ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Tuesday, October 27, 2009


வீணாப்போன அனானிகளுக்கு நமீதா அட்வைஸ்


ஜகன்மோகினியில் கவர்ச்சியையும் தாண்டி நடிப்புத்திறமையை வெளிப்படுத்திய மகிழ்ச்சியில் இருக்கிறார் நமீதா. ஜனன்மோகினி பாராட்டு மழையில் நனைந்திருக்கும் நமீதா நம்மிடம் பேசுகையில்,

சினிமாவில் கவர்ச்சி அவசியம். அது அளவோடு இருக்கணும். முகம் சுளிக்க வைக்ககூடாது அதே போல பதிவுகளில் தடாலடிகள் வேண்டும். நீயொரு முட்டாள் என்பதைக்கண்டு பிடிக்க முடியாது செய்யும் சாமர்த்தியம் வேண்டும். பிரபலபதிவராய் இருந்தாலும் அனானியாக குண்டக்க மண்டக்க கேள்விகள் கேட்கலாம். அப்போது தான் அடுத்த பதிவிற்கு "கரு" கிடைக்கும்.

கும்மாளம் போடும் பதிவுகளில் மூக்கை நுழைத்துப் பார்க்கலாம். மூக்குப் போனாலும் விடாத முயற்சி வேண்டும். மூக்குடைத்தவரை முடிந்த வரை விடாது கருப்பு போன்ற பதிவுகளைப் போட்டு காய்ச்சி எடுக்கலாம். அதுவும் முடியாத போது முக்குச்சந்திக்குக் கூட்டிச் சென்று மூக்கையுடைக்கலாம்.

பதிவுகளில் தனி அரசியல் முன் பின் நவீனத்துவம் கட்டுடைப்பு என்று பீற்றிக்கொள்பவர்களே நடை முறையில் வெற்று வேட்டுக்களே. எழுதும் போது மறைவாய் உதவும் புத்தகங்கள் நிஜத்தில் உதவாது . நாயர் டீ ஸ்டாலிலோ நடு ரோட்டிலோ கண்டு உங்களை நீண்ட நாட்களாக அரித்துக்கொண்டிருந்த விடயத்தில் சந்தேகம் கேட்கும் போது ங்கே என்று விழிக்கும் சாதாரணர்களே. அவர் அது பற்றி எழுதியதயே அறியாத அஞ்ஞானிகள்.

எனது திறமையை இயக்குனர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற ஆதங்கம் எனக்கு இருக்கிறது. அதைப்போலத்தான் உங்கள் திறமைகளையும் அனானிகளாக ஊடுருவிச் சிறப்பாக நீங்கள் காட்டவில்லையென்பது எனது எண்ணம். பிரபல பதிவர்களாய் இருந்தாலும் அனானியாக மாறிவிட்டால் முடிந்த வரை உங்கள் அரிப்பைச் சொரிந்து தீர்த்துக் கொள்ளலாம். முடிந்தவரை உங்களுக்குப்பிடிக்காத பதிவரை அல்லது உங்களால் முந்த முடியாத பதிவரைப் பற்றி முடிச்சுகள் போட்டு அவரைக் களத்தில் இருந்து வெளியேற்றும் காரியத்தில் ஈடுபடலாம்.

முதலாவது நபர் வெளியேற்றப்பட்டால் இரண்டாவது இருக்கும் நீங்கள் தானே முதலாவது. நூறாவதாக இருக்கிறேன் என்று கவலைப்படுகின்றீர்களா? சளைக்காது 99 பேரையும் வெளியேற்றி விடுங்கள். என்ன ஏது என்று அறியாது கும்மியடிக்கும் கூட்டம் உங்களுக்கு தங்களையறியாமலே உதவி செய்வார்கள். அபி அப்பாவைக் கும்மியடித்து வெளியேற்றவில்லையா? அதுபோல. இப்போது முதலாவது ஆவது பற்றிய இரகசியம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் என் நிலமை வேறு. நான் என்ன என்னவெல்லாம் அடித்திருக்கின்றேன் என்று உங்களுக்கு சொல்ல முடியாது. அது தொழில் இரகசியம்.

சினிமா என்பது பணம் சம்பந்தப்பட்ட விஷயம். வியாபாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காக சிலவற்றை ஏற்கத்தான் வேண்டி உள்ளது. சம்பளம் தருபவர்கள் இப்படித்தான் நடிக்க வேண்டும் என்று கேட்கும்போது மறுக்க முடியவில்லை. அவர்கள் தரும் ஆடையைத்தான் அணிய வேண்டி உள்ளது.

உங்களுக்கு அந்த கவலையே இல்லை. அனானி என்ற முகமூடியே உங்களைக் காத்து விடும். அனானி வசதியை மறுப்பவர்களைத் தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மாற்றுக்கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாத அராஜக வாதிகள். இவர்கள் சினிமாவிலும் உண்டு.அரசியலிலும் உண்டு. என் ஆடை குறைப்பைப் பற்றி அதிகம் பேசியவர்கள் இவர்கள். பின்னர் தனிமையில் இருக்கும் போது இருக்கும் ஆடையையும் தேவையில்லை என்று குறை கூறியவர்கள் இவர்கள்.

பின்னர் வெள்ளையும் மஞ்சள் துண்டுமாக தத்துவம்ஸ் பேசும் போது நான் வாயால் மட்டும் சிரிப்பதில்லை.

சில நடிகைகள் இந்திக்கு போகிறார்களே அவர்களை போல் நீங்களும் போவீர்களா என்று என்னிடம் கேட்கிறார்கள். நான் இருப்பதை விட்டு பறப்பதற்கு ஆசைப்பட மாட்டேன். இந்திக்கு போனால் மற்ற நடிகைகளுக்கு பின்னால்தான் இருக்க வேண்டும். இங்கேயே நிறைய வாய்ப்புகள் வருகின்றன. இந்திக்கு போக மாட்டேன். என் பின்னால் தமிழக இளைஞர்கள் இருக்கிறார்கள்

அதே போல நீங்களும் தமிழ்ப் பதிவுலகத்திலேயே மொக்கைகளைப் போட்டு குப்பை கொட்டுங்கள். பெரும் பத்திரிகைகள் சிற்றேடுகள் என்று பறக்க ஆசைப்படாதீர்கள். உங்களை விட பழம் தின்று கொட்டை போட்டவர்கள் இருக்கக் கூடும். உங்களை விடப் பல புத்தகங்களைக் காப்பியடித்தவர்களுடன் மோத முடியாது . என் பின்னால் தமிழக ஒப்புச்சப்பாணி இளைஞர்கள் இருப்பதைப்போல உங்கள் பின்னாலும் அறிவு சூனிய கும்மியடிப்போர் இருக்கின்றார்கள். மீ த பஸ்ட் , மீ த செகண்ட் என்று உங்கள் பின்னூட்டங்களைப் போட்டு அனுமார் வாலாக நீட்டி விடுவார்கள்.

இல்லாவிட்டாலும் வேறு வேறு பெயர்களிலேயே நீங்களே உங்களை விமர்சிக்கவோ வழிமொழியவோ செய்யலாம். தமிழ் மணம் போன்ற திரட்டிகளில் அதைக் கண்டு பிடிக்கும் அறிவாளிகள் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அப்படியே கண்டு பிடித்தாலும் கடையில் கலகலப்பு இருக்க வேண்டுமென்று கண்டும் காணாது விட்டு விடுவார்கள்.

வழியும் தசைகளை இறுக்கிக் கட்டி தள்ள வேண்டிய இடத்தில் தள்ள விட்டு தமிழக இளைஞர்களை நான் ஜொள்ள விடவில்லையா? அதே போலவே அவர்களும் உங்களை ஜொள்ள விடுவார்கள்.

சொல்லி விட்டு காரில் ஏறிப் பறந்தே விட்டார்.

குறிப்பு: நமீதாவிடம் மட்டும் கேட்க வேண்டிய கேள்விகள் இருந்தால் மட்டும் இங்கு கேட்கவும்.

2 comments:

நிகழ்காலத்தில்... said...

எப்படிங்க இப்படி...

பட்டைய கிளப்பிட்டீங்க :))

இட்டாலி வடை said...

வாங்க நிகழ்காலம்!
நமீதா வந்துட்டாங்கல்லே.. அது அப்படித்தாங்க...ஷேக்கிங்க்... (குலுங்கல்தானே தமிழ்ல)

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil