ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, October 25, 2009


புலிகள் பயங்கரவாத அமைப்பு? -யாழ் உதயன்


சட்டத்தரணி கருணாரத்ன ஹேரத் "ராவய'' பத்திரிகையில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இது என்றாலும் அதை வெளியிட்ட 'யாழ் உதயன்" அதை உள்ளபடியே ஆமோதிக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.

"விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பை ஆயுதமேந்திய யுத்தமொன்றுக்கு தள்ளிச் சென்றது பல தசாப்த காலமாகத் தீர்த்து வைக்கப்படாதிருந்த அரசியல் பிரச்சினை யொன்றுக்குள் சிக்குண்டிருந்த தமிழ் மக்களேயென்பதை நாம் மறந்துவிட இயலாது. "

http://www.uthayan.com/Welcome/afull.php?id=136&L=T&1256494899

விடுதலைப்புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பென்பதையும் அவர்களை யுத்தத்தில் தள்ளிய தமிழ் மக்கள் பயங்கரவாதச் செயல்களுக்குத் துணை போவதுமான ஒரு மாயையை வலிந்து உருவாக்குவதுமான பார்வையை இக்கட்டுரை உருவாக்குகின்றது. அது எப்படியென்றால் விடுதலைப்புலிகள் தமிழ்மக்களின் விடுதலைப்போராளிகள் என்ற தமிழ் மக்கள் கருத்தை உடைக்கும் முயற்சியாகவே சிங்களப்பாசிச வாதிகளால் முன்வைக்கப்படும் புலிப்பயங்கரவாதம் என்ற கருதுகோளைக் காண முடியும்.

சிங்களப்பாசிச வாதிகளின் தமிழ் மக்களை அழித்தொழிக்கும் எண்ணத்திற்கு பக்கபலமாக வந்து சேர்ந்தது தான் அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கு எதிரான போர். 9/11 இற்கு முன்னரே வீறுகொண்டெழுந்த 30 வருட கால இனவிடுதலைப் போராட்டம் அன்று எவ்வித பயங்கரவாத முகத்துடனும் பார்க்கப்படவில்லை என்பதையும் நாம் நினைவிருத்திக்கொள்ள வேண்டும்.

உண்மையான இனவிடுதலைப் போராட்டமும் மலினப்பட்டுப்போன பயங்கரவாதத்திற்கு எதிரான போரிற்குள் உள்ளடக்கப்பட்டது சர்வதேச வல்லரசுகளின் ஆதிக்க கபடத்தனத்தினாலேயே அன்றி உண்மை வேறுபட்டேயிருக்கின்றது.

ஈழத்தமிழர் போராட்டத்தை அங்கீகரிக்க மறுக்கும் எதிர்ச்சக்திகள் எவ்வளவு தான் உரக்கக் கத்தி இவ்வின விடுதலைப் போரை பயங்கரவாத முலாம் பூச முற்பட்டாலும் அது என்றும் பயங்கரவாதமாகி விடாது.

இந்த கத்தி நுனியின் மீது நடக்கின்ற சாகசத்தை தமிழ் அறிவு ஜீவிகள் போராளிகள் ஊடகத்துறையினர் நன்கு விளங்கிக் கொள்ளவேண்டும். உங்கள் தனிப்பட்ட இலாபங்களிற்காக எதிர்ச்சக்திகளின் கருத்துகளுக்குத் துணை போகும் உங்கள் செயற்பாடுகள் எங்கள் இன விடுதலைப்போரை கொச்சைப்படுத்த முயலும் சக்திகளுக்கு உற்சாகத்தைக் கொடுத்து விடும்.

அந்த வகையிலேயே தமிழ் கூட்டமைப்பின் இந்திய சார்புக்கருத்துகளும் இந்தியாவை அடிவருடி நிற்பதையும் பார்க்கின்றோம். இந்த நூற்றாண்டின் அதி கேவலமான இனப்படுகொலையை நடாத்தி முடித்ததும் மனித இனமே வெட்கித்தலை குனியும் வகையில் அப்பாவி மக்களைக்கொன்று குவித்ததுமான அதி காட்டுமிராண்டிச் செயலை செய்ததும் இராணுவ, ஆயுத, ஆலோசனைகளைக் கொடுத்து உதவியதும் இந்தியாவே.

இதைச் சர்வதேசம் நன்கு உணர்ந்து கொண்டிருக்கின்றது. இன்று மேலெழுந்திருக்கின்ற சர்வதேசத்தின் ஈழத்தமிழர் மீதான ஆதரவுக்குரல் பாசிச சிங்கள அரசை மட்டுமன்றி அதற்கு ஆதரவு கொடுத்த அனைத்துச் சக்திகளையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. மனித நேயத்தின் பெயரால் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத சங்கடத்தால் வன்னித் தமிழ் மக்களின் துயரங்களைக் குறைத்து வெளிக்காட்ட சோனியாவின் காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றது.

அந்த முயற்சிகளில் ஒன்று தான் எட்டப்பன் கருணாநிதியின் உதவியுடன் தமிழக எம் பிக்களின் குழுவை இலங்கைக்கு அனுப்பி ஆடிய நாடகம். பாசிச ராஜபக்ஷேயின் அராஜகத்தை மூடி மறைக்கும் சோனியா காங்கிரஸின் அபிலாஷையைப் பூர்த்தி செய்ய முற்பட்டமை தமிழர் மீதான கருணாநிதியின் மன்னிக்க முடியாத வரலாற்றுத் தவறாகும்.

இன்று இந்தியாவின் பிடி சிங்களவர் மட்டுமென்றல்லாது தமிழர் மீதும் இருந்து நழுவிவிட்டதோடல்லாமல் ஈழத்தமிழரின் பரமவைரி என்ற இடத்தையும் இந்தியா இலகுவாகப் பெற்று விட்டது.

இன்று ஈழத்தமிழரின் அனைத்து நலன்களையும் விரும்பும் சக்திகள் சர்வதேச சமூகத்தின் ஆதரவுக் கரத்தினை பற்றிப் பிடிக்க வேண்டும். சிறிலங்கா அமைச்சர் முத்து சிவலிங்கம் குறிப்பிட்டதைப் போல இந்தியாவையும் விட பெரிய அண்ணனான சீனாவை சிங்களம் எவ்வாறு பற்றிப்பிடித்திருக்கின்றதோ அதே போல அதையும் விட பெரிய அண்ணனான சர்வதேசசமூகத்தைப் பற்றிப்பிடிக்க வேண்டியது ஈழத்தமிழர்களின் யதார்த்தமாகும்.

புலம் பெயர் தமிழர்களின் இத்தகைய முயற்சிகளை சிங்கள, இந்திய அடிவருடிகளின் செயற்பாடுகள் தாமதப்படுத்தும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அதையே சிங்கள பாசிசமும் சோனியாவின் காங்கிரசும் விரும்புகின்றன.

இக்கபடத்தனமான சூழ்ச்சிகளுக்கு யாழ் உதயன், தமிழ்க்கூட்டமைப்பு என்பன துணை போகக்கூடாது என்பதே ஈழத்தமிழினத்தின் வேண்டுகோளாகும். இன்று முன்னெடுக்கப்படும் சர்வதேசத்தின் வேண்டு கோள்களான தடைகள் அற்ற முழுவிசாரணை வன்னியில் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் யுத்த குற்றவாளிகளான சிறிலங்கா பாசிச அரசும் அதற்குத் துணையாக அரசு சார் பயங்கரவாதத்தை ஏற்றுமதி செய்த இந்தியா ,பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளின் முகமூடி கிழிக்கப்படவும் வேண்டும்.

சிறிலங்காவின் அரசபயங்கரவாதத்தினையும் அப்பாவி மக்களின் மனித நேயத்திற்கு எதிரான படுகொலைகளையும் வன்மையாகக் கண்டிப்பதுடன் சிறிலங்காவிற்கு நிதியுதவி வழங்குவதையும் தடை செய்ய சர்வதேச சமூகம் முன் வந்திருக்கும் வேளையில் சர்வதேச சமூகம் அளிக்க மறுக்கும் நிதியுதவியை இந்தியா வழங்கும் என்று சோனியா காங்கிரஸ் அறிவித்திருப்பது இந்தியாவின் பயங்கரவாதத்தின் மீதான விருப்பை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கின்றது.

சர்வதேச சமுதாயத்தால் நியாயமற்றது என்று மறுக்கப்படும் ஒரு காரியத்தை முன்னெடுக்கும் துணிவு சோனியா காங்கிரஸிற்கு எப்படி வந்தது? இலட்சோபலட்சம் ஏழைகளின் தாயகமான இந்தியா மக்களின் வரிப்பணத்தை இவ்வாறு பயங்கரவாத அரசொன்றிற்கு வாரியிறைப்பதை இந்தியாவின் எந்தவொரு அரசியல்வாதியோ அறிவிஜீவியோ மக்களோ கூட ஆட்சேபிக்கவில்லை என்பதே இந்திய மக்களின் தார்மீக மனச்சாட்சி பற்றி கேள்வியெழுப்புகின்றது.

சீழ் வடியும் சோனியா காங்கிரசின் முகத்தைப்பாதுகாக்க அ.மார்க்ஸ் போன்றவர்கள் சப்பைக் கட்டு கட்டுவதை ஏற்கனவே அம்பலப்படுத்தியிருந்தோம். அதே நேரம் சர்வதேசத்தின் மனு தர்மங்கள் எதற்கும் கட்டுப்படாத ஆணவப் போக்கில் இந்தியா செயற்படுவதையும் இந்திய கொள்கை ஆய்வு மத்திய நிலையத்தின் அங்கத்தவர்களில் ஒருவரான பேராசிரியர் பிரம்மா செல்லச்சாமி அவர்கள் வெளிவிட்டிருக்கின்றார்.

இப்படிப்பட்ட இந்தியாவுடன் இசைந்து போதல் தமிழினத்தை மீண்டும் மீண்டும் புதைகுழியில் ஆழ்த்தி விடும் என்பதை தமிழ் கூட்டமைப்பினர் புரிந்து கொள்ள வேண்டும். புலிகளின் வேண்டுதலால் மக்களின் வாக்குகளைப் பெற்று அரியணை ஏறியிருக்கும் நீங்கள் மீண்டும் தெரிவு செய்யப்படுவது உங்கள் நேர்மையான போக்கிலேயே தங்கியுள்ளது. கொடுந்துயரத்தில் வாடியிருக்கும் தமிழ் மக்கள் உங்களின் ஒழுங்கீனங்களை இனியும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்.

சர்வதேச சமூகம் குரல் கொடுப்பதைப் போன்று திறந்த நீதி விசாரணை வேண்டியும் முள்ளிவாய்க்கால் படு கொலைகளின் குரூரங்களை வெளிக்கொணர்வதும் சர்வதேச அரசியலிலேயெ பல மாற்றங்களைக் கொண்டு வரும். தமிழ் மக்கள் மீதான சர்வதேசத்தின் அனுதாபமே ஈழ மக்களின் இனவிடுதலைப் போராட்டத்தத் துரிதப்படுத்தும்.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil