ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, April 27, 2009


கல்லெறி விழுந்ததால் கலைஞர் உண்ணாவிரதம்


கலைஞர் உண்ணாவிரதம் இருந்து பழரசம் குடித்த குளிர் (பழரசம் குளிர்தானே) ஆறமுன்னர் ராஜபக்ஸ அண்ட் கோ போர்நிறுத்தமும் கிடையாது ஒரு மண்ணும் கிடையாது என்று மறுப்பறிக்கை விட்டு விட்டது. கலைஞர் முகத்தில் ஈயாடவில்லை என்று கேள்வி. திட்டமிட்டு பார்த்துப் பார்த்து செய்த ட்ராமா புஷ்வாணமாகிப் போனதில் கோபாலபுரத்தில் எல்லோரும் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டிருக்கின்றார்களாம்.

போனில் அகப்பட்ட ப.சிதம்பரம் எங்கே தவறு நடந்தது என்று தெரியாது மிடறு விழுங்கிக் கொண்டதாக தகவல். அதே சூட்டோடு கொழும்பிலிருக்கும் இந்தியத் தூதரைக் காச்சு காச்சென்று காச்சிவிட்டார்களாம்.

தமிழீழம் வாய்ஸ் விட்ட ஜெயலலிதா மீது ஏகக் கடுப்பில் இருந்த மகிந்தர் கோஷ்டி தமிழ்நாடு என்றவுடனே வெகுண்டெழுந்து அவ்வாறான அறிக்கை விட்டுவிட்டதாக காரணம் சொல்லப்பட்டதாம். அவர் வேறு இவர் வேறு (நம்மாள்) என்று சொல்லி விளங்கப்படுத்துவதற்குள் தாவு தீர்ந்து விட்டதாம்.

இனி மேல் கவனமாக இருப்பதாகவும் உறுதி தரப்பட்டதாம். இன்னும் ஒரு "முயற்சி" எடுக்கக் கூறப்பட்ட ஆலோசனையை தி.மு.க தரப்பு மறுத்துவிட்டதாம். ஏற்கனவே டங்குவார் கிழிந்து தொங்கிக் கொண்டிருக்கும் இமேஜை எப்படி உயர்த்துவது என்று தீவிர ஆலோசனையில் இருக்கின்றார்களாம்.

அதில் " லண்டனில் இருக்கும் இந்திய தூதரகத்தின் மீது கல் வீசப்பட்டதையும் இந்திய இறையாண்மையையும் இணைத்து உண்ணாவிரதத்திற்கான காரணமாகக் கூறும் ஆலோசனை " கோபாலபுரத்தில் பலராலும் வரவேற்கப்பட்டுள்ளதாம்.

நாளை புதிய அறிவித்தல் கிடைக்கும். எதிர்பார்த்திருங்கள்.

3 comments:

www.mdmkonline.com said...

உண்ணாவிரதம் எனும் தேர்தல் பிரச்சாரம்.
http://www.mdmkonline.com/news/latest/fasting_of_karunanithi.html

கருணாநிதி யின் துரோகங்கள் மாற்று நாடகங்களாக ஈழப்பிரச்சினை யை அவர் கையாள்கிறார்.

கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் ஈழபிரச்சினையில் உற்று பார்த்தல், எப்பெப்போலுதேல்லாம் அம்மையார் ஈழபிரச்சனையை பேசுகிறாரோ அப்பொழுது அவரின் பேச்சு அல்லது செய்திக்கு எதிராய் கருணாநிதியும் எதாவது ஒன்று எதாவது ஒன்று செய்வார்.

இதன் நோக்கம் அரசியல் பரப்புரை சமன் வேலை . அம்மையாரின் செய்தியை இங்கே காணுங்கள் .
அவர் ஒன்று செய்கிறார் நான் ஒன்று செய்து விட்டேன் அவ்வளவுதான் .


* எதிர்கட்சிகள் உண்ணாவிரதம் இருக்கலாம் - ஆட்சியாளர்களுக்கு கோரிக்கை வைத்து .

* அரசை நடுதுபவரே உண்ணாவிரம் இருந்தால் . அந்த உண்ணாவிரதம் யாரின் பார்வைக்கு ? . மத்திய அரசின் பார்வைக்கு என்றால் இவரது திமுக கட்சியும் மத்திய அரசி ஒரு அங்கம் தானே ? பின் ஏன் இந்த உண்ணாவிரதம் சென்னையிலும் நெல்லையிலும் உள்ள தமிழர்களை நோகியா உண்ணாவிரதம்? அவர்கள் இலங்கை சென்று போரை நிருதுவார்கள அல்லது அவர்களால் முடியுமா? ஒரு பக்கம் காங்கிரஸ் அமைச்சருக்கு எதிராய் வேலைபார்த்த மாணவர்கள் காங்கிரஸ் அரசுக்கு எதிராய் பரப்புரை செய்த தோழர்களை கைது செய்தது கருணாநிதி அரசு . இங்கே செய்தியை பாருங்கள் ,
http://www.mdmkonline.com/news/latest/tamil_likes_arrested.html
http://www.mdmkonline.com/news/latest/29703007298029903021298629922980302129803007299330212965.html

* மறுநாளே தாம் உண்ணாவிரதம என்கிறார் . எதை நம்புவது அல்லது அவரின் உண்மையான நோக்கம் என்ன .? தமிழர்கள் இழிச்சவாயர்கள ?
இந்த செய்தியை பாருங்கள் ,
http://www.mdmkonline.com/article/avoid_congress__dmk/pc_and_srilanka_minister_in_same_statement.html


* இன்னும் இரண்டு நாளில் போரை முடிவுக்கு கொண்டுவருவதென்று கருணாநிதி , சிதம்பரம் , மன்மோகன் சிங்க் , ராஜ p அக்ஷே ஆகியோர் சேர்ந்து முடிவெடுத்துவிட்டார்கள் . எனென்றால் போரை நடத்துவது இந்த கூட்டணிதான் .
அவர்களின் நாடக இருதிகட்டம்தான் இந்த உண்ணாவிரதம் என்று என்ன தோன்றுகிறது .

* அடுத்து இந்த செய்தியும் கருணாநிதியின் தூக்கத்தை கெடுத்து விட்டது .
http://www.mdmkonline.com/news/latest/295129942969302129653016_29703014298530212993301529853021.html

* எனென்றால் விடுதலைபுலிகளை சர்வாதிகாரிகள் மற்றும் அழிக்கப்படவேண்டியவர்கள் என்ற தோரணையில் கருணாநிதியின் பேச்சு இருந்தது .
இந்த செய்தியையும் பாருங்கள்


* நான் சொல்வதை மத்திய அரசு கேட்கவில்லை என்று கருணாநிதி சொன்னால் அது இந்த நூற்றாண்டின் சிறந்த ஜோக்குகளில் ஒன்றாகும் . ஏனென்றால் மத்திய அல்லது மாநில அரசாங்கம் நல்ல புரிதலில் உள்ளது . இரு அரசாங்கங்களும் ஒன்றுக்கொன்று முட்டுகொடுதுகொண்டிருக்கின்றன , இந்த இரு அரசாங்கம் இணைந்து மூன்றாவதாய் இலங்கை அரசாங்கத்திற்கு முட்டு கொடுத்து போரை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள் அதுவே உண்மை .

* நேற்று அமெரிக்கன் அரசாங்கம் இலங்கைக்கு எச்சரிக்கை விடுதுவிட்டது

* அதை தொடர்ந்து ஜீ எட்டு நாடுகளும் போரை நிறுத்த நிர்பந்தம் கொடுத்துவிட்டது . இதனால் போரை நடத்தும் இந்தியாவிற்கு தர்ம சங்கடம் ஆகிவிட்டது என்பதைவிட பெரும் அவமானமும் ஆகிவிட்டது .

* போரை நாம்தான் நடுதுகிறோம் என்பதை உலகம் பகிரங்கமாய் உணரதொடங்கிவிட்டது . இந்த நிலைமையில் இந்த ஈழ போர் விஷயத்தை அப்படியே பூசி மொழுகி அமுக்கவேண்டும் .

* ஆகவே இன்னும் நிச்சயம் போர் இரண்டு நாளில் நிற்கும் . அதற்குள் தமிழர்கள் குறைத்து பத்தாயிரம் பேர்களை கொள்ளுவார்கள் . அதற்குத்தான் இலங்கை அனுமதி கேட்டுள்ளது இந்தியாவிடம் .


* இடையில் இங்கே இந்தியாவில் கருணாநிதி , மன்மோகன் , சிதம்பரம் சோனியா கூட்டணியின் நாடகம் . தேர்தலுக்காக .

* ஒரே ஒரு சந்தோசம் , இன்னும் சிறுது நாளில் ( இரண்டொரு நாளில் ) இலங்கையும் போர் நிறத்த செய்தியை அறிவிக்கும் என்பதுதான் அது எஅர்கனவே முடிவானதுதான் .


* வாழ்க கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் . வெல்க அவர்களது கூட்டணியின் ஈழப்பற்று .

http://www.mdmkonline.com/news/latest/india_directly_supporting_sla.html


- தோழர் .

பதி said...

//அதில் " லண்டனில் இருக்கும் இந்திய தூதரகத்தின் மீது கல் வீசப்பட்டதையும் இந்திய இறையாண்மையையும் இணைத்து உண்ணாவிரதத்திற்கான காரணமாகக் கூறும் ஆலோசனை " கோபாலபுரத்தில் பலராலும் வரவேற்கப்பட்டுள்ளதாம்.//

இப்படி உங்களுக்கு வரும் இரகசிய தகவல்கள் அனைத்தையும் இணையத்தில் போட வேண்டாம்.. கொலைஞரின் அடிப்பொடிகள் இப்பொழுதே ஒரு பதிவை தயார் செய்து draft'ல் போட்டு வைத்துவிட்டுத் தான் தூங்கச் செல்வார்கள் !!!!

supersubra said...

இலங்கை அரசின் அதிகார பூர்வ செய்தி தளம்

LTTE யை அடியோடு ஒழித்து கட்ட இதை விட சிறந்த தருணம் கிடையாது. Former IPKF Commander அசோக் மேத்தா.

http://www.news.lk/index.php?option=com_content&task=view&id=9387&Itemid=44

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil