ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, May 7, 2010


தம்மை அழித்தவர்களை ஈழத் தமிழர் பழிவாங்க வேண்டும் - நிராஜ் டேவிட்

ஈழத் தமிழர் மீதான அழித்தொழிப்பு யுத்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டு ஒரு ஆண்டு நெருங்கிக்கொண்டிருக்கின்றது. ஈழத்தமிழ் இனத்தின் வரலாற்றில் என்றைக்குமே மறக்கமுடியாத நாட்கள் அவை.
ஈழத் தமிழர்கள் ஒரு மூலைக்குள் முடக்கப்பட்டு பட்டினி போடப்பட்டு இரசாயனக் குண்டுகளாலும் கனரக ஆயுதங்களாலும் துடிக்கத் துடிக்க அழிக்கப்படதான ஒரு நிகழ்வு சுமார் ஒரு வருடத்தின் முன்னர் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டது.
கைகளில் வெள்ளைக்கொடியை ஏந்தியபடி சரணடையச் சென்றவர்களைக் கூட சகட்டுமேனிக்குச் சுட்டுத்தள்ளிய கொடுரம் அரங்கேறியிருந்தது. போர்க்கைதிகளை படுகாயப்பட்ட போராளிகளை இரக்கமின்றி கொலை செய்த கொடுமை நடைபெற்றிருக்கின்றது. குழந்தைகள் வயது முதிர்ந்தவர்கள் கர்ப்பிணிப் பெண்கள் என்று எந்த பரிதாபமும் இல்லாமல் சுமார் மூன்று இலட்சத்திற்கும் அதிகாமான அப்பாவித் தமிழ் மக்களை முற்கம்பி வேலிகளுக்குள் அடைத்து தனது வெற்றியைக் கொண்டாடிய அசிங்கம் எமக்கு நிகழ்ந்திருந்தது.
அனுப்ப/அடையாளமிட

Add-Tamil