ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Thursday, June 11, 2009


மண்டை சொரியும் பேனாக்கள்


வன்னிப்போர் ஒரு விடயத்தை ..எதைச் சொல்லாவிட்டாலும் ..இந்த விடயத்தை மட்டும் அழுத்திச் சொல்லிவிட்டுப்போயிருக்கின்றது. நாயிலும் கேவலமான தமிழனை யார் வேண்டுமானாலும் எதுவும் செய்து விட்டுப்போகலாம். யாரும் கேள்வி கேட்கப் போவதுமில்லை.. அந்தத் தமிழனில் இருந்தே விபச்சாரிக்குப் பிறந்தவன் வீணாகப் போனவன் இப்படி யாராவது ஒருவன் முன்வந்து ..அது சரியான காரியம் என்று வக்காலத்து வாங்கவும் தான் செய்வான்...என்பதைத் தான் சொல்லி விட்டுப் போயிருக்கின்றது.

புலி புலிப்பாசிசம் என்று புளித்துப்போன விடயங்களிலேயே தொங்கிக் கொண்டு நிற்கும் கேவலம் கெட்டவர்கள் எங்களை விட யாரும் இங்கில்லை. இத்தனை இலட்சம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை விட சில ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டதைக் கேட்டு மகிழும் இவர்கள் முத்திப் பொன மனவியாதியுடையவர்களே. ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாக சித்தரிக்க முயலும் சிங்களப் பாசிச வாதிகளையும் இந்திய முடக்குவாத அரசியலாளர்களையும் சரியானவர்களாக்க இம் மனவியாதிக்காரர்கள் துணை போவதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

ஈழத்தமிழர்களின் போராட்டம் இனவிடுதலைக்கான போராட்டம் .அதில் எந்த ஒரு விட்டுக்கொடுப்பிற்கோ அனுசரித்துப் போதலுக்கோ இடம் இல்லை. அநாதி காலத்திலிருந்தே சுதந்திரமாக வாழ்ந்த ஒரு இனம் தன் இறைமையை மீட்டெடுக்க நடத்தும் போராட்டம் இது.

இதை யார் முன்னெடுக்கின்றார்கள் என்பது முக்கியமல்ல. யாருக்காக முன்னெடுக்கின்றார்கள் என்பது தான் முக்கியம். அதிலும் நமக்கு... தமிழ் மக்களுக்கு இதை விட வேறு ஒரு விடயம் இந்த உலகிலேயே இல்லை.

இன்று சிங்கள பயங்கரவாதிகளும் இந்திய அரவேக்காட்டு வல்லரசு வாதிகளும் விட்ட மாபெரும் தவறுகளுக்கும் மன்னிக்க முடியாத மனித அழிப்புக்கும் முன்னால் புலிகள் தவறே செய்யவில்லை என்றே சொல்லவேண்டும். மலைக்கும் மடுவுக்குமுள்ள இடைவெளி அங்கு இருக்கின்றது. வர்க்கப்போராட்டம் மாக்ஸிஸம் பேசுபவர்கள் உங்கள் வீட்டு எச்சில் தட்டுகளை கழுவிக்கொண்டிருங்கள். நாளை தமிழ் மக்களே இல்லாது போகும் ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் இரத்தத்தால் பேரினவாதிகளுக்கும் வல்லரசு வாதிகளுக்கும் தாக சாந்தி செய்து வைக்க அப்போது அது உதவக் கூடும்.

இத்தனை மக்களின் சாம்பால் மேடுகளையும் கலைத்து எங்கோ எப்போதோ ஆகுமோ ஆகாதோ என்று அறியாத ஒன்றிற்காக இங்கே நேரத்தை வீண்விரயம் செய்யும் வீணாய்ப் போனவர்கள் இவர்கள்.

பயங்கரவாதிகள் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் ஒரு இனத்தையே பயங்கரவாதிகளாக்க முனையும் துட்டத்தனம் எதைப் பற்றியும் எழுதத் துப்பில்லாத அவர்களின் பேனாவால் எழுதுவதை விட்டு எதையாவது சொரிந்து கொள்ளட்டும்.

சிங்களவர்களால் கட்டவிழ்த்து விடப்படும் ஒட்டு மொத்தத் தமிழினத்தையும் பயங்கரவாதிகள் எனக்காட்டும் பிம்பமும் அதை வடிவமைத்துக் கொடுக்கும் இந்திய ஒட்டுண்ணித் தனத்தைப் பற்றியும் எழுத முடியாத தமிழர்களின் பேனாக்கள் மண்டை சொரிந்து காய்ந்து போகட்டும்.அது தான் ஏன் இறக்கிறோம் என்றே தெரியாது இறந்து போன எம் உறவுகளுக்கு ஒரு ஆறுதாலாய் இருக்கும்.

2 comments:

Anonymous said...

www.Tamilers.com

You Are Posting Really Great Articles... Keep It Up...

We have launched a Tamil Bookmarking site called "www.Tamilers.com" which brings more traffic to all bloggers

தமிழர்ஸ்.காம் தளத்தில் உங்கள் வலைப்பக்கத்தை இணைத்து உலக தமிழர்களை சென்றடையுங்கள்.

அழகிய வோட்டு பட்டையும் இனைத்துக்கொள்ளுங்கள்

தமிழர்ஸின் சேவைகள்

இவ்வார தமிழர்

நீங்களும் தமிழர்ஸ் டாட்காமின் இவ்வார தமிழராக தேர்ந்தெடுக்கப்படலாம்... இவ்வார தமிழர் பட்டை உங்கள் தளத்தின் டிராபிக்கை உயர்த்த சரியான தேர்வு.

இவ்வார தமிழராக நீங்கள் தேர்ந்து எடுக்கப்படும் போது, அனைத்து பதிவர்களின் பதிவுகளிலும் மின்னுவீர்கள். இது உங்களது பதிவுலக வட்டத்தை தாண்டி உங்களுக்கு புதிய நண்பர்களையும், டிராபிக்கையும் வர வைக்கும்

இவ்வார தமிழர் பட்டையை இது வரை 40 பிரபல பதிவர்கள் இணைத்துள்ளார்கள் நீங்களும் சுலபமாக நிறுவலாம்.

இவ்வார தமிழரை இணைக்க இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இணைத்துவிட்டு எங்களுக்கு ஒரு மின்னஞ்சல் அல்லது ஒரு பின்னுட்டம்

சிறந்த தமிழ் வலைப்பூக்கள்

Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
It has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.

This Ranking started from this week.So everyone has the same start line. Join Today.

"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.

இநத வாரம் தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்

சிறந்த வலைப்பூக்களில் சேர இந்த சுட்டியை சொடுக்குங்கள்

இன்னும் பல சேவைகள் வரப்போகுது, உடனே இணைத்துக்கொள்ளுங்கள். இது உலக தமிழர்களக்கான தளம்.
உங்கள் ஆலோசணைகளும் கருத்துகளும் services@tamilers.com என்ற மின்னஞ்சலுக்கு வரவேற்க்க படுகின்றன.

நன்றி
உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்
தமிழர்ஸ் பிளாக்

கண்டும் காணான் said...

ஏனோ தெரியவில்லை மாற்றுக் கருத்து என்று கூறிக்கொண்டே ஏமாற்றுகின்றனர். உங்கள் இனங் காட்டலுக்கு நன்றி இட்டாலி வடை

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil