ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, May 13, 2009


தி.மு.க & தேர்தல் ரெளடீசம்


தேர்தல் ஜூரம் ஒரு வழியாக முடிவடைந்திருக்கின்றது. அத்துடன் தி.மு.க வின் ரெளடீஸம் பற்றியும் மக்கள் அறிந்து கொள்ள முழு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. அணைந்து போக முன்னர் சுடர் ஒரு முறை பிரகாசம் காட்ட முற்படும். அது அணைந்து போகாது காத்துக்கொள்ள எடுத்துக் கொள்ளும் பிரயத்தனம் மட்டுமே. ஆனால் அணைந்து போவது என்னவோ உறுதிதான்.

அத்தகைய ஒரு பிரயத்தனமாக மட்டுமே தி.மு.க வின் இந்த ரெளடீஸம் எனக்குப் படுகின்றது. நானும் நீங்களும் பிரவகிக்கும் கற்பனையில் சொல்வதல்ல இது. இது பத்திரிகைகளில் இன்று வந்த செய்தி. இதில் அத்துமீறல் அல்லது பொய்மை இருந்தால் இவர்கள் தாராளமாக எதிர்ப்புத் தெரிவிக்கலாம் அல்லது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

எடுக்க முடியாமலும் முழுங்க முடியாமலும் பேசாது இருக்கின்றார்கள்.ஆகவே இவர்கள் ரெளடிகள். தி.மு.க என்ற திருந்த முடியாத கள்வர்கள். மனிதம் பண்பாடு பற்றியெல்லாம் கவலையற்ற முரடர்கள். மக்களை முட்டாள்கள் என்று நினைத்து 21 ஆம் நூற்றாண்டிலும் குகை வாழ் மனிதர்களின் கற்கால வாழ்க்கையை தமிழகத்தில் கொண்டு வர முயலும் அறிவிலிகள்.

எனது வார்த்தைகள் காரமாய்த்தான் வந்து விழுகின்றது. இவர்களின் செயற்பாடுகள் பற்றிப்பார்க்கும் போது இவர்கள் எந்தவித நியாய தர்ம சட்டங்களுக்கும் அடங்க மறுக்கின்ற காட்டு மிராண்டிகளாய்த்தான் எனக்குப் படுகின்றது.

எனது வாதம் ஆதாரமானது. தனியவே இன்றைய தினமணியின் செய்திகளிலிருந்தே ஆதாரங்களைத் தருகின்றேன்.

இது ஜெயலலிதா:மத்திய சென்னை தொகுதிக்கு உட்பட்ட ஐஸ் ஹவுஸ் பகுதியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் புதன்கிழமை காலை வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை செலுத்திக் கொண்டிருந்தனர். அப்போது தி.மு.க. கும்பல் ஒன்று திடீரென்று வாக்குச் சாவடிக்குள் புகுந்து, கள்ள ஓட்டுப் போட முனைந்துள்ளது.

இதைத் தட்டிக் கேட்ட இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை பயங்கரமான ஆயுதங்களை கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதன் காரணமாக பலருக்கு வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அந்தப் பகுதியே போர்க்களம் போல் மாறியுள்ளது.

இதுதான் சிறுபான்மையினரை பாதுகாக்கும் செயலா? இவர்தான் சிறுபான்மையினத்தவரின் பாதுகாவலரா? இது தவிர, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் மீதும் தி.மு.க.வினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF.%E0%AE%AE%E0%AF%81.%E0%AE%95.%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88:+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&artid=MCKmqes1Ykw=&SectionID=Y5sg9YP0wPY=&MainSectionID=Y5sg9YP0wPY=&SectionName=fxYdOX|XTkn78kYi4tmBYw==&SEO=


இது ராமதாஸ்:ஹைதர் அலியையும், அவரது கட்சியினரையும் கள்ள ஓட்டுப்போட வந்த கும்பல் கடுமையாகத் தாக்கியுள்ளது. இதில் 6 தொண்டர்கள் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறைத் தாக்குதலும், இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போலீஸôரின் செயலும் கண்டிக்கத்தக்கது.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B2%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D:+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&artid=D7sL1zQYSOQ=&SectionID=Y5sg9YP0wPY=&MainSectionID=Y5sg9YP0wPY=&SectionName=fxYdOX|XTkn78kYi4tmBYw==&SEO=


சீல் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை மண்டல தேர்தல் அலுவலர்கள் திறந்ததால் ஆத்திரமடைந்த அதிமுகவினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போலீஸôர் தடியடி நடத்தை கூட்டத்தை களைத்தனர்.

திருப்பூர் தென்னம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குசாவடியில் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் அனைத்து கட்சியினர் முன்னிலையில் அலுவலர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பூட்டி சீல் வைத்தனர். இந்நிலையில், 3 வாக்குசாவடிகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மண்டல தேர்தல் அலுவலர்கள் செந்தில், விஜயகுமார் ஆகியோர் இரவு 8.30 மணிக்கு திறந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து தகவலறிந்த திருப்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் சி.சிவசாமி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கூட்டணி கட்சியினர் அம்மையத்தை முற்றுகையிட்டு, அலுவலர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி பல்லடம் பிரதான சாலையில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸôர் நிலைமையை சமாளிக்க தடியடி நடத்தினர். பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த திருப்பூர் தெற்கு பேரவை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்.ஜெயலட்சுமி சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்வதாகவும், திறக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தனியாக சீல் வைத்து எண்ணிக்கைக்கு அனுப்புவதாகவும் அவர் உறுதியளித்ததை அடுத்து நிலைமை சீரடைந்தது.


http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D:++%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D;+%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF&artid=c/5Inz1R31E=&SectionID=Y5sg9YP0wPY=&MainSectionID=Y5sg9YP0wPY=&SectionName=fxYdOX|XTkn78kYi4tmBYw==&SEO=


கெங்கவல்லி அருகேயுள்ள வீரகனூர் பேரூராட்சிக்குட்பட்ட நாவலூர் தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடிக்கு திமுகவைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் சுமதி இந்திரஜித் என்பவரின் உறவினர் வாக்களிக்க வந்தார்.

ஆனால் சரியான ஆவணங்கள் இல்லாததால் கொங்கு முன்னேற்றப் பேரவையின் வாக்குச் சாவடி முகவர்கள் ரவிக்குமார், ரவி ஆகியோர் அவரை வாக்களிக்க அனுமதிக்கவில்லை.

இதையடுத்து இந்திரஜித், ஊராட்சித் தலைவர் சுமதி ஆகியோருக்கும் கொங்கு முன்னேற்றப் பேரவை நிர்வாகிகளுக்கும் இடையே அடிதடி தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர்.

இதில் 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.


http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87+%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D:+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81+10+%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88+%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88+%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&artid=WXpcrPPpu94=&SectionID=Y5sg9YP0wPY=&MainSectionID=Y5sg9YP0wPY=&SectionName=fxYdOX|XTkn78kYi4tmBYw==&SEO=


ஆர்க்காடு வட்டம் குப்பிடிசாத்தம் கிராமத்தில் கள்ள வோட்டுப் போடுவதைத் தடுக்க முயன்ற ஆர்க்காடு எம்எல்ஏவை திமுகவினர் தாக்கினர். அவரது வாகனத்தையும் புதன்கிழமை சேதப்படுத்தினர்.


http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&artid=G4aN2KFcFJE=&SectionID=Y5sg9YP0wPY=&MainSectionID=Y5sg9YP0wPY=&SectionName=fxYdOX|XTkn78kYi4tmBYw==&SEO=


ஆர்க்காடு வட்டம் குப்பிடிசாத்தம் கிராமத்தில் கள்ள வோட்டுப் போடுவதைத் தடுக்க முயன்ற ஆர்க்காடு எம்எல்ஏவை திமுகவினர் தாக்கினர். அவரது வாகனத்தையும் புதன்கிழமை சேதப்படுத்தினர்.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%8F+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&artid=G4aN2KFcFJE=&SectionID=Y5sg9YP0wPY=&MainSectionID=Y5sg9YP0wPY=&SectionName=fxYdOX|XTkn78kYi4tmBYw==&SEO=

தேர்தல் விதிமுறைகளின்படி தமிழகத்தில் மே 11-ம் தேதி மாலை 5 மணிக்கு மேல் யாரும் எந்த வகையிலும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது.

இதனை மீறி பத்திரிகைகளில் திமுக, காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு வாக்களிக்குமாறு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு முதல்வர் கருணாநிதி எழுதிய கடிதமும் பத்திரிகைகளில் மே 12-ம் தேதி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

எனவே தேர்தல் விதிமுறைகளை மீறிய திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D:+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D&artid=h5HesMLduJs=&SectionID=Y5sg9YP0wPY=&MainSectionID=Y5sg9YP0wPY=&SectionName=fxYdOX|XTkn78kYi4tmBYw==&SEO=

மதுரை சுந்தரராஜபுரத்தில் உள்ள வாக்குச் சாவடிக்குள் திமுக வேட்பாளர் மு.க.அழகிரி நுழைந்தவுடன் அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் அனைவரும் எழுந்து நின்று இருகரம் கூப்பி அவரை வரவேற்றனர். தொடர்ந்து அவர் வாக்களித்துச் செல்லும்வரை அவர்கள் அனைவரும் நின்றபடியே இருந்தனர்.

http://www.dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&artid=07rMs/pg1vM=&SectionID=Y5sg9YP0wPY=&MainSectionID=Y5sg9YP0wPY=&SectionName=fxYdOX|XTkn78kYi4tmBYw==&SEO=

இதற்கும் மேலாக இந்த தி.மு.க ரெளடிகள் தமிழக மக்களுக்கு எந்த ஜனநாயகத்தைப் பற்றிச் சொல்லித் தரப்போகின்றார்கள். இவர்கள் குகை வாழ் கற்கால நாகரீகத்தில் இருந்து எப்போது குறைந்த பட்சம் "மனிதர்"களாக வாழ முற்படுவார்கள்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil