ரசித்து ருசித்து சாப்பிடுவது தவிர வேறல்ல

ஈர ஈழம்

Saturday, November 14, 2009


பயங்கர வாதமும் இந்தியாவும்




சர்வதேச அளவில், பயங்கரவாதத் தக்குதலால் மோசமாகப் பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடு இந்தியா என்று, மும்பையில் செயல்பட்டு வரும் என்ஜிஓ அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் பயங்கரவாதத் தாக்குதலால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதலிடத்தில் உள்ளது இராக். இந்த வரிசையில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் அதிகரித்து வந்துள்ளது. கடந்த ஆண்டில் மும்பை உள்ளிட்ட நாட்டின் பல்வேறு இங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3,674 பேர் உயிரிழந்துள்ளனர்.

மிகவும் சுவையான தகவல் இது. பயங்கரவாதமும் இந்தியாவும் இவ்விதம் இருக்க இந்திய அரசபயங்கரவாதம் எவ்வாறு இந்தியக் குடிமக்களையும் அதனைச் சூழவுள்ள நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது என்பதை ஏன் இவர்கள் கவனத்தில் எடுக்கவில்லை என்ற கேள்வி எழுகின்றது.

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் 3,674 பேர் மட்டுமே. ஆனால் இந்தியாவின் உதவியுடனும் தூண்டுதலாலும் முள்ளிவாய்க்காலில் மட்டும் கொல்லப்பட்டவர்கள் 30,000 இற்கும் மேலாகும்.

நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண கூறுவதைப்போல்;

உண்மையிலேயே மகிந்த இந்தியாவின் அழுத்த மற்றும் ஆதரவு காரணமாகவே இந்தப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றார். இந்தியாதான் உண்மையான குற்றவாளி. அவர்கள்தான் இந்தச் சூழ்நிலையை உருவாக்கினார்கள். மகிந்த அதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார். அவர்கள் மகிந்தவின் பின்னால் இருந்து கொண்டு இந்தச் சூழ்நிலையை உருவாக்கியுள்ளார்கள்.

நான் நினைக்கின்றேன்; இந்தியாவுக்கு ஒரு பொருண்மிய நிகழ்ச்சித் திட்டம் இருக்கின்றது. அவர்கள் வளங்களைக் கைப்பற்ற நினைப்பது தெளிவாகப் புரிகின்றது. இயற்கை வளங்களை மட்டுமன்றி மனித வளங்களையும் கைப்பற்ற அவர்கள் நினைத்திருக்கின்றார்கள். அதனாலேயே மகிந்தவை அவர்கள் இதற்கு நிர்ப்பந்தித்துள்ளார்கள்.


இந்தியாவின் தலையீடு இலங்கையில் இருந்தது என்பதை காங்கிரஸின் இளைஞர் அணித் தலைவர் இராகுல் பின்வரும் கேள்வி பதிலொன்றில் ஒத்துக் கொண்டிருக்கின்றார்.

நிருபர் கேள்வி: இலங்கையில் லட்சம் மக்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் பிரபாகரன் மரணத்துக்குபின்பும் அங்கு தமிழர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். இடம்பெயர்ந்த மக்களுக்கு போதிய வசதிகள் இல்லை.முன்வேலியில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இடம் பெயர்வு மக்கள் குடியேற்றம் செய்ய, முகாமிலிருந்து விடுவிக்க இந்தியா எந்த முயற்சியும் செய்யவில்லை. அக்கறை காட்டவில்லை. இலங்கைக்கு ஆதரவாக இந்தியா இருப்பதாக தமிழக மக்கள் கருதுகிறார்கள், சேனல் 4 ல் 4 தமிழர்கள் நிர்வணாப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது பற்றி காங்கிரஸ் ஏதும் செய்யவில்லை.?

ராகுல்: இதற்கு ஏற்கனவே பதில் அளித்துவிட்டேன் ஒன்றை மீண்டும் சொல்லிக்கொள்கிறேன். நாங்கள் இலங்கை பிரச்சனையில் அக்கறையோடு உள்ளோம். இந்தியா கடுமையாக இலங்கைக்கு அழுத்தங்களை கொடுத்துவருகிறது. இதை தவிர வேறு எதுவும் பிரதமர் ஏற்க மாட்டார். அமைச்சர்களை, உயர்அதிகரிகளையும் இலங்கைக்கு அனுப்பினார்கள் இதை விட வேறு எப்படி அழுத்தம் கொடுக்க முடிவும். தமிழர்கள் உரிமை பெறவேண்டும் என்பதுதான் காங்கிரஸ் நிலை.இதற்கு மேல் கேள்விகளுக்கு இடம் இல்லை.


இந்தியாவிற்கு இலங்கையின் மேல் உள்ள அக்கறை எத்தகையது என்பதை கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ண மேலே தெளிபு படுத்தியுள்ளார்.

இப்போது மகிந்த ராஜபக்ஸவிற்கும் யுத்த கால இராணுவத் தளபதியாக இருந்த பொன்சேகவிற்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டால் வீழ்ச்சியடைந்த ராஜபக்ஸேயின் செல்வாக்கைத் தூக்கி நிறுத்த இந்தியா துடிதுடிக்கின்றது. அதன் தொடர்ச்சியாகவே பிரணாப் முகர்ஜியின் இலங்கை விஜயம் அமைந்துள்ளது.

இந்திய அரசபயங்கரவாதம் இலங்கையில் தமிழினப் படுகொலையை வலிந்து முன்னிறுத்தியது.

ஐ.நா. சபை 1948-ம் ஆண்டிலேயே இனப்படுகொலைகள் குறித்து ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறது. அதில் இலங்கை, இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. 'இனப்படுகொலை என்றால் என்ன?' என்பதற்கு அந்த ஒப்பந்தத்தில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

''ஒரு தேசிய, இன, மத, சமூகக் குழுவை முற்றிலுமாகவோ பகுதியாகவோ அழிக்கும் நோக்கோடு அக்குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது; உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ காயப்படுத்துவது; அக்குழுவை அழிக்கும் விதமான சூழ்நிலையை ஏற்படுத்துவது; அக்குழுவின் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது; அக்குழுவிலிருந்து குழந்தை களை வேறு குழுவுக்கு மாற்றுவது ஆகியவை இனப்படுகொலை எனப்படும்...'' என்று ஐ.நா. ஒப்பந்தம் தெளிவு படுத்தியிருக்கிறது.

இனப்படுகொலையைச் செய்தாலும், இனத்தை அழிக்க சதி செய்தாலும், அப்படிச் செய்வதற்குத் தூண்டினாலும், செய்ய முயன்றாலும், இனப்படுகொலைக்கு ஒத்துழைத் தாலும் குற்றமாகக் கருதப்படும். அந்தக் குற்றத்தை செய்தது, தனி மனிதராகவோ ஒரு அரசாகவோ இருந்தாலும் அவர்களை சர்வதேச நீதிமன்றத்தின்கீழ் விசாரித்துத் தண்டிப்பதற்கு இந்த ஒப்பந்தம் வழி செய்துள்ளது.


அமெரிக்க முன்னாள் 'டெபுடி அசோசியேட் அட்டர்னி ஜெனரல்' புரூஸ் ஃபெயின் இதுபற்றி அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்போவதாகச் சொல்லியிருப்பதை நாம் அறிவோம். அமெரிக்கக் குடியுரிமை பெற்ற கோத்தபய ராஜபக்ஷே மற்றும் அமெரிக்க கிரீன்கார்டு பெற்றவரான இலங்கை ராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா ஆகியோர் மீது வழக்குத் தொடரப்போவதாக ஃபெயின் கூறியிருந்தார். இனப்படுகொலைகளைச் செய்ததாகத்தான் அவர்கள்மீது ஃபெயின் குற்றம் சாட்டியிருந்தார்.

தற்போது இலங்கையில் நடந்துவருவது இன அழித்தொழிப்புதான், இனப் படுகொலைதான் என்பதற்கு ஏராளமான ஆதாரங்களை புரூஸ் ஃபெயின் திரட்டியிருக்கிறார். 1983-ம் ஆண்டு நடந்த இனக் கலவரத்தின்போது, ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது முதல்... இப்போதுசிங்கள ராணுவத்தின் மூன்று படைகளும் சேர்ந்து தமிழர் மீது நடத்திவரும் தாக்குதல் வரை அவர் ஏராளமான சான்றுகளை இதற்காகச் சேர்த்திருக்கிறார்.


இலங்கை அரசியலமைப்புச் சட்டமே இனச் சமத்துவத்துக்கு எதிராக இருப்பதையும், இன்றைய ஆட்சியாளர்கள் 'ஒற்றைத் தன்மை கொண்ட ஆட்சிமுறைதான் சாத்தியம்' என்று சொல்வதையும்கூட அவர் உதாரணங்களாகக் காட்டுகிறார். சிங்கள இனவெறிக்கு ஆதாரமாக அவர்களின் புராணக் கதையான மகாவம்சம் எவ்வாறு விளங்குகிறது, அங்குள்ள பௌத்த பிக்குகள் எப்படி இனவெறியைப் பிரசாரம் செய் கிறார்கள் என்பதையெல்லாம் புரூஸ் ஃபெயின் விரிவாகத் தொகுத்திருக்கிறார்.

இலங்கையில் நடப்பது இனப்படுகொலைதான் என்ப தற்கு ஆயிரக்கணக்கான ஆதாரங்களை நாம் அடுக்க முடியும். இப்படியான இன அழித்தொழிப்பில் ஈடுபட்ட பல்வேறு சர்வாதிகாரிகள் இன்று சர்வதேச நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நடந்த இனப்படுகொலைகளும், அதில் ஈடுபட்ட ஆட்சியாளர்கள் தண்டிக்கப்பட்டிருப்பதும் அண்மைக் கால உதாரணங் களாகும். அதுபோல, கோத்தபய ராஜபக்ஷேவும், சரத் ஃபொன்சேகாவும் தண்டிக்கப் படுகிற காலம் வெகுதொலைவில் இல்லை. இனப்படுகொலை குற்றத்தி லிருந்து ராஜபக்ஷேவும் தப்பிக்க முடியாது. ஆனால், குற்ற வாளிகள் அவர்கள் மட்டுமல்ல... இதில் இந்திய அரசும் பதில் சொல்லவேண்டிய நிலையில் இருக்கிறது.

'இனப்படுகொலைக்கு எதிரான ஐ.நா. ஒப்பந்தத்தின் உறுப்பு 3 பிரிவு 5-ல் இனப்படுகொலைக்-கு ஒத்துழைப்பு நல்குவதும்கூட குற்றமாகவே கருதப்படுமெனச் சொல்லப் பட்டிருக்கிறது

இலங்கை அரசின் இன அழித்தொழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்தாசை செய்துகொண்டிருக்கிற இந்தியாவும் குற்றவாளியாகவே கருதப்படக் கூடிய ஆபத்து உள்ளது' என சட்ட நிபுணர் கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

'இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பது, ராடார் உள்ளிட்ட ஆயுதங்களை வழங்குவது, தமிழர் களுக்கு எதிரான போரில் ராணுவ ரீதியான வியூகங்களை வகுத்துத் தருவது, நிபுணர்களின் ஆலோசனைகளை அளிப்பது உட்பட பல உதவிகளை இந்தியா அளித்து வருவதான குற்றச்சாட்டுகள் இலங்கை தமிழ் அமைப்புகளாலும், இங்குள்ள அரசியல் கட்சிகளாலும் எழுப்பப்பட்டு வருகின்றன. அவற்றை இந்திய அரசு மறுத்துவிடவில்லை. ராஜதந்திர ரீதியான நடவடிக் கைகள் என்று அவற்றையெல்லாம் இந்திய அரசு நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், ஐ.நா. ஒப்பந்தப்படி இவையெல்லாம் இனப்படுகொலைக்கு உதவிய குற்றமாகவே கருதப்படும்' என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்த நிலையில் அரச பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டிருக்கும் இந்தியா பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு என்று நீலிக்கண்ணீர் வடிக்கின்றது. இந்தியாவை வல்லரசாக்கும் கனவுகளுடன் தமிழகத் தமிழர்களும் அதற்குத் துணை போவது தான் அதிபயங்கர அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

No comments:

அனுப்ப/அடையாளமிட

Add-Tamil