ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, October 24, 2009


கறுப்புக் கண்ணாடியும் கறுத்துப்போன இதயமும்


'கலைஞர் திரை இசைப்பாடல்கள்' என்று ஒரு புத்தகம் கிடைத்தது.அதைத் தொகுத்திருந்தவர் நம்ம சிலோன் விஜயேந்திரன். கலைஞர் என்று தூக்கி வைத்து போற்றிய ஒரு இனத்தை இன்று நயவஞ்சக நாடகமாடி கலைஞர் கொன்று போட்டதை எண்ணி இதயம் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றது.

ஒரு தமிழகத்தமிழன் செய்ய எண்ணாததை ஒரு ஈழத்தமிழன் செய்திருக்கின்றான் என்றால் அவர்கள் எத்தனை தூரம் இந்த கறுப்புக் கண்ணாடி கலைஞரை ஏற்றிப்போற்றி நம்பியிருப்பார்கள். அத்தனை இதயத்தையும் துடிக்கத் துடிக்க கொன்று போட்ட பாவத்தை எத்தனை பிறப்புக்கள் எடுத்துக் கழுவ முடியும்.

இன்று கலைஞர் ஆட்சியில் துன்பப்படும் தமிழக மக்களையே, கலைஞர் 1988 இல் 'மக்கள் ஆணையிட்டால்' என்ற படத்தில் எழுதிய பாடல் எகத்தாளமாகக் கேட்கின்றது.

அந்தப் பாடல்,

"ஆற அமரக் கொஞ்சம் யோசிச்சுப்பாரு-நீ
அடுத்து வரும் தலைமுறையைச் சிந்தித்துப்பாரு
ஏற இறங்கப் பார்த்து எடைகளைப் போடு - நீ
எத்தனுக்கும் பித்தனுக்கும் தடைகளைப் போடு "

என்ன போடலாமா மக்களே! உங்களைப் புழுவைப் போல மிதித்து ஏளனம் செய்பவர்களுக்கு தடை போடலாமா?

அதே பாடலில்,

ஓட்டுக்கு உன்னிடத்தில் வருபவன் யாரு
உழைப்பவனா ஊரை ஏய்ப்பவனா
தேர்தல் களத்திலே நிற்பவன் யாரு
தியாகம் செஞ்சவனா மோசம் செஞ்சவனா
ஓட்டுக்குப் பணம் கொடுக்கும்
உலுத்தர்களை நம்பாதப்பா

நாட்டுக்கு உயிர்கொடுக்கும்
நல்லவரைத் தள்ளாதப்பா
வஞ்சகப் பேய்களை விரட்டணுமே - ஏழை
துன்பம் தீர்ப்பவன் ஜெயிக்கணுமே

என்னங்க நம்ம கறுப்புக் கண்ணாடி் சொல்லியிருக்கார் நாம யோசிக்க வேண்டாமா?

கலைஞருக்கு மூணோ நான்கு பொண்டாட்டிங்கன்னு சொல்றாங்கோ
எப்பிடிப்பா நம்பமுடியும்.. எத்தனை பொண்டாட்டிங்க..எத்தனை வை......

1963 ஆம் ஆண்டு வெளிவந்த 'பூம்புகார்'படத்திலே இப்படிச் சொல்லியிருக்காரே..

"ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயிர் மூச்சை உள்ளடக்கி
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அக்தும்
பிறன் பழிப்பதில்லாயின் நன்று -எனும்
திருக்குறளை மறவாதே திசை மாறிப்போகாதே "

திசைமாறிப் போவாரா கலைஞர்..

இல்லற வாழ்க்கையிலேயே இத்தனை(?) ஒழுக்கம் காட்டும் கலைஞர் பொது வாழ்க்கையில் எப்படி இருக்கின்றார் என்று பார்ப்போமா? ஒழுக்கம் கெட்டுப் போய்விட்டாரா? என்ன? கருப்பு கண்ணாடி கன்ணைத் தான் மூடி் இருக்கணும் இதயத்தை அல்ல....

1950 இல் வந்த 'மந்திரி குமாரி ' படத்தில்,

"நாட்டுக்குத் தலைவனென்று நம்பும்படி பேசி விட்டு
வேண செல்வம் வாரியே போவாரடி
நாடு செழிக்க எண்ணி நாளெல்லாம் பாடு படும்
ஏழைக்குக் காலமில்லே எவனெவனோ வாழுகின்றான்

- எருமைக்கண்ணுக் குட்டி

ஏச்சுப் பொழைக்கிறவன்
ஏழடுக்கு மாளிகையில்
எகத்தாளம் போடுறானே
அவன் பேச்சை மறுக்கிறவன்
பிச்சை எடுக்கிறானே

- எருமை கண்ணுக் குட்டி

கலைஞர் அப்படியா செய்திருக்கார்..எத்தனை கெளரவமா வாழ்ந்துகிட்டிருக்கார்...புரளி கெளப்புறாங்க .. பொய் சொல்லுறாங்கையா நம்பாதீங்க..

ஈழத்தமிழர்கள் இன்று கலைஞர் கபடக்காரனாயிற்றே என்று அழுது புலம்புகின்றார்களே இப்படி,

1966 இல் 'மறக்க முடியுமா?' என்ற படத்தில்,

கோலமும் போட்டு கொடிகளும் ஏற்றித்
தேரையும் ஓட்டித் தீயையும் வைத்தான்
காலமும் பார்த்து நேரமும் பார்த்து
வாழ்வையும் ஈந்து வதைக்கவும் செய்தான்

அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை


என்னையா ..எங்கள் இனிய தமிழர் தானா இப்படி அழுகின்றார்..நம்ம கலைஞர் ஆளுகையிலே...

1982 இல் 'தூக்கு மேடை' யில் கலைஞர் சொல்லியிருக்காரே ..

குத்துக்கல் சிம்மாசனம்
குப்பைத் தொட்டி ராஜாங்கம்
செத்துப் பிழைக்கும் மக்களிற்குச்
செகத்தை அழிக்கும் சக்தியுண்டு

என்று பாடிய கலைஞர் தப்புச் செய்வாரா? என்ன?

1953 இல் "நாம்" படத்தில்,

பெருமை பேசும் மனிதரெல்லாம்
எதற்கெடுத்தாலும் எருமை போல
தலையசைப்பதை உரிமைக்காக
எதிர்த்து நிற்கும்

அண்ணா வாழ்ந்த தமிழ் நாட்டில் இப்படித் தீமைகள் பெருகிடுச்சின்னா நம்ப நாம என்ன கேணையங்களா..?

ஈழத்தமிழங்க புரியாமப் பேசுறாங்கப்பா...

புழுவாகத் துடிக்கின்ற ஏழை
கழுகாகப் பறக்கின்ற சீமான் இந்தப்
பொல்லாத பேதங்கள் எல்லாம்
இல்லாத பொன்னாடாய்ச் செய்தார் அந்த

அண்ணா வாழ்ந்த தமிழ்நாட்டைக் குறை சொல்ல முடியுமா? எதிர்க்கட்சிகளின் சதி என்று எளிதாக மறந்து விடுங்கையா...


ஈழத்தமிழர்களே உங்களுக்கும் 1953 இலேயே கலைஞர் ஆறுதல் சொல்லியிருக்கார்,

தேனெனும் வாழ்வே தேளாய் மாறும்
போர்முனைச் சாவே பொது வாழ்வில் இன்பம்
ஆணவம் சீறலாம், ராணுவம் பாயலாம்
சீற்றத்தைக் கண்டு சிதறாதே -உளம் சிதறாதே
தூற்றலைக் கேட்டு துவளாதே - பகை

அழுவாதீங்கப்பா.. உங்களுக்குத் தான் 'தம்பி' இருக்கானே,

அதையும் "வீரன் வேலுத்தம்பி'யில் 1988 இல் பாடியிருக்காரே கலைஞர்,

சுருளு மீசைக்காரனடி வேலுத் தம்பி
சூராதி சூரனடி வேலுத்தம்பி
சூரியனில் நெருப்பெடுப்பான்
சூழ்ச்சிகளை கொளுத்திடுவான்

எரிமலையில் அடுப்பெரிப்பான்
ஏழையர்க்கு உண வளிப்பான்
எங்கள் குல தெய்வ மாவான்
தங்க குண சிங்கமாவான்

பூகம்ப மேடையிலே
புரட்சி கீதம் பாடிடுவான்
பொல்லாதோர் பகையெல்லாம்
பொடிப் பொடியாய் ஆக்கிடுவான்

அப்புறம் என்ன? உங்க 'தலை'யை நம்புங்க ..வேறு எந்த கருநாவையும் அல்ல..

1963 இல் 'காஞ்சித் தலைவன்" இல்

மகிமை கொண்ட மண்ணின் மீது எதிரிகளின் கால்கள்
மலர் பறிப்பதில்லையடா வீரர்களின் கைகள்
மாவீரர்களின் கைகள்
சென்று வா வென்று வா

மண்ணின் மீது எதிரியின் கால்கள் மட்டுமல்ல கபடம் நிறைந்த கறுத்த இதயமுள்ளவர்களின் துரோகமும்...

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil