ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, April 29, 2009


ஜெயலலிதாவை ஆதரிப்போம்


இன்று ஜெயலலிதா மனந் திறந்து பேசியிருக்கின்றார். ஒரு மனப்போராட்டத்தில் இருந்து தெளிபு பெற்றதாகவே அவர் உரை இருக்கின்றது. ஏதோ ஒன்று குறித்து பரிகாரம் தேடும் ஆவேசம் அதில் தொனிக்கின்றது.

ஈழத்தமிழர் குறித்த ஆழ்ந்த அனுதாபமும் ஆதங்கமும் அதில் வெளிப்பட்டிருந்தது. பல தலைவர்களின் தலைகள் அதில் உருட்டப்பட்டது. இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்ற கபடநாடகம் ஆடமுற்பட்டவர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்திருக்கின்றார். இந்திய ஆட்சியாளர்களின் கரிசனையற்ற அலட்சியம் பற்றி கேள்வியெழுப்பியுள்ளார்.

யுத்த நிறுத்தத்தை சிங்கள அரசு அறிவித்திருப்பதாகத் தமிழகத்தில் கூறப்பட்ட கயமை பற்றி இடித்துரைத்துள்ளார். தேர்தல் வெற்றி ஒன்றையே நோக்கமாகக் கொண்ட காங்கிரஸ் -தி.மு.க வின் கபடத்தை நேருக்கு நேர் கேள்வி எழுப்பியுள்ளார். ஈழத்தமிழ் மக்களை பகடைக்காயாகப் பாவிக்கும் இழிதனம் பற்றி கோபம் கொப்புளிக்க இடித்துரைத்துள்ளார்.

அப்படிப்பட்டவர் இத்தனை தூரம் தெளிவுடன் சிந்திக்ககூடியவர் அதே தவறை விடமாட்டார் என்ற நம்பிக்கையுடன் அவரை ஆதரிப்போம்.

எப்படி அவரால் உதவி செய்ய முடியும் என்றும் தெளிவுறுத்துகின்றார். 1971 இல்
எந்த சர்வதேசச் சட்டங்களின் படி பங்களாதேசம் உருவாக இந்திரா உதவினாரோ 1990 இல் எந்த சர்வதேச சட்டங்களின் பிரகாரம் இராஜீவ் இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பினாரோ அதே சர்வதேசச் சட்டங்களின் பிரகாரம் உதவ முடியும் என்று தெளிபு படுத்தியுள்ளார்.

அதை நாம் இல்லை, முடியாது என்று சொல்ல எந்த முகாந்திரங்களும் இல்லை. இதை சர்வதேச சமூகம் தடை போட முடியாது. பங்களாதேசத்திற்கு இந்திய இராணுவம் அனுப்பப்பட்டபோது அனுமதித்த அதேசர்வதேச சமூகம் இலங்கைக்கு அமைதிப்படை செல்ல அனுமதித்த சர்வதேச சமூகம் இப்போதும் அனுமதிக்க முடியாது என்று சொல்ல முடியாது.

சர்வதேச நாடுகளை விட ஈழத்தின் மேல் அதிக அக்கறை கொள்ள இந்தியாவிற்கு அதிக உரிமையுள்ளது.

தன் கட்சியின் ஆதரவு பெற்ற அதிகாரம் செலுத்தக் கூடிய அரசு மத்தியில் ஆட்சியேறும் போது தான் நினைத்ததைச் செய்ய முடியும் என்று கூறியிருக்கின்றார். ஆகவே அது அவ்வாறு நிகழுமாயின் ஏன் அந்த வாய்ப்பை அவருக்குக் கொடுக்கக் கூடாது.

ராஜபக்ஸே கருணாநிதியின் கூட்டுச் சதியைப் பற்றி கூறியிருக்கின்றார். அது எவ்வளவு தூரம் உண்மை ..முக்கியத்துவம் வாய்ந்ததா என்பது பற்றி இங்கு விவாதிக்கத் தேவயில்லை.

ஆனாலும் இத்தகைய எந்த நம்பிக்கையையும் தி.மு.க இதுவரை தரவில்லை. ஆடிய அனைத்தும் வெறும் நாடகம் என்னும் சாதாரண மனிதருக்கும் சந்தேகம் ஏற்படும் வகையில் இருக்கின்றன. நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் எவரும் கிடைக்கும் சிறு துரும்பைதானும் பற்றிக்கரை சேரவே முயல்வார்கள் . அந்த வகையில் வாக்குறுதி இன்று ஈழத்தமிழர் இருக்கும் நிலையில் துரும்பல்ல பெரும் படகு.

படகில் ஏறிக்கரை சேர ஏன் உதவக்கூடாது? இந்த ஒரு நோக்கத்திலேனும் ஜெயலலிதாவை இத்தேர்தலில் வெற்றி பெற வைக்க வேண்டும். ஆம் நாம் ஜெயலலிதாவையும் அவர் கூட்டணியையும் ஆதரிப்போம்.

3 comments:

ttpian said...

yes,this is need of the hour:till today i have never thought about jeya...but,she has promised for Tamileelam:it is the duty of every tamil person to vote for her allaince:
let "YELLOW TOWE" go to itali to drink Itali SOUP

இட்டாலி வடை said...

வாருங்கள் ttpian !

இது அடுத்த பக்கம்.. ஈழத்தமிழர் நலன் கலைஞரிடம் இல்லையென்னும் போது..

ttpian said...

yes!when we see a ray of HOPE,it is better to follow it.. when we are in utter darknesse

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil