
இன்று அ।திமு।க கூட்டணியின் தேர்தல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றிருக்கின்றது। தி।மு।க வின் குடும்ப ஆட்சியை முடிவிற்குக் கொண்டு வரவும் கச்சதீவை மீட்டெடுக்கவும் மணல் கடத்தலைத் தடுக்கவும் மின்சாரம் தடையின்றிக்கிடைக்கவும் அ।தி।மு।க வை ஆட்சிக்குக் கொண்டுவரும் படி வேண்டு கோள் விடுக்கப்பட்டிருக்கின்றது।
என்னடா இது। இது தானா ? தமிழகத்தின் பிரச்சினை। தமிழக மக்களின் கஷ்டங்கள் ...கச்சதீவு இல்லையென்பதனாலோ மணல் கடத்துவதாலோ மின்சாரம் விட்டுவிட்டு தருவதனாலோ ஏற்பட்டதல்ல என்று யாராவது அம்மணிக்கு எடுத்துச் சொல்லுங்களேன்।
நடைமுறை தெரியாத மக்களின் துயரங்கள் பற்றிய தெளிவில்லாத அக்கறையில்லாத அசமந்தமான கிணற்றுப் தவளைகள் போன்ற அறிவற்ற....இத்தகைய அரசியல்வாதிகளைப் பெற்றுக் கொள்ள நாம் என்ன தவம் செய்திருக்க வேண்டும்?
கிணற்றுத் தவளைகள் போல கீச்சுக் கீச்சென்று கத்தும் இந்த அறிவற்றவர்களை நாடுகடத்தும் பொது நல சட்டம் ஒன்றிருந்தால் எவ்வளவு நல்லது।
குடும்ப ஆட்சியால் கோடி கோடியாகச் சுருட்டும் கும்பல் தி।மு।க என்று குற்றஞ் சாட்டும் இவரும் ஒன்றும் அப்பழுக்கில்லாதவர் அல்லவே। ஊழலில் திளைத்தவர் அல்லவா?
பாண்டியனை வென்ற கண்ணகி போல 40 வெல்லுவோம் என்பது அ।தி।மு।க வின் கூட்டுக்களவாணி தா.பாண்டியன்।
40 உம் வெல்லுவதற்கு உங்களுக்கு வோட்டுப்போட மக்களுக்கு என்ன செய்து கிழிக்கப்போகின்றீர்கள் என்று ஒரு முறை சொன்னால் நல்லது। அதை கேட்டாலாவது குற்ற உணர்வில்லாது ஜனநாயகக் கடமையைச் செய்ய் மக்களுக்கு ஏதுவாயிருக்கும்।
ஒன்றுமே செய்யாத உங்களுக்கு 40 ஒரு கேடா?
2 ரூபாய்க்கு அரிசி -ஆடம்பரப்பொருள்
இலவச கலர் டி வி -அத்தியாவசியப் பொருள்
இது தான் இந்தக் கேணையர்களின் பொருளாதார கணக்கு।
இலவசங்களே எங்களுக்குத் தேவையில்லை ஐயா। அடிப்படைக்கல்வி। வேலைவாய்ப்பு நீதியான சமூக ஆட்சி தந்து விடுங்கள் ... 40 என்ன? 400 ஏ தருவோமே?
உங்கள் ஊழல் பற்றிப்பேசிப்பேசியே ஆட்சிக்காலத்தை முடிக்கின்றீர்களே? மக்கள் என்ன மந்தைகளா?
திருட்டுக் கழகங்களுக்கு மாற்று என்ன? சிந்திப்போம்.
குறிப்பு: தென் சென்னையில் ஒரு சரத்பாபுவைப் போல படித்த இளைஞர்கள் முன் வரவேண்டும்। மாற்றம் இவ்வாறுதான் வரமுடியும்।
 
 
 Posts
Posts
 
 



 
 


No comments:
Post a Comment