ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, April 28, 2009


சர்வதேச ராணுவ நடவடிக்கையை கோருகின்றார் கலைஞர்


கலைஞரின் உண்ணாவிரதம் பற்றி பலவிதமான கருத்துக்கள் அவரைச் சாடியும் வாழ்த்தியும் வெளி வந்து கொண்டிருக்கின்றன. உலகத் தமிழினத் தலைவரிடம் பல விடயங்களை எதிர்பார்த்து ஏமாந்ததனால் இக்கருத்துக்கள் வெளிவந்திருக்கலாம்.

உண்மையில் கலைஞர் உளப்பூர்வமாக ஈழப்பிரச்சினையில் தன் பங்கினை ஆற்றவில்லை என்பதே முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளின் சாரம்.

மற்றும் படி கலைஞர் மீது ஈழத்தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் வேறு மனவருத்தம் கிடையாது.

லக்கிலுக் என்ற பதிவர் இப்போது கலைஞரின் ஆஸ்தான பேச்சாளராக ஒரு பதிவினை வெளியிட்டிருக்கின்றார். அவரின் கேள்விகளை விளங்கிக் கொள்ள முயற்சிக்கும் வேளையில் உலகத் தமிழினத்தின் பொறுப்பு வாய்ந்த தலைவர் என்ற கோதாவில் கலைஞர் இதைச் செய்வாரா? என்ற கேள்வியை அவர் முன் வைக்கின்றேன்.

கேள்வி : மதியம் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தம் என்பது ஏற்கனவே தெரிந்துதான் கலைஞர் உண்ணாவிரதம் இருக்க முடிவுசெய்தாரா?

லக்கிலுக் : விடுதலைப்புலிகள் போர்நிறுத்தம் என்று அறிவித்தபிறகும், அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் வேண்டுகோள் விடுத்தபின்பும், ராஜபக்ஷே என்ன சொன்னார் என்பதை இங்கே பார்க்கவேண்டும். ”பயங்கரவாதிகளை ஒட்டுமொத்தமாக அழிக்கும்வரை போர்நிறுத்தம் என்பது கனவிலும் நடக்காது”. விடுதலைப்புலிகளின் போர்நிறுத்த அறிவிப்புக்கு பிறகும் ராஜபக்ஷே அசைந்து கொடுக்காத சூழலில் தான் இறுதிமுயற்சியாக கலைஞர் உண்ணாவிரதம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

கொத்துகுண்டுகள், ரசாயன ஆயுதங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி கொடூர இனயுத்தம் செய்துகொண்டிருந்த இலங்கை அரசு இனி கொல்லும் ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டோம் என்ற அளவுக்கு இறங்கி வந்திருப்பதற்கு கலைஞரே காரணம். இத்தகைய ஒரு வாக்குறுதியை இலங்கை அரசிடம் இருந்து பெருவதே குதிரைக்கொம்பாக இருந்தது. இனி வாக்குறுதியை மீறும் பட்சத்தில் இலங்கை அரசுக்கு எதிரான சர்வதே ராணுவநடவடிக்கையை கோரமுடியும். இலங்கை அரசின் அந்த அறிவிப்புக்குப் பிறகு அவசர அவசரமாக பதிவிட்ட புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சிலருக்கும், தமிழ்நாட்டின் இண்ஸ்டண்ட் தமிழுணர்வாளர்களுக்கும் இருந்த பதட்டம் என்னவென்றால் உயிர்ப்பலி குறையும் என்கிற மகிழ்ச்சியை விட, அதற்கு கருணாநிதி காரணமாகிவிட்டாரே என்பதாகத்தான் இருக்கிறது.


இப்போது வாக்குறுதியை மீறியாச்சு - இதோ தகவல் +ஆதாரம்

"கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்த போதிலும் அரச தலைவரின் செயலகத்தால் திங்கட்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், அண்மைக்கால போர்களின் போது கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது" எனவும் நியூயோர்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது.

"கனரக ஆயுதப் பாவனை, வான்படைகளின் தாக்குதல் என்பன பொதுமக்களுக்கு உயிரிழப்புக்களை ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருப்பதால் அவற்றின் பாவனையை நிறுத்துமாறு எமது பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என அரச தலைவரின் செயலகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவசிக்கப்பட்டிருப்பதன் மூலம் இவ்வாறு கனரக ஆயுதங்களை சிறிலங்கா படையினர் பயன்படுத்தியிருப்பதை அரச தலைவரின் செயலகம் ஒப்புக்கொள்கின்றது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டுகின்றது.

"கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தியிருப்பதை ஒப்புக்கொண்டிருப்பதன் மூலம் இறுதியாக தன்னுடைய அதிகாரபூர்வமான ஏமாற்று வேலையையும், கொடூரமான இராணுவ தந்திரோபாயத்தையும் சிறிலங்கா அரசாங்கம் வெளிச்சம் போட்டுக் காண்பித்திருக்கின்றது" என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்துக்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ் கடுமையாகக் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.

"ஐ.நா. பாதுகாப்புச் சபை சிறிலங்காவின் மணலில் தனது தலையைப் புதைத்துக்கொள்வதை நிறுத்திக்கொள்வதுடன், இரண்டு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டுள்ள துஷ்டபிரயோகங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக அனைத்துலக ஆணைக்குழு ஒன்றை அமைக்க வேண்டியது அவசியமானதாகும்" எனவும் பிரட் அடம்ஸ் வலியுறுத்தியிருக்கின்றார். - மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) ஆசிய பிராந்தியத்துக்கான பணிப்பாளர் பிரட் அடம்ஸ் 28/04 /2009

04

கேள்வி இதுதான் : இப்போது கலைஞர் சர்வதேச ராணுவ நடவடிக்கையை (சோனியாவைக் கேட்டாவது அல்லது சொந்த மூளையைப் பாவித்தாவது) கோருவாரா?


குறிப்பு: கலைஞர் அவ்வாறு எநடவடிக்கை எடுத்தால் 40 உம் அவருக்கே

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil