ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, April 26, 2009


அ.தி.மு.க கூட்டணி வெல்லுவதன் அவசியம்


அ.தி.மு.க கூட்டணி வெல்லுவதன் அவசியம் என்பதை விட காங்கிரஸ் தி.மு.க கூட்டணியின் தோல்வி என்பது தான் இன்றைய இறுக்கத்தைப் பல வழிகளில் தவிர்க்கக் கூடியது.

இன்று சிங்கள அரசின் பின்னணியில் நின்று வினையாற்றுவது காங்கிரஸ் அரசு என்பது சந்தேகமின்றி நிரூபணமாகிவிட்டது. காங்கிரசின் போர் முனைப்பிற்கான காரணங்கள் அனைவரும் அறிந்தது தான். இன்றைய காங்கிரஸின் போர்நிறுத்த வேண்டுகோள் சுயமான விருப்பம் அல்ல என்பதுவும் சர்வதேச மற்றும் தமிழக தேர்தல் கள நிலையும் அவ்வாறான ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் தான் உண்மை. இந்நிலையை காங்கிரஸ் தலைமையால் நிச்சயமாக இரசிக்கமுடியாதுதான்.


விரைவில் புலிகளுடனான போரை முடிவிற்குக் கொண்டு வருவதற்கே காங்கிரஸ் விரும்புகின்றது. அதுவும் நூறு வீத வெற்றியுடன். பிரபாகரன் இல்லாத ஒரு இலங்கைச் சூழலையே காங்கிரஸ் கனவு காண்கின்றது.

ஆனால் புலம்பெயர்தமிழர்களின் ஆர்ப்பாட்டங்களும் அது கொடுக்கும் நெருக்கடிகளும் மேற்கு நாட்டு அரசுகளால் காங்கிரஸ் தேடும் கால அவகாசத்தைக் கொடுக்கும் நிலையில் வைத்திருக்கவில்லை. இது குறித்த அக்கறைதான் அண்மைய நம்பியார்களினதும் நம்பூதிரிகளினதும் திடீர் விஜயம் கொழும்பை நெருக்கடிக்குள் தள்ளிவிட்டிருக்கின்றது.

அவர்கள் விருப்பத்தைப்போல களநிலை விரைவில் வெற்றி கொள்ளப்படும் நிலையில் இல்லை என்பதை இராணுவம் அறிந்து வைத்திருக்கின்றது. அரசியல் அழுத்தம் காரணமாக பொதுமக்களைக் கேடயமாக வைத்தும் இராணுவம் நகரமுற்பட்டது. அது எதிர்பார்த்த நலனை விட பாதகமான விளைவையே உண்டு பண்ணியது. அதைத் தொடர்ந்தே அமெரிக்க , ஐரோப்பிய ஒன்றியம் ,ஜி 8 நாடுகள் போன்றவற்றின் போர்நிறுத்த வேண்டுகோள் அச்சுறுத்தும் தொனியில் விடப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஆதரவு எவ்வளவு தூரம் இருந்தாலும் சர்வதேசத்தின் வேண்டு கோளுக்கு செவிசாய்க்க வேண்fடிய இக்கட்டில் சிறிலங்கா இப்போதிருக்கின்றது.
ஐ.நாடுகளின் உதவியும் கட்டற்ற பத்திரிகையாளர்களின் பார்வையும் வன்னியை சென்றடையும் போது சிங்கள இராணு்வத்தால் இத்தனை சுயாதீனமாக செயற்படமுடியாது.

புலிகளின் வலிந்த தாக்குதல் நிறுத்த அறிக்கையானது சிங்கள இராணுவத்தையும் அவ்வாறான ஒரு முடிவை எடுக்க துரி்தப்படுத்தியிருக்கின்றது. சிங்கள அரசின் நடவடிக்கைகள் இனி சர்வதேசத்தின் விருப்பத்தின் படி நகர்வதைத் தடுக்க முடியாது.

ஈழச் சூழலில் போர் முடிவிற்குக் கொண்டுவரும் இச்சந்தர்ப்பத்தில் காங்கிரஸ் அரசியல் அதிகாரக் களத்தில் இருந்து வெளியேற்றப்படுவது இன்றியமையாதது. எதிர்காலத்தில் இயல்பாகவே காங்கிரஸினால் ஏற்படுத்தப்படக் கூடிய முட்டுக்கட்டைகளை காங்கிரஸின் வெளியேற்றத்தினால் தடை செய்யும்.

பிரதியீடு செய்யப்படும் மாற்று அரசு ஈழம் சார்ந்த கொள்கையை மறுபரிசீலினை செய்யும் வாய்ப்பும் ஏற்படும். எக்காலத்திலும் இந்தியா ஈழம் தொடர்பில்லாத அரசியல் இராணுவக் களம் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இருக்க முடியாது.
இந்தியாவின் இராணுவ மேலாண்மையும் ஒரு தீர்வாகவும் இருக்க முடியாது.

ஈழத்தை எதிர்ப்பது அடக்குவது என்பது தெற்கிலும் ஒரு ஸ்திரமற்ற நிலையை இந்தியா வலிந்து உருவாக்குகின்றது என்று தான் கொள்ள வேண்டும். ஏனெனில் ஈழத்தமிழர்கள் சிங்கள ஆட்சியின் கீழ் எப்போதும் அடங்கியிருக்கப் போவதில்லை. இது தான் அரசியல் யதார்த்தம். இதை ஏற்றுக் கொள்ளும் சக்தியின் மேலாண்மை தான் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் உருவாக முடியும்.

காங்கிரஸ் அரசியல் அதிகார களத்தில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு இத்தனை காரணங்கள் இருக்கும் போது தி.மு.க வெளியேற்றப்படுவதற்கு ஒரேயொரு காரணமேயுண்டு. அது காங்கிரஸுடன் சேர்ந்து தேர்தலை முகம் கொடுப்பது. அதற்கு கலைஞர் கொடுத்த,கொடுக்கப்போகும் விலை அதிகம். பாவம் கலைஞர் கடைசிக்காலத்தில் மிகப்பெரும் சறுக்கல்.

இதே நேரத்தில் அ.தி.மு.க வின் புதிய முகமும் இவ்வரசியல் நிலைமைகளைக் கருத்தில் எடுத்ததாகவே கொள்ள வேண்டும். அ.தி.மு.க வின் புதிய நிலைப்பாடானது - தனித்தமிழீழமே ஈழத்தமிழர்களுக்கானதீர்வு - மத்தியிலிருக்கும் காங்கிரஸ் நிலைப்பாட்டிற்கு பெருத்த பின்னடைவாகும். ஈழத்தமிழினத்தின் ஆதரவு நிலைப்பாட்டை தி.மு.க விற்கு அடியோடு மறுதலிப்பதாகும்.

இந்தியாவிற்கு வெளியிலும் அது தாக்கத்தை உருவாக்கக் கூடியது.

1) புலிகளின் தனித் தமிழீழத்திற்கு இலங்கையின் வெளியிலிருந்து கிடைக்கும் ஆதரவாகப் பார்க்கப்படும். தமிழ் மக்களின் போராட்டத்தில் கொள்கையளவில் ஆதரவு தந்து கொண்டிருக்கும் தென் ஆபிரிக்கா மலேசியா போன்ற இன்னோரன்ன நாடுகளை வெளிப்படையாக குரல் கொடுக்கத் தூண்டும்.

2) மேற்கு நாடுகளின் ஈழம் தொடர்பான நிகழ்ச்சி நிரலில் எதிர்காலத்தில் தமிழகத்தின் கருத்தையும் அறியத் தூண்டும். (தற்காலிகமாகவேனும்)

3) ஈழத்தமிழர்கள் ஒதுக்கப்பட்டவர்கள் என்ற தன்முனைப்பில் சிங்கள அரசால் நடாத்தப்படும் காட்டுமிராண்டித் தனங்கள் கட்டுப்படும்.

இது வரை சிங்கள அரசு ஜெயின் கருத்துகளுக்கு தன் விமர்சனங்களை முன் வைக்கவில்லை என்பதும் இந்திய இறையாண்மைக்கு குந்தகம் என்ற ரீதியில் சலசலப்புகள் இந்தியாவிலும் எழவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.

" தனித்தமிழீழத்தை நாங்களே போராடி வென்று கொடுப்போம்" என்பது இலங்கையின் இறைமையினுள் தலையிடுவது போன்று மோசமானது . இந்திய மத்திய அரசின் வெளி நாட்டுக் கொள்கையை எதிர்ப்பது.

அ.தி.மு.க தலைமையின் திடீர் பல்டி என்றே எடுத்துக் கொண்டாலும் இது இப்போது நமக்குச் சாதகமாகவே இருக்கின்றது என்பதைப் புரிந்து கொண்டு அதை பயன் படுத்த முயல்வோம்.

இதுவே இன்று அ.தி.மு.க கூட்டணி வெல்லவேண்டியதன் அவசியமாகும்.


பிந்திய செய்தி : வந்துட்டாங்கையா,

New Delhi, April 26 (Inditop) The Congress party Sunday termed AIADMK chief J. Jayalalitha’s demand for a separate ‘Eelam’ homeland for Sri Lankan Tamils as “anti-national and irresponsible”.

“I see this demand as anti-national and irresponsible,” union Minister Kapil Sibal told IANS reacting to the statement of the former Tamil Nadu chief minister who Saturday supported a separate Tamil Eelam in Sri Lanka as the only solution to the decades-old ethnic strife in the island nation.

“We have been asking for a ceasefire. It is not enough. Sri Lankan Tamils should get justice and lead a normal life. They should get all rights that are available to the Sinhalese. For this, a separate Eelam is the only way,” Jayalalitha said.

“I will definitely do it. To form a separate Eelam, vote for the AIADMK-led alliance,” she said at an election meeting in Salem.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil