ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, November 14, 2009


தமிழுக்குத் தொண்டும் தமிழருக்குத் துரோகமும்



ஈழத்தமிழினம் பாரிய படுகொலைக்குள்ளாகி பரிதவித்து நிற்கும் போது தங்கள் சுய மன வக்கிரத்தைச் சொறிந்து கொள்ள நினைக்கும் சிலரால் தமிழ் மகாநாடு தமிழுக்கு செம்மொழி மகாநாடு என்ற போர்வையில் கேலிக்கூத்து நாடகம் ஒன்று அரங்கேற முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.

தமிழைத் தாய் மொழியாகப் பேசியதாலேயே வாழத்தகுதியற்றவர்கள் என்று வகைதொகையின்றி இந்திய, சிங்கள ஆக்கிரமிப்புவாதிகளால் இரசாயன உயிரியற்குண்டுகளால் கருக்கிப் போடப்பட்டவர்கள் இந்த அப்பாவிகள். இறந்தவர்களின் குருதியின் செவ்வீரம் காயமுன்னர் தமிழுக்கு செம்மொழி மகாநாடு அவசியமா? என்ற கேள்வி தமிழ் மக்கள் ஒவ்வொருவர் நெஞ்சையும் குடைந்துகொண்டிருக்கின்றது.

தமிழ் மக்கள் அனைவரின் கருத்தும் இவ்வாறு இருக்கையில் பாடையில் போக இருக்கும் முதியவர் ஒருவரின் மன வக்கிரத்தைப் பூர்த்தி செய்யும் முயற்சியே இது வென்பதும் அவரின் சாதனைப் பட்டியலில் "தமிழுக்கு விழா எடுத்த" பெருமையையும் சேர்த்துக் கொள்ளவே இந்த முயற்சி என்பதையும் உள்ளம் பதைக்கும் சினத்துடன் தமிழுலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய சுய வக்கிரச்சொறியலை உலகத்தரத்தில் நிலை நாட்டும் முயற்சியாகவே பல்நாட்டு தமிழ் அறிஞர்களையும் இணைத்துக் கொள்ளும் முயற்சி எடுக்கப்படுகின்றது. பிறநாட்டு அறிஞர்கள் கலந்து கொள்ளாது புறக்கணித்தாலே அது அவர்கள் வீட்டு இழவு வீடு போல அடங்கி உயிர்ப்பிழந்து விடும்.

இந்த நேரத்தில் தான் ஈழத்து தமிழறிஞர் சிவத்தம்பியின் அறிவிப்பு ஒருவித குரூரத்துடன் வெளிவந்திருக்கின்றது.

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் நீங்கள் பங்கேற்பது பற்றி பல முரண்பட்ட தகவல்கள் நிலவுகிறது. நீங்கள் கலந்துகொள்வீர்களா?

“உலகில் உள்ள மொழிகளில் மூத்த ஒன்று தமிழ். தி.மு.க. அரசானாலும் சரி, வேறு எந்தவோர் அமைப்பானாலும் சரி, தமிழுக்கு மாநாட்டை முன்னெடுக்கும்போது அதில் நான் பங்கேற்பதை தமிழாசிரியர் என்ற முறையில் கடமையாகக் கருதுகிறேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, அரிதாக எடுக்கப்படும் இதுபோன்ற முன்முயற்சிகளுக்கு நான் மட்டுமல்ல, எல்லோரும் ஆதரவளிக்க வேண்டுமெனவும் எதிர்பார்க்கிறேன். மற்றபடி எந்தவொரு நிகழ்வுக்கும் பின்னணியாக அரசியல் இருக்கிறது என்பதை நான் அறிவேன். இவ்விடத்தில் என்னுடைய நிலைப்பாடு அரசியல் அல்ல. தமிழ்மொழிக்கான ஆதரவு என்பதைச் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.”


ஈழத்துச் சொந்தச் சகோதரர்கள் இறந்தும் சிறைப்பட்டும் ஆற்றவொண்ணா துயரத்தில் அல்லல்ப்பட்டுக்கொண்டிருக்கையில் தமிழாசிரியர் என்ற கடமையின் முன்னால் உள்ள சகமனிதன் என்ற கடமையின் தாற்பரியத்தையும் மனித நேயத்தையும் இவர் கருத்தில் கொள்ளவேண்டும் என்றே தமிழுலகம் அதிலும் ஈழத்துத் தமிழுலகம் வேண்டி நிற்கின்றது.


கருங்காலி கருணாநிதி மீது ஏன் தமிழ் மக்களுக்கு இத்தகைய காழ்ப்பு என்பதைப் புரியாதவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதனை சிவத்தம்பியின் வார்த்தைகளிலேயே தருகின்றேன்.

மாநில கட்சியான தி.மு.க. ஈழத்தமிழர் பிரச்னையில் இதற்குமேல் என்ன செய்திருக்க முடியுமென எதிர்பார்க்கிறீர்கள்?

“இப்போதுள்ள இந்திய அரசியல் சூழலில் தி.மு.க.வை மாநிலக்கட்சி என்று சுலபமாக ஒதுக்கிவிட முடியாது. மத்திய ஆட்சியில் பங்கேற்கிறது; மிகப்பெரும் உயிர்ப் பலியை தடுக்க கலைஞர் கூடுதல் அழுத்தம் தந்திருக்கலாம். மற்றவர்கள் உதவுவார்கள் என்ற நம்பிக்கை இப்போது இங்கு பலவீனப் பட்டிருக்கிறது புலம்பெயர்ந்த வர்கள், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் உதவியால் எங்களுடைய உரிமையை நாங்களே போராடி பெற்றுக் கொள்ள வேண்டியதுதான்.


இதனையும் விட மேலான தெளிவுடன் ஈழத்தமிழர்கள் இப்போது இருக்கின்றார்கள் என்பதைக் காட்டிக்கொடுக்கும் கருணாநிதி போன்ற துரோகிகள் புரிந்து கொள்ளவைக்க இது ஒரு சந்தர்ப்பமாக சிவத்தம்பிக்கு வாய்த்திருக்கின்றது என்றே ஈழத்தமிழ் மக்கள் எண்ணுகின்றார்கள்.


அவ்வாறில்லாது ஈழத்தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த கருங்காலி கருணாநிதியின் மன வக்கிரச் சொறியலுக்குத் துணை போனால் இன்னுமொரு கருங்காலி என்ற பட்டத்துடன் தமிழுலகத்தில் இருந்து ஒதுக்கப்படும் இழிநிலையே வந்து சேரும் என்பதை அவரும் மற்றும் ஈழத்துக் கல்வியியலாளரும் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழுக்குத் தொண்டும் தமிழருக்குத் துரோகமும் செய்யும் எவரையும் அந்த தமிழணங்கே மன்னிக்க மாட்டாள்.

2 comments:

Anonymous said...

நல்லபதிவு பாலபாரதி

இட்டாலி வடை said...

நான் அவர் அனானி அல்ல...ஹா..ஹா..

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil