ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, June 13, 2009


இவர்கள் மரித்துப்போகட்டும்


என் எல்லா வலிகளையும் உங்களுடன்
பகிர்ந்து கொள்கின்றேன்
எல்லா ஆக்கினைகளும் உங்களால்தான்
எனக்காக கூடியிருந்தது
என்னைத் துவைத்துப் போட்டவர்களின்
பிள்ளைகளின் ஓலம் எப்போதும் கேட்காதிருக்கட்டும்
அவர்கள் மனைவியரின் இரங்கலுக்கு
எந்தக்காதுகளும் செவிசாய்க்காதிருக்கட்டும்
எல்லா இம்சைகளுக்கும் அப்பால் இவர்கள்
மரித்துப்போகட்டும் அப்போதாவது
மனிதர்களின் வலியைப் புரிந்து கொள்ளும்
ஒரு தேவ பாசை இவர்களுக்கு கிடைக்கட்டும்..

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil