ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, June 23, 2009


கலாமின் சலாம்....என்னவொரு வில்லத்தனம்


விசுக்கோத்து விவேக்குடன் சேர்ந்து வில்லத்தனம் பண்ணக் கிளம்பியிருக்கின்றார் முன்னைநாள் ஜனாதிபதி. அறிவுஜீவித்தன குல்லா மட்டும் போதாது அரசியல் பண்ண என்பதை எண்ணி ஐந்தே வருடங்களில் அறிந்து கொண்டவர். அல்லது அறிய வைக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்.

இப்போது பாடசாலைகளுக்குப் போய் பிஞ்சுக்குழந்தைகளின் மனதில் ஆசைகளை வளரவிட்டு பின்னால் அவர்களின் எல்லா அவஸ்தைகளுக்கும் முழுக்காரணமாகப் போகின்றவர். வேறு எப்படிச் சொல்வது?

மாணவர்கள் ஒரு லட்சியத்தை ஏற்படுத்திக்கொண்டு அதற்காக கடுமையாக உழைத்தால் நிச்சயம் குறிக்கோளை அடைய முடியும்

மாணவர்களால் அது முடியாததல்ல. படிக்கும் மாணவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு குறிக்கோளை இலட்சியத்தை வைத்துக் கொண்டு தான் படிக்கின்றார்கள். ஆனாலும் என்ன நடக்கின்றது. படித்து எவ்வளவு தான் நல்ல மார்க்குகள் பெற்றாலும் பணபலமில்லாதவர்களின் படிப்பு பாதியிலேயே கருகிப் போகின்றது. இதனால் என்ன நடக்கின்றது..ஒரு மாணவனின் 10,15 வருடங்கள் அடைய முடியாத குறிக்கோளுக்காக அழிந்து போகின்றது. இந்த அடிப்படை விடயத்தைக்கூட புரிந்து கொள்ளாத ..மாற்ற முயலாத ... இதை இன்னும் ஊக்குவிக்கும் இவரா சிந்தனாவாதி?

கிராமப்புறம்-நகர்ப்புறம் என்ற பாகுபாடு இல்லாத இந்தியாவை, அனைவருக்கும் தரமான கல்வி, மருத்துவ வசதி கிடைக்கக்கூடிய இந்தியாவை, லஞ்சமும், ஊழலும் இல்லாத இந்தியாவை, வெளிப்படையான அரசு நிர்வாகம் நடக்கக்கூடிய இந்தியாவை

கனவு ..கனவு..வெறுங்கனவு மட்டுமே... நனவுலகில் வாழப்பயப்படும் கோழை மனது. ஜனாதிபதியாக இருந்தபோது எதை இவரால் சாதிக்க முடிந்தது? ஏன் அவ்வாறு முடியவில்லை என்றாவது சிந்தித்தாரா?

எங்கள் விசுக்கோத்து விவேக் கலாமைப் பற்றி ஏதோ அச்சுப்பிச்சுவென்று உளறி வைத்து விட்டது. அதைக்குழந்தைகள் பிடித்து விட்டது. அதனால் விவேக்கிற்குக் கிடைத்தது "பத்மசிறீ" பட்டம்.

எந்தக் குழந்தையைக் கேட்டாலும் "அப்துல் கலாம் ஆக வேண்டும்" என்று தான் சொல்லுகின்றது. ஆகி... பாடசாலைகள் தோறும் கவைக்குதவாத கனவுகளைப் பற்றிச் சொல்ல வேண்டுமா?

இலஞ்சம் இல்லாத இந்தியா? அரசியல்வாதிகளின் இரண்டு கைகளையும் வெட்டி விடவேண்டும் ."பை" இல்லாத சட்டை போட உத்தரவிடவேண்டும். இவரால் செய்ய முடியுமா?

நாட்டில் நடக்கும் அட்டூழியங்களை எதிர்த்து எப்போதாவது குரல் கொடுத்திருக்கின்றாரா? அறிவுஜீவித்தனம் மட்டும் வாழ்க்கையைப் புரிந்து கொள்ளப்போதாது. மனிதாபிமானமும் கலந்து வேண்டும்.

அஹிம்சை இருந்த இடத்தில் அணுகுண்டினைத் திணித்தவரிடம் ..எதை எதிர்பார்க்க முடியும்.

தீவிரவாதம் இல்லாத இந்தியாவை காண வேண்டும் என்று கனவு காண்கிறேன்

உள்நாட்டில் தீவிரவாதம் இல்லாத இந்தியா..வெளிநாடுகளில் தீவிரவாதம் செய்யும் அடாவடி இந்தியா..இது எப்படியிருக்கின்றது.

அற்புதமான கனவு... "கத்தியெடுத்தவனுக்கு ..கத்தியால்தான் சாவு.." எப்போது இந்தச் சின்ன மூளைக்குள் வல்லரசுக் கனவு வந்ததோ அப்போதே தீவிரவாதம் தாக்குவதற்கு "கதவைத்"திறந்து விட்டாயிற்று.

அந்த இந்தியாவின் கனவு தான் இன்று 50 ஆயிரம் ஈழத்தமிழரை மேட் இன் இண்டியா குண்டுகளால் கொன்று போட்டபோது இந்த அறிவுஜீவியின் மனதில் ஒரு சொட்டு இரக்க நீர் கூட சுரக்கவில்லை.

5 comments:

Dr.Rudhran said...

good post, more should be written on this

இட்டாலி வடை said...

வாருங்கள் டாக்டர் !

இன்னும் நிறைய எழுதத்தான் ஆசைப்பட்டேன். சமூக அக்கறையே இல்லாத இவர்களைப் பற்றி..எழுதி காலத்தை விரயமாக்க வேண்டுமா என்று விட்டு விட்டேன்..

என் கோபம் இந்திய அரசியந்திரத்திற்கு எதிரானது தான்.. மக்களுக்கு எதிரானது அல்ல... (அரசியந்திரத்தை சப்பைக்கட்டு கட்டுபவர்கள் விதிவிலக்கு)

சில வேளைகளில் அவ்வாறான தோற்றப்பாடும் ஏற்பட்டுவிடுவதுண்டு.. உங்களைப் போன்ற சமூக அக்கறையுள்ளவர்கள் இணைந்து ஏதாவது செய்ய முடியுமாவென்று ..எண்ணிப்பார்க்கக் கூடாதா?

பதிவுலகின் எனர்ஜியை.. ஆக்கபூர்வமாக்க வழி ஏற்படலாம்...

இட்டாலி வடை said...

இது ஒரு இந்திய படித்த பண்பான நல்ல அப்பனுக்கும் ஆத்தைக்கும் நேர் வழியில் பிறந்த நண்பரின் காமண்ட்...

இட்டாலி வடை
இட்டாலி வடை has left a new comment on your post "கலாமின் சலாம்....என்னவொரு வி...

12:07 PM (19 minutes ago)

Reply

|
Anonymous
to me

show details 12:11 PM (15 minutes ago)


Reply

Follow up message
Anonymous has left a new comment on your post "கலாமின் சலாம்....என்னவொரு வில்லத்தனம்":

நாடு இல்லாத அகதி நாயே உனக்கு இருக்க இடம் இல்லை என் நாட்டை பத்தி என்னடா கவலை பொத்திகிட்டு போடா தே மவனே

நாமக்கல் சிபி said...

//உனக்கு இருக்க இடம் இல்லை என் நாட்டை பத்தி என்னடா கவலை //

எனக்கு இருக்க இடம் இருக்கு! இது என் நாடு!

நான் கேட்கலாமே அனானி!

//அந்த இந்தியாவின் கனவு தான் இன்று 50 ஆயிரம் ஈழத்தமிழரை மேட் இன் இண்டியா குண்டுகளால் கொன்று போட்டபோது இந்த அறிவுஜீவியின் மனதில் ஒரு சொட்டு இரக்க நீர் கூட சுரக்கவில்லை.//

இந்த குண்டுகளால் கொல்லப்பட்டவர்கள் நம்ம தமிழ் மக்கள்தானே! ஒரு வார்த்தை அதைக் கண்டிச்சாரா? அட! நம்ம தமிழ் மக்கள் என்ற அடிப்படையில் கூட வேண்டாம்! சக மனிதன் என்ற அடிப்படையிலாவது தன் வருத்தத்தைப் பதிவு செய்திருக்கலாமே!

இட்டாலி வடை said...

வாருங்கள் சிபி!

//உனக்கு இருக்க இடம் இல்லை என் நாட்டை பத்தி என்னடா கவலை //

எனக்கு இருக்க இடம் இருக்கு! இது என் நாடு!

நான் கேட்கலாமே அனானி!

நாங்கள் அகதிகளாக இருப்பதால் எங்கள் பெண்களை சிங்கள ஆமி சீர்ழித்துப்போடுகின்றது..

"நாடிருப்பதால்" ஒரு அப்பனுக்கும் ஆத்தைக்கும் நேர் வழியில் பிறந்த இந்த அனானி தன் சகோதரிகளை காசுக்காக சோரம் போகாது வைத்திருக்கட்டும்..

தன் மனைவியுடன் பகிர்ந்து கொண்ட படுக்கையில் மற்றவன் எச்சில் படுத்தாது காத்துக் கொள்ளட்டும்..

இவன் ஊழ்வினைக்குப் பிறந்த பிள்ளைகளையாவது சேதம் இல்லாது வளர்த்துக் கொள்ளட்டும்..

இவன் செய்யும் பாவங்கள் இவனோடே தீராத வெண்குட்டமாகப் போகட்டும்..

அப்போதாவது எங்களை நாடற்ற அகதியாக்கியதே இவன் தான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்..

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil