ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Monday, November 16, 2009


குரங்கும் மனிதரும்

இன்று கேட்ட இரண்டு நிகழ்வுகள் மனதைப் பாதித்துக் கொண்டிருக்கின்றது. இரண்டும் நடந்தது வல்லரசு கனவுடன் அண்டை நாடுகளில் அடாவடியில் இறங்கியிருக்கும் இந்தியாவில் தான்.

மனிதர்கள் சில வேளைகளில் தங்கள் உயர்வான குணத்தால் தேவர்களாகி விடுகின்றார்கள். அதே போல சில வேளைகளில் தங்கள் கீழான குணத்தால் அசுரர்களாகி விடுகின்றார்கள். மனிதர்களாக இருக்கத்தான் மறந்து விடுகின்றார்கள்.ஆனாலும் இத்தகைய அரக்கத்தனத்தை இந்தியாவிலன்றி வேறு எங்கும் காணமுடியாது.

குரங்கிற்குக் கிடைத்த அங்கீகாரத்தைக் கூட சக மனிதருக்கு தரவிடாத வெறுப்பிற்கு காரணம் என்னவாக இருக்கும். உங்களுக்கு ஏதாவது புரிகின்றதா?

செய்தி1:

தந்தை குரங்கிடம் இருந்து தனது குழந்தையை காப்பாற்ற தாய் குரங்கு ஒரிசா காவல்நிலையத்தில் மனு கொடுத்துள்ளது.
ஒரிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள ஆஸ்ட ராஞ்ச் நகரில் ஏராளமான குரங்குகள் உள்ளன. இவற்றில் ஒரு பகுதி குரங்கு கூட்டம் மார்க்கெட் பகுதியில் வசிக்கின்றன. இதில் ஒரு பெண் குரங்கு 3 மாத குட்டியுடன் இருக்கிறது. இந்த குட்டியை கொல்ல ஆண் குரங்கு ஒன்று தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அந்த ஆண் குரங்கு குட்டியின் தந்தையாக இருக்கலாம் என்று கருதுகின்றனர்.

ஆண் குரங்கு இந்த குட்டியை கொன்று விடாமல் தடுக்க தாய் குரங்கு எப்போதும் தன் குட்டியை தன் மடியிலேயே வைத்துள்ளது. அதை சுற்றி மற்ற குரங்குகள் பாதுகாப்பாக நிற்கின்றன. இருந்தும் ஆண் குரங்கு குட்டியை கொல்லும் நோக்கத்துடன் அடிக்கடி தாக்கி வருகிறது. அதை மற்ற குரங்குகள் சண்டையிட்டு விரட்டி வருகின்றன. இதை பார்த்த ஊர் பொதுமக்களும் ஆண் குரங்கை விரட்டி அடித்து வருகின்றனர். ஆனாலும் ஆண் குரங்கு குட்டி குரங்கை குறிவைத்து சுற்றி சுற்றி வருகிறது.

இதனால் பொதுமக்கள் போலீசில் புகார் கொடுக்க முடிவு செய்தனர். தாய் குரங்கு நேரடியாக புகார் கொடுப்பது போல ஒரியா மொழியில் மனு ஒன்றை தயாரித்தனர். அதன் கீழ் கைரேகைக்கு பதில் குரங்கின் வால்பகுதியை மையில் நனைத்து பதிவு செய்தனர்.

அதை போலீஸ் நிலையத்தில் கொடுத்தனர். தாய் குரங்குக்கு சிமியன் என்றும், ஆண் குரங்குக்கு ராஜா என்றும், குட்டி குரங்குக்கு குணா என்றும் மக்கள் பெயரிட்டு இருந்தனர்.

சிமியன் கொடுத்துள்ள புகாரில், என் குழந்தையை எனது கணவர் ராஜா கொல்ல முயற்சித்து வருகிறார். அவரிடம் இருந்து என் குழந்தையை பாதுகாக்க வேண்டும். கணவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

புகாரை பெற்றுக் கொண்ட போலீசார் தந்தை குரங்கு ராஜா மீது இந்தியன் பியனல் கோடு 307 (கொலை முயற்சி), 363 (கடத்தல்), 366 (அடிமைப்படுத்த கடத்தல்) ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செய்தி 2:

அசுரர்களால் மனிதர்கள் அடித்துக் கொல்லப்படும் அசுரக் காட்சி. நான்கு வேதங்கள், திருமறைகள், புத்தர்,இராமகிருஷ்ணர் போன்ற புனிதர்கள் தோன்றியும் மாற்றி விட முடியாத பாவியர் நிறைந்த பூமி தான் இந்தியா. அதை மீண்டும் மீண்டும் வரலாற்றில் பதிந்து கொண்டேயிருக்கின்றது.


No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil