ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, April 26, 2009


புலிகள் தப்பினார்கள்


என்னவும் நடக்கும் இந்த உலகத்தில். அப்படித்தான் நினைக்கத் தோன்றுகின்றது. எத்தனை இலகுவாக மக்கள் காதுகளில் பூ சுத்திக்கொண்டிருக்கின்றார்கள். வார்த்தகளை வளைத்துப்போடும் கலையை எங்கிருந்து தான் கற்றுக்கொண்டிருக்கின்றார்களோ. மக்கள் இவர்களைப்பற்றி "மண்ணாங்கட்டி முண்டங்கள்" என்று நினைப்பார்கள் என்பதில் கிஞ்சித்தும் கவலையி்ல்லை. ஒரே விதத்தில் முட்டாள் தனத்தை எவ்வளவு காலம் செய்வார்கள்.

மக்கள் இவர்களிடமிருந்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் புரியாதிருக்கின்றார்களா? அல்லது புரியாத மாதிரி நடிக்கிறார்களா? ஆயாசமாக இருக்கின்றது.

புதிதாக ரீல் விட்டிருக்கின்றார் ஜெயலலிதா. தீவிரவாதிகளிடம் இருந்து அவர் உயிருக்கு ஆபத்தாம் , குறி வைத்திருக்கின்றார்களாம். அட இந்தத் தீவிரவாதிகளும் பொழுது போகாமல்தான் இருக்கின்றார்களா? கொள்கை நோக்கம் எதுவுமில்லாத வெறும் அடியாட்கள் தானா? இவர்கள்.

அப்படி இவரைக் குறி வைக்க இவர் என்னதான் செய்து விட்டார். இவரை விட பெரும் "பீலா" விடும் ஜோக்கர்கள் எல்லாம் மத்தியில் இருக்கின்றார்கள். சொட்டு இரத்தம் புகழ் ப். சி ,பிரணாப். இவர்களையெல்லாம் விட்டு விட்டு சிவனேன்னு ஐந்து வருடம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் இவரையா தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.

இப்போது தான் ஞானம் வந்தது என்று ஆறுதலாகவிருந்தது. அதற்கிடையில் அரசியல் ஸ்டண்ட். அதுவும் ஸ்டேட்மெண்ட் கொடுத்தது ப.சி இன் உள்துறை.
"தமிழீழ ஆதரவு "அலையில் கவரப்பட்டு ப.சி விளையாடுகின்றது போலும். அல்லது வெளிப்படையாகவே சொல்வது தானே சினம் கொண்ட சிங்களப் படைதான் தீவிரவாதிகளாக வருகின்றது என்று.

அதுவும் அதிகாரபூர்வமான அறிவித்தலாம். ப.சி வீட்டிற்குப் போக முதல் கடைசி கடைசியாக அரக்கு சீல் வைத்து முத்திரை குத்தியிருக்கின்றது. ஆசை யாரை விட்டது.

நல்ல வேளை புலிகள் தப்பித்தார்கள். அம்மாதான் ஆதரவாளராச்சே. உறுமிய உறுமல் இன்னும் காற்றில் உலரவில்லை.

அரக்கு சீல் அடித்து விட்டவ்னெல்லாம் மூளையால யோசிக்க மாட்டாங்களா? உள்வீட்டுச் சதியெல்லாம் இனி சாத்தியமல்லவே. அம்மாவின் பாதுகாப்புக்கும் அவனுங்க தானே ஆவன செய்யவேண்டும்.

முதுகுவலியில் அவதிப்படும் கருணாநிதி தேர்தலில் கடும் பிரச்சாரம் செய்யவிடாது தடுப்பதாக ஏன் நீங்கள் உளரவில்லை. இதில் காங்கிரஸ், ரா, சி.பி.ஐ ஆகியோரின் பங்களிப்பு இருக்கின்றதே. மாடம், பொன்னான வாய்ப்பைத் தவற விட்டு விட்டீர்களே. அதனால் என்ன? இரண்டாவது இணைப்புக் கொடுத்து விடுங்கள். மக்கள் இதற்கெல்லாம் பழகி விட்டார்கள்.

போங்கடா நீங்களும் உங்க அரசியலும்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil