ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Friday, October 23, 2009


உலகை ஏமாற்றும் தந்திரமும் உடன் துணை போகும்திருட்டு கருணாநிதியும்


இலங்கையில் போரினால் இடம் பெயர்ந்த மக்கள் அனைவரையும் இந்த ஆண்டின் இறுதிக்குள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியேற்றுவோம் என்று அளித்த உறுதி மொழியை காப்பாற்றாமல், அவர்களின் வாழ்வோடு விளையாடிக் கொண்டிருக்கிறது சிறிலங்க அரசு என்று மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சாற்றியுள்ளது.

வன்னியில் சிறிலங்க இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 2,72,000 பேரில், அக்டோபர் 9ஆம் தேதிவரை 27,000 பேரை மட்டுமே விடுவித்துள்ளது சிறிலங்க அரசு என்றும், இன்னமும் 2,45,000 தமிழர்கள் அடிப்படை வசதிகளற்ற அந்த முகாம்களில்தான் அவதியுற்று வருகின்றனர் என்றும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசியக் கிளையின் இயக்குனர் பிராட் ஆடம்ஸ் கூறியுள்ளார்.


“உறுதிகள் அளித்தது போதும், இதற்கு மேலும் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தட்டிக்கழிப்பதை ஏற்க மாட்டோம். உடனடியாக முகாம்களில் உள்ளவர்களை விடுவிக்குமாறு சிறிலங்க அரசின் சர்வதேச நண்பர்கள் அந்நாட்டிற்கு எடுத்துரைக்க வேண்டும்” என்று இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பிராட் ஆடம்ஸ் கூறியுள்ளார்.
போரின் காரணமாக உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்த மக்களை மீள் குடியமர்த்தல் தொடர்பாக சிறிலங்க அரசு அளித்த வாக்குறுதிகளை பிராட் ஆடம்ஸ் பட்டியலிட்டுள்ளார்:

1. இந்த ஆண்டின் இறுதிக்குள் முகாம்களில் உள்ள 80 விழுக்காடு மக்களை அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள்குடியமர்த்துவோம் என்று மே 7ஆம் தேதி சிறிலங்க அரசு அளித்து உறுதிமொழி அதன் இணையத் தளத்தில் வெளியிடப்பட்டது.

2. போர் முடிந்ததும் இலங்கை வந்த ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூனிடம், ஆறு மாத காலத்திற்குள் இடம் பெயர்ந்த அனைவரையும் அவர்கள் வாழ்ந்த இடங்களில் குடியமர்த்துவோம் என்று அதிபர் மகிந்த ராஜபக்ச உறுதி கூறினார்.

3. ஜூலை 16ஆம் தேதி பன்னாட்டு நிதியத்திடமிருந்து 2.6 பில்லியன் கடன் பெறும்போது, இந்த ஆண்டின் இறுதிக்குள் 70 முதல் 80 வீதம் இடம் பெயர்ந்தோரை முகாம்களில் இருந்து விடுவித்து விடுவோம் என்று சிறிலங்க அரசு உறுதியளித்தது.

4. ஆனால், அக்டோபர் 6ஆம் தேதி துருக்கித் தலைநகர் இஸ்தான்புல்லில் நடந்த உலக வங்கி, பன்னாட்டு நிதியத்தின் ஆண்டுக் கூட்டத்தில் இந்த ஆண்டின் இறுதிக்குள் 1,00,000 பேரை மீள் குடியமர்த்தம் செய்வோம் என்று சிறிலங்க அமைச்சர் சரத் அம்முனுகாமா கூறினார்.

5. இந்த ஆண்டின் இறுதிக்குள் ஒரு இலட்சம் பேரை மீள் குடியமர்த்தம் செய்வோம் என்று அதற்கான அமைச்சர் ரிஷார்த் பத்தியுதீன் கூறினார்.

எனவே ஒப்புக் கொண்டபடி அனைவரையும் முகாம்களில் இருந்து விடுவித்து அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்தம் செய்யாமல் 37 வீத மக்களை மட்டுமே விடுவிக்க முடியும் என்று இப்போது கூறுகிறது சிறிலங்க அரசு.

இதுமட்டுமின்றி, செப்டம்பர் இறுதிவரை 40,000 பேர் மீள் குடியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர் என்று அது கூறுவது பொய்யானத் தகவலாகும்.

ஐ.நா. அக்டோபர் 9ஆம் தேதி அளித்துள்ள புள்ளி விவரப்படி, இதுநாள்வரை 13,502 பேர் மட்டுமே அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 13,336 பேர் அவர்களின் உறவினர்களின் வீடுகளிலும், முதியோர் இல்லங்களிலும் சென்று தங்கிக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்தான் இந்தியாவில் இருந்த முகாம்களை பார்வையிட வந்த நாடாளுமன்றக் குழுவினரிடம் இரண்டு வாரங்களில் 58,000 பேரை மீள் குடியமர்த்தம் செய்யப்போவதாக சிறிலங்க அரசு உறுதியளித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது.

“போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்களின் வாழ்வோடு விளையாடிக் கொண்டிருக்கிறது சிறிலங்க அரசு. தமிழ் மக்களின் நியாயமானக் குறைகளைத் தீர்த்துவைக்காவிடில் அது அந்நாட்டிற்கு பேரழிவாக முடியும்” என்று பிராட் ஆடம்ஸ் எச்சரித்துள்ளார்.

குறிப்பு:- திருமாவளவன் ஈழம் சென்று திரும்பியபின் அளித்த பேட்டியில். மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பும்படி கதறி அழுதனர். அதைத் தாண்டி எந்த உதவியும் எங்களுக்கு வேண்டாம். எங்கள் ஊருக்கு அனுப்பினால் நாங்கள் உழைத்து பிழைத்துக்கொள்வோம் என்பதை ஒருமித்த கருத்தாக கூறினார்கள். குடிநீருக்காக மக்கள் படும் அவதி வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

5 லிட்டர் தண்ணீரை பெறுவதற்காக ஒருவாரம் உறக்கம் இல்லாமல் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. அடுத்த முகாம்களில் இருக்கும் சொந்த பந்தங்களை பார்க்க முடியவில்லை. கடத்தி கொண்டு போன எங்கள் உறவினர்கள் எங்கே இருக்கிறார்கள்? என்று தெரியவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

மஞ்சள் காமாலை, தோல் நோய் ஏராளமாக பரவுகிறது. கழிப்பிடங்கள் சுத்தமாக இல்லை. குழந்தைக்கு பால் கொடுக்க பால், பால் பவுடர் கிடைக்கவில்லை. மாற்று உடைக்கு வழியில்லாமல் அழுக்கு துணியையே அணிந்து வருகிறோம். அரிசி, பருப்பு மட்டும் தருகிறார்கள். காய்கறி, மசாலா சாமான் தருவதில்லை. பிச்சைக்காரர்களை விட கேவலமாக வாழ்வதாக அம்மக்கள் கதறி அழுதனர்.


இதோதிருட்டுக் கருனாநிதியின் நாடாளுமன்றக் குழுவைப் பாராட்டி சிறிலங்க ஊடகத் துறை அமைச்சர் லக்ஷ்மண் யாப்பா கூறியதைப் படியுங்கள் புரியும்:

“இதுவரை சர்வதேச நாடுகளையும், அமைப்புகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி பலர் இலங்கைக்கு பயணம் செய்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களைப் பார்வையிட்டுள்ளனர். மதிப்பீடுகளை மேற்கொணடப் பின்னர் தங்கள் நாடுகளுக்குச் சென்று பல்வேறு வகையான கருத்துக்களை வெளியிட்டனர். சிலர் விரைவான மீள் குடியேற்றம் குறித்து அழுத்தங்களை அளித்தனர். சிலர் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர். ஆனால் இடம் பெயர்ந்த மக்களின் விவகாரத்தை மிகவும் உணர்வுப்பூர்வமாக அணுகிய தமிழக எம்.பி.க்கள், அகதிகளுக்கு சிறிலங்க அரசு செய்து கொடுத்துள்ள வசதிகள் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை மதிப்பிட்டு திருப்தி வெளியிட்டனர். சிறந்த செய்தியொன்றை சர்வதேச சமூகத்திற்கு விடுத்துள்ளனர். இதுவரை சிறிலங்க வந்தவர்களிலேயே தமிழக எம்.பி.க்கள் சிறிப்பான அணுகுமுறையை மேற்கொண்டனர். அவர்கள் எந்த விடயம் குறித்தும் பெரிய அழுத்தத்தை வெளியிடவில்லை. நிலைமையை புரிந்துகொண்டுள்ளனர். சிறிலங்காவிற்கான இந்தியாவின் உதவிகள் அதிகரிக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளனர். இது வரவேற்கத்தக்க விடயமாகும்”

இதன் பிறகு இந்தியா மேலும் ரூ.500 கோடியை சிறிலங்காவிற்கு தருவது என அறிவித்தது.

இதுதான் தி.மு.க திருடர்களுக்கு சர்வதேச தரத்தில் காணப்பட்ட முகாம்

இந்த மக்களின் நெஞ்சில் மிதித்தபடி கருணாநிதி செய்யும் அரசியலை இன்னும் எத்தனை காலம் சகித்துக்கொள்ளப் போகின்றீர்கள் ..தன்மானத் தமிழ்ச் சிங்கங்களே..

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil