
என் எல்லா வலிகளையும் உங்களுடன்
பகிர்ந்து கொள்கின்றேன்
எல்லா ஆக்கினைகளும் உங்களால்தான்
எனக்காக கூடியிருந்தது
என்னைத் துவைத்துப் போட்டவர்களின்
பிள்ளைகளின் ஓலம் எப்போதும் கேட்காதிருக்கட்டும்
அவர்கள் மனைவியரின் இரங்கலுக்கு
எந்தக்காதுகளும் செவிசாய்க்காதிருக்கட்டும்
எல்லா இம்சைகளுக்கும் அப்பால் இவர்கள்
மரித்துப்போகட்டும் அப்போதாவது
மனிதர்களின் வலியைப் புரிந்து கொள்ளும்
ஒரு தேவ பாசை இவர்களுக்கு கிடைக்கட்டும்..
 
 
 Posts
Posts
 
 



 
 


No comments:
Post a Comment