ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, October 27, 2009


வீணாய்ப்போன அனானிக்கு




காஸ்மீரிகளுக்கான தனி விஸா தொடங்கியிருப்பது சீனா

"இந்தியா பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்கின்றது" என்ற ஒரு கட்டுரையை நான் எழுதியபோது வீணாய்ப்போன அனானி ஒன்று இந்திய இராணுவம் செய்த தவறுகளை ஆதாரபூர்வமாக விளக்கவேண்டுமென்று கேட்டிருந்தது.

உலக ஞானமும் வாசிக்கும் பழக்கமுமற்ற இத்தகைய முட்டாள்களை நம்பியே "ஒரே இந்தியா" என்ற கோஷத்தை அரசியல்வியாதிகள் முன்னெடுக்கின்றார்கள் என்பது எனது நம்பிக்கை. கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருட்டென்று நம்பும் முட்டாள்கள் இவர்கள்.

இலங்கையில் இந்தியா நடந்து கொண்டதை அறியாத வினய பாவத்துடன் தன் சொந்த மண்ணிலேயே மக்கள் கொல்லப்படும் துயரம் அறியாத அயோக்கியர்கள் இவர்கள். மனித நேயத்தை விஞ்சிய பெருமை எதில் கிடைத்து விடும் என்பதை இவர்கள் தான் கூற வேண்டும்.

வெறுமனே கேள்வி மட்டும் கேட்டுக்கொண்டிராது வரலாற்றைப் படிக்கவும் முற்படவேண்டுமென்று இத்தகைய வீணாய்ப்போனவருக்கு நான் சிபாரிசு செய்கின்றேன். அ.மார்க்ஸ்,சாருநிவேதிதா இந்த இரண்டு எழுத்து வியாபாரிகளும் இந்திய தமிழ் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்கள் அல்லது மறுதலிக்கப்பட்டவர்கள். அது எதுவாய் இருந்தாலும் சிந்திக்கும் மனங்களில் சில சலனங்களையேனும் ஏற்படுத்தியவர்கள்.

இத்தகைய முட்டாள் தனமான கேள்விகளுக்குப் பதிலளிப்பதில்லை என்றே முதலில் நினைத்திருந்தேன். என்ன செய்வது? முட்டாள்களும் நிறைந்தது தானே இந்த உலகம். ஆகவே இந்த பதில். ஈழத்தில் இந்திய வெறியாட்டம் பற்றிப்பல தகவல்கள் இணைய வெளியெங்கும் பரந்திருக்கின்றது. தேடிப்படிக்கவும்.

ஒரு கட்டுரையை படிக்கவோ விளங்கிக்கொள்ளவோ தர்க்கிக்கவோ இத்தகைய வரலாற்றுத் தகவல்கள் மிகவும் துணை செய்யும் என்பத்தை இந்த முட்டாள் தெரிந்து கொள்ளவேண்டும். இதையெல்லாம் அறியாதிருக்கும் நீயா? நானா? வீணாய்ப்போனவன்.

ஒரு "பிரபல புளொக்கர்" தான் இந்த வீணாய்ப்போன அனானி என்பதை நான் அறிவேன்.

சாருநிவேதிதா எழுதியது


போராட்டத்தில் கலந்து கொண்டு இந்திய ராணுவத்திற்கு எதிராகக் கோஷமிட்டுக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம் கேட்டேன், ”காஷ்மீருக்குச் சுதந்திரம் கிடைத்தால், ஒரு பெண் என்ற முறையில் மத அடிப்படைவாதிகளால் உன்னுடைய சுதந்திரத்துக்குப் பிரச்சினை வராதா?” என்று.

அதற்கு அவள் சொன்னாள்:”இப்போது எங்களுக்கு என்ன சுதந்திரம் இருக்கிறது; இந்திய ராணுவத்தால் வன்கலவி செய்யப்படும் சுதந்திரமா?”

அருந்ததி ராய்

கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக காஷ்மீர் என்று அழைக்கப் படும் நிலப் பகுதி இந்திய ராணுவத்தின் பிடியில் இருந்து வருகிறது. இது பற்றி அருந்ததி ராய், ராம் புனியானி, குஷ்வந்த் சிங் போன்ற சிலரைத் தவிர வேறு யாரும் குரல் கொடுக்கவில்லை.

தேசப் பற்று என்ற கற்பிதமான நம்பிக்கையை வைத்துக் கொண்டு இந்தியப் பத்திரிகையாளர்கள் பலரும் காஷ்மீரை இந்தியாவின் ஒரு பகுதி என்பதாகவே எழுதிக் கொண்டு வருகிறார்கள். இதே கருத்து பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பத்திரிகைகளின் வாயிலாகப் பரப்பப்பட்டு வருவதால் இந்தியப் பொது ஜனமும் காஷ்மீரை இந்தியாவின் பகுதி என்றே நம்பத் தலைப்பட்டு விட்டது.

காஷ்மீர் பிரச்சினையைப் புரிந்து கொள்வதற்கு நாம் சற்றே பின்னோக்கிச் சென்று காஷ்மீரின் வரலாற்றைப் பார்க்க வேண்டும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து காஷ்மீரின் ஆட்சி இஸ்லாமிய மன்னர்களிடமிருந்து சீக்கியர்களின் கைகளுக்கு வந்தது. 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்த போது குறுநில அரசுகள் பலவும் இந்தியாவுடன் இணைந்து கொண்ட போது, ஜுனாகட் மற்றும் ஹைதராபாத் அரசுகள் மட்டும் பாகிஸ்தானுடன் இணைந்து கொள்ள விரும்பின. காரணம், இந்த இரண்டு அரசர்களும் முஸ்லீம்களாக இருந்தனர். இந்த மாகாணங்கள் இந்திய நிலப் பகுதியின் மத்தியில் இருந்ததாலும், இங்கே இந்துக்கள் பெரும்பான்மையினராக வசித்ததாலும் அந்த முஸ்லீம் மன்னர்களின் விருப்பம் நிறைவேறாமல் போயிற்று. இந்திய அரசு தனது ராணுவத்தை அனுப்பி இந்த மாகாணங்களைத் தன்னுடன் சுலபமாக இணைத்துக் கொண்டது.

ஆனால் காஷ்மீரைப் பற்றியும் இந்தியா இதேபோல் நினைத்து விட்டது என்பதிலிருந்துதான் பிரச்சினை ஆரம்பிக்கிறது.

நமக்குச் சொந்தமில்லாத ஒரு நிலப்பகுதியை ராணுவ பலத்தால் ஆக்ரமித்துக் கொண்டு, ஐம்பது ஆண்டுகள் கழித்து ‘அந்த நிலம் எங்களுடையது’ என்று சொல்வதற்கும் காஷ்மீரைச் சொந்தம் கொண்டாடுவதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று சொல்லலாம். எப்படி என்று பார்ப்போம்.

அப்போது காஷ்மீரின் மன்னராக இருந்தவர் ஹரி சிங் என்ற இந்து டோக்ரா இனத்தைச் சேர்ந்தவர். இவர் ஓரளவுக்கு சீர்திருத்த எண்ணம் கொண்டவராக இருந்தார். காஷ்மீர் மாநிலத்தில் ஆரம்பக் கல்வியைக் கட்டாயமாக்கினார். தாழ்த்தப் பட்டவர்களும் கோவில்களில் பிரவேசிக்கலாம் என்று சட்டம் இயற்றினார். குழந்தைத் திருமணத்தைத் தடை செய்தார். ஷேக் அப்துல்லாவுக்கும், நேருவுக்கும் இருந்த நெருங்கிய நட்பின் காரணமாக காங்கிரஸையும், இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிய வேண்டும் என்று பிரிவினைவாதம் பேசியதால் முஸ்லீம் லீகையும் எதிர்த்தார்.

காஷ்மீர் இந்தியாவுடனோ, பாகிஸ்தானுடனோ சேராமல் தனி நாடாக இருக்க வேண்டும் என்று விரும்பினார் ஹரி சிங். காஷ்மீரிகளின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. ஆனால் அவர்களுடைய விருப்பம் நிறைவேறவில்லை. ஏனென்றால், இந்தியாவுடன் இணைய விரும்பாத ஜுனாகட் மற்றும் ஹைதராபாத் மாகாணங்களைச் சுற்றி இந்திய நிலப்பகுதியே இருந்தது. ஆனால் காஷ்மீர் இந்தியாவுடன் மட்டும் அல்லாமல் ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், திபெத் என்ற நாடுகளுடனும் தன் எல்லையைப் பகிர்ந்து கொண்டது. மேலும், காஷ்மீரின் பெரும்பான்மை ஜனத்தொகை முஸ்லீம்களாக இருந்ததால் அதைப் பயன்படுத்தி பாகிஸ்தான் காஷ்மீரைத் தன் வசம் ஆக்கிக் கொள்ள ஆசைப்பட்டது. அப்போதைய பாகிஸ்தான் அதிபராக இருந்த முகம்மது அலி ஜின்னா முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வசித்த காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைத்துக் கொண்டு, இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த ஜம்முவை இந்தியாவுக்குக் கொடுத்து விட விரும்பினார். அப்படிச் செய்திருந்தால் கூட இந்தியாவின் அமைதி இன்று இத்தனை தூரம் பாதிக்கப் பட்டிருக்காது என்று தோன்றுகிறது.

அப்போது இந்தியப் பிரதமராக இருந்த, காஷ்மீர் பண்டிட் இனத்தைச் சேர்ந்த நேரு காஷ்மீர் முழுவதையும் இந்தியாவுடன் சேர்த்துக் கொள்ள விரும்பினார். இந்த நிலையில் ஜின்னா காஷ்மீரின் மீது பொருளாதாரத் தடையை விதித்தார். அதோடு மட்டுமல்லாமல், வடக்குப் பாகிஸ்தானைச் சேர்ந்த பழங்குடியினருக்கு ராணுவப் பயிற்சி அளித்து அவர்களை காஷ்மீருக்கு அனுப்பினார். பட்டானியர்களின் அந்த ராணுவம் தாம் சென்ற ஊர்களையெல்லாம் முஸ்லீம், இந்து என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் எல்லா வீடுகளையும் கொள்ளை அடித்தது. அப்போதுதான் வேறு வழியில்லாமல் 26.10.1947 அன்று ராஜா ஹரி சிங் நேருவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்.

அந்த ஒப்பந்தப் படி காஷ்மீரின் பாதுகாப்பு, ராணுவம், நாணயம், தபால் துறை போன்றவற்றை இந்திய அரசு கவனித்துக் கொள்ளும். மற்ற உள்நாட்டு நிர்வாகம் அனைத்தும் காஷ்மீர் அரசின் கீழ் இருக்கும். எனவே காஷ்மீர் இந்தியாவின் மற்ற மாநிலங்களைப் போன்றது அல்ல

ராஜா ஹரி சிங் இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்ட மறுதினமே இந்திய ராணுவம் காஷ்மீரைச் சென்று அடைந்தது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த நீண்ட காலப் போர் அதுதான். அக்டோபர் 1947 முதல் நவம்பர் 1948 வரை நடந்தது அந்தப் போர். இந்தப் போரில் இந்தியா ஆரம்ப கட்டத்தில் தோல்வியடைந்து பின்னரே மிகுந்த போராட்டத்திற்குப் பிறகே தாங்கள் இழந்த இடங்களை மீட்க முடிந்தது. அப்படியும் காஷ்மீரின் மூன்றில் ஒரு பகுதி நிலம் பாகிஸ்தான் வசம் போய் விட்டது. ஆனால், பாகிஸ்தானின் ஆக்ரமிப்பில் இருக்கும் காஷ்மீர் மனிதர்கள் வாழ அவ்வளவு தகுதியில்லாத இடம் என்பதால் அங்கே ஜனத்தொகை மிகவும் குறைவு.

அந்தப் போர் முடிந்த அன்றே இந்தியா காஷ்மீர் மக்களுக்கு ஒரு வாக்குறுதி அளித்தது. அதன்படி காஷ்மீரில் ஒரு பொது வாக்கெடுப்பு (Plebiscite) நடத்தப்படும். அதன்படி, காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைய வேண்டுமா, இந்தியாவுடன் இணைய வேண்டுமா அல்லது சுதந்திர நாடாக இருக்க வேண்டுமா என்பதை காஷ்மீர் மக்களே தீர்மானிப்பர்.

ஆரம்ப காலத்தில் நேருவின் நெருங்கிய நண்பராக இருந்த ஷேக் அப்துல்லா, பின்னர் நேரு வாக்களித்த படி பொது ஜன வாக்கெடுப்பை நடத்தச் சொல்லி வற்புறுத்த ஆரம்பிக்கவே அவரைத் தூக்கி 18 ஆண்டுகள் சிறையில் போட்டார் நேரு.

இந்த இடத்தில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு விஷயம், ஷேக் அப்துல்லா பாகிஸ்தானை மிகவும் வெறுத்தவர். பாகிஸ்தானை காட்டுமிராண்டி நாடு என்றும், அவர்களின் அரசை மதவாத அரசு என்றும், முஸ்லீம் லீக் மக்கள் நலனுக்கு எதிரான கட்சி என்றும் கூறியிருக்கிறார் ஷேக் அப்துல்லா. அதே சமயம் அவர் ஒரு பிரிவினைவாதியும் அல்லர். ஒரு முறை தில்லியில் அவரிடம் ஒரு பத்திரிகையாளர் “காஷ்மீரின் சுதந்திரம்தான் உங்களின் தீர்வா?’ என்று கேட்ட போது, “தனிநாடாக வாழும் அளவுக்கு காஷ்மீர் பெரிய நாடு அல்ல; மேலும், இவ்வளவு ஏழ்மையான நாடு சுதந்திரமாக வாழ முடியாது. அப்படிச் செய்தால் பாகிஸ்தான் எங்களை விழுங்கி விடும். ஒருமுறை அவர்கள் அதற்கு முயன்றார்கள்; மேலும் முயற்சி செய்வார்கள்” என்று குறிப்பிட்டார். காஷ்மீருக்கு மாநில சுயாட்சி மட்டுமே போதும் என்பதே காஷ்மீருக்கான அவரது தீர்வாக இருந்தது.

ஷேக் அப்துல்லா காஷ்மீரின் பிரதம மந்திரியாக இருந்தபோது ஒரு உண்மையான சோஷலிஸ்டாக விளங்கினார். பல நிலச் சீர்திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்தார்.

ராஜா ஹரிசிங்கின் ஆட்சியில் விவசாய நிலம் முழுவதும் மிகச் சில பணக்காரர்களிடமே இருந்தது. விவசாயிகள் அனைவரும் கூலியாட்களாகச் சிதறிக் கிடந்தார்கள். அந்த நிலமற்ற விவசாயிகளுக்கு 40,000 ஏக்கர் நிலத்தைப் பிரித்துக் கொடுத்தார் ஷேக் அப்துல்லா. அதற்கு முன்னால் ஒரு விவசாயக் கூலிக்கு அவன் விளைவிக்கும் தானியத்தில் 25% மட்டுமே கூலியாகத் தரப்பட்டது. அதை அவர் 75% ஆக மாற்றினார்.

இத்தகைய ஒரு தலைவரை பொது ஜன வாக்கெடுப்பு நடத்தச் சொன்ன ஒரே காரணத்திற்காக தேசத் துரோகி என்று கூறி சிறையில் தள்ளியதன் மூலம் இன்றைய காஷ்மீர் பிரச்சினைக்கும், இந்தியாவில் தீவிரவாதம் பெருகியதற்குமான முதல் விதையை இட்டவர் நேரு.

அதற்குப் பிறகு காஷ்மீரில் ஆட்சி நிர்வாகத்தை ஏற்ற அரசுகளெல்லாம் வெளிப்பார்வைக்கு மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவையாக இருந்தன. மற்றபடி கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அங்கே நடந்து கொண்டிருப்பது ராணுவ ஆட்சிதான். காஷ்மீருக்கு அளிக்கப் பட்டிருந்த விசேஷ அந்தஸ்தும் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்பட்டு அதுவும் மற்ற இந்திய மாநிலங்களைப் போல் ஆயிற்று. நிர்வாகம் முழுவதும் ராணுவத்தின் கீழ் வந்தது. காஷ்மீரில் இருக்கும் ராணுவத்தினரின் எண்ணிக்கை 5 லட்சம். (மொத்த ஜனத்தொகை 1 கோடி).

லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆஃப்ரிக்க நாடுகளில் உள்ள சர்வாதிகாரிகளைப் பற்றியும், அவர்களது ஆட்சியில் காணாமல் போன ஆயிரக் கணக்கானவர்களைப் பற்றியும் நம்முடைய பத்திரிகைகள் எழுதுகின்றன. ஆனால் இங்கே காஷ்மீரில் கடந்த ஐம்பது ஆண்டுகளில் இந்திய ராணுவத்தால் காணாமல் அடிக்கப் பட்டோர் எத்தனை பேர்? சித்ரவதைக் கொட்டடிகளில் வதை செய்யப்பட்டோர் எத்தனை பேர்? தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் சுட்டுக் கொல்லப் பட்டோர் எத்தனை பேர்?

எதற்குமே கணக்கில்லை.

ஆனால் உலகில் எந்த இடத்திலுமே வெறும் ராணுவ பலத்தை மட்டுமே வைத்துக் கொண்டு ஒரு மக்கள் கூட்டத்தின் சுதந்திர வேட்கையை அடக்கி ஆள முடியாது என்பதற்கு எத்தனையோ சாட்சியங்கள் இருக்கின்றன. அதேதான் காஷ்மீரிலும் நடந்து வருகிறது. குறிப்பாக, இந்த ஆண்டு ஜூன் இறுதியிலிருந்து.

காஷ்மீரிகளின் சுதந்திரப் போராட்டம் இப்படியாக ஆரம்பித்தது. காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலுக்கு 100 ஏக்கர் நிலத்தைக் கொடுத்தது அரசு. பிறிதொரு சமயமாக இருந்தால் இந்தச் செய்தி பொருட்படுத்தப் படாமலே போயிருக்கும். ஏனென்றால் அந்த இடத்தில் வருடத்தின் பெரும்பாலான மாதங்கள் பத்து அடி உயரத்துக்கு உறை பனி விழுந்து கிடக்கும். அந்த அளவுக்கு யாருக்குமே பயன்படாத ஒரு இடம் அது. அமர்நாத் யாத்ரீகர்களுக்கு வெறும் இரண்டு மாதங்களுக்கு மட்டுமே அந்த இடத்தில் டெண்ட் போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தது அரசாங்கம். இந்த ஆண்டு அல்ல. கடந்த ஆறு ஆண்டுகளாக யாத்ரீகர்களுக்கு இந்த வசதி அளிக்கப் பட்டு வருகிறது. அப்படியானால், இந்த ஆண்டு மட்டும் என்ன ஆயிற்று? காஷ்மீரிகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாத முட்டாள்தனமான அரசாங்கம் இந்த விஷயத்தை அவர்களிடம் விளக்கிச் சொல்லவில்லை. மக்களைப் பற்றிய எந்த சுரணையுணர்வும் இல்லாமல், இதுவரை பழக்கத்தில் இருந்து வந்த நடைமுறைதான் என்பதையும் அறிவிக்காமல் அந்த 100 ஏக்கர் நிலத்தையும் அமர்நாத் கோவிலுக்கு எழுதிக் கொடுத்தது அரசு. கடந்த பல ஆண்டுகளாக நேரடியாக அறிவிக்கப்படாத ராணுவ ஆட்சியின் அடக்குமுறையின் கீழ் வாழ்ந்து வரும் காஷ்மீரிகளுக்கு இது ஒரு மிகப் பெரிய அச்சுறுத்தலாக அமைந்தது. தங்கள் வீட்டுக் குழந்தைகள் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப் பட்ட போது கூட சத்தம் வெளியே தெரியாமல் அழுது கொண்டிருந்தார்கள் காஷ்மீரிகள். (ஒருமுறை இரவில் சிறுநீர் கழிப்பதற்காகத் தன் வீட்டிலிருந்து வெளியே வந்த பத்து வயதுச் சிறுவன் ஒரு சிப்பாயால் கொல்லப்பட்டு, இந்தியா முழுவதும் அந்தச் சம்பவம் பத்திரிகைச் செய்தி ஆனது வாசகர்களுக்கு நினைவு இருக்கலாம்). அப்படிப்பட்டவர்களுக்குத் தங்கள் பூமியே தங்களிடமிருந்து பறிக்கப் படுகிறது என்ற சந்தேகம் வந்த போது தங்கள் வாழ்வின் ஆதாரமே பறி போய் விட்டதாக நினைத்து விட்டார்கள். கடந்த 60 ஆண்டுகளாக இல்லாத வகையில் இப்போது நடந்து கொண்டிருக்கும் மாபெரும் மக்கள் கிளர்ச்சிக்குக் காரணம் இதுதான்.

அரசாங்கத்தின் சுரணையற்ற தன்மைக்கு ஒரு உதாரணம், ’முஸாராபாத் சலோ’ (முஸாராபாதை நோக்கிச் செல்வோம்) என்ற போராட்டத்தில் 80,000 பேர் கலந்து கொண்டார்கள். ஆனால், ஜம்முவில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்தியாவின் உள்துறை அமைச்சரான சிவராஜ் பாட்டில் ‘வெறும் 8,000 பேர் கலந்து கொண்ட சாதாரண போராட்டம் அது’ என்று வர்ணித்தார். தில்லியில் பல இடங்களில் குண்டு வெடித்து பல நூறு பேர் செத்த போது ஒரே நாளில் நான்கைந்து முறை தன் ஆடை அலங்காரத்தை மாற்றி ஃபேஷன் ஷோ நடத்திக் காண்பித்தவர் இந்த மந்திரி.

காஷ்மீரிகளின் இப்போதைய கிளர்ச்சிக்கு மற்றொரு காரணம், 1989 வரை அமர்நாத்துக்கு வந்து கொண்டிருந்த யாத்ரீகர்களின் எண்ணிக்கை 20000 ஆக இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை ஐந்து லட்சமாக மாறி விட்டது. இதற்குக் காரணம் இந்துத்துவ எழுச்சி என்று சந்தேகிக்கிறார்கள் காஷ்மீரிகள். தங்களுடைய தேசத்தில் இந்தியாவிலிருந்து வரும் இந்துக்கள் குடியேறி தங்கள் பூமி பறி போய் விடுமோ என்ற அச்சம் தோன்றியிருக்கிறது அவர்களுக்கு. அதனால்தான் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக துப்பாக்கியால் அடக்கி வைக்கப் பட்டிருந்த காஷ்மீரிகளின் கனத்த மௌனம் இன்று ஒரு மக்கள் போராட்டமாக வெளிப்பட்டிருக்கிறது.

ஆனால், காஷ்மீரிகளின் கருத்தைப் பற்றி எந்த அக்கறையும் கொள்ளாத இந்திய அரசு கடந்த 60 ஆண்டுகளாகவே இதை ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகவே பார்த்துக் கொண்டிருக்கிறது. காஷ்மீரிகளின் உள்ளார்ந்த துயரத்தை ‘அமைதி’ என்று நினைத்து விட்டது.

ஷேக் அப்துல்லாவின் காலத்தில் இருந்த நடுநிலையான காஷ்மீரிகளை இன்று அங்கே பார்க்க முடியவில்லை. ஸ்ரீநகரின் வீதிகள் எங்கும் பாகிஸ்தான் கொடிகளோடு அலைகிறார்கள் இளைஞர்கள். இவர்கள் கடந்த 20 ஆண்டுகளாக நிலவி வரும் வன்முறையினூடே பிறந்து வளர்ந்தவர்கள். துப்பாக்கி ஏந்திய இந்தியச் சிப்பாய்களை கற்களால் அடித்து “எங்களைச் சுட்டுக் கொல்லுங்கள்; நாங்கள் தியாகிகளாவோம்” என்கிறார்கள். முன்பு இந்த வாசகத்தைத் தீவிரவாதிகள் மட்டுமே சொன்னார்கள். இப்போது ஆயுதம் ஏந்தாத மாணவர்கள் சொல்கிறார்கள்.

மண்ணாசையின் காரணமாக நேருவும், ஜின்னாவும் ஏற்படுத்தி விட்ட இந்த மாபெரும் பிரச்சினையைத் துப்பாக்கியால் தீர்த்து வைப்பது கடினம். இதற்காக இந்திய மக்களும், காஷ்மீரிகளும் கொடுத்துக் கொண்டிருக்கும் விலை அதி பயங்கரமானது. எனவே, இலங்கை அரசுக்கு புத்திமதி சொல்லும் இந்திய அரசு முதலில் செய்ய வேண்டிய காரியம் துப்பாக்கியைக் கீழே போட்டு விட்டு காஷ்மீரிகளுடன் உரையாடலைத் துவக்குவதாகத்தான் இருக்கும்.

பின் குறிப்பு:

’காஷ்மீரைக் கொடுத்து விட்டால் பிறகு ஒவ்வொரு மாநிலமும் தனிநாடு கேட்கும்’ என்ற ஒரு வாதம் பலராலும் முன் வைக்கப் படுகிறது. ஆனால் இந்தியாவின் மற்ற மாநிலங்களோடு காஷ்மீரை ஒப்பிட முடியாது. காஷ்மீரின் நிலைமை வேறு. மேலும், நம்முடைய உடம்பில் ஒரு விரல் அழுகிப் போய் விட்டால் அதை வெட்டி எறிந்து விடுவதுதான் புத்திசாலித்தனம். அப்படி இல்லாமல் அழுகின உறுப்பை வெட்டாமல் விட்டால் பிறகு ஒவ்வொரு உறுப்பாக வெட்டி எறிய வேண்டி வரும். காஷ்மீரைத் தங்களோடு வைத்துக் கொண்டு அதற்காக இந்தியர்கள் கொடுக்கும் விலை மிக மிக அதிகம். ஒவ்வொரு நகரிலும் குண்டு வெடித்து நூற்றுக் கணக்கான பேர் உடல் வெடித்துச் சாகிறார்கள். அதை விட இன்னும் பயங்கரம், மக்களின் மனதில் ஏற்பட்டிருக்கும் பீதியும் பயமும்.

மேலும், தேசம் என்பதே ஒரு கற்பிதம்.

உதாரணமாக, மொகலாய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தியா என்று அழைக்கப்பட்ட நிலப்பரப்பு இப்போது இருப்பதை விடவும் மிகப் பெரியதாக இருந்தது. இன்றைய ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் என்ற இத்தனை நாடுகளும் சேர்ந்ததுதான் அப்போதய மொகலாய இந்தியா. இதையே பாரத வர்ஷம் என்றும், அகண்ட பாரதம் என்றும் கூறி இந்த 21-ஆம் நூற்றாண்டிலிருந்து மத்திய கால கட்டத்துக்குச் செல்ல முயற்சிக்கிறார்கள் இந்துத்துவவாதிகள்.

அதன் பின்னர், ஆங்கிலேயர்களின் ஆட்சியில்தான் இந்தியா என்ற நிலப்பரப்பு வடிவமைக்கப்பட்டது. அதுவே 1947க்கு பிறகு, பாகிஸ்தான் என்ற பகுதியையும் இழந்து இப்போதைய இந்தியாவாக மாறியது. அத்வானி போன்ற இந்துத்துவவாதிகள் பிறந்த ஊரே இன்று பாகிஸ்தானில் இருக்கிறது.

இதற்கெல்லாம் பல நூற்றாண்டுகள் பின்னால் சென்றால், இன்று தமிழ்நாடு என்று அழைக்கப்படும் பகுதியே சேரன், சோழன், பாண்டியன் என்றும், இன்னும் பலப்பல குறுநில அரசுகளாகவும் இருந்தவைதான். இப்படி இருக்கும் போது தேசம் என்றால் என்ன? வரலாற்றின் ஒவ்வொரு கால கட்டத்திலும் தனது பூகோள எல்லையை மாற்றிக் கொண்டே போகும் ஒரு நிலப்பரப்பை நிரந்தரமான ஒன்று என நம்புவது எத்தகைய பேதமை?

***

இரண்டு முறை நான் ஜம்மு காஷ்மீர் சென்றிருக்கிறேன். பார்ப்பதற்கு ஸ்விட்ஸர்லாந்தைப் போல் தோற்றமளித்த அந்த பூமியில் ஒரு இடத்திலும் மக்கள் நடமாட்டமே காணாததால் ஏதோ ஒரு மயான பூமிக்கு வந்து விட்டது போல் இருந்தது. ஆனால் ஒரு ஆண்டில் ஐந்து லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து கொண்டிருந்த தேசம் அது.//



அ.மார்க்ஸ் எழுதியது இது

"ஜெயமோகனின் கட்டுரையைச் சென்ற `தீராநதி' (அக்.2008) இதழில் பார்த்தேன். சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் மீது அவரது காழ்ப்பு சற்றுக் கூடுதலாகவே வெளிப்பட்டுள்ளது! அதிரடியாக எதாவது சொல்லி, எழுதி தன் மீது கவனத்தை ஈர்ப்பதில் ஜெயமோகன் கில்லாடி. கிட்டத்தட்ட இதே நேரத்தில் தனது `ப்ளாக்'கில் பாசிச எதிர்ப்புணர்வுடன் எழுதும் தமிழ் எழுத்தாளர்களைக் கேவலப்படுத்தி அவர் எழுதிய கட்டுரை ஒன்றும் (`எனது இந்தியா') எனது கவனத்திற்கு வந்தது. கவன ஈர்ப்பிற்காக அரை நிர்வாணத்துடன் அந்தர்பல்டி அடிக்கவும் தயங்காத ஜெயமோகனின் வலையில் நான் விழ விரும்பாதபோதும், சங்க இலக்கியம் முதல் இந்தியத் தத்துவம் வரை எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதக் கூடியவர் என்ற பெயருடன் எல்லாவற்றினூடாகவும் மனித வெறுப்பை, சமூக அநீதிகளைக் கொண்டாடும் அவரது மன நிலையைத் தோலுரிப்பது அவசியம் என்பதால் இதை எழுதுகிறேன்.

மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி, இந்தியச் சமூகத்தில் பன்மைத் தன்மையை ஒழித்துக்கட்ட வெறுப்பு அரசியல் செய்யும் பாசிஸ்டுகளின் பத்திரிகைகளில் வர வேண்டிய கட்டுரை அது. அவரது நூல்களை வாங்கி விற்கும் ஆர்.எஸ்.எஸ். நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வாங்கி இலவசமாக விநியோகிக்கும் தொழிலதிபர்கள் இக்கட்டுரையை மறுபிரசுரம் செய்யக் கூடும்.

தன்னார்வ அமைப்புக்கள் வெளியிடும் பத்திரிகைகள் இந்திய எதிர்ப்பைக் கண் மூடித்தனமாக வெளிப்படுத்துவதாகத் தொடங்கும் ஜெ.மோ விரைவில் `சமரசம்' `விடிவெள்ளி' முதலான முஸ்லிம் இதழ்கள், ஜமாத்-ஏ-இஸ்லாமி முதலான முஸ்லிம் அமைப்புகள், அருந்ததிராய் போன்ற சமூகச் சுரணையுள்ள எழுத்தாளர்கள் எல்லோரையும் ஒன்றாக்கி வெளிநாட்டிலிருந்து கூலி பெற்று இயங்குபவர்களாகவும், மத அடிப்படைவாதிகளாகவும், பயங்கரவாதத்தை நியாயப்படுத்துபவர்களாகவும் சித்திரிக்கிறார். தன்னார்வ அமைப்புக்களை இடதுசாரிகளும் விமர்சிக்கிறார்கள், இந்துத்துவவாதிகளும் எதிர்க்கிறார்கள். கூடவே முஸ்லிம் இதழ்களையும் இலக்காக்குவதிலிருந்து ஜெ.மோ யார் என்பது விளங்கி விடுகிறது.

காஷ்மீர் பிரச்சினை தொடர்பான அருந்ததி ராயின் சமீபத்திய கட்டுரை ஒன்றை `அலசுகிறார்' ஜெ.மோ. முஸ்லிம் வெறுப்பு ஒன்றை மட்டுமே மூலதனமாகக் கொண்டு கடை விரிக்கும் ஜெ.மோ, மிக அடிப்படையான அரசியல் உண்மைகளையும் கூட அறியாத ஞானசூன்யம் என்பதை வரிக்கு வரி வெளிப்படுத்தி விடுகிறார்.

1947-ல் தொடங்கி காஷ்மீர மக்களின் குரலை ஒடுக்குவது, ஆண்டு தோறும் பத்தாயிரக் கணக்கில் அப்பாவி மக்கள் மீது படுகொலைகள், சித்திரவதைகள், கற்பழிப்புகள் நிகழ்த்துவது ஆகியவற்றைச் செய்கிற இந்திய அரசைக் கண்டிக்கும் அருந்ததிராயை `வெளிநாட்டு ஏஜன்ட்' என்கிற அளவில் இழி மொழிகளால் அவதூறு செய்கிறது ஜெ.மோவின் கட்டுரை. இரண்டு வாரங்களுக்கு முன் காஷ்மீர் பள்ளத்தாக்கில் நான்கு நாட்கள் தங்கி நிலைமையை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு. அந்த நான்கு நாட்களில் இரண்டு நாட்கள் ஒரு விடுதியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தோம் நாங்கள். வெளியில் சி.ஆர்.பி.எஃப் படைவீரர்கள் ஆயுதங்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இன்று ஒவ்வொரு ஐந்து காஷ்மீரிக்கும் ஒரு இந்தியப் படைவீரர் என்கிற அளவில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் எட்டு லட்சம் வீரர்கள், யாரை வேண்டுமானாலும் கைது செய்ய, சுட்டுக் கொல்ல முழு அதிகாரம் அளிக்கப்பட்டு அங்கே நிறுத்தப்பட்டுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள், பழத் தோட்டங்கள் எல்லாம் இன்று இராணுவக் குடியிருப்புகள். உலக அளவில் பல்வேறு மனித உரிமை அமைப்புக்களும் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் கடந்த 18 ஆண்டுகளில் ஒரு லட்சம் காஷ்மீர் முஸ்லிம்கள் இந்தியப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். 80,000 குழந்தைகள் இன்று அனாதைகள் விடுதிகளில். அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படியே 2000-2002 ஆண்டுகளில் மட்டும் `காணாமலடிக்கப்பட்டவர்களின்' எண்ணிக்கை 3784. மனித உரிமை அமைப்புகள் இன்னும் பலமடங்கு அதிகமாக இந்த எண்ணிக்கையைச் சொல்கின்றன. பல்லாயிரக்கணக்கான இளம் விதவைகள், எந்தச் சட்ட உரிமைகளும் இல்லாத `அரை விதவைகள்' அதாவது காணாமலடிக்கப்பட்டவர்களின் மனைவிகள்: இதுதான் இன்றைய காஷ்மீர்.

எங்கு நோக்கினும் இராணுவ `கேம்ப்'கள். சாலையில் ஒரு இராணுவ வீரனைப் பார்த்தால், நீங்கள் செல்லும் வாகனத்தின் `ஹெட் லைட்'டை அணைத்து உள் விளக்கைப் போட வேண்டும். இல்லாவிட்டால் சுடுவார்கள்.

நான் சொல்கிற எதுவும் ஜெ. மோவுடையதைப் போல ஆதாரமற்ற அவதூறுகளல்ல. வெளிவர உள்ள எனது நூலில் அத்தனைக்கும் ஆதாரங்களுள்ளன. எந்தப் பொது மேடையிலும் அவருடன் விவாதிக்கத் தயாராக உள்ளேன்.

``அமர்நாத் குகைக் கோயில் சார்ந்து எழுந்த கிளர்ச்சியை ஒட்டி காஷ்மீரில் உருவான எதிர்க்கிளர்ச்சியை மாபெரும் மக்கள் புரட்சியாக நேரில் சென்று கண்டு ஆனந்த பரவசத்துடன் எழுதியிருக்கிறார் அருந்ததி ராய்'' - ஜெ.மோ.

பள்ளத்தாக்கிலுள்ள மக்களுக்கு அத்தியாவசிய மருந்துகள், குழந்தை உணவுகள் உட்படச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தி, கொய்த ஆப்பிள் பழங்களை அழுகடித்துப் பொருளாதாரத் தடைவிதித்த இந்துத்துவ வன்முறை (தன்னெழுட்சியாக) எழுந்த கிளர்ச்சியாம். தமது நிலத்தைச் சட்ட விரோதமாக, மக்களின் சம்மதமின்றி ஆலய நிர்வாகத்திற்கு மாற்றியதை சுற்றுச் சூழல் நோக்கிலிருந்தும், உரிமைகள் அடிப்படையிலும் எதிர்த்த காஷ்மீர் மக்களின் செயற்பாடுகள் மக்கள் புரட்சி இல்லையாம்.

அமர்நாத் பற்றி தினசரி இதழ்களைக் கூட ஒழுங்காகப் படிக்காத அறிவுச் சோம்பேறிகளுக்கு என்ன தெரியும்? யாரும் எளிதில் செல்ல இயலாத `கிளேசியர்' பகுதியொன்றில் குகைக்குள் இருந்த `பனிலிங்கத்தை'க் கண்டுபிடித்தது ஒரு முஸ்லிம் ஆட்டிடையர் (1860). விக்கிரக ஆராதனையில் நம்பிக்கையற்றவர்களாக இருந்த போதும் அந்தச் செய்தியை இந்துச் சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்ட முஸ்லிம் ஆட்டிடையர்கள் (`மாலிக்'கள்), கடந்த 150 ஆண்டுகளாக அதைத் தமது பாதுகாப்பில் வைத்திருந்தனர். ஆண்டு தோறும் வரும் யாத்ரிகர்களுக்கு எல்லாவிதமான வசதிகளையும் செய்து தருதல், மிகப் பெரிய உணவுச் சாலைகளை அமைத்து உணவு வடித்துத் தருதல் எல்லாம் முஸ்லிம்கள் தான். ஸ்ரீநகரிலிருந்து அமர்நாத் வரை செல்லுமிடமெல்லாம் முஸ்லிம்களின் விருந்தோம்பல்கள் அன்றும் உண்டு, இன்று உண்டு. காஷ்மீரிகளின் விருந்தோம்பல் உலகப் பிரசித்தமானது.

இந்த ஆண்டு இத்தனை பிரச்சினைகளுக்கு மத்தியிலும் கூட நான்கு லட்சம் யாத்ரிகர்கள் வந்துபோயுள்ளனர். அவர்களில் ஒருவருக்கும் கூட ஒரு சிறு தீங்கும் விளைவிக்கவில்லை. மாறாக வழக்கமான அத்தனை விருந்தோம்பல்களும் நடைபெற்றன. இந்து யாத்ரிகர்களுக்கு முழுப் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் ஜம்முவிலிருந்து கொண்டு இந்துத்துவ அமைப்புக்கள் மேற்கொண்ட `கிளர்ச்சியை' ஒட்டி 30 முஸ்லிம் இளைஞர்கள் கொல்லப்பட்டனர். உண்டா, இல்லையா?

காஷ்மீரில் இந்திய அரசு மேற்கொள்ளும் விரிவாக்க ஆக்ரமிப்பு இந்துக் குடியேற்றங்களைச் செய்யும் வடிவிலானதல்ல. மாறாக எல்லாவிதமான நிறுவனங்களின் மீதுமிருந்த காஷ்மீர மக்களின் அதிகாரம் படிப்படியாகப் பறிக்கப்பட்டது. இதனுடைய ஒரு உச்ச கட்டம்தான் அமர்நாத் ஆலய நிர்வாகம் (Shrine Board) உருவாக்கப்பட்டதும், 100 ஏக்கர் நிலம் கையளிக்கப்பட்டதும். பா.ஜ.க. அரசால் நியமிக்கப்பட்ட அறிஞர் சின்ஹாவின் சதித்திட்டம் அது. ஒவ்வொரு ஆண்டும் உருப்பெறும் அந்தப் பனிலிங்கத்தின் ஆயுள் இரண்டு வாரங்கள் மட்டுமே. பின் அது உருகி `லிட்டர்' மற்றும் `ஜீலம்' நதிகளில் கரைந்தோடிவிடும். படிப்படியாக யாத்ரிகர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, யாத்திரைக் காலத்தை இரண்டு வாரங்களிலிருந்து இரண்டு மாதமாக அதிகரித்தது, பனி லிங்கத்தின் இடத்தில் நிரந்தரமாக ஒரு பளிங்கு லிங்கத்தை அமைக்கும் சதித்திட்டம் தீட்டியது ஆகியவற்றின் உச்ச கட்டமாகவே 100 ஏக்கர் நிலம் ஆலய நிர்வாகத்திற்கு அளிக்கப்பட்டதும், ஆலய நிர்வாகக் குழுவில் உள்ளவர்கள் சுங்கம் வசூலிக்கத் தொடங்கியதும் கிளேசியர் பகுதி ஒன்றில் யாத்ரீகர்கள் வசதிக்கென நிரந்தரமாக கட்டிடங்கள் உருவாக்குவதும். கடந்த 18 ஆண்டுகளில் உபரியாக எட்டு லட்சம் இராணுவத்தினரைச் சுமந்து அழிந்துள்ள காஷ்மீரின் இயற்கை வளங்கள் நிரந்தரமாக அழித்து விடும் எனச் சுற்றுச் சூழலாளர்கள் சொல்லியிருப்பது தெரியுமா ஜெ.மோக்களுக்கு.

``அந்த மண்ணின் மைந்தர்களான காஷ்மீரி பண்டிட்டுகளைக் கொன்று குவித்து அடித்துத் துரத்திய பின்னர்தான் அவர்களின் (காஷ்மீரிகளின்) போராட்டம் தொடங்கியது'' -ஜெ.மோ.

ஜெ.மோவின் வெறுப்பு அரசியலின் உச்சகட்ட வெளிப்பாடு இது. அவரது ஞானசூன்யத்திற்கான அப்பட்டமான சாட்சியம் இது. பண்டிட்கள் மண்ணின் மைந்தர்கள் என்பதில் நமக்கு மட்டுமல்ல, காஷ்மீர முஸ்லிம்களுக்கும் கருத்து மாறுபாடு இல்லை. ஆனால் பண்டிட்கள் + முஸ்லிம்கள் என்றொரு எதிர்வை உண்டாக்கி பண்டிட்களை மட்டும் மண்ணின் மைந்தர்கள் எனச் சொல்வதன் பொருளென்ன? முஸ்லிம்களை `அந்நியர்களாக'ச் சித்திரிப்பதுதானே.

பிரிவினைக் கலவரங்களின்போது ஜம்முவில் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை 5 லட்சம். கட்டாயமாகப் பாகிஸ்தானுக்கு வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை ஒரு லட்சம். ஆனால் பள்ளத்தாக்கிலிருந்த பண்டிட்கள் யாரும் அப்போது கொல்லப்படவில்லை என்பது நினைவிருக்கட்டும். காந்தியடிகளும் கூட இந்த உண்மையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு காஷ்மீர முஸ்லிம்களைப் பாராட்டினார். 1990-களில் ஆளுநர் ஜெக்மோகனின் (ஜெய மோகனுக்கும் ஜெக்மோகனுக்கும் மூளையில், சிந்தனை முறையில் எந்தப் பெரிய வித்தியாசமும் கிடையாது) ஊக்குவிப்புடன் வெளியேறியவர்கள்தான் இன்று அகதிகளாக உள்ள பண்டிட்கள். இந்தியாவில் வேறு எந்த அகதிகளுக்கும் வழங்கப்படாத சலுகைகள் இன்று பண்டிட்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. டெல்லியில் மக்கள் நெருக்கமுள்ள பகுதிகளில் கடைகள், அரசு ஊழியர்களுக்கு வேலையின்றியே முழு ஊதியம்...

காஷ்மீரில் தீவிரவாதம் தலையெடுத்திருந்த கடந்த 18 ஆண்டுகளில் எஞ்சிய அப்பாவிப் பண்டிட்கள் மீது பயங்கரவாதம் ஏவப்பட்டதில்லை என்பதையும் நினைவிற்கொள்ளுங்கள். உளவு சொன்னார்கள், காட்டிக் கொடுத்தார்கள் என்கிற ரீதியில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில தனிநபர்கள் கொல்லப்பட்டிருக்கலாம். குஜராத்தைப் போலவோ, மும்பையைப் போலவோ பெரிய அளவில் இனப் படுகொலையை பண்டிட்கள் மீது காஷ்மீரத் தீவிரவாதிகள் நிகழ்த்தியதில்லை. இன்னொன்றையும் மனசில் நிறுத்துங்கள். காஷ்மீரில் இன்று அகதிகளாகியிருப்பது பண்டிட்கள் மட்டுமல்ல. அதே அளவில் காஷ்மீரி முஸ்லிம்களும் இடம் பெயர்ந்துள்ளனர். இம்முறை நான் பண்டிட்களின் பிரதிநிதியாக குமார் வாஞ்சு என்பவரையும் சந்தித்துப் பேசினேன்.

``காஷ்மீர் மக்கள் தேடுவது சுதந்திரத்தை அல்ல. பாகிஸ்தானோடு இணைவது மட்டுமே என்பது வெளிப்படை'' - ஜெ.மோ.

இதுவும் உண்மையறியாமையின் விளைவான பிதற்றலே. சையத் அலி ஷா கீலானி போன்றவர்கள் பாகிஸ்தானுடன் இணைதல் என்கிற கருத்தை முன் வைத்தபோதிலும் சுதந்திர காஷ்மீர் (`ஆஸாதி') என்கிற கோரிக்கையை முன் வைப்பவர்களே அங்கு அதிகம். அமர்நாத் பிரச்சினைக்குப் பின் இன்று அங்கு நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின் தீவிரவாதம் பின்னுக்குச் சென்று அமைதி வழியிலான மக்கள் எழுச்சியாக அது மாற்றமடைந்துள்ளது. அதையொட்டியே அக்டோபர் 6-ல் அறிவிக்கப்பட்ட லால் சவுக் பேரணி. இதை நேரில் காண்பதும் எங்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் இந்திய அரசின் கொடுங்கரங்கள் இந்த எழுச்சியை கொடூரமாக ஒடுக்கியதைத்தான் நாங்கள் நேரில் பார்க்க முடிந்தது. இன்று உருவாகியுள்ள `காஷ்மீர் ஒருங்கிணைப்புக் குழுவில்' பிரிந்திருந்த ஹூரியத் அமைப்புகள் தவிர, பார்கவுன்சில், வணிகப் பேரவை எனப் பல தரப்பு சிவில் சமூகத்தினரும் ஒன்றிணைந்துள்ளனர். பெரியவர் கீலானியையும் எங்கள் குழு சந்தித்து உரையாடியது. அவரது கருத்தும் மாறியுள்ளது. பல தரப்பட்ட மக்களையும் சந்தித்தோம். பொதுமக்கள், வழக்குரைஞர்கள், பாதிக்கப்பட்டவர்கள், சீக்கிய சமூகத்தினர் எல்லோருடனும் உரையாடினோம். இன்று காஷ்மீர மக்களின் ஒரே கோரிக்கை `ஆஸாதி. தான் பாகிஸ்தானுடன் இணைப்பு அல்ல.

பாகிஸ்தானை ஒரு தாலிபானிய அரசு எனவும், இன்று காஷ்மீருக்கு இருக்கும் அடிப்படை உரிமைகளும் இல்லாத சர்வாதிகார அமைப்பு எனவும் ஜெ.மோ குறிப்பிடுகிறார். இதுவும் அப்பட்டமான அறியாமையின் விளைவே. இது குறித்து நான் விரிவாக எழுதியுள்ளேன். ஜியாஉல்ஹக்கின் காலத்தைத் தவிர வேறெப்போதும் பாகிஸ்தான் தன்னை ஒரு முஸ்லிம் அரசாகப் பிரகடனப் படுத்திக் கொண்டதில்லை. ஜின்னா முஸ்லிம்களுக்கான ஒரு நாட்டைத்தான் கோரினாரே ஒழிய இஸ்லாமிய அரசு ஒன்றையல்ல. இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள், ஜனநாயகத்திற்குப் பொருந்தாத நிலப் பிரபுத்துவ மதிப்பீடுகளினடிப்படையிலான அரசியல் எல்லாவற்றிற்கும் அப்பால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அங்கே நடைபெற்ற ஜனநாயகத்திற்கான பேரெழுச்சியையும், போராட்டங்களையும் நாம் கவனிக்க வேண்டும். இராணுவ ஆட்சி வீழ்த்தப்பட்டதையும் மனங்கொள்ள வேண்டும். வழக்குரைஞர் அமைப்புக்கள், நீதிமன்றங்கள் ஆகியன இந்தியாவைக் காட்டிலும் அங்கே போர்க்குணத்துடனும், சுதந்திரமாகவும் செயல்படுகின்றன. அதன் விளைவே நீதிமன்றங்களின் மீதான முஷரெப்பின் தாக்குதல். அதன் பலன்களை இன்று அவர் சந்தித்துக் கொண்டுள்ளார். பாகிஸ்தான் தெருக்களில் பிச்சைக்காரர்களைப் பார்க்க முடியாது.

ஒப்பீட்டளவில் அகக்கட்டுமானங்கள், சாலை வசதிகள் முதலியன அங்கு அதிகம். இந்தியா பீற்றிக்கொள்ளும் `பொருளாதார வளர்ச்சிக்கும்' கூட பாகிஸ்தானின் வளர்ச்சி குறைந்ததல்ல. பாகிஸ்தானில் பல மட்டங்களில் பெண்களுக்கு அரசியல் ஒதுக்கீடு வழங்கப்பட்டாலும், சிறுபான்மை மதத்தவருக்கு அவர்கள் வேண்டாமென்று சொன்ன வரை இரட்டை வாக்குரிமை அளிக்கப்பட்டிருந்ததும் ஜெயமோகனுக்குத் தெரியுமா?"

10 comments:

Anonymous said...

ஆமாம் இந்த எழுத்தாளுருங்க பெரிய ......

தெரியாமதான் கேக்குறேன் பீலாபாரதி நீ என்னைக்காவது நேர்மை நியாயம் உண்மைன்னு நடந்து இருக்கியா

நீயே ரஒரு ப்ராடு இதுல இது வேற போடா பொறம்போக்கு

மணிகண்டன் said...

காஷ்மீர் பண்டிட் குறித்து எழுதப்பட்டதும், பாகிஸ்தானின் உள் கட்டுமானம் குறித்தான தகவலும் மிகையான நகைச்சுவை.

இட்டாலி வடை said...

வாருங்கள் மணிகண்டன் !

அ.மார்க்ஸ் தனது புத்தகத்தில் அதுகுறித்தான ஆதாரங்களை வெளியிட உள்ளதாகக் கூறியிருக்கின்றாரே...

இட்டாலி வடை said...

பொறம்போக்கி அனானி!

காஸ்மீர் பிரச்சினையை "உண்மையாகவே" அறிந்து கொள்ள சசியின் டைரியைப் படிக்கவும்..

http://blog.tamilsasi.com/2005/06/1.html

Sanjai Gandhi said...

என்னக் கொடுமை சார் இது? :(

//இந்தியா பீற்றிக்கொள்ளும் `பொருளாதார வளர்ச்சிக்கும்' கூட பாகிஸ்தானின் வளர்ச்சி குறைந்ததல்ல.//

கொஞ்சம் ஒப்பிட முடியுமா சார்?

ஒபாமா அண்ட் கோவை இப்படி அநியாயத்துக்கு ஏமாத்தி இருக்காங்களே.. உங்களுக்கு தெரிஞ்ச அளவு அவங்களுக்குத் தெரியலை பாருங்க.. 37 ஆயிரம் கோடி தராங்களாம் பொருளாதார வளர்ச்சி தேசத்துக்கு. மூடர்கள்.

இட்டாலி வடை said...

வாருங்கள் சஞ்சய்!
அ.மார்க்ஸ் இன் முழுக்கட்டுரையையும் படிக்க :http://padamkadal.blogspot.com/2008/11/blog-post_6755.html

இட்டாலி வடை said...

சீனு has left a new comment on your post "வீணாய்ப்போன அனானிக்கு":

அட முட்டாளே! அடிமுட்டாளே!!

சீனு ! நீங்கள் உங்களைபற்றியே புலம்பித்திரிவது ஏன்?

சீனிவாசன் கிருட்டிணசாமி

* Age: 32
* Gender: Male
* Industry: Technology
* Occupation: குப்பை கொட்டுதல்
* Location: சென்னை : தமிழ் நாடு : India


அடிமுட்டாள் சீனு Blogs

http://sirippu.blogspot.com/
நான் சிரித்துக் கொண்டே அழுகின்றேன்

Sanjai Gandhi said...

அந்த பதிவை படித்தேன் இவ. கூடவே இதையும்..

//Anonymous said...

ஓஹ்..
குகனின் நெடுங்குருதியில் சத்தம் போடமல் இருந்த அ.மார்க்ஸ் ஏன் இப்ப கெம்பிக் குதிக்கிறார்? ஜெயமோகன் தான் ஏதோ தெரியாமல் எழுதுறார். பாவம். நீங்கள் கொலை செய்துபோட்டு ஆள் உள்ளுக்கை போனாப்பிறகும் கமுக்கமா இருந்து போட்டெல்லோ வந்தனீங்கள்..! பிரான்ஸ் வந்து போன காசு யாருடைய காசு அ.மார்க்ஸ் அவர்களே? காஸ்மீரியப் போராட்டம் அவருக்கு நியாயமாய் தெரியுதாம். ஈழப் போராட்டத்தில் புலிகள் ஆயுதத்தை கைவிட்டு பிள்ளையான் மாதிரி மகிந்த ட சொல்லைக் கேக்க வேணுமாம் எண்ட சோபாசக்தியின் கருத்தை அவர் ஏற்பாராம்? அ.மார்க்ச் கேக்கிறவன் கேணையனா இருந்தா கேற்பை மாடும் ஏரோபிளேன் ஓடுமாம்.//

அவர் ரொம்ப நல்லவர் போல.

Unknown said...

Vanakkam Nambargale,

yarruappa athu annani, Oneum puriyavillai. Some articles seems to be good. Need time to read other articles also.

Unknown said...

Vanakkam Nambargale,

yarruappa athu annani, Oneum puriyavillai. Some articles seems to be good. Need time to read other articles also.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil