ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, October 26, 2009


புலிகளை உயிர்ப்பிக்கும் இந்தியா


ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையத்தின் சிறிலங்காவின் போர்க்குற்றங்களைத் தீர விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கை சிங்களப் பாசிச அரசை கிலி கொள்ளச்செய்துள்ளது. காஸாவில் நடைபெற்ற விசாரணைகள் போன்ற திறந்த சுதந்திரமான விசாரணைகள் சர்வதேச நெறிகளுக்கு முரணான அப்பாவி மக்கள் மீதான கொலைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவருமென நம்பப்படுகின்றது.

அப்பாவி மக்கள் மீதான சிங்கள இராணுவ அதிகாரிகளின் மிலேச்சத்தனமான படுகொலைகளும் அங்கு பாவிக்கப்பட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதங்கள் பற்றிய விபரங்களும் வெளிவருவதையிட்டு சிறிலங்கா மட்டுமல்ல பல நாடுகள் கவலைகொள்ளத்தொடங்கியிருக்கின்றன. சர்வதேச சமூகத்தால் தடை செய்யப்பட்ட உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதங்களை வழங்கிய இந்திய அரசு பதற்றங்கொள்ளத் தொடங்கியிருக்கின்றது. இவ்வகை ஆயுதங்களின் பாவனை உறுதிப்படுத்தப்பட்டால் இந்தியாவின் அகிம்சாவாத ஜனநாயக முகமூடி கிழிக்கப்படுவதுடன் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்யும் நாடென இந்தியா உலக அரங்கிலிருந்து ஒதுக்கப்படும்.

இப்பதற்றங்களின் முதற்படியாக சரணடைந்து கொல்லப்பட்ட புலித் தலைவர்களின் விவகாரத்தில் சிறிலங்கா இப்போது முன்னுக்குப் பின்னாக உளறத்தொடங்கியுள்ளது. முன்னர் பிரபாகரன் யுத்தத்திலேயே கொல்லப்பட்டார் என்று கூறியிருந்த போதிலும் பின்னர் இராணுவ அதிகாரிகளை மேற்கோள் காட்டி மே 17 ஆந்திகதி காலையில் பிரபாகரன் சரணடைந்தபோதும் பலத்த சித்திரவதைகளின் பின் மே 18 ஆந்திகதி மாலையில் கொல்லப்பட்டாரென செய்திகள் கசிந்திருந்தன.

இலங்கை இராணுவம் வெளியிட்ட இணையத்தளப் படங்களும் அவ்வகையான செய்திக்கு உரம் சேர்ப்பதாகவே விளங்கின. மிக அருகில் இருந்து மண்டை பிளக்கப்பட்ட அகோர நிலையிலேயே அவர் படங்கள் காணப்பட்டன. அமெரிக்காவில் இருந்து வெளிவரும் கார்டியன் பத்திரிகை பல சிறிலங்கா இராணுவ அதிகாரிகளின் இரகசிய பேட்டிகளை முன்வைத்து இதை ஊர்ஜிதம் செய்திருந்தது. அடைக்கலமடைந்த புலிகளைக்கொல்வது சர்வதேச போர்சட்டங்களுக்கு எதிரானது. இதனால் சங்கடப்பட்ட சிறிலங்கா பாசிச அரசு அதனை உடனேயும் மறுத்திருந்தது. போரிலேயே பிரபாகரன் கொல்லப்பட்டிருந்தால் இறந்து விட்டதாகக் காட்டப்பட்ட மற்றைய புலித்தளபதிகள் மீது காணப்படாத சித்திரவதை அடையாளங்கள் பிரபாகரனின் உடலில் எப்படி வந்தது என்பதை விளக்கத் தவறி விட்டது.

அத்துடன் சர்வதேச விதிகளை மீறியிருக்காவிட்டால் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் சுதந்திரமான விசாரணையை நடாத்த சிறிலங்கா அரசு ஏன் தயங்க வேண்டுமெனவும் கேள்வி எழுந்துள்ளது.

இதே வகையான பொறியில் இப்போது இந்தியாவும் வகையாக மாட்டிக்கொண்டிருக்கின்றது. இலங்கையில் இடம் பெற்ற படுகொலைகளின் தடங்களை எத்தனை தூரம் அழித்தாலும் அமெரிக்க செய்மதிகளால் எடுக்கப்பட்ட நேரடிப் படுகொலைகளின் புகைப்படங்களை வைத்து அமெரிக்கா மிரட்டி வருகின்றது.

அதனால் புலிகளை முற்றாக அழியவிடாது இந்தியா உயிர்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றது. புலிகளின் மீது அதி தீவிரவாத பயங்கர வாத முலாம் பூசுவதற்கான நடவடிக்கைகளில் இந்தியா இறங்கியுள்ளது. அண்மையில் இந்திய மாவோயிஸ்ட் நக்சலைட் தலைவர் கணபதி புலிகள் பற்றி கருத்துக்கூறி வெளியிட்ட அறிக்கையை பிடித்துக் கொண்டுள்ளது.

புலிகளின் மூன்று குழுக்கள் இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ளதாக இந்திய மத்திய புலனாய்வுத் துறை இப்போது 'கதை' விடத்தொடங்கியுள்ளது. புலிகள் மீதான சிங்கள ஆக்கிரமிப்பாளரின் படை நடவடிக்கையின் போது பலத்த காவலை இந்தியக் கரையோரங்களில் மேற்கொண்டு அப்பாவி மக்கள் கூட தப்பி வரமுடியாது கொலை செய்தது இந்தியா என்பதை அனைவரும் அறிவோம்.

இப்போதோ புலிகளின் படையணிகள் 'ஊடுருவும்" கதைகளை அவிழ்த்து விட்டுள்ளது. மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளிற்கு புலிகள் பயிற்சி கொடுத்து ஆயுதங்களை வழங்கினார்கள் என்று புலனாய்வு அறிக்கை கூறுகின்றது. ஆனால் மாவோயிஸ்ட் தலைவர் கணபதியோ புலிகளுக்கு எங்களிடம் உள்ள நவீன ஆயுதங்களை வழங்குவோம் என்று பேட்டியில் கூறியிருக்கின்றார்.

இப்பொழுது ஊடுருவிய குழுக்களைப்போலவே இன்னும் பல குழுக்கள் "ஊடுருவும்" கதைகள் அவிழ்த்து விடப்படும். இந்தியாவில் அகதிகளாக வாழும் ஈழத்து இளைஞர்களைக் கொண்டு இப்புதிய புலிகளின் குழுக்கள் உயிர்ப்பிக்கப்படும். மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து இந்தியா செல்லும் ஈழத்தமிழர்கள் இத்தகைய குழுக்களின் "மாஸ்டர் மைண்ட்" மற்றும் "நிதி வழங்குனர்" பாகங்களை ஏற்கும் கதைகளும் சோடிக்கப்படும். இந்தியா செல்லும் ஈழத்தமிழர்களே ஜாக்கிரதை.

இதற்குள் இந்தியாவின் கரையோரப் பாதுகாப்பின் கெடுபிடி பற்றியும் புலிகளின் ஆயுதக்கப்பல்களை வழி மறித்து அழித்த வீரதீர சாகசங்கள் பற்றியும் கேள்விப்பட்டிருந்தோம். சிங்களை பாசிச ஆட்சியாளர்களும் தங்கள் நன்றிகளை எப்போதும் சோனியாவிற்கு பகிரங்கமாகவே கூறியிருந்தார்கள்.

இதையெல்லாம் மீறியா..? ம்..ஹிம் சான்ஸே இல்லை ..இந்தியா வல்லரசாக. சீன போரியல் ஆலோசகர் கூரியதைப் போலவே இந்தியா 20, 30 நாடுகளாகப்பிரிந்து விடுமா? என்ச்ஜோய் சைனா...

இது கதைக்குள் ஒரு கதை . சும்மா ஜாலிக்காக:

இந்தக்கதைகளைக் கேட்கும் போது 'பசி'தம்பரம் அண்மையில் கூறியதைப்போன்று பாகிஸ்தான் தீவிர வாதிகள் தமிழர்களாகி தமிழ் நாட்டிற்குள் ஊடுருவத் தொடங்கி விட்டார்களோ என்றே எண்ணத் தோன்றுகின்றது. அப்படி அவர்கள் ஊடுருவியிருந்தால் அமைதிப் பூங்கா என்று பெயரெடுத்த தமிழகம் அராஜகப் பூங்காவாக மாறிவிடும். புலி சிறுத்தையாக கர்ஜிக்கும் வைகோ திருமா அனைவரும் எலிகளாக மாறி வளைகளுக்குள் ஒழிந்து விடுவார்கள். பணயக் கைதியாக கருப்புக்கண்ணாடியைப் பிடித்து வைத்தால்.."ஐயோ அம்மா கொல்லுரானே.." என்னும் அலித்தனமான வசனங்களைக் கேட்கலாம்.. சந்தர்ப்பம் வருமா?

சிரிப்பு வரல்லியா?

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil