
உணர்ச்சியற்ற டமிலரெல்லாம் ஒன்று கூடினோம்!
உயிர்ப் பலியாகும் ஈழத் தமிழர்க்காக என்றே நாடகமாடினோம்!
அண்ணா காலம் முதல் பார்ப்பனர் ஆதிக்கம் வீழ்த்தவென்று ஆட்சி ஏறினோம்!
மாஞ்சோலை பூஞ்சோலை மாளிகையென்று சொத்து சேர்த்து கூத்தாடினோம்!
ஈழ போருக்கு இந்திரா காந்தியும் ஈழதமிழர் அழிவிற்கு ராஜீவும் வழியைக் காட்டினர்.
இந்தியாவில் மலைமுகடு, வனாந்தரங்களில் சுடாத துப்பாக்கியும் சுடப்
பயிற்சியும் தந்து விடுதலைப் போராளிகளாக்கினர்-அந்த
விடுதலை தளகர்த்தர்க்கிடையே ராவும் சி.பி.ஐயும் வேறுபட்டு நின்று
ஆளுக்கொரு ஆயுதம் கொடுத்து அவர்களை அழித்துக் கொன்றனர்-
பிரித்தாளும் சூழ்ச்சியிலே பிரிட்டிஷாரையும் வெல்லுகின்ற
ஹிந்திய வெறியர்களால் சீரழிந்து போனதய்யா
சிங்கத் தமிழகத்தின் ஒற்றுமை!
அதனாலேயே அங்கும் முடியாத யுத்தம்-
அவர்களை ஆதரிக்கும் இங்கும் அந்தோ; அதே ஈன யுத்தம்!
இருதரப்பிலும் இக்குற்றம் சுமத்தி
இனியும் நாம் சும்மா இருக்க இயலாமல்
இனத்தால் தமிழர் புல் பூண்டும் அறவே செதுக்கப்படாமல் காப்பதற்கே
இன்றோர் வேலை செய்யாது சும்மா இருக்க அனைவரையும் அழைத்தோம்.
இழிந்த தேசிய காங்கிரஸ் கட்சி போர் நிறுத்த தீர்மானமுடன்-
சோனியாஅரசியின் கால் நக்கும் அமைச்சர்கள் கூடி அதே கருத்தை
அறிவித்தமை கண்டோம்.
இன்னும் இன்னும் வேகமாக நம் ஊழலை உயர்த்தி நடுவணரசை
சிக்கலில் தள்ளி முடிப்போம் இலங்கை போரை நட்டாற்றில் விட்டு விடுவோம்
இங்குள்ள சில பேர் தடையாக இருந்து இராவணன் எனக்குப்போட்டியாக
இழிதகை விபீஷணன் பாத்திரம் ஏற்கலாமா? இந்தத்
துரோகிகளின் சேட்டையினால் இழிகுணம் கொண்ட
என் குடும்பம் தோற்றகலாமா?
கபட நாடகமென்று கதைப்போர் ஒலியை நம் காதுகளில் ஏற்கலாமா? அதனாலே
அன்றும் என்றும் இன உணர்வு அழிந்த டமிலரெல்லாம்
ஒன்றாய்க் கூடுவோம்! ஊழல் செய்தே தீருவோம்.
இவ்வாறு கருணாநிதி கவிதையில் கூறியுள்ளா
கவிதையின் மூலம் பார்க்க:http://www.vikatan.com/vccms/vcunicode.asp?artid=945
No comments:
Post a Comment