்தினர்கள்; அந்த மக்கள் விரக்தியின் விளிம்பிற்குப் போய்விட்டார்கள். அவர்கள் எல்லாவற்றிலுமே நம்பிக்கையிழந்து போய் இருக்கிறார்கள்.

தாம் நடத்தப்படும் விதம் குறித்து யாராவது முறையிட்டால் அவர்கள் படையினரால் தனிமைப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள்.

ஒரு தடவை - ஒரு வயதான நபரை படை அதிகாரி ஒருவர் உதைந்து தள்ளியதை நான் நேரில் பார்த்தேன். அவர்களுக்கு இடையில் என்ன வாக்குவதாம் நிகழ்ந்தது என்பது எனக்குத் தெரியாது; ஆனால் அந்த மூத்தவரை படை அதிகாரி பின்னால் இருந்து உதைத்தான்.

அதே பகுதியில் சுட்டெரிக்கும் சூரியனின் கீழே மக்கள் மண்டியிட்டு நிற்க வைக்கப்பட்டிருந்தார்கள்; தமது உணவுக்காக படை அதிகாரிகளுடன் வாக்குவாதப்பட்டதே அவர்கள் செய்த குற்றம்.

சில சமயங்களில் மணிக்கணக்காகக் கூட அவர்கள் இவ்வாறு நிறுத்தப்பட்டார்கள்” என்று நிலைமையை விபரிக்கிறார் வாணி.

சில சமயங்களில் "வெள்ளை வான்"கள் முகாமிற்குள் தோன்றும். அதில் ஆட்களை அவர்கள் பிடித்துச் செல்வார்கள். "வெள்ளை வான்" என்பது சிறிலங்காவில் ஒரு பயங்கரத்தின் குறியீடு.

கொலைகாரக் கும்பல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் கடத்தப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பங்களுடன் அவற்றுக்குத் தொடர்புகள் உண்டு.

“விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் இருந்தால் கூறுமாறு படையினர் கேட்பார்கள்; அப்படியானவர்களின் பெயர்களைக் குறித்துக் கொள்வார்கள்; அதன் பின்னர் - "வெள்ளை வான்" வந்து குறிப்பிட்ட நபர்களைக் கொண்டு சென்றுவிடும்.

அதன் பின்னர் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பது யாருக்குமே தெரியாது. இவ்வாறு கொண்டு செல்லப்பட்ட தமது குடும்ப உறுப்பினர்கள் ஏராளமானோரை மக்கள் இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது எனக்குத் தெரியும்” என வாணி கூறுகிறார்.

“முதல் இரண்டு மூன்று நாட்கள் முகாமி்ல் நான் தனியாக இருந்தேன்; இப்போது நினைத்தாலும் பீதியாக இருக்கிறது. அந்த முகாமை வந்தடைந்ததும்,என் பைகளைக் கீழே எறிந்துவிட்டு நான் கதறி அழுதேன். அந்த உணர்வுகள் என்றும் என்னை விட்டுப் போகாது.

முகாமில் இருந்த நாட்களில் எனக்கு என்ன நடக்கப் போகிறது என நினைத்து நான் பயந்ததை மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்கவே நான் தயாராயில்லை.

முதல் சில நாட்கள் - இது கனவா அல்லது உண்மையிலேயே நடக்கிறதா என்று கூட நினைத்துக் கொண்டேன். எனது முகாம் வாழ்க்கை முடிவுக்கு வரும் என்று நான் ஒருபோதும் நினைத்திருக்கவில்லை” என்கிறார் வாணி.

கடுமையான வெப்பத்தில் இருந்து தப்பிப் பிழைக்க மெல்லிய நெகிழிக் கூரைகளின் கீழ் லட்சக்கணக்கான மக்கள் நெரிசல்பட்டுக் கிடந்தனர்.

கழிவறைகளிலும் தண்ணீர் வசதி தேவைக்கு ஏற்ற அளவில் இருக்கவில்லை; உணவும் குடிதண்ணீரும் கூட மிகக் குறைவாகவே வழங்கப்பட்டன.

“திறந்த வெளியில் மற்றவர்களின் முன்பாகவே தான் குளிக்க வேண்டும்; எனக்கு அது பெரும் சங்கடமாக இருந்தது.

எனது கூடாரம் படையினரின் ஒரு நிலைக்கு அருகே இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் நான் குளிக்கும் போது படையினர் பார்த்துக் கொண்டிருப்பார்கள்; யார் குளித்தாலும் அப்படித்தான்.

அதனால் நான் அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து குளித்து விடுவேன்; ஏனென்றால் அப்போது இருட்டாக இருக்கும். நாம் குளிப்பது அடுத்தவருக்குத் தெரியாது” என வாணி தனது வேதனையைக் கொட்டினார்.

“அந்த முகாம்களுக்குள் மனிதர்கள் வாழவே முடியாது. அதற்கான அடிப்படைகள் எதுவுமே அங்கு இல்லை. அடிப்படைத் தேவைகளான உணவுக்கும் தண்ணீருக்கும் எப்போதுமே பிரச்சினைதான்.

பெரும்பாலான நேரங்களில் தண்ணீருக்காக நீண்ட வரிசையில் காத்து நிற்க வேண்டும்.

கழிப்பிடங்களோ மிகப் பயங்கரமானவை; அங்கு கூட போதிய தண்ணீர் கிடையாது; அவற்றைத் துப்பரவு செய்வது முடியாத காரியம். அதனால் நோய்க் கிருமிகள் எங்கும் பரவின.

ஒரு கட்டத்தில் - இரண்டு மூன்று நாட்கள் பெய்த மழையில் மலக் கழிவுகள் அனைத்தும் தண்ணீரில் கலந்து கூடாரங்களுக்குள் புகுந்துவிட்டன

முழங்கால் அளவுக்கு இருந்த அந்த மலக் கழிவுத் தண்ணீரில் தான் அனைவரும் நடந்து செல்லவேண்டும்” என்கிறார் அவர்.

முகாம்களில் நடந்த முறைகேடுகள் பாலியல் கொடுமைகள் மற்றும் தண்டனைகள் குறித்துத் தான் அறிந்திருப்பதாகக் கூறும் சிறிலங்கா அரசு, இருப்பினும் அவை பெருமளவில் நிகழவில்லை என்று மறுக்கிறது.

அந்த தடுப்பு முகாம்களுக்கு உள்ளே “பெருமளவு பாலியல் உறவுகள் நடந்துள்ளன” என்கிறார் பேரிடர் முகாமை மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளர் ராஜீவ விஜேசிங்க [ Rajiva Wijesinha, the permanent secretary to the Ministry of Disaster Management and Human Rights ].

ஆனால், பெரும்பாலான பாலியல் கொடுகைள் முகாம்களுக்குள் இருந்தவர்களாலேயே அடுத்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“அங்கே எதுவும் நடக்கவில்லை என்று நான் உங்களுக்குச் சொல்ல முடியாது; ஏனெனில் நான் அங்கு இல்லை. அங்கொன்று இங்கொன்றாக சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம்.

அப்படி ஏதாவது நடந்திருந்தால் அதனை அறியத் தாருங்கள், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.” என அவர் மேலும் கூறினார்.

ஐ.நா. அமைப்பு ஒன்றிடம் இருந்த கிடைத்த அறிக்கை மூலமாக தான் ஒரு சம்பவத்தை அறிந்ததாக அவர் கூறினார்.

“படை ஆள் ஒருவர் கூடாரம் ஒன்றிற்குள் இரவு 11 மணிக்குச் சென்று அதிகாலை 3 மணக்குத்தான் திரும்பி வந்தார் என்று எமக்கு ஒரு அறிக்கை கிடைத்துள்ளது.

அது இரு தரப்பினரும் மகிழ்ச்சிக்காக உறவு கொண்ட சம்பவமாக இருக்கலாம்; அல்லது, ஏதாவது தேவை கருதிய ஒரு பாலியல் உறவாகக் கூட இருக்கலாம்; அதுவும் இல்லாவிட்டால் - பண்டைய கிரேக்கத் தத்துவங்கள் பற்றி அவர்கள் இரவு முழுவதும் விவாதித்தும் இருக்கலாம். எங்களுக்குத் தெரியாது” என்று எகத்தாளமான பதில் வருகிறது அவரிடம் இருந்து.

தினமணியின் குழறுபடி

அதே செய்தியைத் தினமணி இவ்வாறு திரிபு படுத்தியுள்ளது. செய்தி வெளியிட்ட பெண்ணையே கற்பழிப்புக்குள்ளாக்கப்பட்ட பெண்ணாக்கி செய்தியை சுவை கூட்டியுள்ளனரா? இது தான் அவர்களின் பத்திரிகை தர்மமா?

தினமணியின் செய்தியின் படி,

முகாம்களில் உள்ளவர்களை பார்வையாளர்கள் அருகில் சென்று பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட இடைவெளியில் இருந்தே பார்க்க முடிந்தது. அதுவும் சிறிது நேரமே பார்க்க முடிந்தது. உடனையே ராணுவ அதிகாரிகள் வந்து ஈழத்தமிழர்களை முகாமுக்குள் செல்லுமாறு எச்சரித்தார்கள். அப்போது பெண்களின் தேகத்தை தொட்டு அவர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள். அதை பார்க்கவே கண்கூசியது. வேதனையாக இருந்தது.

ராணுவ அதிகாரிகள் அப்படி ஒழுங்கீனமாக நடந்து கொண்டாலும் அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாய் தமிழ்ப் பெண்கள் நடந்து சென்றனர். அப்படி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களுக்கு எதுவும் நிகழலாம். அதை உணர்ந்துதான் அவர்கள் கொடுமையை சகித்துக்கொண்டு, தங்களது நிலைமையை நினைத்து மெüனமாக சென்றனர்.



தமிழ் வாணி

மற்றொரு முகாம் ஒன்றில் போருக்குப் பயந்து தஞ்சம் அடைந்த வாணி குமார் (25) என்ற பெண்ணை இலங்கை ராணுவ அதிகாரிகள் 4 மாதங்கள் அடைத்து வைத்து பாலியல் கொடுமை செய்துள்ளனர். சில நேரங்களில் அந்த பெண்ணை நீண்ட நேரம் வெயிலிலும் நிறுத்தி வைத்து கொடுமை செய்துள்ளனர். இப்படி இலங்கை முகாம்களில் ஈழத்தமிழ் பெண்களுக்கு எதிரான கொடுமையை சொல்லி மாளாது என்றார் அந்த மருத்துவர்.



http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=World&artid=171842&SectionID=131&MainSectionID=131&SEO=&Title=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88

Sunday, December 20, 2009


தமிஷிஸ் நடாத்தும் பன்னிகளுக்கு


குறிப்பு:மெல்லிதயம் கொண்டவர்கள் இதைப் படிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.

பதிவுலக அனுபவத்தில் பழம் தின்று கொட்டை போட்ட எனக்கே ஏற்பட்ட அனுபவத்தின் பகிரல் தான் இது. எழுதவேண்டும் என்ற எண்ணத்தில் அதிக நாட்கள் ஊறலெடுத்த விடயமும் இது தான். தமிழ் மணத்திரட்டிகள் மொட்டு விட்ட காலத்தில் இருந்தே எழுத வெளிக்கிட்ட வியாதிகள் நாங்கள் தான். காசியின் ஓசி முயற்சி மற்றும் மதியக்காவின் "அடங்கொக்கா மக்கா" எல்லா அனுபவங்களையும் தாண்டி ஏதோ ஒரு பொழுதில் விளைந்தது தான் இந்த தமிழிஷ். என் அனுபவத்தின் பாதி இல்லை.. அரைக்கால் கன்றுக்குட்டிகளின் ஜில்ஜூபிதான் தமிழிஷ்.

பெரிய தேர் ஓடிய தெரு நாய் போன்று இன்று குரைத்துக் கொண்டிருக்கின்றது. ஒரு தொகுப்பு ஊடகமாக தோற்றங்காட்டிக் கொண்டு இன்று இந்திய வெள்ளாந்தி அரசியலை முன்னிறுத்தி அகண்ட பாரதக் கனவினை ஈழத்துத் தெருக்களில் ஏலம் விட்டுக் கொண்டிருக்கின்றது.

ப்போர்பஸ் ஊழல் "குரோவ்ஸ்கியின் வைப்பாட்டியா சோனியா?" என்ற பதிவைத் தொடர்ந்து எந்த வித ஜனநாயக முன்னறிவித்தலும் இல்லாது எனது "இட்டாலிவடை"யை இடை நிறுத்தியது.

கால் தடக்கினால் கூட"கல் தடக்கியது" என்று ஒரு காரணத்தைக் கூறுகின்றோம். அப்படிக் கூட ஒரு காரணம் கூற வேண்டும் என்ற பிரக்ஞை இல்லாத பிரகிருதிகள் தான் தமிழிஷ் நடாத்தும் கயவாணிகள். இவர்கள் ஈழம் அதன் போராட்டம் என்பதற்கு எதிரானவர்கள்.ஈழத்தவர்களே! ...தமிழர்களே!... கவனித்துக் கொள்ளுங்கள்.

இங்கிலாந்தின் தெருக்களில் மதுச்சாலைகளில் காபரே நடனமாடிய விபச்சாரி இந்திராவின் மகனைக் கவிட்டு விட்டால் அவள் விபச்சாரி என்ற அந்தஸ்த்தை விட்டு குலமகளாகி விட முடியுமா?

இதை எழுதினால் அல்லது கேள்வி கேட்டால் இந்த தமிழிஸ் விபச்சாரிகள் பெற்ற மக்களுக்கு ஏன் ரோஷம் பொத்துக் கொண்டு வருகின்றது? இன்று சோனியாஜி என்று இந்திய முட்டாள்களால் அழைக்கப்படும் இந்த முன்னாள் காபரே டான்ஸர் எட்விஜ் அன்டோனியா அல்பனா மைனோவின் வாழ்க்கை வரலாற்றைத் தெரியாத பாசாங்குக் காரர்களா இந்த தமிழிஸ் நிர்வாணிகள்?


1946 டிசம்பர் 9 ஆம் திகதி இத்தாலி நாட்டிலுள்ள லூசியானா என்ற ஊரில் ஸ்டிஃபானோபௌலா தம்பதியருக்கு மகளாகப் பிறந்த எட்விஜ் அன்டோனியா அல்பனா மைனோவின் பின்னணி பற்றி இந்திய மக்கள்தொகையில் பத்து சதவிகிதம் பேருக்குக்கூடத் தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே. அது போகட்டும். காங்கிரஸ்காரர்களில் எத்தனை பேருக்குத் தெரியும் என்று நினைக்கிறீர்கள்? அன்டோனியா மைனோ எனப்படும் சோனியா காந்தியின் தந்தை இத்தாலியின் சர்வாதிகாரியாக இருந்த முசோலினிக்கு மிகவும் நெருக்கமானவராகவும், அவரது கருஞ் சட்டைப் படையில் முக்கியத் தளபதியாகவும் இருந்தவர் என்பது நாம் அறியாத இரகசியம். முசோலினியின் பாசிசக் கட்சி இரண்டாம் உலகப் போரில் அழிந்த பிறகு, ஒரு கட்டட ஒப்பந்ததாரராக தன்னை மாற்றிக் கொண்டு தனக்கும் பாசிசக் கட்சிக்கும் இடையில் உறவு இருந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து மறைந்தார் அவர் என்பதும் யாரும் கவலைப்படாமல் விட்ட விடயங்களில் ஒன்று.

1964 இல் கேம்ப்ரிட்ஜ் நகரத்தின் ” பெல் கல்வி அறக்கட்டளை’ நடத்தி வந்த பள்ளியில் ஆங்கிலம் படிக்க லண்டன் சென்ற அன்டோனியா மைனோ அங்கேயே ஓர் உணவு விடுதியில் பணிப்பெண்ணாக வேலையில் அமர்ந்தார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உள்ள ட்ரினிட்டி கல்லூரியில் படிக்கச் சென்ற ராஜீவ் காந்தியும் நண்பர்களும் அடிக்கடி உணவருந்தச் செல்லும் மது குடித்து உல்லாசங் காணும் உணவு விடுதி அது. அங்கேதான் கண்கள் கலந்தன; இருவரும் கருத்தொருமித்தனர்; காதலித்தனர். இதுவும் பலருக்கும் தெரியாத விடயங்களில் ஒன்று.

அன்டோனியா மைனோவைத் தான் காதலிப்பதைத் தாய் இந்திரா காந்தியிடம் தெரிவித்தபோது, அவர் முதலில் தயங்கினார். இந்தியாவின் முதன்மைக் குடும்ப மருமகளாக ஓர் இத்தாலிப் பெண்ணா? என்கிற தயக்கம் தான் அது. இந்திரா காந்தியின் நெருங்கிய தோழியும் நடிகர் அமிதாப் பச்சனின் தாயாருமான தேஜி பச்சன் தான், ராஜீவின் காதலுக்காக இந்திராவிடம் போராடி அனுமதி பெற்றவர்.

அதுமட்டுமல்ல. அன்டோனியா மைனோ சோனியா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, ஒரு வருடம் தேஜி பச்சனுடன் அவரது வீட்டிலேயே தங்கினார். அங்கே, தேஜி பச்சன் அவருக்கு இந்தியப் பழக்க வழக்கங்கள், இந்தி பேச, நம் ஊர் சமையல் என்று எல்லா வகையிலும் பயிற்சி அளித்து நேரு குடும்பத்துக்கு மருமகளாகச் செல்லும் தகுதியை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அதற்குப் பிறகுதான், 1968 இல் சோனியா ராஜீவ் காந்தி திருமணம் நடந்து, அந்தத் தம்பதியர் இந்திரா காந்தி வாழ்ந்து வந்த சப்தர்ஜிங் சாலை வீட்டில் வலதுகால் எடுத்து வைத்து நுழைந்தனர். அரசியல் நாட்டமில்லாத ராஜீவ் காந்தி, தனது தம்பி சஞ்சய் காந்தியின் மரணத்துக்குப் பிறகு அரசியலுக்கு வந்ததும், தாய் இந்திராவின் மரணத்துக்குப் பிறகு பிரதமரானதும், 1991 இல் ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டுக்கு பலியானதும் அனைவரும் அறிந்திருக்கும் விடயம்.

கணவர் ராஜீவ் காந்தி முழுநேர அரசியல்வாதியாக மாறிய பிறகு, 1983 இல் தான் சோனியா காந்தி இந்தியப் பிரஜையானார் (1968 இல் திருமணம் நடந்து சுமார் 15 ஆண்டுகள் கழித்து என்னே தேசப்பற்று) என்பதும், இப்போதும் இத்தாலி இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் இரட்டைப் பிரஜையாகவும் தொடர்கிறார் என்பதும் நம்மில் சிலருக்குத் தெரிந்திருக்கும். பலருக்குத் தெரிந்திருக்காது.

சோனியா காந்தியைப் பற்றி நாம் அதிகம் தெரிந்து கொள்ளாத இன்னொரு விடயம்கூட இருக்கிறது. மகாத்மா காந்திக்கும் வினோபா பாவேக்கும் பிறகு இந்தியாவின் பெருவாரியான கிராமங்களுக்கும், இடங்களுக்கும் சென்று இந்தியாவின் மூலை முடுக்குவரை தெரிந்து வைத்திருக்கும் நபர் அநேகமாக சோனியா காந்தியாகத்தான் இருக்கும். மாமியார் இந்திரா காந்தி மற்றும் கணவர் ராஜீவ் காந்தியுடன் நிழலாக இவர் சுற்றியது போதாது என்று இப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவியாகச் சுற்றி வருவதும் அதற்குக் காரணம்.

1998 இல் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவியாகக் கூடாது என்று சரத் பவார் மற்றும் சங்மா போர்க்கொடி தூக்கியபோது, கண்கள் சிவக்க உதடு துடிக்கக் கோபமாக சோனியா காந்தி தில்லி அக்பர் சாலை காங்கிரஸ் தலைமையகத்திலிருந்து வெளியேறியதும், அன்றைய காங்கிரஸ் தலைவர் சீதாராம் கேசரி அவரைக் கதறி அழுதபடி பின்தொடர்ந்து சமாதானப்படுத்த முற்பட்டதும் இப்போது பலருக்கும் மறந்திருக்கும். அதேபோல, 1999 இல் ஜெயலலிதாவின் ஆதரவுடன் அன்றைய வாஜ்பாய் அரசை ஒரு வாக்கில் நம்பிக்கைத் தீர்மானத்தில் தோற்கடித்து, தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்று குடியரசுத் தலைவர் நாராயணனிடம் பட்டியலுடன் போனதும், தான் அவருக்கு ஆதரவு தருவதாகச் சொல்லவில்லை என்று முலாயம்சிங் யாதவ் கூறி சோனியாவின் பிரதமர் கனவைக் குலைத்ததும் இப்போது பலருக்கும் மறந்திருக்கும்.

அன்றும் இன்றும் தன்னையும் தனது குடும்பத்தையும் பற்றிய விடயங்களையும் இரகசியமாகப் பாதுகாக்கும் சோனியா காந்தியின் பலம்தான் என்ன?


இத்தனை மாச்சரியம் உள்ள மாட்டுப் பொண்ணைப் பற்றி எழுதியதால் தான் தமிழிஸ் அம்பிகள் " இத்தாலி வடை" யைத் திரட்டுவதில் இருந்து தவிர்த்துக் கொண்டார்கள்.

அம்பிகளே உங்கள் காலம் முடிகின்றது என்பதற்கு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்தப் பயம் தான் முன்னுதாரணம் ஆகப் போகின்றது. ஜாக்கிரதை.....

தமிழீழமும் தமிழ் பதிவர்களும்


நீண்ட நாட்கள் பதிவு போடாது பார்வையாளர்களாக இருப்பதிலும் ஒரு நன்மை இருக்கின்றது. பதிவுகளை வாசிப்பதற்கு நேரம் கிடைக்கின்றது. வாசித்ததில் ஈழத்தமிழர்களின் எழுத்துக்களை மட்டும் விமர்சிக்கும் எண்ணம் எழுந்திருக்கின்றது.

தமிழன் தோற்றானா? இல்லையா ? என்ற கேள்வி நெருடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நமது கோழைப்பதிவர்கள் சிலர் இரை மீட்டுக்கொண்டிருக்கின்றார்கள். அரசியல் என்பதே எதிரிகளை அழிக்கும் அறம் என்பதைப் புரியாத அல்லது எதிரிகளால் அழிக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளாதவர்கள். எதற்கும் நாம் எம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

இதை விட எந்த அரசியலும் இந்த உலகில் இல்லை. அது பல காரணங்களைச் சுற்றி இருக்கலாம். ஆனால் எல்லாக் காரணங்களும் தேச விடுதலை தனி மனித, இன விடுதலை என்பதன் முன்னால் செயலிழந்து போய் விடும்.

இதை எல்லா அராஜக வாதிகளும் புரிந்தே வைத்திருக்கின்றார்கள். அதனாலேயே புதிது புதிதாக புதிய உத்திகளில் படுகொலைகளை நடாத்திக் காட்டுகின்றார்கள்.

ஈழப்போரிலும் இந்திய வல்லாதிக்கமும் சிங்களப் பாசிசமும் இதையே நடாத்திக் காட்டின. ஆனாலும் பேசும் குரல்களை அடைத்து விட முடியவில்லை. ஆனாலும் சில பயந்தாங்கொள்ளிகளை மூச்சடைக்க வைத்தேயிருக்கின்றன. வடலி சயந்தன் போன்ற சில பின்னடைவு வாதிகளை பின்வாங்க வைத்திருக்கின்றன. இவர்கள் வில்லங்கம் வேலுப்பிள்ளை போன்றவர்கள். வாய்ச்சவடால் அடிப்பது இல்லையேல் ஓடி ஒழிப்பது. என்ற ஒரு யுக்தியுடன் ஜீவித்திருப்பவர்கள். சமுதாயத்தைப் பின் நின்று இழுப்பவர்கள். ஒதுக்கப்பட வேண்டியவர்கள். இப்போது இவர்கள் செய்வது ஒழிப்பது கோழைகளாக. அதே நேரம் கோழைகளாக ஒழிப்பதற்கான தங்கள் வீரதீரப் பராக்கிரம(தங்களை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்காக) சாட்டுக்களைக் கூறுவது.

மற்ற ஒரு கன்னை. எப்போதும் குறை சொல்லுபவர்கள். தாங்கள் செய்ய வேண்டியதை எப்போதும் சொல்லாதவர்கள் என்பதற்கு அப்பால் அவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றே தெரியாதவர்கள். இராயாகரன், இனியொரு போன்றவர்கள். மற்றவர்கள் தமிழ் நதி , சகாரா போன்றவர்கள். இவர்களுடன் விவாதிக்க இன்னும் இடம் இருக்கின்றது. தமிழ் மக்கள் சார்ந்து சிந்திக்கும் தன்மை உள்ளவர்கள்.

இனி கிலுகிலுப்பை போன்று ஜல்லி அடிக்கும் ஷோபா சக்தி, சுகன் போன்ற ஈரூடக வாழ்வியல்புள்ளவர்கள். புலியும் புலியல்லாததுமான வாழ்வில்லையேல் உயிர் வாழ முடியாதவர்கள்.வெறும் சரவெடிகள், ஊசிப்போன பட்டாசுகள். இவர்கள் களைகள். எடுத்து எரிக்கப்பட வேண்டியவர்கள்.

அதே நேரம் கொழும்பில் இருந்து வெளுத்து வாங்கும் லோஷன் போன்றோர் விலாங்குகள் போன்றவர்கள். மீனுக்குத் தலையையும் பாம்புக்கு வாலையும் காட்டும் இரண்டும் கெட்டான்கள். அவர்கள் நிலை புரிந்து கொள்ளக் கூடியதே.

ஆனால் இடையில் இருந்து புலுடா அரசியல் செய்யும் சிறீரங்கன்,எஸ்.குகநாதன் போன்றவர்கள் அள்ளி எறியப்பட வேண்டியவர்கள். தமிழரைப் பிடித்த நச்சுக்கிருமிகள்.

ஈழத்து நிலமை இப்படியிருக்க இந்தியத் தமிழர் என்று மார்தட்டிக்கொள்ளும் சில மூதேவிகள் எழுதிக் குவிப்பதை எந்தச் சாக்கடையில் அள்ளிப்போடுவது என்றே தெரியவில்லை. ஈழப்பயங்கரவாதிகளிடமிருந்து மீண்டு வந்திருக்கும் மக்கள் என்ற ரேங்கில் எழுத வெளிக்கிட்டிருக்கின்றார்கள்.

நர்சிம், ஐரோவதம் போன்றவர்கள் ஏதோ தாங்கள் தான் ஈழப் போராட்டத்தின் நியாய வாதிகள் போன்று அபிப்பிராயம் கூறுகின்றார்கள். தங்கள் மனைவிகளிடமே அபிப்பிராயம் கூற முடியாத பேமானிகளிடம் ஈழத்தமிழனின் எதிர்காலம் அடங்கிக் கிடப்பது எவ்வளவு துர்ப்பாக்கியம். பிரபாகரன் பற்றியும் அவர் போராட்டம் பற்றியும் அதற்கும் அப்பால் ஈழத்தமிழ் மக்களின் போராட்டம் பற்றியும் இவர்களிடம் நாம் எந்தக் காலத்திலும் அடகு வைக்கவில்லையே.

நண்பர்கள் போல் வேஷம் போட்டு அராஜகம் செய்யும் இவர்களிடம் எம் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். கருப்புக் கண்ணாடி கழட்டாத கருணாநிதியின் தொண்டரடிப் பொடியாழ்வார் போன்ற அபி அப்பாக்கள் எழுதுவதைக் கூடப் புரிந்து கொள்ளலாம். ஆனால் இவர்கள் அறிவு ஜீவிகள் போன்று போடும் வேடம் கலைக்கப்பட வேண்டியது.

உங்கள் தலைவன் ராஜீவ் உங்களுக்கு முக்கியமானதைப் போலவே எங்கள் பெண்களின் கற்பு எங்களுக்குப் பெரிதாகப் பட்டது. அதே இந்திய ஆமியினால் கற்பு பறி போன ஒரு ஏழைப் பெண்ணினாலேயே ராஜீவ் கொல்லப்பட்டான் என்பது ஏன் உங்களால் புரிந்து கொள்ளப்படவில்லை? உங்கள் வீட்டுப் பெண்டிரை நாங்கள் கற்பழிப்பதை ஏற்றுக்கொள்ளும் மனதிருந்தால் அந்தப் பெண் செய்தது தவறுதான்.

அவர்கள் இங்கு வந்து பதிவு போடுங்கள். உங்களுடன் எதிர்வாதம் செய்யாது தவிர்த்துக் கொள்கின்றோம். அகண்ட பாரதக் கனவு எங்கள் ஈழத்தின் எல்லைகளைக் கடந்து எப்போதும் விரிந்து செல்லப் போவதில்லை. அதைக் காலம் உணர்த்தும். ஏனெனில் எங்கள் உயிர் வாழ்தலுக்கான கடைசிப் போராட்டம் இதுவென்பதால் உயிரை மதியாத போராட்டம் தான் இங்கு எப்போதும் இருந்து கொண்டிருக்கும்.

Friday, December 11, 2009


உண்மைத் தமிழன கண்டு பிடிக்க...

உண்மைத் தமிழன்னா ..என்னாய்யா? நம்ம மரிதிப்பட்டி சேகர் சொல்லியிருக்காப்ல... கண்டுக்கிறதிற்கு என்னா மெஸர்மெண்ட் வைச்சிருக்காக... கடா மீசை வெச்சவனா? நம்ம திருமா போல... இல்லே தமிழு தமிழுன்னு கூவிக்கினு திரியிறவனா நம்ம கருப்புக்கண்ணாடி போல... அல்லது ரெயிலு தண்டவாளத்தில படுத்துக்கிரவனா?(ரெயிலு வராத நேரம்பார்த்து)..
இல்லே மறதி வியாதி தெளிஞ்சிக்கிர போது அல்லது தேர்தல் வரும்னு தெரியிற போது தமிழு,ஈழத்தமிழர்னு ஸ்டேஜ் ஷோ காமிக்கிரதா?

எப்பிடிய்யா ..கண்டு பிடிக்கிரது... அல்லது நம்ம பதிவர் உண்மைத்தமிழன் போல ஐ.டில்லாம் போட்டு நிரூபிக்கிரதா..? எப்பிடிய்யா..?

தமிழு தமிழுன்னு கூவிக்கூவி... உலகத் தமிழினத் தலைவன்னு பீலா காட்டுனவனெல்லாம் இப்போ ...சாயம் வெளுத்துப்போயி மஞ்சத் துண்டு போர்த்திகின்னு அலையிரான்...ஏன்யா இந்த வயசிலயும் உயிரோடு இருந்து நம்ம பிராணனை எடுக்கிரேன்னு மிந்தியெல்லாம் கோபம் பொத்துக்கின்னு வரும்... இப்பிடி இருந்தது தான் நல்லதின்னு இப்போ தோணுது..

இல்லாங்காட்டியும் இவங்க மொள்ளைமாரித்தனமெல்லாம் நமக்கு புரியாமயே போயிருக்கும்... காயிதம்னா என்னா...எப்பிடி எழுதிரது....மூணு மணி நேரம் மட்டும் எப்பிடி (காலைச் நாஷ்டாவிற்கும் மத்தியானச் சாப்பாட்டிற்கும் இடையில்) உண்ணாவிரதமிருக்கிறது... இதயம் அழுவுறது.. மனம் அழுவுறது...கண்கள் பனிக்கிறது..இப்பிடி எந்த வெண்டையும் தெரியாத அப்பிராணிகளா..? காந்தி, எம் ஜி ஆர் ரேஞ்சுக்கு கோயில் கட்டி கும்பிட்டுத் தொலைச்சிர்ப்போம்....

அப்பாடா இப்போ ஒரு சூடம்,தேங்கா, பழம் பாக்கு எல்லாம் மிச்சமாயிட்டு... இது தான்யா பகுத்தறிவு ..வாழ்க்கைன்கிறது... தானே தன் மேல் இருக்கும் வெங்காயத் தோலெல்லாம் உரிச்சுக் காட்டி அம்மணமாய் நிக்கிரது.... பார்ர்யா... ஒண்ணுமேயில்லே... பெரிய பருப்பின்னு எம் பின்னாடி ஓடியாந்தீங்களே...முட்டாளுங்க...பத்தாம் பசலிங்க..போயி ..உங்க ஜோலியைப் பாருங்கன்னு... புரிய வெக்கிரது...

எத்தனை பெரியார் பொறந்திருந்தாலும் இதையெல்லாம் சாதிச்சிருக்க முடிஞ்சிருக்குமா? தமிழ்நாட்டுக் காரனுக்கெல்லாம் "காசிருந்தா தான் ஓட்டுன்னு" கராரா பேசி கறக்கக் கத்துக் கொடுத்தது ...சாதனையில்லையா?

பெரியார் என்னா பகுத்தறிவு பேசி என்னா பிரயோசனம்... இதுக்காண்டியாவது ஒரு போஸ்தகம் போடனும்..."தி ரைஸ் அன்ட் போல்ட் ஆவ் கருப்பு கண்ணாடி"ன்னு. அப்புரம் துக்கிப் போட்டுடனும் ரெண்டு பேத்தையும் கூவத்தில. அப்புரமாவது கூவத்தைக் கிளீன் பண்ணுராங்களான்னு பார்க்கணும்...

நம்ம மரிதிப்பட்டி சேகரு சொன்னாப்பல.. திருமா.. உண்மைத் தமிழனா? எப்பிடி சேகரு கண்டு பிடிக்கிரது.... எனக்கொண்னும் அப்பிடி தோணலையே.. இத்தோ.. நம்ம கனிமொழி அம்மாவுக்கு காவலா சிறிலங்கா போனாரு..(போன ஆளுங்களிலேயே பெரிய மீசை வெச்ச ஆளு.. அசல் தமிழன்(?).. ..

ராஜ பக்க்ஷ .."ஏண்டா பேமானி ...நீ மட்டும் பிரபா கூட இருந்திருந்தீன்னா.. பன்னியைச் சுடுறாப்போல சுட்டுப்போட்டிருப்பேன்னு..." செம டோஸ் விட்டபோது ..நீ என்னா செய்திருக்கோணும்....

"எலே ..நம்ம வயலில ஏர் பிடிச்சு உழுதாயா? நாட்டு நட்டாயா..? நம்ம குலப் பெண்டிருக்கு ஒரு கொடம் தண்ணி பிடிச்சுக் கொடுத்தாயா..? வாசல் பெருக்கி கோலம் போட்டாயா? சாணி தட்டி வெரட்டி போட்டுக்கொடுத்தாயா?ன்னு " ஏதாவது சொல்லியிருக்கணுமில்ல..

அதை விட்டிட்டு டவுசர் நனைச்சுக்கிட்டு வந்த நீயெல்லாம் உண்மைத் தமிழனாடா?

உனக்கென்னடா பயம்? தமிழ் நாட்டு குழுவில விருந்து சாப்பிடப் போறீங்க.. அவன் ஏதோ கேட்டான்..நீயும் ஏடாகூடமா .ஏதாவது சொல்லியிருக்கலாம்ல... பயம்... குஷ்பு போல டான்ஸ் ஆடிப் பொழைக்க வந்த பொண்ணுங்க பேரில தான் உன் வீரம் எல்லாம்...சிறுத்தையாம்.. தெண்டியாம்.. எதுக்கடா உனக்கு மீசை..?

"சொளகால புலி அடிச்சு வெரட்டின வீரப்பொண்ணுக்காடா...நீயெல்லாம் பொறந்திருக்கே..."



விக்கிராங்க ..ஒண்ணொண்ணு வாக்கிட்டுப் போங்கையா...


சின்னச்சின்ன பொண்ணுங்கள்லாம் ஹெலி அடிச்சுக்கிட்டிருந்த ஊருக்குப் போயி ..டவுசரு நனைச்சுக்கிட்டு வந்த நீயா "உண்மைத் தமிழன்"?

ஏம்பா சேகரு.. எதை வெச்சுய்யா..இவனுகள்ல ...உண்மைத் தமிழன கண்டு பிடிக்கிரது...

Thursday, December 10, 2009


திருமாவிற்கு குஷ்பு சவால்..?

திருமா இப்போதெல்லாம் தெருமாவாக அலையவேண்டியதாகிவிட்டது என்றே தோன்றுகின்றது. கருணாநிதியோடு சேர்ந்து ஈழத்துத் தமிழர்களைக் கைவிட்டபோது இது புலியோ சிறுத்தையோ அல்ல வெறும் சருகுபுலி என்பது விளங்கியது. கருணாநிதியின் மகளுக்குக் காவலாக சிறிலங்கா சென்று ராஜபக்ஷேயிடம் "கடி" வாங்கியபோது வெறும் மீசை வைத்த வெள்ளாடு என்றே புரிந்தது.

"பெண்களுக்கு கற்பு கல்யாணத்தின் முன்னாலும் போகலாம்" என்று குஷ்பு அருளிய போது வெளக்கு மாற்றுடன் வீதியில் இறங்கிய இந்த மாஜி சிறுத்தை பின் மருவிய சருகு புலி அப்பால தாடி வைத்த வெள்ளாடு ..இப்போ நம்ம குஷ்பம்மா சவால் விடுறாங்க..

இந்த கருப்பு கண்ணாடி முன்னால என்னைப்போல சரிசமமா உட்கார்ந்து காட்டையா..? அப்ப நீ ஆம்பிள்ளே... திருமா மீசையை முறுக்கிக்கின்னு வருமா? இல்லே மகிந்த முன்னாடி நின்னு நனைஞ்சுகிட்டே வந்தா மாதிரி வருமா? பார்க்கலாம்..?




காலையில் தினத்தந்தியைப் பார்க்க நேரிட்டது. திரைப்படத் துறையினருக்கான தமிழ்நாடு அரசு விருது வழங்கும் விழா நேற்று நடந்திருக்கிறது. ரஜினிக்கு சிறந்த நடிகர் விருது, கலைஞர் தனக்குத்தானே தந்துகொண்ட சிறந்த உரையாடல் ஆசிரியர் (உளியின் ஓசைக்காம்) விருது போன்ற அபத்தங்களைப் பற்றி பேசி என்ன ஆகப்போகிறது? (வெட்கம் கெட்ட ஜென்மங்கள்)

விருது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் குஷ்பு! பெரியாரின் கொள்கைகள் என்பதை “பெரியாரின் கொள்ளைகள்” என்றும், உளியின் ஓசை என்பதை “ஒலியின் ஓசை” என்றும், குத்தகைதாரர் என்பதை “குத்துகைதாரர்” என்றும் பேச பார்வையாளர்கள் தரப்பில் இருந்து ஒரே கூச்சலாம். சிறந்த உரையாடல் ஆசிரியர் விருதுக்கு கலைஞர் பெயர் அறிவிக்கப்படும்போது, கலைஞர் பற்றிய புகழுரையை வாசிக்க முயன்ற குஷ்புவைத் தடுத்த அமைச்சர் பரிதி இளம்பழுதி (எங்கே சொதப்பிவிடுவாரோ என்ற பயத்தில்) தானே கலைஞரைப் புகழ்ந்து பேசி விருதை வழங்க ரஜினி, கமலை அழைத்திருக்கிறார். யாராக இருந்தாலும் பெரியாரைப் பற்றி தவறுதலாகப் பேசலாம். கலைஞரைப் பற்றி தவறாகப் பேச அனுமதிக்க முடியுமா, என்ன?


நன்றி:http://ponnusamypalani.blogspot.com/2009/12/blog-post.html

குறிப்பு: சேல கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு.. அதில் அம்பதென்ன?... எண்பதென்ன?

30 ஆயிரம் புதிய படைகளும் நோபல் பரிசும்

இப்போதெல்லாம் மனிதருக்கு விவஸ்தை என்பதே கிடையாது போய் விட்டது. ஏன்? எதற்காகச் செய்கின்றோம் என்று அறியாது செய்து விட்டு "தத்தக்கா பித்தக்கா"என்று அசடு வழிந்து கொண்டே சிரிப்பது வாடிக்கையாகி விட்டது. இந்தச் சுழியில் இப்போது அமிழ்ந்து கொண்டிருப்பது அமெரிக்காவின் முதல் மனிதன் பராக் ஒபாமா.

ஈராக்கில் படையை அனுப்பியது அராஜகம் செய்வது எல்லாம் "கெளபோய் புஷ்ஷின்" நிர்வாகம் செய்தது என்ற கோதாவில் ஒபாமா மீது அனுதாபம் இருந்தது சில நாள் முன்வரையில். பதவிக்கு வந்ததும் இராக்கில் இருந்து படையை எடுப்பேன். உலகத்தில் அமைதியைக் கொண்டு வருவேன் என்று முழங்கிய ஒபாமா சுழட்டிய வாளும் மொட்டை தான் என்பது அண்மையில் ஆப்கானிஸ்தானிற்கு மேலும் முப்பதினாயிரம் படையை அனுப்ப முடிவு செய்தபோது புரிந்தது.

அட்டைபோல் மக்களை உறிஞ்சிக் கொழுக்கும் பெரும் முதலாளிகளின் உலகம் எப்போதும் தட்டைதான். அது ஒபாமாவிற்காகவோ மற்றவர்களுக்காகவோ வளைந்து கொடுப்பதில்லை. இணங்கிப் போக வேண்டியது ஒபாமா போன்ற ஜனாதிபதிகளே. ஆணையிடுவது அவர்கள். நிறைவேற்ற வேண்டியது இவர்கள். அப்படித்தான் அமெரிக்க அரசியல் இருக்கின்றது.

இல்லாவிட்டால் இருக்கவே இருக்கின்றது ஒரு துப்பாக்கிக் குண்டும் ஒரு இராணுவ மரியாதையும். அடிமைகளை ஒழிக்க வெளிக்கிட்ட ஆபிரஹாம் லிங்கன் முதல் பல ஜனாதிபதிகளுக்குக் கிடைத்த பரிசு அது தான். அதிலிருந்து தப்பித்துக் கொள்ள இப்போதைய ஜனாதிபதிகள் அதிகம் கற்று வைத்திருக்கின்றார்கள். ஒத்துப் போகின்றார்கள்.

இரண்டு யுத்தங்களை (வெளிப்படையாகவும் மறைமுகமாக எத்தனையோ உறிஞ்சலுக்கான யுத்தங்கள்) நடாத்திக் கொண்டிருக்கும் ஒரு அரசின் தலைவருக்கு சமாதானத்திற்கான நோபல் பரிசு. கேலிக்கூத்தாகத் தெரியவில்லையா? சமாதானத்திற்கான யுத்தம் என்று முழங்கிய சந்திரிகாவிற்குப் போனது ஒரு கண். ஒபாமாவிற்கு இப்போது கிடைத்திருப்பது நோபல் பரிசு.

ஒபாமாவிற்குக் கிடைத்த நோபல் பரிசு உலக சமாதானத்தை எதிர்பார்த்து ஒபாமாவை வரவேற்ற உலக மக்களுக்கு அடித்த சாவு மணி. ஈழத்திலும், யுத்த காலக் குற்றம் ..அதற்கான விசாரணை என்று முழங்கிய அமெரிக்கா சுருதி பேதம் காட்டத்தொடங்கியிருக்கின்றது. இதுவும் இது போன்ற அண்மைய பல நிகழ்வுகளும் (தனி மனித சுதந்திரத்தை எப்போதும் அடக்கியொடுக்கும் சீனாவுடன் உறவு,சீனாவிற்கு எதிரான தைவான் தீபெத் ..மூச்) ஒபாமா என்ற தனி மனித அலை அடித்து ஓய்ந்து சருகாக அள்ளுப்பட்டுக் கொண்டு போவதன் ஆரம்ப அறிகுறிதான். இனி வழமை போலவே கோபமும் குரோதமும் குண்டுகளும் நிறைந்த வழமையான உலகில் வழமையான வாழ்க்கை தான் நம் எல்லோருக்கும்.


அனுப்ப/அடையாளமிட

Add-Tamil