ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, November 15, 2009


இலங்கை அணி இந்தியாவில் விளையாடத் தடை





இலங்கை அரசு மனித உரிமைகளை மீறி வருவதால், அந்நாட்டுக் கிரிக்கெட் அணி இந்தியாவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ளத் தடை விதிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த சட்டத்தரணி ஏ.ஜோயல்பவுல் அன்ரனி தாக்கல் செய்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு
இந்தியாவில் வரும் 16 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 27ஆம் திகதிவரை ஒரு நாள் கிரிக்கெட் போட்டி, டெஸ்ட் போட்டி, ருவென்ரி 20 போட்டிகள் நடக்க உள்ளன. இந்தப் போட்டிகளில் இலங்கை அணியும் கலந்து கொள்ளவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அரசு கடந்த 50 ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறலில் ஈடுபட்டு வருகிறது. இதை இந்தியா மட்டுமல்ல பல நாடுகளும் கடுமையாகக் கண்டித்துள்ளன.

இருந்த போதிலும் இலங்கை அரசு மனித உரிமை மீறல் நடவடிக்கையை நிறுத்தவில்லை. போராளிகளை அழித்து வருகிறோம் என்ற போர்வையில் தடை செய்யப்பட்ட ஆயுதங்கள், குண்டுகளை பயன்படுத்தி லட்சக்கணக்கான தமிழர்களை இலங்கை அரசு கொன்று குவித்தது. தமிழர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து தமிழ்நாட்டில் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினர். தமிழர்கள் படும் துன்பத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத 20 பேர் உயிர் நீத்தனர். மத்திய அரசும் உயர்மட்டக்குழுவை அனுப்பி மனித உரிமை மீறல்களை தடுக்கக்கோரியது.

கடந்த 60 ஆண்டுகளில் 12 லட்சம் தமிழர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளனர். தற்போது தமிழர்கள் அந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தற்போது போர் முடிவுக்கு வந்த நிலையில் மூன்றரை லட்சம் தமிழர்கள் முள்வேலி முகாமில் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளின் கோரிக்கைகளை ஏற்க இலங்கை அரசு மறுத்து விட்டதால் இலங்கைக் கிரிக்கெட் அணியை இந்தியாவில் விளையாட அனுமதிப்பது மிகப்பெரிய அவமானமாகும்.

அதுபோன்று விளையாட அனுமதிப்பது, மனித உரிமை மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒவ்வொரு மனிதரின் மனதையும் புண்படுத்தும் செயலாகும். எனவே இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாட தடை விதிக்க வேண்டும் என்றுள்ளது. இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த செப்ரெம்பர் மாதம் இலங்கையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ளக்கூடாது என்று உத்தரவிடக்கோரி ஏற்கனவே சட்டத்தரணி ஜோயல் மனுத் தாக்கல் செய்திருந்தார். வெளிவிவகாரக் கொள்கையில் நீதிமன்று தலையிட முடியாது என்று கூறி ஜோயல் தாக்கல் செய்த துணை மனுவை உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்தமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு: இத்தகைய முன்மாதிரியான முயற்சிகளுக்கு நம் ஆதரவைத் தெரிவிப்போம்.

1 comment:

Anonymous said...

comedy pannadheenga boss... poi pulla kuttingala padikka vaiyunga.

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil