ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, April 25, 2009


அப்பன் எட்டடி புள்ளை...

கெளபோயின் நடிப்பைப்பாருங்கள் கல்லிலும் முள்ளிலும் நடக்கும் கூலித் தொழிலாளியின் காலில் செருப்புக் கூட இல்லை போஸ் கொடுக்கும் கெளபோயின் காலில் அடிடாஸ் ஸூவு .. அழக்கில்லாத வெள்ளை ஆடை

பொட்டைக்கண்ணினாய் வா..வா
ஊழல் நிறைந்த பாரதத்தினாய் வா..வா








இலங்கையில் போரின் அகோரமும் புலம்பெயர் தமிழரின் எழுச்சிப் போராட்டமும் தமிழக மக்களின் உள்ளக் குமுறல்களும் கல்லுப்போல அசையாது இருந்த உலக நாடுகளின் மனங்களையும் அசைய வைத்திருக்கின்றது. போரினால் இடம் பெயர்ந்த மக்களின் அவசரத்தேவைகளை நிறைவேற்ற ஐ.நாடுகள் முதல் நடவடிக்கையை எடுத்துள்ளது.

துபாயிலிருந்து கூடாரங்களையும் அவசரத்தேவைப்பொருட்களையும் அனுப்பி வைத்துள்ளது. கூடவே ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஜோன் ஹோம்ஸ் மூன்று நாள் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று சனிக்கிழமை சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு செல்கின்றார்.

போர்ப் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலை தொடர்பாகவே கொழும்புப் பயணத்தின் போது அவர் முக்கிய கவனத்தைச் செலுத்துவார் என ஐ.நா.வின் பேச்சாளர் மரி ஒக்காபே தெரிவித்தார்.

"போர்ப் பகுதிக்கு மனிதாபிமானக் குழு ஒன்றை அனுப்பிவைப்பதற்கான சிறிலங்கா அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளுதல், இடம்பெயர்ந்த மக்களைப் பார்வையிடுவதற்கான அனுமதி மற்றும் வவுனியா முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள ஐ.நா. பணியாளர்களின் விடுதலை உட்பட முக்கியமான பல விடயங்களையிட்டும் ஜோன் ஹோம்ஸ் சிறிலங்கா அரசுடன் முக்கியமான பேச்சுக்களை நடத்துவார்.

அதேவேளை பிரான்ஸ் பிரித்தானியா அமெரிக்கா போன்ற நாடுகள் போர் நிறுத்தம் கொண்டுவரவேண்டிய அவசியத்தை மீண்டும் வலியுறித்தியுள்ளன.
அமெரிக்கா அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் அதைத் தெளிபு படுத்தியுள்ளது.


"பாதுகாப்பு வலயத்தின் மீது எறிகணைத் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்ளுமாறு நாம் சிறிலங்கா அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்ளும் அதேவேளையில், அனைத்துலக உதவி நிறுவனங்களைத் தடுப்பதையும், ஊடகங்கள் அங்கு செல்வதற்கான அனுமதியை மறுப்பதையும் நிறுத்திக்கொள்ளுமாறும் சிறிலங்கா அரசைக் கேட்டுக்கொள்கின்றோம்.

இடம்பெயர்ந்த மக்கள் தம்மைப் பதிவுசெய்து வசிக்கும் பகுதிக்குச் சென்று அவர்களைத் தொடர்பு கொள்வதற்கு அனைத்துலக உதவி நிறுனங்கள் அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறான மக்களுக்கு உதவும் முயற்சியில் அமெரிக்காவும் அதன் அனைத்துலகப் பங்காளிகளுடன் இணைந்து முயற்சிகளை மேற்கொள்கின்றது.

அனைத்துலக மனிதாபிமானச் சட்டங்களுக்கு உட்பட்ட கடமைப்பாடுகளின்படி நடந்துகொள்ளுமாறு இரண்டு தரப்பையும் நாம் கேட்டுக்கொள்கின்றோம். இவை மீறப்படும் சம்பவங்கள் தொடர்பில் நாம் மிகவும் கவலையடைந்திருக்கின்றோம்.

இவ்வாறு சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு இருக்கின்றது. இது அத்தனையும் கொழுந்து விட்டெரியும் புலம்பெயர் ஈழத்தமிழ்மக்களின் போராட்டத்தினால் உருவானது என்பதை பிரித்தானியப் பிரதிநிதி மில்லிபாண்ட் அண்மையில் ஒத்துக்கொண்டிருந்தார்.

அதிகளவில் ஈழத்தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இதுவொரு கவனிக்கப்படவேண்டிய பிரச்சினை என்பதை இந்நாடுகள் உணர்ந்து கொண்டிருக்கின்றன.

ஒவ்வொரு நாளும் 70 இலங்கை தமிழர்கள் படுகொலை ஆவதாக ஐ.நா.,வின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது.கடந்த மூன்று மாதங்களுக்குள் 6,432 பேர் பலியாகியிருக்கின்றனர். 13 ஆயிரத்து 946 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு வாரத்தில் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐ.நா., தெரிவிக்கிறது. இந்த எண்ணிக்கை சர்வதேச செஞ்சிலுவை சங்கம், அங்கு பணியாற்றும் டாக்டர்கள் அளித்த தகவல்களின் படி ஐ.நா., இந்த புள்ளிவிபரத்தை தொகுத்துள்ளது.

இப்பிரச்சினைக்கான சர்வதேசத்தின் உதவியையும் அனுதாபத்தையும் அத்தியாவசிய உதவிகளுடன் மட்டும் மட்டுறுத்தி விட்டு விடாமல் தொடரும் இன்வொடுக்குமுறைக்கு நீதியான நேர்மையான தீர்வு ஒன்றைப்பெற்றுக்கொள்ள சர்வதேசத்தை வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது புலம் பெயர்வாழ் தமிழ் மக்களின் அத்தியாவசியக் கடமையாகும்.

எம்மக்களின் போராட்டத்தில் தலையிட்டு பின் தள்ளிய சர்வதேசநாடுகள் காத்திரமான தீர்வைப்பெற்றுத் தராது பின்வாங்கி விடமுடியாது. சர்வதேசத்தின் பெயரால் சட்டங்களின் பெயரால் எம் போராட்டத்தை முறியடித்த இந்நாடுகள் எமக்கான நேர்மையான தீர்வை வழங்க வேண்டிய தார்மீகப் பொறுப்பில் உள்ளன.

எமதுபோராட்டத்தை பலவழிகளிலும் தடை செய்து முறியடித்த இவர்கள் மீண்டும் எம்மை "கற்காலத்தில்" விட்டு விட முடியாது. இதனைக்கருத்தில் கொண்டு புலம்பெயர் நாடுகளில் எமது போராட்டம் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும்.
சர்வதேச சட்டவிதிகளுக்கு உட்பட்டவகையில் ஒரு இனம் சுதந்திரமாக வாழ்வதற்குரிய சகல தகுதிகளையும் தமிழர் நாம் கொண்டுள்ளோம். ந்ம்பிரச்சினையில் தலையிட்டுள்ள ஐ.நாடுகள் மற்றும் மேற்குலக நாடுகளுக்கு அந்தப் பொறுப்புள்ளதை எடுத்துக்காட்டி நாம் தீவிரமாகத் தொடர்ந்தும் போராட வேண்டும்.

இதே வேளை டால் ஹால்ஸா அமைப்பின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் கன்வர் பால் சிங் இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை கருத்துத் தெரிவிக்கையில், ஈழத் தமிழர்களின் துன்பங்கள் தொடர்பாக தாம் கவனத்தைச் செலுத்துவதாகக் குறிப்பிட்டார்.

"ஈழத் தமிழர்களின் துன்பங்களைக் குறைப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளிலும் அனைத்துலக சமூகம் ஈடுபடாத அதேவேளையில், சிறிலங்கா அரசாங்கம் இந்தப் படுகொலைகளைச் செய்துவருகின்றது" எனவும் அவர் குற்றம்சாட்டினார்.

இது ஐ.நா.வின் கோட்பாடுககளையும், மனித உரிமைகள் தொடர்பான பிரகடனங்களையும் மீறும் ஒரு செயற்பாடு எனவும் தெரிவித்த சிங், சிறிலங்கா இராணுவத்தின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு இந்தியா ஆதரவளிப்பது பிராந்தியத்தில் சமாதானத்தையும் உறுதித்தன்மையையும் கொண்டுவருவதற்கு பாதகமானதாகவே அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சர்வதேசசிறுபான்மை பெரும்பான்மை இனங்களைப் பிரதிபலிக்கும் அமைப்புக்களின் ஆதரவை எம்போராட்டத்தின் பால் திருப்ப வேண்டியதும் எம் முன்னால் உள்ள தேவையாகும். இன்று எம்போராட்டம் முறியடிக்கப்பட்டதற்கு இத்தகைய இன சமூக விடுதலைக்கான அமைப்புகள் நாடுகளின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளத் தவறியதும் முக்கிய காரணமாகும்.

இத்தகைய பேரழிவை நாம் சந்தித்திருக்கின்றபோதும் எமக்கான ஆதரவுக்குரல் சர்வதேச அளவில் நலிந்தே ஒலிக்கின்றது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தொடரும் எதிர்காலப் போராட்டத்தில் நம் தவறுகளைத் திருத்திக்கொள்ள நாம் முயலவேண்டும்.

இவ்வளவும் நடந்து இன்றுசர்வதேசப் பிரச்சினையாகக் கவனம் பெற்றுள்ள ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி இண்டோ இட்டாலியன் கெளபோய்,

"இலங்கை பிரச்சினை மிகவும் சாதாரண ஒரு பிரச்சினை ஆகும். "

‘’விடுதலைப்புலிகள் இயக்கம் என்பது அப்பாவிகளை கொல்லும் இயக்கமாகும். அந்த இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. அது ஒரு தீவிரவாத இயக்கமாகும். "

என்று கருத்துக் கூறியிருக்கின்றார். "அப்பாக்களை கொல்லும் இயக்கம் "என்று அவர் சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

ஐம்பது வருடங்களுக்கு மேலாக புரையோடிப்போன ஈழத்தமிழர் பிரச்சினையில் எந்த அறிவுமில்லாது மூக்கை நுழைத்த அப்பன் எட்டடி பாய்ந்தால் ....

எப்படி இவர்களால் எல்லாம் இப்படி கூமுட்டைகளாக இருக்க முடிகின்றது. இவர்கள் கையில் தான் எதிர்கால ஒளிரும் இந்தியாவின் தலைவிதி..


பிந்திக்கிடைத்த அமெரிக்க அறிக்கை: இலங்கையில் இருதரப்பினரும் உடனடியாகப் போரை நிறுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பிரச்னைக்கு ராணுவம் மூலம் தீர்வு காண முயன்றால் அது இலங்கையின் ஒற்றுமைக்கும், மறுசீரமைப்புப் பணிகளும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் இலங்கை அரசை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

பராக் ஒபாமா அதிபராகப் பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இலங்கைப் பிரச்னை குறித்து அமெரிக்கா இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் சண்டையில் இரு தரப்பினராலும் மனித உரிமைகள் மீறப்படுவதாக வரும் செய்திகள் கவலையளிப்பதாகவும், தற்போதைய சூழல் இரு தரப்பினரிடையேயும் பகைமையை வளர்க்கவே உதவும் என்றும், இதனால் எதிர்காலத்தில் இலங்கையின் ஒருமைப்பாட்டிற்கும், மறுசீரமைப்புப் பணிகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் அமெரிக்கா கூறியுள்ளது.

தற்போது சண்டை நடைபெறும் பகுதியிலிருந்து வெளியேறும் மக்களை சர்வதேச தொண்டு நிறுவனங்களும், பத்திரிகையாளர்களும் சந்திக்க அனுமதிக்குமாறும், பாதுகாப்பு வளையம் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தாக்குதலை நிறுத்துமாறும் இலங்கை அரசை அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil