ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, October 24, 2009


சீனா தான் பெரிய நாடு - அட ஆமால்லே

கறுப்புக் கண்ணாடி போடாத கருணாநிதி


இலங்கை பிரச்னைகளில் பெரிய நாடு என்பதால் இந்தியா தலையிட முடியாது. அதைவிட பெரிய நாடு என்ற வகையில்தான் சீனா தலையிடுகிறது என்று இலங்கை தோட்ட கட்டமைப்புப் பிரதி அமைச்சர்முத்து சிவலிங்கம் கூறினார்.

அட நம்ம சிவலிங்கம் அண்ணாச்சி... இவங்க பிரிட்டிஸ் காலத்தில் இந்தியாவில் இருந்து இலங்கையில் குடியேறிய 'கூலி'களின் வாரிசு. அட இரண்டு தலைமுறை காலத்திலேயே அப்பன் பாட்டன் பிறந்து வளர்ந்த இந்தியா கசந்திடுத்து.

ஆனா ஈழத்தமிழன்.. தொப்பூள்கொடியுறவு அதுவிதுவென்று ..ஆளைப்படுத்துறாங்கையா? தாய்த் தமிழகம்.. மண்ணாங்கட்டியென்று ஆயுசையும் தொலைத்து விட்டு நிற்கின்றார்கள்.

ஊரைத் தெரிந்து உலகத்தைப் புரிந்து எப்போதான் தேறப்போறாங்களோ..

வடக்கு கிழக்கிலே வாழும் தமிழன் எத்தனை நூர்றாண்டுகளுக்கு முன்னர் சென்றவர்களோ அல்லது அங்கேயே தோன்றியவர்களோ.. யாரறிவார். (ஈழத்தில் வாழ்ந்த தெமட அல்லது தெமள குலத்திலிருந்து தோன்றியவர்கள் தமிழர்கள் என்று படித்துத் தொலைத்ததால் வந்த மயக்கம்)


இலங்கையில் வந்து குடியேறிய தமிழர்கள் வேறு. மலையக தமிழர்கள் வேறு என்ற நிலையே உள்ளது. இதனாலேயே தனி நாடு கோரிக்கைக்கு அங்கு ஒட்டுமொத்த ஆதரவு கிடைக்கவில்லை.இலங்கையிலுள்ள சிங்களர்களே விஜயன் காலத்தில் அங்கு வந்து குடியேறியவர்கள்தான் என்றும் இலங்கை வரலாற்றில் கூறப்படுகிறது.- நம்ம அண்ணாச்சி சிவலிங்கம் தான்.


வடக்கு கிழக்கைப் பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ் கூட்டமைப்பு எம்பிக்கள் இன்னும் எம்பிக்களாகவே இருக்க நம்ம முத்து சிவலிங்கம் அண்ணாச்சி அமைச்சராகிவிட்டார்.

பிழைக்கத்தெரிந்தவர்... தமிழக அரசியல்வாதிகள் புலி என்றால் குட்டி பதினாறு அடி பாய்ந்து நிற்கின்றது.


இந்திய அரசு பிரதிநிதிகள்... இந்தியாவிலிருந்து இலங்கை வந்த எம்.பி.க்கள் குழுவினர், இந்திய அரசின் பிரதிநிதிகளாகவே வந்திருந்தனர். இவர்கள் தங்களது ஆய்வு தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் கொடுத்துள்ளனர். அதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விவரங்கள் தொடர்பாக இந்திய-இலங்கை அரசுகள் கூடிப் பேசி இலங்கையின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். - அண்ணாச்சி

அட நம்ம மு.க அவர்கள் அரசுப்பிரதி நிதிகள் கிடையாது என்று பம்மியிருந்தாரே.. அறிக்கையில் பரிந்துரை கூட செய்திருக்கின்றார்களா? கதை வசனம் டைரக்ஷன் வழமை போல கருணாநிதியா? அல்லது புது டைரக்டர் ராஜபக்ஸே ஆ...

இலங்கை பிரச்னையில் இரு சாராரும் விட்டுக் கொடுக்க வேண்டும். வன்னிப் பகுதியில்தான் அதிக அளவில் பிரச்னைகள் உள்ளன. போரில் ஈடுபட்ட இருசாராரும் ஆங்காங்கே கண்ணி வெடிகளை புதைத்து வைத்திருப்பதால் காலதாமதம் ஏற்படுகிறது.- அண்ணாச்சி

அப்படியா? முள்ளுக்கம்பி வேலிக்குள் அடைந்து கிடப்பவர்கள் எதை விட்டுக்கொடுப்பது..? உயிர் ஒன்று தான் அவர்களிடம் இருக்கின்றது..

போகிற போக்கில் ஒரு கண்ணிவெடி கருணாநிதிக்கும் வைத்துப்போகின்றார்,

கோவை மாநாட்டில் பங்கேற்பில்லை: கோவையில் நடைபெறுவது உலகத் தமிழ் மாநாடல்ல, தமிழக அரசு தானாக நடத்தும் தமிழ் செம்மொழி மாநாடு என்பதால் இதில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றார் முத்து சிவலிங்கம்.

அட பங்காளிகள்...

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil