ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, April 15, 2009


மு.க. அழகிரியும் மன உழைச்சலும்


கடைசி வரை ரெளடியாக வாழ் நினைத்தவர் இடையில் நல்ல பிள்ளையாக மாற அல்ல நடிக்க முன்வந்தாலே அதிலுள்ள சிரமம் கொடுமையானது। இன்று அதுதான்அழகிரியின் நிலை.

குண்டர்களை ஏவி விட்டு காரியமாற்றிப் பழக்கப்பட்டவர், இன்று வளைந்து குழைந்து என்னவெல்லாமோ செய்ய வேண்டியிருக்கின்றது. குவாட்டரிலும் பிரியாணியிலும் வாக்குகளைக் குவிக்கலாம் என்கின்றது ஜால்ரா தரப்பு .

ஆனால் இந்தத் தேர்தல் அழகிரியைப் பொறுத்தளவில் மிக முக்கியமானது। ரெளடீயிஸத்தில் பெற்றுக்கொண்ட மேல் நிலையையும் அதிகாரத்தையும் சட்டரீதியில் தக்க வைத்தல் மற்றும் பாகப் பிரிவினைக்கு முகம் கொடுக்க முற்படும் கட்சியில் அதிக பங்கு பெறுதல்... என்ற இந்த இரண்டு நிலையிலும் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தி இந்த தேர்தல் வெற்றிக்கு உண்டு।

நல்லவனாக நடிக்கும் இந்தப் புது அவதாரத்தை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்களோ என்ற தயக்கம் தேர்தலில் குதிப்பதை இது வரை தள்ளிப்போட வைத்தது। ஆனால் இனி மேலும் தள்ளிப்போடும் அவகாசத்தை கலைஞரின் உடல் நலம் அவருக்கு விட்டு வைக்கவில்லை।

அடுத்த மாநிலத் தேர்தலை கலைஞர் இல்லாது எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் தி।மு।க விற்கு எழலாம் என்ற சமிக்ஞை இப்போதே கிடைத்திருக்கின்றது। கலைஞரின் வயதும் உடல் நிலையும் அவ்வாறான முடிவிற்கு வர தி। மு।க வின் பங்காளிகளைத் தூண்டியுள்ளது।

அரசியல் அநாமதேயமாக இருப்பதில்லை என்ற முடிவு நேரடி அரசியலில் குதிக்க வைத்திருக்கின்றது।

பட்டி தொட்டி எங்கும் தேர்தல் பிச்சாரம் முடுக்கி விடப்பட்டிருக்கின்றது। பணப்பட்டுவாடாவும் ஜோராக நடைபெறும் என்று சொல்லித் தெரிய வேண்டியதில்லை। மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தைக் காட்டுவதன் மூலம் மண்ணுக்கும் விண்ணுக்குமான பிரமாண்ட அவதாரம் எடுப்பதற்குமான முஸ்தீபுகளில் மதுரை தி।மு।க அழகிரி வட்டாரம் இறங்கியுள்ளது। இது வருங்கால அரசியலில் பலரை அடிபணிய வைக்க உதவும்.


முதல் ஜனநாயக வழியாக தந்தை வழியில் "அன்பான வேண்டுகோள் " தலைப்பிட்டு "உங்கள் வீட்டு பிள்ளை" என்று பிட் நோட்டீஸ் மதுரை எங்கும் வினியோகிக்கப்படுகின்றது।

அடுத்து தன் கட்சிக்காரர்களையே தாக்கி விட்டு எதிர்த்தரப்பில் பழியைப் போட்டு தந்தை வழியில்த் தான் இதுவும்- "ஐயோ என்னைக் கொல்லுராங்களே"- பாணியில் அனுதாப அலையைத் திரட்டுவது। ஏற்கனவே கட்சி அலுவலம் ஒன்று தீயிடப்பட இரண்டு மூன்று தி। மு।க அனுதாபிகளுக்கு தர்ம அடியும் விழுந்திருக்கின்றது। மக்கள் மென்மையான இதயம் கொண்டவர்கள் என்பதைப் புரிந்து வைத்திருக்கின்றார்கள்.

"தங்கள் வீட்டு ரெளடி" ஆக இருந்தவரை "தங்கள் வீட்டு பிள்ளை" ஆக மக்கள் எப்படி ஏற்றுக்கொள்கின்றார்கள் என்று பார்ப்போம்।

வாக்காளர் பட்டியலுடன் கிராமவலம் வரத் தொடங்கியிருக்கின்றார்। மதுரை தொகுதியில் இருப்பவர்கள் உங்கள் பெயரும் வாக்காளர் பட்டியலில் இருக்கின்றது என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்। கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொடுக்கும் நேரம் ... உங்கள் பெயர் தவறி விடப் போகின்றது.


மு।க। அழகிரியுடனான நேரடிப் போட்டியிலிருப்பவர்கள் படு வீக்। இதுவும் சேர்ந்து மதுரையை உதய சூரியனுக்கு தாரை வார்த்துக் கொடுக்கக் கூடும்।

பாடம் 1: நல்லவராய் இருப்பதென்பது ரெளடியாய் இருப்பதை விட கொடுமையானது। மதுரையையே ஆளும் சொக்கநாதருக்கு வந்த சோதனையைப் பார்த்தீர்களா?

பாடம்2: மக்களுக்கு ! இப்படிப்பட்டவர்களை தெரிவு செய்யாது விடுவது அரசியலைச் சுத்தப்படுத்தும்। செய்வார்களா? ........ அல்ல செய்ய வேண்டும்

4 comments:

மேடேஸ்வரன் said...
This comment has been removed by a blog administrator.
மேடேஸ்வரன் said...

பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் மக்கள் தீர்ப்பை...

இட்டாலி வடை said...

வாங்க மேடேஸ்வரன் !

Unknown said...

Alagiri won.... his method of using money in election gave DMK win.

DMK sold everything for Post and power. only this time they have bought VOTES BY HOT CASH.

they have NO periorty

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil