ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, June 8, 2009


புலியில்லாத இடத்தில் புழுக்களும்..


புலியில்லாத இடத்தில் புழுக்களும் காலைக்கடிக்கத்தொடங்கிவிட்டது. பசி தம்பரம், கண்ணா(டி)நிதியைச் சந்தித்து குற்றுயிரும் கொலையுயிருமாக தப்பிப்பிழைத்திருக்கும் ஈழத்தமிழனுக்கு வாய்க்கர்ரிசி எப்படிப்போடலாம் என்று ஆலோசித்துச் செல்ல இந்த காமடியைப் பார்த்து அடக்கமாட்டாத சிரிப்புடன் இந்த பபூன்களின் விளையாட்டைத் தூண்டிவிட ராஜபக்ஷே சிறப்புத் தூதுவரை கோபாலபுரத்திற்கு அனுப்பியிருக்கின்றார்.

அப்படி அனுப்பப்பட்டவர் வேறுயாருமல்ல. அரசியல் கோமாளி , எந்தக்கட்சி வெற்றி பெற்றாலும் நிரந்தர அமைச்சராக அறியப்பட்ட விலாங்குமீன் செளமியமூர்த்தி தொண்டைமானின் பேராண்டி மலையகம் முழுவதும் வைப்பாட்டிகளை வைத்திருக்கும் காமன் ஆறுமுகன் தொண்டைமான். கூட வந்தது ஹிந்து ராமிற்கும் மற்றவர்களுக்கும் பெண்களைக் கூட்டிக்கொடுத்தும் தண்ணீரில் குளிக்க வைத்தும் புலிகளுக்கும் ஈழத்துத் தமிழர்களுக்கும் எதிராக விஷம் கக்கி எழுத வைத்து ஆறாத சேவை செய்யும் மாமா ஹம்ஸா.

இந்த மாமனும் காமனும் கண்ணா(டி)நிதியோடு என்ன பேசியிருப்பார்கள்? காமத்துப்பாலை கசக்கிப்பிழிந்து பொழிப்பு எழுதியிருப்பார்கள். அவர் தான் முத்தமிழ் வித்தகராச்சே. கடைசியில் ராஜபக்ஷேயின் கோமாளிக்கூத்து நடந்தேற ஆசியும் சம்மதமும் கொடுத்தாயிற்று.

அழைப்பு இது தான்...." இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலையை பற்றி அறியவும், இடம் பெயர்ந்த தமிழர்களை பற்றி தெரிந்து கொள்ளவும் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்து கட்சியினரும் கொழும்பு வர வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே அழைப்பு "

அட உங்களுக்கு எங்களுக்கெல்லாம் தெரிந்ததாயிற்றே என்று அங்கலாய்க்காதீர்கள்.. கலைஞர் என்ன உங்களை எங்களை மாதிரி ..லூசா? இதில் ஏதாவது அரசியல் "சாணக்கியம்" பொடி வைத்து ஒட்டியிருக்கும்.. அதை பிரித்து மேய்ந்து வெளிச்சம் போட்டுக்காட்ட கழகக் கண்மணிகள் இப்போது கோதாவில் இறங்கப்போகின்றார்கள்...பார்த்துக் கொண்டிருங்கள்.

இதற்கு முதல் பசி தம்பரம், கண்ணா(டி)நிதி சந்திப்பில் என்ன கூறியிருந்தார் என்று நினைவிருக்கின்றதா? இல்லாவிட்டால் உங்கள் நினைவூட்டலுக்கு,

"இலங்கைத் தமிழர் பிரச்சினையிலே நாம் அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - இலங்கையிலே உள்ள இடம்பெயர்ந்து அகதிகளாக இருக்கக் கூடிய இலங்கைத் தமிழர்களுக்கு எந்த வகையிலே உதவிகளை செய்வது, எந்த வகையிலே மறுவாழ்வு அளிப்பது, அடுத்து அவர்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வில் என்ன செய்வது "

அட... இதன் தொடர்ச்சிதான் அது என்று படுக்கின்றதா? சொல்லிவைத்து பட்டியல் போட்டு நடப்பதாக எண்ணம் தோன்றுகின்றதா? அப்படியெல்லாம் தோன்றினால் மூடிக்கிட்டு நடப்பதை மட்டும் பார்க்க வேண்டும். அரசியல்வாதிகள் செய்வதெல்லாம் இராஜதந்திரம்,சாணக்கியம்...உங்களுக்குத் தெரிவதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனம்.. சாணி போட்டு மூடி வரட்டிக்குக் காயவிடுகள் உங்கள் அறிவுக்கூர்மையை..

கண்ணா(டி)நிதி போனால் கனிமொழி போகக்கூடாதா? போகலாம்... அவர் தானே வீட்டின் கன்னுக்குட்டி..

அப்பாவோடு காமனும் மாமனும் கதைத்தது ஒரு மணிநேரம்... கன்னுக்குட்டியோடு அரை மணிநேரம்..இதிலிருந்தே கன்னுக்குட்டியின் செல்வாக்குப் புரிகின்றதா?

இவர் போய் என்ன செய்யப்போகின்றார்... சந்தேகம்.. வந்ததே எனக்கும் உங்களைப்போல...ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டிய படி அவர் அங்கு என்ன செய்யலாம் என்று நான் கண்டு பிடித்தது...

சிங்களத்திகளுக்கு சேலை வியாபாரம் செய்யலாம்.. (சேலை கட்டும் சிங்களத்திகள் இன்னும் இருக்கின்றார்களா?)

பொட்டு..மூச்..அவர்கள் மங்கலமாய் எப்போதும் இருப்பதில்லை...

மலையாளிகள் கட்டும் "முண்டா" துண்டு கனஜோராய் வியாபாரம் நடக்கும் (மேனனும் நாராயணனும் இந்த ஒரு விடயத்தில் தான் வேற்றுமையில் ஒற்றுமை கண்டதாகக் கேள்வி ..இலங்கையில் உல்லாசமாக இருந்தபோது)

அப்புறம்... கனிமொழிக்கான உங்கள் "மேலா"ன ஆலோசனைகளை எழுதி அனுப்புங்கள்...

6 comments:

ரங்குடு said...

ஈழத்தமிழர் பிரச்சனை எல்லாம் வெறும் பம்மாத்து இவர்களுக்கு.

இலங்கையில் பினாமியாய் ஒரு டி.வி ஆரம்பிக்கப் போகிறார்கள் கலஞர் டி.வி.க் காரர்கள்.

அதுக்குத்தான் கனி மொழி தயார்ப் படுத்தப்படுகிறார்.

vasu balaji said...

உருப்படியா ஒரு உதவி செய்யாட்டியும் இப்படி சர்வ நாசத்துக்கு வழி தேடுவாங்களா? அப்படி என்ன சிதம்பரதுக்கும் இவருக்கும் ரகசியமோ.நல்லா போட்டு கிழிக்கிறீங்க தோழரே. எவன் என்ன சொன்னா என்ன என் லாபம் எனக்குன்னு நடத்துறாங்க.

இட்டாலி வடை said...

வாருங்கள் ரங்குடு!

அப்போ கனி மொழி இனிமேல் "தானாட தசை ஆட" நடத்தப் போறாங்களா...

நடத்தட்டும் ..நடத்தட்டும்.. பார்ப்பதற்குத் தான் நாங்கள் இருக்கின்றோமே...

இட்டாலி வடை said...

வாருங்கள் பாலா!

எல்லாம் "சிதம்பர"ரகசியம்..அப்பிடின்னு அவங்க நெனைக்கிராங்க ...இன்னும் ஒரு ஐந்து வருடத்தில் பாருங்கள்...

கண்டும் காணான் said...

தற்போதுதான் திடீர் எனக் கண்டுபிடித்தது போல
சில ஜனநாயக இலக்கிய வாதிகளின் பேனா
ஈழப் போர்ராட்ட முறையே தவறு எனும்போதுதான்
புலிகளை இழந்தது , இதயத்தில் சுடுகின்றது

Unknown said...

very good

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil