ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Sunday, November 29, 2009


எரிந்த விகாரை - புலிகள் - சில புல்லுருவிகள்


சூடு சொரணையற்ற தமிழன் என்பது சரியானது தானாவென்று என் தோலைப் பல முறை கிள்ளிப் பார்த்தாயிற்று. சில வேளைகளில் அப்படித் தான் தோன்றுகின்றது. அப்படி மரத்துப் போயிருக்கின்றது. சரியோ பிழையோ தமிழ்த் தலைமைகளின் வழி காட்டலில் இறந்து போன மாவீரர்களை கொலைகாரர்கள் என்று ஒரு லூசுப்பயல் சொல்லிப்போயிருக்கின்றான். தமிழர்களைக் காக்க வந்த அந்த லூசுப்பயலைக் காக்கவும் இப்படியான தமிழ் இளைஞர்கள் தான் தேவைப்படுகின்றது. இப்படியான லூசுப்பயலுக்காக உயிரை விடும் இவர்களை இவன் மாவீரர்கள் என்று அழைப்பானா? இல்லை கொலை காரர்கள் என்று அழைப்பானா?

சிங்களவனை முந்தி தமிழர்களைத் திட்டி நல்ல பெயர்வாங்கத் துடிக்கும் கேணைத் தனம் இது. சிங்களவனே கொச்சைப்படுத்தத் துணியாத ஈகையைக் கொச்சைப் படுத்தும் தமிழனின் வேசித்தனம். தமிழ் முலையில் இருந்து பால் குடித்த அந்த வாய் அழுகிப் போகட்டும். இது தான் இன்று நொந்து போயிருக்கும் தமிழ் மக்களின் சாபமாக இருக்கக் கூடும். மூன்று இலட்சம் மக்கள் முட்கம்பி வேலிக்குள் துடிதுடித்துக் கிடக்க முட்டாள் சிங்களவனின் விகாரை தீப்பற்றி எரிந்ததென்று ஓலம் இடுகின்றது புளட் என்ற ஒட்டுக்குழுக்களின் மாமாக் கூட்டம்.

தமிழ் மக்களின் வாழ்விடங்களிலிருந்து துரத்தி கோவில்களை இடித்து விகாரைகளைக் கட்டிக்கொண்டு வெறியாட்டம் போடும் சிங்கள வெறிநாய்களைப் பற்றி ஒரு சொல் எழுத முடியாது சிங்களவன் செருப்புத் துடைக்கும் இந்தக் கூட்டம் கனடா மக்கள் தமிழனை வேடனாகப் பார்ப்பான் என்று துடிக்கின்றது.

சிங்களஆக்கிரமிப்பிற்குப் பயந்து கப்பலில் வந்து அகதி அந்தஸ்து கேட்டவனை கையிலும் காலிலும் விலங்கு போட்டு இழுத்துச் செல்கையில் ஐஸ் கொக்கியும் அமெரிக்கன் புட்பாலும் பார்த்துப் பந்தயம் கட்டிக் கொண்டிருக்கும் மனிதாபிமானமில்லாத மக்களைப் பற்றி இந்தப் பதர்களுக்கு ஏன் இந்தக் கவலை.

முள்ளிவாய்க்காலில் மண்மூடிப்போன மக்களின் துயரங்களை எடுத்துக் கூற தெருவிலும் இருளிலும் கூடி நின்ற எங்கள் மக்களுக்கு சட்டம் ஒழுங்குப் பிரச்சினை, தன் சுகம் என்பது பற்றியே பேசிக் கலைந்த இந்த மக்கள் எதை கொடுத்துக் கிழித்து விட்டார்கள்.

முட்டாள் புல்லர்களே, இங்கு வாழும் எந்த மக்களுக்கும் யாரைப் பற்றியும் கவலையில்லை. தன் சுகம் தன் குடும்பம் என்பதைத் தவிர வேறு தேவையும் இல்லாத சொரணையற்ற கூட்டத்தின் அபிப்பிராயம் கேட்டா நீ துடிக்கின்றாய்.

தூள் விற்பதற்காகவே துன்மார்க்க வழியில் பணம் சம்பாதிப்பதற்காக ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டு செத்துப்போகும் யாரைப்பற்றியும் கவலைப் படாதவர்களா? ஒரு விகாரை எரிந்ததற்காக கவலைப் படப் போகின்றார்கள். தமிழர் போராட்டம் பற்றி இங்கு கதைத்த பெரும்பான்மையின வானொலிகளோ தொலைக்காட்சிகளோ தமிழரின் உரிமை பற்றியோ துயரம் பற்றியோ கதைக்க வில்லை என்பதையும் தன் நாட்டு சட்ட ஒழுங்குப் பிரச்சினை பற்றியே கதைத்தார்கள் என்பதையும் மறந்து போனீர்களா?

அவர்களின் இல்லாத கருணையை இரப்பதாகப் பாவனை செய்யும் நீங்கள் தான் சிங்களவன் தந்த காசிற்கு சிறப்பான சேவை செய்யும் கருங்காலிகள். நாலு மொட்டையர்கள் சேர்ந்து ஒரு காகித அறிக்கை விட்டு விட்டால் அனைத்தும் மாறிவிடும் என்றா எண்ணுகின்றீர்கள்.

ஏன் சிங்களவனே கொளுத்தி விட்டு தமிழர் மீது பழியைப் போட்டிருக்கக் கூடாது? நடக்கவிருக்கும் பொது நலவாய மகாநாடு இலங்கையில் நடந்த தமிழர் படுகொலை காரணமாக நடத்த விடக் கூடாது என்று பிரிட்டனுடன் சேர்ந்து கனடாவும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றது. அதை மாற்றும் பொருட்டு தமிழர்களின் மீது கோபம் ஏற்படுத்தும் பொருட்டு ஏன் சிங்களவன் திட்டமிட்டு செய்திருக்கக் கூடாது. அதையே அவனுக்காக எலும்புத் துண்டு சூப்பும் நீங்கள் ஏன் செய்திருக்கக் கூடாது. அதைச் செய்து விட்டு புலிகளை இழுத்து, அதன் மூலம் முழுத்தமிழ்ச் சமூகத்தையும் கொச்சைப்படுத்த நீங்கள் முயன்றிருக்கின்றீர்கள் என்று ஏன் நாங்கள் உங்களைக் குற்றஞ்சாட்டக்கூடாது?

பொலிசாரே விசாரணையில் இறங்கியிருக்க,விசாரணை இடை நடுவினில் நின்றிருக்க, உங்களால் மட்டும் எப்படி யார் செய்தார்கள் என்ற முடிந்த முடிவிற்கு வர முடிந்தது? புலிகளே சுருட்டிய பணத்தைப் பங்கு போடும் இழுபறியில் இருந்து கொண்டிருக்க இந்தத் தேவையில்லாத வேலையில் அவர்கள் ஈடுபடுவார்களா? பணத்தைபங்கு போடும் முயற்சியில் தங்கள் நிறுவனத்தை தூய்மைப்படுத்தும் முகமாகவே இது வரை புலிகளின் ஊது குழலாக நடித்துக் கொண்டிருந்த TVI,CMR,CTR தொலைக்காட்சி வானொலிகள் இந்த ஆண்டு மாவீரர்கள் பற்றி எந்த நிகழ்ச்சிகளும் இல்லாது செய்தியாகக் கூட எதைனையுமே அறிவிக்காது மெளனம் காத்ததே.. அதை புரிந்து கொள்ளும் அறிவு கூட இல்லாத முட்டாள்களா நீங்கள்.

ஈழத்தில் வாழும் தமிழர்களுக்கு எதிரிகளாக இருக்கும் நீங்கள் கனடா போன்ற வெளிநாடுகளில் புனிதபிம்பம் காட்டினால் மட்டும் மக்கள் நம்பி விடுவார்களா? என்ன?

குறிப்பு: முட்டாள்களின் கூடாரமும் மூடர்களின் முகவரியும்

http://inioru.com/?p=8053

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil