ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, April 25, 2009


நிஜத்திலும் ஜொலிக்கும் நட்சத்திரங்கள்


நிழலில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் நிஜத்திலும் ஜொலிப்பது தான் அழகு. அந்த அற்புதம் கலைஞர்களுக்குத் தான் கைகூடி வருகின்றது. ஈழத்தில் இறந்து படும் மக்களுக்காக குரல் கொடுத்தவர்கள் அரசியல்வாதிகளை விட்டுவிட்டால் மாணவர்கள் வக்கீல்கள் பெண்கள் அடுத்த படி திரையுலகினர்.

நிஜமாகவே நட்சத்திரங்கள் தான் என்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாமல், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன், அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் தேர்தலில் வாக்குக்கேட்டு தமிழகம் வரக்கூடாது என்று தமிழ் திரையுலகம் பொங்கி நிற்கின்றது.

தமிழனாக இல்லாவிட்டாலும் சக மனிதனாய்ப் பார்க்கும் பண்புக்கு ஹற்ஸ்
ஓfவ் . ஈழத் தமிழர் நிதியுதவி என்றவுடன் ஐந்து இலட்சத்தை அள்ளிக்கொடுத்த நயன் தாரா. தமிழன் சாவது பற்றி அந்த மலையாளப் பெண்ணுக்கு என்ன போயிற்று. கிராமத்துத் தெருக்களில் பாடம் படித்து வந்த பாரதிராஜா, பாலசந்தர்,
சசிகுமார், வி.சி.குகநாதன், முருகதாஸ், அமீர், வசந்த், மனோஜ்குமார், ஹரி, ஜீவன், வசந்தபாலன், மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், ஆதி, சிவா, பாலுமகேந்திரா, வி.சேகர், வெற்றிமாறன், கே.எஸ்.அதியமான், எழில், கதிர். தங்கர்பச்சான், கிருஷ்ண குமார், தயாரிப்பாளர்கள் டி.ஜி. தியாகராஜன், சோழா பொன்னுரங்கம், புலவர் புலமைபித்தன், நடிகர்கள் சத்யராஜ், வடிவேலு, பார்த்திபன், எஸ்.ஜே.சூர்யா, சேரன், மணிவண்ணன், கஞ்சா கருப்பு, கவிஞர்கள் மேத்தா, சினேகன், வசனகர்த்தா பிரபாகர், நடிகைகள் ரோகினி, புவனேஸ்வரி.

அடடா எத்தனை கொலிக்கும் நட்சத்திரங்கள். துன்பப்படும்போது இடுக்கண் களையும் நட்புப்போல துயரம் துடைப்பது பெரிய வரம். அதை ஆயுசுக்கும் மறக்கமுடியாது. அதுவும் ஈழத்தமிழ் மக்கள் நன்றியுடன் நினைவு வைத்திருக்க வேண்டும்.

"எந் நன்றி கொன்றாருக்கும் உய்வுண்டு - உய்வில்லை
செய் நன்றி கொன்ற மவற்கு "

நாங்கள் தீர்மானிக்க வேண்டும் இவர்கள் படங்களைத் தான் இனி எப்போதும் பார்க்க வேண்டுமென்று. இது தான் நாங்கள் செய்யும் நன்றி .

இன்னும் நட்சத்திரங்கள் திரைக்கு அப்பாலிருந்தும்...இக்கூட்டத்தில் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ், தமிழக வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பிரபாகரன், மூத்த வழக்கறிஞர் கருப்பன் உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் மற்றும் தமிழருவி மணியன், இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம்..

அனைவரும் சேர்ந்து போட்ட தீர்மானங்கள் :


தீர்மானம் 1 :

மத்தியில் உள்ள ஆளும் கட்சியினர் இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்த உத்தரவிட்ட பின்னர், தமிழகத்தில் வந்து வாக்கு கேட்பது தான் நியாயமானது.எனவே, இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிடாமல், காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன், அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் தேர்தலில் வாக்குக்கேட்டு தமிழகம் வரக்கூடாது.

அதையும் மீறிவந்தால் எங்களது முழு எதிர்ப்பை காட்டுவோம்.அப்போது, அவர்களது நிழல் கூட துணையாக நிற்காது விலகி விடும் என்று அவர்களுக்கு அறிவுறுத்துகிறோம்.எனவே, எங்களது உணர்வுகளை புரிந்துகொண்டு இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய உடனடியாக உத்தரவிட வேண்டும்.

தீர்மானம் 2 :

மத்தியில் ஆட்சியில் இருக்கும் அரசின் தமிழகத் தலைவர் தங்கபாலு போட்டியிடும் சேலம் தொகுதியிலும், உயர் பதவியில் போதுமான அதிகாரத்தில் இருந்தும் எதுவும் செய்யாமல் மவுனம் காத்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடும் சிவகங்கை தொகுதியிலும், தமிழனப் படுகொலையை நியாயப்படுத்தி வரும் மற்றொரு மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடும் ஈரோடு தொகுதியிலும் உள்ள பொதுமக்கள், தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் விதமாக இவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இந்த தொகுதிகளில் தமிழ் திரையுலகின் இன உணர்வுள்ள அத்தனை கலைஞர்களும் தங்கள் சொந்த பொறுப்பில் மக்களை சந்தித்து, இந்த 3 பேருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்வார்கள்.

மீண்டும் ஒரு முறை ஹற்ஸ் ஓfவ்....

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil