ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, April 28, 2009


எலேய் ராமநாதா.. - மு.க


நிசப்தமான இரவு. அள்ளித் தெளித்து விட்டதைப்போல நட்சத்திரங்கள் மின்னிக் கொண்டிருந்தன. மனதைக்கொள்ளை கொள்ளும் அழகு. இவை எதிலும் மனம் செல்லவில்லை. எடுத்த முயற்சியெல்லாம் தோற்றுப்போவதைத் தாங்க முடியவில்லை. மொட்டை மாடியின் அந்தக் கோடிக்கும் இந்தக் கோடிக்கும் தலைவர் நடந்து கொண்டிருந்தார்.

''எலேய் ராமநாதா.." தலைவருடன் கூடவே நடந்து கொண்டிருந்த நாமநாதன் "ஐயா " என்றார் வினயத்துடன்.

யோசனையுடன் கண்களை இடுக்கி "என்னையா... யாரையும் நம்பமுடியல்லே.."

ராமநாதன் எதுவும் சொல்லாது தலைவரையே பார்த்துக் கொண்டிருந்தார். தலைவரின் நிழல் போல இத்தனை காலமும் கூடவே இருந்த அவருக்குத் தெரியாதா..தலைவரின் மன உளைச்சலை... இந்த வயதிலும் நிம்மதியில்லாது அவர்படும் துயரத்தைப் பார்க்க சகிக்கவில்லை. என்ன செய்வது வேஷம் போட்டாகிவிட்டது ..ஆடித்தான் முடிக்கணும்..

"இந்தளவுக்கு ஊதிப்பெரிசாக்கிட்டாங்களே... இந்தம்மா கூட கூட்டு வைச்சதே பிழையாயிடுச்சேயா.. அனியாயத்துக்கு வீம்பு பிடிக்கிராங்க.. தேர்தலைபத்தி நெனைக்கிராங்களா... போன மகராசன் போய்ச் சேர்ந்திட்டான்... இந்தம்மா கூட இருந்து குப்பை கொட்ட வேண்டியது என் தலையெழுத்து்...ராஜா மாதிரி இருந்த நான் கூஜா தூக்க வேண்டிய கேவலம்.."

ஒன்றும் பேசாது தலையாட்டிக்கிட்டிருந்தார் ராமநாதன். கொட்டட்டும் ..திறந்து வைச்ச சோறும் மூடி வைச்ச மனசும் கெட்டுப்போயிடும் .. மனசில கிடக்கிறத கொட்டிட்டாலாவது கொஞ்சம் நிம்மதி கிடைக்கும்..

"ஈழத்துக்காரங்க முரட்டுப் பசங்க ராமநாதா .. நாங்க நெனக்கிரமாதிரியெல்லாம் அவங்க விட்டிட்டுப் போயிட மாட்டாங்க.. போன நவம்பரில முடிஞ்சிடும்னாங்க ...எல்லாம் அந்த முகர்ஜியும் பானாசினாவும் பண்ணுர வேல"

"ஆமாமா .." ஒத்து ஊதினார் ராமநாதன். தலைவர் பேச்சுக்கு எப்போ மறுப்புச் சொல்லியிருக்கார் இப்போ சொல்வதற்கு.

"அத நம்பித்தானே கூட்டு வைக்கச் சம்மதித்தேன்.. எல்லாம் இந்தப் பேராண்டியின் வேலை.." கோபம் பேரனின் மேல் திரும்பியது. டெல்லி அமைச்சர் பதவி அள்ளித் தந்ததில் சொக்கிப் போய் பேராண்டி ஆடிய ஆட்டம் இது. இந்தமுறையும் கூட்டு வைச்சால் அதிகளவு அமைச்சர் பதவியை அள்ளிக்கொள்ளலாம் என்ற ஆசை வார்த்தையில் மயங்கிப்போனேன்.

ஒன்றைக்கட்டினவனே நிம்மதியில்லாது இருக்க ரெண்டைக் கட்டினேனே .. இருப்பதைதானே நினைக்கமுடியும் ஆண்டதையும் அனுபவிச்சதையும் நெனைவு வைக்க முடியுமா? என்ன.. தலையில் அடித்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ரெண்டு பொண்டாட்டியும் புருஷன் பேச்சைக் கேட்பதை விட்டே எவ்வளவோ காலம் ஆகி விட்டது. தன் பிள்ளை ,பிள்ளையின் பேரன் என்று அள்ளிக் கொள்வதிலேயே குறியாய் இருக்கி்றாளுக... என்னங்கடி நான் உங்க புருஷனடி என்று சொன்னால்.. உன் காலம் முடிஞ்ச பிறகு நாங்க என்ன சீனியர் ஹோமிலா இருக்க முடியும்.. கடைசி வரை கெளரவமா பிள்ளைகளோடு இருக்க இப்பவே அவங்களோடு சேர்ந்தால் தானே உண்டுன்னு ..கட்சி மாறிட்டாளுக..

கடைசி வரை நானும் நிம்மதியாய் இருக்க என்று ஒத்து ஊதப்போக இருந்ததும் கெட்டான் வேலாண்டின்னு ..எல்லாம் தலைகீழாகிவிட்டது. இப்படி சாமப்பேயாக தூக்கமில்லாது கிடந்து உலையவேண்டியதாகிவிட்டது.

"என்னையா ராமநாதா.." "சொல்லுங்க ஐயா" ராமநாதன் பெளவியமாகக் கையைக்கட்டிக் கொண்டு கேட்டார். பேசாம நம்மூருலேயே இருந்திருக்கலாம். நம்மகிட்டே இல்லாத பணமா ?.. ப்ண்டமா?...
இந்தக் காலத்துப் பசங்களுக்கு இந்தியாவே போதாது..உலகையே அள்ளனும்னு.. ஆசை..பேராசை..
அலுத்துக் கொண்டார்.

உண்ணாவிரதம் இருந்து வந்ததில் இருந்து வெட்கத்தில் உடல் கூசிக்கொண்டிருந்தது. ஒவ்வொரு செங்கல்லாக வைத்துக்கட்டியெடுத்த தமிழினத்தலைவர் , தானைத் தலைவர் என்ற பொற்கோட்டை கண்முன்னாலேயே சடசடவென்று நொருங்கிப் போவதைக் கண்டு இதயம் வெம்பிவெம்பி அழுகின்றது.

உடனிருப்பவர்களே கேவலமாகப் பார்க்கும் போது உடன்பிறப்புகளின் முன்னால் எப்படி முகத்தைக் காட்டுவது..கடிதம் எழுதி ஆற்றக்கூடியதா? கவிதை எழுதித் தேற்றக்கூடியா இந்தத் துக்கம்.. இந்த தள்ளாத வயதில் செய்த பாவம் அனைத்தும் சுத்திப் பிடிப்பதைப்போல மூச்சுத் திணறுகின்றது... காலையில டாக்டர் வந்து பிறஷர் ஏறிடிச்சு சுகர் இறங்கிடிச்சுன்னு கத்தப்போறார்...

எல்லாம் சரியாக இருக்கின்றது என்று சொல்லி்யதால் தானே அந்த அதிகாலை வேளையில் வீராப்பாகக் கிளம்பிப் போனேன்... அது இப்படிப் புஷ்வாணமாகப் போகும் என்று யாருக்குத் தெரியும்.. அந்த வழுக்கை மூஞ்சி முகர்ஜியும் இந்த இத்தாலிச் சனியாளும் இப்போது சாரி சொல்லி என்ன பயன் ... சாரி உடுத்திப் போகும் நிலையில் தான் ஆண்மை இழந்து நிற்கின்றேனே.

அந்தச் சிங்கள ராஜபக்ஷேயின் கண்ணிலயே முழிக்கக் கூடாது.. இப்படி கண்ணிலே வெரலை விட்டு ஆட்டிட்டானே.. அரசியலுக்கே லாயக்கில்லாத நாயி.. ஆட்சிக்கு வந்தமா..அள்ளினமான்னு போய்க்கிட்டே இருக்காம.. இது என்ன கூத்து.. அதுவும் புலிங்கூட ...சிறீபெரும்புத்தூரிலயே இந்த ஆட்டம் ஆடினவனுங்க இவனை விட்டுடுவானுங்களா... வைக்கிற குண்டில என் பங்குக்கும் ஒரு குண்டு சேர்த்து வைக்கட்டும்...நாயி நடுரோட்டில சிதறிப் போகணும்..

எல்லாம் இந்த ஆணவம் பிடிச்ச பொண்ணால் வந்தது ..அவளுக்கு புத்தி சொல்லும் இந்த சகுனி துக்ளக் சோவைச் சொல்லணும். பி்ளேட்டையே திருப்பிப் போட்டுட்டாளே... பிரபாகரன் என் நண்பன் என்றால் குய்யோ முறையோ என்று கத்தியவங்கள் எல்லாம் இப்போ எங்கே போயிட்டாங்க... இந்தப் பொம்பிள்ளை சொல்லிட்டாலே பேஸ்த்து அடிச்சு நின்னுட்டாங்களா? இவன்களையெல்லாம் அப்போ..பெரியார் சொன்னபோதே அடிச்சுப் போட்டிருக்கணும்.. விட்டு வைச்சது பிழையாய்ப் போய்ட்டுது.. இன்னைக்கு கொழுத்து என்னையே கொத்திப் போட்டானுங்க... வாங்கிற பொட்டிக்கு செய்தி போடுறாங்களா.. அப்படியே போட்டாலும் நம்ம காலையே வாருற மாதிரில்லே போடுறானுங்க...

இருபத்தி மூணை வெச்சுக்கிட்டு பதினாறைக் கொடுத்தேனே இந்தக் காங்கிரஸ்காரனுக்கு... நன்றி கெட்ட பயலுகள்.. எல்லாரும் ஓடி ஒளிச்சிட்டானுவள்... அறிக்கையை விட்டு ஆறுதல் படுத்திரானுவளா...அதுவும் இல்லே... போனெடுத்து தேறுதல் சொல்லுரானுகளா ..அதுவுமில்லே ..போனக்கூட போர்த்தி வெச்சுட்டு ஓடி ஒளிச்சிட்டானு்க.

இவனுகளுக்குப் போய் பிரச்சாரம் செய்ய முடியுமா? முதுகுவலி வந்ததும் நல்லதாய்ப் போய்ட்டது.. நாலு ஊரோடு முடித்துக் கொள்ள வேண்டியது தான்...நாலு சீட்டாவது கெடைச்சா அந்த ஆண்டவனுக்குத்தான் நன்றி சொல்லணும்... யாருமில்லாத நமக்கு ஆண்டவனை விட்டா யாரிருக்கார். அதையும் வாய்விட்டுச் சொல்ல முடியாத நம்ம நெலமை..

"எலேய் ராமநாதா.." தலைவர் அழுகின்றாரா...ராமநாதன் வெலவெலத்துப் போவிட்டார். குரல் அவ்வளவு நலிந்திருந்தது. பாழாப்போன இந்த கறுப்புக் கண்ணாடியக் கழட்டினா என்ன ?.. கண்ணில என்ன தெரியுதுன்னு பார்க்க முடியாம. தலைவர் தொடர்ந்தும் நடந்து கொண்டிருந்தார்.

இப்படியே ரோட்டில் நடந்தால் அண்ணா சமாதி வந்து விடும். அதைச் சொல்லவா முடியும்...

1 comment:

ttpian said...

உதிர்ந்த ரோமமடா ராமனாதா!
உன்னை சொல்லி குட்ரமைல்லை:என்னை சொல்லி குட்ரமில்லை!
தமிழனாக இருந்த நான்,இப்போ இந்தியனாக மார்...அம்மணமாக

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil