ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, April 30, 2009


ஐயோ மக்களைக் காப்பாத்துங்கள்- கலைஞர்


உங்களுக்கு நான் ஒரு முக்கியமான விடயத்தைச் சொல்லப்போறேன் என்று ஜெயலலிதா ஒரு சுவாரஸ்யம் நிறைந்ததும் மனம் பதைபதைக்கக் கூடியதுமான விடயத்தைக் கூறியிருக்கின்றார். மிகவும் நம்பகமான வட்டாரங்களிலிருந்து சந்த தகவல் என்று கருணாநிதி -ராஜபக்ஸ -சோனியா இணைந்து செய்த கூட்டுச் சதி பற்றி வெளிப்படுத்தியுள்ளார். எடுத்ததற்கெல்லாம் அவதூறு வழக்குப்போடும் கருணாநிதி இது பற்றி வாயே திறக்காதது ஏன்?

ஆகவே அவர் இந்தக் குற்றச்சாட்டை ஏற்றுக் கொள்கின்றார் என்ற பின்னணியில் அவரிடம் க்ரேட்கப்பட வேண்டிய சில விடயங்கள் இவை.

திடீர்ப் போர் நிறுத்தம் அதிரடி உண்ணாவிரதம் பற்றித்தான் சொல்லுகின்றேன். இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்ற ஒரே காரணத்தை மனதில் வைத்து தமிழரின் எதிரியான ராஜபக்சேயுடன் இணங்கிப் போன கேவலமான காரியத்தை கலைஞர் செய்தார் என்பது வேதனைக்குரியதே.

இவருக்கும் லங்கா ரத்னா இந்து ராம் போன்றவர்களுக்கும் என்ன வித்தியாசம். அவர் நான் தமிழர்களின் எதிரி என்று சொல்லிலும் செயலிலும் நேரிலும் கூறிச்செய்பவர். ஆனால் இவரோ தமிழர்களின் தலைவன் என்று சொல்லிச் சொல்லியே தமிழினத்தைக் காட்டிக்கொடுப்பவர்.

"தேர்தலில் ஜெயலலிதாவிற்கு மிகவும் சாதகமான சூழல் நிலவுகிறது. தனி ஈழம் அமைப்பேன் என்று அவர் தெரிவித்து விட்டதால் ஜெயலலிதாவிற்கு வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக இருக்கிறது. நாளைக்கே அவர் சொல்கிறபடி மத்திய அரசு அமைந்துவிட்டால் இலங்கைக்கு இராணுவத்தை அனுப்புவார் ஜெயலலிதா. ஜெயலலிதா சொன்னால் செய்துவிடுவார். அவர் உறுதியான முடிவை எடுக்கக் கூடியவர். பிறகு உங்களுக்குத்தான் பிரச்சனை. எனவே அப்படி நடக்காமல் இருக்க நான் சொல்வதைக் கேளுங்கள். தேர்தல் நடக்கும் தேதியான மே மாதம் 13ஆம் தேதிவரை உண்மையாகவே போர் நிறுத்தம் செய்யுங்கள். அப்போழுதான் நான் வெற்றி பெற முடியும். நான் வெற்றி பெற்று மீண்டும் என் தயவில் மத்திய அரசு அமைந்தால் நீங்கள் இலங்கைத் தமிழர்களை உங்கள் விருப்பம் போல் எளிதாக ஒழித்துக் கட்டி விடலாம். " - ஜெயலலிதா

இப்படி ஒரு கீழ்த்தரமான எண்ணமும் சிந்தனையும் கொண்டவரையா நாங்கள் தமிழினத் தலைவர் என்று காலாதி காலமும் போற்றி வந்தோம்.

கடமை ,கண்ணியம் ,கட்டுப்பாடு என்ற அண்ணாவின் இலட்சியத்தை வழி முறையை கலைஞர் எப்போதோ காற்றில் விட்டு விட்டார் என்பதை நாம் அறிவோம். ஆனால் தன் மானத்தையும் இழந்து எதிரியின் காலில் தெண்டனிட்டு இரந்து நிற்பார் என்று நாங்கள் நம்பியிருக்கவில்லை. ஆனால் இப்போது நம்புகின்றோம். காலம் பெரிய ஆசான். மழையில் முளைத்த காளான்களை உடனும் இனம் காட்டிவிட்டிருக்கின்றது.

"நீங்கள் எனக்கு உதவினால் நான் உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன். எனவே உங்களுக்குப் பிரச்சனை வராமல் தடுக்க மே மாதம் 13ஆம் தேதி வரை போர் நடத்தாமல் பொறுத்திருங்கள். இங்கு தேர்தல் முடிந்தவுடன் உங்கள் விருப்பப்படி செய்யுங்கள் என்று கருணாநிதி" - ஜெயலலிதா

என்னே ஒரு நாணயம் ... தலைவன் என்று நம்பிப் போற்றியிருந்த மக்களுக்குக் கொடுக்கும் நற்செயல்.

குறளோவியம் எழுதிய கலைஞரே படிக்காத ஒரு குறளை ஞாபகப் படுத்த வேண்டியிருக்கின்றது.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் -உய்வில்லை
செய்நன்றி கொன்ற மகற்கு.

"அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் "

அதற்கான நேரம் வந்து விட்டதென்றே படுக்கின்றது. தமது அந்திமக் காலத்தின் வீழ்ச்சியைக் கலைஞரே உணரத் தொடங்கி விட்டார்.

"நான் உங்களைத் தான் நம்பிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் இருக்கும் போது, உங்கள் நெஞ்சில் நான் இருக்கும் போது ஏன் கவலைப்பட வேண்டும். இந்த ஜனநாயக புனிதப் போரில் பார்லிமென்டில் நமது கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்று ..." -கருணாநிதி

அவர் வார்த்தைகளிலேயே தோல்வியின் முகத்தைத் தரிசிக்கத் தொடங்கி விட்டார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார். இத்தனை வருட காலம் அவரைச் சூழ்ந்திருந்த பெருமை புகழ் ஞானம் கெளரவம் கல்விச் செருக்கு அத்தனையும் அவரை விட்டு ஓடிவிட்டது. மக்கள் மீது இருந்த நம்பிக்கையும் போய் விட்டது. இறுதி இறுதியாக தொண்டர்களைப்பார்த்து கெஞ்சும் இழி நிலை வந்து விட்டது.

தேர்தல் எக்காலத்திலும் புனிதப்போர் அல்ல. புனிதப்போர் என்பது கொண்ட கொள்கைக்காகவும் நம்பிக்கைக்காகவும் போராடுவது. அது மகத்தான தியாகத்தை முன்னிறுத்தி செய்யப்படுவது. ஆண்டவனுக்கு நேர்மையாகச் செய்வது. ஈழ விடுதலை ஒரு புனிதப்போர். துன்பப்படும் மக்களுக்காக அவர்களின் விடுதலைக்காக முன்னெடுக்கப்படுவது.

தேர்தல் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை வருவது. பருவ காலம் போல மாறிமாறி வருவது. சட்டபூர்வமானது. ஜனநாயகத்தைக் காப்பாற்றும் ஒரு வழி முறை . பொருத்தமற்ற வார்த்தைகளைப் பாவித்து மக்களைக்குழப்புவதே ஒரு ஏமாற்றுத்தனம்.

"அவர்களும், நானும் எதிர்பார்ப்பது, கட்சியினரின் கடின உழைப்பே. எறும்பு போல சுறுசுறுப்பு காட்டி தொண்டர்கள் உழைப்பர் என எனக்கு தெரியும். உழைத்த களைப் பில் உறங்கிவிடக் கூடாது என்பதை உள்ளத்தில் நிறுத்தி உழைக்க வேண்டும் "-கருணாநிதி

ஏன் ? மக்களுக்கு இவர் இதுவரை என்ன செய்தார் ?


"தன்னலம், குடும்ப நல ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. அதன் தீமை, வேதனையை நீங்கள் தாங்கி வருகிறீர்கள். 2004ல் உங் களால் ஓட்டுப் பெற்று மத்தியில் தி.மு.க., ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைந்து, கடந்த ஐந் தாண்டில் நீங்கள் என்ன பயன், நன்மை பெற்றீர்கள். நாட்டில் பொருளா தார சீரழிவு. நதிநீர் பிரச்னை தீர்க்கப்படவில்லை. விவசாயிகள் தற்கொலை, வேலையில்லா திண்டாட்டம். விலைவாசி உயர்வுதான் உங்களுக்கான பரிசு. நிர்வாக திறமையின்மை, அலட்சியம், மணல், அரிசி கடத்தல், அராஜகம், ரவுடிகள் அட்டூழியம் போன்றவைகளைத்தான் கருணாநிதி தலைமையிலான அரசு செய்து வருகிறது. மின்சாரத்துக்கு விடுமுறைவிட்டு விவசாயத்தை அழித்துவிட்டனர்." -ஜெயலலிதா

இதற்காகவா ? தொண்டர்கள் உழைக்க வேண்டும். உழைப்பின் களைப்பில் உறங்கும் தொண்டனையும் வருத்தும் என்னே உயர்வான மனம்.

நன்கு சிந்தித்து அதனால் மக்கள் எடுக்கும் முடிவின் மூலம் தி.மு.க -காங்கிரஸ் கூட்டணியைத் தோற்கடிப்பதே கலைஞர் இதயத்தை இனிக்கச் செய்யும் மக்கள் கடமையாகும்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil