ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Wednesday, April 29, 2009


" பசி " தம்பரம்


"பசி" தம்பரம் புதிசா ஒரு ஜோக்கடிச்சிருக்காப்பல. இந்தியா சிங்கள அரசுக்கு ஒண்ணும் உதவி செய்யல எல்லாம் வேலையத்த பயலுவள் கதை அப்படீன்னுருக்கார்.. ஆனா சிங்களப் படை தளபதியும் சிறிலங்கா பாதுகாப்பு படைச் செயலாளரும் நெக்குருகி இந்தியாவுக்கு நன்றி சொல்லியிருக்காங்க. அவங்க பெரிய மனசுக்காரங்க. நன்றி மட்டும் சொன்னாப்போதாது என்னென்ன தந்தாங்க எப்பிடியெப்படித் தந்தாங்கன்னு பட்டியல் வேற சொல்லிப்புட்டாங்க...

இந்தப்பயபுள்ள "பசி"தம்பரம் என்னடான்னா கோமாளி வேஷம் போட்டு எலக்ஷன் மேடையெல்லாம் கூத்தடிச்சிட்டிருக்காப்பல. இம்மாம் ஜனங்க செத்துப்புட்டாங்க ஈழத்தில.. உலகத்தில இருக்கிற தமிழ் மக்கள் எல்லாம் அழுதுகிட்டிருக்காங்க..

"இடுக்கண் வருங்கால் நகுக"ன்னு வள்ளுவர் சொல்லியிருக்காகல்ல..இந்த மக்கள் தான் சிரிக்கிறாகல்ல..நாமளாவது சிரிப்புக் காட்ட்டாலாம்னு பபூன் வேஷம் போட்டிருக்காப்பல..பிரபாகரனையும் தோழர்களையும் சரணடைங்க ..உயிருக்கு ஒண்ணும் டேஞ்சரில்லன்னு மெகா காமடி பண்ணியிருக்காப்பல... இம்புட்டுச் சனங்களையும் இத்தாலி சானியாள்கூட சேர்ந்து கொல்லுரதே அவங்களைப் புடிச்சு தூக்கில போடன்னு இந்த உலகத்துக்கே தெரியும் இவரென்னடான்னா .. காமடி பண்ணிக்கிட்டிருக்காரு..

முன்னைய ராஜாக்க காலத்தில அரசர் கூட ஒரு காமடியன் இருப்பாராம் ,தெனாலி ராமன் பீர்ப்பால்னு... இப்போ அப்படியெல்லாம் தனியா இருக்கிரதில்ல.. ஏன்னா ராஜாக்களே இப்போ காமடியனா இருக்காங்க.. அப்படிப்பட்ட காமடியனுக்குள்ளே இவரு பபூன் வேஷம் போட்டிருக்கப்பல...

பர்சை ஆட்டையைப் போட்டுட்டான்னு ஒரு ஆறு வயசுக் குழந்தையை என்னா அடி அடிச்சு சித்திர வதை பண்னினாக நம்ம போலீஸ்காரவுக... நாமெல்லாம் டீ.வி யில பார்த்து மனு நீதிச் சோழன் காலத்தில வாழுறாப்பல மிதப்பில நடந்தோமே..

அப்படிப்பட்ட ஊரில 64 கோடி களவெடுத்த களவாணி இத்தாலி பேமானிய விட்டிடலாம்னு சொல்லிப்புட்டாக..முன்னாடி விசாரிச்ச சி.பி.ஐ ஆபீஸரே சொல்லியிருக்காக ..அவரு கமிஷன் வாங்கியதற்கு ஆதாரம் இருக்குன்னு ...சுவிஸில போயி 500 பக்கத்திர்கு ஆவனமெல்லாம் வாங்கி வந்திருக்காப்பல...

இது முன்னாடியும் ஒரு பதிவு போட்டிருக்கேன்..யாரும் கண்டுக்கல்லே.. சிலம் டாக் இந்தியான்னா கைதட்டி சந்தோஷப்பட்டுக்கிடுவோம்.. நம்ம யார் கிட்டேயும் இப்போ சொரணையே கிடையாதுங்க ...தோலெல்லாம் இப்போ நல்ல ஸ்ராங்காகிக்கிட்டே வருதுங்க..நம்ம தோலைத்தாண்டி எதுவுமே உள்ளார போவாதுங்கோ...

அப்பிடி நாமெல்லாம் இருக்கப்போ "பசி" தம்பரம் காமடி பண்ணுரதில என்ன தப்புன்னுரேன்...
இந்த பபூனுக்கு வட நாட்டில செருப்படி கொடுத்தானுங்கோ..ஆனா நாம மட்டும் ..நம்ம பிரதிநிதியா அனுப்பி வைக்கிரோம்.,, பாருங்க என்னா பெருமை எங்களுக்கு .. எங்க சார்பில செருப்படி வாங்கி வர ஒரு ஆளிருக்குன்னு எங்களுக்கு எவ்ளவோ பெருமை... ஏன்னா நாமெல்லாம் "கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மூத்த குடி" பாருங்க..

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil