ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, July 21, 2009


கருணாநிதியிடம் பிடித்த பத்து

இப்போது பதிவுலகிலே பத்துப் போடுவது தான் பிரபலம். சரி நானும் ஏதாவது பத்துப்போடுவோம் என்று போட்ட தலைப்புத்தான் அது. தலைப்பைப்பார்த்ததும் நம்ம தங்க மணி சொல்லியது."உங்களுக்கும் பத்து போட ஆசை வந்திரிச்சா"ன்னது தான்.

பாவம் அவங்க... "பத்து"ப் போட அல்ல போட்டுக்கன்னு(எலும்பு முறிவிற்கான வைத்தியம் அல்லது முறிக்கவேண்டிய எலும்புள்ள பைத்தியங்களுக்கான வைத்தியம்) இருந்திருக்கணும்...அவங்களது பதிவிரத பூஜையிலும் பக்தியிலும் அவங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை.

தலைப்பை எழுதி கோடு கிழித்து ஒண்ணு போட்டாச்சி...ஒன்ணும் அடைப்புக்குறிக்குள் போட்டது மட்டும் தான் . குறிக்கோளாய் எதை எழுதுவது என்பதுதான் விளங்காத புதிராய் தவித்துப் போய் விட்டேன்.

ஒண்ணுக்குப் பக்கத்தில் எழுதினேன். ஏதாவது எழுதணும்...எழுதியாகி விட்டது.எத்தனயோ இருக்கின்றது...பின் நவீனத்தின் முதன்மைத் தத்துவம்...சரிங்களா...

அடுத்து இரண்டு. அடைப்புக்குறிக்குள்..எதையாவது எழுதணும்...ஏதாவதில் ஒன்றாகிய ..எதையாவது.. அப்பாடா எழுதியாகிவிட்டது இரண்டாவது விடயம்.

மூணாவது அடைப்புக் குறியுள். வெளிப்படையாக "எப்படியாவது" என்ற என் பிரயத்தனம் நெளிந்துகொண்டிருக்கின்றது.

நாலாவது. நாளையும் நாள் இருக்கின்றது என்பதால் பெருமூச்சு..(எனக்கு மட்டும் லீவு தந்த "அவர்"க்கு நன்றி)

ஐந்தாவது.ஏதாவது எழுதணும்.. தேடல் என்பதே வாழ்க்கை ..உறைக்கின்றது. தேடல் இல்லாத மனிஷனா நான்...

ஆறாவது.அதிரடியாக் கருத்துச் சொல்லப் போறவங்களை நினைத்து பயமாய் இருக்கின்றது... என் தங்க மணியிடம்(நான் ஆணாயிருப்பதால்) சொல்லிவிட்டு "சைபர் கிரைம்"க்கு சொல்ல விழையும் அபியின் அப்பாக்களை நினைக்க கிர்ரிடுகின்றது.

ஏழாவது.கடிதம் எழுதியே பழக்கப்பட்டவர் (முரசொலியில் மட்டும்..அழுத்திச் சொல்வதற்கு காரணம் அவர் எழுதிய வேறெந்தக் கடிதத்திற்கும் இதுவரை பதிலில்லை) பதிலெழுதினால் எப்படி நம் ரீயாக்ஷன் இருக்கும்.

எட்டாவது. இப்படியும் எழுதித் தான் ஆகணுமான்னு கேள்வி எழுகின்றது...

ஒன்பதாவது. எழுத வந்து விட்டு எழுதாமல் பீலா விடுவது என்பது...

பத்தாவது. அப்படியா.. எழுதி முடித்து விட்டேனா பத்தாவதையும் ..உஷ்..அப்பாடா...




அட ..அவரு கையில பத்து வெரல்.. பிடிச்சிருக்குங்க...

1 comment:

உதயம் said...

தமிழ் நாட்டு பெயர்கள் வட நாட்டானிடம்
சிக்கி நாய் படாத பாடு படுகிறது !
ஆமாம் ராதிகா செல்வி எப்போது கருணாநிதிக்கு மகள் ஆனார் ? தயாநிதிக்கு அம்மா ஆனார் ?

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil