ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, April 12, 2009


கிணத்துத் தவளைகளா ? நம் அரசியல் வாதிகள்


தேர்தல் களம் சூடு கண்டிருக்கின்றது. இன்னும் இன்னும் நம் அரசியல்வாதிகள் முத்துக்கள் உதிர்க்கப் போகின்றார்கள். உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாட்டைக் கட்டி ஆளப்போகும் இவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கின்றது. இவர்களின் கருத்துக்கள் எல்லாம் தனி மனிதத் தாக்குதல்களை மீறி எதுவும் இல்லாது வெற்றுக் காகித அம்புகளாக விழுந்து தொலைக்கின்றன.

ஒளிரும் இந்தியக் கனவு ஒவ்வொரு இந்தியன் மனதுள்ளும் இருந்து தொலைக்கின்றது. அது தான் பிரச்சினையே. இவர்களின் அரை வேக்காட்டுத்தனமான பேச்சுக்களை ஜீரணிக்க முடியாது இருக்கின்றது. பா.ஜ.க வின் ஆயுதம் முஸ்லீம்களையே குறி வைத்துத் தாக்குகின்றது. இந்திய முஸ்லீம்கள் என்ன அன்னிய தேசத்தவரா? அவர்கள் இந்நாட்டின் பிரஜைகள் இல்லையென்று இவர்களிடம் யார் சொன்னது?

மிக வெளிப்படையாகவே முஸ்லீம்களின் மீதான வெறுப்பைக் கக்குகின்றார்கள். இந்தியாவின் ஒளிரும் எதிர்காலம் பர்றி யாருக்கும் கவலையில்லை. வார்த்தை ஜாலங்களினால் எதிரிகளை உருவாக்குகின்றார்கள். காஸ்மீர் மக்கள் இந்தியர்கள் இல்லையா? அவர்களின் பிரச்சினையை நாம் தீர்க்காமல் வேறு யாரால் தீர்க்க முடியும்?

பாகிஸ்தானியர்களை இப்பிரச்சினையில் முடிச்சுப்போட்டது எம்மைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்? பிரச்சினைகளைத் தீர்க்க வழி தெரியாத அரசியல்வாதிகள் புதுப் பிரச்சினையை உருவாக்குகின்றார்கள். பிரச்சினைகளின் ஊடே தங்கள் காலத்தைக் கடத்துகின்றார்கள். எதிர்கட்சிகளின் கருத்துக்களை ஆரோக்கியமான அரசியலில் பயன் படுத்தாது தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டி கொச்சைப் படுத்து கின்றார்கள். ஒரு கலைஞரும் ஜெயலலிதாவும் தானா தமிழ் நாட்டின் பிரச்சினை.

இந்தியாவின் வல்லரசுக்கனவை வழிப்படுத்தும் அறிஞர்களும் விஞ்ஞானிகளும் தொழிலாளர்களும் அரசியல்வாதிகளின் கட்டுப்பாட்டில் அடிமைப்பட்டுக்கிடப்பது பெரும் கொடுமை.

தன் குடும்பம் தன் தொண்டன் தன் கட்சி என்பதை மேவி உலகத்தை பார்க்கும் பக்குவம் இவர்களுக்கு வாராது போனதேன்?

முன்னைநாள் இந்தியப் பாது காப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்ணாண்டஸை அமெரிக்க விமான நிலையத்தில் நிர்வாணப்படுத்தி பரிசோதனை செய்தது பற்றி இங்கு யாருக்கும் வெட்கம் இல்லை. தமிழ் நாட்டின் அரசியல் வாதிகள் கோமாளிகள் என்று இலங்கை இராணுவ தளபதி கூறியது பற்றி யாருக்கும் துக்கமில்லை.

சொந்த தமிழ் மக்களைக் கொண்டு போடும் சிங்கள கொடுங்கோலருக்கு வக்காலத்து வாங்க நான் நீ என்று போட்டி போடுகின்றார்கள். இவர்களைப் பற்றி வெளியுலகத்தில் என்ன பேசிக்கொள்கின்றார்கள் என்னும் ஞானமோ அக்கறையோ இல்லாது இருக்கின்றார்களே? குறைந்த பட்ச உலக அறிவு கூட இல்லாது எப்படி இவர்களால் அரசியல் வாதிகளாக இருக்க முடிகின்றது.

இவர்களைத் தெரிவு செய்ய ஒரு தேர்தல் ,அவர்களை நம்பி நம் தலைவிதியை ஒப்படைக்க ஒரு தேசம்.

குறிப்பு: கரை வேட்டிகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும். வேட்டியை அவிழ்த்து சோதனை செய்யும் போது ஏதாவது புரிகின்றதா என்று பார்க்க வேண்டும்.

எத்தனை காலத்திற்குத் தான் மக்களே அவமானப்படுவது?

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil