ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, February 13, 2010


40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர் - பொய்களை சிறீலங்கா தெரிவித்தது


முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்கா அரச படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது 40,000 பொது மக்கள் வரையில் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என ஐ.நா. சபையின் பேச்சாளராக கொழும்பில் முன்னர் பணிபுரிந்த கோர்டன் வைஸ் தெரிவித்திருக்கின்றார்.
வைஸ் தெரிவித்திருக்கும் இந்தத் தகவல்கள் கொழும்பில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.

அவுஸ்திரேலியாவின் ஏ.பி.பி. நியூஸ் காணொலி நிறுனத்திற்கு வழங்கிய பேட்டி ஒன்றில், அனைத்துலக நாடுகளைத் தவறாக வழிநடத்தக்கூடிய தகவல்களை அல்லது பொய்களை அரசாங்கம் தெரிவித்தது எனவும் அவர் கடுமையாகக் குற்றஞ்சாட்டினார்.
அனுப்ப/அடையாளமிட

Add-Tamil