ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, April 28, 2009


இது தான் காதல் என்பதா? சோனியா , கருணாநிதி, சி.பி.ஐ


நளினி விவகாரம்:

முறைப்பாடு : சி.பி.ஐ. விசாரணையில் கடந்த 10 ஆண்டாக எந்த முன்னேற்றமும் இல்லை.18 ஆண்டுகளாக இந்த 7 பேரும் சட்டவிரோதமாக ஜெயிலில் உள்ளனர். ராஜீவ்காந்தி கொலைக்கும், இவர்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை.

ஆகவே இவர்களை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய வேண்டும். இந்த மனுமீதான விசாரணை முடியும்வரை 7 பேருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்


சி.பி.ஐ. பல்முனை கண்காணிப்புக் குழு எஸ்.பி. ஈஸ்வரமூர்த்தி பதில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில், ஜெயின் கமிஷன் அறிக்கை அடிப்படையில் கொலை சதி குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையில்
நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.இந்த மனுவை தாக்கல் செய்ய மனுதாரருக்கு அடிப்படை தகுதி கிடையாது.உச்ச நீதிமன்றம் தண்டித்த பிறகு தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்ய ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது.மனுவில் உள்ள குற்றச்சா‌ட்டுக்கள் அனைத்தும் பொய்யானவை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

(கருணாநிதி)தமிழக அரசின் உள்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், "இந்த மனு விசாரணைக்கு ஏற்றதல்ல என்றும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து 10 ஆண்டுகள் கழித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை விசாரணைக்கு ஏற்காமல் தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

64 கோடி ரூபாய் போபர்ஸ் ஊழல் வழக்கில் இடைத்தரகராகச் செயல்பட்ட இத்தாலியத் தொழிலதிபர் ஒட்டாவியோ குவாத்ரோச்சிக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட சிவப்பு சுற்றறிக்கை விவகாரம்:

(இட்டாலி மாபியா) குவாத்ரோச்சி மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயின் தேடுதல் பட்டியலில் நீண்டகாலம் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் சிபிஐ கேட்டுக்கொண்டதற்கிணங்க அவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட 12 வருட சிவப்பு சுற்றறிக்கை சர்வதேச போலீசின் (இண்டர்போல்) இணையதளத்திலிருந்து வாபஸ் பெறப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நீதிமன்றத்துக்கு ஏப்ரல் 30ந்தேதி சிபிஐ அதிகார்வபூர்வமாக தெரிவிக்கும் எனத்தெரிகிறது. '1999 முதல் நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. சட்டரீதியான ஆலோசனையின் அடிப்படையில் சிபிஐ இந்நடவடிக்கையை எடுத்துள்ளது என்றும் இதுகுறித்து வழக்கின் அடுத்த விசாரணையின்போது நீதிமன்றத்துக்குத் தெரிவிக்கப்படும்' எனவும் சிபிஐ செய்தித்தொடர்பாளர் ஹர்ஷ் பாஹல் தெரிவித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் பதவிக்காலம் முடிய மூன்று வாரங்களே உள்ள நிலையில் குவாத்ரோச்சிக்கு ஆதரவாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் (ஏய்யா மக்களே உங்களுக்கு இது முக்கியம்னு தெரியுமா?) வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.


சட்டரீதியான (64 கோடி மக்கள் பணத்தைக் களவெடுத்தவனை நல்லவன் எனக் கூறும் சட்டமும் இருக்கின்றதா?)ஆலோசனையின் அடிப்படையில் சிபிஐ இந்நடவடிக்கை (?)

இன்னும் கைது செய்யப்படாத விசாரணை செய்யப்படாத குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் பற்றி எப்படி?என்ன?எவ்வாறு? முடிவெடுக்க முடியும்.

(அப்படியென்றால் பிரபாகரனையும் அவ்வாறு விடுவதில் காங்கிரஸுக்கு இந்திய அரசிற்கு என்ன தடை இருக்கக் கூடும்? தெரிந்தவர் சொல்லுங்கள்)

இது யாரால் ( இட்டாலிய மாபியா சோனியாவால்) யாருக்காக (இட்டாலிய மாபியா குவாத் ரோச்சிக்காக ) எடுக்கப்பட்டது என்று கொள்ளலாமா? மக்களே !!


உங்கள் ஓட்டு இவர்களுக்கா???

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil