ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, April 13, 2009


காதல் வலியைக் கண்டதுண்டோ ..சூடாமணி

ஜூஸ் கொடுத்து வளர்த்த கிளி



இந்தத் தேர்தல் தலைவர்கள் எல்லோருக்குள்ளும் உற்சாகத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. சிலர் மனதுள் குழப்பத்தையும் எதிர்காலம் பற்றிய நிச்சயமின்மையையும் விதைத்து விட்டிருக்கின்றது.

அ.தி.மு.க வின் இரட்டை இலையில் சின்ன இலையாக இருந்த கலிங்கப்பட்டி வீரனை தேர்தல் சூறாவளி சருகாக உதிர்த்து விட்டிருக்கின்றது. தனது அரசியல் எதிர்காலம் பற்றி நிறையவே யோசிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் அவர் இருக்கின்றார்.

ஒரே உறையில் வைத்துக்கொள்ள முடியாத இரண்டாவது கத்தியாக வீசியெறியப்பட்டதில் இருந்து அரசியல் ஸ்திரம் பறிக்கப்பட்ட நிலையிலேயே காலம் துரத்திக்கொண்டிருக்கின்றது.

பெரும் தொண்டர்கள் ஆதரவோடு பிரிந்து ம.தி.மு.க உருவான போது தி.மு.க அ.தி.மு.க விற்கான மாற்றாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும் மக்களின் தீர்ப்பில் ம.தி.மு.க வை உள்வாங்க மக்களுக்கு கால அவகாசம் தேவைப்பட்டது உணர்த்தப்பட்டது. எல்லோரும் எம் ஜி ஆர் ஆவது முடியாதது தானே. சிலருக்கு மட்டும் தான் அந்த மச்சம் உண்டு. அது வை கோ விற்கு இல்லை.

அதற்குள் பொறுமையின்றி கூட்டணி ஜோதியில் வை.கோ வும் கலந்து விட மக்களுக்கும் அந்த அவகாசம் தேவைப்படாமலேயே அவரை மறந்து விட்டிருந்தனர். இருந்த போதும் வை கோவின் ஈழத் தமிழர்களின் பால் இருந்த பற்றுதலும் அப்பழுக்கற்ற தலைவர் என்ற நல் மதிப்பும் ஓரத்தில் அவர் மேலான இரக்கத்தைச் சுரந்து கொண்டே இருந்தது.

4இற்கும் 3இற்கும் அவர் இடம் மாறிக்கொண்டிருந்தது ஒரு சலிப்பையும் ஏற்படுத்தி விட்டிருந்தது. போடாவில் போட்ட பொண்ணின் பின்னால் சென்றது அவர் ஆண்மை பற்றிய கேள்வியையும் உயர்த்தியிருந்தது. தொண்டர்களின் தளராத உழைப்பிருந்தும் பிரபல்யமான இரண்டாம் மட்டத் தலைவர்களை உருவாக்காது விட்டது பெரும் பின்னடைவைக் கொடுத்தது. இருந்த ஒன்றிரண்டு பெருச்சாளிகளும் பசையுள்ள இடம் நோக்கி நகர அரசியல் தனிமை வை கோ வைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றது.

கடந்த தேர்தலைப் போல இந்தத் தேர்தலில் நெல்லை மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது சங்கரன் கோவிலுக்கு அருகேயுள்ள கலிங்கத்துப் பட்டிக்கு ஜெயலலிதாவின் விஜயம் இருக்கப்போவதில்லை. அவரை மேளதாளத்துடன் வரவேற்கும் மனநிலையில் வை கோ வும் இல்லை. அந்தத் தேனிலவுக் காலம் எப்போதோ முடிந்து விட்டது. ஜூஸ் குடித்து வளர்ந்த கிளி இன்று கொத்தத் தொடங்கி விட்டது. தொடர்ந்தும் ஒட்டுண்ணிக் கட்சியாக ம.தி.மு.க இருப்பது வை கோ வை அரசியல் நட்டாற்றில் விட்டு விடும்.

அப்போது என்ன தான் செய்வது? வை கோ முடிவெடுக்க வேண்டிய நேரம் இது.
தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றங்களை எதிர் வரும் சில ஆண்டுகள் கொண்டுவரும் சமிக்ஞை இப்போதே தெரிகின்றது. மு.க என்ற பழுத்த புலி இல்லாத அரசியலுக்குப் பழக்கப்பட வேண்டியது வரலாம்.

இதுவரை ரெளடி ராஜ்யத்தை நடாத்திக் கொண்டிருந்த தி.மு.க வின் தென்மண்டலம் அரசியலுக்குள் நுழைந்திருக்கின்றது. ரெளடி தோரணை மட்டுமல்ல அரசியல் முகமூடியும் நீண்ட காலப் பாது காப்பு என்பதை உணர்ந்திருக்கலாம். தந்தையின் பின்னால் அரசியல் அநாதை யாக யாருக்கு சம்மதம் இருக்கும்.

தி.மு.க வின் வடக்கும் இதை நன்கு உணர்ந்தே இருக்கின்றது. வடக்கும் தெற்கும் போட்ட பலப்பரீட்சையில் கு.ப.கிருஷ்ணன் பலிக்கடா ஆனது தான் கண்டமிச்சம். ஒற்றுமையின் அவசியம் பற்றி போதிக்கப் பட்டிருக்கின்றது . அது எவ்வளவு தூரம் வேலை செய்யும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஆனால் அங்கு குறுநில மன்னர்களும் காரிய வாதிகளும் நிறைந்திருக்கின்றார்கள். முதிய புலிக்கு இருக்கும் மரியாதை பிற்காலங்களில் காணாது போய்விடும். அப்போது எம்.ஜி.ஆரின் பின்னால் அ.தி.மு.க ஜெ அணி ஜானகி அணி என்று இரண்டாகப் பிரிந்தது போலவோ அல்லது உச்சிப் பிள்ளையாருக்கு அடித்த சில்லுத் தேங்காய் போலவோ எது வேண்டுமானாலும் நடக்கலாம். இருவரும் காரிய வாதிகள் என்றால் பெவிக்கால் போட்டு ஒட்டியாவது முறிந்துவிடாது வைத்திருக்கக் கூடும். அது அவர்களின் அரசியல் முதிர்மை ஆளுமையைப் பொறுத்தது.

அ.தி.மு.க விலும் இரண்டாந் தரத் தலைவர்களுக்கிடையே குத்துப்பாடும் வெட்டுப்பாடும் நிறையவே இருக்கின்றது. அதே நேரம் மன்னார்க்குடி குடும்பத்தின் இடுக்கிப் பிடியும் கூடவே இருக்கின்றது. சின்னம்மாவும் அரசியல் கோதாவில் இறங்க இருப்பதாக அரசல் புரசலாக செய்தி கசிகின்றது.

இரண்டு கட்சியிலும் உருவாக இருக்கும் பட்டத்து வாரிசு அறிவிப்பில் பெரும் சுனாமியே எழுந்து வீசக் கூடும்.

இந்தச் சந்தர்ப்பத்தை வை கோ தனது அரசியல் மீள் எழுச்சிக்கான காலமாகப் பயன்படுத்தலாம்.

என்ன செய்யலாம் என்று சிறு ஆலோசன.

1) 2இற்கும் 3 இற்கும் கெஞ்சும் கூட்டணியில் இருந்து வெளிவரவேண்டும். (கூட்டணி விவகாரமே அரைவாசிக்கும் மேல் வை கோவிற்கான ஆதரவை இழக்க காரணமாயிற்று.)

2) அதே 2ஐயும் 3ஐயும் தனித்து நின்றே போட்டியிட்டு அடையலாம். அடைய முயற்சி செய்ய வேண்டும்.

3) வாய்ஸ் உள்ள இரண்டாம் நிலைத் தலைவர்களாக அவர்களை உருவாக்க வேண்டும். மக்களுக்காக குரல் கொடுப்பவர்களாக அறிமுகப் படுத்த வேண்டும்.

4) அப்பழுக்கில்லாத அரசியல்வாதி இமேஜ் விரைவாக மக்களிடம் கொண்டு சேர்க்கும். அ.தி.மு.க, தி.மு.க வில் ஏற்படக் கூடிய சுனாமி பல அதிருப்தியாளர்களை இங்கு கொண்டு சேர்க்கும் என்று நம்பலாம்.

இவையெல்லாவற்றையும் நடை முறைப் படுத்தி மக்கள் மனங்களை வெல்லலாம். மாற்றத்தை எதிர் பார்த்திருக்கும் தமிழக மக்களுக்கு இதை விட சந்தோஷம் வேறு இல்லை.

குறிப்பு: வை கோ வேறு என்ன செய்யலாம். சொல்லுங்கள்.

1 comment:

A.Rajan said...

vaii.ko can wash jeyalalitha's panties

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil