ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, October 26, 2009


பயங்கரவாதத்தை இந்தியா ஏற்றுமதி செய்கின்றது..?


பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் ஒரு நாடு இந்தியா என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்து வருகின்றது. இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் என்று அரசாங்கங்களிற்கு எதிராகவோ அந்நாட்டின் மக்களுக்கு எதிராகவோ பயங்கரவாத நடவடிக்கைகளைத் தூண்டி அதற்கான பண ஆயுத, இராணுவ ஆலோசனை என்பவற்றை வழங்குவதுடன் பயிற்சிகளையும் இந்தியா வழங்குகின்றது.

ஈழப்போரில் கூட அதன் ஆரம்பகாலத்தில் ஆயுதக்குழுக்களுக்கு பயிற்சி முதல் பண ஆயுத உதவிகள் வரை செய்து இறுதியில் சிங்கள அரசாங்கத்திற்கு தடைசெய்யப்பட்ட இரசாயன , உயிரியல் ஆயுதங்கள் வரை வழங்கி 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததை நீங்கள் அறிவீர்கள்.

நேபாளத்திலும் மாவோயிஸ்ட் புரட்சியாளர்களை ஒடுக்கும் நோக்கில் நேபாள அரச ஆட்சியாளர்களுக்கு ஆயுத பண உதவிகள் அளித்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததையும் நீங்கள் அறிவீர்கள்.

இன்று உள்நாட்டிலேயே காஸ்மீர்,மிஷோரம்,அருணாசலப் பிரதேசம் என்று உள்நாட்டிலேயே அரசபயங்கரவாதத்தை ஏவி படுகொலைகளைச் செய்து கொண்டிருப்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

இப்போது பாகிஸ்தானில் தலிபான்களுக்கு பண உதவி ஆயுதங்களை வழங்குவதான பலத்த குற்றச்சாட்டை பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் எழுப்பியுள்ளார்.
சர்வதேச சமூகத்தால் ஒழிக்கப்பட முயற்சிக்கப்படும் பயங்கரவாதம் இந்தியாவால் ஆதரிக்கப்பட்டு வளர்க்கப்படுவது உலக நாடுகள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தியா மீதான தம் கருத்தை மறுபரிசீலனை செய்யும் எண்ணத்தையும் அவை இப்போது கொண்டுள்ளன.

பாகிஸ்தான் உள்துறை அமைச்சரின் பேட்டி வெறுமனே விலக்கி வைக்கக் கூடியதல்ல. ஜனநாயகப் போர்வையில் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடுகள் மீது வைக்கப்படும் குர்றச்சாட்டுகள் தீவிரமாக ஆராயப்படவேண்டியன.

இனி அவரின் குற்றச்சாட்டு மற்றும் சவால். இதற்கு இந்தியா எவ்வாறு பதிலளிக்கப்போகின்றது ?


//தாலிபான்களுக்கு நிதியுதவி அளித்து பாகிஸ்தானில் குழப்பத்தை ஏற்படுத்தி வருவது இந்தியாதான் என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் மீண்டும் குற்றம் சாற்றியுள்ளார்.

இஸ்லாமாபாத்திலிருந்து ஒளிபரப்பாகும் செய்தி சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் இக் குற்றச்சாற்றைக் கூறியுள்ள மாலிக்,பாகிஸ்தானில் குழப்பத்தையும்,ஸ்திரமற்றம் நிலையையும் ஏற்படுத்துவதற்காக தாலிபான்களுக்கு பின்னணியிலிருந்து ஆதரவளித்து வரும் சில தீய சக்திகளில் இந்தியாவும் ஒன்று தெரிவித்துள்ளார்.

தாலிபான்களுக்கு யார் ஆதரவளித்து வருகிறார்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு பதிலளித்தார்.

" பாகிஸ்தான் ஸ்திரத்தன்மையுடன் இருக்கக்கூடாது என்று எண்ணுகிற சில தீய சக்திகள் இருக்கின்றன.அந்த சக்திகள்தான் தாலிபான்களுக்கு ஆதரவளித்து வருகின்றன " என்று கூறிய மாலிக்கிடம், அந்த தீய சக்திகளில் இந்தியாவும் ஒன்றா எனக்கேட்டபோது, " ஆமாம், நிச்சயமாக.அதில் எந்த சந்தேகமும் எனக்கு இல்லை.நான் மிகவும் வெளிப்படையாகவே கூறுகிறேன்.இது தொடர்பாக முழு விவரங்களும் எனக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய உள்துறை அமைச்சரோ அல்லது அந்த நாட்டைச் சேர்ந்த வேறு யாராகிலுமோ நேருக்கு நேர் வாதம் செய்ய விரும்பினால் அதற்கு நான் தயாராகவே உள்ளேன்.ஏனெனில் நான் என்ன சொல்கிறேன் என்பதை நான் அறிந்துள்ளேன் " என்று அந்த பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளார்.

பலுச்சிஸ்தானில் இந்தியா குழப்பத்தையும்,கலரவத்தையும் தூண்டிவிட்டு வருவதற்கான ஆதாரம் தம்மிடம் உள்ளதாகவும்,இதனை எந்த ஒரு இந்திய தலைவர்களிடமோ அல்லது பிரதிநிதிகளிடமோ அளிக்க தயாராக உள்ளதாகவும் கடந்த வாரம் மாலிக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. //


http://tamil.webdunia.com/newsworld/news/international/0910/26/1091026078_1.htm

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil