ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, October 31, 2009


ஓரு கவிதையும் ஒரு கதையும்



"குற்றவாளிகள்" என்ற கவிதை கல்பற்றா நாராயணன் எழுதியது .
செய்தவர்களின்
குற்றத்தை நிரூபிப்பது
பெரிய வேலையொன்றுமல்ல
அவர்கள் போகும் தூரத்திற்கு
எல்லையுண்டு

மறைத்து வைத்தவைக்கு
அருகிலிருந்து அவர்கள் விலகுவதில்லை
சிறு வேறுபாடுகள் இருந்தாலும்
அவர்கள் ஒப்புக் கொள்வார்கள் என்பது
உறுதி
ஒன்றுமில்லாவிட்டாலும்
அவர்களுக்கு எல்லாம் தெரியுமல்லவா?

செய்யாதவர்களால்தான்
சிக்கலே
அவர்கள் ஒப்புக் கொள்வதேயில்லை
அவர்கள் பதுங்கி நிற்குமிடத்தில் தோண்டிப்பார்த்தால்
ஒன்றும் கிடைப்பதில்லை
ஒருவகையில்லும் அவர்கள் ஒத்துழைப்பதில்லை

நிரபாரதிகளைப் போல
கல்மனசுக்காரர்கள் வேறில்லை



கவிதையை வாசித்த போது என் மக்கள் அவலமும் துயரமும் தான் நினைவில் வந்தது. அது துயரத்தையோ அவலத்தையோ நேரிடையாகச் சொல்லும் கவிதையுமல்ல.. அனாலும் குற்றவாளிகளின் மனங்களைப் படம் பிடிக்கும் கவிதை. படுகொலையின் பின்னால் சிங்கள அரசும் அதன் அமைச்சர்களும் ஆடும் அவலத்தை அது படம் பிடிக்கின்றது.

ஐக்கிய நாடுகளோ அமெரிக்காவோ என்ன ஆதாரத்தை வைத்திருக்கின்றதோ இல்லையோ ஆனால் சிங்கள அரசு ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் பதில் கூறத் தொடங்கியிருக்கின்றது. அரண்டு மிரண்டு அதிரடி ஆட்டத்தில் புகுந்துள்ளது. ஏனென்றால் படுகொலையின் சரித்திரத்தை ஆதியோடந்தமாக அறிந்தது அதுவொன்று தானே.

அதுவா? இதுவா? என்று அது சந்தேகித்துச் சந்தேகித்தே தன்னை வெளிப்படுத்தி விடும்.சிங்கள ஜனாதிபதி ராஜபக்ஷேயும் பிரதமர் இரட்ணநாயக்கேயும் பாவங்களைத் தொலைக்க கோயில் கோயிலாக படையெடுக்கின்றார்கள். அவர்கள் செய்த பாவங்களையும் அதற்குண்டான சம்பளத்தையும் அறிந்தவர்கள் அவர்கள் தானே..

அதைப் போலவே நம் மக்கள். ஒன்றும் அறியாதவர்கள். ஏன் கொல்லப்படுகின்றோம் என்று அறியாமலேயே கொல்லப்பட்டவர்கள். ஏன் தண்டிக்கப்படுகின்றோம் என்று அறியாமலேயே தண்டிக்கப்பட்டவர்கள்.

என்ன குற்றம் என்று அறியாமலேயே முட்கம்பி வேலிக்குள் திணித்து விடப்பட்டவர்கள். அவர்களின் பெருமூச்சு கொலையாளிகளைச் சித்தம் கலங்க வைத்து பைத்தியமாக்கிவிடும். ஹிட்லரும் முசோலினியும் நல்ல சாவைக் கண்டவர்கள் அல்ல.அவர்களால் கொல்லப்பட்டவர்களின் ஆத்மாக்களால் குதறப்பட்டவர்கள். அதுவே இன்று சிங்கள அரசிற்கும் அதற்கு முட்டுக் கொடுத்தவர்களுக்கும் ஏற்பட்டிருக்கின்றது.(தமிழினத் தலைவர் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் 87 வயதுக் கிழம் ஒன்றுக்கும் இத்தகைய அவலச் சாவே காத்திருக்கும்) சாவைக்கண்டு பயந்து திரிதலே சாவை மிஞ்சிய சுமையாகிவிடும்.

இந்த அப்பாவி மக்களின் அவலங்களை எண்ணி வாய் திறவாது வாழாவிருக்கும் மூடர்களைப் பார்த்து கே.ஜி சங்கரப் பிள்ளையின் வார்த்தைகளிலேயே கேட்கின்றேன்.

"சகோதரரே, ஒரு நாய் கூட அச்சத்திலும் வாய் திறந்து கத்தாமல் (தான் கண்டதை,நினைத்ததை சொல்லாமல்) விடுவதில்லை..அப்படியிருக்க மேலான மானுடராகிய நாம் அச்சத்தின் காரணமாக, அலட்சியத்தின் காரணமாக, அடிமைத்தனத்தின் காரணமாக, இன்னும் எத்தனை காலத்திற்குத் தான்,

"நொண்டிச்சாக்குகளின் சிதையின் மீது நம் வாழ்நாள் நீளும் எரிந்தடங்கலைச்.."
செய்து கொண்டிருக்கப் போகின்றோம்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil